Sky thulir

Sky thulir உண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது பக்கத்தை like 👍 & follow ✅ செய்து கொள்ளுங்கள்.

உண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது page ஐ like / follow செய்து கொள்ளுங்கள்.

⭕எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அண...
01/07/2025

⭕எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 1 ஆம் திகதி முதல், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வகையான வாகனங்களின் அனைத்து இருக்கைகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கு ஆசனப்பட்டி (seat belt) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

⭕ #வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதேச சபை உறுப்பினர் றிஸ்வின் - முதல் சம்பளத்தை மஸ்ஜித்துக்கு அன்பளிப்பு செய்தார்.         ...
01/07/2025

⭕ #வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதேச சபை உறுப்பினர் றிஸ்வின் - முதல் சம்பளத்தை மஸ்ஜித்துக்கு அன்பளிப்பு செய்தார்.

⭕எரிபொருள்களின் விலைகளை இலங்க‍ை பெற்றோலியக் கூட்டத்தாபனம் திருத்தியமைத்துள்ளது.
01/07/2025

⭕எரிபொருள்களின் விலைகளை இலங்க‍ை பெற்றோலியக் கூட்டத்தாபனம் திருத்தியமைத்துள்ளது.

01/07/2025

⭕தனது இனிமையான குரலால் பாடி அசத்திய தேவயானியின் மகள் இனியா.
வியர்ந்து ரசித்த வித்யாசாகர்.

゚viralシ
#சரிகமப #சங்கீதஅரங்கம் #சபேசன்

01/07/2025

⭕துருக்கியில் கட்டுப்படுத்த முடியாதளவு காட்டுத்தீ பரவியுள்ளது.

இஸ்மிர் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த நெருப்பு காரணமாக இதுவரை ஐம்பதாயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

⭕மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்ய...
01/07/2025

⭕மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 - 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

⭕பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக்கப்பட வேண்டும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை  வல...
30/06/2025

⭕பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக்கப்பட வேண்டும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாலஸ்தீன ஐக்கிய மக்கள் இயக்கம், சிவில் சமூக அமைப்புக்கள் ஆகியன இணைந்து கொழும்பில் இன்று நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி.

பெருந்திரளான மக்களின் பங்கேற்பில் கொழும்பு கொம்பனித் தெருவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் வரை சென்றது.

゚viralシ

⭕ #கரடியனாறில் உணவு ஒவ்வாமையினால் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் பாடசாலை ஒன்றில்...
30/06/2025

⭕ #கரடியனாறில் உணவு ஒவ்வாமையினால் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால் வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று (30) திங்கட்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து சம்பவதினமான இன்றைய தினம் பகல் 195 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனை உட்கொண்ட சில மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக அருகிலுள்ள கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலதிக சிகிச்சைக்காக 16 மாணவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பொதுசுகாதார பாசோதகர்கள் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து பாடசாலையில் முன் பெற்றோர்கள் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேவேளை கடந்த மாதம் இதே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு 25 மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் காரணமாக வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டதுடன், உணவு வழங்கிய பெண்ணை கைது செய்ய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

30/06/2025

⭕காஸாவில் இன்றைய பொழுது பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் குண்டு தாக்குதல்களில் இன்று 21 பேர் பலி!

⭕கல்முனைப் பிராந்தியத்தின் முதலாவது கடற்படை அதிகாரியாக மருதமுனை சேர்ந்த மொஹம்மட் சமி.கல்முனை பிராந்தியத்தின் முதலாவது கட...
30/06/2025

⭕கல்முனைப் பிராந்தியத்தின் முதலாவது கடற்படை அதிகாரியாக மருதமுனை சேர்ந்த மொஹம்மட் சமி.

கல்முனை பிராந்தியத்தின் முதலாவது கடற்படை அதிகாரியாக மருதமுனையைச் சேர்ந்த சப் லெப்டினன் மொஹம்மட் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மர்ஹூம் முகம்மட் சுபையிர் ஆசிரியரினதும் இப்ரா லப்பை பதிலா ஆகியோரின் புதல்வராவார் மற்றும் இலங்கையில் இராணுவ உயர் அதிகாரியான மேஜர் உஷாம் சுபையிரின் இளைய சகோதரரும் ஆவார்.

இவர் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பட்டம் பெற்றவரும் ஆவார்.

இவர் கடல் சார்ந்த பல திறமைகளைக் கொண்டு இலங்கை கடற்படை கல்லூரியில் பயிற்சியை பெற்று தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் கடப்படையில் பல உயர்வுகளை பெற வேண்டும் என்று Sky thulir சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Addalaichenai
Ampara
32350

Alerts

Be the first to know and let us send you an email when Sky thulir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky thulir:

Share