12/07/2025
அமரர் எம். பாலசுப்ரமணியம் நினைவு சிறுகதைப் போட்டி - பரிசளிப்பு நிகழ்வு,ஆய்வரங்குகள், சிறுகதை பயிலரங்கு, புத்தக வெளியீடுகள், இலங்கை மற்றும் இந்திய அரிய தமிழ் நூல்களின் காட்சியும், விற்பனையும் - வெள்ளவத்தை சைவ மங்கயர் கழக மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.
இரு நாள் சமூக, அறிவியல், பண்பாட்டு நிகழ்வுகளாக இது இடம்பெறுகின்றது. இன்று சனிக்கிழமை ஆரம்பமான இந்த நிகழ்வில் பெறும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
நாளை ஜாயிற்றுகிழமையும் இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளது.
சமூகம் இயல் பதிப்பகம் லண்டன், மொழி புக்ஸ் pulication கொழும்பு ஏற்பாடு செய்துள்ள மேற்படி நிகழ்வுகள் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 7.00 மணி வரை இடம்பெறும்.
பிரதம விருந்தினர்களாக பீ. எச். அப்துல் ஹமீத், பவா செல்லத்துறை, லெனின் பாரதி, வீ. மௌனகுரு ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இன்றைய அரங்கில் - மலையகஅரங்கு, மலைய்யக பெண்ணிய கவிதைகளின் பாடு பொருள், நூல் அறிமுகம் ( இப்படியும் ஒரு காலமிருந்தது) என்பன முதல் அரங்கில் இடம் பெற்றது.
இரண்டாம் அரங்கில் - சட்டத்தரணியும், இளம் ஆய்வாளருமான ஷர்ஜுன் ஜாமல்தீன் எழுதிய " இலங்கை ஈஸ்டர் தாக்குதல்- நீதியும் தண்டனையும் " நூல் வெளியீடு இடம் பெற்றது.
தொடர்ந்து திரைப்பட இலக்கியம்,, கவிஞசரும். கல்வியாலருமான சேரன் குறித்த நூல் வெளியீடும்,சிங்கள, தமிழ், முஸ்லிம் கலைஞ்சர்களின் சந்திப்பும் இடம் பெற்றது.