12/08/2026
காணித் தகராற்றில் அயல் வீட்டாரிடம் காதைப் பறிகொடுத்த பெண்ணின் முறைப்பாட்டுக்கு, நுவரெலியா பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சீத்தாஎலியா, போலகந்தை பிரதேசத்தைச் சேர்ந்த நோனா பட்டோன் என்பவருக்குச் சொந்தமான காணி தொடர்பில், அயல் நபர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பெண்ணின் காதை அந்த நபர் கடித்துத் துப்பியுள்ளார்.
காணியின் பாதை பிரச்சினையால் காதை பறிகொடுத்த அந்தப் பெண்ணின் முறைப்பாட்டுக்கு நுவரெலியா பொலிஸார் பாரபட்சமாக நடந்துகொண்டிருப்பதாகப் பெண்ணின் சார்பில் தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ள, United Human Rights Organization அமைப்பின் பணிப்பாளர் பிரணீதா வர்ணகுலசூரியா கூறுகிறார்.
நுவரெலியா நிருபர் – ஆர். எப். எம். சுஹைல்