21/11/2025
#கண்ணீர்_மல்க
#இறக்காமம்_பிரதேச_சபையின்_கௌரவ #பிரதித்_தவிசாளர்_ஆஷிக்_இராஜினாமா #செய்தார்.
றௌசான் சிறாஜுன்
2025.11.21
பிரதி தவிசாளர் என்.எம்.ஆஷிக் தனது பதவியை இன்று 21.11.2025 வெள்ளிக் கிழமை கௌரவ தவிசாளர் எம்.எல்.முஸ்மி அவர்களின் முன்னிலையில் இராஜினமா செய்தார்.
சென்ற வாரம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தலைமையில் (15.11.2025) சனிக்கிழமை ஒலுவில் Green Villa ல் நடைபெற்ற கூட்டத்தின் தீர்மானத்தின் படி இந்த வாரத்திற்குள் தனது பிரதித் தவிசாளர் பதவியை . ஆஷிக் இராஜினமா செய்வதாக கட்சியின் உயர் மட்டம் கூடி முடிவு செய்தது.
அதன் பிரகாரம் கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டு தனது பதவியினை இன்று இராஜினமா செய்துள்ளார்.
பிரதி தவிசாளர் பதவியை ஆஷிக் முன் கூட்டியே கட்சி வேண்டிக் கொண்டதுக்கு இனங்க இன்று இறக்காமம் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.முஸ்மி அவர்கள் முன்னிலையில் கையளித்ததைத் தொடர்த்து தவிசாளர் ஊடாக அம்பாறை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகர் முன்னிலையில் கையளித்தார்.
இந்நிகழ்வில் கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளருமான எஸ்.எம்.எம். . முஷாரப் முதுநபீன், கட்சியின் அம்பாரை மாவட்ட செயற்குழு செயலாளர் ஏசி ..சமால்டீன் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ..றியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.