11/10/2025
🔴WARNING 🔴GRAPHIC 🔴CONTENT
ஆசிரியர் ஒருவரின் #கொடூர செயல்!
புத்தளம் #மேர்சி லங்கா கல்லூரியில் சம்பவம்!
அநாதை சிறார்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்திலும், இலவசமாகவும் கல்வியை வழங்கிவரும் #புத்தளம் #மதுரங்குளி #மேர்சி லங்கா நிறுவனத்தின் கல்லூரியில் #தந்தை இல்லாத மாணவர் ஒருவருக்கு #புத்தளம் பகுதியை சேர்ந்த ஆசிரியரால் மேற்கொள்ளப்பட்ட #வன்மமே இதுவாகும்.
இந்த சம்பவம் மூடிமறைக்கப்பட்ட நிலையில் நேற்றிரவுதான் #உறவினர்களுக்கு தெரிய வந்ததாக குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் இன்றும், நேற்று பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு குறித்த ஆசிரியரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
எவ்வித #தவறும் செய்யாமல், ”வேறொரு மாணவனுக்கு குறித்த ஆசிரியர் கொடுத்த தண்டனையை பார்த்து #சிரித்ததற்காகவே இந்த மாணவனுக்கு இத்தனை கொடூரமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தந்தையை இழந்த, முஹமட் #இஷாரி எனும் 13 வயது இம்மாணவர் #கல்முனை பகுதியை சேர்ந்தவர்.
#பெற்றோரின்றி, வசதியின்றி, #சொந்தபந்த உறவுகளின்றி கல்வி கற்க உதவி தேடிவரும் இதுபோன்ற #அநாதை மாணவர்களுக்கு #மிருக குணம் கொண்ட இதுபோன்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது குறித்த கல்லூரி மீதான #நம்பிக்கையை வீணாக்கிவிடுவதுடன், கல்லூரிக்காக வாரி வழங்கும் #உள்நாட்டு, #வெளிநாட்டு #உதவிகளையும் இல்லாது செய்து விடுமென்பதை கல்லூரி #நிர்வாகம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
எனவே வெறுமனே #சாட்டுப்போக்கு சொல்லி கல்லூரிகளின் பெயரை மாத்திரம் காப்பாற்றிக்கொள்வதற்காக #குறித்த ஆசிரியரை #பதவிநீக்கம் செய்வதோடு நின்று விடாமால், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மீதான துஷ்பிரயோகத்தின் அடிப்படையில் இதுபோன்ற #வன்மம் கொண்டோரை #வருடக்கணக்கில் அடைக்கும் #சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதையும் சமூகம் சார்பாக வேண்டுகோளாக விடுக்கின்றோம்.
மேற்படி மாணவன் மீதான தாக்குதலுக்கு எதிராக #மனித உரிமை ஆர்வலர்கள், சமூகநலன் விரும்பிகள் மற்றும் #சட்டவல்லுனர்கள் உட்பட பிராந்திய பாராளுமன்ற உறுப்பினர்களும் கைகொடுத்துதவுமாறு சமூகம் சார்பாக வேண்டி நிற்கின்றோம்.
copy past to Almashoora Latest News