Pigeon News

Pigeon News சுவைமிக்க செய்திகள்...பயன்மிக்க தகவல்கள்

01/06/2026

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

1930 கால திருவள்ளுவர் படம்
01/06/2026

1930 கால திருவள்ளுவர் படம்

விழிப்புணர்வு பதிவு.3 நிமிடம் உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள்.ஒரு கூட்டம், இந்தியர்கள் முட்டாள்கள், அவர்...
17/04/2026

விழிப்புணர்வு பதிவு.

3 நிமிடம் உங்கள் நேரத்தை ஒதுக்கி இதை முழுவதும் படியுங்கள்.

ஒரு கூட்டம், இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.

அங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது..

டாக்டர் இர்வின் இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்.

மேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர்.

பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.

நான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்ட மேற்படிப்பைத் தொடர்ந்தபோது ஒருமுறை இவரை நூலகத்தில் வைத்துப் பேசியிருக்கிறேன்.

சதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்: “இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள்.

காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள்.

வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன.

இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம்.

நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.

பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவுத் திட்டத்திலிருந்து விடைபெற்றுவிட்டன.

சென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது.

தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்னாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன.

பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன.

வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை.

உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.ஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம்.

அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம்.

அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை?” – ஒரு பண முதலை கேட்டது. ஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம்.

இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும். நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும்.

அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர்.

அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம். அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன?”

உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா? எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு” ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின.

இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது.

எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.

கல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது. சரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது. பெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன.

அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.

இந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க ஒரு நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்குமுன் திரண்டார்கள்.

மெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்:

“பொது மக்களே! நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா? நம் பாட்டனும் பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்? ஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?”.

“ஒரு குண்டூசி முனையளவு சயனைட் வயிற்றுக்குள் இல்லையில்லை வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?.” “நாம் வாங்கும் பொடி உப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.” ‘

2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார்.

ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.

அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.” “ஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா?.

இப்போது தொப்பைப் பெருத்துப் போய் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான்.

போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்.” கடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன.

இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா? சர்க்கரை நோய் வந்ததா? சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா? உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.

நம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.

வெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.

போதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.” சுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள்.

அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர். இதை எல்லாத் தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள்.

ஆனால் எதிலும் ஒளிபரப்பவில்லை! இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது! மக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்…! பொடி உப்பைத் தவிர்ப்போம்… கல் உப்பைப் பயன் படுத்துவோம்.

🛑 20, 30, 40 வயசுல இருக்கிற ஆக்களா நீங்க? கொஞ்சம் வடிவா இருந்து இத வாசிங்கோ! (அப்புறம் ஃபீல் பண்ணி பிரயோசனம் இல்ல!) 🛑படி...
23/03/2026

🛑 20, 30, 40 வயசுல இருக்கிற ஆக்களா நீங்க? கொஞ்சம் வடிவா இருந்து இத வாசிங்கோ! (அப்புறம் ஃபீல் பண்ணி பிரயோசனம் இல்ல!) 🛑

படிச்சு கிழிச்சு PhD எல்லாம் முடிச்சவங்ககூட, கடைசியில கையில ஒண்டும் இல்லாம செத்துப்போயிருக்காங்க.... ஆனா பள்ளிக்கூடப் படியே சரியா மிதிக்காத 'பணக்காரன்' செத்த போது பெரிய கோடீஸ்வரன்!

ரெண்டு பேருக்கும் இடையில இருந்த வித்தியாசம் மூளையோ, அதிர்ஷ்டமோ, இல்லை மாடு மாதிரி உழைச்சதோ கிடையாது. 'காசு' எண்டா என்ன எண்டு அவங்களுக்கு தெரிஞ்சிருந்த ரகசியம் தான்!

இதெல்லாம் எப்பிடி சாத்தியமானது எண்டத 5 விசயங்களா பாப்பமே...?! (நக்கல் எண்டு நினைக்காம வடிவா விளங்கிப் படிங்கோ).

1. எங்கட சம்பளம் ஒரு சொத்து இல்ல... அது ஒரு நாய் சங்கிலி! 🐕
மாசா மாசம் முப்பதாந்திகதி சம்பளம் வந்த உடனே நாம என்ன நினைப்பம்? "அப்பாடா, லைஃப் செட்டில்ட்" எண்டு! ஆனா நாங்க வேலைக்கு போனா தான் காசு. போகலைண்டா? கதை கந்தல்! அதுக்கு பேர் நிதிச் சுதந்திரம் இல்ல, அதுக்கு பேர் தான் அடிமைத்தனம்.

"பணக்காரன் ஆகுறதுக்கு பெரிய சம்பளம் தேவையில்லை. நாங்க நித்திரையில குறட்டை விட்டுத் தூங்கும் போதும் உனக்கு காசு வரணும்." வாடகை, பிசினஸ், ஷேர், முதலீடு எண்டு உழைக்கிற காசை உழைக்க விடுங்கோ!

2. நாங்க பேங்க் லோன்ல கட்டின 'கனவு இல்லம்' ஒரு சொத்து இல்ல! 🏠🚫
இதச் சொன்ன உடனே பலருக்கு கோவம் பொத்துக்கொண்டு வரும். வரட்டும், எனக்குக் கவலையில்ல.
உங்கட வீடு மாசா மாசம் உங்கட பாக்கெட்ல இருந்து காசை (Loan, Maintenance, Tax) புடுங்குது எண்டா, அது ஒரு 'சுமை' (Liability), சொத்து (Asset) இல்ல!

எது உங்கட பாக்கெட்டுக்கு காசைக் கொண்டு வருதோ அது தான் உண்மையான சொத்து! இதைப் பள்ளிக்கூடத்துல எந்த வாத்தியாரும் சொல்லித் தர மாட்டினம். சும்மா நான் பெரிய இன்வெஸ்டர் எண்டு பம்மாத்து காட்டிட்டு 60 வயசுலயும் கஸ்டப்படாதேங்கோ.

3. கடன் எண்டது ஒரு ஆயுதம்... ஆனா நாம அதை நம்ம தலையிலயே வெட்டிக்கிறம்! 💳⚔️
காசு இல்லாதவன் கடனை வாங்கி என்ன செய்வான்? புது ஐபோன் வாங்குவான், பெரிய டிவி வாங்குவான், வெளிநாட்டுக்கு டூர் போவான். ஆனா பணக்காரன் அதே கடனை வாங்கி என்ன செய்வான்? பிசினஸ்ல போடுவான், காணி வாங்குவான். ஏன்னா அது நாளைக்கு டபுள் ஆகும்!

வங்கியில ரெண்டுக்கும் கடன் குடுப்பான். நாங்க எதை வாங்குறம் எண்டதுல தான் எங்கட புத்திசாலித்தனம் இருக்கு. நான் கடனுக்கு எதிரானவன் இல்ல, ஆனா அந்த கடனை வச்சு நான் சொத்து சேர்ப்பன், உங்கள மாதிரி வீண் பந்தாவுக்கு செலவழிக்க மாட்டன்!

4. எங்கட வாழ்க்கையில பெரிய செலவே 'வரி' (Tax) கட்டுறது தான்! 💸
உடுத்திற உடுப்பு, சாப்பிடுற சாப்பாட்டை விட நாம கட்டுற வரி தான் அதிகம். சட்டம் எண்டது பிசினஸ் பண்றவனுக்கும், முதலீடு செய்றவனுக்கும் ஏத்த மாதிரி தான் எழுதப்பட்டிருக்கு. எங்கள மாதிரி மாதாந்த சம்பளக்காரனுக்கு இல்லை!
பணக்காரன் சட்டப்படி வரியில இருந்து தப்பிடுவான். நடுத்தர வர்க்கம் தான் முழு வரியையும் இழுத்துப்போட்டு கட்டி முழிக்கும். நாங்க எந்தப் பக்கம் நிக்கப் போறம்?

5. 'காசைப் பத்தின அறிவு' தான் ஆகப் பெரிய முதலீடு! 🧠💰
பிசினஸ் முதலீடுகளில் இழந்திருப்பார்கள். ஆனா திரும்பவும் டபுளாக்கி சம்பாதிச்சிருப்பார்கள். எப்பிடி? காசைப் பத்தி தெரிஞ்சிருந்த அறிவு தான் காரணம்! ஒருத்தன்ட்ட இருந்து காசைப் புடுங்கலாம், ஆனா அறிவைப் புடுங்க ஏலாது! கண்டியளோ?? இந்த அறிவு அந்த PhD ஆல் வரும் அறிவல்ல மோனே....

ஸ்கூல்ல ஏன் இதையெல்லாம் நமக்கு சொல்லித் தாரேல்ல? ஏன்னா, நாம எல்லாரும் புத்திசாலி ஆகிட்டா, அப்புறம் அவங்களுக்கு கீழ கைகட்டி வேலை செய்ய யார் வருவாங்கள்? அதனால தேடிப் படியுங்கோ... காசு எண்டா என்ன, அது எப்படி வேலை செய்யுது, வரி எண்டா என்ன எண்டு தெரிஞ்சவங்கள்ர கேட்டுப் படியுங்கோ! இந்த அறிவு உங்களுக்கு கிடைக்கிற எந்த சம்பள உயர்வை விடவும் பெறுமதியானது.

எனக்கு இப்ப 38 வயசாகுது. நான் இதெல்லாம் தேடிப்படிக்கலை எண்டால், நானும் உங்கள மாதிரி சம்பளத்தை மட்டுமே நம்பித்தான் சீவிச்சிருப்பன்.

"திங்கட்கிழமை பார்ப்பம்" எண்டு தள்ளிப் போடாம, இன்றைக்கே இதைப் பத்தி யோசிக்கத் தொடங்குங்கோ! 👍

(உங்கட நண்பர்களுக்கும் இதைப் ஷேர் பண்ணுங்கோ, அவங்களும் கொஞ்சம் படிச்சு முன்னேறட்டும்! 😉)

 #கணவன்_இன்னொரு_பெண்ணுடன்தன் கணவர்… மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்துக் கொண்டு ரசித்த மனைவி இது, ப...
05/01/2026

#கணவன்_இன்னொரு_பெண்ணுடன்

தன் கணவர்… மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்துக் கொண்டு ரசித்த மனைவி

இது, பணத்திற்காக எந்த அளவுக்கும் கொடூரமாக மாற மனிதர்கள் தயங்காத காலம் என்பதை நிரூபிக்கும் ஒரு சம்பவம்.

திருப்பதியின் புதுப்பேட்டை பகுதியில் வசித்து வந்த 35 வயதான சூர்யகுமார் ரெட்டியும், அவரது 34 வயதான மனைவி சுப்ரியா குமார் ரெட்டியும் வெளிப்படையில் மரியாதைக்குரிய சட்ட மாணவர்களாகத் தோன்றினர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையும், ஆடம்பர வாழ்க்கையின் மயக்கமும் இவர்களை தவறான பாதையில் தள்ளியது.

எஸ்.வி. யூனிவர்சிட்டி மற்றும் ஸ்ரீபத்மாவதி வுமன்ஸ் யூனிவர்சிட்டியில் எல்.எல்.பி (LLB) படித்து வந்த இந்த தம்பதிகள், தங்கள் திட்டத்தை நிறைவேற்ற சுப்ரியாவின் வகுப்புத் தோழியான 22 வயது இளம்பெண்ணை இலக்காகத் தேர்ந்தெடுத்தனர்.

வலையமைக்கும் தொடக்கம்

ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த அந்தப் பெண்ணிடம் சுப்ரியா அளவுக்கு மீறிய அன்பைக் காட்டினாள்.
“ஹாஸ்டல் உணவு சரியில்லையே, வீட்டுக்கு வா… நல்லா சமைத்து தர்றேன்” என்ற அழைப்பை அந்த அப்பாவிப் பெண் நம்பினாள். இவ்வாறு அவள் அந்த தம்பதிகளின் வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தாள். சூர்யகுமாரும் சுப்ரியாவும் போதைப் பொருள் அடிமைகள் என்பது அவளுக்கு தாமதமாகத்தான் புரிந்தது. பின்னர் மெதுவாக அவளையும் அதில் இழுத்தனர்.

சூர்யகுமாருக்கு அந்தப் பெண்ணின் உடல்மீது ஆசை; சுப்ரியாவுக்கு பணத்தின்மீது பேராசை. இந்த இரு ஆசைகளையும் நிறைவேற்ற, அவர்கள் ஒரு பிசாசுத்தனமான திட்டத்தை வகுத்தனர்.

நம்பிக்கை துரோகம்

ஒரு வழக்கமான நாளில், அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்தனர். சாதாரண உரையாடல்களின் இடையே, குடிக்க கொடுத்த பானத்தில் போதைப் பொருளை கலந்தனர். மயக்கமடைந்து விழுந்த அந்தப் பெண்ணை சூர்யகுமார் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தான். ஆனால் அதைவிட கொடூரமான செயலை செய்தது அவனுடைய மனைவி சுப்ரியா. தன் கணவர் மற்றொரு பெண்ணை வன்கொடுமை செய்வதைத் தடுக்காமல், பணம் பறிப்பதற்காக அந்த அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தாள்.

மிரட்டலும் சுரண்டலும்

மயக்கம் தெளிந்தபோது, தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதை அந்தப் பெண் உணர்ந்தாள். ஆனால் அப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. நிர்வாண படங்களையும் வீடியோக்களையும் காட்டி, பணம் கொடுக்காவிட்டால் இவை அனைத்தையும் இணையத்தில் வெளியிடுவோம் என்று அவர்கள் மிரட்டினர். பயந்த அந்தப் பெண் தன் தங்கச் சங்கிலியையும், கையில் இருந்த பணத்தையும் அவர்களிடம் கொடுத்தாள்.

அது ஆரம்பம் மட்டுமே. ஒவ்வொரு மாதமும் அவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். பெற்றோரிடம் பொய் சொல்லி, கல்லூரி கட்டணம் என்ற பெயரில் பணம் வாங்கி, அந்த தம்பதிகளின் பேராசையைத் தீர்க்க அவள் முயன்றாள். ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்தபோது, “இனி எல்லாவற்றையும் டிலீட் பண்ணிடுவோம்” என்று அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால் அதை ஒருபோதும் செய்யவில்லை.

மேலும் கொடூரமான மிரட்டல்

சில மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இதைத் தெரிந்துகொண்ட தம்பதிகள், நிச்சயதார்த்த மோதிரமும் கூடுதல் பணமும் கேட்டு மிரட்டினர். இல்லையென்றால், அந்த வீடியோக்களை வருங்கால கணவருக்கும் சகோதரனுக்கும் அனுப்புவோம் என்றனர். முற்றிலும் நொறுங்கிப் போன அந்தப் பெண் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியெனில் அவர்கள் சொன்னதைச் செய்தனர்—அந்த வீடியோக்களை அவளுடைய சகோதரனுக்கும் வருங்கால கணவருக்கும் அனுப்பிவிட்டனர்.

உணர்வு, ஆதரவு மற்றும் சட்டப் போராட்டம்

எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத்த அந்தப் பெண், கடும் மன அழுத்தத்துக்கும் தற்கொலை எண்ணங்களுக்கும் தள்ளப்பட்டாள். ஆனால் விஷயம் தெரிந்து ஹாஸ்டலுக்கு வந்த பெற்றோர், அவளை அணைத்துக் கொண்டனர்.
“நீ குற்றவாளி அல்ல… ஏமாற்றப்பட்டவள்” என்று அம்மா சொன்ன வார்த்தைகள் அவளுக்கு பெரிய ஆற்றலாக அமைந்தது.

பின்னர் அவர்கள் திருப்பதி ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தேவையான அனைத்து ஆதாரங்களும் அந்தப் பெண்ணிடமே இருந்தன. பணம் கேட்டு மிரட்டிய மெசேஜ்கள், சாட்கள் அனைத்தையும் போலீஸிடம் ஒப்படைத்தாள்.

சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த போலீஸார், 2024 ஜூலை 25 அன்று சூர்யகுமார் ரெட்டியையும் சுப்ரியா குமார் ரெட்டியையும் கைது செய்தனர். அவர்களை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் (Suspension) செய்தனர்.

பணத்திற்கும், இச்சைக்காகவும், ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்ய முயன்ற அந்த தம்பதிகள், இறுதியில் சட்டத்தின் முன் சிறைக்குள் அடைக்கப்பட்டனர்.
நாம் நம்பும் மனிதர்களே சில நேரங்களில் ஏமாற்றத்தின் முகமூடியை அணிந்திருக்கலாம் என்ற கடும் பாடத்தை இந்தக் சம்ப்வம் செல்கிறது.

19/12/2025

ஒரு குட்டிக்கதை :-- '99'ஆட்டம்...

ஒரு நாட்டின் அரசன் தனது சேவகன் ஒருவன் தினமும் பாட்டுப்பாடிக் கொண்டு ஆனந்தமாக இருப்பதை கவனித்துக் கொண்டு இருக்கிறான். அவனைப் பார்த்து அரசனுக்கு ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் இருந்தது.

ஒரு முறை அரசன் தனது மந்திரியை அழைத்து சொன்னான்:
"இதோ பார் மந்திரியாரே! நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கின்றேன். எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. இருந்தும், நான் மன நிம்மதியாக இல்லை. மனக்குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது. சலிப்பும் வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது.

ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே, அவன் என்னை விட வாழ்வில் மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காணுகின்றேன். ஆனந்தத்தில் அவன் மிதக்கிறான். பார்க்க பொறாமையாக இருக்கிறது" என்று ஆதங்கப்பட்டான்.

உடனே அந்த மந்திரி: "அரசே! அந்த சேவகனிடம் 99 ஆட்டத்தை பரீட்சித்துப் பாருங்களேன்" என்றான்.
அதற்கு அரசன்: "அது என்ன 99 ஆட்டம்? புதுமையாக இருக்கிறதே!" என்றான்.

அதற்கு மந்திரி சொன்னான்:
99 ஆட்டம் என்பது 99 பொற்காசுகளை எடுத்து ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு வாசலில் வைத்து விடுங்கள்.
" '100 பொற்காசுள் உங்களுக்கான அன்புப் பரிசு' என்று அதிலே எழுதி வைத்துவிட்டு வந்துவிடுங்கள். பின்பு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்!" என்றான்.

அப்படியே அரசனும் செய்துவிட்டு
பொறுத்திருந்தார். பொற்காசுகள் நிறைந்த பையைக் கண்ட சேவகன் ஆனந்தத்தில் மிதந்தான். பணப்பையை எடுத்து எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது.

' கட்டாயம் ஒரு பொற்காசு வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும்' என மனதில் நினைத்துக் கொண்டான். அதன்படி அவனும் அவனது மனைவி பிள்ளைகுட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு
பொன்நாணயத்தை தேட ஆரம்பித்தனர். தேடித் தேடி இரவும் முடிந்து பொழுதும் விடிந்தது, தேடல் மாத்திரம் முடிந்தபாடில்லை. கோபமடைந்த சேவகன் குடும்பத்தார் மீது எரிந்துவிழத் தொடங்கினான். அவன் மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது.

மறுநாள் சேவகன் விரக்தியடைந்தவனாக காணப்பட்டான். புன்முறுவல் பூத்திருந்த அவனது முகம் சிடுமூஞ்சியாக மாறியிருந்தது. தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த அரசனுக்கு "99 ஆட்டம்" என்றால் என்னவென்று புரிந்து போய்விட்டது.

கதையின் நீதி...
அந்த இறைவன் நமக்கு
வழங்கிய 99 வகையான
செளபாக்கியங்களோடு
இருப்பதை நாம் மறந்து விடுகிறோம். வாழ்வில் நமக்கு கிடைக்காத அந்த ஏதோ ஒரே ஒரு பாக்கியத்திற்காக நிம்மதியை இழந்து மனவருத்தத்தோடு
வாழ்ந்து வருகிறோம். ஏங்கித் தவிக்கிறோம்.

கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒரு சுகத்துக்காக ஏங்குகின்றோம், மனக்கவலையோடு நாம் வாழ்ந்து வருகின்றோம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம்  ஒரு கேள்வி கேட்டார்...  உங்களிடம் 86,400 காசுகள் இருந்தால், யாராவது ஒரு திருடன் அதில் 10...
15/12/2025

ஒரு ஆசிரியர் தனது
மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்...

உங்களிடம் 86,400 காசுகள் இருந்தால், யாராவது ஒரு திருடன் அதில் 10 காசுகளை பறித்துக்கொண்டு ஓடினால் உங்கள் கையில் இருக்கும் அந்த 86,390 காசுகளை விட்டுவிட்டு அந்த 10 காசுகளை பிடிக்க ஓடுவீர்களா?
அல்லது பரவாயில்லை என்று உங்கள் பாட்டில் செல்வீர்களா? என்று...

அனைத்து மாணவர்களும் ஒரு மித்த குரலில் நிச்சயமாக நாங்கள் 10 காசுகளை விட்டுவிடுவோம்....

அந்த 86,390 காசுகளை தான் பாதுகாப்போம் என்று பதிலளித்தனர்...

ஆசிரியர் சொன்னார்:
உண்மையில் பெரும்பாலான மக்கள் இதற்கு நேர்மாறாகவே நடக்கின்றனர்....

அந்த 10 காசுகளுக்காக அவர்கள் அந்த 86,390 காசுகளையும் இழக்கின்றனர்....

அதற்கு மாணவர்கள் :
யாராவது அப்படி செய்வார்களா?
எப்படி அது சாத்தியம்? என்று கேட்டனர்...

அதற்கு ஆசிரியர்: உண்மையில் 86,400 என்பது ஒரு நாளில் உள்ள
வினாடிகளின் எண்ணிக்கை...
யாராவது ஒருவர் 10 வினாடிகள் உங்களை எரிச்சலூட்டினால் அல்லது மனதை துன்புறுத்தும் வார்த்தைகளை சொன்னால் அல்லது விரும்பத்தகாத
ஒரு சம்பவம் நடந்தால் அதற்காக
நாள் முழுதும் யோசித்து
எஞ்சிய 86,390 வினாடிகளையும் நீங்கள்
வீணாக்கி விடுவீர்கள்....

சில நிமிஷம் வேதனை
முழு நாளையும் பாழாக்கிடக் கூடாது..
வாழ்க்கை ஒரு பரிசு...
அனுபவிங்க
எஞ்சிய நேரங்களையும்
வீணாக்கி விடாதீர்கள்....

இது மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும்....

படித்ததில் மனதை கவர்ந்தது

பார்ப்...ன் நமக்குக்  கற்பிக்கும் எல்லாச்  சடங்குகளும் ஒரு பழக்கத்தை உண்டு பண்ணி , மனதில் அந்தச் சடங்கு செய்யவில்லை  என்...
05/09/2025

பார்ப்...ன் நமக்குக் கற்பிக்கும் எல்லாச் சடங்குகளும் ஒரு பழக்கத்தை உண்டு பண்ணி , மனதில் அந்தச் சடங்கு செய்யவில்லை என்றால் ஏதோ தீயது நடந்து விடும் என்று உள்ளத்தில் ஒரு மூட பயத்தை உண்டாக்க வடிவமைக்கப்பட்டவை . நீங்களே இதை பரிசோதிக்கலாம் .

வீட்டில் ஒரு சின்ன தேங்காய் மட்டையை வைத்து அதை நாள் தோறும் காலையில் வணங்கத் துவங்குங்கள். அதற்கு முன் ஒரு துண்டு மட்டுமே கட்டி நின்று , நாள்தோறும் இரண்டரை குவளை நீரை மிளகில் கரைத்து ஊற்ற வேண்டும். 4 வாரம் இப்படிச் செய்யுங்கள்.

பிறகு இரண்டு நாள் செய்யக் கூடாது என்று முயற்சி செய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு மனதில் ஒரு குறை ஏற்படும் .இது வெறும் பழக்கமே. உண்மையில் அந்த மட்டையை தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டால் கூட உங்கள் வாழ்வு எப்பொழுதும் போல நடக்கும் .

நீங்கள் "வணங்கிய" தேங்காய் மட்டையை தூக்கிப் போட மனம் வராது . வெறும் பழக்கம் தான் இந்த மதம் எல்லாம் . இதை ஏற்றுக் கொள்வது உங்கள் விருப்பம் , ஆனால் பரிசோதித்துப் பார்த்தல் இந்த முடிவுக்கே பெரும்பான்மையினர் வருவார்கள்.
பார்ப்...ன் இந்த ஏமாற்று வேலையை இன்னும் சிறப்பாக செய்கிறான் .

உங்களைச் சுத்தி நாலு பேர் சேர்ந்து அந்தக் கல் கல்இல்லை , அது கடவுள் என்று அமோதித்தால், நீங்களும் "அட நாலு பேர் சொல்றாங்களே , நமக்குத் தெரிஞ்சவுங்க சொல்றாங்களே, அப்ப சரியாத் தான் இருக்கும் என்று பொய்யை உண்மையென நம்ப நல்ல சூழலை பார்ப்...ன் உருவாக்குகிறான் .

மேலும் ஒரே இடத்தில சென்று எல்லோருடனும் ஒன்று கூடி இந்த முட்டாள்தனமான சடங்குகளை செய்தால் மனதில் இன்னும் பற்று ஏற்படும் . கடைசியாக பார்ப்...னின் சூழ்ச்சி என்னவென்றால் , பேசாத கல்லை வைத்துக் கொண்டு , கடவுள் இப்படிச் சொல்கிறார் , கடவுள் அப்படிச் சொல்கிறார், கடவுள் கோபமா இருக்காரு , உங்க வீட்டு கண்ணிப் பொண்ணை பூசைக்கு அனுப்பி வைங்க, என்று பார்ப்....ன் இடையிலே,
ஊரில் அவன் மட்டுமே கடவுள் என்ன சொல்கிறார்
என்று மொழிபெயர்க்க கூடிய இடத்தில உட்கார்ந்து கொள்கிறான் .

உங்கள் உள்ளம் , அறிவு , இரண்டும் இந்த மூட நம்பிக்கை சிறைக்குள் பார்ப்...னால் சிறைபடுத்தப்பட்டு விட்டது . இப்பொழுது உங்கள் வாழ்வில் நடக்கும் எல்லா நன்மைகளுக்கும் இந்த தேங்காய் மட்டை தான் காரணம் என்று உங்கள் மனதில் தானாக ஒரு பொய் இடம் பிடிக்கும் . இந்த மட்டையை இழந்தால் நம் வாழ்க்கையே போச்சு என்று தோணும் . உங்கள் அடையாளம் இந்த காய்ந்து போன தேங்காய் மட்டை தான் . இதை இனி விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.

உங்கள் பெண் காதல் கொண்டது இந்த மட்டைக்கு பிடிக்கவில்லை , மட்டை கோபமா இருக்கு என்றால், மட்டையே கதி என்று இருக்கும் நீங்கள் அந்தப் பையனை கொ.... செய்யத் தயங்க மாட்டீர்கள். மதம் முழுதாய் உங்களுள் ஏறி விட்டது, நீங்கள் ஒரு மட்டைப் பைத்தியம் ஆகிவிட்டீர்கள் , ஆனால் கடவுளுக்கு சிறந்த பக்தன் ஆகி விட்டதாக நினைத்துக் கொள்கிறீர்கள்.

மாயையில் இருந்து விழித்தெழுங்கள் . உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொண்டது போதும் . உங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை பாப்...னின் சாமி தான் கொடுத்துச்சு என்று ஏன் ஏமாறுகிறீர்கள்? பயத்தை ஒரேடியாக விட்டுத் தள்ளுங்கள் .

நீங்கள் நினைப்பதை விட உங்களுக்கு வலிமை அதிகம் . கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது உங்கள் விருப்பம் , ஆனால் என்ன நம்புகிறீர்கள் என்பதை பகுத்தறிவு சோதனைக்கு உட்படுத்துங்கள் .

இதை உணர்ந்து பார்ப்....னின் "கலாச்சாரம் பாரம்பரியம்" என்ற சூழ்ச்சியை அடித்துக் கேட்க வேண்டும், "எனக்கு உன் பித்தலாட்டம் தெரிஞ்சு போச்சு, போடா" என்று விரட்டி அடிக்க வேண்டும்.

தோழர் காளி அவர்களின் எக்ஸ் தள பதிவிலிருந்து

  அமில தஸநாயக்க எனும் பெயருடைய இந்த MBBS மருத்துவப் பட்டதாரி பற்றிய ஒரு குறிப்பை முகநூலில் வாசித்த போது, ஒரு முன்மாதிரி ...
29/08/2025

அமில தஸநாயக்க எனும் பெயருடைய இந்த MBBS மருத்துவப் பட்டதாரி பற்றிய ஒரு குறிப்பை முகநூலில் வாசித்த போது, ஒரு முன்மாதிரி மாணவனாக அவரை தமிழ் பேசும் மாணவர்களுக்கும் அறிமுகம் செய்து அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என மனம் சொன்னது.

கொழும்பு ராயல் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞானம் உயர்தரம் கற்று அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தில் தேறி கொழும்பு பல்கலைக்கழக மருத்துவத்துக்கான பீடத்திற்கு தெளிவாகியுள்ளார்.

ஏக காலத்தில் இலங்கையில் சுமார் 10,000 மாணவர்களுக்கு பகுதி நேர வகுப்புகளை நடகத்தியுள்ளதோடு அவரது மாணவர்கள் சிறப்பாகத் தேறுவதற்கு ரிவிஷன், ரெபிட் ரிவிஷன், பழைய வினாத்தாள் என பல உத்திகள் மூலம் ஏ, பீ சித்திகளை பெற உதவியுள்ளார்.

தான் பட்டமளிப்பு விழாவிற்கு தனது பெற்றாருடன் வருகை தந்த போது தனது சொந்த உழைப்பில் வாங்கிய BMW i7, Nissan GT-R இரு வாகனங்களில் வருகை தந்துள்ளார்.

பெற்றார், ஆசிரியர்களால் அடித்தளங்களை இட்டு வழிகாட்டத் தான் முடியும், ஆனால் இலக்கை நோக்கிய பயணத்தில் விடா முயற்சியும் கடின உழைப்பும் மாத்திரமன்றி தனது துறையில் ஏனைய மாணவர்களுக்கும் வழிகாட்டும் ஆசிரியமும், தொடர் கற்றலும் கற்பித்தலும், பிரார்தனைகளும், ஆசிர்வாதங்களும் ஒரு பட்டதாரி மாணவரை எந்த அளவிற்கு கூர்மைப்படுத்தி வெற்றிக் கம்பத்தை நோக்கி பயணிக்கச் செய்கிறது என்பதற்கு வைத்தியர் அமில திஸாநாயக்க சிறந்த உதாரணமாக புருஷர் ஆகிறார்!

மாணவப் பருவத்தில் பெற்றார்களை மதித்து அவர்கள் சொல்பேச்சு கேட்டு நடத்தல், ஆசிரியர்களை மதித்து கீழ்படிந்து நடத்தல், கற்கின்ற காலத்தில் தவறான நட்புகள், பழக்க வழக்கங்களை, காதல் போன்றவற்றில் காலத்தை விரயம் செய்வதை தவிர்த்தல், இன்டர்நெட் விளையாட்டுக்கள் சமூக ஊடகங்களில் சுயகட்டுக் கோப்பின்றி அடிமையாகி விடாமல் விழிப்பாக நடந்து கொள்ளல் போன்ற பண்புகள் தான் ஒரு மாணவரை சரியான திசையில் வழி நடாத்துகின்றன!

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Pigeon News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share