The Great India News Srilanka

The Great India News Srilanka தகவல் அறிவது நல்லது

/மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் , பாடசாலை சின்னம் பொறிக்கப்பட்ட ஒரு தொகை Blazer (பகட்டு வண்ணச் சட்டை) கல்லூரி அதிபர...
31/07/2025

/மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் , பாடசாலை சின்னம் பொறிக்கப்பட்ட ஒரு தொகை Blazer (பகட்டு வண்ணச் சட்டை) கல்லூரி அதிபர் ஏ .எல் .ஏ .ரஹ்மான் அவர்களிடம் பழைய மாணவியர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் எம்.ஜே.எப்.யமீனா மற்றும் குழுவினரால் அண்மையில் கையளிக்கப்பட்டது.

https://thegreatindianews.com/introducing-a-blazer-with-the-school-logo/

ஜப்பான் தூதுவரை சந்தித்த இ.தொ.கா!இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) அவர்கள் நுவரெலியாவிற்கு விஜய...
29/07/2025

ஜப்பான் தூதுவரை சந்தித்த இ.தொ.கா!

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio ISOMATA) அவர்கள் நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இவ்விஜயத்தின் போது, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, நுவரெலியா மாநகரசபையின் பிரதி மேயர் யோகராஜா, முன்னாள் அமைச்சர் புத்திர சிகாமணி ஆகியோரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இச்சந்திப்பின் போது மலையக மக்களுக்கு தேவையான அபிவிருத்தி, எதிர்கால பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் என்பவற்றிற்கு ஜப்பான் உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று சாதகமாக பரிசீலிப்பதாக ஜப்பான் தூதுவர் உறுதியளித்தார்.

மாலைதீவின் அரச பிரதானிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர...
29/07/2025

மாலைதீவின் அரச பிரதானிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்படி, மாலைதீவு பிரதி சபாநாயகர் அகமத் நஸீம் (Ahmed Nazim), வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல் (Dr. Abdulla Khaleel) பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் மொஹமட் சயீத் (Mohamed Saeed), பாதுகாப்பு அமைச்சர் மொஹமட் கசான் மௌமூன் (Mohamed Ghassan Maumoon), நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் மூசா சமீர் (Moosa Zameer), உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி இஹுசான்(Ali Ihusaan) ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.

மாலைதீவுக்கு அரச விஜயம் மேற்கொண்டதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்தப் பயணம், எதிர்காலத்தில் ஆழமான ஒத்துழைப்பு, பரந்த புரிதல் மற்றும் சிறந்த நட்புக்கான அடித்தளமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-07-29

தேர்தல் ஆணையத்தின் 2026 - 2029 மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக தேர்தல...
21/07/2025

தேர்தல் ஆணையத்தின் 2026 - 2029 மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பது தொடர்பான யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் மாவட்ட அளவில் தொடர்புடைய பங்குதாரர்களுடன் நடத்தப்படும் கலந்துரையாடல் தொடரின் புத்தளம் மாவட்ட நிகழ்ச்சித்திட்டம் 21.07.2025 திங்கட்கிழமை 09.30 முதல் 11.30 வரை புத்தளம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் அத்தியச்சகர் லக்சித்த ருவான் ஜெயனாயக்க தலைமையில் இந்த செயலமர்வு இடம் பெற்றது.

அரச அதிகாரிகள், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பல்துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
பிரதம உரையினை தேர்தல்கள் ஆ ணையாளர்கள் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்கே ஆற்றினார்.
தேர்தல் ஆணையகத்தின் திட்டமிடல் பண்ணிப்பாளர் சன்ன சில்வா ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த நிகழ்வுகளை M.A.Fathima
Development officer
Election office puttalam இணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

# shri herath, comkission

பிறந்த நாளை இன்று கொண்டாடும் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆண்டுகளாக இசை ...
20/07/2025

பிறந்த நாளை இன்று கொண்டாடும் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா தமிழ்த் திரைப்படங்களுக்கு ஆண்டுகளாக இசை அமைத்து வருகிறார்.
இவர் பிரபல இசையமைப்பாளர் தேவாவின் மகனாவார். 2000-ம் ஆண்டு "தபுள்ஸ்" திரைப்படத்துடன் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், "சிவகாசி", "ஆழ்வார்", "எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி", "பூலோகம்" போன்ற 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா பாடகராகவும் பின்னணி பாடகராகவும் பணியாற்றி. இவர் "ஸ்ரீ ஸ்டுடியோஸ்" என்ற இசை நிறுவனத்தையும் நடத்துகிறார்.

இந்தியாவிடம், குறிப்பாக சென்னை-based இசையமைப்பாளர், அவருடைய இசை தரமும் தமிழ் சினிமாவில் மிகவும் புகழ்பெற்றுள்ளது. தற்போது அவர் புதிய படங்கள் "சக்தி சிதம்பரம்" (2027), "சாரத்" (2025), "கீரா" (2023) போன்ற திட்டங்களில் இசையமைப்பாளராக செயல்படுகிறார்.

இந்த நிலையில், இன்று பிறந்த நாளை கொண்டாடும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தமிழ் இசை ரசிகர்கள் மற்றும் திரைப்பட உலகினர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.
இன்று சென்னையில் இடம் பெற்ற பிறந்தநாள் நிகழ்வில் சென்னையினை வசிப்பிடமாக கொண்ட இலங்கையினை சேர்ந்த டிஜிட்டல் Pr Ahamed Asjad அவர்களும் கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதை படத்தில் காணலாம்.
PR, Horn ,

கொழும்பின் இரு பிரபல பாடசாலைகளான, ஹமீட்-அல்-ஹுஸைன் கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான பாரம்பரிய உதைப்பந...
20/07/2025

கொழும்பின் இரு பிரபல பாடசாலைகளான, ஹமீட்-அல்-ஹுஸைன் கல்லூரி மற்றும் ஸாஹிரா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான பாரம்பரிய உதைப்பந்தாட்ட போட்டியான ‘ஹெரிடேஜ் டெர்பி’ எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

https://thegreatindianews.com/awareness-event-held-on-the-occasion-of-the-football-match/

,sports, alhusaniya

19/07/2025

( பேருவளை பீ.எம்.முக்தார் )

இலங்கையின் தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி - 2025-2029 ஐ செயல்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.        ...
15/07/2025

இலங்கையின் தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி - 2025-2029 ஐ செயல்படுத்துவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள வரித்தொடர்பில் மேலும் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி இல...
15/07/2025

தற்போது அமெரிக்கா இலங்கைக்கு விதித்துள்ள வரித்தொடர்பில் மேலும் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி இலங்கையில் இருந்து உயர்மட்ட குழு ஒன்று அமெரிக்கா செல்ல உள்ளதாக வெளி விவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தயாரில்லை
15/07/2025

ஜப்பான் தயாரில்லை

அமரர் எம். பாலசுப்ரமணியம் நினைவு சிறுகதைப் போட்டி - பரிசளிப்பு நிகழ்வு,ஆய்வரங்குகள், சிறுகதை பயிலரங்கு, புத்தக வெளியீடுக...
12/07/2025

அமரர் எம். பாலசுப்ரமணியம் நினைவு சிறுகதைப் போட்டி - பரிசளிப்பு நிகழ்வு,ஆய்வரங்குகள், சிறுகதை பயிலரங்கு, புத்தக வெளியீடுகள், இலங்கை மற்றும் இந்திய அரிய தமிழ் நூல்களின் காட்சியும், விற்பனையும் - வெள்ளவத்தை சைவ மங்கயர் கழக மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.
இரு நாள் சமூக, அறிவியல், பண்பாட்டு நிகழ்வுகளாக இது இடம்பெறுகின்றது. இன்று சனிக்கிழமை ஆரம்பமான இந்த நிகழ்வில் பெறும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.
நாளை ஜாயிற்றுகிழமையும் இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளது.
சமூகம் இயல் பதிப்பகம் லண்டன், மொழி புக்ஸ் pulication கொழும்பு ஏற்பாடு செய்துள்ள மேற்படி நிகழ்வுகள் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 7.00 மணி வரை இடம்பெறும்.
பிரதம விருந்தினர்களாக பீ. எச். அப்துல் ஹமீத், பவா செல்லத்துறை, லெனின் பாரதி, வீ. மௌனகுரு ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.
இன்றைய அரங்கில் - மலையகஅரங்கு, மலைய்யக பெண்ணிய கவிதைகளின் பாடு பொருள், நூல் அறிமுகம் ( இப்படியும் ஒரு காலமிருந்தது) என்பன முதல் அரங்கில் இடம் பெற்றது.
இரண்டாம் அரங்கில் - சட்டத்தரணியும், இளம் ஆய்வாளருமான ஷர்ஜுன் ஜாமல்தீன் எழுதிய " இலங்கை ஈஸ்டர் தாக்குதல்- நீதியும் தண்டனையும் " நூல் வெளியீடு இடம் பெற்றது.
தொடர்ந்து திரைப்பட இலக்கியம்,, கவிஞசரும். கல்வியாலருமான சேரன் குறித்த நூல் வெளியீடும்,சிங்கள, தமிழ், முஸ்லிம் கலைஞ்சர்களின் சந்திப்பும் இடம் பெற்றது.

12/07/2025

ஷர்ஜுன் எழுதிய ஈஸ்டர் தாக்குதல் மற்றும் தண்டனை நூல் வெளியீடு கொழும்பு சைவ மங்கயர் கழக மண்டபத்தில்

Address

Colombo

Telephone

+94769890119

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Great India News Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share