30/10/2025
இதுவரை எந்த அரசும் கணக்கில் எடுக்காததால் நாட்டின் மூலை முடுக்கெல்லாம், பாடசாலைகளிளெல்லாம் புரையோடிப்போயிருக்கும் போதைவஸ்து தொடர்பில் நாடளாவிய ரீதியாக களையெடுப்பு நடவடிக்கையை NPP அரசு ஆரம்பித்திருக்கிறது. போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவரும் தலைகள் சிலரை வளையம் போட்டதோடு மட்டுமல்லாது, அடிமட்ட முகவர்களையும் வளைத்துப் பிடிப்பது என்பது போதைக்கெதிரான நாட்டை கட்டியெழுப்புவதில் மிகப்பெரிய நடவடிக்கைகள்.
இதுவரை காலமும் வடக்கு கிழக்கில் போதை தொடர்பில் கண்டும் காணாமல் இருந்த அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் மீது கடுப்பில் இருந்த பொதுமக்களுக்கு,
ரவுடிகள், போதை ஏஜெண்டுகள், பொலீஸ் இராணுவம், வக்கீல்களின் வலைப்பின்னல்கள் தொடர்பில் வாய்மூடி மவுனித்திருந்த மக்களுக்கு,
அரச இயந்திரம் தற்போது உயர்மட்டத்திலேயே நிர்ணயித்திருக்கும் போதைக்கெதிரான tone என்பது அதிக உற்சாகத்தையும் வரவேற்பையும் தந்திருக்கும்.
சமூகத்தின் கறையான்களை ஒழிப்பதற்கு அனைவரும் முன்வருவதோடு, அரசின் இந்த நடவடிக்கை பாராபட்சமின்றி அனைத்து மட்டங்களிலும் அமலாக்கப்பட வேண்டும் என்பதுடன், போதைப் புனர்வாழ்வுத் திட்டங்கள் தொடர்பிலும், கைதுசெய்யப்படும் நபர்களின் தண்டனைகள் தொடர்பிலும் உரிய முறையில் செயற்படுவார்களென எதிர்பார்ப்போம்!