Batti 1st news

Batti 1st  news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Batti 1st news, Media/News Company, Batticaloa.

28/09/2025

மட்டக்களப்பு கப்பலேந்தி அன்னையின் சிறப்பு மிக்க வருடாந்த பெருவிழா!!

26/09/2025

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நினைவேந்தல்!

கிழக்கு மண்ணில் மட்டு பாடு மீன்களின் சமர் -2025!(ஆர்.நிரோசன்)12வது தடவையாக இடம்பெறும்  மாபெரும் 20/20 கிரிக்கெட் சுற்றுப...
21/09/2025

கிழக்கு மண்ணில் மட்டு பாடு மீன்களின் சமர் -2025!

(ஆர்.நிரோசன்)
12வது தடவையாக இடம்பெறும் மாபெரும் 20/20 கிரிக்கெட் சுற்றுபோட்டி ( 20) சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் அருட்தந்தை கிளமண்ட் அண்ணதாஸ் அவர்களின் ஆசீர்வாத செய்திகளுடன் மட்டக்களப்பு வெப்பர் மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை மற்றும் வின்சென்ட் தேசிய மகளிர் பாடசாலை மாணவிகளுக்கு இடையிலான 20/20 ஓவர்கள் கொண்ட இச் சுற்றுப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற
வின்சன்ட் அணியினர் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து முதலில் துடுப்பெடுத்தாடிய வின்சென்ட் மகளிர் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிசிலியா பாடசாலை அணியினர் 18-வது ஓவர் முடிவில் 09 விக்கட்டுகளை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று 2025ஆம் ஆண்டிற்கான வெற்றி கிண்ணத்தை சுபிகரித்தனர்.

அதில் அமோரிட்டா அகஸ்டின் 05 சிக்ஸர்கள் அடங்களாக 28 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்று போட்டியின் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை ஆக தெரிவு செய்யப்பட்டார்.

இப் போட்டியை காண
பாடசாலைகளின் பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .

புலமைப் பரிசில் பரீட்சையில் இம்முறை வாகரை பிரதேசசெயலாளர் பிரிவில் 07 மாணவர்கள் சித்தி! (ஆர்.நிரோசன்)கல்குடாக்கல்வி வலயத்...
08/09/2025

புலமைப் பரிசில் பரீட்சையில் இம்முறை வாகரை பிரதேசசெயலாளர் பிரிவில் 07 மாணவர்கள் சித்தி!

(ஆர்.நிரோசன்)
கல்குடாக்கல்வி வலயத்தின்,
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் அம்மன்தனாவெளி,
காட்டுமுறிவு , கதிரவெளி, காயாங்கேணி, கிரிமிச்சை, மாங்கேணி, மருதங்கேணிக்குளம்,
பால்ச்சேனை, பனிச்சங்கேணி,
புனானை, ஊரியங்கட்டு,
வட்டவான்,வாகரை
ஆகிய இடங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் அதிகமாக உள்ளனர். இப்பிரதேசங்களில் சுமார்
20 பாடசாலைகளுக்கு மேல் உள்ளன. அதில் இம்முறை
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மொத்தமாக ஏழு மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.

மட்/ககு/பால்சேனை தமிழ் மகா வித்தியாலயம்
ஸ்ரீகாந்த்ராஜா ஜேஜிதன் (147 புள்ளிகள்) ,
தேவசின்னம் தெபோரா ( 133 புள்ளிகள்),
சசிகுமார் பர்ணிஸ்கா (135 புள்ளிகள் )

மட்/ககு/வம்மிவட்டவான் வித்யாலயம்

சத்தியசீலன் சிதுஸ்ரிக்கா (135 புள்ளிகள்)
பரமசிவன் துஜன் (134 புள்ளிகள்)

மட்/ககு/மாங்கேணி ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

சதீஷ் அஜய் (145புள்ளிகள் )

மட்/ககு/கண்டலடி பாடசாலை
திலீபன் ஷக்சபி (140புள்ளிகள்)

அதிபர்கள்
சிவலிங்கம் இந்திரன், த. சதானந்தகுமார் , ரி.உதயகுமார், சண்முகம் கருணைராஜா என்பவரின் மேற்பார்வையின் கீழ்
நா.தயாகரன்,
சந்திரன் நிலாந்தினி, இராஜேந்திரன் தஸ்வினி ,ஏ.சிவாகரன், பி.நிஷாலினி , வர்ணகுலசிங்கம் வேதாகரன் ஆகிய ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு கற்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இம்முறை மொத்தமாக
ஏழு மாணவர்கள் சித்தி அடைந்து பிரதேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பாடசாலை வரலாற்றில் 15 வருடங்களின் பின்னர் ஒரு  மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில்  சித்தி!கல்குடா கல்வி வலயத்தின், மாங்கே...
08/09/2025

பாடசாலை வரலாற்றில் 15 வருடங்களின் பின்னர் ஒரு மாணவன் புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தி!

கல்குடா கல்வி வலயத்தின், மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைச் சேர்ந்த மாணவன் சதீஷ் அஜய் வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 145 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் தமது கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில்
15 வருடங்களின் பின்னர் இந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்க விடயம்.

பாடசாலையின் அதிபர் த.சதானந்தகுமார் அவர்களால் மாணவனுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள் இராஜேந்திரன் தஸ்வினி மற்றும் ஏ.சிவாகரன்,பி. நிஷாலினி ஆகியோர்
கௌரவிக்கப்பட்டனர்.

மற்றுமொரு விபத்தில்ஐவர் வைத்தியசாலையில்!இன்று திங்கட்கிழமை (09) காலை 11.00 மணியளவில் நாவலடியை அண்மித்த  பிரதான வீதியில் ...
08/09/2025

மற்றுமொரு விபத்தில்ஐவர் வைத்தியசாலையில்!

இன்று திங்கட்கிழமை (09) காலை 11.00 மணியளவில் நாவலடியை அண்மித்த பிரதான வீதியில் திருகோணமலை இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த கனரக வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதி வீதியை விட்டு அகன்று சென்றது.

மாங்கேனியிலிருந்து குடும்பமாக பயணித்த நால்வரில் 30 வயது மதிக்கத்தக்க தாயார் மற்றும் கைக்குழந்தை வாழைச்சேனை போதன வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

கனரக வாகனத்தில் பயணித்த வாகனத்தின் உதவியாளர் ,முச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற சாரதி உட்பட சிறுவர் ஒருவர் காயங்களுடன் வாழைச்சேனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ஆர்.நிரோசன்)

தனது கிராமத்திற்கும் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவி! கல்குடாக்கல்வி வலயத்தின், மட்/ககு/கண்டலடி  பாடசாலையைச் சேர்ந்த மா...
08/09/2025

தனது கிராமத்திற்கும் பாடசாலைக்கு பெருமை
சேர்த்த மாணவி!

கல்குடாக்கல்வி வலயத்தின், மட்/ககு/கண்டலடி பாடசாலையைச் சேர்ந்த மாணவி திலீபன் ஷக்சபி
வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 140 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

பாடசாலையின் அதிபர் சண்முகம் கருணைராஜா மேற்பார்வையில்
மாணவிக்கு கற்பித்த ஆசிரியர் வர்ணகுலசிங்கம் வேதாகரன்(அபிவிருத்தி உத்தியோகஸ்தர்) இணைந்து மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் முதலிடம் ..மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா - வெளிய...
04/09/2025

கிழக்கு மாகாணத்தில் முதலிடம் ..

மேற்கு கல்வி வலயத்தின், நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலய மாணவி பிறைசூடி அபிரிஜா - வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 187 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முதலிடத்தில் சித்தியடைந்துள்ளார்.

மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேசத்திலுள்ள விளாவட்டவான், செறுவாமுனை கிராமத்தில் வசிக்கும் பிறைசூடி (அபிவிருந்தா உத்தியோகத்தர் ) கிரிஜா ஆகியோரின் புதல்வியாவார்.

ஆங்கிலத்தின் எதிரொலியுடன் மூளையின் அழகு தொடர்பான கண்காட்சி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் இடம் :மட்டக்களப்பு சிசிலியா...
30/08/2025

ஆங்கிலத்தின் எதிரொலியுடன் மூளையின் அழகு தொடர்பான கண்காட்சி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

இடம் :மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை
திகதி ( 30.08.2025)
நேரம் : காலை 8.30 தொடக்கம்
4.30 வரை

உள்ளடக்கம்

மனித நூலகம் ,குரல் அறை
வாசிப்பு தீவு ,கிறுக்கல் இடம்
விளையாட்டு அண்டம் ,
குரல் மண்டலம்,உலக பாரம்பரியம்
வினைச்சொல் கருவூலம் ,
நகைச்சுவை மற்றும் சொற்கள்
விளையாட்டு மையம்,
சிறு ஆய்வாளர் குடில்,
மாயாஜால கண்ணாடிகள்,
மணல் கைவினை மூலை,
நடன தளம் கைவினை கூடு ,
மகிழ்ச்சி இடம்,
இசை புல்வெளி ,
பொம்மலாட்டம் ,
கதை நிலம் ,
சிறு நாடக அரங்கம்,
புத்திசாலி குடும்பம் ,
பிரதிபலிப்பு ,
இன்று பள்ளி இல்லை,
காணாமல் போன எண்
தாமதமான சண்டை ,
என் கடைசி புன்னகை வரை
குழந்தை மட்டும் ,
சிரிப்பின் விலை,
அந்த கடைசி அழைப்பு
ரகசிய கடவுச்சீட்டு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் (10) திகதி நாடளாவிய ரீதியில் காலை 9.15 இடம்பெறும் நிலையில், மட்டக்களப்பு ...
10/08/2025

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் (10) திகதி நாடளாவிய ரீதியில் காலை 9.15 இடம்பெறும் நிலையில், மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்குச் தோற்றும் காட்சிகளை அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

Address

Batticaloa
.

Alerts

Be the first to know and let us send you an email when Batti 1st news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Batti 1st news:

Share