Malaikuruvi

Malaikuruvi Latest News From Sri Lanka/India/World
news in Tamil
(1)

காணித் தகராற்றில் அயல் வீட்டாரிடம் காதைப் பறிகொடுத்த பெண்ணின் முறைப்பாட்டுக்கு, நுவரெலியா பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க...
12/08/2026

காணித் தகராற்றில் அயல் வீட்டாரிடம் காதைப் பறிகொடுத்த பெண்ணின் முறைப்பாட்டுக்கு, நுவரெலியா பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சீத்தாஎலியா, போலகந்தை பிரதேசத்தைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவருக்குச் சொந்தமான காணி தொடர்பில், அயல் நபர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பெண்ணின் காதை அந்த நபர் கடித்துத் துப்பியுள்ளார்.

காணியின் பாதை பிரச்சினையால் காதை பறிகொடுத்த அந்தப் பெண்ணின் முறைப்பாட்டுக்கு நுவரெலியா பொலிஸார் பாரபட்சமாக நடந்துகொண்டிருப்பதாகப் பெண்ணின் சார்பில் தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ள, United Human Rights Organization அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரியா கூறுகிறார்.

நுவரெலியா நிருபர் – ஆர். எப். எம். சுஹைல்

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி வாய்ப்புகளைக் கடந்த 79 ஆண்டுகளாக  வழங்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அ...
12/08/2026

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குக் கல்வி வாய்ப்புகளைக் கடந்த 79 ஆண்டுகளாக வழங்கும் இலங்கை தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET) அமைப்பின் விருது வழங்கல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (10.08.2026) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துகொண்டார்.இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முதலான விசேட விருந்தினர்கள் விழாவைச் சிறப்பித்தார்கள்.

நோர்வூட் அயர்பி தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் இன்று (11) குளவித் தாக்குதலுக்கு உ...
11/08/2026

நோர்வூட் அயர்பி தோட்டத்தில் தேயிலைக் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் சிலர் இன்று (11) குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு 11 பேர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்தவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுள் எண்மர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மூவர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

தேயிலைத் தோட்டத்திலுள்ள மரமொன்றில் இருந்த குளவிக் கூட்டை கழுகு ஒன்று தாக்கிய நிலையில், குளவிகள் வௌியேறித் தொழிலாளர்கள் மீது சீறியுள்ளன.

கௌசல்யா

கொலம்பியா நிலநடுக்கத்தில் 130 பேர் பலி!கொலம்பியா நிலநடுக்கத்தில் 130 பேர் பலியாகி மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந...
11/08/2026

கொலம்பியா நிலநடுக்கத்தில் 130 பேர் பலி!

கொலம்பியா நிலநடுக்கத்தில் 130 பேர் பலியாகி மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

மேற்கு கொலம்பியாவில் நேற்று (10) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன.

கொட்டகலை பகுதிகளுக்கு ஜீவன் விஜயம்!அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் வெள்ளப்பெருக்கு,மண்சரிவினல் பாதிக்கப்பட்ட கொட்...
10/08/2026

கொட்டகலை பகுதிகளுக்கு ஜீவன் விஜயம்!

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் வெள்ளப்பெருக்கு,மண்சரிவினல் பாதிக்கப்பட்ட கொட்டகலை பகுதிகளுக்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று (10) விஜயம் மேற்கொண்டார்.

கஞ்சிப்பானையின் உறவினர் சுட்டுக்கொலை!பிரபல கேடி கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் மாளிகாவத்தையில் இன்று (10...
10/08/2026

கஞ்சிப்பானையின் உறவினர் சுட்டுக்கொலை!

பிரபல கேடி கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் மாளிகாவத்தையில் இன்று (10) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர் துப்பாக்கிப்பிரயோகம் செய்துவிட்டுத் தப்பிச்சென்றுவிட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாகர காரியவசம் கைது!ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கை...
10/08/2026

சாகர காரியவசம் கைது!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் மாஅதிபரைப் படுகொலை செய்வது தொடர்பாக வெளியிட்ட கருத்து தொடர்பாக இன்று (10) விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் அங்கு ஆஜரானபோது கைதுசெய்யப்பட்டார்.

மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் க.பொ.த. உயர் தரப் பரீட்சை இன்று (10) காலை உற்சாகமாக ஆரம்பமானது. எனினும்,மாணவர்கள் அன்றா...
10/08/2026

மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் க.பொ.த. உயர் தரப் பரீட்சை இன்று (10) காலை உற்சாகமாக ஆரம்பமானது.

எனினும்,மாணவர்கள் அன்றாடம் பயணிக்கும் இபோச பஸ் சேவையை இன்று நடத்தாது, ஹற்றன் டிப்போ (சாலை) காலை வாரிவிட்டதாக மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சாமிமலை பகுதியில் இருந்தும் ஹற்றன் பகுதியில் இருந்தும் காலை வேளையில் சேவையில் ஈடுபட்டு வரும் இபோச பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடவில்லை.

இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.பரீட்சைக்குத் தோற்ற முச்சக்கர வண்டிகள் மூலம் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்து வருகை தந்தனர்.

மாணவர்கள் எதிர்நோக்கும் இந்த பஸ் பிரச்சினையைத் தீர்க்கவும் பரீட்சை காலத்திலாவது சீராக நடத்துவதற்கும் மலைநாட்டு அரசியல்வாதிகள் ஹற்றன் டிப்போவுக்கும் அரசுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்

நாடு முழுவதுமுள்ள கிராம சேவை உத்தியோகத்தர்கள் பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் (...
10/08/2026

நாடு முழுவதுமுள்ள கிராம சேவை உத்தியோகத்தர்கள் பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் (10) நாளையும் (11) சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

கொழும்பில் நேற்று (09) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க, தங்களுக்கு வழங்கப்படும் 600 ரூபாய் பயணக் கொடுப்பனவு கடந்த எட்டு வருடங்களாக மாற்றமின்றி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில், இந்த நிலையை சீர்செய்யும் வகையில் 20 லீற்றர் எரிபொருளுக்குச் சமமான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும், இந்தத் தீர்மானம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

09/08/2026

நுவரெலியா, நானுஓயா, டயகமை,அக்கரபத்தனை, லிந்துலை, தலவாக்கலை மெராயா, கொட்டகலை, ஹற்றன்,டிக்கோயா, பொகவந்தலாவை,நோர்வூட், புளியாவத்தை, மஸ்கெலியா, நல்லதண்ணி, சாமிமலை, வட்டவளை, கினிகத்தேனை, நாவலப்பிட்டி,நோட்டன் ஆகிய பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்து வருகிறது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Malaikuruvi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share