Ilvislam

Ilvislam அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

சோதனைகளின் போது, கஷ்டங்களின்போது ஏற்படக்கூடிய பயம் தான் மனிதர்களை நிலைகுலையச் செய்கிறது. நபி மூஸா (அலை) அவர்களின் தாய் ப...
12/12/2025

சோதனைகளின் போது, கஷ்டங்களின்போது ஏற்படக்கூடிய பயம் தான் மனிதர்களை நிலைகுலையச் செய்கிறது. நபி மூஸா (அலை) அவர்களின் தாய் பயந்தார்கள்! ஃபிர்அவ்னின் கரத்தில் இந்த ஆண்குழந்தை கிடைத்தால் அறுத்து விடுவான் என்று, இறைவன் கூறுகிறான்: மூஸா நபியின் தாயைப் பார்த்து பயம் கொள்ளாதே! மூஸாவின் தாயே' ஆற்றில் விடு'நான் சொல்கிறேன் விடு' இந்த குழந்தையை உன்னிடம் மீட்டுக் கொண்டு வருவேன் என்று,எந்த ஃபிர்அவ்னின் கையில் கிடைத்தால் அறுத்து விடுவானோ என்ற பயத்தில் இருந்தார்களோ ' அதே ஃபிர்அவ்னின் கரத்தாலேயே மூஸா நபியின் தாய்க்கு அதே குழந்தையை கொடுக்கச் செய்தான் இறைவன் சுப்ஹானல்லாஹ்!..

பயம் , தயக்கம்,கவலை எதுவும் வேண்டாம்...
இறைவன் ஒருவனே போதுமானவன்...
உறவுகளே!...
அல்லாஹ்வின் பாதை இலகுவானது..
அல்லாஹ்வின் அன்பு மகத்துவமானது...
அல்லாஹ்வின் மன்னிப்பு பெறுமதியானது..
அல்லாஹ் மட்டுமே எமக்கு போதுமானவன்...

WhatsApp Group Invite

நபிகளாருக்கு பழம் வழங்கியவர்..🍇******************************************மக்கா முகர்ரமாதாயிஃப்...இறைசெய்தியை மக்களுக்கு ...
11/12/2025

நபிகளாருக்கு பழம் வழங்கியவர்..🍇
******************************************

மக்கா முகர்ரமா

தாயிஃப்...

இறைசெய்தியை மக்களுக்கு எடுத்துக் கூற ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிஃப் சென்றார்கள்.

இறை செய்தியை ஏற்காத அந்த மக்களால் நபிகளார் கடுமையாக தாக்கப்பட்டார்கள்.

ரத்த காயங்களுடன் ஒரு தோட்டத்தில் நுழைந்து தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள்.

அங்கு வந்த அந்த தோட்டத்தில் அத்ᵈʰதாஸ் என்பவர் நபிகளாரின் நிலை கண்டு மனம் இரங்கி தோட்டத்தில் இருந்து திராட்சை குலைகளை கொண்டு வந்து கொடுக்கிறார்.

நபிகளாரின் அழைப்பு பணிகள் குறித்து கேட்டறிகிறார்.

பிற்காலத்தில் இறைநெறியில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

அந்த தோட்டத்தை தான் காண்கிறீர்கள்.

அந்த தோட்டத்தில் அத்ᵈʰதாஸ் அவர்கள் பெயரில் மஸ்ஜித் உள்ளது..

~ முஜீபுர் ரஹ்மான் சிராஜி

https://whatsapp.com/channel/0029VbBgGL1CxoB3MjTU1S2B

📝இந்த உலகம்  நிழல் போன்றது.💯 > ✨ஏனெனில், அதை அடைய வேண்டும் என்று அதை நோக்கி ஓடினால் அது எங்களை விட்டும் விலகி ஓடும். > ம...
08/11/2025

📝இந்த உலகம் நிழல் போன்றது.💯

> ✨ஏனெனில், அதை அடைய வேண்டும் என்று அதை நோக்கி ஓடினால் அது எங்களை விட்டும் விலகி ஓடும்.

> மாறாக, அதைக் கண்டு கொள்ளாமல் அதை கடந்து செல்ல முற்பட்டால் அந்த நிழல் எங்களை நோக்கி ஓடி வரும்..💫💯

இவ்வாறுதான் உலக ஆடம்பரங்களும்...💯

💫உலக ஆடம்பரங்களை கண்டு ஏமாந்து விடாமல், மறுமைக்காக எங்களை தயார் படுத்திக் கொள்வோம்..⭐
┈┉┅━❥︎.🤍.❥︎━┅┉┈

WhatsApp Group Invite

📝இந்த உலகம் உங்களது நிழல் போன்றது.💯 ✨ஏனெனில், அதை அடைய வேண்டும் என்று அதை நோக்கி ஓடினால் அது எங்களை விட்டும் விலகி ஓடும்...
06/11/2025

📝இந்த உலகம் உங்களது நிழல் போன்றது.💯

✨ஏனெனில், அதை அடைய வேண்டும் என்று அதை நோக்கி ஓடினால் அது எங்களை விட்டும் விலகி ஓடும்.

மாறாக, அதைக் கண்டு கொள்ளாமல் அதை கடந்து செல்ல முற்பட்டால் அந்த நிழல் எங்களை நோக்கி ஓடி வரும்..💫💯

இவ்வாறுதான் உலக ஆடம்பரங்களும்...💯

💫உலக ஆடம்பரங்களை கண்டு ஏமாந்து விடாமல், மறுமைக்காக எங்களை தயார் படுத்திக் கொள்வோம்..⭐
┈┉┅━❥︎.🤍.❥︎━┅┉┈

WhatsApp Group Invite

💝யாராவது உன்னை ஒதுக்கி வைத்தால், அல்லது தூக்கி எறிந்தால் அதனை நினைத்து கவலைப்படாதே. யார் உன்னை எந்த தூரத்தில் வைக்கிறார்...
05/11/2025

💝யாராவது உன்னை ஒதுக்கி வைத்தால், அல்லது தூக்கி எறிந்தால் அதனை நினைத்து கவலைப்படாதே. யார் உன்னை எந்த தூரத்தில் வைக்கிறார்களோ அந்த தூரத்திலே வாழக் கற்றுக் கொள். அவர்களின் மனசாட்சி உன்னை பற்றிய உண்மைகளை அவர்களுக்கு சொல்லும். இவர்கள் ஒதுக்கி வைத்தால் என்ன? தூக்கி எறிந்தால் என்னே? உனக்கு ஒரு நஷ்டமும் ஆகப் போவதில்லை. உன்னைப் படைத்தவன் உன்னோடு இருக்கினான். உனக்கு அது போதாதா??...!

https://chat.whatsapp.com/KdPB1YNDmjeGRqZJ6U06rI

மஸ்ஜிதுல் ஹராம் இமாமாக உள்ள ஷெய்க் அப்துல்லாஹ் அல் ஜுஹைனி அவர்களின் தந்தை அவ்வாத் பின் பஹ்த் அல் துப்யானி அல் ஜுஹைனி அவர...
04/11/2025

மஸ்ஜிதுல் ஹராம் இமாமாக உள்ள ஷெய்க் அப்துல்லாஹ் அல் ஜுஹைனி அவர்களின் தந்தை அவ்வாத் பின் பஹ்த் அல் துப்யானி அல் ஜுஹைனி அவர்கள் வபாᶠத்தாகி விட்டார்கள்..
إنا لله وإنا إليه راجعون
அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொண்டு மேலான ஜன்னத்துல் பிᶠர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பானாக..
ஆமீன் 🤲

اللهم اغفر له وارحمه، وعافه واعفُ عنه، وأكرم نُزله، ووسع مُدخله، واغسله بالماء والثلج والبرد، ونقّه من الخطايا كما يُنقّى الثوب الأبيض من الدنس

கஅபாவில் நீந்தி தவாஃப் செய்த ஒரே மனிதர் – அலி அல் அவ்ளிபஹ்ரைனில் பிறந்த அலி அல் அவ்ளி என்ற இளைஞரை உலகம் பெரிதாக அறியாது....
03/11/2025

கஅபாவில் நீந்தி தவாஃப் செய்த ஒரே மனிதர் – அலி அல் அவ்ளி

பஹ்ரைனில் பிறந்த அலி அல் அவ்ளி என்ற இளைஞரை உலகம் பெரிதாக அறியாது. ஆனால் அவரின் கையில் இருந்த ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பரவியது. அந்த புகைப்படத்தில் கஅபாவைச் சுற்றி நீரில் நீந்தும் நபர் வேறு யாருமல்ல — அவரே.

1941 ஆம் ஆண்டு மக்காவில் ஒரு வாரம் இடைவிடாது பலத்த மழை பெய்தது. அதன் விளைவாக ஹரம் ஷரீஃப் வெள்ளத்தில் மூழ்கியது. தவாஃப் செய்யும் மதாஃப் பகுதி ஒன்றரை மீட்டர் உயரம் வரை நீரால் நிரம்பி, ஹஜருல் அஸ்வத் கல் கூட நீரில் மூழ்கியது.

அந்த சமயத்தில் இளைஞராக இருந்த அலி அல் அவ்ளி, கஅபாவை நீந்தி தவாஃப் செய்ய முடிவு செய்தார். மழையின் கடைசி நாளில் தம் சகோதரர், நண்பர்கள் மற்றும் ஆசிரியருடன் ஹரம் ஷரீஃபுக்குச் சென்றபோது இந்த எண்ணம் அவருக்கு தோன்றியது.

தண்ணீரால் சூழப்பட்ட கஅபாவின் அற்புதமான காட்சியைப் பார்த்த அல்அவ்ளி, வழக்கத்துக்கு மாறாக நீச்சல் அடித்து தவாஃப் செய்ய நினைத்தார். உடனே தமது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் நீரில் இறங்கி, கஅபாவைச் சுற்றி ஏழு முறை நீந்தி தவாஃப் செய்தார்.

அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இன்று வரலாற்றில் அரிய நினைவாக மாறியுள்ளது.

யாரும் முன்வராத ஒரு நல்ல செயலை தைரியத்துடன் மேற்கொண்ட ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய அரிய வாய்ப்பாக இது மாறியது. இன்றுவரை மீண்டும் அத்தகைய தருணம் நிகழவில்லை; இனிமேலும் நிகழுமா என்பது தெரியாது.

குதிரைக் குட்டிகள் பிறந்தவுடன் அவற்றின் கால்கள் இப்படித்தான் இருக்கும். 'தங்கச் செருப்புகள்’ இவை அழைக்கப்படுகின்றன.இதன் ...
31/10/2025

குதிரைக் குட்டிகள் பிறந்தவுடன் அவற்றின் கால்கள் இப்படித்தான் இருக்கும். 'தங்கச் செருப்புகள்’ இவை அழைக்கப்படுகின்றன.

இதன் அறிவியல் பெயர் 'எப்போனிச்சியம்’ (Eponychium) என்பதாகும். அதாவது குதிரைக் குட்டியின் குளம்புகளை மறைக்கும் மென்மையான மெத்தை போன்ற அடுக்கு என்று பொருள்.

கருவில் இருக்கும்போது தாயின் கருப்பையை கூர்மையான உதைகளில் இருந்து பாதுகாத்து, குளம்புகளுக்கு தீங்கு ஏற்படாமல், பாதுகாப்பான பிரசவம் ஏற்பட வேண்டும் என்பதற்கான இறைவனின் ஏற்பாடு இது.

குதிரைக் குட்டி பிறந்தவுடன் இந்த அடுக்கு வறண்டு படிப்படியாக உதிர்ந்து, கீழே இருக்கும் கடினமான குளம்புகள் வெளிப்படும். சில மணி நேரங்களுக்குள் இந்த 'தங்கச் செருப்புகள்’ ஒருபோதும் இல்லாதது போல், வலியின்றி எந்தத் தடயமும் இல்லாமல் மறைந்துவிடும்.

பின்னர் அந்தக் குதிரைக் குட்டிகளை அதீத கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இல்லையேல் அவை வீணாகி பயணத்திற்கும் போருக்கும் ஏற்ற குதிரைகளாக இருக்காது.

இறைவன் எவ்வளவு அற்புதமான படைப்பாளன். அவனுடைய படைப்பாற்றல்தான் என்னே...!

நமது தர்மங்களிலும் இப்படித்தான் உச்சபட்ச எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையேல் அவை வீணாகிவிடும்.

தர்மப் பொருள் எதுவாக இருந்தாலும் அதை அல்லாஹ்வுக்காகக் கொடுக்கும்போது தமது வலக்கரத்தால் அதை அவன் ஏந்திக்கொள்கிறான்.

பின்னர் என்ன நடக்கும்..? இறைத்தூதர் (ஸல்) அவர்களே அதைக் கூறுகிறார்கள்:

"யார் தூய்மையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ, அதை நிச்சயம் அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொள்கிறான். பிறகு உங்களில் ஒருவர் தமது குதிரைக் குட்டியை கவனத்துடன் வளர்ப்பது போன்று, அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு அவருக்காக வளர்ச்சி அடையச் செய்கிறான்”. (புகாரி)

இந்த நபிமொழியையும் அந்தத் தகவலையும் ஒப்பிட்டு நோக்கும்போது வியப்புதான் ஏற்படுகிறது!

✍️ நூஹ் மஹ்ழரி

https://chat.whatsapp.com/KdPB1YNDmjeGRqZJ6U06rI

அன்னையரின் அரவணைப்பில்..! 💞********************************மதீனா முனவ்வராமஸ்ஜிதுன்னபவியின் அருகாமையில் உள்ள ஜன்னத்துல் ப...
30/10/2025

அன்னையரின் அரவணைப்பில்..! 💞
********************************

மதீனா முனவ்வரா

மஸ்ஜிதுன்னபவியின் அருகாமையில் உள்ள ஜன்னத்துல் பகீவு கப்ருஸ்தானில் வலது புறம் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியர்களின் மக்பரா உள்ளது.

தினமும் இந்த பூனை அன்னையர்களின் கப்ருக்கு அருகாமையில் படுத்து அயர்ந்து உறங்கிவிட்டு செல்வதைப் பார்க்கலாம்.

பாக்கியம் பெற்ற பூனை..! 💖🐈

பாகிஸ்தானைச் சேர்ந்த 82 வயதான அப்துல் காதிர் 🇵🇰, கடந்த ஆண்டு உம்ரா செய்வதற்காக, ஒரு சிறிய கிராமத்தில் ஆடு மேய்த்து 🐐 15 ...
29/10/2025

பாகிஸ்தானைச் சேர்ந்த 82 வயதான அப்துல் காதிர் 🇵🇰, கடந்த ஆண்டு உம்ரா செய்வதற்காக, ஒரு சிறிய கிராமத்தில் ஆடு மேய்த்து 🐐 15 ஆண்டுகள் பணம் சேமித்துள்ளார்.

மற்றவர்கள் சந்தோசம் உன்னை  நோவினை படுத்தப்போவதில்லை,மற்றவர்களின் செல்வம் உன்னுடைய ரிஸ்கில் (வாழ்வாதாரத்தில்) எவ்வித குறை...
26/10/2025

மற்றவர்கள் சந்தோசம் உன்னை நோவினை படுத்தப்போவதில்லை,

மற்றவர்களின் செல்வம் உன்னுடைய ரிஸ்கில் (வாழ்வாதாரத்தில்) எவ்வித குறைகளையும் ஏற்படுத்தப்போவதில்லை,

உனக்காக ஆசை வைக்கும் அனைத்தையும் ஏனையவர்களுக்காகவும் ஆசை வை,
எவ்வித கசடுகளும் அல்லாத தூய மனதுடன் வாழ்..

கீழே உள்ள லிங்கின் ஊடாக வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கொள்ளவும்..

https://chat.whatsapp.com/KdPB1YNDmjeGRqZJ6U06rI

காஸா பகுதியில் கிங் சல்மான் மனிதாபிமான மையத்தின் நீர் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம்​ஸஊதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிம...
26/10/2025

காஸா பகுதியில் கிங் சல்மான் மனிதாபிமான மையத்தின் நீர் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம்

​ஸஊதி அரேபியாவின் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (King Salman Humanitarian Aid and Relief Centre - KSrelief), காஸா பகுதியில் அதிகரித்து வரும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் விதமாக ஒரு முக்கிய நீர் சுத்திகரிப்பு ஆலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸஊதி அரேபிய இராச்சியத்தின் தொடர்ச்சியான மனிதாபிமான முயற்சிகளின் ஒரு பகுதியாக, காஸாவில் உள்ள பாலஸ்தீனிய மக்களின் கடினமான வாழ்க்கைச் சூழலைத் தணிப்பதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

🔹️​திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் இலக்குகள்:

​KSrelief அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டம், நீர் மற்றும் சுகாதாரத் துறையில் உடனடி மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம் காஸா பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். இந்தத் திட்டம் பின்வரும் முக்கிய இலக்குகளைக் கொண்டுள்ளது:

🔸️​சுகாதாரத் துறைக்கு ஆதரவு: நீர் மற்றும் சுகாதாரத் துறைக்குத் தேவையான அத்தியாவசிய ஆதரவை வழங்குவதன் மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல்.

🔸️​சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுதல்: காஸா பகுதி முழுவதும், குறிப்பாக கான் யூனிஸ் (Khan Yunis) மற்றும் மத்திய ஆளுநரகங்களில் (Middle Governorates) அத்தியாவசியமான இடங்களில் நீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுதல்.

🔸️​பொது மக்களுக்குச் சேவை: இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 300,000 நபர்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல்.

🔹️​திட்டத்தின் செயல்படுத்தல் விவரங்கள்:

​இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலா (Deir al-Balah) ஆளுநரகங்களில் நான்கு நீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவும் பணி தொடங்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில் KSrelief-ன் நிர்வாகப் பங்காளராகச் செயல்படும் ஸஊதி கலாச்சார மற்றும் பாரம்பரிய மையம் இந்த ஆலைகளைப் பெற்று நிறுவுவதைக் கண்காணிக்கிறது.

▪️​சூரிய சக்தியில் இயக்கம்: இந்த சுத்திகரிப்பு ஆலைகளின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அவை சூரிய சக்தி அமைப்புகளால் இயக்கப்படுகின்றன. காஸாவில் மின்சாரம் அடிக்கடி தடைபடும் சூழலில், சூரிய சக்தியைப் பயன்படுத்துவது இந்த ஆலைகளின் செயல்பாட்டில் நிலைத்தன்மையை உறுதி செய்வதோடு, நம்பகத்தன்மையையும் அதிகரிக்கும்.

▪️​உற்பத்தித் திறன்: ஒவ்வொரு ஆலைக்கும் நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 கன மீட்டர் வரை நீர் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது.

🔹️​மனிதாபிமானத்தின் முக்கியத்துவம்:
​காஸா பகுதியில் நிலவும் கடுமையான மனிதாபிமான நெருக்கடியின் மத்தியில், சுத்தமான குடிநீர் என்பது ஒரு அரிய பொருளாக உள்ளது. கிங் ஸல்மான் மனிதாபிமான மையத்தின் இந்த முயற்சி, சுகாதாரமான குடிநீருக்கான அத்தியாவசிய தேவையை நிவர்த்தி செய்கிறது. மேலும், இது இடம்பெயர்ந்தோர் முகாம்கள் மற்றும் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனளிக்கும்.

​மொத்தத்தில், இந்த நீர் சுத்திகரிப்பு ஆலைத் திட்டம் ஸஊதி அரேபியா பாலஸ்தீனிய மக்களுக்கு வழங்கும் நிலையான ஆதரவின் ஒரு தெளிவான சான்றாகும். இது காஸா மக்களின் அன்றாட வாழ்க்கை நெருக்கடியைத் தணிக்கும் ஒரு முக்கியமான படியாகும்.

Address

Colombo 15
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Ilvislam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ilvislam:

Share