QSM Media

QSM Media சமூகத்தின் குரல்

13/05/2026

🟡 இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

🟧 உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது QSM Media செய்திகளுடன் இணைந்திருங்கள்!!

🔸 WhatsApp Group | 👇
https://chat.whatsapp.com/JostWH4s76d5MUdmXtcocM?mode=gi_t

12/05/2026

🟡 தெனியாய வலயப் பாடசாலைகள் மீள திறக்கப்படுகின்றன!

🟧 உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது QSM Media செய்திகளுடன் இணைந்திருங்கள்!!

🔸 WhatsApp Group | 👇
https://chat.whatsapp.com/JostWH4s76d5MUdmXtcocM?mode=gi_t

10/05/2026

🟡 தமிழக முதலமைச்சரானார் விஜய்

🟧 உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது QSM Media செய்திகளுடன் இணைந்திருங்கள்!!

🔸 WhatsApp Group | 👇
https://chat.whatsapp.com/JostWH4s76d5MUdmXtcocM?mode=gi_t

10/05/2026

🟡 தெனியாய பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை

🟧 உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ள எமது QSM Media செய்திகளுடன் இணைந்திருங்கள்!!

🔸 WhatsApp Group | 👇
https://chat.whatsapp.com/JostWH4s76d5MUdmXtcocM?mode=gi_t

09/05/2026

Welcome to Golden Wheels Auto Parts & Electricals

Your trusted destination for quality auto spare parts and professional vehicle electrical services. We provide expert diagnostics, battery replacement, wiring repairs, lighting solutions, alternator & starter repairs, and complete electrical maintenance for all vehicle types.

✅ Genuine Auto Parts
✅ Expert Technicians
✅ Fast & Reliable Service
✅ Affordable Prices
✅ Customer Satisfaction Guaranteed
✅Complete Electrical and Mechanical services

Keep your vehicle running smoothly with Golden Wheels — where quality meets reliability.

📍 Visit us today
https://share.google/eIlWzTjW8K9KlmX09

📞 contact us: 70031636

சாய்ந்தமருது தனியான நகர சபை பிரகடனம்;பாடுபட்ட அனைவருக்கும்  கோடான கோடி நன்றிகள்சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலை...
08/05/2026

சாய்ந்தமருது தனியான நகர சபை பிரகடனம்;
பாடுபட்ட அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் முபாரக்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது தனியான நகர சபை பிரகடனத்துக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும் என சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் முபாறக் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அபிலாஷையான சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை தேவை என்ற கோரிக்கைக்கு அமைவாக, ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டபூர்வமானது எனவும் சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லையை இரண்டு மாதங்களுக்குள் நிர்ணயித்து தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை உறுதிசெய்யப்பட்டதை முன்னிட்டு, துஆப் பிரார்த்தனை செய்யும் நிகழ்வும் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபைக்காக முழு மூச்சாக நின்று உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் இன்று (08) சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது.

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நன்றி கூறி உரையாற்றிய வேளை, இதற்காக அரும்பாடுபட்ட அனைவருக்கும் தமது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தமது நன்றியுரையில் அவர் மேலும் கூறியதாவது,

மதிப்பிற்குரிய உலமாக்களே, ஊர்பிரமுகர்களே வர்த்தக பெருமக்களே, கல்விமான்களே, மீனவர்களே, அன்புக்குரிய பெரியோர்களே, சகோதரர்களே, இளைஞர்களே மற்றும் எனது பாசத்திற்குரிய மருதூர் மண்ணின் மைந்தர்களே!

வீடுகளில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் எனது அன்பின் ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

எல்லாப் புகழும்
அல்லாஹ்வுக்கே அல்ஹம்துலில்லாஹ்!

நமது சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அபிலாஷையான சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை தேவை என்ற கோரிக்கைக்கு அமைவாக ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டபூர்வமானது எனவும் சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லையை இரண்டு மாதங்களுக்குள் நிர்ணயித்து தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நேற்றைய உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபை உறுதிசெய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்!

நமதூருக்கான தனியான சபை என்ற இலக்கை அடைந்ததற்கு முக்கிய காரணம் நமது மருதூரின் ஒற்றுமையும் ஓரணியில் நாம் அனைவரும் ஒன்று திரண்டு தனியான நகரசபை சாய்ந்தமருதுக்கு வேண்டும் என்ற ஒருமித்த கோஷத்தோடு செயற்பட்ட சமூக போராட்டமும், எங்கள் ஒவ்வொருவரினதும் துஆக்களினதும் பிரதிபலனாகும்.

இந்த இலக்கை அடைய அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களில் பெயர்சொல்லி குறிப்பிட வேண்டியவர்கள் மிக அதிகமானவர்கள் இருக்கின்றார்கள்‌. நேர முகாமைத்துவத்தை கருதி முக்கியமான சிலரை ஞாபகப்படுத்துகின்றேன்.

எங்களின் இந்த நகர சபை இலக்கை நோக்கி பயணிக்க சாய்ந்தமருது ஊரை ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப் படுத்தி எங்களுக்கு தலைமை வகித்த சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் மர்ஹும் வை.எம். ஹனீபா சேர் அவர்களின் ஆளுமையையும், செயற்பாட்டையும் எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு உயர்ந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கத்தை வழங்குவானாக! ஆமீன்.

அதேபோல எங்களின்‌ கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக் கொண்டு சாய்ந்தமருதுக்கான தனியான நகர சபைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட பக்கபலமாக இருந்த முன்னாள் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்‌ அவர்கள் செய்த வரலாற்று உதவியை நாங்கள் என்றென்றும் நன்றியுணர்வுடன் ஞாபகமூட்டி எங்களது ஊர்மக்கள் அனைவரது சார்பாகவும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது ஊரின் முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் சேர் அவர்கள் இந்த சபைக்கான முயற்சியில் மூளையாக செயற்பட்டு நிர்வாக மற்றும் அரசியல் ரீதியாக வழி நடத்தியதை ஞாபகப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.
அத்தோடு, எமது கௌரவ முன்னாள் மாநகர சபை சுயேட்சை உறுப்பினர்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பை நன்றியுடன்‌ நினைவூட்டுகின்றேன்.

இந்த நகரசபை போராட்டத்திற்காக நிதிப் பங்களிப்பு செய்த வர்த்தகர்கள், தனவந்தர்கள் உடல் ரீதியாக பங்களிப்பு செய்த இளைஞர்கள், அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊர்மக்கள் அனைவருக்கும் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபட்ட அனைவருக்கும் எங்களது கோடான கோடி நன்றிகளும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்.

இந்தப் போராட்டத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து வழக்குகளையும், விசாரணைகளையும், பல இன்னல்களையும் எதிர்கொண்ட இளைஞர்களுக்கு எங்களது நன்றிகளும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் ஈருலக வெற்றியையும் கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம்.

இறுதியாக நமது வர்த்தமானி அறிவித்தல் சட்ட பூர்வமானது என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் சேர் அவர்களுக்கும் முன்னாள் மாநகர சபை சுயேட்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் அவர்களுக்கும் நமது ஊர்மக்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு, இந்த உயர் நீதிமன்ற வழக்கிற்காக பண உதவி மற்றும் உடல் உதவி செய்தவர்களுக்கும் நன்றி சொல்வதோடு, இந்த வரலாற்று நீதியை பெற்றுத் தந்த பிரபல சட்டத்தரணிகளுக்கும் எங்களது சாய்ந்தமருது மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சாய்ந்தமருது மக்களாகிய நாம் அரசியலில் கட்சிரீதியாக எந்த அணியில் பிரிந்து இருந்தாலும் எங்கள் அனைவரதும் இலக்கு சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றமே!

அந்த வகையில் இந்த நகரசபையின் அடுத்த கட்ட செயற்பாடுகளான எல்லை நிர்ணயம் வட்டாரப் பிரிப்பு போன்ற நகரசபை செயற்பாடுகளுக்கு எமது ஊரின்‌ தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா சேர் அவர்கள் எதிர்காலத்தில் முழு முயற்சி செய்து சாய்ந்தமருது நகர சபையை நடைமுறைச் செயற்பாடுகளுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் மிகவும் அன்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

"இறுதியாக,
இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாம் நிதானத்தை இழந்துவிடக் கூடாது. நமது வெற்றி மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. மிகவும் கண்ணியமான முறையில் அல்லாஹ்வுக்கு நன்றி கூறி, இந்த வெற்றியை அனுஷ்டிப்போம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நமது சாய்ந்தமருது மண்ணை செழிக்கச் செய்வானாக! இந்தப் புதிய உள்ளூராட்சி சபை மூலம் நமது மக்களின் வாழ்வாதாரமும், உட்கட்டமைப்பும்,கல்வித் தரமும் உயரட்டும். நாம் அனைவரும் கைகோர்த்து, ஒரு பலமான, வளமான சாய்ந்தமருதை உருவாக்குவோம் என்று இந்த புனிதமான பள்ளிவாசல் முன்றலில் நின்று உறுதி ஏற்போம்.
எமது மண்ணின் உரிமை எமது கையில்! வெற்றி நிச்சயம்! அல்லாஹூ அக்பர்! வாழ்க சாய்ந்தமருது! என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் துஆப் பிரார்த்தனையை சாய்ந்தமருது ஹுதாப் பள்ளிவாசல் பேஷ்இமாம் எம்.எச்.எம். நப்றாஸ் (றஹ்மானி) மேற்கொண்டார்.

இதன்போது சாய்ந்தமருதூர் மக்கள் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் முகமாக ஒருவருக்கொருவர் முஸாபஹா செய்து, இனிப்புக்கள் வழங்கி, தமது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தியதையும் காணக் கூடியதாக இருந்தது.

இந்நிகழ்வில், முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், முன்னாள் மாநகர சபை சுயேட்சை குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

போர் நிறுத்தம் - அமெரிக்காவின் புதிய திட்டத்தைத் தீவிரமாக பரிசீலித்து வரும் ஈரான்!மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை ...
07/05/2026

போர் நிறுத்தம் - அமெரிக்காவின் புதிய திட்டத்தைத் தீவிரமாக பரிசீலித்து வரும் ஈரான்!

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட புதிய அமைதித் திட்டத்தை ஈரான் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர, 14 அம்சங்களைக் கொண்ட புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவுத் திட்டத்தை தாங்கள் தற்போது மதிப்பாய்வு செய்து வருவதாகவும், இது தொடர்பான தமது அதிகாரப்பூர்வ பதிலை மத்தியஸ்தராகச் செயல்படும் பாகிஸ்தான் ஊடாக விரைவில் அமெரிக்காவிற்குத் தெரிவிக்கவுள்ளதாகவும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த அமைதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

இந்த ஆரம்பக்கட்ட ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்தால், அடுத்த 30 நாட்களுக்குள் முழுமையான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான விரிவான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.

ஒப்பந்தம் முழுமையடையும் பட்சத்தில், அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் பல பில்லியன் டொலர் நிதியை விடுவித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கும்.

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றும் ஹார்முஸ் நீரிணையில் இரு நாடுகளும் விதித்துள்ள கடல்வழி முற்றுகைகளை விலக்கிக்கொண்டு, சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை மீண்டும் சீராக்குவது குறித்தும் இதில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

தற்போதைய நிலையில், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதையே இந்தத் திட்டம் முதன்மைப்படுத்துகிறது. எனவே, ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் திட்டம் தொடர்பான சிக்கலான விவாதங்களை அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்திவைக்க இரு தரப்பும் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஈரான் முழுமையாகச் சம்மதித்தால் போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பும் ஒரு இறுதி ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாக பாகிஸ்தான் வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், ஈரான் மீண்டும் அத்துமீறினால் இராணுவத் தாக்குதல்களைத் தொடரவும் அமெரிக்கா தயங்காது என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்தத் தூதரக நகர்வு, சர்வதேச எண்ணெய் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், பல வாரங்களாக மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கும் என உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்க்கின்றன.

இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம்கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்றும்(07) நாளையும்(08) விசேட போக்குவரத்து திட்டம...
07/05/2026

இன்றும் நாளையும் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பை அண்டிய பகுதிகளில் இன்றும்(07) நாளையும்(08) விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வியட்நாம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று(07) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள வியட்நாம் ஜனாதிபதி To Lam, அதிவேக நெடுஞ்சாலை, கிராண்ட்பாஸ், ஒருகொடவத்தை சந்தி, பேஸ்லைன் வீதி, பொரளை சந்தி, டி.எஸ்.சேனாநாயக்க சந்தி, ஹோர்டன் பிளேஸ், தாமரை தடாக சுற்றுவட்டம், ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, நூலக சந்தி, ஃபிளவர் வீதி சந்தி, லிபர்டி சுற்றுவட்டம், புனித மைக்கல் சுற்றுவட்டம், புனித மைக்கல் வீதி, காலி வீதி, புனித மைக்கல் வீதி சந்தி, காலி வீதி, காலிமுகத் திடல் சுற்றுவட்டம், காலி மத்திய வீதி, பாலதக்‌ஷ மாவத்தை, என்.எஸ்.ஏ.சுற்றுவட்டம், லோட்டஸ் வீதி, பித்தளை சந்தி மற்றும் யோர்க் வீதி ஊடாக பயணிக்கவுள்ளார்.

இதனிடையே, நாளைய தினம்(08) என்.எஸ்.ஏ.சுற்றுவட்டம், காலி மத்திய வீதி, வங்கி மாவத்தை ஊடாக ஜனாதிபதி செயலகம் வரையான வீதியில் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் உட்பிரவேசித்தல், வியட்நாம் ஜனாதிபதியின் பயணம் ஆரம்பிக்கப்படுவதற்கு 02 மணித்தியாலங்களுக்கு முன்னதாக நிறுத்தப்பட வேண்டும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்புநேற்று (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அத...
07/05/2026

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

நேற்று (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு கொள்கலன் விலை 545 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 5700 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 6,245 ரூபாவாகும்.

5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் விலையானது 220 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2,280 ரூபாவாக இருந்த இதன் புதிய விலை 2,500 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் சமூகப் போராட்டத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்தது - நகரசபை ...
07/05/2026

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் சமூகப் போராட்டத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி கிடைத்தது - நகரசபை பிரகடனத்துக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது!!

சாய்ந்தமருது நகர சபை தொடர்பான வழக்கு தீர்ப்பு தமிழில் சுருக்கமாக:

(Riswan's Law Desk)

நீதிமன்றத்தின் அவதானிப்புகள்

01.​வர்த்தமானியின் செல்லுபடித் தன்மை: ஒரு நிர்வாக அறிவித்தலை ரத்து செய்ய வேண்டுமானால், அதை வெளியிட்ட அதே அதிகாரி (அமைச்சர்) அதே முறையில் சட்டப்பூர்வமாகச் செய்ய வேண்டும். இணையதளத்திலிருந்து நீக்குவதோ அல்லது செயலாளர் கடிதம் அனுப்புவதோ அந்த அறிவித்தலைச் செல்லாததாக்காது. எனவே, சாய்ந்தமருது நகர சபையை உருவாக்கிய வர்த்தமானி (P8) இன்னும் செல்லுபடியாகும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

02. ​அடிப்படை உரிமை மீறல்: சாய்ந்தமருது நகர சபைக்கு வார்டுகளை (Wards) எல்லை நிர்ணயம் செய்யத் தவறியதன் மூலமும், தேர்தலை நடத்தத் தவறியதன் மூலமும் மனுதாரர்களின் சமத்துவத்திற்கான உரிமை (Article 12(1)) மற்றும் வாக்களிக்கும் உரிமை (Article 14(1)(a)) மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கண்டறிந்தது.

​நீதிமன்றத்தின் கட்டளைகள்

​நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளை வழங்கியது:

01.​சாய்ந்தமருது நகர சபை சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது.

02.​கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபைக்கான எல்லை நிர்ணய பணிகளை (Delimitation) உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

03. ​எல்லை நிர்ணயக் குழு அமைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அதன் பரிந்துரைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

04. ​அதன்பிறகு, சாய்ந்தமருது நகர சபை மற்றும் கல்முனை மாநகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.

Full details in English:
https://supremecourt.lk/wp-content/uploads/judgements/sc_fr_7_2023.pdf

சில மாவட்டங்களுக்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு!நாட்டை சூழவுள்ள அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும...
06/05/2026

சில மாவட்டங்களுக்கு 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்ய வாய்ப்பு!

நாட்டை சூழவுள்ள அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும் அதனுடன் இணைந்ததாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலையும் காரணமாக, இன்று (06) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மேகமூட்டமான வானிலை காணப்படுவதுடன், காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Address

Colombo
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when QSM Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share