Netrikkan media

Netrikkan media “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”
(2)

26/07/2026

எங்கள் மட்டக்களப்பின் அடையாளச் சுவைவில் இதுவும் ஒன்று.
#மட்டக்களப்பு

26/07/2026
26/07/2026

துருக்கியின் சில பகுதிகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

26/07/2026

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த பேரூந்து மட்டு #தன்னாமுனையில் விபத்துக்குள்ளானது.

இன்று (26) அதிகாலை கொழும்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த Super Line அதிசொகுசுப் பேருந்து தன்னாமுனை பகுதியில் வைத்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல்  3 மணிக்கு மூடப்படும்!  இதுவரை 40 ஆயிரம் பேர் பயணம்!
23/07/2026

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும்!
இதுவரை 40 ஆயிரம் பேர் பயணம்!

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலும், மாத்தறையிலிருந்து கல்முனை வரையிலும் புகையிரதப் பாதையை விஸ்தரிப்பது தொடர்பில் ...
23/07/2026

மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரையிலும், மாத்தறையிலிருந்து கல்முனை வரையிலும் புகையிரதப் பாதையை விஸ்தரிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை சமர்ப்பித்துள்ள விசேட தனிநபர் பிரேரணை, நாளை வெள்ளிக்கிழமை (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் புகையிரதப் பாதை விஸ்தரிப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் போக்குவரத்து ரீதியாகப் பெரும் நன்மைகளைப் பெறுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரை அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரையிலான ரயில் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது அம்பாறை மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள இந்த முக்கிய விவாதத்தின் மூலம், கிழக்கு மற்றும் ஊவா மாகாண மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குக் காத்திரமான தீர்வொன்று கிட்டுமெனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

23/07/2026

FBC இரத்தப் பரிசோதனைக்கு 400 ரூபாய்க்குப் பதிலாக 550 ரூபாய் அறவிட்ட யாழ். தனியார் ஆய்வுகூடத்திற்கு யாழ்ப்பாண நீதிமன்றம் ...
23/07/2026

FBC இரத்தப் பரிசோதனைக்கு 400 ரூபாய்க்குப் பதிலாக 550 ரூபாய் அறவிட்ட யாழ். தனியார் ஆய்வுகூடத்திற்கு யாழ்ப்பாண நீதிமன்றம் 30 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.!

இலங்கையில் பல்வேறு பெருந்தோட்ட மற்றும் விவசாயத் திட்டங்களில் அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி திரட்டும் நடவட...
23/07/2026

இலங்கையில் பல்வேறு பெருந்தோட்ட மற்றும் விவசாயத் திட்டங்களில் அதிக லாபம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி திரட்டும் நடவடிக்கைகள் முற்றிலும் சட்டவிரோதமானவை என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். இவ்வாறான எந்தவொரு நிறுவனத்திற்கும் மத்திய வங்கியின் அங்கீகாரமோ அனுமதியோ வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், வைப்புத்தொகைப் பெற நிதி நிறுவனமாகப் பதிவு செய்வது கட்டாயமாகும் என்றார். எனவே, பொதுமக்கள் இத்தகைய அபாயகரமான திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறும், ஏற்கனவே பணத்தைப் போட்டவர்கள் அதனை உடனடியாக மீளப்பெறுமாறும், தடைகள் ஏற்பட்டால் பொலிஸாரிடமோ அல்லது மத்திய வங்கியிலோ புகார் அளிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Netrikkan media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netrikkan media:

Shortcuts

Share

Category