Today Ceylon

Today Ceylon வாய்மைக்கும் நேர்மைக்குமான பிரதிபலிப்பு
(1)

பாலமுனை அஷ்ரப் வித்தியாலய மாணவனின் புதிய கண்டுபிடிப்பு✍️ எம்.பஹத் ஜுனைட்ஆரையம்பதி மட்/மம/பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில்...
12/10/2025

பாலமுனை அஷ்ரப் வித்தியாலய மாணவனின் புதிய கண்டுபிடிப்பு
✍️ எம்.பஹத் ஜுனைட்
ஆரையம்பதி மட்/மம/பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் மாணவன் எம்.எப்.எம்.பாயிக் சூழலில் கிடைக்கும் கழிவுப்பொருட்களை பயண்படுத்தி குறைவான செலவில் எளிய வடிவிலான நுணுக்குக்காட்டி (microscope) தயாரித்துள்ளார்.
பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.பரீட் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர் ஏ.எம்.எம்.ஸாகிர் ஆகியோரின் வழிகாட்டலுடன் இக் கண்டுபிடிப்பை இம் மாணவர் மேற்கொண்டுள்ளார்.
இக் கண்டுபிடிப்பின் ஊடாக கல்வி அமைச்சரின் இளம் கண்டுபிடிப்பாளர் ஊக்கப்படுத்தல் திட்டத்தின் ஊடாக ஏனைய பாடசாலைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இம் மாணவனின் எதிர்பார்ப்பாகும்.

இறக்காமம்  நிகுண புராண ராஜமஹா  விகாரையில் புத்தர் சிலை நியமிப்பதற்காகன அடிகல் நாட்டு விழா இன்று  12 ஆம்திகதி   இடம்பெற்ற...
12/10/2025

இறக்காமம் நிகுண புராண ராஜமஹா விகாரையில் புத்தர் சிலை நியமிப்பதற்காகன அடிகல் நாட்டு விழா
இன்று 12 ஆம்திகதி இடம்பெற்றது அந்நிகழ்வின் புகைப்பட காட்சிகள்

புகைப்பட உதவி சதாம்

களுத்துறையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடுகளுத்துறையின் பலதோட்டா பகுதியில் இன்று (11.10.2025) பிற்பகல் துப்பாக்கிச் சூ...
11/10/2025

களுத்துறையில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு

களுத்துறையின் பலதோட்டா பகுதியில் இன்று (11.10.2025) பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் ஒரு கடையை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

🔵 சபாத் இல்லம் முடக்கம்! சவாளை பிரதேசத்தில் P/05 கிராம பிரிவில் இயங்கிக் கொண்டு வந்த இஸ்ரவேலர்களின் வணக்கஸ்தலமான சபாத் இ...
11/10/2025

🔵 சபாத் இல்லம் முடக்கம்!
சவாளை பிரதேசத்தில் P/05 கிராம பிரிவில் இயங்கிக் கொண்டு வந்த இஸ்ரவேலர்களின் வணக்கஸ்தலமான சபாத் இல்லம் நேற்று மூடப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் இன்றைய தினம் (11) கோமாரி பிரதேசத்தில் இடம்பெற்ற நீர்வழங்கள் திட்டத்தை ஆரம்பித்து வைக்கின்ற வேளையில் உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் MS. அப்துல் வாஸித் அவர்களிடம் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் கடந்த மாதம் பொத்துவில் சபையில் தீர்மானம் மேற்கொண்டுவந்த பிரதேச சபை தவிசாளர் முஷர்ரப் முதுநபீன் (மு. பா. உறுப்பினர்) அவர்களுக்கும், இது சம்மந்தமாக என்னுடன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களான MS. உதுமாலெவ்வை, MLM. ஹிஸ்புல்லாஹ் மற்றும் கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நிசாம் காரியப்பர் அனைவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் MS. அப்துல் வாஸித் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்.
மேலும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அவர்களுக்கும், அமைச்சினுடைய செயலாளர் அவர்களுக்கும், பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கும் மற்றும் இந்த விடயத்தோடு சம்மந்தப்பட்ட அனைவருக்கும் பொத்துவில் பிரதேச பொது மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஊடகப் பிரிவு
அப்துல் வாஸித்
பாராளுமன்ற உறுப்பினர்

முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின...
11/10/2025

முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்
அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.

🔴WARNING 🔴GRAPHIC 🔴CONTENTஆசிரியர் ஒருவரின்  #கொடூர செயல்!புத்தளம்  #மேர்சி லங்கா கல்லூரியில் சம்பவம்!அநாதை சிறார்கள் மற...
11/10/2025

🔴WARNING 🔴GRAPHIC 🔴CONTENT
ஆசிரியர் ஒருவரின் #கொடூர செயல்!
புத்தளம் #மேர்சி லங்கா கல்லூரியில் சம்பவம்!
அநாதை சிறார்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் கல்வியை வழங்கிவரும் #புத்தளம் #மதுரங்குளி #மேர்சி லங்கா நிறுவனத்தின் கல்லூரியில் #தந்தை இல்லாத மாணவர் ஒருவருக்கு #புத்தளம் பகுதியை சேர்ந்த ஆசிரியரால் மேற்கொள்ளப்பட்ட #வன்மமே இதுவாகும்.
இந்த சம்பவம் மூடிமறைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவுதான் #உறவினர்களுக்கு தெரிய வந்ததாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் இன்றும், நேற்று பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு குறித்த ஆசிரியரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வித #தவறும் செய்யாமல், ”வேறொரு மாணவனுக்கு குறித்த ஆசிரியர் கொடுத்த தண்டனையை பார்த்து #சிரித்ததற்காகவே இந்த மாணவனுக்கு இத்தனை கொடூரமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தந்தையை இழந்த, முஹமட் #இஷாரி எனும் 13 வயது இம்மாணவர் #கல்முனை பகுதியை சேர்ந்தவர்.
#பெற்றோரின்றி, வசதியின்றி, #சொந்தபந்த உறவுகளின்றி கல்வி கற்க உதவி தேடிவரும் இதுபோன்ற #அநாதை மாணவர்களுக்கு #மிருக குணம் கொண்ட இதுபோன்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது குறித்த கல்லூரி மீதான #நம்பிக்கையை வீணாக்கிவிடுவதுடன், கல்லூரிக்காக வாரி வழங்கும் #உள்நாட்டு, #வெளிநாட்டு #உதவிகளையும் இல்லாது செய்து விடுமென்பதை கல்லூரி #நிர்வாகம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
எனவே வெறுமனே #சாட்டுப்போக்கு சொல்லி கல்லூரிகளின் பெயரை மாத்திரம் காப்பாற்றிக்கொள்வதற்காக #குறித்த ஆசிரியரை #பதவிநீக்கம் செய்வதோடு நின்று விடாமால், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மீதான துஷ்பிரயோகத்தின் அடிப்படையில் இதுபோன்ற #வன்மம் கொண்டோரை #வருடக்கணக்கில் அடைக்கும் #சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதையும் சமூகம் சார்பாக வேண்டுகோளாக விடுக்கின்றோம்.
மேற்படி மாணவன் மீதான தாக்குதலுக்கு எதிராக #மனித உரிமை ஆர்வலர்கள், சமூகநலன் விரும்பிகள் மற்றும் #சட்டவல்லுனர்கள் உட்பட பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் கைகொடுத்துதவுமாறு சமூகம் சார்பாக வேண்டி நிற்கின்றோம்.

copy past to Almashoora Latest News

சி.ஐ.டியினரின் விசாரணையில் சிக்கியுள்ள பல அரசியல்வாதிகள்இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின...
11/10/2025

சி.ஐ.டியினரின் விசாரணையில் சிக்கியுள்ள பல அரசியல்வாதிகள்

இலங்கையில் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் விபரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் குற்ற புலனாய்வு திணைக்களத்தின் சேவையை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம் பல்வேறு குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை வலுப்படுத்த 10,000 புதிய அதிகாரிகளை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திணைக்கள அதிகாரிகள்
இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படும் அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நியமிக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

சி.ஐ.டியினரின் விசாரணையில் சிக்கியுள்ள பல அரசியல்வாதிகள்

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் 24 மணித்தியாளங்கள் பணியாற்றினால் விசாரணைகளை முடிக்க முடியவில்லை.

இதனால் டிசம்பர் மாதத்திற்குள் 5000 அதிகாரிகளையும் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு மேலும் 5000 அதிகாரிகளையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரிகள் தற்போது 17 மணித்தியாளங்கள் வரை பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சிறிய ஓய்வு தேவைப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கல்முனை சந்தையில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு  கோரிக்கை(பாறுக் ஷிஹான்)கல்முனை மாநகர பொதுச்சந்தையில் ...
11/10/2025

கல்முனை சந்தையில் திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கை
(பாறுக் ஷிஹான்)
கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்க்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க பிரதிச் செயலாளர் எஸ்.எல் றாயீஸ் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனை மாநகர பொதுச் சந்தையில் ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மத்தியில் பட்டப்பகலில் கட்டாக்காலி மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் பிரதான வீதியில் பயணிக்கும் மக்கள்
அசௌகரியங்களுக்குள்ளாவதுடன் வாகனங்களில் பயணிப்போர் விபத்துகளுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்.
இது தவிர கல்முனையில் நடக்கும் வீதி விபத்துக்களில் இக்கட்டாக்காலி மாடுகளினாலும் அதிகமான விபத்துச் சம்பவங்கள் ஏற்பட்டுவருகின்றன.
குறிப்பாக கல்முனையில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பொதுச்சந்தை நகரின் கடைத் தொகுதிகள் அமைந்துள்ள மத்திய பகுதிகள் பஸ்தரிப்பு நிலையம் வங்கிகள் பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளில் இம் மாடுகள் சுற்றித்திரிகின்றன.
கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டபோதிலும் அவை முறையாக அமுல்படுத்தப்படவில்லை. எனவே கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான முறையான திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் பொதுச்சந்தையில் மாடுகள் தொல்லை தொடர்ச்சியாக உள்ளது.இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்திர தீர்வு இதுவரை இல்லாமல் உள்ளது.எமது பொதுச்சந்தையில் மக்களை விட மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இன்று கூட சந்தைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வந்திருந்த பெண்மணிக்கு மாடு குத்தியதால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.அதுமாத்திரமன்றி சந்தையில் மரக்கறிகளை உண்ண வந்த மாட்டினை துரத்துவதற்காக மரக்கறிக்காரர் தயாரான போது தன்னை காப்பாற்ற மாடு வீதியால் சென்ற பொதுமகனை மோதிய சம்பவமும் பதிவாகியுள்ளது.
இதனால் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவரும் காயமடைந்த நிலையில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது.இதை விட ஒரு மாதத்திற்கு முன்னர் கர்ப்பிணி தாய் ஒருவருக்கு சந்தைப்பகுதியில் மாடுகள் குத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடயமும் இருக்கின்றது.இவ்வாறான தொடர்ச்சியாக சம்பவங்கள் மாடுகளினால் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.
இது தொடர்பில் கல்முனை மாநகர ஆணையாளருக்கு பல தடவை அறிவித்திருக்கின்றோம்.எவரும் இதில் உடனடி நடவடிக்கை எடுத்து நிரந்திர தீர்வினை பெற்றுத் தருவதாக தெரியவில்லை என ஆதங்கத்துடன் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர் தெரிவித்தார்.
கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர்-07792265505
மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி-0772073607

சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவு (எம்.எஸ்.எம்.ஸாகிர்)...
11/10/2025

சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவு
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான விஷேட பொதுக்கூட்டம் (08) பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பின்வரும் நிர்வாகிகள் நம்பிக்கையாளர்
சபையால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவராக முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர்,
பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக், செயலாளராக ஓய்வுபெற்ற புகையிரத பாதுகாப்புப் பொறுப்பதிகாரி
எஸார் மீராசாஹிப், பொருளாளராக தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.எம். சமீம், பிரதித் தலைவராக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்
டாக்டர் ஏ.எம். மிஸ்பாஹ், உப தலைவராக ஜம்இய்யத்துல் உலமா சபையின் சாய்ந்தமருது-மாளிகைக்காடு கிளையின் தலைவர்
அல்ஹாஜ் மௌலவி எம்.எம்.எம். மீராசாஹிப், பிரதிச் செயலாளராக காரைதீவு பிரதேச செயலகத்தின் முதல் நிலை சிறுவர் நல உத்தியோகத்தர் ஏ. ஜெஸ்மீர், உதவிச் செயலாளராக தொழிலதிபர் ஏ.எச்.எம். ஹாரூன், உப பொருளாளராக ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஐ. நஜீம், கணக்காய்வாளராக நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர்
ஏ.எம். சுல்பிகார், ஊடக ஒருங்கிணைப்பாளராக உதவித் தபால் அத்தியட்சகர் யூ.எல்.எம். பைசர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

09/10/2025

⭕👉 #ஒலுவில் அல்-மதீனா வித்தியாலய மாணவனின் #நாட்டார் #பாடல்

Masha Allah ❤️

⭕👉  #பூஸ்ஸ_அதியுயர்_பாதுகாப்பு #சிறைச்சாலையிலிருந்து 28 Smart Phone-கள், 30 Sim Card-கள், 35 Charger-கள் கண்டுபிடிப்பு. ...
09/10/2025

⭕👉 #பூஸ்ஸ_அதியுயர்_பாதுகாப்பு
#சிறைச்சாலையிலிருந்து 28 Smart Phone-கள், 30 Sim Card-கள், 35 Charger-கள் கண்டுபிடிப்பு.

09/10/2025

Home Local news ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பரவும் செய்தி - பொலிஸ் விளக்கமளிப்பு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பரவும் செய்த....

Address

294/A Ampara Road Irakkamam
Ampara
32450

Alerts

Be the first to know and let us send you an email when Today Ceylon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today Ceylon:

Share