Asraf Tv

Asraf Tv Whatsapp +94 78 164 2825
(1)

No Risk No Loss
கடந்த 18 மாதங்களில் BLOCKCHAIN TECHNOLOGY உதவியுடன் பைBனான்ஸ் Spot ரேடிங் மூலம் 43198 USDT ( Rs. 14039350/- ) சம்பாதித்திருக்கிறோம். இது பற்றி முற்றிலும் இலவசமாக உங்களுக்கும் நாம் சொல்லித் தர தயாராக உள்ளோம்.

CRYPTO TRADING COURSECRYPTO AWARENESS PROGRAM Whatsapp 077 57 60 379Telegram 077 31 34 563Call 075 62 60 552
07/06/2026

CRYPTO TRADING COURSE
CRYPTO AWARENESS PROGRAM
Whatsapp 077 57 60 379
Telegram 077 31 34 563
Call 075 62 60 552

05/06/2026
05/06/2026
11 ஆவது BATCHCRYPTO TRADING COURSEநீங்கள் சம்பாதிப்பது 100% உறுதிசாதாரண மக்களும் கற்று இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்2 ம...
05/06/2026

11 ஆவது BATCH

CRYPTO TRADING COURSE
நீங்கள் சம்பாதிப்பது 100% உறுதி

சாதாரண மக்களும் கற்று இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்
2 மாதங்களில் வெற்றிகரமான Trader ஆகலாம்

அந்த வகையில் 2026 ஜூன் 07 ஆம் திகதி 11 ஆவது Batch ஆரம்பமாகும்

1 ஆவது வகுப்பில் இலவசமாக இணைந்து எமது வகுப்பை பார்த்து விட்டு பாடநெறியில் இணையலாம்.

கட்டணம் - முதல் 15 பேர் 15,000/= மட்டுமே✅✅✅
மற்றையவர்கள் 20,000/=

30,000/= இல்லை ❌❌❌

ஜனாஸா அறிவித்தல் அல்-ஹாஜ் நஸீர் அகமட் காலமானார் 2026.06.02நிந்தவூர்-16, பிரதான வீதியயைச் சேர்ந்தவரும், தென்கிழக்குப் பல்...
02/06/2026

ஜனாஸா அறிவித்தல்
அல்-ஹாஜ் நஸீர் அகமட் காலமானார்
2026.06.02

நிந்தவூர்-16, பிரதான வீதியயைச் சேர்ந்தவரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தின் ஆரம்பகால பீடாதிபதியும், ஓய்வுபெற்ற சிரேஸ்ட விரிவுரையாளருமான அல்ஹாஜ். ஏ. நசீர் அஹமட் அவர்கள் இன்று (2026.06.02)காலை இறையழைப்பை ஏற்றுக்கொண்டார்.

இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஓய்வுபெற்ற அதிபர் அல்ஹாஜ். ஏ. எம். அகமத், ஹாஜியானி. துஹ்பா ஆகியோரின் புதல்வரும்,

ஓய்வுபெற்ற ஆசிரியை யாக்கூப் சாதுனாவின் அன்புத் துணைவரும்,

ஓய்வுபெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ். எம். எச். யாக்கூப் ஹஸன், ஹாஜியானி செயின் றாஹிலா ஆகியோரின் மருமகனும்,

தௌசீப் அஹமட்(கட்டார்), வாசீப் அஹமட் (No limit)ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மர்ஹுமா பௌசுல் மின்னா(பரீதா), ஹாஜிகளான ஏ. ஷபாஅத் அஹமட் (விவாகப் பதிவாளர்), ஓய்வுபெற்ற தொழினுட்ப உத்தியோகத்தர் ஏ. சஹீட் அஹமட், ஏ. ஷபீக் அஹமட்(ஓய்வுபெற்ற சிறைச்சாலை உத்தியோகத்தர்), ஹாஜியானிகளான ஏ. நூறுல் ஹிதாயா, ஏ. சித்தி ஜெமீலா (சபீனா), ஏ. ஷர்புன் நிசா, ஏ. அஷ்றப் அஹமட், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏ. இப்திகார் அகமட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஓய்வுபெற்ற தபாலதிபர் அல்ஹாஜ். வை. வை. வொகார் ஹஸன், வை. ஜாஹிட் ஹஸன்(பட்டயக் கணக்காளர்), வை. ஜாயிசா ஹஸன், வை. றஸ்மி ஹஸன்(பட்டய கணக்காளர்) ஆகியோரின் மச்சானும்,

எஸ். றுசைக்கா(ஆசிரியை), எப். அஸ்ரா (வைத்தியர், மாவட்ட வைத்தியசாலை, சம்மாந்துறை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அல்ஹாஜ். எச். அப்துல் சத்தார் (பணிப்பாளர், நைட்டா) அவர்களின் சகலனும்,

மரீஹா, மஹ்தியா, மஸீயா, சாஸியா, பாதில் ஹஸன், ஆகியோரின் பாசமுள்ள அப்பாவுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு இஷா தொழுகையின் பின்னர் நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு, வைத்தியசாலை வீதியிலுள்ள றவாஹா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு பிரகாசிக்க உங்களது பிரார்த்தனைகளில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

(ஏ.ஷபாஅத் அஹமத்)

USA Iran warImpact BTC Price
02/06/2026

USA Iran war
Impact BTC Price

நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு - மத்திய வங்கி ஆளுநர் அதிர்ச்சிமத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் ப...
02/06/2026

நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு - மத்திய வங்கி ஆளுநர் அதிர்ச்சி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு போர் குறுகிய காலத்தில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது நீண்ட காலம் நீடிப்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு கடுமையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த வாரம் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. பணவீக்கம் தற்போதுள்ள 5.4% - 5.5% இலிருந்து நிச்சயமாக மேலும் அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தரவுகளைப் பார்க்கும்போது, எரிபொருள் விலை அதிகரிப்பு ஒரு காரணம், நுகர்வில் இன்னும் சரிவு ஏற்படவில்லை. இதனால்தான் பணவீக்கம் 7% வரை உயரும் அபாயம் உள்ளது.

இதைத் தடுப்பதற்காகவே கடந்த வாரம் எமது நாணயக் கொள்கையை இறுக்கமாக்கினோம். அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேவையை ஓரளவுக்குக் குறைப்பதன் மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது நாட்டுக்கு மிக முக்கியமானது. தேவையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம் என்றார்.

நாட்டின் பணமோசடி தடுப்பு சட்ட அமைப்பின் கீழ், சட்டப்பூர்வமாக உழைத்த பணத்தை வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்ப எந்தத் தடையும் இல்லை. ஆனால் சட்டவிரோதமான பணத்தை அனுப்புவது கடினம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

24 வயதில் வெளிநாடு சென்றேன்! ஆனால் விதி வேறொன்றை எழுதிவைத்திருந்தது.பல கனவுகளுடன், குடும்பத்தின் கஷ்டங்களைப் போக்க வேண்ட...
02/06/2026

24 வயதில் வெளிநாடு சென்றேன்! ஆனால் விதி வேறொன்றை எழுதிவைத்திருந்தது.

பல கனவுகளுடன், குடும்பத்தின் கஷ்டங்களைப் போக்க வேண்டும் என்ற ஆசையில், 24 வயதில் நான் வளைகுடா நாட்டிற்குப் புறப்பட்டேன். ஆனால் விதி எனக்காக வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்திருந்தது. அங்கு சென்ற ஒரு மாதத்திற்குள்ளேயே என் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. எதிர்பாராத ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்னை சவூதி அரேபியாவின் சிறைக்குள் கொண்டு சென்றது. மொழியே தெரியாமல், நான் நிரபராதி என்பதை நிரூபிக்க முடியாமல், இருபது ஆண்டுகளை அந்த நான்கு சுவர்களுக்குள் கழிக்க வேண்டியதாகிவிட்டது.

அந்த நாட்களில், மீண்டும் ஒருநாள் தாய்நாட்டைப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையே பலமுறை முற்றிலும் மறைந்து போயிருந்தது. சிறைக்குள் இருந்த கடுமையான விதிமுறைகள், கைகளிலும் கால்களிலும் போடப்பட்ட சங்கிலிகள், அவை ஏற்படுத்திய மனவேதனைகள் அனைத்தும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.

என்னுடன் இருந்த பலரின் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரில் காண வேண்டிய சூழலும் வந்தது. எனது கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்டு, என் முறையும் வரக்காத்திருந்த அந்த இறுதி தருணங்களில், இனி வாழ்க்கையில் திரும்பிச் செல்லும் வாய்ப்பே இருக்காது என்று உறுதியாக நினைத்தேன். கைகளிலும் கால்களிலும் சங்கிலியுடன் என்னைப் பார்க்க வந்த என் அம்மாவை நேருக்கு நேர் சந்திக்கக்கூட முடியாமல் தவித்த நாட்களும் என் சிறை வாழ்க்கையின் மறக்க முடியாத வேதனையான நினைவுகளாக உள்ளன.

ஆனால், உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் ஒன்றுபட்டபோது அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஜாதி, மதம், அரசியல் என எந்த வேறுபாடும் பார்க்காமல், ஒரு ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை மக்கள் நன்கொடை அளித்து, மொத்தம் சுமார் 48 கோடி ரூபாய் திரட்டியிருந்தனர் என்பதை நான் விமான நிலையத்தில் இறங்கிய பிறகுதான் முழுமையாக அறிந்தேன்.

இவ்வளவு பெரிய தொகையை மக்கள் திரட்டி என்னை மீண்டும் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவார்கள் என்று நான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், சட்ட உதவி அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், மற்றும் தொழிலதிபர் Boby Chemmanur உள்ளிட்ட பலரின் தொடர்ச்சியான முயற்சிகளால்தான் என் விடுதலை சாத்தியமானது.

நான் 2006-ல் விட்டுச் சென்ற கேரளா, இன்று நான் காணும் கேரளா அல்ல. ஸ்மார்ட்போன்கள், சமூக ஊடகங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வேகமாக மாறிய உலகம் என்னை வரவேற்றது. விமான நிலையத்தில் கிடைத்த பிரம்மாண்டமான வரவேற்பைப் பார்த்தபோது முதலில் பயந்துபோனேன். ஆனால் பின்னர் அது உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களின் அன்பும் ஒற்றுமையும் வெளிப்படுத்திய ஒரு அரிய தருணம் என்பதை உணர்ந்தேன்.

இழந்துபோன என் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 44 வயதில், என் அம்மாவின் அருகில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க நான் மீண்டும் நடந்து செல்கிறேன். எனக்காக பிரார்த்தித்த, உதவிய, உலகம் முழுவதும் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் இதயபூர்வமான நன்றியையும் கடன்பட்ட உணர்வையும் தெரிவிக்கிறேன்.

இந்த இரண்டாவது பிறவியை எனக்கு வழங்கியது நீங்கள் தான். ❤️

-Abdul Rahim-

சாதனைச் சிகரமாய் சம்மாந்துறையை செதுக்கிய 9 ஆண்டுகள்: 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘துறை சேவகன்’ எஸ்.எல். முஹம்மது...
02/06/2026

சாதனைச் சிகரமாய் சம்மாந்துறையை செதுக்கிய 9 ஆண்டுகள்: 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘துறை சேவகன்’ எஸ்.எல். முஹம்மது ஹனீபா!
​=============================

சம்மாந்துறை மண் பெருமையுடன் தலைநிமிர, தன் வியர்வைத் துளிகளால் நற்பணி சரித்திரம் படைத்த ஒரு உன்னத மக்கள் சேவகனின் ஒன்பது ஆண்டுகால நிருவாகப் பேரொளி இன்றுடன் பூர்த்தியாகி, பத்தாவது ஆண்டின் புதிய விடியல் பிறந்துள்ளது. சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் நிருவாகக் கட்டமைப்பை மக்கள் மையப்படுத்திய அரச சேவையாக மாற்றியமைத்த பெருமைக்குரிய எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா அவர்கள், இன்றுடன் (ஜூன் 01) தனது ஒன்பது ஆண்டுகால தொடர் சேவையை மிகச் சிறப்பாகப் பூர்த்தி செய்து, சாதனைப் பயணத்தின் அடுத்த புதிய அத்தியாயத்திற்குள் கம்பீரமாக அடியெடுத்து வைக்கிறார்.

கடந்த 2017 ஜூன் 01 அன்று சம்மாந்துறை மண்ணில் கால்பதித்த அவர், வெறும் நிருவாக அதிகாரியாக மட்டும் தன் கடமையைச் சுருக்கிக் கொள்ளாமல், ஊழியர்களை நேரத்திற்கு வரவழைக்கத் தானே முதலாமவனாய் அலுவலகம் வந்து நின்ற ஒழுக்கத்தின் உன்னத இலக்கணமாகத் திகழ்ந்தார். தன் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தர்களின் திறமைகளைக் கண்டறிந்து, பாராட்டி, அவர்களைத் தோளோடு தோள் சேர்த்து அரவணைத்துச் செல்லும் உன்னத தலைமைத்துவப் பேரழகு கொண்டவராக விளங்கும் அவர், திங்கட்கிழமை காலை நற்சிந்தனை ஆராதனைகள் மூலம் உத்தியோகத்தர்கள் மத்தியில் நற்பண்புகளையும் மனிதநேயத்தையும் விதைத்து, அம்பாறை மாவட்டத்திற்கே முன்மாதிரியான ஒரு புதிய நிருவாக கலாச்சாரத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

அவரது தீர்க்கதரிசனமான சிந்தனையில் உதித்து, சம்மாந்துறை மண்ணில் நனவான திட்டங்கள் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் அழியாத கலங்கரை விளக்கங்களாக நிமிர்ந்து நிற்கின்றன. கடவுச்சீட்டு பெற கால் கடுக்க அலைந்த மக்களுக்கு, பெளதீக வளங்கள் நிறைந்த கண்ணுக்குக் குளிர்ச்சியான சூழலில் அமர்ந்து இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் அதிவேக கடவுச்சீட்டு (Passport) சேவையை பிரதேச செயலகத்திலேயே உருவாக்கினார். தபாலுக்காகக் காத்திருந்த காலத்தை மாற்றி, தகவல்கள் சரியென்றால் "கையோடு தருகிறோம்" என்ற கணனிமயப்படுத்திய பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் விநியோகத்தை சாத்தியமாக்கியதுடன், உரிமையற்றுத் தவித்த எமது சமூகத்திற்கு அகில இலங்கை ரீதியில் அதிகூடிய காணி உரிமை உறுதிப்பத்திரங்களை வழங்கிப் புரட்சி செய்தார். மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அதிகூடிய பயனாளிகளை இணைத்து, வறுமை ஒழிப்பில் காட்டிய பற்றுதலுக்காக அரசின் உயரிய விருது பெற்று சிறந்ததொரு சமூக ஊழியராகவும் அவர் மிளிர்ந்தார்.

அவரது இந்த ஒன்பதாண்டுகால அர்ப்பணிப்புமிக்க நிருவாகப் பயணத்தின் மகுடமாய், அவர் பத்தாவது ஆண்டில் கால்பதிக்கும் இன்றைய நன்னாளில் (ஜூன் 02), தேசிய ரீதியிலான "பிரஜா சக்தி" (ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டம்) திட்டத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான முதலாவது அங்குரார்ப்பண நிகழ்வு எமது பெருமதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இது வெறும் தற்செயல் நிகழ்வல்ல; சம்மாந்துறை மண்ணின் வாழ்வாதாரத்தையும் கிராமியப் பொருளாதாரத்தையும் அடுத்த கட்டத்திற்கு எட்டிப்பிடிக்க, இறைவன் அவர்தம் கைகளால் நல்கிய நல்வாய்ப்பாகும் என்பதுடன், பத்தாவது ஆண்டின் முதல் நாளே ஒரு பிரம்மாண்டமான மக்கள் நலத்திட்டத்தோடு தொடங்குவது அவரது அர்ப்பணிப்புக்குக் கிடைத்த ஆகச்சிறந்த சான்றாகும்.

மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களே! "இதுவரை நீங்கள் இருந்த இடம் சிறக்கக் கண்டோம், இனி நீங்கள் செல்லும் இடமெல்லாம் சிறக்கக் காண்போம்" என்ற வாசகத்திற்கு இணங்க, நீங்கள் பதித்துச் சென்ற சாதனைச் சுவடுகளும் ஆற்றிய மக்கள் சேவைகளும் சம்மாந்துறை மண்ணக்கும், உங்களோடு பயணிக்கும் சக ஊழியர்களாகிய எங்களுக்கும் என்றும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாய் துணைநிற்கும். உங்களின் இந்த உன்னத மக்கள் பணி இன்னும் பல்லாண்டுகள் தொய்வின்றித் தொடரவும், உங்களது வாழ்வும் நிருவாகப் பயணமும் மேன்மேலும் சிறக்கப் பெறவும் எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றோம்.

-சர்ஜுன் லாபீர்-

Address

Ampara

Alerts

Be the first to know and let us send you an email when Asraf Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category