Uthayam

Uthayam Uthayam™ News

15/03/2025

நெற் காணி விற்பனைக்கு.

அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 01 ஏக்கர் நெற் காணி உடன் விற்பனைக்கு.

காப்பட் பிரதான பாதை ஓரமாக அமைந்துள்ளது.

இசங்கணிச்சீமை ஜும்மாஹ் பள்ளி வாசல் அருகில் அமைந்துள்ளது.

நெற் செய்கை, பார்ம் அல்லது வேறு எந்த தேவைக்கும் பயன் படுத்திக்கொள்ளலாம்.

விலை பேசி தீர்மானிக்கலாம்.

உடன் தொடர்புகளுக்கு

074 20 68 671

இன்று சவுதி அரேபியாவின் ஸ்தாபகர் தினம்(எம்.எல்.சரிப்டீன்)சவுதி அரேபியாவின் ஸ்தாபகர் தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம...
22/02/2025

இன்று சவுதி அரேபியாவின் ஸ்தாபகர் தினம்

(எம்.எல்.சரிப்டீன்)

சவுதி அரேபியாவின் ஸ்தாபகர் தினம் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.

சவுதி அரேபியா நாட்டின் நாகரீகம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றை அறிந்து கொள்ளும் நாளாக ஆக்குவதற்கு இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல்சவுத் உத்தரவை பிறப்பித்திருந்தார். மூன்று சவுதி மாநிலங்கள் தனித்தனியாக நிறுவப்பட்டு பின்னர் ஒருங்கிணைக்கப்பட்ட நாளை இது குறிக்கிறது.

இமாம் முகமது பின் சவுத் திரியாவை தலைநகராக கொண்டு சவுதி இராஜ்ஜியத்தை 1727ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி நிறுவினார். இமாம் முகம்மது பின் சவுத் திரியாவை பொறுப்பேற்ற போது அங்கு ஒற்றுமையை நிலைநாட்டவும் அதனை சுற்றியுள்ள நகரங்களையும் பழங்குடியினர்களின் ஸ்தீரத் தன்மையை பாதுகாக்கவும் ஹஜ் மற்றும் வர்த்தக வழிகளையும் பாதுகாக்கவும் பங்களிப்புச் செய்தார். மாநிலத்தின் பொருளாதார நிலைமைகளை ஒழுங்கமைக்கவும் கட்டுமானங்களை விரிவு படுத்தவும் அவரது பணி இருந்தது.

பின்னர் ரியாதை தலைநகராகக் கொண்டு இரண்டாவது சவுதி ராஜ்யத்தை கிறிஸ்துக்கு பின் 1824இல் உருவாக்கினார். இதனை தொடர்ந்து மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துல் ரஹ்மான் அவர்கள் மூன்றாவது சவூதி அரசை கி.பி 1902 இல் ரியாதை தலைநகராகக் கொண்டு நிறுவியதோடு, மூன்று மாநிலங்களையும் ஒருங்கிணைத்து 1932ஆம் ஆண்டு சவுதி அரேபியா ராஜ்ஜியம் என்ற தனி நாட்டை உருவாக்கினார்.

சவுதி அரசின் உறுதியான வேர்களின் பெருமை, குடிமக்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் பெருமை, சவுதி அரசு ஏற்படுத்திய ஒற்றுமை ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பின் பெருமை, சவுதி அரசின் உறுதிப்பாடு மற்றும் எதிரிகளுக்கு எதிராக அதன் பாதுகாப்பில் பெருமை, சவுதி அரசின் தொடர்ச்சி மற்றும் அதன் வேர்கள் மற்றும் தலைவர்களின் வலிமையை மீட்டெடுப்பதில் பெருமை, மன்னர் அப்துல் அஸீஸ் பின் அப்துல் ரஹ்மான் அல் பைசல் அல் சவுத் அவர்களால் நிறுவப்பட சவுதி அரேபியாவின் தேசிய ஒற்றுமையின் பெருமை, கட்டுமானம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் மன்னர் அப்துல் அஸீஸின் மகன்களான மன்னர்களின் சாதனைகளில் பெருமை, இமாம் முஹம்மது பின் சவுத்தின் முதல் சவுதி அரசின் நிறுவனர் என்பவைகளின் பெருமைகள் இந்த ஸ்தாபகர் தினத்தில் நினைவு கூறப்படுகின்றன.

Saudi Arabia Anniunces Holiday on February 22.Saudi Arabia’s authorities announced official holiday on February 22 for b...
09/02/2025

Saudi Arabia Anniunces Holiday on February 22.

Saudi Arabia’s authorities announced official holiday on February 22 for both the private and non-profit sectors in on the eve of Saudi Founding Day, local media reported citing the Ministry of Human Resources and Social Development.

Observed on the anniversary of the First Saudi State’s founding by Imam Mohammed bin Saud in 1727, Founding Day honors the Kingdom’s rich history, unity as a nation, and strong leadership ties that have bound Saudi citizens to their rulers since Diriyah was established as the state’s first capital.

Cities around the Kingdom will hold artistic and cultural activities honoring Saudi unity, history, and legacy. These events will illustrate the Saudi people’s tenacity and pride in their rich historical heritage while also reflecting the country’s path through wealth and hardship.

The occasions will also demonstrate the timeless principles of identity and national cohesion, which have been maintained throughout the Kingdom’s history, from its establishment to the present.

இலங்கை செழிப்பும் முன்னேற்றமும் பெற வேண்டும். சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரச...
04/02/2025

இலங்கை செழிப்பும் முன்னேற்றமும் பெற வேண்டும்.
சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அவர், இலங்கை அரசு மற்றும் நேசமிகு குடிமக்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை முன்னேற்றமும் செழிப்பும் பெற வேண்டும்” எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை மக்கள் ஒருமித்த முடிவோடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்திற்கே வாக்களிக்கவுள்ளார்கள்.அட்டாளைச...
10/11/2024

அட்டாளைச்சேனை மக்கள் ஒருமித்த முடிவோடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்திற்கே வாக்களிக்கவுள்ளார்கள்.

அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் மிகக் கூடுதலாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்திற்கே இம்முறை வாக்களிக்கவுள்ளதாக திகாமடுல்ல மாவட்டத்தில் ' லங்கா முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்தில் போட்டியிடும் எம்.எஸ்.உதுமாலெவ்வை தெரிவித்தார்.

அட்டானைச்சேனை சாறா மண்டபத்தில் இன்று 10.11.2024 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்படி தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள உலமாக்கள், பெரியோர்கள், மீனவர்கள் மற்றும் ஏனைய அனைவரும் கூடி ஒருமித்த முடிவோன்றை எடுத்துள்ளார்கள். அவற்றில் இம்முறை பாராளுமன்னற தேர்தலில் அட்டாளைச்சேனை மக்கள் மரச் சின்னத்திற்கே வாக்களிக்கவுள்ளதாக முடிவு செய்துள்ளார்கள். எங்களது முதலாவது நோக்கம் மரச் சின்னத்திற்கே வாக்களிக்க கூறியுள்ளோம். அதற்குப் பின்னரே விருப்பு இலக்கங்களுக்கு வாக்களிக்குமாறு கூறியுள்ளோம்.

வேறு கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் எனக்கு தனிப்பட்ட ரீதியில் குறிப்பிட்டளவு வாக்குகள் சிங்கள பிரதேசங்களில் இருந்து கிடைத்திருக்கும். இருந்தபோதிலும் எமது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மரச் சின்னத்தில் தேர்தல் கேட்கவேண்டும் என்ற ஒரு கொள்கையின் அடிப்படையிலேயே மரச்சின்னத்தில் இறங்கியுள்ளோம். எத்தனை ஆசனங்கள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு மிகக் கூடுதலான வாக்குகள் அளிக்கப்படவுள்ளன. இதனால் கிடைக்கப்பெறும் ஆசனங்களுக்கு மேலதிகமாக தேசியப் பட்டியல் ஆசனமும் கிடைப்பதற்குரிய சந்தர்ப்பம் உள்ளது என எம்.எஸ்.உதுமாலெவ்வை மேலும் தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார்முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐ...
24/09/2024

ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய பட்டியல் ஊடாகவும் அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கவும் அவருக்கு எதிர்பார்ப்பு இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.அவர் இ...
24/09/2024

புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய

புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அவர் இலங்கையின் பிரதமராக பதவியேற்கும் 3ஆவது பெண் ஆவார்.

இதற்கு முன்னதாக உலகின் முதல் பெண் பிரதமரான ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இலங்கையின் பிரதமராக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலாநிதி ஹரினி அமரசூரிய நீதி, கல்வி , சுகாதாரம், விஞ்ஞானம், தொழிநுட்பம், முதலீட்டு அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thinakaran -15.08.2024
24/09/2024

Thinakaran -15.08.2024

சவுதி அரேபியாவின் 94வது தேசிய தினம்.(எம்.எல்.சரிப்டீன்)மத்திய கிழக்கு நாடுகளில் செல்வச் செழிப்பும், கனிய வளமும் நிறைந்த ...
24/09/2024

சவுதி அரேபியாவின் 94வது தேசிய தினம்.

(எம்.எல்.சரிப்டீன்)

மத்திய கிழக்கு நாடுகளில் செல்வச் செழிப்பும், கனிய வளமும் நிறைந்த நாடுகளில் சவுதி அரேபியா முன்னணியில் திகழ்கிறது.

1932ஆம் ஆண்டு சவுதி அரேபியா இராச்சியத்தை, மன்னன் அப்துல்லா அப்துல் அஸீஸ் அல் சவுத், நிறுவியதனை நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி சவுதி அரேபியா தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. சவுதிஅரேபிய மக்களின் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகின்ற மிகவும் பிரதான நாளாக தேசிய தினம் சவுதி மக்களால் பார்க்கப்படுகிறது.

23ஆம் திகதி திங்கட்கிழமை 94வது தேசிய தினத்தை சவுதி அரேபியா கொண்டாடியாது. இதற்காக நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேசிய தினத்தின் கருப்பொருள் 'நாம் கனவு காண்கிறோம், சாதிக்கிறோம்' என்பதாகும்.

தேசிய தினத்தில் விசேடமாக சவுதி அரேபியாவின் கலாசார பாரம்பரியங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மக்கள் மத்தியில் ஒற்றுமையை வரலாற்று விழுமியங்களை கொண்டாடுவதற்கு இன்னாளில் அனைவரும் ஒன்றிணைகிறார்கள். நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், வாள் நடனமான அர்த்தா என்பன நாடு முழுவதும் நடைபெறும். பாதைகள் முழுவதும் நாட்டின் தேசிய கொடியால் அலங்கரிக்கப்படுவதுடன், கண்காட்சிகள், வரலாற்று ரீதியான கலை சார்ந்த பொருட்கள், பாரம்பரிய கைவினைப் பொருட்கள், சவுதி அரேபியாவின் உணவு வகைகள் போன்றவை மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றன.

படையினரின் வான் வழி, கடல் வழி கண்ணைக் கவரும் காட்சிகள், கடற் படையினரின் அணி வகுப்புகளும் இடம் பெறும். அதே போன்று சவுதி அரேபியாவின் தேசிய தின நிகழ்வுகள் பல்வேறு நாடுகளிலும் அமைந்துள்ள தூதரகங்களில் தூதுவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

இராணுவத்திற்கு புதிய தலைமை அதிகாரிஇலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக இலங்கை சின்ஹா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜ...
13/09/2024

இராணுவத்திற்கு புதிய தலைமை அதிகாரி

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக இலங்கை சின்ஹா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார இராணுவத் தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமனம் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

10/05/2017

அநுராதபுரம் தலாவையில் இருக்கின்ற வெசாக் தன்சல நிகழ்வில் கலந்து கொண்டு வெசாக் வைபவத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அநுராதபுர மா...

Address

Akkaraipattu
Akkaraipattu

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uthayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uthayam:

Share