Asraf Tv

Asraf Tv சமூக சிந்தனையுள்ள நல்ல அரசியல் வாதிகளை மக்கள் தேர்வு செய்ய சட்ட ஆட்சியை நோக்கிய பயணம் இது.

2009 முதல் 2025 வகையான பிட்காயின் உடைய விலை ஏற்ற வரைபையும் தற்பொழுது பிட்காயின் ஒன்றின் பெறுமதியை  காட்டும் வரைபையும் பட...
04/07/2025

2009 முதல் 2025 வகையான பிட்காயின் உடைய விலை ஏற்ற வரைபையும் தற்பொழுது பிட்காயின் ஒன்றின் பெறுமதியை காட்டும் வரைபையும் படங்களில் நீங்கள் பார்க்கலாம்

பிட்காயின் என்பது இன்டர்நெட்டிலே இருக்கின்ற ஒரு Gold இதன் பெறுமதி மூன்றரை கோடியாகும்

பிட்காயினை வாங்கி சற்று நேரத்தில் அதன் பெறுமதி கூடுகிறது அதேபோன்று சற்று நேரத்தில் அதன் பெறுமதி குறைகிறது இந்த ஏற்ற இறக்கத்தில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாங்கள் சம்பாதிக்க முடியும் மேலதிக தகவல்கள் தேவையானோர் தொடர்பு கொள்ளலாம்

 #நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளராக சட்டத்தரணி MI. இர்பான் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
02/07/2025

#நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளராக சட்டத்தரணி MI. இர்பான் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

02/07/2025
 #நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக ஏ. அஸ்பர் (JP) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
02/07/2025

#நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக ஏ. அஸ்பர் (JP) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயரும் இந்நாள் மேயரும்
28/06/2025

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயரும் இந்நாள் மேயரும்

மருதமுனையில் மின் ஒழுக்கு காரணமாக தீக்கிரையான வீட்டிற்கு தாஹிர் MP விஜயம்.மருதமுனை பிரதேசத்தில் உள்ள வீடொன்று அண்மையில் ...
28/06/2025

மருதமுனையில் மின் ஒழுக்கு காரணமாக தீக்கிரையான வீட்டிற்கு தாஹிர் MP விஜயம்.

மருதமுனை பிரதேசத்தில் உள்ள வீடொன்று அண்மையில் தீப்பிடித்து முற்றாக தீக்கிரையாகியிருந்தது. இது மின் ஒழுக்கின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தென தெரிவிக்கப்படுகின்றது.

வீடு திடீரென தீப்பிடித்து எரிவதனை அவதானித்த அயலவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதிலும் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும், முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீட்டிற்கு இன்று (28) நேரில் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், இது விடயம் தொடர்பில் நஸ்ட ஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக கூறிதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-ஊடகப் பிரிவு-

🔵 பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல்வாசித் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் திரு ...
28/06/2025

🔵 பொத்துவில் முன்னாள் தவிசாளர் அப்துல்வாசித் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம்

பொத்துவில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் திரு அப்துல்வாசித் அவர்கள், ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனத்தை உறுதி செய்யும் வகையில், கட்சித் தலைமைக்கும் கட்சிக்கும் உரிய நிபந்தனைகளுக்கிணங்க சத்தியப் பத்திரம் ஒன்றை திரு அப்துல்வாசித் இன்று கையெழுத்திட்டார். அவருக்கான அதிகாரப்பூர்வ நியமனக் கடிதம், இன்று (28) நுவரெலியாவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள விடுதியில், கட்சி செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் வழங்கப்பட்டது.

இந்நியமனம், கட்சியின் உயர் மட்டத் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சித் தரப்பினர் தெரிவித்தனர்.

 #இறக்காமம்_பிரதேச  #சபையின்_பிரதி  #தவிசாளர்  #ஆசீக்_அவர்களுக்கு  #கட்சின்_தீர்மானத்தை  #கடுமையாக_மீறியதற்கு O7  #நாட்க...
28/06/2025

#இறக்காமம்_பிரதேச #சபையின்_பிரதி #தவிசாளர்
#ஆசீக்_அவர்களுக்கு #கட்சின்_தீர்மானத்தை #கடுமையாக_மீறியதற்கு O7 #நாட்களுக்குள் #விளக்கம்_கூறல்_மூ_கா.

28 June 2025 ஜனாப். நசீர் முகம்மது ஆசிக்
131/3, SLSC வீதி,
வரிப்பத்தான்சேனை- 02,
இறக்காமம்.

கட்சின் தீர்மானத்தை கடுமையாக மீறி
இறக்காமம் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பதவியை ஏற்றுக் கொண்டமை .

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) அரசியலமைப்பு,கொள்கைகள் மற்றும் வெளிப்படையான உத்தரவுகளை மீறியதற்காக, ஏன் உங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக்காட்டவும் மேலும் உங்களது கட்சியின் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குமாறு தலைவரால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறக்காம பிரதேச உள்ளூராட்சி மன்ற தவிசாளர், பிரதி தவிசாளர் நியமிப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) தெளிவான மற்றும் தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும், கட்சியின் அறிவுரறுத்தல் அல்லது ஒப்புதல் இல்லாமல், இறக்காமம் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பதவியை நீங்கள் வேண்டுமென்றே பரிந்துரைத்து ஏற்றுக்கொள்ள அனுமதித்தீர்கள் என்பது கட்சித் தலைமையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

உங்கள் நடத்தை, குறிப்பாக, கட்சியின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமையைப் பேணுவதில் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஒரு உயர்பீட உறுப்பினராக இருந்தும் உங்கள் பதவியைக் கருத்தில் கொண்டு, கட்சித் தலைமையின் அதிகாரத்தையும் அதன் முடிவெடுக்கும் செயல்முறைகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது, மேலும் கட்சியின் உறுப்பினர்களிடேயும், பொதுமக்களிடையேயும் அவப்பெயரையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த அறிவிப்புகிடைத்து ஏழு (7) நாட்களுக்குள் உங்கள் செயற்பாட்டிற்கு ஏதேனும் காரணங்கள் அல்லது நியாயங்களைக் குறிப்பிட்டு, எழுத்து மூலம் உங்களது விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும்.நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பதிலளிக்கத் தவறினால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கருதப்படும், மேலும் கட்சியிலிருந்து நீக்குவது உட்பட பொருத்தமான ஒழுக்காற்று நடவடிக்கை எந்த அறிவித்தலும் இன்றி உங்கள் மீது எடுக்கப்படும்.

ஒழுக்காற்று.நடவடிக்கை குறித்த இறுதி முடிவு வரும் வரை, உங்கள் கட்சி உறுப்பினர் பதவியை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறும் தலைவர் எனக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயத்தினை அறிந்து மிக விரைவாக செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
பரிசீலனையில் உள்ள விடயம் தீவிரமானது மற்றும் விரைவான தீர்வு தேவை என்பதால், எந்த சூழ்நிலையிலும் காரணத்தைக் காட்டி நீட்டிப்பு நேரம் வழங்கப்படாது என்பதையும் நினைவில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

தங்கள் உண்மையுள்ள

எம். நிஸாம் காரியப்பர் ,
செயலாளர் ,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

28/06/2025

🔵 "தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடுகின்றது"
-நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ. நளீர்

✍️ பாறுக் ஷிஹான்

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடுகின்றது.எனவே வாக்களித்த மக்கள் சிந்தியுங்கள். நள்ளிரவில் இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எங்களது தரப்பினரை அழைக்கிறார்கள். அங்கு வாருங்கள் பேசுவோம் இங்கு வாருங்கள் பேசுவோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். நிறைய அன்பளிப்புகள் எல்லாம் வழங்குகின்றார்கள். மக்களின் வாக்கு பிச்சைகளை எடுத்துக்கொண்டு கோடிக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு இவ்வாறாக செயற்படுகின்றார்கள் என நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.நளீர் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபைத் தேர்தலில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சகிதம் ஊடகங்களுக்கு வியாழக்கிழமை (26) இரவு அம்பாறை மாவட்டம் மத்தியமுகாம் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் கருத்து வெளியிட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அண்மையில் நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து எனது தலைமையிலான சுயேட்சைக் குழு கால்பந்து சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனமுமாக மொத்தமாக நான்கு பிரதேச சபை உறுப்பினர்கள் முஸ்லிம்கள் சார்பில் தெரிவாகியிருந்தனர்.

இந்நிலையில் சிற்றூர்களுக்காக பெரிய ஊர்களை காவு கொடுக்க முடியாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. தாகீர் என்பவர் இவ்வாறு கூறி எங்களின் ஊருக்கு அநியாயம் செய்துள்ளார். இது வரலாற்று துரோகமாகும். இந்த துரோகத்தை வரலாற்றில் எப்போதும் மன்னிக்க முடியாது.இந்த செயற்பாடு தமிழ் தேசிய கட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கில் டீல் அரசியலில் ஈடுபடுகின்றது. எனவே வாக்களித்த மக்கள் சிந்தியுங்கள். நள்ளிரவில் இவர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் எங்களது தரப்பினரை அழைக்கிறார்கள். அங்கு வாருங்கள் பேசுவோம் இங்கு வாருங்கள் பேசுவோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். நிறைய அன்பளிப்புகள் எல்லாம் வழங்குகின்றார்கள். மக்களின் வாக்கு பிச்சைகளை எடுத்துக்கொண்டு கோடிக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு இவ்வாறாக செயற்படுகின்றார்கள்.

மக்கள் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டுங்கள். நான் நினைத்திருந்தால் பணம் பெற்றுக் கொண்டு நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் எதிராக வாக்களித்திருக்கலாம் எனக்கு அவ்வாறான பணம் தேவையில்லை இவ்வாறு பணத்துக்கு சோரம் போகின்ற ஏனைய உறுப்பினர்களுக்கு எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். அதாவது உங்களது வாக்கின் ஊடாக அந்த பாடத்தினை அவர்களுக்கு மக்கள் கற்பிக்க வேண்டும்.

மேலும் நாவிதன்வெளி பிரதேசம் ஒரு பின்தங்கிய கிராமமாகும். தற்போதைய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் அண்ணாமலை பகுதியைச் சேர்ந்த நிரோஷன் என்பவர் தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்தியில் இணைந்து கொள்வதற்கு நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவு செய்யப்பட்ட நிரோஷன் என்பவரை தவிசாளர் ஆக்கி கொள்வதற்காக நாங்கள் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம்.

அது மாத்திரமல்ல உப தவிசாளர் பதவியினை முஸ்லிம் பெற்றுக் கொள்வதுடன் இந்த நாவிதன்வெளி பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தோம்.எமது பிரதேசத்தில் தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர்கள் கத்தோலிக்கர்கள் எனபல மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாஷற நான்கு சமூகங்களையும் கொண்ட அமைந்துதான் இந்த நாவிதன்வெளி பிரதேச சபை ஆகும்.

இவ்வாறான நிலையில் நாங்கள் ஏனைய சகோதரர்களுடன் இணைந்து ஐந்து வாக்குகளை பெற்று கொடுத்து அரசாங்கம் சார்பான தவிசாளர் ஒருவரை பெறுவதற்காக முயற்சி மேற்கொண்டிருந்தோம்.

எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இருவரும் எமது முன்னெடுப்பிற்கு துரோகங்களை செய்து விட்டார்கள் .அவர்களின் தலைமைகளான முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் உட்பட தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அஸ்ரப் தாஹிர் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாஹிர் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்களும் இவ்வாறு துரோகங்களை மேற்கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறு துரோகங்கள் இடம் பெறாமல் அரசாங்கம் சார்பாக தவிசாளர் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தால் இந்த பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்திகள் இடம் பெற்றிருக்கலாம்.ஆனால் இவ்விரு முஸ்லிம் தேசிய கட்சிகளும் நடந்துகொண்ட முறையினால் அபிவிருத்தியும் இல்லை உப தவிசாளர் பதவி எந்தவொரு முஸ்லிம் உறுப்பினருக்கும் இல்லை என்பதை இவ்விடத்தில் கூற முடியும்.

இதனை அக்கட்சிக்கு வாக்களித்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் இலங்கையின் சில பகுதிகளில் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தடன் இணைந்து இவ்விரு முஸ்லிம் தேசிய கட்சிகளும் தவிசாளர் மற்றும் உபதேவிசாளர் பதவிக்காக கூட்டணி அமைத்த ஆட்சிகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள நாவிதன்வெளி பிரதேச சபைக்கான தவிசாளர் உப தவிசாளர் தேரிவில் ஏன் அவர்கள் இணைந்து கொள்ளவில்லை என்பது ஒரு சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.

எனவே இவ்வாறானவர்கள் நாவிதன்வெளி பிரதேசம் அபிவிருத்தி அடைய கூடாது என்பதற்காகத்தான் சம்மாந்துறை பிரதேச சபைக்கு தவிசாளர் பதவி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக இந்த சூழ்ச்சியை மேற்கொண்டுள்ளார்கள். என்பதை நாங்கள் இவ்விடத்தில் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம் .

மேலும் நாவிதன்வெளி பிரதேச சபை ஆட்சியமைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரும் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி முனாபிக் தனமாக நடந்து கொண்டார்கள். மட்டுமின்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் நாவிதன்வெளிக்கு முஸ்லிம் ஒருவர் உப தவிசாளராக வருவதை தடுத்து இப்பிரதேச முஸ்லிங்களுக்கு அநியாயம் செய்து முனாபிக்குகளாக நடந்து கொண்டார்கள் என குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று மாநகர சபையின் முதலாவது அமர்வு நேற்று (27) சிறப்பாக நடைபெற்றது.இந்த அமர்வு, தேசிய காங்கிரஸின் தலைவரும் மாநக...
28/06/2025

அக்கரைப்பற்று மாநகர சபையின் முதலாவது அமர்வு நேற்று (27) சிறப்பாக நடைபெற்றது.

இந்த அமர்வு, தேசிய காங்கிரஸின் தலைவரும் மாநகர சபையின் முதல்வருமான ஏ.எல்.எம். அதாஉல்லா சேர் தலைமையில் இடம் பெற்றது.

மாநகர சபையின் புதிய அமர்வில், கௌரவ உறுப்பினர்கள், செயலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Info: Ahfarous ruhi

 #முஸ்லிம்_காங்கிரஸ்  #கட்சி_தேசிய_பட்டியலில்  #அப்துல்_பாசித்  #அவர்களை  #நியமிப்பதற்கு_தீர்மானம்27 June 2025 ஸ்ரீலங்கா...
27/06/2025

#முஸ்லிம்_காங்கிரஸ் #கட்சி_தேசிய_பட்டியலில் #அப்துல்_பாசித் #அவர்களை #நியமிப்பதற்கு_தீர்மானம்

27 June 2025 ஸ்ரீலங்கா முஸ்லிஸ் காங்கிரஸ் (SLMC) கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அப்துல் பாசித் அவர்களை நியமிப்பதற்கு மூ.கா தீர்மானித்துள்ளது.

இக்கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் குழு (High Command) கூடி ஒப்புதல் தீர்மானிக்கப்பட்டு விரைவில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு.அறிவிக்கப்படும் என அக்கட்சியின் தகவல்கள் ஊடாக தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Address

Ampara

Alerts

Be the first to know and let us send you an email when Asraf Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category