GREEN Tv Media Channel

GREEN Tv Media Channel தனித்துவமான சுதந்திரமான ஊடகம் - Like & share our GREEN Tv page GREEN TV MEDIA CHANNEL Officeal page | Follow | Share | Like

தம்பிலுவில் இந்து மயானத்தில் இனிய பாரதியின் - மனித புதைகுழி ?அம்பாறை   திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து...
31/07/2025

தம்பிலுவில் இந்து மயானத்தில் இனிய பாரதியின் - மனித புதைகுழி ?

அம்பாறை திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கையை இன்று (31) சிஐடியினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது.

இனிய பாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்த்திபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு தம்பிலுவில் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கருணா கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்ப குமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோயில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஐடியினர் கைது செய்தனர்.

இவர்களுடன் இனிய பாரதியின் சகாக்களான முன்னாள் சாரதி செந்தூரன், திருக்கோயில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன், வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஷ் கண்ணா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டு ஜூலையில் திருக்கோயில் விநாயக புரத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவன் பார்த்திபன், 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், 2010- ஜனவரி 26ம் திகதி ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொட ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிஐடி யினர் கைது செய்யப்பட்டவர்களை குறித்த மயானத்துக்கு கடந்த இரு தினங்களாக அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தினர்.

இதற்கமைய குறித்த மயான இடத்தை தோண்டி சோதனை செய்வதற்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் சி ஐ டி யினர் அனுமதி கோரியதை அடுத்து நீதவான் ஏ.எல்.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த யூட் என அழைக்கப்படும் ரமேஷ் கண்ணா அடையாளம் காண்பிக்கும் இடத்தை பைக்கோ இயந்திரம் கொண்டு பிற்பகல் 2.00 மணிக்கு தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் போது அங்கு இதுவரை எந்தவிதமான உடற்பாகங்கள் மீட்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இதேவேளை அந்த பகுதியில் மக்கள் திரண்டு நின்று அவதானித்த வண்ணம் இருந்தனர்

✈️ விமானத்தில் பெரும் பரபரப்பு – இந்தியர் கைது!லண்டனில் இருந்து கிளாஸ்கோ செல்லும் EasyJet விமானத்தில் 41 வயது இந்திய வம்...
30/07/2025

✈️ விமானத்தில் பெரும் பரபரப்பு – இந்தியர் கைது!

லண்டனில் இருந்து கிளாஸ்கோ செல்லும் EasyJet விமானத்தில் 41 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபய் தேவதாஸ் நாயக்,
“இந்த விமானத்தை குண்டு வைத்து வெடிக்கச் செய்வேன்… அமெரிக்காவுக்கு சாவு, டிரம்புக்கு சாவு!” என முழக்கி,
“அல்லாஹு அக்பர்!” என்று மீண்டும் மீண்டும் கத்தி பயணிகளை அச்சுறுத்தினார்!

👮‍♂️ விமானத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அவரை கட்டுப்படுத்தினர். விமானம் அவசரமாக தரையிறங்கியது.
🔍 பரிசோதனையில் எந்தவித வெடிபொருட்களும், ஆயுதங்களும் எதுவும் காணப்படவில்லை.
⚖️ நாயக் மீது விமான பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தியது மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

👉 அவர் ஏன் முஸ்லிம் போல நடித்து “அல்லாஹு அக்பர்” என்று முழக்கினார் என்பது குறித்து அதிகாரிகள் இன்னும் தகவல் வெளியிடவில்லை.

📆 வழக்கு அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது.

மிகப்பெரிய நிலநடுக்கம்🌊 சுனாமி எச்சரிக்கை! 🌊ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (30.07.2025) 8.7 ரிக்டர் அளவி...
30/07/2025

மிகப்பெரிய நிலநடுக்கம்
🌊 சுனாமி எச்சரிக்கை! 🌊

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (30.07.2025) 8.7 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் விளைவாக ரஷ்யா, ஜப்பான், ஹவாய், எலாஸ்கா உள்ளிட்ட பல பகுதிகளில் சுனாமி தாக்கம் மற்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

➡️ 3–4 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன.
➡️ கடற்கரையோர மக்கள் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

🛑 கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருங்கள். அதிகாரிகள் கூறும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

📌 ஆதாரங்கள்: Reuters, AP News

✨✨மாவனல்லை ஆஇஷா உயர்கல்விக் கல்லூரியின் இருபத்தைந்தாண்டு பூர்த்தியை** முன்னிட்டு நடைபெறும் வரலாறு காணாத மாபெரும் கண்காட்...
29/07/2025

✨✨மாவனல்லை ஆஇஷா உயர்கல்விக் கல்லூரியின் இருபத்தைந்தாண்டு பூர்த்தியை** முன்னிட்டு நடைபெறும் வரலாறு காணாத மாபெரும் கண்காட்சி!!! ✨✨

🏡 "அருள் மிகு குடும்பம்; இன்பம் நிறைந்த இல்லம்" என்னும் கருப்பொருளுடன் நடைபெறவிருக்கும் இம்மாபெரும் வெள்ளி விழா சிறப்புக் கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெற 🙌 தங்கள் அனைவரையும் வருக வருக என அன்போடு அழைக்கிறோம்!💐✨

👥 கண்காட்சியைப் பார்வையிட முடியுமானவர்கள்:

• 👨‍👩‍👧 பெற்றோர் மற்றும் பிள்ளைகள் (குடும்பம் சகிதம்)
• 🎒பாடசாலை மாணவிகள் (தரம் 9 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்)
• 🕌 பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகள்
• 🎓பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவிகள்

கண்காட்சியைப் பார்வையிடுபவர்கள் பின்பற்ற வேண்டிய படிமுறைகள்:

✅ Step 1: திகதியையும் நேரத்தையும் தெரிவு செய்தல்

📅 ஆகஸ்ட் 7 முதல் 11 வரையிலான திகதிகளில் தங்களுக்கு வசதியான ஏதேனும் ஒரு திகதியைத் தெரிவு செய்யலாம்.

📌 குறிப்பு:
பாடசாலைகள் மற்றும் பெண்கள் அரபுக் கல்லூரிகளுக்கு 7, 8 மற்றும் 11 ஆம் திகதிகள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை கவனத்தில்கொள்க.

🕰️ நேர ஒதுக்கீடுகள் (Time Slot):
1. 🌅 Morning Slot: 8.00 am - 12.00 noon
2. 🌄Evening Slot: 1.00 pm - 5.00 pm

📍 குறிப்பு: 12:00 மணிக்கு முதலாவது நேர ஒதுக்கீடு (slot) நிறைவடையும்.

✅ Step 2: பதிவு செய்தல்

📲 நீங்கள் தெரிவு செய்த திகதியையும் நேரத்தையும் பின்வரும் இலக்கத்தைத் தொடர்பு கொண்டு முற்பதிவு செய்யவேண்டும்:

📞 0764419155

🕘 தொடர்பு கொள்ள வேண்டிய நேரங்கள்:
• காலை: 9.00 am – 5.00 pm
• மாலை: 7.00 pm – 9.00 pm

👨‍👩‍👧 பதிவு செய்யும்போது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிடவும்.

✅ Step 3: "Community WhatsApp" குழுவில் இணைக்கப்படுதல்

📱 பதிவு செய்த அனைவரும் தங்கள் திகதிக்குரிய WhatsApp Community குழுவில் இணைக்கப்படுவீர்கள்.

ℹ️ அறிவுறுத்தல்கள் மற்றும் முக்கிய தகவல்கள் இக்குழு வாயிலாக பகிரப்படும். எனவே உங்கள் WhatsApp இலக்கத்தை வழங்க வேண்டியது அவசியம்.

❗ குழுவில் இணைக்கப்படவில்லை என்றால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.

✅ Step 4: கண்காட்சியைப் பார்வையிடுதல்

📍 பதிவு செய்த திகதி மற்றும் நேரத்தில் மாவனல்லை ஆஇஷா வளாகத்திற்கு வருகை தரவும்.

🎫 வளாக நுழைவாயிலில் உள்ள "Ticket counters" இல் "Ticket" களை கொள்வனவு செய்யலாம்.

💵 Ticket விலை விவரங்கள்:

1. வயது 5 மற்றும் அதற்குக் கீழ்: இலவசம்
2. வயது 6 – 12 வரை: 100 LKR
3. வயது 12க்கு மேல்: 200 LKR

🚪 Ticket counters மாலை 4.00 pm க்கு மூடப்படும்.

🎊 மகிழ்வுடன் வந்து பயன்பெற்றுச்செல்ல அன்புடன் அழைக்கிறோம்! 💖🌟

🚨 நாட்டின் புகையிரத சேவைகள்……! 🚉📆 நாளை நள்ளிரவு முதல் ⏰ 48 மணி நேரம் – பணிப்புறக்கணிப்பு!LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்...
28/07/2025

🚨 நாட்டின் புகையிரத சேவைகள்……! 🚉
📆 நாளை நள்ளிரவு முதல் ⏰ 48 மணி நேரம் – பணிப்புறக்கணிப்பு!

LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்கம் அறிவிப்பின் பேரில்,
புகையிரத சாரதிகள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

🔧 “ஒழுங்கற்ற சம்பள கட்டமைப்புகள் மற்றும் தீர்க்கப்படாத பிரச்சினைகள்” காரணமாக,
இந்த கடுமையான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக
சங்கத் தலைவர் திரு கே.ஏ.யு. கோந்தசிங்க தெரிவித்துள்ளார்.

⚠️ இதன் காரணமாக, நாடு முழுவதும் அனைத்து தொடருந்து சேவைகளும் பாதிக்கப்படும் என்பது முக்கிய எச்சரிக்கை!

👉 பயண திட்டங்களை மீளாய்வு செய்யுங்கள்
👉 முக்கிய அறிவிப்புகளை பின்தொடருங்கள்

🧑‍💼 தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு – அக்கரைப்பற்று📍 இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அக்கரைப்பற்று கிளையின் ஏற்பாட்டில்அக்...
26/07/2025

🧑‍💼 தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு – அக்கரைப்பற்று

📍 இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அக்கரைப்பற்று கிளையின் ஏற்பாட்டில்

அக்கரைப்பற்றைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்களுக்காக STEPS நிறுவன உரிமையாளர் சகோ. ஹாஸிம் அவர்களின் தலைமையில் நேற்றிரவு ஒரு சிறப்பான கருத்தரங்கு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது – அல்ஹம்துலில்லாஹ்!

🎙️ நிகழ்வைத் தொடக்கி வரவேற்புரை நிகழ்த்தியவர் – அஷ்ஷெய்க் அப்துர் ரவூப் இஸ்லாஹி

💼 வளவாளராக: iKING நிறுவன ஸ்தாபகர் Ihsan Wahid MBA அவர்கள் பங்கேற்றதோடு,
“வியாபாரம் என்பது வெறும் லாப நோக்கில் அல்ல, அல்லாஹ்வின் இபாதத் என்ற உணர்வோடும் சிந்தனையோடும் நடத்தப்படும் பணியாக இருக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும், வியாபாரிகள் - தொழில் முயற்சியாளர்களாக மாறும் வழிகள், வளர்ச்சி வாய்ப்புகள்,நுணுக்கமான தொழில் யுக்திகள் ஆகியவை பற்றி பயனுள்ள தகவல்களை பகிர்ந்தார்.

👥 சுமார் 50 தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்தனர்.
மேலும், தொடர்ச்சியான பயிற்சிநெறிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

#இஸ்லாமியவியாபாரம்

முஹம்மத் (ஸல்) அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்வோம் | Mufthi. Yoosuff Haniffa | Ash Sheikh. Akram Aboobucker
26/07/2025

முஹம்மத் (ஸல்) அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்வோம் | Mufthi. Yoosuff Haniffa | Ash Sheikh. Akram Aboobucker

முஹம்மத் (ஸல்) அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்வோம் | Mufthi. Yoosuff Haniffa | Ash Sheikh. Akram Aboobucker

ஜனாசா அறிவித்தல் அக்கரைப்பற்று 5ம் குறிச்சியை சேர்ந்த பொறியிலாளர், மாநகர சபையின் கௌரவ உறுப்பினர் சிராஜுதீன் சேர் அவர்கள்...
26/07/2025

ஜனாசா அறிவித்தல்

அக்கரைப்பற்று 5ம் குறிச்சியை சேர்ந்த பொறியிலாளர், மாநகர சபையின் கௌரவ உறுப்பினர் சிராஜுதீன் சேர் அவர்கள் காலமானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

24/07/2025

Address

MJC Road
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when GREEN Tv Media Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category