Netrikkan media

Netrikkan media “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”

05/08/2025

ஊர்வலமாக செல்லும் போது குழப்பமடைந்து அருகில் நின்றவரை தாக்கிய யானைதெவிநுவர உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு கோயிலின் மூன்றாவது வரிசை ஊர்வலத்தில் பயணித்த "பானுகா" என்ற யானை நேற்று (04) இரவு கடுமையான குழப்பத்தை ஏற்படுத்தியது.யானையைத் தாக்கியதில் காயமடைந்த ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக #மாத்தறை மத்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

04/08/2025

தனியார் பேரூந்தில் கொண்டுவரப்பட்ட 500KGற்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி -வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அனுமதியின்றி தனியார் பேரூந்தில் கொண்டுவரப்பட்டு முச்சக்கரவண்டியில் ஏற்ற முற்பட்ட 500KGவிற்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி மாநகர சபையினால் மீட்கப்பட்டது.

04/08/2025

இவர்களா கல்வியை சீர் திருத்தப்போகிறார்கள்?வடக்கின் கல்வித்திட்டமிடல் தொடர்பான பிரதமர் ஹரிணியின் கூட்டத்தில் நித்திரை கொண்ட கல்வி மான்கள். காணொளி- சமூக வலைத்தளம்

நுவரெலியா சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தின் அசோகவன அனுஸ்ரீ தியான மண்டபம் நேற்று(3) தியான மண்டபம் உத்தியோகபூர்வமாக திறந்து ...
04/08/2025

நுவரெலியா சீதா எலிய சீதை அம்மன் ஆலயத்தின் அசோகவன அனுஸ்ரீ தியான மண்டபம் நேற்று(3) தியான மண்டபம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து ஆலய நிர்வாக சபையினருக்கு கையளிக்கப்பட்டது.

இதில் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (4) இடம்பெற்றது.
04/08/2025

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (4) இடம்பெற்றது.

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை  விசாரனைகள் - சர்வதேசமயமாகப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்.முழுமை பெறாமலிருக்க...
04/08/2025

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் - சர்வதேசமயமாகப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்.

முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டுமென காத்தான்குடியில் நேற்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி ஹுஸைனியா பள்ளிவாயலிலும், மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் நடந்த படுகொலைச்சம்பவங்களில் ஷஹீதாக்கப்பட்ட 103 ஷுஹதாக்கள் நினைவாக இன்று துஆப்பிரார்த்தனை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலாமா சபை மற்றும் ஊர் ஜமாஅதார்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.

அத்துயர நினைவுகளை மீட்டிக்கொள்வதற்கும் ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இது வாய்த்ததையிட்டு பெருமகிழ்வுறுகிறோம்.

இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்களின் படிப்பினைகளை சரிவர உணர்ந்து இனங்களுக்கிடையிலான உறவை மீளக்கட்டியெழுப்புவதில் எமது கட்சியும், கட்சித்தொண்டர்களும் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும்.

அத்திடசங்கர்ப்பத்தை நாம் இந்த ஷுஹதாக்கள் நினைவு நாளில் உறுதி பூணுவது மாத்திரமல்லாமல், இத்துன்பியல் சம்பவங்கள் குறித்த வரலாற்றையும் சரிவர தொடர்ந்தும் மனதிலிருத்தி முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும் எனத்தெரிவித்தார்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

இன்றைய (4) தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகள் செம்மணி புதைகுழி பகுதியை பார்வையிட்டனர்.
04/08/2025

இன்றைய (4) தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிரதிநிதிகள் செம்மணி புதைகுழி பகுதியை பார்வையிட்டனர்.

நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல்துறை சிறப்புப் ப...
04/08/2025

நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறும் குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காக காவல்துறை சிறப்புப் படையின் 15 குழுக்கள் செயல்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை குற்றக்குழுக்கள் 75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 40 பேர் கொல்லப்பட்டதுடன், 43 பேர் காயமடைந்தனர்.

நேற்றும் மாத்தறை பகுதியில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் மீன் வர்த்தகர் ஒருவர் காயமடைந்தார்.

இந்தநிலையிலேயே, நாட்டில் நிகழும் குற்றங்களைத் தடுக்க ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது ...
04/08/2025

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது செய்திகள் குறிப்பிடுகின்றன.

கஞ்சா கடத்திய குற்றத்துக்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

அத்துடன் ஒரு சவுதி குடிமகனுக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்துக்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து சவுதி அரேபியாவில் 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர்.

சவுதியில் 2022 ஆம் ஆண்டில் 19 பேரும், 2023 ஆம் ஆண்டில் 2 பேரும், 2024 ஆம் ஆண்டில் 117 பேரும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு 338 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என செய்திகள் குறிப்பிடுகின்றன.

பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்கும் அனைத்து பிள்ளைகளினதும் பாதுகாப்பு, நலன் பேணல் மற்றும் கற்றல் வசதிகள் குறித்து பல்கலைக...
04/08/2025

பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசிக்கும் அனைத்து பிள்ளைகளினதும் பாதுகாப்பு, நலன் பேணல் மற்றும் கற்றல் வசதிகள் குறித்து பல்கலைக்கழகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாணவர்களுடன் ஆகஸ்ட் 3 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது

செம்மணியில் மேலும் நான்கு எலும்புகூடுகள்!செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் இன்று(3) மேலும் நான்கு மனித எலும்புக்கூட்டுகள் ...
03/08/2025

செம்மணியில் மேலும் நான்கு எலும்புகூடுகள்!

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் இன்று(3) மேலும் நான்கு மனித எலும்புக்கூட்டுகள் கண்டறியப்பட்டன.

இதனுடன் மொத்தமாக 130 எலும்புக்கூட்டுகள் கண்டுபிடிக்க பட்டுள்ளது.

அத்தோடு இதில் 120 எலும்புக்கூட்டுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

03/08/2025

சீமான் போராட்டம்.
#சீமான்

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Netrikkan media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netrikkan media:

Share

Category