Topone

Topone TV Channel

 #பிரதேசத்திலுள்ள_முன்பள்ளி #பாடசாலைகளின்  #ஆசிரியைகளுக்கான_விழிப்புணர்வு  #நிகழ்ச்சிமின்னணுத் தொழிநுட்பம் அபரிமிதமாக வள...
09/07/2025

#பிரதேசத்திலுள்ள_முன்பள்ளி
#பாடசாலைகளின் #ஆசிரியைகளுக்கான_விழிப்புணர்வு #நிகழ்ச்சி

மின்னணுத் தொழிநுட்பம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வரும் சமகாலத்தில் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு சீர்கேடுகளை எமது சமூகம் சந்தித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் முன்பிள்ளைப் பருவத்திலிருந்தே ஆன்மீக, ஒழுக்க, விழுமியங்கள் மற்றும் டிஜிடல் சாதனங்களை முறையாகக் கையாளும் விதம் போன்றவற்றைக் கட்டியெழுப்பவேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது. இதனடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளை, இறக்காமம் ஜும்மா பெரியபள்ளிவாசலின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் "கல்வி அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுப் பேரவை (சீடா)" இறக்காமம் பிரதேச செயலகம் மற்றும் ஹீலிங் மைண்ட்ஸ்" ஆகிய அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து பிரதேசத்திலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 2025.07. 03 ஆம் திகதி இறக்கமாம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இறக்காமம் பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். எம். ரஸாக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவில் பணியாற்றும் முன்பிள்ளளை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் ஆர். எம். இம்டாட் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம வளவாளர்களாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்திக்கான பணிப்பாளரும் "சீடா" நிறுவனத்தின் தலைவருமான ஜனாப் ஏ.எம். எம். சியாட் (இலங்கை கல்வி நிருவாக சேவை) அவர்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளையின் தலைவரும் "சீடா" நிறுவனத்தின் செயலாளரும் "ஹீலிங் மைண்ட்ஸ்" நிறுவனத்தின் ஸ்தாபகருமான அஷ்ஷெய்க் அப்துல் வஹாப் (இஸ்லாஹி) அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவிருந்து திருமதி. எம்.எம்.கே. ஸாஜிதா (மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களும் அ.இ.ஜ.உ இறக்காமம் கிளை சார்பாக ஆசிரியர், அஷ்ஷெய்க் எஸ். எல். முஜிப்தீன் (ஹாமி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் முக்கிய பங்களர்களான முன்பள்ளி ஆசிரியைகள் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலத்தின் தேவை என்பதை சுட்டிக்காட்டியதுடன் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டனர்.

 #தனது_முதல்_மாத_சம்பளத்தை_பெற்று  ிமிடங்களில்_தேசிய  #பாடசாலைக்கு_அன்பழிப்பு_செய்த  #இறக்காமம்_பிரதேச_சபையின்_NPP  #உறு...
07/07/2025

#தனது_முதல்_மாத_சம்பளத்தை_பெற்று ிமிடங்களில்_தேசிய #பாடசாலைக்கு_அன்பழிப்பு_செய்த #இறக்காமம்_பிரதேச_சபையின்_NPP #உறுப்பினர்

Rowsan sirajoon

இறக்காமம் பிரதேச சபையின் மூன்றாவது சபையின் முதலாவது அமர்வு 2025.07.07 (இன்று) தவிசாளர் எம்.எல்.முஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது NPP கட்சியை பிரதிநிதுவப்படுத்தும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் தாஹா செய்னுத்தீன்(பசீல்) தனக்கு வழங்கப்பட்ட முதல் மாத சம்பளத்தை, சம்பளம் பெற்று 15 நிமிடங்களுக்குள் இறக்காமம் அல்- அஸ்ரப் மத்திய கல்லூரிக்கு சென்று பாடசாலையின் வளாகத்தை துப்பரவுசெய்யும் பணிக்கு பயன் படுத்துமாறு கூறி பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் முன்னிலையில் அதிபர் அவர்களிடம் ஒப்படைத்தார்.

இதன் போது தனது பிரதேச சபைக் காலம் முடியும் வரை தனது மாதாந்த சம்பளத்தை படசாலையின் துப்பரவு பணிக்கு கொடுப்பதாகவும் வாக்குறுதியழித்தார்.

இச்செயற்பாட்டை பாடசாலை சமூகம் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் பொது மக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 #இறக்காமம்_பிரதேச_சபையின்_மூன்றாவது_சபையின்_முதலாவது_சபை_அமர்வில்_தவிசாளர்_எம்_எல்_முஸ்மி_தலைமையில்
07/07/2025

#இறக்காமம்_பிரதேச_சபையின்_மூன்றாவது_சபையின்_முதலாவது_சபை_அமர்வில்_தவிசாளர்_எம்_எல்_முஸ்மி_தலைமையில்

 #இலங்கை_பைத்துல்மால்_நிதியம்"  #என்ற_பெயரில்_நிதியமொன்றை  #அமைக்க_அங்கிகாரம்_தாருங்கள்.- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்...
02/07/2025

#இலங்கை_பைத்துல்மால்_நிதியம்" #என்ற_பெயரில்_நிதியமொன்றை #அமைக்க_அங்கிகாரம்_தாருங்கள்.

- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனிநபர் பிரேரணை சமர்ப்பிப்பு..!

(எஸ். சினீஸ் கான்)

இலங்கையில் பைத்துல்மால் நிதியமொன்றை உருவாக்க அங்கிகாரம் தருமாறு தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இன்று (2) ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பைத்துல்மால் நிதியம்' என்ற பெயரிலான நிதியம் உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளிலும் பல ஆண்டுகாலமாக இயங்கிவருகிறது.

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் கல்வி, கலாச்சாரம், தொழில் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்கான ஒரு நிதியம் தற்சமயம் முஸ்லிம் சமய, கலாச்சார அலுவலக திணைக்களத்தில் இல்லாமல் உள்ளது.

இங்கையிலும் இவ்வாறதொரு நிதியம் ஆரம்பிக்கப்படுமானால் இவ்வாறதொரு நிதியத்தினை இலங்கையில் ஆரம்பிப்போமானால் பல்வேறு உதவித்திட்டங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களதின் கீழ் "இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியினை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத்தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, பா.56/2025 இலக்க பாராளுமன்ற விஷேட ஒழுங்குப் பத்திரத்தின் மூலமும் இது அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுடன், இப்பிரேரணைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கப்பபால் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

26/06/2025

இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளராக கௌரவஎன்.எம்.ஆசிக்

26/06/2025

இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளராக கௌரவ M.L.முஸ்மி தெரிவு

 #ஹிங்குரானை_சீனித்_தொழிற்சாலை  #கரும்பு_உற்பத்தியாளர்களின்  #பிரச்சினைக்கு_தீர்வு_வழங்க_வேண்டும்  #அம்பாறை_மாவட்ட_பாராள...
20/06/2025

#ஹிங்குரானை_சீனித்_தொழிற்சாலை #கரும்பு_உற்பத்தியாளர்களின் #பிரச்சினைக்கு_தீர்வு_வழங்க_வேண்டும்
#அம்பாறை_மாவட்ட_பாராளுமன்ற #உறுப்பினர்_உதுமாலெப்பை

ஹிங்குரானை சீனித் தொழிற்சாலை கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கைத்தொழில் அமைச்சின் ஆலோனைக் கூட்டத்தில் தெரிவிப்பு

ஹிங்குரானை சீனித் தொழிற்சாலையில் 51% அரசாங்கத்துக்கும் 49% தனியாருக்கும் வழங்கப்பட்டிருப்பதால் கரும்பு செய்கையாளர்கள் தொடர்ந்தும் நஸ்டம் அடைந்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை கைத்தொழில் அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில்ஹந்துன்நெத்தி
தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று(19.06.2025) நடைபெற்ற கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

நமது நாட்டின் சீனி உற்பத்திகளை மேற்கொள்ள 167 ஹக்டர் கரும்பு செய்கைக்கு ஹிங்குரானை சீனிக் கூட்டுத்தாபனத்தில் வழங்கப்பட்டதுடன் மேலதிகமாக 5000 ஹக்டயருக்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான காணிகளில் 2007ம் ஆண்டு தொடக்கம் நாட்டின் சீனி உற்பத்தியை அதிகரிக்க அம்பாறை மாவட்டத்தில் கரும்பு செய்கையை ஆரம்பித்து 18 வருடங்கள் சென்றும் ஹிங்குரானை சீனி தொழிற்சாலை சீனி உற்பத்தியில் நஸ்டம் ஏற்பட்டுள்ளதுடன்.
அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகின்றன.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என அம்பாறை மாவட்டத்தில் கரும்பு பயிர்ச்செய்கையாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருவதுடன் அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் தங்களுக்கான 13 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என முன்வைத்துள்ளனர் .

அம்பாறை மாவட்டத்தில் கரும்பு பயிர்ச்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்கக்கூடிய வகையில் கரும்பு பயிர்ச்செய்கைகளின் செற்பாடுகளில் மாற்றுத்திட்டங்களை அமைச்சு ஏற்படுத்த வேண்டும்.

அம்பாறை மாவட்ட கரும்பு பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விஷேட ஏற்பாடுகளை அமைச்சர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான விபரங்களை ஏற்கனவே நான் அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்.

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக கரும்பு பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு பிரதேச செயலாளர்கள் கரும்பு செய்கை காணி சொந்தக்காரர்களுக்கு கரும்பு பயிர்ச்செய்கை மட்டும் மேற்கொள்ளலாம் என உத்தரவு பத்திரங்களை வழங்கியுள்ளனர்
இவ்வுத்தரவு பத்திரங்களை உறவினர்களுக்கு மாற்றம் செய்து தருமாறு கரும்பு பயிர்ச்செய்கையாளர்கள் விண்ணப்பம் செய்த போதும் பிரதேச செயலாளர்கள் கரும்பு செய்கையாளர்களின் உத்தரவு பத்திரத்தை மாற்றி வழங்கக்கூடாது என சில உயர் அதிகாரிகள் தடைசெய்கின்றனர்.
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட ஒருக்கினைப்புக்குழுக் கூட்டத்திலும் என்னால் பிரேரனை கொண்டு வரப்பட்டு இதற்கான விஷேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தங்களுக்கான காணியில் சீனி உற்பத்திற்காக கரும்பு பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளுக்கு தங்களுக்கான காணியினை தங்களது உறவினர்களுக்கு மாற்றிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அறிவித்தலின் படி பிரதேச செயலாளர்களினால் கரும்பு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட உத்தரவு பத்திரங்கள் தங்களின் பிள்ளைகளுக்கு மாற்றிக் கொடுக்க முடியாமல் உள்ள நிலைமை தொடர்பாக அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் வருகை தந்திருக்கும் உயர் அதிகாரிகள் உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

நீண்ட காலமாக இலாபம் இன்றி கரும்பு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்களுக்கு சொந்தமான (கரும்பு பயிர்கள்) 271/2 ஏக்கர் 30.05.2025 தீப்பற்றியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் ஹிங்குரானை சீனிக் கூட்டுத்தாபனத்திலும்,பொலிசிலும்,பிரதேச செயலாளர்களுக்கும் அறிக்கை செய்துள்ளனர் .தீயில் பாதிக்கப்பட்ட கரும்புக்காணி சொந்தக்காரர்களுக்கு ஹிங்குரானை சீனிக் கூட்டுத்தாபனத்தில் எவ்வித நஸ்ட ஈடுகளும் வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்.இக்காணிகளுக்கு காப்புறுதி செய்யப்பட்டும் நஸ்ட ஈடு வழங்க முடியாது என தெரிவிக்கின்றார்கள்.எனவே எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட கரும்பு பயிர்ச்செய்கையாளர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் போது நஸ்ட ஈடுகள் வழங்க கூடிய செயற்பாடுகளை சீனிக் கூட்டுத்தாபனம் முன்னெடுப்பதற்கான பணிப்புரைகள் வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்த விடயங்களுக்கு சீனிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளரை பதில் அளிக்குமாறு கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில்ஹந்துன்நெத்தி கேட்டுக்கொண்டார்.

சீனிக் கூட்டுத்தாபணத்தின் பணிப்பாளர் பதில் அளிக்கையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களினால் தெரிவிக்கப்பட்ட தீக்கவாபி-ஆளங்குள பிரதேசத்தில் 27 1/2 கரும்பு பயிர்கள் தீப்பற்றியுள்ளமை உண்மையாகும். சீனிக் கூட்டுத்தாபனம் கரும்பு பயிர்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருந்தாலும் நஸ்டஈடு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.எதிர்காலத்தில் கரும்பு பயிர்ச் செய்கைகளுக்கான விஷேட காப்புறுதித் திட்டத்திற்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டுள்ள கரும்பு செய்ய மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பத்திரங்களை உறவினர்களுக்கு மாற்றுதல் தொடர்பான பல விண்ணப்பங்கள் கிடைத்துள்ள போதிலும் இதுவரை எவருக்கும் உத்தரவு பத்திரங்களை மாற்றிக் கொடுக்கவில்லை என சீனி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கைத்தொழில் அமைச்சர் பதில் அளிக்கையில் அம்பாறை மாவட்டத்தில் கரும்பு பயிர்ச்செய்கையில் ஈடுட்டு வரும் காணிச் சொந்தக்காரர்களின் உத்தரவுப் பத்திரங்களை மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

அம்பாறை மாவட்டத்தில் கரும்பு செய்கையாளர்களின் காணிக்கான உத்தரவுப் பத்திரங்களின் மாற்றங்கள் தொடர்பான விபரங்களை பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையை சமப்பிக்குமாறு கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி கேட்டுக்கொண்டார்.

 #பெற்றோல்_பற்றாக்குறை_குறித்து  #எரிசக்தி_அமைச்சு_வெளியிட்ட  #அறிக்கைநாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படு...
17/06/2025

#பெற்றோல்_பற்றாக்குறை_குறித்து #எரிசக்தி_அமைச்சு_வெளியிட்ட #அறிக்கை

நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படும் போலி செய்திகளுக்கு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பெற தேவையான நடவடிக்கைகள் தயாராக உள்ளதாகவும் இது தொடர்பாக பரப்பப்படும் போலிச் செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது

07/06/2025

இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட திடத்தொழுகையின் நேரலை

 ுற்றாடல்_தினத்தை  #முன்னிட்டு_இன்று_லீடர்  #ஜூனியர்_பாடசாலை_Mango_Garden  #இல்_மர_நடுகை_இடம்பெற்றது2025.06.05உலக சுற்றா...
05/06/2025

ுற்றாடல்_தினத்தை #முன்னிட்டு_இன்று_லீடர் #ஜூனியர்_பாடசாலை_Mango_Garden #இல்_மர_நடுகை_இடம்பெற்றது

2025.06.05

உலக சுற்றாடல் தினம் இன்று லீடர் ஜூனியர் பாடசாலை "Mango Garden" இல் அதிபர் U.K.நிஹால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் Mr.U.L.மஹ்மூதுலெவ்வை அவர்களும், சிரேஷ்ட பொது சுகாதார உத்தியோகத்தர் Mr.D.B.K.P.டந்தெனிய அவர்களும் சுற்றாடல் உத்தியோகத்தர் Mr.K.ராஜன் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஏ.சி.அப்றோஸ் ஜஹான் ஆசிரியரால் சுற்றாடல் தினம் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றதுடன் மரக் கன்றுகளும் நினைவாக நடப்பட்டது.

 #இறக்காமம்_பிரதேச_சபையின்  #தவிசாளர்_தெரிவு_எப்போது(றௌசான் சிறாஜுன்)நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இறக்க...
03/06/2025

#இறக்காமம்_பிரதேச_சபையின் #தவிசாளர்_தெரிவு_எப்போது

(றௌசான் சிறாஜுன்)

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச சபைத் தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தவறியதால் எதிர் வருகின்ற இருபத்தி ஆறாம் திகதி (26) உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் தவிசாளர் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

13 உறுப்பினர்களைக் கொண்ட இறக்காமம் பிரதேச சபையில்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ். 04
தேசிய மக்கள் சக்தி. 03
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 02
தேசிய காங்கிரஸ். 01
ஐக்கிய மக்கள் கூட்டணி 01
சுயற்சை 01
சுயற்சை. 01

 #கிழக்கில்_அறுதிப்_பெரும்பான்மை  #இல்லாத_30_சபைகளுக்கான  #தவிசாளர்_துணை_தவிசாளர்களை  #தெரிவு_ஜூன்_15_க்குப்_பின்னரே  #ச...
01/06/2025

#கிழக்கில்_அறுதிப்_பெரும்பான்மை #இல்லாத_30_சபைகளுக்கான #தவிசாளர்_துணை_தவிசாளர்களை #தெரிவு_ஜூன்_15_க்குப்_பின்னரே #சாத்தியம்...!!!

மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தெரிவிப்பு...!!

எஸ் ஜே புஹாது

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் எந்த தரப்பும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளாத 30 உள்ளூராட்சி சபைகளுக்கான தவிசாளர் மற்றும் துணை தவிசாளர்களை தேர்வு செய்வதற்கான முதலாவது சபை அமர்வுகள் பெரும்பாலும் ஜூன் 15ஆம் தேதிக்குப் பின்பு தான் நடைபெறும்.

இவ்வாறு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ எல் எம் அஸ்மி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர் தேர்வு குறித்த முதலாவது சபை அமர்வு தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் 45 உள்ளூராட்சி சபைகள் உள்ளன இவற்றில் கல்முனை மாநகர சபையை தவிர்த்து ஏனைய 44 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது இதில் தேர்வான உறுப்பினர்களுக்கான உறுப்புரிமை வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இமாதம் அதாவது ஜூன் மாதம் 02 ந் திகதி முதல் செயற்படும் வண்ணம் நடைமுறைக்கு வருகின்றது இதற்கு அமைய 50 வீதத்துக்கு அதிகமாக உறுப்பினர்களை பெற்றுள்ள 14 உள்ளூராட்சி மன்றங்களினது மேயர் அல்லது தவிசாளர் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளருடன் இணைந்து நான்கு நாட்கள் முன்னதாக அவகாசம் வைத்து உறுப்பினர்களுக்கு அறிவித்தல் கொடுத்து சுயமாக தத்தமது உள்ளூராட்சி மன்றங்களின் சபை அமர்வுகளை ஆரம்பிக்கலாம். அந்த வகையில் நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நான்கு நாட்கள் அவகாசத்துடன் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து ஜூன் 02 ந் திகதி சபை அமர்வுகளை நடத்துவதற்கு தேவையான கால அவகாசம் இன்மையால் ஜூன் 02 ந் திகதி இவ்வாறு 50 விகிதத்திற்கும் அதிகமான பெரும்பான்மையைக் கொண்டுள்ள சபைகளின் முதலாவது அமர்வுகள் இடம் பெறுவது சாத்தியமற்றது. அதே வேளை கிழக்கு மாகாணத்தில் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளாது கொங்கு நிலையில் 30 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. அம்பாறை மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளும் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா 09 உள்ளூராட்சி சபைகளும் பெரும்பான்மை பலம் இன்றி இவ்விதம் தொங்கு நிலையில் உள்ளன. இச்சபைகளின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவி பிரிவுக்கான தெரிவுகளானது கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்ற வகையில் எனது தலைமையில் அந்தந்த சபைகளில் இடம் பெறும். இக்கூட்டங்கள் பெரும்பாலும் ஜூன் மாதம் 15 ஆம் தேதிக்கு பிற்பாடே அந்தந்த சபைகளில் நடைபெறும் சாத்தியங்கள் உள்ளன. ஏனெனில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ளாத 30 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தவிசாளர் மற்றும் துணை தவிசாளர்களை தேர்வு செய்வதற்கான முதலாவது சபை கூட்டம் அமர்வு நடைபெறும் திகதிகள் குறிப்பிட்டு மும்மொழிகளிலும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படல் வேண்டும். அதன் படி முதலாவது அமர்வு நடைபெறும் தினத்திற்கு 07 நாட்களுக்கு முன்னதாக இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ளாத முப்பது உள்ளூராட்சி மன்றங்களுக்குமான முதலாவது அமர்வு ஜூன் மாதம் 15 ந் திகதிக்கு பிற்பாடே இடம் பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தெரிவித்தார். அத்துடன் குறைந்தது இந்த 30 ஊராட்சி சபைகளுக்கும் தவிசாளர் மற்றும் துணை தவிசாளர்களை தேர்வு செய்வதற்காக 15 நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Address

Irakkamam
Ampara
32450

Telephone

+94758088774

Website

Alerts

Be the first to know and let us send you an email when Topone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Topone:

Share

Category