Minnal24News

Minnal24News விளம்பரங்களுக்கு அழையுங்கள் office+94652227172 Mobile & whatsapp +94762732793

07/07/2025

வணிக தினம் மற்றும் வணிக வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில், வணிக பாட ஆசிரியர் சக்திவடிவேல் பிரதீபன் தலைமையில், வணிகப்பிரிவு மாணவர்களால், வணிக சந்தை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

07/07/2025

கட்டாக்காலி மாடுகளின் இருப்பிடமாக மாறிய வடமராட்சி கிழக்கு பொது மைதானம்!

சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்ததால் தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் தங்கள் வ...
07/07/2025

சந்தையில் தேங்காய் விலை வேகமாக சரிந்ததால் தேங்காய் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் தங்கள் வருமானமும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, தேங்காய் 220 ரூபாவுக்கு விற்கப்பட்டது,

ஆனால் தற்போது, வியாபாரிகள் 100 முதல் 170 ரூபா வரை பல்வேறு விலைகளில் தேங்காய்களை விற்பனை செய்து வருகின்றனர்.

சில வியாபாரிகள் அதிக இலாபத்துடன் தேங்காய்களை விற்பனை செய்வதாகவும்,

அப்போது தேங்காய் விற்பனை குறைந்ததால் வருமான நிலையும் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  அவர் இன்று திங்...
07/07/2025

நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்னவின் மகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று திங்கட்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் மஹேஷி விஜேரத்னவின் மகள் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

07/07/2025

வாகரையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படும், என தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் தெரிவிப்பு

07/07/2025

உயிருக்கு போராடிய நபர் : ஆம்பியூலன்ஸ் அனுப்ப மறுத்து மருதங்கேணி வைத்தியசாலையின் அலட்சியம்!

இரத்தினபுரியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல - தொடன்எல்ல வீதியில் கடந்த புதன்கிழமை   மாலை கழுத்து வெட்டப்...
07/07/2025

இரத்தினபுரியில் குருவிட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெவிபஹல - தொடன்எல்ல வீதியில் கடந்த புதன்கிழமை மாலை கழுத்து வெட்டப்பட்டு யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் குருவிட்ட பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குருவிட்ட, தெவிபஹல - தொடன்எல்ல வீதியில் கடந்த புதன்கிழமை மாலை இனந்தெரியாத நபரொருவர் யுவதி ஒருவரின் கழுத்தை வெட்டி அவரது கழுத்தில் இருந்த தங்க மாலையை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

காயமடைந்த யுவதி இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருவிட்ட - தெவிபஹல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய யுவதி ஆவார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கடந்த வியாழக்கிழமை குருவிட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், யுவதியின் கழுத்தை வெட்டி தங்க மாலையை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர் குறித்த சிறுவன் என தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில்,

சிறுவன் கொலைசெய்யப்பட்ட யுவதியை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ள நிலையில் அதற்கு அந்த யுவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சம்பவத்தன்று யுவதி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் சிறுவன், யுவதியை வழிமறித்து தன்னை காதலிக்குமாறு கோரியுள்ளார்.

ஆனால் யுவதி மீண்டும் மறுப்பு தெரிவித்ததால் சிறுவனுக்கும் யுவதிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது சிறுவன், யுவதியின் கழுத்தை வெட்டி அவரது தங்க மாலையை கொள்ளையிட்டுச் சென்றதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்
07/07/2025

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

தேர்தல் ஆணைக்குழுவின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை முதல் அத்தியாவசி....

07/07/2025

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

Address

143/20A Boundary Road
Batticaloa
30000

Opening Hours

Monday 08:30 - 18:30
Tuesday 08:30 - 18:30
Wednesday 08:30 - 18:30
Thursday 08:30 - 18:30
Friday 08:30 - 18:30
Saturday 08:30 - 18:30
Sunday 08:30 - 17:30

Telephone

+94775917217

Alerts

Be the first to know and let us send you an email when Minnal24News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minnal24News:

Share