Malaikuruvi

Malaikuruvi Latest News From Sri Lanka/India/World
news in Tamil
(1)

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக  சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்போது நிலவ...
11/05/2026

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் உள்ளதாக சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் தியகலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

தித்துவா புயலின் போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் கொட்டிக் கிடந்த மண் மேடு வெட்டி அகற்றப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் மீண்டும் நேற்று (10) மாலை பெய்த கடுமையான மழை காரணமாக அதே இடத்தில் மற்றொரு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தில் மிதக்கும் பண்டாரவளை நகரம்!பண்டாரவளை பகுதியில் இன்று (11) பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவள...
11/05/2026

வெள்ளத்தில் மிதக்கும் பண்டாரவளை நகரம்!

பண்டாரவளை பகுதியில் இன்று (11) பிற்பகல் வேளையில் பெய்த கன மழையின் காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

கடும் மழையினால் நகரில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வர்த்தக நிலையங்களுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்ததால் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொருள்களும் சேதமடைந்துள்ளன.

தமிழக முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினைச்  சநதித்த இந்நாள் முதலமைச்சர் விஜய், மூத்த அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெ...
11/05/2026

தமிழக முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினைச் சநதித்த இந்நாள் முதலமைச்சர் விஜய், மூத்த அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.
11-05-2026

கொழும்பு, டாம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இன்று (11) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.அந்...
11/05/2026

கொழும்பு, டாம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இன்று (11) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் குறைந்தது பத்துத் தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு விரைந்துள்ளன.

11/05/2026

இன்றுபோல் ஒரு நாளில் கொத்மலை, கெரண்டியல்லை பஸ் விபத்து நடந்து ஒரு வருடம் கடந்தாலும், அந்த நாளின் நினைவுகள் நெஞ்சத்திலிருந்து நீங்கா. அந்த இடத்தில் இன்று (11) கண்ணீருடன் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றபோது...
கௌசல்யா

கொத்மலை, கெரண்டியல்லை பஸ் விபத்து நடந்து ஒரு வருடம் கடந்தாலும், அந்த நாளின் நினைவுகள் நெஞ்சத்திலிருந்து நீங்கா. அந்த இடத...
11/05/2026

கொத்மலை, கெரண்டியல்லை பஸ் விபத்து நடந்து ஒரு வருடம் கடந்தாலும், அந்த நாளின் நினைவுகள் நெஞ்சத்திலிருந்து நீங்கா. அந்த இடத்தில் இன்று (11) கண்ணீருடன் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
கௌசல்யா

11/05/2026

கொத்மலை, கெரண்டியல்லை பகுதி…
ஒரு வருடம் கடந்தாலும், அந்த நாளின் நினைவுகள் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றன.

கடந்த ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி நிகழ்ந்த அந்தத் துயரமான பஸ் விபத்து, பல குடும்பங்களின் வாழ்வை ஒரே கணத்தில் சிதறடித்தது. சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்த அந்த பஸ்… கண்ணீரும் அலறலும் மட்டுமே அங்கு நிறைந்திருந்தன.

சம்பவ இடத்திலேயே 23 பேரின் உயிர் பறிபோனது. பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 28 உயிர். ஒவ்வொன்றும் ஒரு குடும்பத்தின் உலகமே.

இன்று, அந்த உயிர்களை நினைவுகூரும் வகையில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அதே துயர இடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியைக் கொத்மலை போலீஸ் அதிகாரி இந்திக்க லலித் ஏற்பாடு செய்திருந்தார். இதில் பிரதேச செயலாளர், மதகுருமார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.

அந்த விபத்து நடந்த நாள்… மனிதாபிமானத்தின் உண்மையான முகம் வெளிப்பட்ட நாள். இரப்பொடகமை, கெரண்டியல்லை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களையும் மீட்டெடுக்க முனைந்தனர்.

அந்த உதவி செய்கைகள் மனித நேயத்தின் உயர்ந்த உதாரணமாகவே நினைவில் நிற்கின்றன. ஆனால், இந்தத் துயரத்தின் வரிசை அங்கேயே முடிந்துவிடவில்லை.

அண்மையில் ஏற்பட்ட தித்துவா சூறாவளி, அதே பகுதியை மீண்டும் தாக்கியது. மண்மேடுகள் சரிந்து, சுமார் 70-இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

ஒரே பகுதி… மீண்டும் மீண்டும் மரணத்தின் சாட்சியாக மாறியது.

இன்று, அந்த இடம் வாழ்வின் சின்னமாக அல்ல… மௌனமாக நின்று கொண்டிருக்கும் ஒரு மயானமாக மாறியுள்ளது.

இந்த நிலம்… ஒருகாலத்தில் சிரிப்பொலியால் முழங்கியது. இன்று அது நினைவுகளால் மட்டும் நிறைந்துள்ளது.

ஒவ்வொரு காற்றடிக்கும் ஒலியிலும், அங்கு இழந்த உயிர்களின் கதைகள் கேட்கின்றன போலும்.

இவ்வாறு உயிரிழந்த அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அஞ்சலி.
அவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை
ஆனால், அவர்கள் நினைவுகள் எப்போதும் நம்முடன் இருக்கும்.

கௌசல்யா

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து முதல் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது. தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17ஆவது ...
11/05/2026

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து முதல் சட்டசபை கூட்டத்தொடர் கூடியது. தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17ஆவது சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கின்றார்.

மன்னாரில் இருந்து தனது கணவருடன் மட்டக்களப்பிற்குச் சென்ற தன் மகளையும், 10 மாதங்கள் நிரம்பிய பேரப் பிள்ளையையும் காணவில்லை...
10/05/2026

மன்னாரில் இருந்து தனது கணவருடன் மட்டக்களப்பிற்குச் சென்ற தன் மகளையும், 10 மாதங்கள் நிரம்பிய பேரப் பிள்ளையையும் காணவில்லை எனத் தெரிவித்து, அப்பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (08) முறைப்பாடு செய்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரியமடு கிராமத்தைச் சேர்ந்த றெனோயன் றெயாழினி (வயது 18) அவரின் 10 மாதக் குழந்தையுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, படத்தில் உள்ள தாயையும் குழந்தையையும் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், 077-5841705, 077-6902536 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு அத்தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
கௌசல்யா

10/05/2026

முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று மே 10 பதவியேற்ற பின்னர் ஆற்றிய கன்னி உரை.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருக்கையில் முதன்முறையாக விஜய் அமர்ந்தார்.தமிழக முதல்வராகப் பதவியேற்ற ச. ஜோசப் விஜய், முதன்...
10/05/2026

தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருக்கையில் முதன்முறையாக விஜய் அமர்ந்தார்.

தமிழக முதல்வராகப் பதவியேற்ற ச. ஜோசப் விஜய், முதன்முறையாக முதல்வராக தலைமைச் செயலகத்துக்கு சென்றார். விஜய் செல்லும் வழியில் இருபுறமும் மக்கள் ஆரவரமாக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Malaikuruvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share