The Eagle

The Eagle Daily News

24/06/2025

*⭕IRAN ISRAEL WAR*

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்த நிலையில், சற்றுமுன்னர் ஈரான் அதிகாரபூர்வமாக அதனை ஏற்றுக்கொண்டு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

22/05/2025
பரிசுத்த பாப்பரசர் தெரிவின் முதற்கட்டம் தீர்மானமின்றி நிறைவுபுதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்...
08/05/2025

பரிசுத்த பாப்பரசர் தெரிவின் முதற்கட்டம் தீர்மானமின்றி நிறைவு

புதிய பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான முதல்சுற்று வாக்கெடுப்பு தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது.

கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட முழு உலகமும் கவனம் செலுத்தியுள்ள கொன்கிலேவ் எனப்படும் பரிசுத்த பாப்பரசரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நேற்று(07) ஆரம்பமானது.

உலகளாவிய ரீதியில் இருக்கும் 252 கத்தோலிக்க கர்தினால்களில் 135 பேர் கூடி புதிய பாப்பரசர் ஒருவரை தெரிவு செய்யவதற்காக சிஸ்டைன் தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆராதனையைத் தொடர்ந்து கர்தினால்கள் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறும் அறைக்குள் சென்றனர்.

புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படும் வரையில் கர்தினால்கள் வௌி உலகத்துடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்த முடியாது.

நற்செய்தி கிடைக்கப்பெறும் வரையில் ஆயிரக்கணக்கான மக்கள் வத்திக்கானில் உள்ள சென் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்தனர்.

வத்திக்கான் நேரப்படி நேற்றிரவு 9 மணியளவில் சிஸ்டைன் தேவாலயத்தின் கூரையில் உள்ள புகைபோக்கியில் இருந்து கறுப்பு புகை வௌியானது.

முதல் சுற்று இரகசிய வாக்கெடுப்பில் புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்படாமையை இது குறிக்கின்றது.

அதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு இன்றும்(08) இடம்பெறவுள்ளது.

12/04/2025

அமெரிக்காவின் புதிய வரிக்கொள்கை குறித்து ஆராய ஜனாதிபதியால் கூட்டப்பட்ட கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பாக கலந்து கொண்டு தனது கருத்துக்களை பகிர்ந்த மட்டக்களப்பு மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்
Shanakiyan Rajaputhiran Rasamanickam

Shanakiyan Rajaputhiran Rasamanickam

15/03/2025

மட்டக்களப்பில் - மதுபானம் அருந்த சென்ற நான்கு நண்பர்களுக்கிடையே மோதல் ஒருவர் பலி ; மூவர் கைது !

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்றக்குழு கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டத்தொகுதியில் தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் ...
21/11/2024

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி பாராளுமன்றக்குழு கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டத்தொகுதியில் தலைவர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கீழ்வரும் பதவிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப்பேரும் ஏகமனதாக தெரிவு செய்தனர்.

1.தலைவர்:சிவஞானம் சிறிதரன்.
2.செயலாளர்: ச. குகதாசன்.
3.கட்டுப்பாட்டாளர்(கொரோடா) ப.சத்தியலிங்கம்.
4.பேச்சாளர்:ஞா.ஶ்ரீநேசன்.

29/10/2024

Shanakiyan Rajaputhiran Rasamanickam

23/10/2024

Shanakiyan Rajaputhiran Rasamanickam

23/10/2024

ஆசிய வலைபந்து சம்பியன்ஷிப் தொடரில் ஹெட்ரிக் வெற்றியீட்டிய இலங்கை இன்று ஜப்பானுடன் மோதல்இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்று...
23/10/2024

ஆசிய வலைபந்து சம்பியன்ஷிப் தொடரில் ஹெட்ரிக் வெற்றியீட்டிய இலங்கை இன்று ஜப்பானுடன் மோதல்

இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்றுவரும் 13வது ஆசிய வலைபந்து சம்பியன்ஷிப் தொடரில் குழு ஏ யில் இடம்பிடித்துள்ள இலங்கை அணி தாங்கள் ஆடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் ஹெட்ரிக் வெற்றியீட்டியது.

ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பில் வரலாற்றில் முதல்முறையாக 14 ஆசிய நாடுகள் பங்கேற்கும் குறித்த தொடர் கடந்த வெள்ளிக்கிழமை (18) முதல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் பிலிப்பைன்ஸ் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 73 - 44 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது. சனிக்கிழமை (19) நடைபெற்ற சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை 118 - 5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில் இலங்கை தங்களது 3ஆவது போட்டியில் இந்தியாவை நேற்று முன்தினம் எதிர்கொண்ட இலங்கை 81-31 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது. இலங்கை 4வது லீக் ஆட்டத்தில் இன்று (22) ஜப்பானை எதிர்கொள்கிறது.

தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்துஇன்று (23) முதல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை...
23/10/2024

தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

இன்று (23) முதல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலின் செயற்பாடுகள் காரணமாக தபால் ஊழியர்களின் விடுமுறையை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

Address

Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Eagle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share