Pigeon News

Pigeon News சுவைமிக்க செய்திகள்...பயன்மிக்க தகவல்கள்

 #கணவன்_இன்னொரு_பெண்ணுடன்தன் கணவர்… மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்துக் கொண்டு ரசித்த மனைவி இது, ப...
05/01/2026

#கணவன்_இன்னொரு_பெண்ணுடன்

தன் கணவர்… மற்றொரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்துக் கொண்டு ரசித்த மனைவி

இது, பணத்திற்காக எந்த அளவுக்கும் கொடூரமாக மாற மனிதர்கள் தயங்காத காலம் என்பதை நிரூபிக்கும் ஒரு சம்பவம்.

திருப்பதியின் புதுப்பேட்டை பகுதியில் வசித்து வந்த 35 வயதான சூர்யகுமார் ரெட்டியும், அவரது 34 வயதான மனைவி சுப்ரியா குமார் ரெட்டியும் வெளிப்படையில் மரியாதைக்குரிய சட்ட மாணவர்களாகத் தோன்றினர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையும், ஆடம்பர வாழ்க்கையின் மயக்கமும் இவர்களை தவறான பாதையில் தள்ளியது.

எஸ்.வி. யூனிவர்சிட்டி மற்றும் ஸ்ரீபத்மாவதி வுமன்ஸ் யூனிவர்சிட்டியில் எல்.எல்.பி (LLB) படித்து வந்த இந்த தம்பதிகள், தங்கள் திட்டத்தை நிறைவேற்ற சுப்ரியாவின் வகுப்புத் தோழியான 22 வயது இளம்பெண்ணை இலக்காகத் தேர்ந்தெடுத்தனர்.

வலையமைக்கும் தொடக்கம்

ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த அந்தப் பெண்ணிடம் சுப்ரியா அளவுக்கு மீறிய அன்பைக் காட்டினாள்.
“ஹாஸ்டல் உணவு சரியில்லையே, வீட்டுக்கு வா… நல்லா சமைத்து தர்றேன்” என்ற அழைப்பை அந்த அப்பாவிப் பெண் நம்பினாள். இவ்வாறு அவள் அந்த தம்பதிகளின் வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தாள். சூர்யகுமாரும் சுப்ரியாவும் போதைப் பொருள் அடிமைகள் என்பது அவளுக்கு தாமதமாகத்தான் புரிந்தது. பின்னர் மெதுவாக அவளையும் அதில் இழுத்தனர்.

சூர்யகுமாருக்கு அந்தப் பெண்ணின் உடல்மீது ஆசை; சுப்ரியாவுக்கு பணத்தின்மீது பேராசை. இந்த இரு ஆசைகளையும் நிறைவேற்ற, அவர்கள் ஒரு பிசாசுத்தனமான திட்டத்தை வகுத்தனர்.

நம்பிக்கை துரோகம்

ஒரு வழக்கமான நாளில், அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்தனர். சாதாரண உரையாடல்களின் இடையே, குடிக்க கொடுத்த பானத்தில் போதைப் பொருளை கலந்தனர். மயக்கமடைந்து விழுந்த அந்தப் பெண்ணை சூர்யகுமார் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தான். ஆனால் அதைவிட கொடூரமான செயலை செய்தது அவனுடைய மனைவி சுப்ரியா. தன் கணவர் மற்றொரு பெண்ணை வன்கொடுமை செய்வதைத் தடுக்காமல், பணம் பறிப்பதற்காக அந்த அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தாள்.

மிரட்டலும் சுரண்டலும்

மயக்கம் தெளிந்தபோது, தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்பதை அந்தப் பெண் உணர்ந்தாள். ஆனால் அப்போது மிகவும் தாமதமாகிவிட்டது. நிர்வாண படங்களையும் வீடியோக்களையும் காட்டி, பணம் கொடுக்காவிட்டால் இவை அனைத்தையும் இணையத்தில் வெளியிடுவோம் என்று அவர்கள் மிரட்டினர். பயந்த அந்தப் பெண் தன் தங்கச் சங்கிலியையும், கையில் இருந்த பணத்தையும் அவர்களிடம் கொடுத்தாள்.

அது ஆரம்பம் மட்டுமே. ஒவ்வொரு மாதமும் அவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். பெற்றோரிடம் பொய் சொல்லி, கல்லூரி கட்டணம் என்ற பெயரில் பணம் வாங்கி, அந்த தம்பதிகளின் பேராசையைத் தீர்க்க அவள் முயன்றாள். ஒவ்வொரு முறையும் பணம் கொடுத்தபோது, “இனி எல்லாவற்றையும் டிலீட் பண்ணிடுவோம்” என்று அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால் அதை ஒருபோதும் செய்யவில்லை.

மேலும் கொடூரமான மிரட்டல்

சில மாதங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணின் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இதைத் தெரிந்துகொண்ட தம்பதிகள், நிச்சயதார்த்த மோதிரமும் கூடுதல் பணமும் கேட்டு மிரட்டினர். இல்லையென்றால், அந்த வீடியோக்களை வருங்கால கணவருக்கும் சகோதரனுக்கும் அனுப்புவோம் என்றனர். முற்றிலும் நொறுங்கிப் போன அந்தப் பெண் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அப்படியெனில் அவர்கள் சொன்னதைச் செய்தனர்—அந்த வீடியோக்களை அவளுடைய சகோதரனுக்கும் வருங்கால கணவருக்கும் அனுப்பிவிட்டனர்.

உணர்வு, ஆதரவு மற்றும் சட்டப் போராட்டம்

எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத்த அந்தப் பெண், கடும் மன அழுத்தத்துக்கும் தற்கொலை எண்ணங்களுக்கும் தள்ளப்பட்டாள். ஆனால் விஷயம் தெரிந்து ஹாஸ்டலுக்கு வந்த பெற்றோர், அவளை அணைத்துக் கொண்டனர்.
“நீ குற்றவாளி அல்ல… ஏமாற்றப்பட்டவள்” என்று அம்மா சொன்ன வார்த்தைகள் அவளுக்கு பெரிய ஆற்றலாக அமைந்தது.

பின்னர் அவர்கள் திருப்பதி ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தேவையான அனைத்து ஆதாரங்களும் அந்தப் பெண்ணிடமே இருந்தன. பணம் கேட்டு மிரட்டிய மெசேஜ்கள், சாட்கள் அனைத்தையும் போலீஸிடம் ஒப்படைத்தாள்.

சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த போலீஸார், 2024 ஜூலை 25 அன்று சூர்யகுமார் ரெட்டியையும் சுப்ரியா குமார் ரெட்டியையும் கைது செய்தனர். அவர்களை கல்லூரியிலிருந்து இடைநீக்கம் (Suspension) செய்தனர்.

பணத்திற்கும், இச்சைக்காகவும், ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்ய முயன்ற அந்த தம்பதிகள், இறுதியில் சட்டத்தின் முன் சிறைக்குள் அடைக்கப்பட்டனர்.
நாம் நம்பும் மனிதர்களே சில நேரங்களில் ஏமாற்றத்தின் முகமூடியை அணிந்திருக்கலாம் என்ற கடும் பாடத்தை இந்தக் சம்ப்வம் செல்கிறது.

19/12/2025

ஒரு குட்டிக்கதை :-- '99'ஆட்டம்...

ஒரு நாட்டின் அரசன் தனது சேவகன் ஒருவன் தினமும் பாட்டுப்பாடிக் கொண்டு ஆனந்தமாக இருப்பதை கவனித்துக் கொண்டு இருக்கிறான். அவனைப் பார்த்து அரசனுக்கு ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் இருந்தது.

ஒரு முறை அரசன் தனது மந்திரியை அழைத்து சொன்னான்:
"இதோ பார் மந்திரியாரே! நான் இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தின் அரசனாக இருக்கின்றேன். எனக்கு இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. இருந்தும், நான் மன நிம்மதியாக இல்லை. மனக்குழப்பம் என்னை வாட்டி வதைக்கிறது. சலிப்பும் வெறுப்பும் என்னை பின்தொடர்கிறது.

ஆனால், எதுவும் இல்லாத என் சேவகன் இருக்கிறானே, அவன் என்னை விட வாழ்வில் மனமகிழ்ச்சியுடன் இருக்கக் காணுகின்றேன். ஆனந்தத்தில் அவன் மிதக்கிறான். பார்க்க பொறாமையாக இருக்கிறது" என்று ஆதங்கப்பட்டான்.

உடனே அந்த மந்திரி: "அரசே! அந்த சேவகனிடம் 99 ஆட்டத்தை பரீட்சித்துப் பாருங்களேன்" என்றான்.
அதற்கு அரசன்: "அது என்ன 99 ஆட்டம்? புதுமையாக இருக்கிறதே!" என்றான்.

அதற்கு மந்திரி சொன்னான்:
99 ஆட்டம் என்பது 99 பொற்காசுகளை எடுத்து ஒரு பையில் போட்டு சேவகனின் வீட்டு வாசலில் வைத்து விடுங்கள்.
" '100 பொற்காசுள் உங்களுக்கான அன்புப் பரிசு' என்று அதிலே எழுதி வைத்துவிட்டு வந்துவிடுங்கள். பின்பு என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்!" என்றான்.

அப்படியே அரசனும் செய்துவிட்டு
பொறுத்திருந்தார். பொற்காசுகள் நிறைந்த பையைக் கண்ட சேவகன் ஆனந்தத்தில் மிதந்தான். பணப்பையை எடுத்து எண்ணிப்பார்த்தான். ஒரு காசு குறைவாக இருந்தது.

' கட்டாயம் ஒரு பொற்காசு வெளியில் எங்காவது விழுந்திருக்க வேண்டும்' என மனதில் நினைத்துக் கொண்டான். அதன்படி அவனும் அவனது மனைவி பிள்ளைகுட்டிகள் என அனைவரும் தவறிய அந்த ஒரு
பொன்நாணயத்தை தேட ஆரம்பித்தனர். தேடித் தேடி இரவும் முடிந்து பொழுதும் விடிந்தது, தேடல் மாத்திரம் முடிந்தபாடில்லை. கோபமடைந்த சேவகன் குடும்பத்தார் மீது எரிந்துவிழத் தொடங்கினான். அவன் மனமகிழ்ச்சி மனவருத்தமாக மாறியது.

மறுநாள் சேவகன் விரக்தியடைந்தவனாக காணப்பட்டான். புன்முறுவல் பூத்திருந்த அவனது முகம் சிடுமூஞ்சியாக மாறியிருந்தது. தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தான்.

இதையெல்லாம் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த அரசனுக்கு "99 ஆட்டம்" என்றால் என்னவென்று புரிந்து போய்விட்டது.

கதையின் நீதி...
அந்த இறைவன் நமக்கு
வழங்கிய 99 வகையான
செளபாக்கியங்களோடு
இருப்பதை நாம் மறந்து விடுகிறோம். வாழ்வில் நமக்கு கிடைக்காத அந்த ஏதோ ஒரே ஒரு பாக்கியத்திற்காக நிம்மதியை இழந்து மனவருத்தத்தோடு
வாழ்ந்து வருகிறோம். ஏங்கித் தவிக்கிறோம்.

கைவசம் இருக்கும் பல சுகங்களை மறந்து இல்லாத ஒரு சுகத்துக்காக ஏங்குகின்றோம், மனக்கவலையோடு நாம் வாழ்ந்து வருகின்றோம்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம்  ஒரு கேள்வி கேட்டார்...  உங்களிடம் 86,400 காசுகள் இருந்தால், யாராவது ஒரு திருடன் அதில் 10...
15/12/2025

ஒரு ஆசிரியர் தனது
மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்...

உங்களிடம் 86,400 காசுகள் இருந்தால், யாராவது ஒரு திருடன் அதில் 10 காசுகளை பறித்துக்கொண்டு ஓடினால் உங்கள் கையில் இருக்கும் அந்த 86,390 காசுகளை விட்டுவிட்டு அந்த 10 காசுகளை பிடிக்க ஓடுவீர்களா?
அல்லது பரவாயில்லை என்று உங்கள் பாட்டில் செல்வீர்களா? என்று...

அனைத்து மாணவர்களும் ஒரு மித்த குரலில் நிச்சயமாக நாங்கள் 10 காசுகளை விட்டுவிடுவோம்....

அந்த 86,390 காசுகளை தான் பாதுகாப்போம் என்று பதிலளித்தனர்...

ஆசிரியர் சொன்னார்:
உண்மையில் பெரும்பாலான மக்கள் இதற்கு நேர்மாறாகவே நடக்கின்றனர்....

அந்த 10 காசுகளுக்காக அவர்கள் அந்த 86,390 காசுகளையும் இழக்கின்றனர்....

அதற்கு மாணவர்கள் :
யாராவது அப்படி செய்வார்களா?
எப்படி அது சாத்தியம்? என்று கேட்டனர்...

அதற்கு ஆசிரியர்: உண்மையில் 86,400 என்பது ஒரு நாளில் உள்ள
வினாடிகளின் எண்ணிக்கை...
யாராவது ஒருவர் 10 வினாடிகள் உங்களை எரிச்சலூட்டினால் அல்லது மனதை துன்புறுத்தும் வார்த்தைகளை சொன்னால் அல்லது விரும்பத்தகாத
ஒரு சம்பவம் நடந்தால் அதற்காக
நாள் முழுதும் யோசித்து
எஞ்சிய 86,390 வினாடிகளையும் நீங்கள்
வீணாக்கி விடுவீர்கள்....

சில நிமிஷம் வேதனை
முழு நாளையும் பாழாக்கிடக் கூடாது..
வாழ்க்கை ஒரு பரிசு...
அனுபவிங்க
எஞ்சிய நேரங்களையும்
வீணாக்கி விடாதீர்கள்....

இது மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும்....

படித்ததில் மனதை கவர்ந்தது

பார்ப்...ன் நமக்குக்  கற்பிக்கும் எல்லாச்  சடங்குகளும் ஒரு பழக்கத்தை உண்டு பண்ணி , மனதில் அந்தச் சடங்கு செய்யவில்லை  என்...
05/09/2025

பார்ப்...ன் நமக்குக் கற்பிக்கும் எல்லாச் சடங்குகளும் ஒரு பழக்கத்தை உண்டு பண்ணி , மனதில் அந்தச் சடங்கு செய்யவில்லை என்றால் ஏதோ தீயது நடந்து விடும் என்று உள்ளத்தில் ஒரு மூட பயத்தை உண்டாக்க வடிவமைக்கப்பட்டவை . நீங்களே இதை பரிசோதிக்கலாம் .

வீட்டில் ஒரு சின்ன தேங்காய் மட்டையை வைத்து அதை நாள் தோறும் காலையில் வணங்கத் துவங்குங்கள். அதற்கு முன் ஒரு துண்டு மட்டுமே கட்டி நின்று , நாள்தோறும் இரண்டரை குவளை நீரை மிளகில் கரைத்து ஊற்ற வேண்டும். 4 வாரம் இப்படிச் செய்யுங்கள்.

பிறகு இரண்டு நாள் செய்யக் கூடாது என்று முயற்சி செய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு மனதில் ஒரு குறை ஏற்படும் .இது வெறும் பழக்கமே. உண்மையில் அந்த மட்டையை தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டால் கூட உங்கள் வாழ்வு எப்பொழுதும் போல நடக்கும் .

நீங்கள் "வணங்கிய" தேங்காய் மட்டையை தூக்கிப் போட மனம் வராது . வெறும் பழக்கம் தான் இந்த மதம் எல்லாம் . இதை ஏற்றுக் கொள்வது உங்கள் விருப்பம் , ஆனால் பரிசோதித்துப் பார்த்தல் இந்த முடிவுக்கே பெரும்பான்மையினர் வருவார்கள்.
பார்ப்...ன் இந்த ஏமாற்று வேலையை இன்னும் சிறப்பாக செய்கிறான் .

உங்களைச் சுத்தி நாலு பேர் சேர்ந்து அந்தக் கல் கல்இல்லை , அது கடவுள் என்று அமோதித்தால், நீங்களும் "அட நாலு பேர் சொல்றாங்களே , நமக்குத் தெரிஞ்சவுங்க சொல்றாங்களே, அப்ப சரியாத் தான் இருக்கும் என்று பொய்யை உண்மையென நம்ப நல்ல சூழலை பார்ப்...ன் உருவாக்குகிறான் .

மேலும் ஒரே இடத்தில சென்று எல்லோருடனும் ஒன்று கூடி இந்த முட்டாள்தனமான சடங்குகளை செய்தால் மனதில் இன்னும் பற்று ஏற்படும் . கடைசியாக பார்ப்...னின் சூழ்ச்சி என்னவென்றால் , பேசாத கல்லை வைத்துக் கொண்டு , கடவுள் இப்படிச் சொல்கிறார் , கடவுள் அப்படிச் சொல்கிறார், கடவுள் கோபமா இருக்காரு , உங்க வீட்டு கண்ணிப் பொண்ணை பூசைக்கு அனுப்பி வைங்க, என்று பார்ப்....ன் இடையிலே,
ஊரில் அவன் மட்டுமே கடவுள் என்ன சொல்கிறார்
என்று மொழிபெயர்க்க கூடிய இடத்தில உட்கார்ந்து கொள்கிறான் .

உங்கள் உள்ளம் , அறிவு , இரண்டும் இந்த மூட நம்பிக்கை சிறைக்குள் பார்ப்...னால் சிறைபடுத்தப்பட்டு விட்டது . இப்பொழுது உங்கள் வாழ்வில் நடக்கும் எல்லா நன்மைகளுக்கும் இந்த தேங்காய் மட்டை தான் காரணம் என்று உங்கள் மனதில் தானாக ஒரு பொய் இடம் பிடிக்கும் . இந்த மட்டையை இழந்தால் நம் வாழ்க்கையே போச்சு என்று தோணும் . உங்கள் அடையாளம் இந்த காய்ந்து போன தேங்காய் மட்டை தான் . இதை இனி விட்டுக்கொடுக்க மாட்டீர்கள்.

உங்கள் பெண் காதல் கொண்டது இந்த மட்டைக்கு பிடிக்கவில்லை , மட்டை கோபமா இருக்கு என்றால், மட்டையே கதி என்று இருக்கும் நீங்கள் அந்தப் பையனை கொ.... செய்யத் தயங்க மாட்டீர்கள். மதம் முழுதாய் உங்களுள் ஏறி விட்டது, நீங்கள் ஒரு மட்டைப் பைத்தியம் ஆகிவிட்டீர்கள் , ஆனால் கடவுளுக்கு சிறந்த பக்தன் ஆகி விட்டதாக நினைத்துக் கொள்கிறீர்கள்.

மாயையில் இருந்து விழித்தெழுங்கள் . உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொண்டது போதும் . உங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை பாப்...னின் சாமி தான் கொடுத்துச்சு என்று ஏன் ஏமாறுகிறீர்கள்? பயத்தை ஒரேடியாக விட்டுத் தள்ளுங்கள் .

நீங்கள் நினைப்பதை விட உங்களுக்கு வலிமை அதிகம் . கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது உங்கள் விருப்பம் , ஆனால் என்ன நம்புகிறீர்கள் என்பதை பகுத்தறிவு சோதனைக்கு உட்படுத்துங்கள் .

இதை உணர்ந்து பார்ப்....னின் "கலாச்சாரம் பாரம்பரியம்" என்ற சூழ்ச்சியை அடித்துக் கேட்க வேண்டும், "எனக்கு உன் பித்தலாட்டம் தெரிஞ்சு போச்சு, போடா" என்று விரட்டி அடிக்க வேண்டும்.

தோழர் காளி அவர்களின் எக்ஸ் தள பதிவிலிருந்து

  அமில தஸநாயக்க எனும் பெயருடைய இந்த MBBS மருத்துவப் பட்டதாரி பற்றிய ஒரு குறிப்பை முகநூலில் வாசித்த போது, ஒரு முன்மாதிரி ...
29/08/2025

அமில தஸநாயக்க எனும் பெயருடைய இந்த MBBS மருத்துவப் பட்டதாரி பற்றிய ஒரு குறிப்பை முகநூலில் வாசித்த போது, ஒரு முன்மாதிரி மாணவனாக அவரை தமிழ் பேசும் மாணவர்களுக்கும் அறிமுகம் செய்து அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என மனம் சொன்னது.

கொழும்பு ராயல் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞானம் உயர்தரம் கற்று அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தில் தேறி கொழும்பு பல்கலைக்கழக மருத்துவத்துக்கான பீடத்திற்கு தெளிவாகியுள்ளார்.

ஏக காலத்தில் இலங்கையில் சுமார் 10,000 மாணவர்களுக்கு பகுதி நேர வகுப்புகளை நடகத்தியுள்ளதோடு அவரது மாணவர்கள் சிறப்பாகத் தேறுவதற்கு ரிவிஷன், ரெபிட் ரிவிஷன், பழைய வினாத்தாள் என பல உத்திகள் மூலம் ஏ, பீ சித்திகளை பெற உதவியுள்ளார்.

தான் பட்டமளிப்பு விழாவிற்கு தனது பெற்றாருடன் வருகை தந்த போது தனது சொந்த உழைப்பில் வாங்கிய BMW i7, Nissan GT-R இரு வாகனங்களில் வருகை தந்துள்ளார்.

பெற்றார், ஆசிரியர்களால் அடித்தளங்களை இட்டு வழிகாட்டத் தான் முடியும், ஆனால் இலக்கை நோக்கிய பயணத்தில் விடா முயற்சியும் கடின உழைப்பும் மாத்திரமன்றி தனது துறையில் ஏனைய மாணவர்களுக்கும் வழிகாட்டும் ஆசிரியமும், தொடர் கற்றலும் கற்பித்தலும், பிரார்தனைகளும், ஆசிர்வாதங்களும் ஒரு பட்டதாரி மாணவரை எந்த அளவிற்கு கூர்மைப்படுத்தி வெற்றிக் கம்பத்தை நோக்கி பயணிக்கச் செய்கிறது என்பதற்கு வைத்தியர் அமில திஸாநாயக்க சிறந்த உதாரணமாக புருஷர் ஆகிறார்!

மாணவப் பருவத்தில் பெற்றார்களை மதித்து அவர்கள் சொல்பேச்சு கேட்டு நடத்தல், ஆசிரியர்களை மதித்து கீழ்படிந்து நடத்தல், கற்கின்ற காலத்தில் தவறான நட்புகள், பழக்க வழக்கங்களை, காதல் போன்றவற்றில் காலத்தை விரயம் செய்வதை தவிர்த்தல், இன்டர்நெட் விளையாட்டுக்கள் சமூக ஊடகங்களில் சுயகட்டுக் கோப்பின்றி அடிமையாகி விடாமல் விழிப்பாக நடந்து கொள்ளல் போன்ற பண்புகள் தான் ஒரு மாணவரை சரியான திசையில் வழி நடாத்துகின்றன!

ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ”அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய். அந்த தண்ணீர் எ...
22/08/2025

ஒரு குட்டி மீனுக்கு நீரைப் பார்க்க வேண்டுமென்று ஆசை. ”அம்மா! நாம் வாழ தண்ணீர் மிக அவசியமென்று சொல்கிறாய். அந்த தண்ணீர் எங்கே இருக்கிறது ? எனக்குக் காட்டு” எனக் கேட்டது.

உடனே தாய் மீன் இதுதான் தண்ணீரென்று தண்ணீரைக் காட்டியது. குட்டி மீனுக்கு ஒன்றும் புரியவில்லை.

”அம்மா! நீ தண்ணீரைக் காட்டு” என மீண்டும் சொல்லியது. மீண்டும் தாய் மீன் தண்ணீரைக் காட்டியது.
அப்போதும் குட்டிமீனுக்கு தண்ணீர் தெரியவில்லை.

உடனே அது இந்த அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என சொல்லிக் கொண்டே, அப்பா மீனிடம் இதே கேள்வியைக் கேட்டது.

அப்பாவும் அதே மாதிரி தண்ணீரைக் காட்ட அப்பாவுக்கும் ஒன்றும் தெரியாது எனத் தீர்மானித்து விட்டது. பிறகு உறவினர்களிடம் போய் இதே கேள்வியைக் கேட்டது. எல்லோரும் ஒரே பதிலையே சொன்னார்கள்.

திருப்தி அடையாத மீன் யாருக்குமே ஒன்றும் தெரியாது என்று தீர்மானித்து இறுதியில் உருவத்தில் பெரிய திமிங்கலத்திடம் வந்து தண்ணீரைக் காட்டச் சொன்னது. உடனே திமிங்கலம் குட்டி மீனை தன் முதுகில் ஏறச் சொன்னது. குட்டி மீனும் முதுகில் ஏறியது. கரை நோக்கிச் சென்ற திமிங்கலம் குட்டி மீனை கரையில் எறிந்தது.

குட்டி மீன் தண்ணீர் இல்லாமல் துடிதுடித்து உயிருக்குப் போராடியது. அப்போது திமிங்கலம் இதுதான் தண்ணீர் என்று தண்ணீரைக் காட்டி மீண்டும் குட்டி மீனைத் தண்ணீரில் விட்டது.

அப்போதுதான் குட்டி மீனுக்கு தண்ணீர் தண்ணீராகத் தெரிந்தது.

○ அதுபோல்தான் கடவுளும் உலகின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு உருவிலும் நிறைந்து இருந்தாலும் பலருக்கும் அவர் தெரிவதில்லை.

○ எல்லோரும் கடவுளைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தனக்கு உள்ளே இருக்கும் கடவுளை யாரும் உணர்வதே இல்லை. கடவுளை அனுபவித்துதான் அறிய முடியும்.

படித்ததில் பிடித்தது

உணவு, தண்ணீர், தங்குமிட வசதிகளுடன், இயற்கை அனர்த்த தாக்குதல் எதுவுமின்றி எலிகளை ஓரிடத்தில் வைத்தால் என்னவாகும்?இந்த யோசன...
22/08/2025

உணவு, தண்ணீர், தங்குமிட வசதிகளுடன், இயற்கை அனர்த்த தாக்குதல் எதுவுமின்றி எலிகளை ஓரிடத்தில் வைத்தால் என்னவாகும்?

இந்த யோசனை அமெரிக்க உயிரியலாளர் ஜான் கால்ஹவுனுக்குத் தோன்றியது. 1970-ஆம் ஆண்டு இந்த பரிசோதனையைத் தொடங்கினார்.

ஏராளமான உணவு, நீர் மற்றும் வசதிமிக்க ஓரிடத்தை உருவாக்கினார். பின்னர் அங்கு நான்கு எலிகளை (இரண்டு ஆண், இரண்டு பெண்) வைத்தார்.

முதலில் எலிகள் வியக்கத்தக்க விகிதத்தில் இனப்பெருக்கம் செய்தன, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் 315 நாட்களுக்குப் பிறகு, இனப்பெருக்க விகிதம் கணிசமாகக் குறையத் தொடங்கியது.

எலிகளின் எண்ணிக்கை தோராயமாக 600-ஐ எட்டியபோது, அவற்றுக்கு இடையே புதிய மாற்றங்கள் தோன்றின. அந்த மாற்றங்கள் மிக மோசமானவையாக இருந்தன.

பெரிய எலிகள் பலவீனமானவற்றைத் தாக்கத் தொடங்கின. இது ஆண்களிடையே உளவியல் ரீதியான சரிவுக்கு வழிவகுத்தது.

இதற்கிடையில், சில பெண் எலிகள் குட்டிகளைப் பராமரிப்பதை கைவிட்டன. மேலும் எந்த காரணமும் இல்லாமல் மற்ற பெண்களின் குட்டிகளைத் தாக்கத் தொடங்கின.

காலப்போக்கில், இளம் எலிகளிடையே இறப்பு விகிதம் அதிகரித்து, பிறப்பு விகிதம் பூஜ்ஜியமாகக் குறைந்தது.

ஏராளமான உணவு இருந்தபோதிலும்; ஒருபால் உறவு, காட்டுமிராண்டித்தனம், மற்ற எலிகளை கடித்து உண்ணுதல் போன்ற விசித்திரமான நடத்தைகளும் தோன்றின.

சோதனை தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கடைசி எலி 1973-ல் பிறந்தது.

கைசேதம் என்னவென்றால் "யுனிவர்ஸ் 25" என்று அழைக்கப்பட்ட இந்த சோதனையின் முடிவில் அனைத்து எலிகளும் இறந்தன.

வினோதம் என்னவென்றால் இதே சோதனை 25 முறை மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது, ஒவ்வொரு முறையும் அதே முடிவு. அதே சரிவு. அதே அழிவு.

கால்ஹவுன் கூறுகிறார்: சமூகங்களுக்கு - எலிகளோ மனிதர்களோ - முயற்சி அல்லது சவால் இல்லாமல் அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டால்; அவற்றின் பண்புகள் நாசமாகி அழிவு நிச்சயம் ஏற்படும்.

04/08/2025

ஒரு மருத்துவ வகுப்பின் முதல் நாள் ஆசிரியர் ஒரு பிணத்தை வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்

"ஒரு மருத்துவனுக்கு மிக முக்கியமானது மூன்று விஷயங்கள் ஒன்று நோயாளியின் உடலை தொடவோ, பார்க்கவோ கூச்சப்படக்கூடாது அடுத்தது எதையும் நன்றாக கவனிக்க வேண்டும்"

என்று சொல்லிவிட்டு தன் விரலை பிணத்தின் வாய்க்குள் விட்டு பின் வெளியே எடுத்து விரலை முத்தமிட்டார்.

பிறகு மாணவர்களிடம்,"சரி எல்லோரும் நான் செய்தது போல செய்யுங்கள்" என்றார்.

மாணவர்கள் மிகவும் தயங்கினர். ஆனால் நேரம் ஆக ஆக எல்லோரும் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஒரு கட்டத்தில் எல்லோரும் செய்து முடித்திருக்க ஆசிரியர் கூறினார்...

"எல்லோரும் முடித்தாயிற்றா? நான் பிணத்தின் வாய்க்குள் விட்டது ஆள் காட்டி விரல், முத்தமிட்டது நடு விரல். இனியாவது நன்றாக கவனியுங்கள்"

16/07/2025
வட்டுவாகல் பாலம் உடைந்ததன் காரணமாக குறித்த பாலத்தினூடான   போக்குவரத்து  தடைப்பட்டுள்ளது. எனவே குறித்த உடைவின் திருத்த வே...
15/07/2025

வட்டுவாகல் பாலம் உடைந்ததன் காரணமாக குறித்த பாலத்தினூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எனவே குறித்த உடைவின் திருத்த வேலைகள் நிறைவடையும் வரை புதுக்குடியிருப்பு முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் முல்லைத்தீவு ஊடாக பயணம் செய்வோர் மாற்றுப்பாதையாக, புதுக்குடியிருப்பு கேப்பாப்பிலவு வீதியை பயன்படுத்திக்கொள்ளவும்.

மாவட்ட செயலகம்
முல்லைத்தீவு

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Pigeon News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share