23/03/2026
🛑 20, 30, 40 வயசுல இருக்கிற ஆக்களா நீங்க? கொஞ்சம் வடிவா இருந்து இத வாசிங்கோ! (அப்புறம் ஃபீல் பண்ணி பிரயோசனம் இல்ல!) 🛑
படிச்சு கிழிச்சு PhD எல்லாம் முடிச்சவங்ககூட, கடைசியில கையில ஒண்டும் இல்லாம செத்துப்போயிருக்காங்க.... ஆனா பள்ளிக்கூடப் படியே சரியா மிதிக்காத 'பணக்காரன்' செத்த போது பெரிய கோடீஸ்வரன்!
ரெண்டு பேருக்கும் இடையில இருந்த வித்தியாசம் மூளையோ, அதிர்ஷ்டமோ, இல்லை மாடு மாதிரி உழைச்சதோ கிடையாது. 'காசு' எண்டா என்ன எண்டு அவங்களுக்கு தெரிஞ்சிருந்த ரகசியம் தான்!
இதெல்லாம் எப்பிடி சாத்தியமானது எண்டத 5 விசயங்களா பாப்பமே...?! (நக்கல் எண்டு நினைக்காம வடிவா விளங்கிப் படிங்கோ).
1. எங்கட சம்பளம் ஒரு சொத்து இல்ல... அது ஒரு நாய் சங்கிலி! 🐕
மாசா மாசம் முப்பதாந்திகதி சம்பளம் வந்த உடனே நாம என்ன நினைப்பம்? "அப்பாடா, லைஃப் செட்டில்ட்" எண்டு! ஆனா நாங்க வேலைக்கு போனா தான் காசு. போகலைண்டா? கதை கந்தல்! அதுக்கு பேர் நிதிச் சுதந்திரம் இல்ல, அதுக்கு பேர் தான் அடிமைத்தனம்.
"பணக்காரன் ஆகுறதுக்கு பெரிய சம்பளம் தேவையில்லை. நாங்க நித்திரையில குறட்டை விட்டுத் தூங்கும் போதும் உனக்கு காசு வரணும்." வாடகை, பிசினஸ், ஷேர், முதலீடு எண்டு உழைக்கிற காசை உழைக்க விடுங்கோ!
2. நாங்க பேங்க் லோன்ல கட்டின 'கனவு இல்லம்' ஒரு சொத்து இல்ல! 🏠🚫
இதச் சொன்ன உடனே பலருக்கு கோவம் பொத்துக்கொண்டு வரும். வரட்டும், எனக்குக் கவலையில்ல.
உங்கட வீடு மாசா மாசம் உங்கட பாக்கெட்ல இருந்து காசை (Loan, Maintenance, Tax) புடுங்குது எண்டா, அது ஒரு 'சுமை' (Liability), சொத்து (Asset) இல்ல!
எது உங்கட பாக்கெட்டுக்கு காசைக் கொண்டு வருதோ அது தான் உண்மையான சொத்து! இதைப் பள்ளிக்கூடத்துல எந்த வாத்தியாரும் சொல்லித் தர மாட்டினம். சும்மா நான் பெரிய இன்வெஸ்டர் எண்டு பம்மாத்து காட்டிட்டு 60 வயசுலயும் கஸ்டப்படாதேங்கோ.
3. கடன் எண்டது ஒரு ஆயுதம்... ஆனா நாம அதை நம்ம தலையிலயே வெட்டிக்கிறம்! 💳⚔️
காசு இல்லாதவன் கடனை வாங்கி என்ன செய்வான்? புது ஐபோன் வாங்குவான், பெரிய டிவி வாங்குவான், வெளிநாட்டுக்கு டூர் போவான். ஆனா பணக்காரன் அதே கடனை வாங்கி என்ன செய்வான்? பிசினஸ்ல போடுவான், காணி வாங்குவான். ஏன்னா அது நாளைக்கு டபுள் ஆகும்!
வங்கியில ரெண்டுக்கும் கடன் குடுப்பான். நாங்க எதை வாங்குறம் எண்டதுல தான் எங்கட புத்திசாலித்தனம் இருக்கு. நான் கடனுக்கு எதிரானவன் இல்ல, ஆனா அந்த கடனை வச்சு நான் சொத்து சேர்ப்பன், உங்கள மாதிரி வீண் பந்தாவுக்கு செலவழிக்க மாட்டன்!
4. எங்கட வாழ்க்கையில பெரிய செலவே 'வரி' (Tax) கட்டுறது தான்! 💸
உடுத்திற உடுப்பு, சாப்பிடுற சாப்பாட்டை விட நாம கட்டுற வரி தான் அதிகம். சட்டம் எண்டது பிசினஸ் பண்றவனுக்கும், முதலீடு செய்றவனுக்கும் ஏத்த மாதிரி தான் எழுதப்பட்டிருக்கு. எங்கள மாதிரி மாதாந்த சம்பளக்காரனுக்கு இல்லை!
பணக்காரன் சட்டப்படி வரியில இருந்து தப்பிடுவான். நடுத்தர வர்க்கம் தான் முழு வரியையும் இழுத்துப்போட்டு கட்டி முழிக்கும். நாங்க எந்தப் பக்கம் நிக்கப் போறம்?
5. 'காசைப் பத்தின அறிவு' தான் ஆகப் பெரிய முதலீடு! 🧠💰
பிசினஸ் முதலீடுகளில் இழந்திருப்பார்கள். ஆனா திரும்பவும் டபுளாக்கி சம்பாதிச்சிருப்பார்கள். எப்பிடி? காசைப் பத்தி தெரிஞ்சிருந்த அறிவு தான் காரணம்! ஒருத்தன்ட்ட இருந்து காசைப் புடுங்கலாம், ஆனா அறிவைப் புடுங்க ஏலாது! கண்டியளோ?? இந்த அறிவு அந்த PhD ஆல் வரும் அறிவல்ல மோனே....
ஸ்கூல்ல ஏன் இதையெல்லாம் நமக்கு சொல்லித் தாரேல்ல? ஏன்னா, நாம எல்லாரும் புத்திசாலி ஆகிட்டா, அப்புறம் அவங்களுக்கு கீழ கைகட்டி வேலை செய்ய யார் வருவாங்கள்? அதனால தேடிப் படியுங்கோ... காசு எண்டா என்ன, அது எப்படி வேலை செய்யுது, வரி எண்டா என்ன எண்டு தெரிஞ்சவங்கள்ர கேட்டுப் படியுங்கோ! இந்த அறிவு உங்களுக்கு கிடைக்கிற எந்த சம்பள உயர்வை விடவும் பெறுமதியானது.
எனக்கு இப்ப 38 வயசாகுது. நான் இதெல்லாம் தேடிப்படிக்கலை எண்டால், நானும் உங்கள மாதிரி சம்பளத்தை மட்டுமே நம்பித்தான் சீவிச்சிருப்பன்.
"திங்கட்கிழமை பார்ப்பம்" எண்டு தள்ளிப் போடாம, இன்றைக்கே இதைப் பத்தி யோசிக்கத் தொடங்குங்கோ! 👍
(உங்கட நண்பர்களுக்கும் இதைப் ஷேர் பண்ணுங்கோ, அவங்களும் கொஞ்சம் படிச்சு முன்னேறட்டும்! 😉)