11/06/2026
உங்களை நீங்களே அச்சத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்.
நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்:
கடன்படுவதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். நிச்சயமாக அது இரவில் கவலையையும், பகலில் இழிவையும் உண்டாக்குகிறது.
எனவே, தேவையற்ற கடன்களைத் தவிர்த்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, நிதானமாக வாழ முயற்சிப்போம். 🤍
அல்லாஹ் ஒருவருக்கு போதுமானவன் என்றால், அவருக்கு வேறு எதுவும் தேவையில்லை.
★ கடன் சுமையிலிருந்து மீள இஸ்லாம் கூறும் வழி என்ன?
**********************
★ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் கடன்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள். நிச்சயமாக அது இரவில் கவலையாகவும், பகலில் இழிவாகவும் இருக்கிறது".
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி) மற்றும் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி).
நூல்: பைஹகீ: 10090
_____________________________________________
★அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களை நீங்களே அச்சத்திற்குள்ளாக்கிக் கொள்ளாதீர்கள்!"
★அதற்கு தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (எங்களை நாங்களே அச்சத்துக்குள்ளாக்கும்) அது எது?" என்று கேட்டனர்.
★அதற்கு நபியவர்கள், "அதுதான் கடன் (சுமை) ஆகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: உக்பா பின் ஆமிர் (ரலி).
நூல்: அஹ்மத்: 17331.
_____________________________________________
★ கடன் சுமையிலிருந்து தப்பிக்க நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்.
★ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனின் கொடுமையிலிருந்து தப்பிக்க தினமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஓதிய பிரபலமான துஆ:
துஆ:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
★அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹஜன், வல் அஜ்ஜி வல் கஸல், வல் புக்லி வல் ஜுப்ன், வ ளலஇத் தயினி வ ஃகலபதிர் ரிஜால்.
பொருள்:
"இறைவா! கவலையிலிருந்தும், துக்கத்திலிருந்தும், பலவீனத்திலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், மனிதர்களின் அடக்குமுறையிலிருந்தும் (நெருக்கடியிலிருந்தும்) உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்."
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் (ரலி).
நூல்: புகாரி: 2893.