MsK NeWs LiNe

MsK NeWs LiNe 120

11.01.2025 #சவால்களை கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள் -  #டக்ளஸ் தேவாவிற்கு  #கங்காராம ...
11/01/2026

11.01.2025

#சவால்களை கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள் - #டக்ளஸ் தேவாவிற்கு #கங்காராம விகாராதிபதி ஆலோசனை

கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று(11)சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.

இதன்போது, "பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது" என்று விகாராதிபதி தெரிவித்தார்.

மேலும், திட்டமிடப்பட்ட காரணங்களுக்காக அவதூறு பரப்புகின்றவர்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

04/01/2026

#வெலிக்கடை சிறை #இனப்படுகொலையின் கண்கண்ட #சாட்சியாக - தோழர் #டக்ளஸ் தேவானந்தா

24/12/2025

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (26)இரவு 8.00 மணிக்கு Star Tamil தொலைக்காட்சியில் முன்னாள் அமைச்சர் கெளரவ #டக்ளஸ் #தேவானந்தா அவர்கள் to நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் - காணத் தவறாதீர்கள்...

24/12/2025

24.12.2025

படகில் ஓட்டை விழுந்துவிட்டது
#அனுரவின் செல்வாக்கு #சரிகிறது
ஒரு வருடமே தாக்கு பிடிக்கும் - ஊசி #அர்ச்சுனா

கொழும்பு வடக்கு
தெற்கு
பறிபோய் விட்டது!
அரசாங்கம் இன்னும் ஒரு வருடம் மாத்திரமே தாக்கு பிடிக்கும் அரசாங்க படகில் ஓட்டை விழுந்து விட்டது எனவும்
கொழும்பும் வடக்கில் சில பகுதியும் தெற்கில் சில பகுதியும் அதிகாரத்தை இழந்து விட்டது. இந்த அரசாங்கத்தின் செல்வாக்கு குறைந்து வருகிறது என,
அர்ச்சுனா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

விடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு
நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி
பிணையில் விடுவிக்கப்பட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பேதே
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

24/12/2025

#போராடினவன் முழுக்க #செத்துபோனான்கள் - இவனுகளுக்கு #தமிழீழ கோசம் இல்லாட்டி #அரசியல் பிழைப்பு #கிடையாது - #அர்ச்சுனா இடித்துரைப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப் பெயரை மாற்றி பரப்புரை செய்தாலும், தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இன்னமும்  #அகி...
18/12/2025

தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப் பெயரை மாற்றி பரப்புரை செய்தாலும், தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இன்னமும் #அகில #இலங்கை #தமிழ்க் #காங்கிரஸ் கட்சியே #சைக்கிள் சின்னத்தில் உள்ளது.¹

கீழே எனது படத்தை தனது முகநூலில் பதிவாகப் போட்டிருக்கும் விஎஸ் தவபாலன் ஒரு உறுப்பினராக அங்கம் வகிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சின் ஸ்தாபகர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பட்டனார் ஜி.ஜி. பொன்னம்பலம் என்பவரே ஆவார்.²

ஜி.ஜி. #பொன்னம்பலம் 1948 இல் இருந்து 1953 ஆண்டு வரை சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த “சிங்கள கட்சியான” ஐக்கிய தேசியக் கட்சி அரசில் டி.எஸ். சேனநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க என்கின்ற இரு “சிங்களப்”பிரதமர்களின் தலைமையிலான ஆட்சியில் தொழில்துறை, தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மீன்பிடித் துறை #அமைச்சராக (Cabinet Minister of Industries, Industrial Research and Fisheries) பதவி வகித்தவராவார்.³

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தனது தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் @விஎஸ் தவபாலனின் கட்சியின் ஸ்தாபகரான ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தந்தையான கணபதிப்பிள்ளை காங்கேசர், யாழ்ப்பாணம் அல்வாய் என்னுமிடத்தைச் சேர்ந்த ஒரு post master ஆவார். அதாவது தபால்துறை சார்ந்த ஒரு அரச ஊழியராவார்.⁴

ஜி.ஜி. பொன்னம்பலத்திற்குப் பின், அவரது மகனும் #கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையுமான குமார் பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.⁴

நாங்கள் சிறுபருவத்தில் முத்திரை சேகரிப்பதை எமது பொழுதுபோக்காக வைத்திருந்தபோது, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் தலைவர் குமார் பொன்னம்பலம் பென்ஸ் கார்கள் சேகரிப்பதைத் தனது பொழுதுபோக்காக வைத்திருந்தார்.⁴

குமார் பொன்னம்பலத்தின் மனைவியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தாயாருமான திருமதி யோகலட்சுமி, யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேலதிக அரச அதிபராக கடமையாற்றிய திரு. T. முருகேசப்பிள்ளை என்கின்ற அரச ஊழியரின் மகளாவார்.⁴

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவருமான குமார் பொன்னம்பலம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் தாயாரான திருமதி சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான DPA – Democratic People’s Alliance - ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததுடன், பிரச்சார வேலைகளிலும் 1988-89 காலப்பகுதில் கடுமையாக உழைத்தவர் ஆவார்.⁵

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையுமான திரு. குமார் பொன்னம்பலம், 2000 ஆம் ஆண்டு ஜனவரி 5 அன்று கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.⁶

இந்தப் படுகொலை குறித்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு முழு விபரமும் தெரிந்திருந்தது என, இலங்கையின் புலனாய்வு பத்திரிகைத்துறையில் பெயர் பெற்றவர்களும் பிரபலமானவர்களுமான Sunday Leader பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவும், “ராவய” என்னும் சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனும் தொடர்ச்சியான புலனாய்வு செய்தி அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.⁷⁸

விக்டர் ஐவன், “சவுற ரஜினி” (The Bandit Queen) எனும் பெயரில், சந்திரிக்கா குமாரதுங்கவின் அரச அதிகாரத் துஷ்பிரயோகங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்வு குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகமொன்றை எழுதி வெளியிட்டிருந்தார்.⁹ அந்தப் புத்தகத்தில் குமார் பொன்னம்பலத்தின் கொலை தொடர்பிலும் அந்தக் கொலையில் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட “சீதா” என்கின்ற விலைமாது தொடர்பிலும், அந்த சீதா தன்னுடன் தொடர்பு கொண்டு தனக்களித்த தகவல்கள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.

2002 பெப்ரவரி 16, குமார் பொன்னம்பலத்தின் கொலை நடந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர், Sunday Leader பத்திரிகையில், இந்தக் கொலைக்கான சூத்திரதாரியாக செயல்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் சுகத் ரணசிங்க (Sugath alias Shantha Ranasinghe) மற்றும் CDB (Criminal Detective Bureau) OIC நுவான் வெட்டசிங்க் (Nuwan Wedasinghe) ஆகியோரின் தொலைபேசி உரையாடல் transcript ஒவ்வொரு சொல்லாக பிரசுரிக்கப்பட்டது.¹⁰

அந்தப் பிரசுரத்தின் பிரகாரம், குமார் பொன்னம்பலத்தை நெருங்க “சீதா- Seetha” என்னும் உயர்மட்ட விலைமாதுவை உபயோகப்படுத்தியதாக பொலிஸ் கான்ஸ்டபிள் சுகத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.¹⁰

சன்டே லீடரின் பிரசுரத்தின்படி அந்த விலைமாதுவின் ஊடாகவே குமார் பொன்னம்பலத்தை தான் நெருங்கியதாக கொலையின் சூத்திரதாரி தனது மேலதிகாரிக்குத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஆசாத் (Azad) என்னும் நபருக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் இருந்து பெண்களைத் தருவித்து குமார் பொன்னம்பலம் வழங்கியதாகவும், அந்நபர் பாலியல் உறவு கொள்வதை திரு. குமார் பொன்னம்பலம் பார்த்து ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.¹⁰

ஆகவே, @விஎஸ் தவபாலன் அவர்களே முதலில் பரம்பரை பரம்பரையாக சிங்கள அரசுகளுக்கு அடிமைச் சேவகம் செய்ததன் ஊடாக இன்று மிகப்பெரும் செல்வந்தராக வாழும் உங்கள் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சி என்னும் பெயரில் ஒரு குடும்ப private limited companyயையே நடத்தி வருகின்றார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.¹¹

தனது தந்தையின் கொலைக்கு இதுவரை உமது கட்சித் தலைவரால் நீதி பெற்றுக் கொள்ள முடியவில்லை. உமது கட்சித் தலைவரின் தந்தையான குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரே காரணம் எனச் சாரப்படும் பல ஆதாரங்களை, பத்திரிகை ஆசிரியர்களான லசந்த விக்கிரமதுங்கவும் விக்டர் ஐவனும் வெளியிட்டுள்ளனர்.¹²

CDB எனப்பட்ட criminal detective bureau வின் தலைவராக இருந்த SSP Bandula Wickramasinghe திரு.பந்துல விக்ரமசிங்க என்பவர் திரு.குமார் பொன்னம்பலத்தின் கொலை தொடர்பாக மேற்கொண்ட விசாரனை தொடர்பாக அப்போதய ஜனாதிபதி சர்திரிக்கா குமாரதுங்கவிற்கு சமர்ப்பித்த அறிக்கை கூட சன்டே லீடர் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.

இந்தக் கொலை குறித்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குமார் பொன்னம்பலத்தின் குடும்பத்தினர் பெரிய முயற்சிகளை எடுக்கவில்லை என்றும் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியிருந்தன.

முதலில் இவ்வாறான அசிங்கம் பிடித்த அரசியல் தலைமையும், அசிங்கம் பிடித்த அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கும் உமக்கு, தேசிய நல்லிணக்கத்துக்காகப் பணியாற்றும் அருண் சித்தார்த் எனும் என்னைப் பற்றி பேசுவதற்கு ஒரு சொட்டு தார்மீக அறமும் கிடையாது என்பதை உமக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, பரம்பரை பரம்பரையாக சிங்கள அரசுகளுக்கு அரச ஊழியர்களாகவும், அமைச்சர்களாகவும், தேர்தல் பரப்புரை வியூக வடிவமைப்பாளர்களாகவும், பிரச்சார பீரங்கிகளாகவும் சேவையாற்றிய பரம்பரையில் பாலியல் துர்நடத்தையுள்ள ஓர் மனிதருக்கு, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் “மாமனிதர்” எனும் பட்டம் வழங்கியதை, சிந்திக்கத் தெரிந்த தமிழ் மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகின்றீர்கள் என நான் கேள்வி கேட்கின்றேன்.

குமார் பொன்னம்பலத்தையும் பிரபாகரனையும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளவர்களிடமும் நான் இக்கேள்வியை முன்வைக்கின்றேன்.

இதனுடன், 80-களில் புலிகளை எதிர்த்ததுடன், மிகக் கடுமையாக விமர்சித்தவர் குமார் பொன்னம்பலம் என்பதையும் இங்கு குறிப்பிடுகின்றேன்.

பாலியல் துர்நடத்தையுள்ள மனிதருக்கு வழங்கப்பட்ட “மாமனிதர்” பட்டத்தின் தரமும், புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தரத்தையும் இதில் இருந்தாவது தெரிந்து கொள்கின்றீர்களா என, சிந்திக்கத் தெரிந்த தமிழ் மக்களிடம் நான் கேட்கின்றேன்.

“யோகியை சந்திக்கும் வரை நான் ஒரு pl***oy ஆக இருந்தேன்; பின்னரே நான் நடத்தையில் ஒரு சீர்திருத்தப்பட்ட நபராக மாறினேன்” என குமார் பொன்னம்பலம் தனக்குக் கூறியதாக Roshan Peiris, The Sunday Times, 9 January 2000 கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.¹³

ஆனால் திருமணத்தின் பின்னரும் கூட பாலியல் ரீதியில் சீர்திருத்தம் அடையாத dark sexual fantasies எனப்படும் வக்கிரமான பாலியல் சார்ந்த துர்நடத்தையுள்ள மனிதராக, அவர் தனது 61 வயதிலும் இருந்திருக்கின்றார் என்பதை, லசந்த விக்கிரமதுங்க மற்றும் விக்டர் ஐவனின் எழுத்துக்களும், அவர்கள் வெளியிட்ட சாட்சியங்களும் சுட்டிக் காட்டுகின்றன.¹²

ஆகவே விஎஸ் தவபாலன் அவர்களே மேலே நான் எழுதியுள்ள விடயங்கள் குறித்து ஒரு பகிரங்க விவாதம் புரிய ஏதேனும் ஒரு ஊடகத்துக்கு வருமாறு உமக்கு நான் சவால் விடுக்கின்றேன். இன்னும் நிறைய documental evidence எனப்படும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சமர்ப்பித்து குமார் பொன்னம்பலம் குறித்தும் உங்களுடைய அசிங்கம் பிடித்த கட்சியின் அரசியல் குறித்தும் விவாதிக்க முடியும்.

அதே போன்று மாபெரும் சட்டத்தரணி ஜாம்பவான்களைக் கொண்டிருப்பதாக தமிழ் மக்களுக்கு ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கும் இந்தக்கட்சியின் சட்டத்தரணிகளுக்க முடிந்தால் சட்ட நடவடிக்கை எடுத்து மேலே உங்கள் தற்போதய கட்சித் தலைவரின் தந்தையார் குமார் பொன்னம்பலம் குறித்து விக்டர் ஐவனும் லசந்த விக்ரமதுங்கவும் எழுதியவை தவறான தகவல்கள் என்பதை நீருபிக்குமாறு சவால் விடுக்கிறேன்.

முக்கிய குறிப்பு -IBC ஊடக வலையமைப்பின் உரிமையாளர் திரு. கந்தையா பாஸ்கரன், ரீச்சா எனப்படும் தனது பண்ணையில் மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அண்மையில் சிலைகள் வைத்துள்ளார். அந்தச் சிலைகளில் ஒன்றாக, Sunday Leader பத்திரிகையின் ஆசிரியரும், குமார் பொன்னம்பலத்தின் படுகொலை தொடர்பாக பல ஆதாரங்களை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியவருமான அமரர் லசந்த விக்கிரமதுங்க அவர்களின் சிலையும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.¹²

இறுதியாக அருண் சித்தார்த் ஆகிய நான்,

அரச குலத்தோரையும், ஆள்வோரையும் குப்பைக் கூளமாக மதிக்கிறேன்.

தங்கத்தையும், வைரத்தையும், வைர வைடூரியங்களையும் வெறும் தகரமாகவும், கூழாங்கற்களாகவும் காண்கிறேன்.

பட்டுப் பீதாம்பரங்களை கிழிந்து போன சாக்குத் துணியாக நினைக்கிறேன்.

உலகப் பேராசான்களின் போதனைகளை மந்திரவாதிகளின் செப்படி வித்தைகளாகப் போஷிக்கிறேன்.

மானுடகுலத்தை விடுவிக்க வந்த மிக உயர்ந்த கோட்பாடுகளை, உண்மையாக மின்னும் தங்க ஜரிகைகளாக நான் தீர்மானம் செய்கிறேன்.

இந்த ஞானத்தை (wisdom) பெற, பயமின்றிய (fearlessness) நிலைக்கும், enlightenment எனப்படும் உயரிய விழிப்பு நிலைக்கும், here & now எனப்படும் இந்தக் கணத்தில் வாழ்தல் நிலையையும் தேடியுமே நான் பெளத்தம் நோக்கிச் செல்கின்றேனே தவிர, விஎஸ் தவபாலன் போன்றவர்கள் செய்யும் பொன்னம்பலம் குடும்பத்துக்கான கொத்தடிமை அரசியல் போன்றது அல்ல எனது பெளத்தம் தொடர்பான ஆய்வு எனத் தெரிவிக்கின்றேன்.

மற்றது முக்கியமான இன்னொரு விடயம் Bipolar disease எனப்படும் நோயுள்ள, identity crisis எனப்படும் அடையாளச் சிக்கல் மற்றும் தன்னை சமூகத்தில் ஒரு உயர்ந்த நபராக அல்லது அறியப்படும் நபராக காட்டிக் கொள்ளப் பகீரதப் பிரயத்தனம் செய்யும் பொய்களை நாளாந்தம் ஆதாரம் இல்லாமல் பாராளுமன்றில் கக்கிக்கொண்டிருக்கும் நபருடன், விஎஸ் தவபாலன் என்னை ஒப்பிட்டிருப்பதையும் வன்மையாக கண்டிக்கின்றேன்.

நன்றி 🙏
வணக்கம்
அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம்
18/12/2025
3:15pm


Footnotes – References (Full)

1. Election Commission of Sri Lanka, List of Registered Political Parties, https://www.elections.gov.lk/
2. Arun Siddharth, personal observation and photograph reference.
3. Ceylon Government Gazette, 1948–1953; Ministry of Industries, Industrial Research and Fisheries archives.
4. Dr. N. Kumaraguruparan, “Democratic People’s Alliance Campaign Work,” Sunday Times, 10 August 2008.
5. Ibid.
6. Lasantha Wickramatunga, Sunday Leader, various articles on political assassinations, 2000.
7. Victor Ivan, Ravaya newspaper, investigative reports on Kumar Ponnambalam assassination.
8. Ibid.
9. Victor Ivan, The Bandit Queen, Colombo: Ravaya Publications, 2001.
10. Police Criminal Detective Bureau (CDB) transcript of telephone conversation between Sugath Ranasinghe and OIC Nuwan Wedasinghe, 16 February 2002.
11. Ibid; public reporting of Kumar Ponnambalam private life activities.
12. Lasantha Wickramatunga and Victor Ivan, investigative reports and articles on political/personal history of Kumar Ponnambalam.
13. Roshan Peiris, The Sunday Times, 9 January 2000.

✍️ Election Commission of Sri Lanka, Register of Recognized Political Parties, “All Ceylon Tamil Congress (ACTC),” party symbol: Bicycle.

✍️ Parliament of Ceylon (Sri Lanka), Parliamentary Debates (Hansard), service record of G. G. Ponnambalam as Cabinet Minister of Industries, Industrial Research and Fisheries, 1948–1953.

✍️ K. M. de Silva, A History of Sri Lanka (Colombo: Vijitha Yapa Publications, 2005), references to G. G. Ponnambalam’s ministerial role under UNP governments.

✍️ N. Kumaraguruparan, “Kumar Ponnambalam: A Political Life,” Sunday Times (Sri Lanka), August 10, 2008.

✍️ Roshan Peiris, “Reflections on Kumar Ponnambalam,” Sunday Times (Sri Lanka), January 9, 2000.

✍️ Lasantha Wickrematunge, investigative reports on the assassination of Kumar Ponnambalam, The Sunday Leader (Sri Lanka), January–February 2002.

✍️ Lasantha Wickrematunge, “Transcript of Telephone Conversation Linked to the Kumar Ponnambalam Assassination,” The Sunday Leader (Sri Lanka), February 16, 2002.

✍️ Victor Ivan, investigative articles on the Kumar Ponnambalam assassination, Ravaya (Sri Lanka), 2000–2002.

✍️ Victor Ivan, The Bandit Queen: Chandrika Kumaratunga and the Abuse of State Power (Colombo: Ravaya Publications, n.d.).
(Sinhala original title: Savura Rajini / Soura Rajini)

✍️ International Broadcasting Corporation (IBC), media releases and public records on memorial statues at Reachaa Farm, including the statue of Lasantha Wickrematunge.

Arulanandam Arun

நாட்டில்  #வாடகை_தாய்,  #கருத்தரித்தல் மையங்கள் பெருகி வரும் நேரத்தில் இப்படி ஒரு  #அதிர்ச்சி தகவலா?டென்மார்க் மாணவனின் ...
18/12/2025

நாட்டில் #வாடகை_தாய், #கருத்தரித்தல் மையங்கள் பெருகி வரும் நேரத்தில் இப்படி ஒரு #அதிர்ச்சி தகவலா?

டென்மார்க் மாணவனின் விந்தால் பிறந்த 200 குழந்தைகள்.. அடுத்தடுத்து பலி.. பலரின் உயிர்க்கு ஆபத்து.. அதிர வைக்கும் காரணம்..!

கோபன்ஹேகன், டென்மார்க் (டிசம்பர் 12, 2025) : உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஒரு மருத்துவ ஊழல் சம்பவம், விந்தணு தானம் மூலம் பிறந்த சுமார் 200 குழந்தைகளின் உயிரை ஊசலாடச் செய்துள்ளது.

2005ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சம்பவம், ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க் தலைநகரான கோபன்ஹேகனில் உள்ள ஐரோப்பிய விந்து வங்கியில் சேமிக்கப்பட்ட ஒரு தானக்காரரின் விந்தணு, 14 நாடுகளில் 67 மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

இதன் விளைவாக, இங்கிலாந்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், டென்மார்க், சுவிட்சர்லாந்து, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சுமார் 197 குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆனால், இந்த குழந்தைகளில் பலருக்கு 'லீ-பிராமனி சிண்ட்ரோம்' (Li-Fraumeni Syndrome) எனும் அரிய மரபணு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது புற்றுநோய் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.சம்பவத்தின் பின்னணி: மாணவரின் தானம் எப்படி பேரழிவாக மாறியது?இந்த ஊழலின் மையத்தில் இருப்பவர், 2005ஆம் ஆண்டு டென்மார்கைச் சேர்ந்த ஒரு மாணவர்.

அவர் விந்தணு தானத்தைத் தொடங்கியபோது, அவரது விந்தணு கோபன்ஹேகனில் உள்ள ஐரோப்பிய விந்து வங்கியில் சேமிக்கப்பட்டது. அடுத்த 17 ஆண்டுகளில், இந்த விந்தணு ஐரோப்பா முழுவதும் விநியோகிக்கப்பட்டு, குழந்தையின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

ஆனால், 2023ஆம் ஆண்டு விசாரணையில், இந்த தானக்காரரின் விந்தணுவில் TP53 எனும் மரபணு (டிபி53) மாற்றம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது உடலில் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் முக்கிய புரதத்தை பாதிக்கிறது.புள்ளிவிவரங்களின்படி, இந்த விந்தணு மூலம் பிறந்த குழந்தைகளில் 20%க்கும் மேல் TP53 மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள 190 குழந்தைகளும் (சுமார் 200 என்று தோராயமாக கணிக்கப்படுகிறது) எப்போது வேண்டுமானாலும் புற்றுநோயால் பாதிக்கப்படலாம்.

இந்த குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மூளை கட்டிகள், சார்கோமா (எலும்பு மற்றும் திசு புற்றுநோய்), மார்பக புற்றுநோய் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. சில குழந்தைகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் முதலில் வெளியே வந்தது, ஐரோப்பிய ஒளிபரப்பு ஒன்றியத்தின் புலனாய்வு இதழியல் மூலம். சர்வதேச ஊடகங்களான பிபிசி போன்றவை இதை வெளிப்படுத்திய பிறகு, விந்து வங்கி அந்த தானக்காரரின் விந்தணுக்களை முழுவதுமாக அகற்றியது.

மேலும், அவருக்கு விந்தணு தானம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளிலும் இந்த விந்தணு சென்றிருக்கலாம் என விசாரணை நடைபெற்று வருகிறது.

விந்தணு தானம் என்றால் என்ன? குழந்தையின்மை பிரச்சினையின் பின்னணி

உலக அளவில் குழந்தையின்மை ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. தம்பதிகளில் 50% ஆண்களாலும், 50% பெண்களாலும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. ஆண்களுக்கு விந்தணுக்களின் செயல்திறன் குறைவு இருந்தால், சிகிச்சைகள் மூலம் முயற்சிக்கப்படும்.

ஆனால், வேறு வழியில்லை என்றால், விந்து வங்கிகளில் சேமிக்கப்பட்ட தான விந்தணுக்களைப் பயன்படுத்தி கருவை உருவாக்கி, கருப்பையில் வைக்கப்படும். அதேபோல், பெண்களுக்கு கருமுட்டை பிரச்சினை இருந்தால், தான கருமுட்டைகள் பயன்படுத்தப்படும்.இந்த நடைமுறையில், தானக்காரரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். உலக அளவில் இது பின்பற்றப்படுகிறது. ஆனால், இந்த சம்பவம் இதன் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது: மரபணு குறைபாடுகள் சரியாக சோதிக்கப்படாமல் போகலாம்.

இந்தியாவில் விந்தணு தானம்: மருத்துவர்களின் எச்சரிக்கை

இந்தியாவிலும் குழந்தையின்மை ஒரு தீவிர பிரச்சினை. குழந்தை பெற முடியாத தம்பதிகள் விந்தணு அல்லது கருமுட்டை தானத்தை நாடுகின்றனர். குழந்தையின்மை சிகிச்சை நிபுணர் டாக்டர் அஞ்சனா, இந்த சம்பவத்தைப் பற்றி கூறுகையில், தானக்காரர்களைத் தேர்வு செய்யும்போது மிகுந்த கவனம் தேவை. விந்து வங்கியின் தரம், தானக்காரரின் வயது, குடும்ப வரலாறு (புற்றுநோய், மனநல குறைபாடுகள், மரபணு நோய்கள்) ஆகியவற்றை விரிவாக சோதிக்க வேண்டும்.

விந்தணுக்களின் தரம், அளவு, தொற்று நோய்கள் (எச்ஐவி, சிபிலிஸ்) போன்றவற்றையும் பரிசோதிக்கிறோம். ஆனால், TP53 போன்ற ஆழமான மரபணு மாற்றங்களை உலக அளவில் பெரும்பாலான மையங்கள் சோதிப்பதில்லை என்றார்.

இந்திய சட்டங்களின்படி, தானக்காரர்கள் 21 முதல் 40-50 வயது வரை இருக்க வேண்டும். ஒரு தானக்காரரின் விந்தணு அதிகபட்சம் 10 குழந்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். உடல் தகுதி (உயரம், எடை, இரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு), குடும்ப வரலாறு ஆகியவை சோதிக்கப்படும்.

டாக்டர் அஞ்சனா மேலும் கூறுகையில், "இந்த அபாயங்கள் அரிதானவை என்றாலும், இருக்கின்றன. எதிர்காலத்தில் மரபணு சோதனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். ஒரு தானக்காரர் 200 குழந்தைகளுக்கு தந்தையாகக் கூடாது – இது நெறிமுறை மீறல்."

ஆராய்ச்சியாளர்களின் கவலை: "இது ஒரு பேரழிவு"

புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் இந்த சம்பவத்தை "பேரழிவு" என்று வர்ணிக்கின்றனர். மீதமுள்ள குழந்தைகளுக்கு புற்றுநோயை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிப்பது கடினம்.

அவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்த அபாயத்துடன் வாழ வேண்டியிருக்கும். துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லாதது பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது – 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

பாடங்கள்: தம்பதிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
இந்த சம்பவம், குழந்தையின்மை சிகிச்சை எடுக்கும் தம்பதிகளுக்கு முக்கிய பாடங்களைத் தருகிறது:

விந்து வங்கியின் தரம்: புகழ்பெற்ற, சர்வதேச தரத்தில் உள்ள வங்கிகளைத் தேர்வு செய்யுங்கள்.

மரபணு சோதனைகள்: தானக்காரரின் குடும்ப வரலாறு, மரபணு குறைபாடுகள் ஆகியவற்றை விரிவாக கேளுங்கள்.

எண்ணிக்கை வரம்பு: ஒரு தானக்காரரின் விந்தணு அதிக குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

மருத்துவ ஆலோசனை: மருத்துவர்களின் முழு வழிகாட்டுதலுடன் மட்டுமே முயற்சி செய்யுங்கள்.

அபாய அறிவிப்பு: அடையாளம் ரகசியம் என்றாலும், மரபணு அபாயங்கள் பற்றிய தகவல்களை கோருங்கள்.

இந்த ஊழல், விந்தணு தான நடைமுறைகளை உலக அளவில் மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.

ஐரோப்பிய அரசுகள் விசாரணையை

தீவிரப்படுத்தியுள்ளன. குழந்தை பெறும் ஆசைக்கு மத்தியில், உயிர் பாதுகாப்பு முதன்மையானது என்பதை இது நினைவூட்டுகிறது..

இணையத்தில் வைரல் ஆகிவரும் பதிவு...

'மிகவும்  அருமையான,தெளிவான  விளக்கம்' -ஒரு 5 வருடங்கள் வளர்ந்த  #பனை மரத்தில் , 1000- 1500 சல்லி வேர்கள் இருக்கும் .மழைக...
18/12/2025

'மிகவும் அருமையான,தெளிவான விளக்கம்' -

ஒரு 5 வருடங்கள் வளர்ந்த #பனை மரத்தில் , 1000- 1500 சல்லி வேர்கள் இருக்கும் .

மழைக்காலங்களில், மழை பெய்யும் பொழுது ,இந்த 1500 சல்லி #வேர்களின் வழியாக #மழைநீர் பூமிக்கு அடியில் , ஒரு பெரிய பைப்பில் தண்ணீர் போவது போல் சென்று கொண்டே இருக்கும்.

ஒரு இடத்தில் நூற்றுக்கணக்கான பனை மரங்கள் இருந்தால், *இந்த சல்லி வேர்களின் வழியாக செல்லும் மழை* நீர் *ஒரு பெரிய குளம் போல் பூமிக்கு அடியில்* *தேங்கி நிற்கும். நிலத்தடி #நீர்மட்டம் உயர வழி வகுக்கும்.*

ஒரு வளர்ந்த பனைமரம், 15,000-20,000 லிட்டர் தண்ணீரை மழை* *காலத்தில் பூமிக்கு அடியில் சேர்த்து வைக்கும் திறன் கொண்டது.*
எனவே, மண்ணும் மரமும் இயக்கம் மூலம் நடும் பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பனை மரங்கள் வளரும் பொழுது ,ஒரு பெரிய குளம் போல் /ஏரி போல் பூமிக்கு அடியில் தண்ணீரை சேர்த்து வைக்கும்.

னவே, *உங்கள் ஊரில் உள்ள நீர்நிலைப் பகுதிகளில்,குளம் குட்டைகளில்* *வயல்களில், வரப்புகளில், ஆற்றங்கரை ஓரங்களில்* *நிறைய நிறைய பனை விதைகளை நட்டு,அடுத்த தலைமுறைக்கு* *நிலத்தடி நீர் பெருக,மண் வளம், மழை வளம் பெருக உதவுங்கள்.

18/12/2025

18.12.2025

#வீடொன்றில் #அத்துமீறி #குடும்பத்தினர் #முன்னிலையில் #தாக்குதல் நடத்திய
அதிகாரியின் பதவி பறிபோகும் நிலையில் -!

#குளியாபிட்டிய பொலிஸ் நிலைய
குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு எதிராக ஒழுக்காற்று சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளத்தில் ஒருவர் மீது மூர்க்கத் தனமாக தாக்குவது
தொடர்பில் வெளியான பரபரப்பான #வீடியோ பதிவு நேற்றைய தினம் வெளியானதையிட்டு இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆரம்ப நடவடிக்கையாக அதிகாரியை மாவத்தகம பொலிஸ்
நிலையத்திற்கு இடமாற்றம்
செய்யவும் அதன்பின் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவும்
உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க வடமேல் மாகாண
பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்க பொலிஸ்
அத்தியட்சகர் ஒருவரின் கீழ் உசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

09.12.2025கடந்தமுறை 2ம் இடத்தில் இருந்தவர் இம்முறை முதலிடத்தில்..! யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் யார்?பேரவை உறுப்பி...
09/12/2025

09.12.2025

கடந்தமுறை 2ம் இடத்தில் இருந்தவர் இம்முறை முதலிடத்தில்..!

யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் யார்?
பேரவை உறுப்பினர்களின் வாக்குகளுக்கமைய,
1. பேராசிரியர் தி. வேல்நம்பி (உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி )

2. பேராசிரியர் கு. மிகுந்தன் ( விவசாய பீட முன்னாள் பீடாதிபதி )

3. பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன் ( மருத்துவபீடப் பீடாதிபதி )

ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளார்கள்.

இவர்கள் மூவரில் ஒருவரை புதிய துணைவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்வார்.

பெரும்பாலும் அடுத்த துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன!@😜😜

விந்தணு வங்கி மூலம் பத்து பெண்கள் கருத்தரிப்புகொழும்பில் உள்ள காசல் தெரு மகளிர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்...
08/10/2025

விந்தணு வங்கி மூலம் பத்து பெண்கள் கருத்தரிப்பு

கொழும்பில் உள்ள காசல் தெரு மகளிர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி ஊக்கமளிக்கும் பலன்களை அளித்துள்ளது,

இந்த வசதியின் சேவைகள் மூலம் பத்து பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளனர் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை தம்பதிகள் மற்றும் தனி நபர்களிடையே மலட்டுத்தன்மையை நிவர்த்தி செய்வதில் இந்த முயற்சி ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது என்று மருத்துவமனை இயக்குநர் டாக்டர் அஜித் குமார தண்டநாராயணா தெரிவித்தார்.

Address

Batticaloa
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when MsK NeWs LiNe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share