Today Ceylon

Today Ceylon வாய்மைக்கும் நேர்மைக்குமான பிரதிபலிப்பு

🛑 #காத்தான்குடியில்  #இடம்பெற்ற  #விபத்தில்  #17  #வயது  #சிறுவன்   #உயிரிழப்புகாத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகா...
04/07/2025

🛑 #காத்தான்குடியில் #இடம்பெற்ற #விபத்தில் #17 #வயது #சிறுவன் #உயிரிழப்பு

காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் காத்தான்குடியை சேர்ந்த 17 வயதான முஹம்மட் (17) என்ற சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த சிறுவன் செலுத்திச் சென்ற மோடார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுக்கின்றனர்

 #மாமனாரை_திருமணம்  #செய்ய_கணவனை_கொலை  #செய்த_மனைவிஇந்தியாவின் பீகார் அவுரங்காபாத் பகுதியில் 55 வயது மாமனாரை திருமணம் செ...
04/07/2025

#மாமனாரை_திருமணம்
#செய்ய_கணவனை_கொலை
#செய்த_மனைவி

இந்தியாவின் பீகார் அவுரங்காபாத் பகுதியில் 55 வயது மாமனாரை திருமணம் செய்ய 20 வயது இளம்பெண்ணொகுவர் தனது கணவனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 வயதுடைய கணவரே இக்கொலை சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 45 நாட்களே ஆகிறது.

மாமனாகும், குறித்த இளம் பெண்ணும் சேர்ந்து கூலிப்படையை ஏற்பாடு செய்து கணவனை கொலை செய்துள்ளனர்.

தகவல் அறிந்த பொலிஸார் குறித்த பெண்ணையும் மற்றும் கொலை செய்த 02 பேரையும் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள மாமனாரை தேடி வருகின்றனர்.

மேலும் குறித்த விசாரணையில், திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரும் தகாத உறவில் இருந்ததோடு திருமணம் செய்து கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், பெண்ணின் பெற்றோர் அதனை விரும்பாமல் கட்டாயப்படுத்தி 02 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.

இதையடுத்து, தனது கணவனை கொன்று விட்டு மீண்டும் தனது மாமாவுடன் சேர்ந்து வாழ்வதற்கு பெண் முடிவு செய்துள்ளார்.

இதன்படி, தனது தங்கை வீட்டிற்குச் சென்று விட்டு ரயிலில் பயணித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த கணவர், நவிநகர் ரயில் நிலையத்தினை வந்தடைந்துள்ளார். அதன் பின்னர், மனைவியை தொடர்பு கொண்டு தன்னை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு மோட்டார் சைக்கிளில் யாரையேனும் அனுப்பும்படி கேட்டுள்ளார்.

பின்னர் வீட்டை நோக்கிப் புறப்பட்ட கணவரை, திடீரென 02 பேர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

03/07/2025

டிசிசி கூட்டங்களின் போது பேசப்படுகின்ற விடயங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதா? பேச்சுக்களில் மட்டுமே செயலில் இதுவரையில் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை இறக்காமம் பிரதேச சபை கௌரவ உறுப்பினர் ரஜா கேள்வி மௌனமான சக உறுப்பினர்கள்

தவிசாளர் முஸ்மீ அவர்களினால்  அதிரடியாக பல வேலை திட்டங்கள் ஆரம்பம்-------------------------------------------------------...
03/07/2025

தவிசாளர் முஸ்மீ அவர்களினால் அதிரடியாக பல வேலை திட்டங்கள் ஆரம்பம்
------------------------------------------------------------
இறக்காமம் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் முஸ்மீ அவர்களினால் அதிரடியாக பல வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கௌரவ பிரதேச சபை உறுப்பினர் மர்ஷூக் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இறக்காமம் 03ம் பிரிவு மக்களின் தேவைகளை அவர்களுடைய இடங்களுக்குச் சென்று (2025.07.03) பார்வையிட்டதோடு அத்தேவைகளை நிவர்த்தி செய்து தருவதாக வாக்களித்தார்.

A. றமீஸ் சதாம்

 #லொறி - டிப்பர் விபத்து;  #லொறி  #சாரதிக்கு காயம்! - ரிதிதென்னையில் சம்பவம்லொறியும் டிப்பரும் நேருக்குநேர் மோதி விபத்து...
03/07/2025

#லொறி - டிப்பர் விபத்து; #லொறி #சாரதிக்கு காயம்! - ரிதிதென்னையில் சம்பவம்

லொறியும் டிப்பரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (3) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதி பஸ் டிப்போவுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து வந்த லொறியுடன் எதிரே வந்த டிப்பர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், லொறி சாரதி காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், டிப்பரை செலுத்தி வந்த சாரதி விபத்து நடந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 #இலங்கையில் பேஸ்புக் பயனர்களுக்கு பொலிஸாரின் கடும் எச்சரிக்கை   #முகநூல் பக்கத்தில் புண்படுத்தும் அல்லது தவறான மொழி பிர...
03/07/2025

#இலங்கையில் பேஸ்புக் பயனர்களுக்கு பொலிஸாரின் கடும் எச்சரிக்கை



#முகநூல் பக்கத்தில் புண்படுத்தும் அல்லது தவறான மொழி பிரயோகங்களை பயன்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

#பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை கவனத்தில் கொண்டு, இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் செயல்படுத்துவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

#கருத்துகள் மரியாதைக்குரிய மற்றும் பொருத்தமான முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

#கொச்சை வார்த்தைகளைப் பயன்படுத்துவதால் உங்களின் குணங்கள் மட்டுமே சேதப்படுத்தும என்பதைச் சுட்டிக்காட்டிய பொலிஸார், எதிர்காலத்தில் அத்தகைய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

#எனவே, இலங்கை பொலிஸாரின் அதிகார பூர்வ முகநூல் பக்கத்தில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள கண்ணியமான மொழியைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

 #ஊடகவியலாளர்_மப்ரூக்_மீதான  #தாக்குதலை_ஸ்ரீலங்கா_முஸ்லிம் #மீடியா_போரம்_கண்டிக்கிறது சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா மு...
03/07/2025

#ஊடகவியலாளர்_மப்ரூக்_மீதான #தாக்குதலை_ஸ்ரீலங்கா_முஸ்லிம்
#மீடியா_போரம்_கண்டிக்கிறது

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினருமான யூ.எல். மப்ரூக் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது. மப்ரூக், ஜூலை 2ஆம் திகதி புதன்கிழமை இரவு அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதியினால்.

“என்னைப் பற்றி எப்படி கதை எழுதுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது, மேலும் இது குறித்து போலீஸ் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஊடகவியலாளர்களின் பணிக்கு நேரடியான அச்சுறுத்தலாக இருப்பதுடன் ஊடக சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஊடகவியலாளர் மப்ரூக் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

எனவே இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஊடகவியலாளர் மன்றம் கேட்டுக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  உங்களுடைய இல்லத்தில் உள்ள Electrical_FRIDGE_AC_Washing_Machine பழுதடைந்துள்ளதா உடனடியாக திருத்த வேலையை மேற்கொள்வது எவ்...
02/07/2025




உங்களுடைய இல்லத்தில் உள்ள Electrical_FRIDGE_AC_Washing_Machine பழுதடைந்துள்ளதா உடனடியாக திருத்த வேலையை மேற்கொள்வது எவ்வாறு என்று சிந்திக்கின்றீர்களா கவலை இனி வேண்டாம்

பழுது பார்ப்புத்துறையில் நன்கு அனுப்பவும் வாய்ந்தவர்களால் உங்களது இல்லத்துக்கே வருகை தந்து உடனடியாக குறைந்த விலையில் அனைத்து திருத்த வேலைகளையும் செய்து தருகின்றார்கள். நிறுவனத்தினர்
இப்போதே கீழ்காணும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்

Do you need your washing machine, fridge, AC repaired? Don't worry, we will now come to your home and take care of it.

(A. றமீஸ் சதாம்)இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம...
02/07/2025

(A. றமீஸ் சதாம்)

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம். எஸ் .எம் .ரஸ்ஸான் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான மஞ்சுள ரத்நாயக்க தலைமையிலும் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது

இந்நிகழ்வில் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ். உதுமாலெப்பை, இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம் .எல் .முஷ்மி, உதவி தவிசாளர் என்.எம்.ஆசிக் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,உதவி பிரதேச செயலாளர் திருமதி ஏ.கே. ரொஸிந் தாஜ், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே. எல் .ஹம்சார் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள்,சமூக மட்ட தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் இதன் போது பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

 #மீன்_தாக்குதலுக்கு_உள்ளாகி_ஒருவர்_மரணம் ஆழ்கடலில் வைத்து வாழைச்சேனை மீனவனின் உயிரைக்காவு கொண்ட மீன் ஆழ்கடலில் வைத்து ம...
30/06/2025

#மீன்_தாக்குதலுக்கு_உள்ளாகி_ஒருவர்_மரணம்

ஆழ்கடலில் வைத்து வாழைச்சேனை மீனவனின் உயிரைக்காவு கொண்ட மீன்

ஆழ்கடலில் வைத்து மீன் குத்தி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

கடந்த 24.06.2025ம் திகதியன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக படகில் சென்ற மூவர் நேற்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் பட்ட பெரிய மீனைத் தூக்குவதற்கு காலை 10.30 மணியளவில் முயற்சி செய்யும் போது தவறி கடலில் விழுந்தவரை மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் தாக்கி நிலையில் காயத்துடன் படகில் ஏறியவர் தனக்கு மீன் குத்தி விட்டதாகவும் நோவு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்ற இருவரும் அவரை கரைக்கு கொண்டு வரும் நோக்கில் வரும் வழியில் மதியம் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

நேற்றிரவு 11 மணியளவில் இறந்தவரின் உடல் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை வந்தடைந்தது.

மரணமடைந்தவர் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் ரஹ்மானிய ஜும்ஆ பள்ளிவாயல் வீதியைச்சேர்ந்த 47 வயதுடைய மீராலெப்பை சஹாப்தீன் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இம்மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸாரும் மீன்பிடித்துறைமுக கடலோரப்பாதுகாப்புப் படையினரும் நடாத்தி வருகின்றனர்.

பேரூந்து விபத்து - பஸ்ஸில் இருந்த மூவருக்கும் காயம் இன்று (30) அதிகாலை மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்...
30/06/2025

பேரூந்து விபத்து - பஸ்ஸில் இருந்த மூவருக்கும் காயம்

இன்று (30) அதிகாலை மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு மட்டு கல்முனை சாலை வழியாக தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேரூந்து கிரான்குளம் சரஸ்வதி வித்தியாயலயத்திற்கு அருகாமையில் பயணிக்கும் போது வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்து இடம்பெறும் போது பேரூந்தில் பஸ் சாரதியும் உதவியாளர்கள் இருவர் இருந்துள்ள நிலையில், மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

29/06/2025

#காத்தான்குடி பிரதான வீதியில் #பேரிச்சம்பழம் அறுவடை 29.05.2025 இன்று இடம்பெற்ற போது

Address

294/A Ampara Road Irakkamam
Ampara
32450

Alerts

Be the first to know and let us send you an email when Today Ceylon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today Ceylon:

Share