
09/07/2025
#பிரதேசத்திலுள்ள_முன்பள்ளி
#பாடசாலைகளின் #ஆசிரியைகளுக்கான_விழிப்புணர்வு #நிகழ்ச்சி
மின்னணுத் தொழிநுட்பம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வரும் சமகாலத்தில் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு சீர்கேடுகளை எமது சமூகம் சந்தித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் முன்பிள்ளைப் பருவத்திலிருந்தே ஆன்மீக, ஒழுக்க, விழுமியங்கள் மற்றும் டிஜிடல் சாதனங்களை முறையாகக் கையாளும் விதம் போன்றவற்றைக் கட்டியெழுப்பவேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது. இதனடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளை, இறக்காமம் ஜும்மா பெரியபள்ளிவாசலின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் "கல்வி அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுப் பேரவை (சீடா)" இறக்காமம் பிரதேச செயலகம் மற்றும் ஹீலிங் மைண்ட்ஸ்" ஆகிய அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து பிரதேசத்திலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 2025.07. 03 ஆம் திகதி இறக்கமாம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இறக்காமம் பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். எம். ரஸாக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவில் பணியாற்றும் முன்பிள்ளளை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் ஆர். எம். இம்டாட் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம வளவாளர்களாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்திக்கான பணிப்பாளரும் "சீடா" நிறுவனத்தின் தலைவருமான ஜனாப் ஏ.எம். எம். சியாட் (இலங்கை கல்வி நிருவாக சேவை) அவர்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளையின் தலைவரும் "சீடா" நிறுவனத்தின் செயலாளரும் "ஹீலிங் மைண்ட்ஸ்" நிறுவனத்தின் ஸ்தாபகருமான அஷ்ஷெய்க் அப்துல் வஹாப் (இஸ்லாஹி) அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவிருந்து திருமதி. எம்.எம்.கே. ஸாஜிதா (மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களும் அ.இ.ஜ.உ இறக்காமம் கிளை சார்பாக ஆசிரியர், அஷ்ஷெய்க் எஸ். எல். முஜிப்தீன் (ஹாமி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் முக்கிய பங்களர்களான முன்பள்ளி ஆசிரியைகள் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலத்தின் தேவை என்பதை சுட்டிக்காட்டியதுடன் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டனர்.