ArabTuber

ArabTuber Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ArabTuber, Video Creator, Sawarana, Chilaw Town.

اللّهُـمَّ أَعِـنِّي عَلـى ذِكْـرِكَ وَشُكْـرِك ، وَحُسْـنِ عِبـادَتِـك

யா அல்லாஹ்! உன்னை நினைவுகூரவும், உனக்கு நன்றி சொல்லவும், சிறந்த முறையில் வழிபடவும் எனக்கு உதவி செய் (அபூ தாவூத்)

Hajj & Umrah Operator
Arabian Travels Sri Lanka

11/06/2026

உங்களை நீங்களே அச்சத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்.

நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்:

கடன்படுவதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். நிச்சயமாக அது இரவில் கவலையையும், பகலில் இழிவையும் உண்டாக்குகிறது.

எனவே, தேவையற்ற கடன்களைத் தவிர்த்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, நிதானமாக வாழ முயற்சிப்போம். 🤍

அல்லாஹ் ஒருவருக்கு போதுமானவன் என்றால், அவருக்கு வேறு எதுவும் தேவையில்லை.

★ கடன் சுமையிலிருந்து மீள இஸ்லாம் கூறும் வழி என்ன?
**********************
★ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் கடன்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள். நிச்சயமாக அது இரவில் கவலையாகவும், பகலில் இழிவாகவும் இருக்கிறது".
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி) மற்றும் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).
நூல்: பைஹகீ: 10090
_____________________________________________
★அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களை நீங்களே அச்சத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்!"
★அதற்கு தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (எங்களை நாங்களே அச்சத்துக்குள்ளாக்கும்) அது எது?" என்று கேட்டனர்.
★அதற்கு நபியவர்கள், "அதுதான் கடன் (சுமை) ஆகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உக்பா பின் ஆமிர் (ரலி).
நூல்: அஹ்மத்: 17331.
_____________________________________________
★ கடன் சுமையிலிருந்து தப்பிக்க நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்.
★ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனின் கொடுமையிலிருந்து தப்பிக்க தினமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஓதிய பிரபலமான துஆ:
துஆ:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
★அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹஜன், வல் அஜ்ஜி வல் கஸல், வல் புக்லி வல் ஜுப்ன், வ ளலஇத் தயினி வ ஃகலபதிர் ரிஜால்.
​பொருள்:
"இறைவா! கவலையிலிருந்தும், துக்கத்திலிருந்தும், பலவீனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் (நெருக்கடியிலிருந்தும்) உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்."
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி).
நூல்: புகாரி: 2893.

10/06/2026

பாவம் செய்யும் அடியானை தூய்மைப்படுத்த அல்லாஹ் வைத்திருக்கும் ஒரு அழகான ஸுன்னத் — தவ்பா. 🤍

ஒரு மனிதன் தவறு செய்யலாம், பாவம் செய்யலாம்.
ஆனால் அல்லாஹ் விரும்புவது, அவன் மனம் வருந்தி மீண்டும் அல்லாஹ்விடம் திரும்புவதைத் தான்.

Prophet Muhammad ﷺ கூறினார்:

“பாவத்திலிருந்து தவ்பா செய்பவன், பாவமே செய்யாதவன் போன்றவன்.”

— Sunan Ibn Majah

அதனால் எத்தனை பாவம் இருந்தாலும் நம்பிக்கை இழக்க வேண்டாம்.
உண்மையான தவ்பா ஒரு மனிதனை தூய்மைப்படுத்தி அல்லாஹ்வுக்கு நெருக்கமாக்கும்.

அல்லாஹ்வின் அன்பைப் பெற்றவர்களாக வாழ்வதற்கு தினமும் முயற்சி செய்வோம். 🤍
தொழுகை, துஆ, நல்ல குணம், பிறருக்கு உதவி — இவை அனைத்தும் அல்லாஹ்வின் அன்பை பெற்றுத் தரும் வழிகள்.
அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக, நம் பாவங்களை மன்னித்து, ஈமானுடன் வாழவும் மரணிக்கவும் அருள் புரிவானாக. ஆமீன்.

09/06/2026

வாழ்க்கையில் எத்தனை கஷ்டம் வந்தாலும், அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையை இழந்து விட வேண்டாம். 🤍
அதிகமாக தவ்பா செய்யுங்கள், திக்ர் செய்யுங்கள், தொழுகையை தவறாமல் தொழுது வாருங்கள்.
குறிப்பாக Tahajjud நேரம் — அது அல்லாஹ்விடம் நெருங்க உதவும் அருமையான நேரம்.

நம்மை படைத்த அல்லாஹ், இரவின் கடைசி பகுதியில் கீழ் வானத்திற்கு இறங்கி:

“என்னிடம் கேட்பவர் யாரும் இல்லையா?
நான் அவர்களுக்கு வழங்குவேன்.
மன்னிப்பு கேட்பவர் யாரும் இல்லையா?
நான் அவர்களை மன்னிப்பேன்.”

என்று அழைக்கிறான்.
— Sahih al-Bukhari

அல்லாஹ்விடம் கைகளை உயர்த்தி கேளுங்கள்…
அவன் கேட்கிறான், அறிவான், பதிலளிப்பான்.

09/06/2026

இஸ்லாத்தின் பார்வையில் தோல்வி, பிரச்சனை, மன அழுத்தம் (Depression) குறித்து சில நினைவூட்டல்கள் 🤍

அல்லாஹ் ஒரு மனிதரையும் காரணமில்லாமல் சோதிப்பதில்லை.
சில நேரங்களில் தோல்வி என்பது தண்டனை அல்ல…
அது நம்மை அல்லாஹ்வுக்கு இன்னும் நெருக்கமாக்கும் ஒரு வழி.

அல்லாஹ் Qur’an-இல் கூறுகிறான்:

“நிச்சயமாக, கஷ்டத்துடன் இலகுவும் உள்ளது.”
— Qur’an 94:6

நீங்கள் இன்று சந்திக்கும் பிரச்சனை:
• உங்கள் ஈமான் உயர காரணமாக இருக்கலாம்
• உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட காரணமாக இருக்கலாம்
• அல்லது அல்லாஹ் உங்களுக்கு இன்னும் சிறந்ததை தயார் செய்து கொண்டிருக்கலாம்

எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்:
• துஆவை விடாதீர்கள்
• தொழுகையை விட்டுவிடாதீர்கள்
• “அல்லாஹ் என்னுடன் இருக்கிறார்” என்ற நம்பிக்கையை இழக்காதீர்கள்

Prophet Muhammad ﷺ கூறினார்:

“ஒரு முஃமினுக்கு ஏற்படும் துயரம் கூட, அவனுடைய பாவங்களுக்கு பரிகாரமாகும்.”

மன அமைதிக்கான சிறிய அமல்கள்:
• தினமும் 5 வேளை தொழுகை
• “Hasbunallahu Wa Ni’mal Wakeel” அதிகமாக சொல்லுங்கள்
• Qur’an ஓதுங்கள்
• Tahajjud தொழுகையை முயற்சி செய்யுங்கள்
• நல்லவர்களுடன் இருங்கள்

ஒரு நாள் உங்கள் கண்ணீர் கூட துஆவாக ஏற்றுக்கொள்ளப்படும்.
அல்லாஹ் உங்களை மறந்துவிடவில்லை.

09/06/2026

அல்லாஹ் Quran-இல் கூறுகிறான்:

மனிதன் தனது பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நாம் கட்டளையிட்டோம். அவனை அவன் தாய் கஷ்டத்துடன் சுமந்தாள் கஷ்டத்துடனே அவனைப் பெற்றெடுத்தாள்.

இஸ்லாத்தில் தாயின் இடம் மிகவும் உயர்ந்தது. தாயை மதியுங்கள், மென்மையாகப் பேசுங்கள், அவளின் துஆவைப் பெறுங்கள். தாயின் மனதை மகிழ்விப்பது அல்லாஹ்வை மகிழ்விப்பதற்கான அழகான வழியாகும்.

08/06/2026

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ﷺ

கூறினார்கள்:

அல்லாஹ்விடம் மிகவும் விருப்பமான செயல்கள் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்யப்படுபவைகளே.”
— Sahih al-Bukhari

தினமும் தொடர்ந்து செய்ய வேண்டிய சில நல்ல அமல்கள்:

• 5 நேர தொழுகை
• காலை & மாலை திக்ர்
• “அஸ்தக்பிருல்லாஹ்” சொல்லுதல்
• Qur’an சில வசனங்கள் ஓதுதல்
• பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது
• யாருக்காவது உதவி செய்வது
• நபி ﷺ மீது ஸலவாத் சொல்லுதல்
• தூங்கும் முன் துஆ செய்வது
• நல்ல வார்த்தைகள் பேசுவது
• ஒரு பாவத்தை விட்டுவிட முயற்சிப்பது

இன்ஷா அல்லாஹ், தொழுகையை தவறாமல் தொழுவதற்கும், ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் திக்ர்களை ஓதுவதற்கும் முயற்சி செய்வோம்.

04/06/2026
03/06/2026

இதை ஓதினால் மன அமைதி, பரக்கத் மற்றும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும்.

அல்லாஹும்ம அஇன்னீ அலை திக்ரிக வ ஷுக்ரிக வ ஹுஸ்னி இபாததிக்

யா அல்லாஹ்! உன்னை நினைக்கவும், நன்றி சொல்லவும், அழகாக வணங்கவும் எனக்கு உதவி செய்.

03/06/2026

தினமும் காலை, மாலை இதை ஓதினால் மன அமைதி, பரக்கத் மற்றும் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் இன்ஷாஅல்லாஹ்.

ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதன் வ ஃபில்ஆகிரதி ஹஸனதன்
இம்மையிலும் நன்மை, மறுமையிலும் நன்மை தருவாயாக.

Address

Sawarana
Chilaw Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when ArabTuber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category