Qtv Network

Qtv Network மாற்றத்தை நோக்கிய பயணம்

🔴BREAKING NEWSநியூயோர்க் மாநகர  #மேயர் தேர்தலில்  #ஸஹ்ரான் மம்தானி அமோக வெற்றி பெற்றுள்ளார்.அமெரிக்க அதிபர்  #டொனால்ட் ர...
05/11/2025

🔴BREAKING NEWS
நியூயோர்க் மாநகர #மேயர் தேர்தலில் #ஸஹ்ரான் மம்தானி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் #டொனால்ட் ரம்ப் மற்றும் கோடீஸ்வரர் #எலொன் மஸ்க்கின் பாரிய #எதிர்ப்பலை மற்றும் #அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் #நியூயோர்க் மக்களின் #பேராதரவுடன் #ஸஹ்ரான் மம்தானி அமோக வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

!

05.11.2025

திறமையான,துடிப்பான, லஞ்சமற்ற ஒரு தவிசாளர்.Mohammed Fairoos கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச...
01/11/2025

திறமையான,துடிப்பான, லஞ்சமற்ற ஒரு தவிசாளர்.
Mohammed Fairoos

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.எம்.பைரூஸ் தனது உறுப்புரிமையை இழந்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழு இதனை நேற்று 31.10.2025ம் வெள்ளிக்கிழமை அதி விசேட வர்த்தமானி மூலம் வெளியீட்டு உறுதிப்படுத்தியது.

(ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த தகவல்)​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம...
28/10/2025

(ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த தகவல்)

​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.

அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.

​உண்மையில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததை அறிந்து உடனடியாக, இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஏமாற்ற முனைந்த 11 பேரையும் பொலிசார் கைது செய்தார்கள்.

​இதனைத்தவிர, கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.

​அரசியல் நோக்கங்களுக்காகச் சில தகவல்கள் தவறாகவும், பிழையாகவும் பரப்பப்படுவதையிட்டு நாம் மிகுந்த வருத்தம் அடைகிறோம்.

04 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விமானங்களை மீண்டும் தொடங்கிய குவைத் ஏர்வேஸின் முதல் விமானம் இன்று (27) காலை கட்டுநாயக...
27/10/2025

04 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விமானங்களை மீண்டும் தொடங்கிய குவைத் ஏர்வேஸின் முதல் விமானம் இன்று (27) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.!

வாழைச்சேனை வைத்தியசாலையும் யூடியூப்பர் கைதும்.ஓரிரு தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை வைத்தியசாலையில் இடம் பெற்ற சம்பவம் த...
21/10/2025

வாழைச்சேனை வைத்தியசாலையும் யூடியூப்பர் கைதும்.

ஓரிரு தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை வைத்தியசாலையில் இடம் பெற்ற சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாகியமை யாவரும் அறிந்ததே.

அதன் தொடர்ச்சியாக பெண் வைத்தியரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்ட குறித்த யூடியூப்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு ஆதரவாகவும் வைத்தியசாலை மற்றும் பெண் வைத்தியருக்கு எதிராகவும் பலர் சமூக வலைத்தள பதிவுகளை இட்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.

வைத்தியசாலைகளிலும், வைத்தியத்துறை சார்ந்தோர்களிடத்திலும் பல்வேறு விமர்சனங்கள் இருப்பினும் குறித்த விடயத்தில் அந்த வைத்தியரின் தவறு என்ன என்பது பலமுறை குறித்த காணொளி பார்த்தும் எனக்கு புரியவில்லை.

குறித்த காணொளி YouTube content ற்க்காக எடுக்கப்பட்டுள்ளமையும், வழமையான காணொளி வைரலை எதிர்பார்த்துமே குறித்த காணொளி எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தெட்டத் தெளிவாக தெரிகின்றது.

இதற்கு முதலும் நான் ஓரிரு பதிவுகளை பகிர்ந்திருக்கின்றேன். தன்னுடைய தவறை மறைக்க காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து எதிரில் உள்ளவர்களை தவறாக சித்தரிக்கும் செயற்பாடுகள் பற்றியது.

அதே போல இதுவும் சற்றே வித்தியாசமாய் எதுவாயினும், எங்காயினும் காணொளியெடுப்பதும் பகிர்வதும் அதனூடான வைரலில் பணம் காண்பது இவைகளும் தடுக்கவும் தவிர்க்கவும் பட வேண்டியவையே.

உதாரணமாக போக்குவரத்து பொலிஸார் வாகன சாரதிகளின் போக்கு வரத்து விதிமீறல் தவறை மறைக்க அவர்களிடம் இலஞ்சத்தை பெற்றுக் கொள்வது என்பது நம்மூரில் சாதாரணமான விடயம்.

ஆனால் சில நேர்மையான அதிகாரிகள் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நேர்மையாக செய்ய விளையும் போதும், போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு தண்டப்பண அறிவிட முயற்சிக்கும் போதும் தன் மீது தவறை வைத்துக் கொண்டே தனது தொலைபேசியில் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதும் ஆங்காங்கே நடக்கும்.

அதை பார்க்கும் பெரும்பாலான அடிப்படை அறிவற்ற சமூக வலைத்தள கூட்டமும் முழுமையான சம்பவத்தை அறியாமல் போக்குவரத்து பொலிஸார் என்றாலே இலஞ்சம் வாங்குபவன் தான் என்பதை மனதினில் நிறுத்திக்கொண்டு கேவலமாக வசைபாடி பகிர்வதும், பின்னூட்டமிடுவதுமே வாடிக்கை.

அதேபோல ஒரு கூட்டம் இந்த சம்பவத்திலும் தொடர்கின்றது.

குறித்த யூடியூப்பர் தனது பகிர்வு YouTube Thumbnail ல் பெண் வைத்தியரின் அடாவடி என குறிப்பிட்டுள்ளார் அதை பகிரும் மேற்குறித்த அடிப்படை அறிவற்ற சமூக வலைத்தள கூட்டமும் அதே பாணியில் பதிவிடுகின்றனர், பகிர்கின்றனர்.

சில வைத்தியர்களினாலும், வைத்தியத்துறையினாலும் நடக்கும் அலட்சியங்களையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் கேள்வி கேட்க வேண்டியதும், அதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள பொதுமக்களை விழிப்புணர்வு வழங்குவதும் சமூகவலைத்தளத்தை பொதுநல செயற்பாட்டுக்காக பயன்படுத்தும் ஒவ்வொருவரினதும் கடமை அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆனால் அடிப்படை அறிவற்று ஒரு நோயாளியை வைத்தியர் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் அத்துமீறி உள் நுழைந்து சுய விளம்பரத்துக்காகவும் YouTube Content க்காகவும் மக்களை மடைமாற்றும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் இவ்வகை யூடியூப்பர் களின் செயற்பாடுகளையும் அவர்களுக்கு ஆதரவானவர்களையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயமும் நமக்குள்ளது.

வேறு துறைகளில் அலட்சியம் நடந்தால் அதனால் இழப்பது வருமானமோ பணமோ மட்டுமே ஆனால் மருத்துவத்துறையில் அலட்சியம் நடந்தால் அங்கு இழக்கப்படுவது ஒரு உயிர் என்பதை நன்கு உணர்ந்தவர்களாகவே குறித்த சம்பவத்தினை உற்றுநோக்கும் போது இதில் குறித்த வைத்தியரின் தவறு எதுவும் இல்லை என்பது தெளிவாகின்றது.

அவர் ஒரு நோயாளியை பார்வையிடும் போது ஒருவர் காணொளி எடுத்தவாரே உள் நுழைவதும் அதிகாரத்தொனியில் பேசுவதும், வேலையிலிருந்து தூக்குவேன் எனும் பேச்சும் தவறானது.

நடந்த, நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அதை பல முறை ஆராய்ந்து விமர்சனங்களை முன்வைத்தல், சட்டநடவடிக்கைக்கு முயற்சித்தல், நீதி கோரல் போன்றவை ஏற்புடையது.

ஆனால் மருத்துவத்துறையை சேவையாக செய்து கொண்டிருக்கும் ஒரு தரப்பினரை எந்தவித முகாந்திரமுமின்றி அவதூறு பரப்புதல் அல்லது சமூகவலைத்தளத்தின் செல்வாக்கை பயன்படுத்தி மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளை ஊக்குவிக்க முடியாது இது ஏனையோருக்கும் தவறான முன்னுதாரணமாகி விடும்.

குறித்த விசாரணையும் கைதும் கைதின் பின்னரான தண்டனையும் இது போன்ற அடிப்படை அறிவற்ற கூட்டத்திற்கு பாடமாக அமையட்டும்.

#குறிப்பு : குறித்த பெண் வைத்தியர் எனக்கு மாமியோ மச்சாளோ கிடையாது ஆனால் குறித்த வைத்தியரின் சட்ட நடவடிக்கைக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குறித்த விடயத்தில் சரியான சட்ட ஆலோசனையுடன் பின்வாங்காமல் உறுதியாக நில்லுங்கள் குறித்த தண்டனை ஏனையோருக்கு சிறந்த பாடமாகவும், வழிகாட்டுதலாகவும் அமைய உங்களின் இந்த தைரியமான முயற்சி அமையட்டும்.

குறிப்பு: அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகள், அலட்சியங்கள், அநீதிகளை வெளிக் கொண்டு வாருங்கள் தப்பில்லை ஆனால் தவறற்ற விடயத்தை தவறாக சித்தரிக்க முயல்வதுடன் பொதுமக்களையும் தவறாக வழி நடாத்தாதீர்கள்.

நன்றி.
சஜன் செல்லையா.

19/10/2025

BIG BREAKING NEWS
காஸா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் மீண்டும் குண்டு தாக்குதல்!
19.10.2025

16/10/2025

பாகிஸ்தான் தாக்குதலில் தலிபானின் புலனாய்வுத் தலைவர் கொல்லப்பட்டார்

இதற்கு 🏍️🏍️🏍️🏍️🏍️ஒரு முடிவே இல்லையா..??சில நாட்களுக்கு முன் மீராவோடையில் ஒரு தாய் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந...
03/10/2025

இதற்கு 🏍️🏍️🏍️🏍️🏍️
ஒரு முடிவே இல்லையா..??

சில நாட்களுக்கு முன் மீராவோடையில் ஒரு தாய் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தார்.
இன்று மௌத்தாகிவிட்டார்..

அண்மையில் எமது ஓட்டமாவடி பிரதேச சபை சிரேஷ்ட லிகிதர் நௌபர் அவர்கள் மோட்டார் பைக் ஓட்டி இளைஞனால் விபத்தாகி கொல்லப்பட்டார்.
அவருடன் சென்ற YSO ஹனிபா காயமடைந்தார்.

பிரதேச சபைக்கு முன்னால்
கொழும்பு நானா வயோதிபர் நாசிம் அவர்கள் அண்மையில் மோட்டார் பைக் ஓட்டி இளைஞனால் கொல்லப்பட்டார்.

கடந்த வாரம் எமது முன்னாள் அமைச்சர் அமீரலி அவர்களின் சகோதரர் அஜ்வத் அவர்களின் 7 வயது மகன் மோட்டார் பைக் இளைஞனால் விபத்தாக்கப்பட்டு படு காயமடைந்து கொழும்புதேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றார்.

இப்படி தினமும் பல அதிர்ச்சியான செய்திகள் எம்மை வந்து சேருகின்றன.

இந்த தாறு மாறாக மோட்டார் பைக் ஓடும் பிள்ளைகளை பற்றி அவர்களின் பெற்றோர்கள் கவலைப்படுவதுமில்லை.
அவர்களால் மரணிப்பவர்களையோ படுகாயமுற்றவர்களையோ பற்றி சிந்திப்பதுவுமில்லை.

அடிவாங்கி மரணித்தவர்களை காயமடைந்தவர்களை விட்டு விட்டு மோட்டார் சைக்கிளால் அடித்த தமது பிள்ளையை போலீசில் இருந்து காப்பாற்றவே 100 பேர் ஓடுகின்றனர்.

நம்ம ஊர் போக்குவரத்து பொலீசாரும்,
அதிகாரத்தில் உள்ளவர்களும்,, சமூக செயற்பாட்டாளர்களும்
இந்த விபத்துக்களைப்பற்றி அலட்டி கொள்வதே இல்லை.

நமது பிள்ளைகளே நாளுக்கு நாள் விபத்துக்குள்ளாகி கால் கை உடைந்து மரணிக்கினறார்கள்.
அப்பாவி பொது மக்களும் மரணிக்கின்றார்கள்.

இது பற்றி யாரும் சிந்திக்க மாட்டீர்களா?

மோட்டார் சைக்கிள் ரேஸ், போதை பாவனைகளால் நாளுக்கு நாள் நமது இளைஞர்கள் அழிகின்றார்கள்....

இவர்களை வழி காட்ட நம்ம ஊரில் எவருமில்லையா?

பொலீசார் கூட ஏன் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றார்கள்??

ஒன்றுமே புரியவில்லை.

அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிப்பது உட்பட  #டிரம்ப் ஆதரவு காசா ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரே...
27/09/2025

அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவிப்பது உட்பட #டிரம்ப் ஆதரவு காசா ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரேலின் முக்கிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த திட்டத்தில் #காஸா பகுதியில் இருந்து படிப்படியாக திரும்பப் பெறுவதும், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை #விடுவிப்பதும் அடங்கும், உயிருள்ள மற்றும் இறந்த #இஸ்ரேலிய பணயக்கைதிகள் இருவருக்கும் ஈடாக பரிமாற்றம் செய்வதும் அடங்கும்.

அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வேண்டுகோளின் பேரில் ரம்ப் வெளியிட்ட வரைவின் அடிப்படையில் இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் முதலில் #நான்கு நாட்களுக்கும் அதன் பின்னர் நீண்டகால ஒப்பந்தத்திற்கும் இட்டு செல்லுமென தெரிவிக்கப்படுகிறது.
27.09.2025

23/09/2025

காஸாவில் ரட்வான் பகுதியில் ஆக்கிரமிப்பு மீது பலமான தாக்குதல் பலர் உயிரிழப்பு ,சிலர் கைதாகும் வாய்ப்பு.

இடதுபக்க சிறுநீரகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவதாக கூறி வலது பக்க சிறுநீரகத்தையும் சேர்த்து மருத்துவர் அகற்றியதால் ...
23/09/2025

இடதுபக்க சிறுநீரகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவதாக கூறி வலது பக்க சிறுநீரகத்தையும் சேர்த்து மருத்துவர் அகற்றியதால் மூன்று வயது சிறுவன் ஹம்தி பரிதாபமாக உயிரிழந்தது நினைவிருக்கும்

இந்த அறுவை சிகிச்சை 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு லேடி றிஜ்வே சிறுவர் மருத்துவமனையில் இடம் பெற்றது. இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த ஹம்தி ஆறு மாதங்கள் அவஸ்தைப் பட்டு பரிதாபமாக உயிரிழந்தான். ஹம்திக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் உடனடியாக குடும்பத்தோடு வெளிநாடு சென்றுள்ளார்.
ஹம்திக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு எதிராக இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையின் தீர்ப்பு வெளியாகி ஆறு மாதங்கள் கடந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களமோ, சட்ட மாஅதிபர் திணைக்களமோ இது வரை எவ்வித நகர்வுகளையும் மேற்கொள்ளவில்லை.

நீதி மன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை அவசரமாக நடைமுறைப் படுத்துமாறு சட்டமா அதிபர் அலுவலகத்தைக் கோரி இன்று 23.09.2025 கொழும்பு நீதிமன்றின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இதன்போது ஹம்தியின் பெற்றோர் சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு எழுத்துமூல மனுவொன்றையும் கையளித்தனர்.

Azeez Nizaruddeen

23/09/2025

ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டது போல் நெதன்யாகும் தோற்றுப்போவார்-எர்தோகன்

Address

Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when Qtv Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qtv Network:

Share