Today Ceylon

Today Ceylon வாய்மைக்கும் நேர்மைக்குமான பிரதிபலிப்பு
(1)

🔴பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளை (07) ஆரம்பம்அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் ...
06/09/2026

🔴பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளை (07) ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.

இதனையொட்டி, அனைத்துப் பாடசாலைகளிலும் இன்றும் (06) நாளையும் (07) டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கும் சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் பிரதீப் பொரலெஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாணவர்களின் நலன் கருதி தேவைக்கேற்ப 'சிசு செரிய' உட்பட மேலதிக பேருந்துகள் நாளை(7) முதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

🔴⛔விழிப்புணர்வு பதிவு""சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...டெங்கு நோயைக் காட்டிலும் சாலை...
06/09/2026

🔴⛔விழிப்புணர்வு பதிவு""சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...

டெங்கு நோயைக் காட்டிலும் சாலை விபத்துகளினால் நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், விசேட வைத்தி நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், கடந்த எட்டு மாதங்களில் டெங்கு நோயினால் நாட்டில் சுமார் 60 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அதே காலப்பகுதியில் சாலை விபத்துகள் காரணமாக 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

இது டெங்கு உயிரிழப்புகளை விட சுமார் 30 மடங்கு அதிகம் என்றும், சராசரியாக தினமும் 4 முதல் 5 பேர் வரை வீதி விபத்துகளில் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விபத்துகளில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த நடுத்தர மற்றும் கிராமப்புற மக்களாவர்.

குறிப்பாக முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் மிதிவண்டிகளை பயன்படுத்துவோரே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

குடும்பத்தின் முதன்மை வாழ்வாதாரமாக இருக்கும் தந்தை அல்லது சகோதரன் உயிரிழப்பதால், அக்குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வி கடுமையாக பாதிக்கப்படுகிறது.

மேலும், உயிரிழப்புகள் தவிர்த்து விபத்துகளினால் நிரந்தர அல்லது தற்காலிக ஊனத்திற்குள்ளாவோரின் எண்ணிக்கை 5,000-க்கும் அதிகமாக உள்ளதாகவும், இவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அரசு பெருமளவிலான நிதியை செலவிட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தனியார் பேருந்துகளுக்கு இடையே நிலவும் கடுமையான போட்டி, சாரதிகளின் வீதி ஒழுக்கமின்மை, கவனக்குறைவாக திடீரென யூ திரும்பல் ('U-Turn') எடுத்தல், பாதைகளில் வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணாமை மற்றும் முறையான பயிற்சியின்மை ஆகியவையே இத்தகைய விபத்துகளுக்கு முதன்மை காரணங்களாக அமைகின்றன.

எனவே, சுகாதார அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரசபைகள் இணைந்து கூட்டுத் திட்டமொன்றை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்

⚠️ [Warning] -🔴 MAY CONTAIN VIOLENT or SENSITIVE CONTENT⛔

ஏறாவூர் சவுக்கடி கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் அர்ப்பணிப்பான மனிதநேயச் சேவை!​மஜீட். ARM ஏறாவூர் சவுக்கடி ...
06/09/2026

ஏறாவூர் சவுக்கடி கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் அர்ப்பணிப்பான மனிதநேயச் சேவை!

மஜீட். ARM

ஏறாவூர் சவுக்கடி வீதியில் கடந்த 6 வருடங்களாக இயங்கிவரும் 'கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம்' புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற மற்றும் வசதி குறைந்த நோயாளர்களுக்கான ஒரு முக்கிய அடைக்கலமாக விளங்கி வருகிறது.

​மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் தூர இடங்களைச் சேர்ந்தவர்கள், உறவுகளால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் வாழ்வின் இறுதிக்கட்டத்திலுள்ள நோயாளர்கள் என பலரும் இங்கு பராமரிக்கப்படுகின்றனர்.

இவர்களுக்கான உணவு, மருத்துவம், போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் முழுமையான சேவை நோக்கத்துடன் வழங்கப்பட்டு வருவதுடன், இலங்கையின் மூவின மக்களும் இங்கு பேதமின்றி பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நோயாளர்கள் மன நிம்மதியுடன் வாழ்வதற்காக இயற்கை சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுடன், 11 ஏக்கர் பரப்பளவில் சேதன விவசாயம், பல்லாண்டு பழமரத் தோட்டம், கோழி, மீன் மற்றும் கால்நடை வளர்ப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்மூலம் கிடைக்கும் உணவுப் பொருட்கள் நோயாளர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதுடன், மேலதிக உற்பத்தி விற்பனை மூலம் நிலைய பராமரிப்புக்கான வருமானமும் ஈட்டப்படுகிறது.


இங்குள்ள நோயாளர்களுக்கான ஒருநாள் முழுமையான உணவிற்கு ரூ. 70,000 செலவாகிறது. இதில் பகல் உணவிற்கு ரூ. 40,000, இரவு உணவிற்கு ரூ. 20,000 மற்றும் காலை உணவிற்கு ரூ. 10,000 செலவிடப்படுகிறது. எனினும், ஒரு நபர் ஒருநாள் முழுச் செலவையும் ஏற்றுக்கொள்ளும் போது ரூ. 60,000 செலுத்தி உணவு வழங்கும் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும் என நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

​பொதுமக்கள் தமது பிறந்தநாள், விசேட நாட்கள் அல்லது நினைவஞ்சலி நாட்களை இதுபோன்ற நற்காரியங்களுக்கு அர்ப்பணித்து ஆத்ம திருப்தி பெறலாம் என அழைக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் M. பரமேஸ்வரன் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (செப்டம்பர் 05) இந்நிலையத்திற்கு உணவு நன்கொடை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

🔴⛔​"வடக்கு, கிழக்கில் தீவிரமடையும் எல்நினோ தாக்கம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை வெள்ள அபாய எச்சரிக்கை - வானிலை ஆய்வாளர் ...
06/09/2026

🔴⛔​"வடக்கு, கிழக்கில் தீவிரமடையும் எல்நினோ தாக்கம்: அக்டோபர் முதல் டிசம்பர் வரை வெள்ள அபாய எச்சரிக்கை - வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா!"

06.09.2026 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணி

இந்தப் பதிவு பின்வரும் 03 விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

1. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாரி மழையின் தொடக்கம்

2. தீவிரமடையும் எல்நினோ

3. செப்டம்பரின் இரண்டாவது வாரத்திலிருந்து செறிவடையும் வெப்பச்சலன மழை

1. மாரி மழையின் தொடக்கம் ( இரண்டாவது இடைப்பருவ மழை)

இவ்வருடத்தின் இரண்டாவது இடைப்பருவ மழை( மாரி மழை) ஒக்டோபர் 14-19ம் திகதிக்கிடையில் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் தற்போது இரண்டாவது இடைப்பருவம் செயற்பாட்டில் இல்லை. இலங்கையின் தற்போது பயன்பாட்டில் உள்ள காலநிலைப் பருவங்கள்( 1. வடகீழ்ப்பருவம் 2. முதலாவது இடைப்பருவம் 3. தென்மேற்குப் பருவம் 4 இரண்டாவது இடைப்பருவம்) மீள் வகைப்பாடு செய்யப்படவேண்டும்.

கடந்த காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் காலபோக நெற்செய்கையைத் தீர்மானித்த பிரதான காரணி இந்த ஒக்டோபர் மாத மழையே.

ஆனால் இம்முறை எல்நினோவின் காரணமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தாழமுக்க/ புயல்களின் செயற்பாட்டினால் சராசரியை விட அதிக மழை குறைந்த மழை நாட்களில் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் வெள்ள மற்றும் நிலச்சரிவு நிகழ்வுகளினால் இவ்வருடமும் பாதிக்கப்படும்.

முன்னரே குறிப்பிட்டபடி இம்முறை ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 03 புயல்களோடு கூடிய 07 தாழமுக்க நிகழ்வுகளுக்கும் வாய்ப்புண்டு.

ஆகவே இம்முறையும் ஒக்டோபர் மாதத்தின் பிற்பகுதியிலும், நவம்பர் மாதத்தின் நடு மற்றும் இறுதிப் பகுதியிலும், டிசம்பர் மாதத்தின் முற்பகுதியிலும் வெள்ள அனர்த்த நிகழ்வுகளுக்கான வாய்ப்புக்கள் உண்டு. இவையனைத்தும் பாதிப்பை ஏற்படுத்தாது விட்டாலும் ஒன்று அல்லது இரண்டு சந்தர்ப்பங்களில் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக்கள் உள்ளன.

மிகக் குறிப்பாக கூறுவதானால் நவம்பர் மாதம் 10ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05ம் திகதி வரையான காலப்பகுதியில் நிகழவிருக்கும் தாழமுக்கங்கள(குறைந்தது 03)/ புயல்(குறைந்தது 01) ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

************************************************

2. எல்நினோவின் தீவிரம்

எல்நினோ மிகத் தீவிரமாக வலுப்பெற்று வருகிறது. நினோ பிராந்தியம் 1+2 இல் வெப்பநிலை இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு 4.1 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. அதேவேளை நினோ பிராந்தியம் 3.4 இல் வெப்பநிலை 2.6 பாகை செல்சியஸ் என்ற அளவுக்கு வலுப்பெற்றுள்ளது.

இந்து சமுத்திர இருமுனை இன்னமும் நடுத்தர நிலையிலேயே உள்ளது. இன்றைய தினம் (06.09.2026) இந்து சமுத்திரத்தின் மேற்கு பிராந்தியத்தில் (அரபிக்கடலில்) 0.25 என்ற அளவிலும் கிழக்கு பிராந்தியத்தில் ( வங்காள விரிகுடாவில்) 0.22 என்ற அளவிலுமே உள்ளது.

ஆனால் இந்து சமுத்திர இருமுனை தொடர்ந்தும் வலுப்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எல்நினோ இலங்கையின்2026/2027 மழைவீழ்ச்சிப் பாங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

இந்த எல்நினோ, இலங்கை முழுவதும் பெரியளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்போது நாட்டின் வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களிலும் மொனராகலை, அம்பாந்தோட்டை, புத்தளம், குருநாகல் மாவட்டங்களிலும் நிலவும் வரண்ட வானிலையினால் ஏற்படும் பாதிப்புக்கள் மேலும் தீவிரம் பெறும். ஒரு சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை கிடைத்தாலும் அவை நிலவும் வரண்ட வானிலைப் பாதிப்புக்களை எதிர்பார்க்கும் அளவுக்கு தணிக்காது.

இந்த எல்நினோவின் பாதிப்புக்கள் இலங்கையில் வரட்சியை விட வெள்ள நிகழ்வுகளினாலே அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே மக்கள் அனைவரும் இந்த வெள்ள அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும். குறிப்பாக எல்நினோவின் காரணமாக அதிக தாழமுக்கங்கள்/ புயல்கள் உருவாகும் வாய்ப்புள்ளதனாலும் அவற்றில் சிலவற்றின் நகர்வுப் பாதைகள் கிழக்கு கரையோரமாகவே அமையும் என்பதனாலும், குறைந்த மழை நாட்களில் அதிக அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனாலும் வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் வெள்ள அனர்த்தங்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அன்புக்குரிய மலையக உறவுகளே !... இம்முறையும் தாழமுக்க/ புயல் நிகழ்வுகள் உருவாகும் வாய்ப்புள்ளன. பல தாழமுக்கங்கள்/ புயல்களின் நகர்வும் பாதைகள் இலங்கைக்கு கிழக்காகவும் தெற்காககவும் நகரும் வாய்ப்புள்ளதாக மாதிரிகள் காட்டுகின்றன. போதாத குறைக்கு மிக வலுவான எல்நினோவும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உச்சமடையவுள்ளது. அதிக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும் மழை நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். ஆகவே நாளுக்குரிய மழைச் செறிவு கூடுதலாக இருக்கும். ஆகவே இம்முறையும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெள்ள நிகழ்வோடு கூடிய நிலச்சரிவு நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே அதற்கேற்ற வகையில் உங்களைத் தயார்ப்படுத்துங்கள்.

************************************************

3. செறிவடையும் வெப்பச்சலன மழை

எதிர்வரும் 14.09.2026 க்கு பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் வெப்பச் சலன மழை செறிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் இந்த மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரே நாளில் அனைத்துப் பகுதிகளிலும் மழை கிடைக்காது. அதேவேளை அனைத்துப் பகுதிகளும் இந்த வெப்பச் சலன மழையைப் பெறாது. அதேவேளை இந்த வெப்பச்சலன மழையின்போது இடி மின்னல் நிகழ்வுகள் இடம்பெறக்கூடும்.

செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில் வெப்பச்சலன மழையோடு ஒரு தாழமுக்க நிகழ்வும் மழையைத் தரும் வாய்ப்புள்ளது. ஆனால் ஒக்டோபர் மாதத்தின் பிற்பகுதியிலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கன மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே அதற்கு ஏற்ற வகையில் விவசாயிகள் காலபோக நெற்செய்கைக் காலத்தைத் தீர்மானிக்கலாம். விவசாய மற்றும் கமநலத் திணைக்களத்தினர் இது தொடர்பாக விவாசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

- நாகமுத்து பிரதீபராஜா -

🔴திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயது இளைஞன் கைதுதிருக்கோவில், செப். 06:ஜே.கே.யதுர்ஷன்...நாடளாவிய ரீதியில்...
06/09/2026

🔴திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயது இளைஞன் கைது

திருக்கோவில், செப். 06:
ஜே.கே.யதுர்ஷன்...

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் 40 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (06) திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நளிந்த பீரிஸ் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருக்கோவில், விநாயகபுரம் 01, முன்பள்ளி வீதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நடவடிக்கை கிழக்குப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேமுல்ல அவர்களின் ஆலோசனையிலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி அவர்களின் மேற்பார்வையிலும், பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தயாரத்ன அவர்களின் வழிநடத்தலிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நளிந்த பீரிஸ் அவர்களின் நேரடி கண்காணிப்பில், பொலிஸ் சார்ஜன்ட் 73646 விஜேகுமார, பொலிஸ் கான்ஸ்டபிள் 79521 சமன் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 93542 ருக்ஷான் ஆகியோரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

🔴⛔பேருவளையில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்புதேசிய மக்கள் சக்தி சார்பில் இன்று பேருவளையில் நடைபெற்ற மக்கள் சந்தி...
06/09/2026

🔴⛔பேருவளையில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தி சார்பில் இன்று பேருவளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

06/09/2026

🔴LIVE : #பொக்கிஷம்
#மகிழ்வுறும்_விழா_2026

இறக்காமம் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இருந்து நேரலை
Part 2

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து 80ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடிய ஐக்கிய தேசியக் கட்சிஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது 80ஆவது ஆண்...
06/09/2026

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து 80ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடிய ஐக்கிய தேசியக் கட்சி

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது 80ஆவது ஆண்டு நிறைவு விழாவை இன்று (6) எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து கொண்டாடியுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1946ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலையில், இலங்கையின் அரசியல் வரலாற்றில் நீண்டகாலமாக முக்கிய பங்கு வகித்து வரும் பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றாக விளங்குகிறது.

80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴⛔தலைமன்னார் கடற்பரப்பில் தவித்த 11 இலங்கை அகதிகள் மீட்பு - மனிதாபிமான உதவிகள் வழங்கல்!தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள மணல்...
06/09/2026

🔴⛔தலைமன்னார் கடற்பரப்பில் தவித்த 11 இலங்கை அகதிகள் மீட்பு - மனிதாபிமான உதவிகள் வழங்கல்!

தலைமன்னார் கடற்பரப்பில் உள்ள மணல்திட்டு பகுதியில் அநாதரவாகத் தவித்துக் கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக நேற்று மீட்கப்பட்டனர்.

கடற்படையினர் வழமையான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், மணல்திட்டு பகுதியில் நான்கு பெண்கள், ஓர் ஆண் மற்றும் 2, 11, 14 வயதுடைய மூன்று சிறுவர்கள் என எட்டுப் பேர் கொண்ட குழுவொன்றை அவானித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் மணல்திட்டில் சிக்கியிருந்த அவர்களுக்கு கடற்படையினர் உடனடியாகக் குடிநீர், உணவு மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்கி உதவினர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, இவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடல் மார்க்கமாகப் பயணித்துள்ளதாகவும், ஆட்கடத்தல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக குறித்த மணல்திட்டில் நடுக்கடலில் திட்டமிட்டு கைவிடப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், இவர்கள் தென்னிந்தியாவின் அனையூர் மற்றும் ஒக்கூரு அகதிகள் முகாம்களிலிருந்து நாடு திரும்பியவர்களாக இருக்கலாம் எனவும் கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று முன்னெடுக்கப்பட்ட மற்றுமொரு ரோந்து நடவடிக்கையின் போது, தலைமன்னார் மணல்திட்டுப் பகுதியில் மேலும் மூவர் தவித்துக் கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இவர்களில் தந்தை ஒருவரும் அவரது 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் அடங்குவர்.

இதன் மூலம் இன்று ஒரே நாளில் ஐந்து சிறுவர்கள், நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட மொத்தம் 11 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினரால் மீட்கப்பட்டு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட அனைத்து நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் அக்கரைப்பற்று இளைஞர்அக்கரைப்பற்று, செப். 06:ஜே.கே.ய...
06/09/2026

தேசிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் அக்கரைப்பற்று இளைஞர்

அக்கரைப்பற்று, செப். 06:
ஜே.கே.யதுர்ஷன்..

நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பை பகுதியைச் சேர்ந்த சுகிர்தகுமார் கிருஸ்மன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஊடகத்துறையில் ஆர்வத்துடன் செயற்பட்டு வரும் சுகிர்தகுமார் கிருஸ்மன், சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவராகவும், ஒளிப்பதிவு மற்றும் புகைப்படக் கலைத்துறையில் ஈடுபட்டு வருபவராகவும் திகழ்கின்றார்.

அத்துடன், இசைத்துறையிலும் சிறந்து விளங்கும் இவர், பல பாடல்களை தனிப்பட்ட முறையில் உருவாக்கி வெளியிட்டுள்ளதுடன், தனது படைப்பாற்றல் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளார்.

தற்போது ICBT தனியார் பல்கலைக்கழகத்தில் Software Engineering கற்கைநெறியையும் தொடர்ந்து வருகின்றார்.

நல்ல ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இளம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான பயிற்சித் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (04) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

நாடு முழுவதுமுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் திறந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டதன் பின்னர் தகுதியான இளம் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ஊடகத்துறையில் ஆர்வமுள்ள பலர் விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் பங்கேற்ற நிலையில், திருக்கோவில் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியான இளம் பிராந்திய ஊடகவியலாளராக சுகிர்தகுமார் கிருஸ்மன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இப்பயிற்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தலைமையில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் இலங்கை இளைஞர் விவகார பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பயிற்சித் திட்டத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் ஊடக ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சந்தன சூரியபண்டாரவினால் நடத்தப்பட்டது.

இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் புகைப்படக்கலை, காணொளி தயாரிப்பு, அறிவிப்பாளர் பயிற்சி, பத்திரிகைத்துறை, அபிவிருத்தித் தொடர்பாடல், டிஜிட்டல் ஊடகம் மற்றும் புதிய ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகத்துறையின் பல்வேறு பிரிவுகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் இளம் ஊடகவியலாளர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தி, பொறுப்பானதும் தரமானதுமான ஊடகப் பணியை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.

தேசிய ரீதியில் இளம் பிராந்திய ஊடகவியலாளராக தெரிவுசெய்யப்பட்ட சுகிர்தகுமார் கிருஸ்மனுக்கு அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பை மற்றும் திருக்கோவில் பிரதேச மக்கள், நண்பர்கள் மற்றும் ஊடகத்துறையினர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Address

294/A Ampara Road Irakkamam
Ampara
32450

Alerts

Be the first to know and let us send you an email when Today Ceylon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today Ceylon:

Shortcuts

Share