15/08/2025
பாடல்: சக்கரக்கட்டி ராசாத்தி...
படம்: பெற்றால் தான் பிள்ளையா(1966.12.09),
வரிகள்: வாலி
இசை: MS.விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM.சௌந்தரராஜன் & P.சுசீலா
இயக்கம்: கிருஸ்ணன்-பஞ்சு
பாடிக்கொண்டிருப்பவர்கள்: கோவை முரளி & பரீதா
பெற்றால்தான் பிள்ளையா படம் 1921 ஆம் ஆண்டு சார்லி சாப்ளினின் தி கிட் என்ற அமெரிக்கத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இக்கதையை முதலில் சிவாஜி கணேசனிடம் சொன்னார் எழுத்தாளர் ஆரூர்தாஸ், ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை. பின்னர் கதையை அவர் எம்.ஜி.ராமச்சந்திரனிடம் சொல்ல அவர் ஒப்புக்கொண்டார். கிருஷ்ணன்-பஞ்சு (ஆர். கிருஷ்ணன் மற்றும் எஸ்.பஞ்சு) இரட்டையர்கள் படத்தை இயக்கினர்.
இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார். 'நல்ல நல்ல பிள்ளைகளை' பாடல் வரிகளில் சி.என்.அண்ணாதுரையைக் குறிப்பிடுவதாக 'மேடையிலே முழங்கும் அறிஞர் அண்ணாப் போல்' என்ற பாடல் வரிக்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததால்இ அந்தப் பாடல் வரிகளை 'மேடையிலே முழங்கும் திரு வி.க.போல்' என மாற்றியமைக்க வேண்டியதாயிற்று. திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தது, திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.