Ilvislam

Ilvislam அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

`மனிதனின் நிரந்தர தங்குமிடம்` ===================*இவ்வுலகம் முஸ்லிம்களின் (நிரந்தர) தங்குமிடமில்லை.**நிச்சயமாக முஸ்லிம்க...
07/10/2025

`மனிதனின் நிரந்தர தங்குமிடம்`
===================
*இவ்வுலகம் முஸ்லிம்களின் (நிரந்தர) தங்குமிடமில்லை.*

*நிச்சயமாக முஸ்லிம்களின் தங்குமிடமாக சுவனம் இருக்கின்றது.*

*மனிதன் தோற்றுவிக்கப்பட்டதின் நோக்கமே சுவனத்திற்காக வேண்டி செயற்படவே.*
┈┉┅━❥︎.🤍.❥︎━┅┉┈

04/10/2025

الذي يَبحث عَن السعَادة بدون صَلاة، كالذي يُريد
أن يُصبح كَاتباً وهو لا يَجيد القِراءة.

எவரொருவர் தொழுகையை நிறைவேற்றாமல் சந்தோசத்தை, மகிழ்ச்சியை தேடுகிறாரோ...

அவர் வாசிக்கத் தெரியாமல் எழுத்தாளராக ஆகுவதற்கு விரும்புபவரை போல!!!┈┉┅━❥︎.🤍.❥︎━┅┉┈

04/10/2025

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு...

ரப்பிடம் முறையிடும் போது வரும் அழுகை, நிச்சயமாக ஒரு அருள் மருந்தாக இருக்கும்...

ஹஜ்ரத் உத்மான் (ரலி) வாங்கிய கிணறு...! 🏞️💧ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் ஹிஜ்ரத் செய்து...
03/10/2025

ஹஜ்ரத் உத்மான் (ரலி) வாங்கிய கிணறு...! 🏞️💧

ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் ஹிஜ்ரத் செய்து வந்த பிறகு மதீனா முனவ்வரா நகரில் குடிப்பதற்கான நல்ல தண்ணீர் மிக பஞ்சமாக இருந்தது.

பிஃரு ரூமா என்ற ஒரு கிணற்றில் தான் நல்ல சுவையான தண்ணீர் கிடைக்கும்.

ஆனால் அது ஒரு யூதருக்கு சொந்தமானது. அதில் தண்ணீர் எடுக்க அவர் கெடுபிடி செய்து வந்தார்.
அந்த நேரத்தில் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களிடம்
"யார் பிஃரு ரூமா கிணற்றை விலைக்கு வாங்கி மூஃமின்களுக்கு வக்ஃப் செய்கிறார்களோ அவர்களுக்கு சுவனத்தில் ஒரு நீருற்று வாங்கித்தர பொறுப்பேற்கிறேன்.." என அறிவிப்புச் செய்தார்கள்.

எப்படியும் தனது கிணற்றை விலைக்கு வாங்க வருவார்கள்.. என அறிந்து கொண்ட அந்த யூதன் அதற்கான விலையை பல மடங்கு உயர்த்தி விடுகிறார்.

நன்மையான காரியங்களுக்காக செலவிடுவதில் எப்போதும் முன்னணியில் உள்ள ஹஜ்ரத் உத்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த காலத்திலேயே பனிரெண்டாயிரம் திர்ஹம் கொடுத்து அந்த கிணற்றை வாங்கி முஃமின்களுக்காக வக்ஃப் செய்தார்.

இதனால் ஹஜ்ரத் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
(அந்த கிணறு மற்றும் அந்த கிணறு உள்ள தோட்டம் இது தான்.! .)

#உஸ்மான்ரழி

02/10/2025

அன்பியாக்கள் யாவரும், "மஃஸூம்கள்" ஆனாலும், அழ்ழாஹ்விடத்தில் இஸ்திஃபார், தௌபா செய்துக் கொண்டேயிருந்தார்கள்.

ஸஹாபாக்கள், தாம் உலகில் வாழும் காலத்திலேயே, "ரழியழ்ழாஹு அன்ஹும் வரழூ அன்ஹு" என்ற நன்மாரயத்தைப் பெற்றவர்கள். ஆனாலும், ஸக்கராத், கப்ர், பர்ஸஃக், ஆஃகிரா பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

உதாரணமாக:

- உமர் இப்னு ஃகத்தாப் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றிருந்தும் தன்னுடைய பெயர் முனாஃபிக்கீன்களின் பெயர் பட்டியலில் உள்ளதா என்று ஹுஸைஃபதுப்னு யமனி ரழியழ்ழாஹு அன்ஹு அவர்களிடம் விசாரித்துக் கொண்டேயிருந்தார்கள். ஏனெனில், "முனாஃபிக்கீன்கள் நரகின் அடித்தட்டில் இருப்பார்கள்" என்று குர்ஆன் கூறுகிறது.

- உஸ்மான் இப்னு அஃப்பான் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்றிருந்தும் மக்பராவுக்கு சென்றால் தாடி நனையும் அளவு அழுவார்கள். ஏனெனில், "ஆஃகிராவுடைய முதல் மன்ஸில் கப்ர்".

- ஸஅத் இப்னு முஆத் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் வஃபாத்துக்காக ரஹ்மானின் அர்ஷ் நடுங்கியது. அழ்ழாஹ், எழுபதாயிரம் மலக்குகளை ஜனாஸாவில் கலந்துக் கொள்ள அனுப்பி வைத்தான். ஆனாலும், ஸஅத் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்களை கப்ர் நெருக்கப் பார்த்தது.

அன்பியாக்கள், ஸஹாபாக்கள் கப்ர், பர்ஸஃக், ஆஃகிரா பற்றி கவலையுற்று பயந்து நடுங்கியதுப் போன்று இறைநேசர்களான அவ்லியாக்களும் பயந்து நடுங்கினார்கள்.

சுல்தானுல் அவ்லியா குத்புல் அக்தாப் கௌஸுல் அஃலம் ஷைஃகுல் இஸ்லாம் இமாம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுழ்ழாஹ் அவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றபோது புனித ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு அருகே வந்து,

"யா அழ்ழாஹ்! எனது எல்லாப் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக! ஒருவேளை நீ என்னை மன்னிக்கா விட்டால், கியாமத்தில் எனது பார்வையைப் பிடுங்கி குருடனாக எழுப்பாட்டுவாயாக! நான் பரிசுத்தமானவனாக இருக்கும் நிலையிலேயே கியாமத்தில் ஸாலிஹீன்களை பார்க்க விரும்புகிறேன். நான் பாவியாக இருந்துக் கொண்டு கியாமத்தில் ஸாலிஹீன்களை காண்பதற்கு வெட்கப்படுகிறேன் நாயனே!"என்று அழுதழுது துஆ செய்தார்கள்.

[அல் முஃக்தஸர் ஃபீ அஃக்பாரில் பஷர்- அல்லாமா அபுல் ஃபிதா ரஹிமஹுழ்ழாஹ்]


#முஹியித்தீன்_அப்துல்_காதிர்_ஜீலானி
#ரஹிமஹுழ்ழாஹ்❤️

⭐இம்மையா❓மறுமையா❓📖 அல்குர்ஆன் பேசும் பொருள்களில் இம்மை வாழ்வு, மறுமை வாழ்வு தொடர்பிலான அதன் விளக்கம் அதி கூடிய முக்கியத்...
02/10/2025

⭐இம்மையா❓
மறுமையா❓

📖 அல்குர்ஆன் பேசும் பொருள்களில் இம்மை வாழ்வு, மறுமை வாழ்வு தொடர்பிலான அதன் விளக்கம் அதி கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது.

📖 மறுமையுடன் ஒப்பிடும்போது உலக வாழ்வு எத்தகையது என்பது பற்றியும் உலக வாழ்வுடன் ஒப்பிடும்போது மறுமை வாழ்வு எப்படிப்பட்டது என்பது பற்றியும் உதாரணங்கள் மூலமும் உவமைகள் மூலமும் அல்குர்ஆன் விளக்கும் விதம் அற்புதமானது.

📖 மறுமை வாழ்வுக்கு முன்னால் உலக வாழ்வு எவ்வளவு அற்பமானது என்பதை விளக்கும் அல்குர்ஆன் வசனங்களில் ஒன்று பின்வருமாறு:

📖 فَمَا مَتَٰعُ ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا فِي ٱلۡأٓخِرَةِ إِلَّا قَلِيلٌ

"மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது."
( 9: 38)

இந்த வசனம் சொல்லும் செய்தி என்ன❓

📍உலக சுகபோகங்களைப் பெற்றவர் அவற்றை எவ்வளவு பெற்றிருந்தாலும் அவை சொற்பமானவையே. அவற்றை இழந்தவர் எவ்வளவுதான் இழந்தாலும் அவை சொற்பமானவையே.

📍மறுபக்கம் மறுமையின் ஓர் அருளைப் பெற்றவர் அது சொற்பமானதாக இருந்தாலும் அது மிகப்பெரிய அருளாகவே இருக்கும். அவ்வாறே மறுமையில் பெறத்தக்க ஒன்றை இழந்தவர் அது அற்பமானதாக இருந்தாலும் அது பேரிழப்பாகவே இருக்கும்.

📖 مَوْضِعُ سَوْطٍ فِي الجَنَّةِ، خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا

“சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு (ஒரு சிறிய) இடமானது இவ்வுலகத்தையும் இதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்” என்பது நபி வாக்கு.
(புகாரி)

📖 உலக சம்பத்துகள் எவ்வளவு பெரியவையாக தோன்றினாலும் அவை அற்பமானவை என்று கருதப்படுவதற்கு முக்கியக் காரணம், அவை தற்காலிகமானவை, நிலையற்றவை, மற்றும் மறுமையின் முடிவில்லாத வாழ்வுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானவை என்பது தான்.

🕋 உலகம் பெறுமதியற்றது என்பதை நபி (ஸல்) அவர்களும் பல போது விளக்கியுள்ளார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் இதனை அவர்கள் ஓர் நடைமுறை உதாரணத்தின் மூலம் அற்புதமாக விளக்கினார்கள்:

📍 ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஓர் இறந்து கிடக்கும் ஆட்டை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதன் உரிமையாளர்கள் அதனை தூக்கி வீசியிருந்தனர். இதனை அவதானித்த அன்னார், 'எனது ஆத்மா யார் கையில் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக இது ( இந்த ஆடு) அதன் உரிமையாளருக்கு பெறுமானமற்றதாக இருப்பதை விட அல்லாஹ்வுடைய பார்வையில் இந்த உலகம் பெறுமானமற்றதாகும்.' என்றார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)

🕋 மற்றுமொரு நபி மொழியும் மிகவும் பிரபலமானது.

📍 “இவ்வுலகம் அல்லாஹ்விடத்தில் ஈயின் இறக்கையளவாவது பெறுமதியானதாக இருக்குமென்றால் அவனை நிராகரிக்கும் மனிதனுக்கு அவன் ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கமாட்டான்.”
(திர்மிதி)

📖 இவ்வுலகில் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்ந்தவர்களும் மறுமைக்கு முன்னால் தாம் இவ்வுலகில் சொற்பகாலமே வாழ்ந்ததாக உணர்வார்கள் என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது:

كَأَنَّهُمۡ یَوۡمَ یَرَوۡنَهَا لَمۡ یَلۡبَثُوۤا۟ إِلَّا عَشِیَّةً أَوۡ ضُحَىٰهَا

"அதனை (யுக முடிவை) அவர்கள் காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற்பகலிலோ (ஒரு சொற்ப நேரமே) தவிர (பூமியில்) தங்கியிருக்காதது போன்று (அவர்கள் உணர்வார்கள்)”
(79:46)

قَٰلَ كَمۡ لَبِثۡتُمۡ فِي ٱلۡأَرۡضِ عَدَدَ سِنِينَ, قَالُواْ لَبِثۡنَا يَوۡمًا أَوۡ بَعۡضَ يَوۡمٖ فَسۡـَٔلِ ٱلۡعَآدِّينَ، قَٰلَ إِن لَّبِثۡتُمۡ إِلَّا قَلِيلٗاۖ لَّوۡ أَنَّكُمۡ كُنتُمۡ تَعۡلَمُونَ,

“ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?” என்று கேட்பான்.

“ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள்.

“ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!” என்று (இறைவன்) கூறுவான்.
(23:112,113,114).

📍 எனவே புத்திசாலி யாரெனில் இவ்வுலகினதும் இதன் சுகபோகங்களினதும் யதார்த்தத்தைப் புரிந்து நிலையான நாளை மறுமையின் வெற்றியை இலக்காகக் கொண்டு செயற்படுபவரே.

~ அஷ் ஷெய்க் அகார் முஹம்மத்

🌸 சந்தோஷத்தின் திறவுகோல் 🌸°°°′°°°'°°°'°°°'°°°'°°°'°°°'°°°'°°°'°°°°'°°° #⃣ யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காதீர்கள்....
01/10/2025

🌸 சந்தோஷத்தின் திறவுகோல் 🌸
°°°′°°°'°°°'°°°'°°°'°°°'°°°'°°°'°°°'°°°°'°°°
#⃣ யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்காதீர்கள்.
#⃣ கடந்ததை நினைத்து வருந்தாதீர்கள்.
#⃣ உதவியால் பலன் வராவிட்டாலும் கவலைப்படாதீர்கள்.
#⃣ அல்லாஹ் விதித்ததை மன அமைதியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.
#⃣ அதிக கவலை, நோய்களுக்கும் முதுமைக்கும் காரணம்.
#⃣ இல்லாததை நினைத்து சோகப்படாமல், இருப்பதைக் கொண்டு மகிழுங்கள்.
#⃣ "ரிழா" – எந்த நிலையையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலை – உண்மையான ஆதாரம்.

🕋 நபி (ஸல்):
اِرْضَ بِما قَسَمَ اللَّهُ لَكَ تَكُنْ أَغْنَى النّاسِ
"அல்லாஹ் உனக்கு வகுத்துத் தந்ததில் திருப்தி கொள்; அப்போது நீயே மிகச் செல்வந்தன்." (திர்மிதி, இப்னு மாஜா)

✨ இதுவே சந்தோஷம் எனும் பூட்டின் திறவுகோல் ✨

~ அஷ் ஷெய்க் அகாᵍʰர் முஹம்மத்

WhatsApp Group Invite

01/10/2025

ஜமாரத்தில் சைத்தானுக்கு வீசுவதற்காக ஹஜ்ஜாஜ்கள் வியாழக்கிழமை (05) இரவு முஸ்தலிஃபாவிலிருந்து கற்களைச் சேகரிக்கிறார்கள். நப...
05/06/2025

ஜமாரத்தில் சைத்தானுக்கு வீசுவதற்காக ஹஜ்ஜாஜ்கள் வியாழக்கிழமை (05) இரவு முஸ்தலிஃபாவிலிருந்து கற்களைச் சேகரிக்கிறார்கள்.



நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த பொழுது கல்லெறிவதற்காக நபி (ஸல்) அவர்கள் கேட்டதன் படி இபுனு அப்பாஸ் (ரலி) அவர்கள் பொடிக்கற்களைப் பொறுக்கிக் கொடுத்தார் இதன்படி அங்கே ஹாஜிகள் 70 பொடிக் கற்களைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும். பாலைவனம் நிறைந்த அந்த நாட்டில் முஸ்தலிஃபாவில் மட்டும் எங்கு பார்த்தாலும் பொடிக்கற்களாவே தென் படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ஹாஜிகள் கல் பொறுக்குகின்றனர். கல் பற்றாக்குறை வருவதே இல்லை. இது அல்லாஹ்வின் அற்புதமாக உள்ளது. இந்த இடம் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதில் விஷேஷ அந்தஸ்த்தைப்பெறுகின்றது. முஸ்தலிஃபாவில் தங்கிய ஹாஜிகள் அனைவரும் மினாவை நோக்கி நகர்ந்து செல்வர், அப்போது ஒரே மைதானத்தில் ஹாஜிகள் அனைவரையும் பார்க்கும் பொழுது மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு முன்னால் எல்லா மனிதர்களும் நிறுத்தப்படும் காட்சி நினைவுக்கு வரும்.

https://chat.whatsapp.com/KdPB1YNDmjeGRqZJ6U06rI

ஹஜ் குத்பா 1446/2025
05/06/2025

ஹஜ் குத்பா 1446/2025

 #ஹாஜிகளுக்கான_அறிவுறுத்தல்..  #ஹரமைன்நிவ்ஸ்
04/06/2025

#ஹாஜிகளுக்கான_அறிவுறுத்தல்..

#ஹரமைன்நிவ்ஸ்

மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியில், மக்காவிலுள்ள புனித ஹரம் பள்ளியில், இந்த ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் பிரசங்கம் பற்...
03/06/2025

மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியில், மக்காவிலுள்ள புனித ஹரம் பள்ளியில், இந்த ஆண்டு ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் பிரசங்கம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது ..

#ஹரமைன்நிவ்ஸ்

Address

Colombo 15
Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Ilvislam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ilvislam:

Share