Acc News

Acc News News Only

14/08/2026

✅👉விலைப்பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயம் – வர்த்தகர்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அறிவுறுத்தல்..!

☎️ 1977

14/08/2026

✅👉அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்தில் - மாணவிகளின் பர்தாவை பலவந்தமாக அகற்ற முயற்சி செய்த ஆண் மேற்பார்வையாளர் - விசாரணை தீவிரம்..!

14/08/2026

✅👉வாகன இறக்குமதி மீதான 50% மிகைக் கட்டணம் டிசம்பர் வரை நீடிப்பு..!

⚡ Vehicle import tax

14/08/2026

🚨👉 - Vedio Update..!

பெற்ற குழந்தையை கொடூரமாக தாக்கி, நடுவீதியில் விட்டுச்சென்ற தாயும் அவரது காதலனும் கைது!

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட காணொளி..!

⭕️ Full Details 👇

https://www.facebook.com/share/p/1BfG8YM82s/

✅👉 #அவளுக்காக ஒரு  #நிமிடம்..!🗓️ On, August 14, 2026📝 News Editorஆயிஷாவுக்கு நடந்தது ஒரு குழந்தையின் கதை மட்டும் அல்ல - ...
14/08/2026

✅👉 #அவளுக்காக ஒரு #நிமிடம்..!

🗓️ On, August 14, 2026

📝 News Editor

ஆயிஷாவுக்கு நடந்தது ஒரு குழந்தையின் கதை மட்டும் அல்ல - இது முழு நாட்டிற்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மாவனல்லையைச் சேர்ந்ததாகத் தெரிவிக்கப்படும் சிறுமி ஆயிஷா, வத்தேகம நகரப் பகுதியில் காயங்களுடன் வீதியில் இறக்கிவிடப்பட்டதாக வெளியாகியுள்ள சம்பவம் நமது மனசாட்சியை உலுக்கும் ஒரு மிகக் கவலைக்குரிய விடயம்.

ஒரு குழந்தை...

அவள் ஒரு சுமை அல்ல.
அவள் யாருடைய பொருளும் அல்ல.
அவளை விரும்பியபடி நடத்துவதற்கான உரிமை யாருக்கும் இல்லை.

ஒரு குழந்தை என்பது இறைவன் வழங்கிய அமானத்.

ஒரு குழந்தை என்பது ஒரு உயிர்.

ஒரு குழந்தை என்பது இந்த நாட்டின் எதிர்காலம்.

அப்படிப்பட்ட ஒரு பச்சிளம் உயிர் காயங்களுடன் வீதியில் கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், இதை வெறும் ஒரு நாள் செய்தியாகப் பார்த்துவிட்டு நாம் கடந்து செல்லக்கூடாது.

🇱🇰 அரசாங்கமே — உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இந்த சம்பவம் தொடர்பில் உண்மை என்ன என்பதை முழுமையாக கண்டறிய வேண்டும்.

👮 பொலிஸார் — எந்தவித அழுத்தமும் பாரபட்சமும் இல்லாமல் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்.

⚖️ சட்ட அமுலாக்க நிறுவனங்கள் — குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர் பெற்றோராக இருந்தாலும், உறவினராக இருந்தாலும், வேறு எவராக இருந்தாலும் சட்டத்தின் கீழ் உரிய கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

🏛️ ஜனாதிபதி அவர்களே!
🏛️ பிரதமர் அவர்களே!
🏛️ குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புடன் தொடர்புடைய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களே!

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, இவை நடைபெறுவதற்கு முன்பே தடுக்கும் வலுவான தேசிய குழந்தைப் பாதுகாப்பு நடைமுறை அவசியம்.

❗ எங்களின் கோரிக்கைகள்:

🔴 குழந்தைகளுக்கு எதிரான உடல் மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சட்ட அமுலாக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

🔴 குழந்தையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களால் மேற்கொள்ளப்படும் கொடுமைகள் தொடர்பில் விரைவான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்கான சிறப்பு நடைமுறை உருவாக்க வேண்டும்.

🔴 ஆபத்தில் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காணும் சமூக மற்றும் அரச கண்காணிப்பு முறைகளை வலுப்படுத்த வேண்டும்.

🔴 குழந்தைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விரைவாக பதிலளிக்கும் பொலிஸ் மற்றும் சமூக சேவை அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

🔴 குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்த நபருக்கும் அரசியல், குடும்ப, சமூக அல்லது வேறு எந்த செல்வாக்கின் அடிப்படையிலும் சலுகை வழங்கக்கூடாது.

🔴 மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

💔 இன்று ஆயிஷா...

நாளை இன்னொரு குழந்தையாக இருக்கக் கூடாது.

இன்று வத்தேகம.

நாளை இலங்கையின் வேறு எந்த நகரமாகவும் இருக்கக் கூடாது.

ஒரு குழந்தையை காயப்படுத்தி வீதியில் விட்டுச் செல்லும் அளவுக்கு நாம் மனிதநேயத்தை இழந்துவிட்டோமா?

இந்தக் கேள்விக்கு நாம் அனைவரும் பதில் சொல்ல வேண்டிய நேரம் இது.

பெற்றோர்களே — உங்கள் குழந்தை உங்கள் பொறுப்பு.

சமூகமே — ஆபத்தில் இருக்கும் குழந்தையை கண்டால் மௌனமாக இருக்காதீர்கள்.

பொலிஸாரே — குழந்தைகளின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொள்ளுங்கள்.

அரசாங்கமே — சட்டத்தை வலுப்படுத்துங்கள்.

⚠️ ஆயிஷாவுக்கு நடந்ததாக வெளியாகியுள்ள சம்பவத்தின் முழு உண்மையும் விசாரணையின் மூலம் வெளிவர வேண்டும்.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை யாரையும் குற்றவாளி என தீர்ப்பளிக்கக் கூடாது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் — சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும்.

🇱🇰 இந்த நாட்டில் எந்த ஒரு பச்சிளம் குழந்தையும் இனி காயங்களுடன் வீதியில் கிடக்கக்கூடாது!

குழந்தைகளின் பாதுகாப்பு ஒரு அரசியல் பிரச்சினை அல்ல.
அது மனிதநேயத்தின் அடிப்படை கடமை.

🙏 ஆயிஷாவுக்கு நீதி வேண்டும்.

❤️ அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும்.

⚖️ குற்றத்திற்கு சட்டத்தின் மூலம் தண்டனை வேண்டும்.

🇱🇰 குழந்தைகளுக்கு பாதுகாப்பான இலங்கை வேண்டும்.

இந்த பதிவை பகிருங்கள்.

அதிகமான மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.

அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.

ஒரு குழந்தையின் பாதுகாப்புக்காக உங்கள் குரலை கொடுங்கள்.

🚨 அவசர உதவிக்கு இலங்கையில்:

⚡ குழந்தை பாதுகாப்பு தேசிய அவசர இலக்கம்: 1929

⚡ பொலிஸ் அவசர இலக்கம்: 110 / 119
நீங்கள்

✅👉கேகாலை - நிலாவக்க - புஸ்ஸெலாவ சாலையில் சம்பவம்..!🗓️ On, August 14, 2026📝 News Editorகேகாலையில் உள்ள நிலவக்க - புஸ்ஸெலா...
14/08/2026

✅👉கேகாலை - நிலாவக்க - புஸ்ஸெலாவ சாலையில் சம்பவம்..!

🗓️ On, August 14, 2026

📝 News Editor

கேகாலையில் உள்ள நிலவக்க - புஸ்ஸெலாவ சாலையில், சாரதி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிவேகப் பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

விபத்துகளில் இருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

📸 Credit: Accident 1st

🚨👉     ✅👉சற்றுமுன் ஹாலிஎல பகுதியில் பொலிஸாரால் கைது..!🗓️ On, August 14, 2026📝 News Editorகுழந்தை ஒன்றை தாறுமாறாக தாக்கிவ...
14/08/2026

🚨👉

✅👉சற்றுமுன் ஹாலிஎல பகுதியில் பொலிஸாரால் கைது..!

🗓️ On, August 14, 2026

📝 News Editor

குழந்தை ஒன்றை தாறுமாறாக தாக்கிவிட்டு நடுத்தெருவில் விட்டுச்சென்ற தாய் மற்றும் கள்ளக்காதலன் இருவரும் கைது.

நேற்று குழந்தை ஒன்றை தாக்கிவிட்டு நடுத்தெருவில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் உருவெடுத்து வந்தது.

அதன் அடிப்படையில் இன்று குழந்தையின் தாய் மற்றும் கள்ளக் காதலன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவன் தொழில் நிமித்தம் காரணமாக வேலைக்கு சென்ற பிறகு,

மனைவி வேறொரு நபருடன் தகாத தொடர்பில் இருந்ததாக அறிய முடிகிறது.

அதன் பிறகு குறித்ததாய் கள்ளக்காதலுடன் இணைந்து தனது மகளை தாக்கி விட்டு முச்சக்கர வண்டியில் நடுத்தெருவில் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் அவர்கள் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

✅👉உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : - ✅👉மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் நிறைவு..!🗓️ On, August 14, 2026📝 News Ed...
14/08/2026

✅👉உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு : -

✅👉மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் நிறைவு..!

🗓️ On, August 14, 2026

📝 News Editor

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன.

இந்தநிலையில் எதிர்த்தரப்பு விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைகளில் முக்கிய திருப்பமாக, முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சி விசாரணைகள் மூவரடங்கிய கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் நிறைவடைந்தன.

நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில் சுஜீவ நிஷ்சங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.

நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 23,270 குற்றச்சாட்டுகள் தொடர்பில், 2023 ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் இதுவரை மொத்தம் 547 சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2076 வழக்குச் சான்றுகளும் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பிரதிவாதிகளிடம் எதிர்த்தரப்பு வாக்குமூலங்களைக் கோருவதற்குப் போதுமான காரணங்கள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்த்தரப்பு விசாரணைகளை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2017 நவம்பர் 01 முதல் 2019 ஏப்ரல் 21 வரை

அனுராதபுரம்,
மாவனெல்ல,
கண்டி,
நுவரெலியா,
ஹம்பாந்தோட்டை,
காத்தான்குடி,
கொழும்பு,
தெஹிவளை,

போன்ற இடங்களில், சஹ்ரான் ஹாசீம் மற்றும் மரணித்த ஏனைய தீவிரவாதிகளுடன் இணைந்து தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பி,

ஆயுதப் பயிற்சி பெற்று, சதித் திட்டங்களை தீட்டி தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தியமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை என்பது முதன்மை குற்றச்சாட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராக வாய்மொழி மூலமான குற்றச்சாட்டு விபரங்களை கோருவதற்குப் போதுமான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் திருப்தி தெரிவித்தது.

இந்தநிலையில், நீதிமன்றத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் மூலம் சந்தேகநபர்களுக்குத் தமிழில் விளக்கிக் கூறப்பட்டன.

🚨 Full Details - Sri Lanka Police..!✅👉சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?✅👉அல்லது உங்களுடைய வாகனங்க...
14/08/2026

🚨 Full Details - Sri Lanka Police..!

✅👉சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவரா நீங்கள்?

✅👉அல்லது உங்களுடைய வாகனங்களை வேறொரு நபருக்கு கொடுக்கும் நபரா நீங்கள்?

✅👉இது உங்களுக்கான பதிவு..!

🗓️ On, August 14, 2026

📝 News Editor

⚠️ இனி சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனம் ஓட்ட கொடுத்தால் வாகனம் கொடுப்பவர் கைது செய்யப்படுவார்!

⚠️ விபத்துக்கள் நேர்ந்தால் ஓட்டியவரைப்போல் வாகனம் கொடுத்தவருக்கும் அதே தண்டனை!

இலங்கை பொலிஸார் கடுமையான எச்சரிக்கை!

இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு மோட்டார் சைக்கிள் அல்லது எந்தவொரு வாகனத்தையும் ஓட்ட அனுமதிக்கும் நபர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், உரிமம் இல்லாத நபர் மட்டுமன்றி, அவருக்கு வாகனத்தை வழங்கிய நபரும் சமமான குற்றவாளியாகவே கருதப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மோட்டார் வாகனச் சட்டத்தின் (Motor Traffic Act) படி, தகுந்த சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தை ஓட்டக் கொடுப்பது பாரதூரமான குற்றமாகும்.

இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, 25,000 ரூபா முதல் 50,000 ரூபா வரையில் கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட சட்டத்தில் இடமுண்டு.

அத்தோடு, மிரிஸ்ஸ, வெலிகம, களுத்துறை மற்றும் ஹிக்கடுவ போன்ற சுற்றுலாப் பிரதேசங்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் பலர் முறையான இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது சர்வதேச ஓட்டுநர் உரிமம் இன்றி மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுத்து ஓட்டுவது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள், வாடிக்கையாளரின் ஓட்டுநர் உரிமத்தை முழுமையாக சரிபார்த்த பின்னரே வாகனங்களை வழங்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நபர் ஒருவர் வாகனத்தை ஓட்டிச் சென்று ஏதேனும் விபத்துக்களை ஏற்படுத்தினால், வாகனத்தின் உரிமையாளரும் அந்த விபத்துக்கான முழுப் பொறுப்பாளியாகக் கருதப்படுவார்.

விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் அல்லது சேதங்களுக்கு வாகன உரிமையாளரும் சட்ட ரீதியாகப் பதிலளிக்க வேண்டும் என்பதுடன், அவர்களது வாகன காப்புறுதி (Insurance) நன்மைகளும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

இவை அனைத்தும் ஏலவே இருக்கும் சட்டங்கள்தான், ஆனால் இனி அவை கடுமையான முறையில் பாரபட்சமின்றி அமுல்படுத்தப்படும்!

எனவே, பொது மக்கள் தங்களது வாகனங்களை மற்றவர்களுக்கு வழங்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இத் தகவலை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

14/08/2026

✅👉ஆபத்தான வாகன ஓட்டம், வீதி விதிமீறல்களை காணொளியாக எடுத்து அனுப்புங்கள் – பொலிஸார் அறிவிப்பு..!

⚡ WhatsApp 070- 4755600

Address

Irakkkamam
Ampara
32250

Alerts

Be the first to know and let us send you an email when Acc News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share