Haja Gareeb Nawaz TV

Haja Gareeb Nawaz TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Haja Gareeb Nawaz TV, TV Channel, Pottuvil, Ampara.

🌹قلت حيلتي أنت وسلتي ادركني ياسيدي يارسول الله ﷺ
فداك روحي وامي وابي يا رسول الله ﷺ❤️
Haja Gareeb Nawaz TV
இந்த தொலைக்காட்சியின் மூலம் நபிகள் நாயகம்ﷺ அவர்கள் சொன்ன விடயங்கள் அவர்களின் வாழ்க்கையில் நடந்தவைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதுதான் நோக்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹு (இஸ்லாமிய மார்க்கத்தில் டெணிம் )டெணிம் என்பது என்னைப் பொறுத்து அது ஆண்கள் அணி...
23/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹு

(இஸ்லாமிய மார்க்கத்தில் டெணிம் )

டெணிம் என்பது என்னைப் பொறுத்து அது ஆண்கள் அணிகின்ற ஆண்களுக்காகவே குறிப்பாக்கப்பட்ட ஒரு ஆடை என்பது அன்று தொட்டு நாம் அறிந்த உண்மை அதில் யாருக்கும் இரு வேறு கருத்து உண்டா???

அது மட்டுமல்லாமல் பெண் என்பவள் தன்னை முழுமையாக மறைக்கப்பட வேண்டியவள் அவளது அழகு மெருகூட்டப்படுவதெல்லாம் அவள் தன்னை மறைத்து அவ்ரத்தினைப் பேணி ஒழுக்கத்துடன் வாழுகின்ற போது தான் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கிறதா???

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் ஆண்களாக இருக்களாம் பெண்களாக இருக்களாம் அவர்கள் அவர்கள் உடுத்துகின்ற ஆடையை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரளவு நிர்ணயிக்கலாமில்லையா???

நாம் யார் நமக்கென ஒரு வரம்பு வரையரை வழி காட்டி இருக்கிறது நம் இஷ்டம் போல் வாழ முடியுமா?? நகம் வெட்டுவது முதல் நாட்டை ஆள்வது வரை நம் கண்மணி நபிகளார் சொல்லாமலா இருக்கிறார்கள்???

சுவணத்தில் பெண்களின் தலைவியாய் திகழக்கூடிய அண்ணை பாத்திமதுஸ் ஸஹ்ரா பதூல் நாயகி இது போன்ற ஆடைகளை உடுத்துவதை விரும்புவார்களா???

ஒட்டு மொத்தத்தில் இந்த டெணிம் இனை ஆரம்பத்தில் பெண்களுக்குள் அணிந்தவர்கள் யார்?? மாற்று மதத்துப் பெண்கள் இல்லை யா???

மாற்று மதத்துக் கலாச்சாரம் நம் மத்தியில் ஊடுறுவுவது பற்றி நமது மார்க்கம் நமக்கு சொல்ல மறந்து போனதா???
யார் அண்ணிய கலாச்சாரத்தை ஒப்பிட்டு நடக்கிறார்களோ அவர்களுடனே நாளை எழுப்பப்படுவார்கள் என்றல்லவா நமக்கு நமது மார்க்கம் சொல்லுகிறது???

இந்த டெணிம் ஆரம்பத்தில் எமது மார்க்கத்தினரில் பெரியவர்கள் அணியவில்லை சின்னஞ் சிறு பிள்ளைகளுக்குத் தானே என்று தானே உடுத்தி அழகு பார்த்தார்கள் மறந்து விட்டீர்களா?? அதை அணிவித்த பெற்றோர்கள் யோசிக்கத் தவறியதன் விளைவாகக் கூட இது இன்று இளம் குமரிப் பிள்ளைகளின் தேசிய உடை போல மாறிக்கொண்டு செல்வதர்க்கு காரணமாக இருக்குமோ என நினைக்கின்ற போது நெஞ்சம் கணக்குதில்லையா???

ஒரு காலம் டெணிம் உடுத்தி முழங்காலுக்கு கீழால் வரை நீண்ட சல்வார் போட்டார்கள்...நினைவிருக்கிறதா??? அந்த நாட்கள்??

நாளடைவில் அது சற்று மாற்றமாகி சல்வார் இடுப்பு வரை ஓபன் பன்னப்பட்டு முழங்கால்வரை உயர்த்தப்பட்டு சின்னதாய் முகம் துடைக்கும் டவல் போல ஒரு முந்தாணையோடு எமது இஸ்லாமிய குமரிப் பிள்ளைகள் வலம் வந்த நினைவுகள் கண்முன்னாள் நிழலாடுகிறது...

இப்போது அது எப்படி மாறியிருக்கிறது தெரிகிறதா???? டெணிம் துணியாலான ஒரு வகை டவ்ஸர் சல்வார் எல்லாம் பழைய காலம் அது ஓல்ட் பெசன்...அப்படியெனில் இப்போது ஆண்கள் அணிகின்ற சேர்ட் அளவிலான வடிவில் உடுத்த ஆரம்பித்து விட்டார்கள் தெரிகிறதா???

இவைகள் எங்கிருந்து வந்த கலாச்சாரம்??? நம் முன்னோர்கள் காட்டித் தந்தவைகளா??? அருள் மறையும் அண்ணலாரும் ஆதரித்தவைகளா???

இது எங்கே நாம் விட்ட தவறு என்று தெரிகிறதா???? எமது குழந்தைகளுக்கு உடுத்தாட்டி அழகு பார்த்ததன் விளைவில்லையா???

நம் பிள்ளைகளை தீனோடு வளர்க் ஆசைப்பட்ட நிலமை கூட மாறிக்கொண்டு வருகிறது துன்யாவை அடைய வேண்டும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது போன்ற சிந்தணைகள் தான் இன்றையவர்களிடம் மேலோங்கி விட்டதோ என சிந்திக்க வைப்பதோடு கவலையும் நெஞ்சை அடைக்கிறது...

வள்ள நாயன் அல்லாஹ் நம்மையும் நம் பிள்ளைகளையும் தீனோடு வாழ வைப்பானாக....

இது யாரையும் புன் படுத்த எழுதியவையுமல்ல இதனை வாசிப்பது கொண்டு ஓரிருவர் சிந்தித்து தங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் பேராசை தான்....

கல்புகளை மாற்ற வல்லமை பெற்றவனே கல்புகளை மாற்றி உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கும் பாக்கியத்தை அனைத்து சகோதரிகளுக்கும் நல்குவாயாக ஆமீன்
✍️ எழுதியவர் அல் ஆலிமா பாத்திமா முஸ்பிகா முஅஸ்கரிய்யா✍️
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக நபிகள் நாயகம்ﷺ அவர்களின் பொருத்தத்தை கொடுப்பானாக ஆமீன் ஆமீன் 🤲💗
Mohammed Rifkas Qadiri நபிகள் நாயகத்தின் நேசன்

Thank you so much💗Shout out to my newest followers! Excited to have you onboard! Mim Hazeer, Haja Najibudeen Muthalif, K...
22/10/2025

Thank you so much💗
Shout out to my newest followers! Excited to have you onboard! Mim Hazeer, Haja Najibudeen Muthalif, Kanzur Rahman, Farhan Raheem, Sharief Salauddin, Hakeem Hakeem Hakeem, Skm Bassam, Raheem Memon TN, Mohamed Arafath, Mohamed Asik, Silwan Moulana, Mohamed Nawshan, Unicsun Solar Jeseer, Mujeebu Shareek, Mohammed Al Fassy, Mjm Ilham Mjm Ilham, Salam Adnan, Rusthi King, Sahra Sahra

அல்ஆரிபு பில்லாஹ் முஹிப்பிர் ரஸூல் அஷ்ஷெய்குல் காமில்  அல்வலிய்யுல் வாஸில் அல் ஹஜ்ஜுல் ஹரமைன் அல்லாமா அஸ்ஸெய்யிது  ஜலாலு...
21/10/2025

அல்ஆரிபு பில்லாஹ் முஹிப்பிர் ரஸூல் அஷ்ஷெய்குல் காமில் அல்வலிய்யுல் வாஸில் அல் ஹஜ்ஜுல் ஹரமைன் அல்லாமா அஸ்ஸெய்யிது ஜலாலுதீன் பூக்கோயா தங்கள் ரழில்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகம் அவர்களின் பரிசுத்த வம்சத்தில் உதித்து ஷெய்குனா அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி கத்தஸல்லாஹூ ஸிர்ரஹுல் அஸீஸ்
அவர்களிடம் கிலாபத் பெற்று. காதிரிய்யா தரீக்காவை இலங்கையில் பல்வேறு பட்ட இடங்களில் போதித்து பல் வேறுபட்ட கராமத்துக்களை நிகழ்த்தினார்கள் கதிய்யா தரீக்காவை இலங்கையில் போதித்த ஷெய்குமார்களில் மிக முக்கியமான இடத்தில் ஜலாலுதீன் பூக்கோயா தங்கள் ரழில்லாஹு அன்ஹு அவர்களும் வகிக்கின்றார்கள் என்பதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது. ஆனால் இன்று அதை மறைப்பதற்கும் சிலர் ஊசலாடுகின்றார்கள்
அல்லாஹ் மகத்தான வெற்றியை கொடுத்து இந்த உலகில் வாழ வைத்தான் தங்கள் வாப்பா அன்னவர்களை தங்கள் வாப்பாவின் சிறப்புக்களையும் அவர்களின் வாழ்க்கையும் பேசிக் கொண்டே இருக்கலாம் யா அல்லாஹ் தங்கள் வாப்பா அன்னவர்களை கனவில் காணும் பாக்கியத்தை தந்தருள் யா அல்லாஹ் 🤲💗
Mohammed Rifkas Qadiri Haja Gareeb Nawaz TV Malkan Rifkas நபிகள் நாயகத்தின் நேசன்

21/10/2025

Full Video
முழு வீடியோ
தலைப்பு:- ஷெய்குனா அல்லாமா அஷ் ஷெய்கு அபுல் ஹஸன் ஷாதுலி ரழில்லாஹு அன்ஹு அவர்கள் இறைக்காதலில் மூழ்கி அனுதினம் நபிகள் நாயகம்ﷺ அவர்களை கண்டார்கள் நாம் எவ்வாறு நபிகள் நாயகம்ﷺ அவர்களை கண்டுகொள்வது
Haja Gareeb Nawaz TV Mohammed Rifkas Qadiri நபிகள் நாயகத்தின் நேசன் Malkan Rifkas வேத நீதி நெறி வழி Zeinul Arliya

20/10/2025

இன்ஷா அல்லாஹ் செவ்வாய் கிழமை முழு வீடியோ ஆன்மீக ஹாஜா கரீப் நவாஸ் தொலைக்காட்சியின் ஊடாக வெளியிடப்படும்
Haja Gareeb Nawaz TV Mohammed Rifkas Qadiri Zeinul Arliya Malkan Rifkas Shahul Hameed Al Fassy நபிகள் நாயகத்தின் நேசன் வேத நீதி நெறி வழி

17/10/2025

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் முழு வீடியோ!
தலைப்பு:- அபுல் ஹஸன் ஷாதுலி ரழில்லாஹு அன்ஹு அவர்கள் இறைக்காதலில் மூழ்கி அனுதினம் நபிகள் நாயகம்ﷺ அவர்களை கண்டார்கள்
நாம் கண்மணி நாயகம்ﷺ அவர்களை கண்டுகொள்வதற்கான வழி என்ன?
உரை:- முஹம்மது றிப்காஸ் காதிரி
Speech 💬 Mohammed Rifkas Qadiri
Haja Gareeb Nawaz TV Mohammed Rifkas Qadiri Malkan Rifkas நபிகள் நாயகத்தின் நேசன்

16/10/2025

அல்லாஹ் தினந்தோறும் செய்கின்ற அமல் இம்மையிலும் மறுமையிலும்....!

صلوات التاج
ஸலவாத் தாஜ் என்றால் ஸலவாத்துக்களின் கிரீடம் 👑 இந்த ஸலவாத்துக்களை ஓதாத நல்லடியார்களே கிடையாது மிகவும் சிறப்பு வாய்ந்த ஸலவாத்து
இன்னும் வலிமார்களின் தலைவர் ஸெய்யிதினா ஷெய்குனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி قدس الله سره العزيز அவர்கள் வழமையாக ஓதி வந்த ஸலவாத்தும்
நாம் இந்த உலகில் ஓதும் ஸலவாத்துக்கள் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் ஷபாஅத்தை கட்டாயம் ஆக்கும் இறைவன் ஒரு அமல் செய்கிறான் என்றால் அதுதான் நபிகள் நாயகம்ﷺ அவர்கள் மீது ஓதும் ஸலவாத் இந்த உலகம் அழியும் போது எல்லா விதமான அமல்களும் நின்றுவிடும் இறைவன் நபிகள் நாயகம்ﷺ அவர்கள் மீது ஓதும் ஸலவாத்துக்களை தவிர இந்த உலகில் ஸலவாத்தை தவிர சிறந்த அமல் எதுவும் கிடையாது ஏன் என்றால் படைத்தவன் அல்லாஹ் செய்கின்ற அமலை விட எது சிறந்ததாக ஆக முடியும் அதுதான் முதன்மையானது படைத்தவனுக்கு எதற்கு அமல் அவன்தான் அரசன் அவன்தான் பெருமைக்குரியவன் என்னத்துக்கு அமல் செய்கிறான் அவனுடைய ஹபீப் ﷺ அவர்கள் மீது உண்டான நேசத்தை வெளிப்படுத்தி அவன் ஸலவாத்துக்களை ஓதுக்கொண்டு இருக்கின்றான் நாமும் அதிகமான ஸலவாத்துக்களை ஓதும் பாக்கியத்தை யா அல்லாஹ் உன்னுடைய ஹபீப் ﷺ அவர்களின் பொருட்டைக் தந்தருள்வாயாக யா அல்லாஹ் 🤲🌹💕💕💘💘🌹🌹💖💕🌹💕💕💘🌹🌹💖💕
Haja Gareeb Nawaz TV Mohammed Rifkas Qadiri

கவிக்கோ அப்துர் ரஹ்மான் என்பவர் எழுதிய கவிதை!ரோஜாக்கள் மீது கற்களை எறிந்து பார்த்து இருக்கின்றீர்களா?அது 1400வருடங்களுக்...
16/10/2025

கவிக்கோ அப்துர் ரஹ்மான் என்பவர் எழுதிய கவிதை!

ரோஜாக்கள் மீது கற்களை எறிந்து பார்த்து இருக்கின்றீர்களா?
அது 1400வருடங்களுக்கு முன் தாஃயிபில் நடந்தது!
நபிகள் நாயகம்ﷺ அவர்கள் மீது தாஃயிபில் கற்களை எறிந்ததுதான்.

இந்த கவிதையின் விளக்கம் ஆன்மீக ஹாஜா கரீப் நவாஸ் தொலைக்காட்சியின் ஊடாக

நாம் இந்த கவிதையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது நபிகள் நாயகம் அவர்கள் ரோஜாப்பூவை விடவும் மென்மையானவர்கள் அந்த ரோஜாவின் மீது கற்களை எறிவதற்கு எப்படி மனம் வந்தது?
ஒரு ரோஜாவின் மீது கற்களை எறிந்தால் எவ்வாறு இதழ்கள் கிழே விழுமோ அதைவிடவும் கஷ்டங்களை எதிர் கொண்டவர்கள் கண்மணி நாயகம்ﷺ அவர்கள் மதீனத்தின் ரோஜாவும் சுவனலோகத்தில் கஸ்தூரியாய் வீசிக்கொண்டிருக்கும் அந்த கஸ்தூரியின் ராஜாவும்!
ரோஜாக்களிள் இருந்து ஒரு சில வாசனைகள் உண்டாகும் ஆனால் நபிகள் நாயகம்ﷺ அவர்களாகிய ரோஜாவில் இருந்து கஸ்தூரி உண்டாகும்!
அந்த தாஃயிபில் ரோஜாவாகிய நாயகத்தின் ﷺ மீது கற்களை எறியப்பட்டதை கண்ட காதலன் அல்லாஹ் மலக்குமார்களின் தலைவர் ஜிப்ரயீல் عليه السلام அவர்களை காதலர் ஹபீப் ﷺ அவர்களிடத்தில் அனுப்பி கேட்கின்றான் யா ரஸுலல்லாஹ் ﷺ இந்த ஊரை அழித்து விடவா வானத்தையும் பூமியையும் என்னுடைய இறக்கைகளால் அடித்து விடாவா என்று ஆனால் ஒரு ரோஜாவில் எவ்வாறு துர் நாற்றம் வீச முடியும் அந்த ரோஜாவாகிய கண்மணி நாயகம்ﷺ அவர்களிடம் கஸ்தூரி வீசுகின்றது வேண்டாம் யா அல்லாஹ் பாவம் இவர்கள் அறியாமையில் இருந்து கொண்டு இருக்கின்றார் இவர்களும் என்னை ஈமான் கொள்ளுவார்கள் என்று سبحان الله
எப்படியாப்பட்ட இரக்கம் கொண்டவர்கள் நாயகம்ﷺ அவர்கள்!
✍️எழுதியவர்:-நாயகம் ﷺ அவர்களின் நேசன் முஹம்மது றிப்காஸ் காதிரி!

நம்றூத் என்ற கொடுங்கோல் ஆட்சியாளனால் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக்கிடங்கில் எறியப்பட்டு சுமார் 40 நாட்கள...
16/10/2025

நம்றூத் என்ற கொடுங்கோல் ஆட்சியாளனால் நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக்கிடங்கில் எறியப்பட்டு சுமார் 40 நாட்களின் பின்னர் இறையருளால் எரியும் நெருப்பிலிருந்து சுகதேகியாக வெளிப்பட்ட இடம்..!

ஹில்லா, இறாக். 💚

***

“நெருப்பே! நீ இப்றாஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!” என்று நாம் கூறினோம்.
அவர்கள் இப்றாஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம்.
(அல்குர்ஆன்: 21 - 69,70)
Haja Gareeb Nawaz TV Mohammed Rifkas Qadiri

15/10/2025

யா அல்லாஹ் உன்னுடைய இறை நேசர்களைக் கொண்டு இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் அருள் பெற வேண்டும் என்பதற்காக இந்த உலகில் எல்லா இடங்களிலும் வைத்து இருக்கின்றாய். அல்ஹம்துலில்லாஹ் உன்னுடைய கிருபை மேலானது நாயனே அந்த வைகையில் அக்கரைப்பற்று மண்ணில் அதிகமான வலிமார்களை அடங்க வைத்துல்லாய் அக்கரைப்பற்று மண்ணுக்கு கிடைத்த மிகப் பெரும் பாக்கியம் குதுபுனா ஷெய்குனா ஸெய்னுலாபிதீன் வலியுல்லாஹ் قدس الله سره العزيز அவர்கள் யா அல்லாஹ் இந்த வலியுல்லாஹ்வின் பொருட்டைக் கொண்டு எங்களின் பாவங்களையும் கஷ்டங்களையும் நீக்கி நோய் நொடிகளையும் நீக்கி நீண்ட ஆயுளையும் தந்து ஹலாலான எண்ணங்களையுங் ஏற்றுக்கொண்டு மறுமையின் வாழ்க்கையை வெற்றி ஆக்கி தந்து விடு யா அல்லாஹ் 🤲🤲🤲🤲 குதுபுனா ஷெய்குனா ஸெய்னுலாபிதீன் வலியுல்லாஹ் قدس الله سره العزيز அவர்களின் பொருட்டைக் கொண்டு ஏற்றுக்கொள்வாயாக நாயனே யா அல்லாஹ் மரணிக்கும் முன் உன்னுடைய ஹபீப் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மக்பரா ஷரீபை தர்சிக்கும் பாக்கியத்தை தந்தருள் யா அல்லாஹ் 🤲🤲🤲🤲🌹🌹🌹🌹💖💖💖💖💘🌹💘🌹🌹💖💕🌹💕 கனவிலும் நினைவிலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களை காணும் பாக்கியத்தை தந்தருள் யா அல்லாஹ் ஸலவாத்து சொன்னவர்களாக எங்களின் உயிரை கைப்பற்று யா அல்லாஹ்
யா அல்லாஹ் உன்னுடைய ஹபீப் ﷺ அவர்களின் மீது அதிகம் ஸலவாத்துக்களை ஓதும் பாக்கியத்தை தந்தருள் யா அல்லாஹ் 🤲🤲🤲🤲🌹💕💕 💕💕💕💕💕💕💕💕💕💕💕
Haja Gareeb Nawaz TV Mohammed Rifkas Qadiri Malkan Rifkas நபிகள் நாயகத்தின் நேசன் Shahul Hameed Al Fassy நூரே முஹம்மதியா Ahlush Sunnadu Wal Jamaad Youth Council Wangamam Zeinul Arliya

 #மூலகுருநாதர்முஹ்யித்தீன்அப்துல்காதிர்ஜீலானிரழியல்லாஹுஅன்ஹுதெடர்மூன்று #*•இறுதியாக திருடர்கள் தலைவரிடம் கொண்டு சென்றனர்...
12/10/2025

#மூலகுருநாதர்முஹ்யித்தீன்அப்துல்காதிர்ஜீலானிரழியல்லாஹுஅன்ஹுதெடர்மூன்று #

*•இறுதியாக திருடர்கள் தலைவரிடம் கொண்டு சென்றனர் அங்கு அவர்கள் உண்மையே பேசினார்கள். நாயகமவர்களை சோதித்துப் பார்த்த போது' அவர்கள் சொன்னது உண்மை என்று தெரியவந்தது. வியப்புற்ற கள்வர்கள், காரணம் கேட்டபோது, தாயாரிடம் கொடுத்த வாக்குறுதிப்படி நான் உண்மையையே பேசினேன் என்றுரைத்தார்கள். இதைக் கேட்டு கள்வர்கள் திருந்தி, இனிமேல் பாவச் செயல்களில் ஈடுபட போவதில்லை என்று நாயகமவர்களிடம் சத்தியம் செய்து கொடுத்தனர். இறைவனிடமும் பாவமன்னிப்புத் தேடினர் பிற்காலத்தில் இவர்கள் அனைவரும் வலிமார்களாக திகழ்ந்தனர் என் சரித்திரம் கூறுகிறது.*
*•கெளதுநாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் இளம் வயதிலேயே அன்னாரின் தந்தையார் மறைந்து விட்டார்கள். தந்தையை இழந்த நமது நாயகத்தை அவரது தாய்வழிப் பாட்டனாராகிய அப்துல்லாஹ் ஸெளமஈ ரழியல்லாஹு அன்ஹு அவர்களே வளர்த்து வந்தார்கள்.*
*ஹழ்ரத் ஹம்மாது நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சில காலம் மார்க்கக் கல்வி கற்றார்கள்.*
*•பகுதாது நகரில் ஹலாலான உணவுக்காக தேடி அலைந்தார்கள். அது கிடைக்கும் வரை பசியாக இருந்தார்கள்.*
*மாணவராக இருந்த காலக்கட்டத்தில் பாடம் படித்து விட்டு, காட்டிற்கு சென்று விடுவார்கள். கீரை, தழை முதலியவற்றை புசித்தே பசியை தீர்த்துக் கொண்டார்கள் என்று காயிதுல் ஜவாஹித் நூல் பக்கம் 7.8ல் காணப்படுகிறது*
*புறக்கல்வியைக் கற்றுத் தேர்ந்தபின் தரீகத் என்னும் அகக் கல்வியில் புகுந்தார்கள்.*
*•ஆத்மீகக் கல்வியை அதன் ஒழுக்க முறைகளை காஜி அபூஸயீதுல் முபாரக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கற்று முறையாக அனுமதியும் பெற்றார்கள்.*
Haja Gareeb Nawaz TV Mohammed Rifkas Qadiri Malkan Rifkas

12/10/2025

இன்றைய பெண்களின் நிலை நேரடி ஒளிபரப்பு ஆன்மீக ஹாஜா கரீப் நவாஸ் தொலைக்காட்சி
முஹம்மது றிப்காஸ் காதிரி

Address

Pottuvil
Ampara
32500

Alerts

Be the first to know and let us send you an email when Haja Gareeb Nawaz TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category