Netrikkan media

Netrikkan media “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”
(1)

எமது பொறுமைக்கும் எல்லையுண்டு. எமது தொப்புள்கொடி மக்கள் வீதிக்கிறங்கி போராட முன்னர் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை உடன் ந...
28/05/2026

எமது பொறுமைக்கும் எல்லையுண்டு. எமது தொப்புள்கொடி மக்கள் வீதிக்கிறங்கி போராட முன்னர் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும்.

வடிவேல் சுரேஸ் ஆவேசம்.

கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள...
28/05/2026

கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சுகாதாரத் திணைக்களம் இது தொடர்பான இலங்கை தேசிய புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளை வெளியிட்டுள்ளது. குறித்த தரவுகளின் பிரகாரம், 2022 ஆம் ஆண்டில் நாட்டில் 35,855 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..

இந்தத் தரவுகளின்படி, சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 99 புதிய புற்றுநோயாளிகள் பதிவாகின்றனர். அதன் காரணமாக இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளமை தெரிய வந்துள்ளது.

Sri Lankaவில் கடந்த 20 ஆண்டுகளில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் பதிவேட்டுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி, நாடு முழுவதும் 35,855 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த புள்ளிவிபரங்களின்படி, தினசரி சராசரியாக சுமார் 99 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர்.

இதனால், நாட்டில் புற்றுநோய் பரவல் வேகமாக உயர்ந்து வருவதுடன், ஆரம்ப கட்ட பரிசோதனைகள், விழிப்புணர்வு மற்றும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியமும் அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அறிய முடிகிறது....
28/05/2026

பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நியமிக்க அரசாங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அறிய முடிகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவிக்கு தகுமியற்றவர்.

எமது இளம் தலைவரான நாமல் ராஜபக்‌ஷவை பிரதமராக நியமிக்க வேண்டும். நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு அதுவாகும்.

திஸ்ஸ குட்டியராச்சி

முந்தைய அரசர்களைப் போல முடிவெடுக்கத் தயார் ! நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் போது, ஆன்மீக மறுமலர்ச்சி மிகவ...
28/05/2026

முந்தைய அரசர்களைப் போல முடிவெடுக்கத் தயார் !
நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் போது, ஆன்மீக மறுமலர்ச்சி மிகவும் அவசியமானது என்றும், புத்த சாசனத்தையும் தர்மத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதில் அனைவருக்கும் இருக்கும் பொறுப்பைச் சரியாகப் புரிந்துகொண்டு, அதற்காக ஒன்றிணைவதே இந்த வெசாக் பூயா தினத்தில் நாம் எடுக்கக்கூடிய சிறந்த தீர்மானம் என்றும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று (27) பிற்பகல் திஹகொட, மிதெInternalவவ புராதன ரஜமகா விகாரையில் நடைபெற்ற அரச வெசாக் விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

யாழ் திருவள்ளுவர் மண்டப விவகாரம்.. ஜேவிபியின் இனவாதம் வெளிவருகிறது.யாழ் மாநகர சபைக்கு சொந்தமான திருவள்ளுவர் கலாச்சார மண்...
28/05/2026

யாழ் திருவள்ளுவர் மண்டப விவகாரம்.. ஜேவிபியின் இனவாதம் வெளிவருகிறது.

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தினை மத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வது ஜேவிபியின் இனவாதத்தின் உண்மை முகம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டினார்.

நேற்று புதன்கிழமை யாழ் காங்கேசன் துறை வீதியில் அமைந்துள்ள அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களுக்காக யாழ் மாநகர சபைக்கு சொந்தமாக இந்திய நிதி உதவியின் கீழ் கட்டப்பட்டதிருவள்ளுவர் பண்பாட்டு மையம் தமிழ் மக்களுக்கு தனியான ஒரு அடையாளம்.

இந்த அடையாளத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக புத்தசாசன அமைச்சையும் இணைத்து மத்தியின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முயல்வது தேசிய மக்கள் சக்தி என்கின்ற போர்வையை போட்டுள்ள ஜேவிபியின் இனவாதத்தின் உண்மை முகம்.

ஏனெனில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான மத மற்றும் கலாச்சார அடையாளங்களை அழிப்பதிலும் திரிவு படுத்துவதிலும் புத்த சாசன அமைச்சு அதன் கீழ் உள்ள தொல்பொருள் திணைக்களத்தின் மூலம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட வருகிறது.

இந்த அனைத்து செயற்பாடுகளுக்கும் தேசிய மக்கள் சக்தி பூரண ஆதரவை வழங்கி வருவதோடு ஜேவிபியின் சித்தாந்தத்தை தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு தொடர்ச்சியாகவே திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை தமிழ் மக்களிடமிருந்து பிரிப்பதற்காக நம்பிக்கை பொறப்பு நிதியம் என்ற போர்வையில் புத்த சாசன அமைச்சை உள்வாங்கி உள்ளது.

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான மாகாண அதிகாரங்களுக்கு கீழ் உள்ள கட்டமைப்பு ஒன்றினை மத்தியின் அதிகார வரம்புக்குள் உள் ஈர்ப்பது எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்களும் தமிழ் தேசிய அரசியல் வாதிகளும் விழிப்பாக இருப்பதுடன் ஜேவிபியின் உண்மை முகம் தொடர்பில் மக்களும் விழிப்படைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

28/05/2026

இப்படியான புதிய கலாச்சாரம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதா?
#𝐁𝐀𝐓𝐓𝐈𝐂𝐀𝐋𝐎𝐀 #நெற்றிக்கன் #மட்டக்களப்பு

நம்ம  #மட்டக்களப்பின் அடையாளங்களில் ஒன்று ❤️இந்த மணிக்கூட்டு கோபுரம் போல, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி பெருமையும் அடையாளமும...
28/05/2026

நம்ம #மட்டக்களப்பின் அடையாளங்களில் ஒன்று ❤️
இந்த மணிக்கூட்டு கோபுரம் போல, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி பெருமையும் அடையாளமும் இருக்கு.

📍 உங்கள் ஊரின் அடையாளம் என்ன?
கோவில் 🛕 | கடற்கரை 🌊 | பாலம் 🌉 | மலை ⛰️ | நினைவுச் சின்னம் 🏛️
கமெண்டில் சொல்லுங்கள் 👇
#நெற்றிக்கன் #𝐁𝐀𝐓𝐓𝐈𝐂𝐀𝐋𝐎𝐀

தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளானார்கள் – அருட் தந்தை ஜீவந்த பீரிஸ் இலங்கையில் தமிழ் மக்கள் மீது  இனவழிப்பு நடவடிக்கைகள்...
27/05/2026

தமிழ் மக்கள் இனவழிப்புக்கு உள்ளானார்கள் – அருட் தந்தை ஜீவந்த பீரிஸ்

இலங்கையில் தமிழ் மக்கள் மீது இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என கத்தோலிக்க அருட்தந்தை ஜீவந்த பிரிஸ் மதெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிங்கள அரசாங்கங்களினால் தமிழ் இனவழிப்பு நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் தாரகி சிவராம் கொலை தொடங்கி தீபச்செல்வனின் நூல்கள் சுங்கத்திணைக்களத்தில் முடக்கப்பட்டமை வரையில் அனைத்தையுமே இனவழிப்பு நடவடிக்கைகளாக கருத வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2 நாள் பயணமாக இன்று டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார் என்...
27/05/2026

2 நாள் பயணமாக இன்று டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#நெற்றிக்கன்

ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா புத்த சாசனத்தையும் பௌத்த தர்மத்தையும் அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்கும் பொறுப...
27/05/2026

ஜனாதிபதியின் பங்கேற்புடன் அரச வெசாக் விழா

புத்த சாசனத்தையும் பௌத்த தர்மத்தையும் அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்ற உறுதி பூணுவோம்

நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தும் போது, மத மறுமலர்ச்சியும் அவசியமானதாகும்.

நாட்டில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மத மறுமலர்ச்சி இன்றியமையாதது எனவும், உன்னத புத்த சாசனத்தையும் தர்மத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்காக அனைவருக்கும் உள்ள பொறுப்புக்களைச் சரியாக இனங்கண்டு, அதற்காகக் கைகோர்ப்பதே இந்த வெசாக் புண்ணிய தினத்தில் நாம் எடுக்கக்கூடிய சிறந்த உறுதிமொழியாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேரர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக தனி “தர்ம நீதிமன்றம்” அமைப்பது குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு பல்வேற...
27/05/2026

தேரர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்காக தனி “தர்ம நீதிமன்றம்” அமைப்பது குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவாதங்களை உருவாக்கியுள்ளது.

ஒரு புறம், இது மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அளிக்கப்படும் பதிலாக பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஏற்கனவே அரசியலமைப்பில் புத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை, புத்த சாசன அமைச்சின் அமைப்பு போன்ற சூழலில், மற்ற மத சமூகங்களின் சமத்துவ உணர்வுக்கு இது எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது .

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடம் நல்லிணக்கம், சமத்துவம் குறித்து பேசும் அரசாங்கம், அதே நேரத்தில் மத அடிப்படையிலான தனிப்பட்ட அமைப்புகளை உருவாக்கும் போது அது குறித்து தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டியதும் அரசாஙகத்தின் கடமையாகும்.

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Netrikkan media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Netrikkan media:

Share

Category