Topone

Topone TV Channel

 #அஷ்ரப்_தேசிய_பாடசாலைக்கு  #தவிசாளர்_எம்_எல்_முஸ்மி_திடீர்  #விஜயம்_ஒன்றை_மேற்கொண்டார்202509.24இறக்காமம் அஷ்ரப் தேசிய ப...
24/09/2025

#அஷ்ரப்_தேசிய_பாடசாலைக்கு #தவிசாளர்_எம்_எல்_முஸ்மி_திடீர் #விஜயம்_ஒன்றை_மேற்கொண்டார்

202509.24

இறக்காமம் அஷ்ரப் தேசிய பாடசாலைக்கு இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எல்.முஸ்மி உடனான குழுவினர் திடீர் விஜயம் ஒன்றினை மேற் கொண்டனர்.

பாடசாலையின் சுற்றுப்புறச் சூழல், குடி நீர், மலசல கூடம் மற்றும் சிற்றூண்டிச்சாலைகள் பொன்றன மாணவர்களின் கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கு ஏதும் குந்தகம் விழைவிக்கக் கூடியனவா என ஆராய்வதற்கு இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளர், சுகாதார பரிசோதகர், சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், இறக்காமம் பிரதேச சபையின் சுகாதாரக் குழு உள்ளிட்ட அதிகாரிகள் சென்றிருந்தனர்.

அண்மையில் பெய்த மழையினால் பாடசாலையின் சுற்றுப்புற சூழலில் நுளம்புகள் பரவக்கூடிய இடங்களையும் ஆராய்ந்து பார்வையிட்டனர்

மேலும் பாடசாலையின் வளாகத்தில் மாணவர்களின் பாவனைக்கு உதவாத மூன்று மாடிகளை கொண்ட கட்டிடம் மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதையும் அவதானித்து கட்டிடத்தை உடனடியாக அகற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பதனை உயர் அதிகாரிகளுக்கு எத்தி வைத்தார்

தொடர்ந்தும் பிரதேசத்தில் உள்ள ஏனைய பாடசாலைகள் பொது நிறுவனங்களின் சுற்றுப்புற சூழல் மற்றும் சுகாதாரங்களை மையப்படுத்தி திடீர் விஜயங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்

இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எல்.முஸ்மி அவர்களின் தலைமையில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மஞ்சுள ரத்னாயக்கா அவர்கள...
15/09/2025

இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம்.எல்.முஸ்மி அவர்களின் தலைமையில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் மஞ்சுள ரத்னாயக்கா அவர்களின் பங்குபற்றலுடன் இறக்காமம் பிரதேச சபையில்நடமாடும் சேவை

இறக்காமம் பிரதேச மக்களின் நலன்கருதி நடமாடும் சேவை இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் பல்வேறு திணைக்களங்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சேவைகளை வழங்கி வருகின்றது.

ஆரம்ப நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் விமல் ரத்னாயக்கா, திக்காமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களும் கலந்து கொண்டனர்

   ..!  ்டாளைச்சேனை_Al_Naja  #கழகம்..! ்காமம்_Sports_Club..!இறக்காமம் YOUNG WISHERS விளையாட்டு கழகம் நாடாத்திய அணிக்கு 0...
24/08/2025

..!

்டாளைச்சேனை_Al_Naja #கழகம்..!

்காமம்_Sports_Club..!

இறக்காமம் YOUNG WISHERS விளையாட்டு கழகம் நாடாத்திய அணிக்கு 08 பேர் 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மின்னொளியிலான கிரிக்கற் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி (2025.08.23) இறக்காமம் விளையாட்டு கழகத்தை எதிர்த்தாடி சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டு கழகம்.

வெற்றி பெற்ற அல் -நஜா அணிக்கு வெற்றிக்கிண்ணமும் 50ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இரண்டாம் இடம் பெற்ற இறக்காமம்
விளையாட்டு கழக அணியினருக்கு
கிண்ணத்துடன் 30 ஆயிரம் ரூபாய் பணப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாக அல் -நஜா கழக வீரர் அஸ்லமும்,

தொடரின் சிறந்த வீரராக இறக்காமம் விளையாட்டு கழக வீரர் சிபாத் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

 #நடந்தது இதுதான்.!முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில்..வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங...
22/08/2025

#நடந்தது இதுதான்.!

முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில்..

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 03.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்தில், 2023 செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குச் சென்றிருந்தார்.

இப்பயணத்தை முடித்து நாட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தார்.

இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டர், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மூலம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பிதழ் வழங்கியிருந்தார்.

இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணத்தின் போது அரசாங்க நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி ஒரு நபர் சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளித்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

அதன்படி, விசாரணை தொடங்கப்பட்டு, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உதவியாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து சமீபத்தில் அந்தத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.

அதைத் தொடர்ந்து, விக்ரமசிங்கவை இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அவர் இன்று காலை 9.00 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

சுமார் 4 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி பிற்பகல் 1.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

முறைப்பாட்டாளர் தரப்பு சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் விளக்கமளித்தார்.வி.எஸ். கருணாரத்ன என்ற நபர் 17.03.2025 அன்று ஜனாதிபதியிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டதாகவும், பின்னர் 23.05.2025 அன்று ஜனாதிபதியின் செயலாளரால் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 13.09.2023 முதல் 20.09.2023 வரை கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பின்னர், 22 மற்றும் 23.09.2023 ஆகிய திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்வதாகக் கூறி தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டதன் மூலம் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தொடர்புடைய சம்பவம் தொடர்பாக 33 சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், நாட்டின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவை சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்தார்.

நீண்ட விசாரணைகளின் போது அரசாங்க தரப்பு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக ரணிலுக்கான பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹிங்குராண பிரதேச கரும்பு  விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய சந்திப்புகள்அம்பாறை மாவட்டத்தின் ஹிங்குறாண சீனித் ...
22/07/2025

ஹிங்குராண பிரதேச கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய சந்திப்புகள்

அம்பாறை மாவட்டத்தின் ஹிங்குறாண சீனித் தொழிற்சாலைக்குட்பட்ட வலயங்களில் கரும்புச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அங்குள்ள கரும்பு உற்பத்தியாளர் சங்கப் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (22) ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களைச் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து உரையாடினர்.

இந்த சந்திப்பின் போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்கள் குறித்து அவருடன் விரிவாகக் கலந்துரையாடினர்.

அதனையடுத்து, பிரஸ்தாப சங்கங்களின் பிரதிநிதிகள் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களின் நெறிப்படுத்தலில், கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியுடனும் அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இவ்விவகாரத்துக்கு கூடிய விரைவில் உரிய தீர்வு வழங்கப்படும் எனவும், அதையிட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி உறுதியளித்தார்.

இந்த சந்திப்பில், கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். வாசித், மஞ்சுல ரத்நாயக்க ஆகியோரும் பங்குபற்றினர்.

 #பிரதேசத்திலுள்ள_முன்பள்ளி #பாடசாலைகளின்  #ஆசிரியைகளுக்கான_விழிப்புணர்வு  #நிகழ்ச்சிமின்னணுத் தொழிநுட்பம் அபரிமிதமாக வள...
09/07/2025

#பிரதேசத்திலுள்ள_முன்பள்ளி
#பாடசாலைகளின் #ஆசிரியைகளுக்கான_விழிப்புணர்வு #நிகழ்ச்சி

மின்னணுத் தொழிநுட்பம் அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வரும் சமகாலத்தில் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு சீர்கேடுகளை எமது சமூகம் சந்தித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் முன்பிள்ளைப் பருவத்திலிருந்தே ஆன்மீக, ஒழுக்க, விழுமியங்கள் மற்றும் டிஜிடல் சாதனங்களை முறையாகக் கையாளும் விதம் போன்றவற்றைக் கட்டியெழுப்பவேண்டிய கட்டாயத் தேவை எழுந்துள்ளது. இதனடிப்படையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளை, இறக்காமம் ஜும்மா பெரியபள்ளிவாசலின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் "கல்வி அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டுப் பேரவை (சீடா)" இறக்காமம் பிரதேச செயலகம் மற்றும் ஹீலிங் மைண்ட்ஸ்" ஆகிய அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து பிரதேசத்திலுள்ள முன்பள்ளிப் பாடசாலைகளின் ஆசிரியைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 2025.07. 03 ஆம் திகதி இறக்கமாம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இறக்காமம் பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஐ.எல். எம். ரஸாக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வானது சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவில் பணியாற்றும் முன்பிள்ளளை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப் ஆர். எம். இம்டாட் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம வளவாளர்களாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் கல்வி அபிவிருத்திக்கான பணிப்பாளரும் "சீடா" நிறுவனத்தின் தலைவருமான ஜனாப் ஏ.எம். எம். சியாட் (இலங்கை கல்வி நிருவாக சேவை) அவர்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இறக்காமம் பிரதேசக் கிளையின் தலைவரும் "சீடா" நிறுவனத்தின் செயலாளரும் "ஹீலிங் மைண்ட்ஸ்" நிறுவனத்தின் ஸ்தாபகருமான அஷ்ஷெய்க் அப்துல் வஹாப் (இஸ்லாஹி) அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவிருந்து திருமதி. எம்.எம்.கே. ஸாஜிதா (மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்) அவர்களும் அ.இ.ஜ.உ இறக்காமம் கிளை சார்பாக ஆசிரியர், அஷ்ஷெய்க் எஸ். எல். முஜிப்தீன் (ஹாமி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் முக்கிய பங்களர்களான முன்பள்ளி ஆசிரியைகள் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காலத்தின் தேவை என்பதை சுட்டிக்காட்டியதுடன் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கும் இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துவதன் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டனர்.

 #தனது_முதல்_மாத_சம்பளத்தை_பெற்று  ிமிடங்களில்_தேசிய  #பாடசாலைக்கு_அன்பழிப்பு_செய்த  #இறக்காமம்_பிரதேச_சபையின்_NPP  #உறு...
07/07/2025

#தனது_முதல்_மாத_சம்பளத்தை_பெற்று ிமிடங்களில்_தேசிய #பாடசாலைக்கு_அன்பழிப்பு_செய்த #இறக்காமம்_பிரதேச_சபையின்_NPP #உறுப்பினர்

Rowsan sirajoon

இறக்காமம் பிரதேச சபையின் மூன்றாவது சபையின் முதலாவது அமர்வு 2025.07.07 (இன்று) தவிசாளர் எம்.எல்.முஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது NPP கட்சியை பிரதிநிதுவப்படுத்தும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் தாஹா செய்னுத்தீன்(பசீல்) தனக்கு வழங்கப்பட்ட முதல் மாத சம்பளத்தை, சம்பளம் பெற்று 15 நிமிடங்களுக்குள் இறக்காமம் அல்- அஸ்ரப் மத்திய கல்லூரிக்கு சென்று பாடசாலையின் வளாகத்தை துப்பரவுசெய்யும் பணிக்கு பயன் படுத்துமாறு கூறி பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் முன்னிலையில் அதிபர் அவர்களிடம் ஒப்படைத்தார்.

இதன் போது தனது பிரதேச சபைக் காலம் முடியும் வரை தனது மாதாந்த சம்பளத்தை படசாலையின் துப்பரவு பணிக்கு கொடுப்பதாகவும் வாக்குறுதியழித்தார்.

இச்செயற்பாட்டை பாடசாலை சமூகம் மற்றும் ஊர் நலன் விரும்பிகள் பொது மக்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 #இறக்காமம்_பிரதேச_சபையின்_மூன்றாவது_சபையின்_முதலாவது_சபை_அமர்வில்_தவிசாளர்_எம்_எல்_முஸ்மி_தலைமையில்
07/07/2025

#இறக்காமம்_பிரதேச_சபையின்_மூன்றாவது_சபையின்_முதலாவது_சபை_அமர்வில்_தவிசாளர்_எம்_எல்_முஸ்மி_தலைமையில்

 #இலங்கை_பைத்துல்மால்_நிதியம்"  #என்ற_பெயரில்_நிதியமொன்றை  #அமைக்க_அங்கிகாரம்_தாருங்கள்.- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்...
02/07/2025

#இலங்கை_பைத்துல்மால்_நிதியம்" #என்ற_பெயரில்_நிதியமொன்றை #அமைக்க_அங்கிகாரம்_தாருங்கள்.

- கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தனிநபர் பிரேரணை சமர்ப்பிப்பு..!

(எஸ். சினீஸ் கான்)

இலங்கையில் பைத்துல்மால் நிதியமொன்றை உருவாக்க அங்கிகாரம் தருமாறு தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இன்று (2) ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பைத்துல்மால் நிதியம்' என்ற பெயரிலான நிதியம் உலகிலுள்ள முஸ்லிம் நாடுகள் மற்றும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற நாடுகளிலும் பல ஆண்டுகாலமாக இயங்கிவருகிறது.

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் கல்வி, கலாச்சாரம், தொழில் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்கான ஒரு நிதியம் தற்சமயம் முஸ்லிம் சமய, கலாச்சார அலுவலக திணைக்களத்தில் இல்லாமல் உள்ளது.

இங்கையிலும் இவ்வாறதொரு நிதியம் ஆரம்பிக்கப்படுமானால் இவ்வாறதொரு நிதியத்தினை இலங்கையில் ஆரம்பிப்போமானால் பல்வேறு உதவித்திட்டங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்.

முஸ்லிம் சமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களதின் கீழ் "இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் நிதியம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதியினை வெளிநாடுகளிலிருந்து பெற்றுத்தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, பா.56/2025 இலக்க பாராளுமன்ற விஷேட ஒழுங்குப் பத்திரத்தின் மூலமும் இது அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுடன், இப்பிரேரணைக்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கப்பபால் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

26/06/2025

இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளராக கௌரவஎன்.எம்.ஆசிக்

26/06/2025

இறக்காமம் பிரதேச சபையின் தவிசாளராக கௌரவ M.L.முஸ்மி தெரிவு

 #ஹிங்குரானை_சீனித்_தொழிற்சாலை  #கரும்பு_உற்பத்தியாளர்களின்  #பிரச்சினைக்கு_தீர்வு_வழங்க_வேண்டும்  #அம்பாறை_மாவட்ட_பாராள...
20/06/2025

#ஹிங்குரானை_சீனித்_தொழிற்சாலை #கரும்பு_உற்பத்தியாளர்களின் #பிரச்சினைக்கு_தீர்வு_வழங்க_வேண்டும்
#அம்பாறை_மாவட்ட_பாராளுமன்ற #உறுப்பினர்_உதுமாலெப்பை

ஹிங்குரானை சீனித் தொழிற்சாலை கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கைத்தொழில் அமைச்சின் ஆலோனைக் கூட்டத்தில் தெரிவிப்பு

ஹிங்குரானை சீனித் தொழிற்சாலையில் 51% அரசாங்கத்துக்கும் 49% தனியாருக்கும் வழங்கப்பட்டிருப்பதால் கரும்பு செய்கையாளர்கள் தொடர்ந்தும் நஸ்டம் அடைந்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை கைத்தொழில் அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில்ஹந்துன்நெத்தி
தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் நேற்று(19.06.2025) நடைபெற்ற கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

நமது நாட்டின் சீனி உற்பத்திகளை மேற்கொள்ள 167 ஹக்டர் கரும்பு செய்கைக்கு ஹிங்குரானை சீனிக் கூட்டுத்தாபனத்தில் வழங்கப்பட்டதுடன் மேலதிகமாக 5000 ஹக்டயருக்கு மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான காணிகளில் 2007ம் ஆண்டு தொடக்கம் நாட்டின் சீனி உற்பத்தியை அதிகரிக்க அம்பாறை மாவட்டத்தில் கரும்பு செய்கையை ஆரம்பித்து 18 வருடங்கள் சென்றும் ஹிங்குரானை சீனி தொழிற்சாலை சீனி உற்பத்தியில் நஸ்டம் ஏற்பட்டுள்ளதுடன்.
அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு வருகின்றன.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என அம்பாறை மாவட்டத்தில் கரும்பு பயிர்ச்செய்கையாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வருவதுடன் அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் தங்களுக்கான 13 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என முன்வைத்துள்ளனர் .

அம்பாறை மாவட்டத்தில் கரும்பு பயிர்ச்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்கக்கூடிய வகையில் கரும்பு பயிர்ச்செய்கைகளின் செற்பாடுகளில் மாற்றுத்திட்டங்களை அமைச்சு ஏற்படுத்த வேண்டும்.

அம்பாறை மாவட்ட கரும்பு பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான விஷேட ஏற்பாடுகளை அமைச்சர் அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான விபரங்களை ஏற்கனவே நான் அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்.

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக கரும்பு பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு பிரதேச செயலாளர்கள் கரும்பு செய்கை காணி சொந்தக்காரர்களுக்கு கரும்பு பயிர்ச்செய்கை மட்டும் மேற்கொள்ளலாம் என உத்தரவு பத்திரங்களை வழங்கியுள்ளனர்
இவ்வுத்தரவு பத்திரங்களை உறவினர்களுக்கு மாற்றம் செய்து தருமாறு கரும்பு பயிர்ச்செய்கையாளர்கள் விண்ணப்பம் செய்த போதும் பிரதேச செயலாளர்கள் கரும்பு செய்கையாளர்களின் உத்தரவு பத்திரத்தை மாற்றி வழங்கக்கூடாது என சில உயர் அதிகாரிகள் தடைசெய்கின்றனர்.
இது தொடர்பாக அம்பாறை மாவட்ட ஒருக்கினைப்புக்குழுக் கூட்டத்திலும் என்னால் பிரேரனை கொண்டு வரப்பட்டு இதற்கான விஷேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக தங்களுக்கான காணியில் சீனி உற்பத்திற்காக கரும்பு பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகளுக்கு தங்களுக்கான காணியினை தங்களது உறவினர்களுக்கு மாற்றிக் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அறிவித்தலின் படி பிரதேச செயலாளர்களினால் கரும்பு பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட உத்தரவு பத்திரங்கள் தங்களின் பிள்ளைகளுக்கு மாற்றிக் கொடுக்க முடியாமல் உள்ள நிலைமை தொடர்பாக அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் வருகை தந்திருக்கும் உயர் அதிகாரிகள் உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.

நீண்ட காலமாக இலாபம் இன்றி கரும்பு பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்களுக்கு சொந்தமான (கரும்பு பயிர்கள்) 271/2 ஏக்கர் 30.05.2025 தீப்பற்றியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் ஹிங்குரானை சீனிக் கூட்டுத்தாபனத்திலும்,பொலிசிலும்,பிரதேச செயலாளர்களுக்கும் அறிக்கை செய்துள்ளனர் .தீயில் பாதிக்கப்பட்ட கரும்புக்காணி சொந்தக்காரர்களுக்கு ஹிங்குரானை சீனிக் கூட்டுத்தாபனத்தில் எவ்வித நஸ்ட ஈடுகளும் வழங்க முடியாது என தெரிவித்துள்ளனர்.இக்காணிகளுக்கு காப்புறுதி செய்யப்பட்டும் நஸ்ட ஈடு வழங்க முடியாது என தெரிவிக்கின்றார்கள்.எனவே எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட கரும்பு பயிர்ச்செய்கையாளர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படும் போது நஸ்ட ஈடுகள் வழங்க கூடிய செயற்பாடுகளை சீனிக் கூட்டுத்தாபனம் முன்னெடுப்பதற்கான பணிப்புரைகள் வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்த விடயங்களுக்கு சீனிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளரை பதில் அளிக்குமாறு கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில்ஹந்துன்நெத்தி கேட்டுக்கொண்டார்.

சீனிக் கூட்டுத்தாபணத்தின் பணிப்பாளர் பதில் அளிக்கையில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை அவர்களினால் தெரிவிக்கப்பட்ட தீக்கவாபி-ஆளங்குள பிரதேசத்தில் 27 1/2 கரும்பு பயிர்கள் தீப்பற்றியுள்ளமை உண்மையாகும். சீனிக் கூட்டுத்தாபனம் கரும்பு பயிர்களுக்கு காப்புறுதி செய்யப்பட்டிருந்தாலும் நஸ்டஈடு வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.எதிர்காலத்தில் கரும்பு பயிர்ச் செய்கைகளுக்கான விஷேட காப்புறுதித் திட்டத்திற்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டுள்ள கரும்பு செய்ய மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவு பத்திரங்களை உறவினர்களுக்கு மாற்றுதல் தொடர்பான பல விண்ணப்பங்கள் கிடைத்துள்ள போதிலும் இதுவரை எவருக்கும் உத்தரவு பத்திரங்களை மாற்றிக் கொடுக்கவில்லை என சீனி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

கைத்தொழில் அமைச்சர் பதில் அளிக்கையில் அம்பாறை மாவட்டத்தில் கரும்பு பயிர்ச்செய்கையில் ஈடுட்டு வரும் காணிச் சொந்தக்காரர்களின் உத்தரவுப் பத்திரங்களை மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

அம்பாறை மாவட்டத்தில் கரும்பு செய்கையாளர்களின் காணிக்கான உத்தரவுப் பத்திரங்களின் மாற்றங்கள் தொடர்பான விபரங்களை பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையை சமப்பிக்குமாறு கைத்தொழில் அமைச்சர் திரு.சுனில் ஹந்துன்நெத்தி கேட்டுக்கொண்டார்.

Address

Irakkamam
Ampara
32450

Telephone

+94758088774

Website

Alerts

Be the first to know and let us send you an email when Topone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Topone:

Share

Category