09/09/2025
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இஸ்ரேல் சார்பு நிலைப்பாடு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த காலம் தொட்டு பலஸ்தீன எதிர்ப்பு, இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டில் செயற்பட்டு வருகின்றது.
இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் உருவாக்கியுள்ள சட்டவிரோத சபாத் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு அரசாங்கமே முன்னின்று பாதுகாப்பை வழங்கி வருகின்றது.
இஸ்ரேலியக் கொடியை காலால் மிதிக்கும் புகைப்படமொன்றை மொபைல் போனில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக மாவனல்லை ருஷ்தியை நீண்ட காலம் தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைத்து அடிப்படை உரிமைகளை மீறியது. தடுப்புக் காவல் உத்தரவு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் அனுரகுமார திசாநாயக்கவினால் கையெழுத்திடப்பட்டிருந்தது.
இஸ்ரேலிய எதிர்ப்புக் கவிதைகளுக்காக ஏறாவூரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அண்மையில் கூட இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பலரை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் வீடுகளுக்கு புலனாய்வுப் பிரிவினர் சென்றிருந்தனர். பலஸ்தீன ஆதரவு எழுத்தாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை வெளிப்படையாகவே அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருவதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பி .நாடாளுமன்றத்தில் ஆதாரபூர்வமாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஜுலை மாதம் அரசாங்க தொலைக்காட்சியான ரூபவாஹினியின் நிகழ்ச்சியொன்றில் இந்திய-இலங்கை நாடுகளில் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை உருவாக்க இஸ்ரேலிய அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் Guy Nir என்பவரை அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டிருந்தது.
அண்மையில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை வருவதற்கான வீசா கட்டணம் ரத்துச் செய்யப்பட்டு இலவச வீசா வழங்கப்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தற்போதைக்கு இலங்கையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி, இலங்கையில் இஸ்ரேலிய ஆதரவு நிலைப்பாட்டை வளர்த்தெடுக்கும் வகையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.
இஸ்ரேலின் தற்போதைய நிலைமை குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு 'கல்வி' அளிக்க இஸ்ரேல் அரசின் நிதியுதவியுடன், ஐந்து நாள் 'கல்விச் சுற்றுப்பயணம்' என்ற பெயரில் இலங்கையின் 16 பத்திரிகையாளர்கள் குழு தற்போது இஸ்ரேலுக்கு சென்றுள்ளது.
குறித்த ஊடகவியலாளர்களின் இஸ்ரேலியப் பயணம் ஜனாதிபதியின் சர்வதேச ஊடக விவகாரங்களுக்கான பணிப்பாளர் அனுருத்த லொகுஹபு ஆரச்சியின் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மிக முக்கியமாக, இந்த சுற்றுப்பயணம் இலங்கை அரசாங்கத்தின் ஆசியுடன் நடைபெற்றிருப்பதற்கான இன்னொரு ஆதாரம் என்னவெனில், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் மேற்குறித்த ஊடகவியலாளர் குழுவை உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளார். ஊடகவியலாளர் குழுவுடன் புகைப்படங்களையும் எடுத்து சமூக லலைத்தளங்கில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நாட்டில் மீண்டும் ஓர் இனவாத பிரச்சினையை உருவாக்கவதற்காகவே ஊடகவியலாளர்கள் 16 பேரை பயிற்சிக்கு இஸ்ரேலுக்கு அரசு அனுப்பியிருப்பதாக தற்போது சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
இதுபோன்ற திட்டங்கள் புதியவை அல்ல,
ஏனெனில் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இஸ்ரேல் அழைத்துள்ள குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில 'ஊடகவியலாளர்களை' பற்றி உற்று நோக்குவோம்.
வெறித்தனமான இனவெறி மற்றும் சியோனிஸ்ட் - மதுபாஷண பிரபாத் ரணஹன்சஸ்ரீ
இவர் சிங்கள ராவயவின் தீவிர உறுப்பினர். கடந்த மூன்று ஆண்டுகளாக அவரும் அவரது குண்டர் குழுவும் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறைக்கருத்துக்களை வெளியிட்டு வருவதையும், சமீப காலங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவான போராட்டங்களில் பங்கேற்பதையும் காணக்கூடியதாகவுள்ளது. இவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொட்டுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தார்.
அத்துடன் இவர் எந்த வகையிலும் ஒரு ஊடகவியலாளர் கிடையவே கிடையாது. பக்கா இனவாத சமூகவலைத்தள பதிவர் மட்டுமே.
இந்த சுற்றுப்பயணத்தில் சிங்கள ராவயவைச் சேர்ந்த ஜனேந்திர ஆரியபாலவும் பயணித்து இருக்கின்றார். சிங்கள ராவய தமிழ் மற்றும் இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புவதற்குப் பெயர் பெற்ற ஓர் அமைப்பு. .
அடுத்து, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களான பிரசாத் தொடங்கொடகே மற்றும் விஜய திசாநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எமது நாட்டின் தேசிய ஊடகங்களின் பிரதிநிதிகளாக, பொதுமக்களாகிய எங்களின் நிதியையே அரசு ஊடகங்களை நடத்துவதற்குச் செலவிடுகிறது, ஆகவே நடுநிலை வகிக்கவேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு.
ஆனால் அவர்கள் இப்போது இஸ்ரேலில் இருந்து முற்றிலும் ஒருதலைப்பட்சமான கருத்தோடு திரும்புவதால். அரசாங்கம் அவர்களின் கண்ணோட்டங்களை சமநிலைப்படுத்த உதவுமா அல்லது நிதியளிக்குமா? அவர்கள் இலங்கைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து வெளியிடப்படும் பக்கச்சார்பான அறிக்கையிடல்/ஆச்சரியமான கட்டுரைகளுக்கும் அரசாங்கம் பொறுப்பேற்குமா?
இந்தச் சந்திப்பில்இ இஸ்லாமிய வெறுப்பு வார்த்தை ஜாலங்களைத் தூண்டுவதற்கும்இ பல ஆண்டுகளாக வெறித்தனமான இனவாதிகளுக்கு தளங்களை வழங்குவதற்கும் பெயர் பெற்ற லங்காதீப, அத தெரண, ஹிரு டிவி மற்றும் சண்டே ஐலண்ட் ஆகியவற்றின் பத்திரிகையாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அதாவது டாக்டர் ஷாஃபியின் வழக்கு, ஹலால் தடை பற்றிய கதைகள், முஸ்லிம் வதை கொத்து போன்ற முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் பின்னணியில் இருந்த ஊடகவியலாளர்களே இந்தச் சுற்றுப் பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
வருங்காலங்களில் இவ்வாறானவர்கள் எழுதவுள்ள இஸ்ரேல் ஆதரவு கதைகள் இங்கே இணைக்கப்படும்போது இலங்கையில் இனங்களுக்கிடையேயான உறவுகளில் ஏற்படப்போகும் தாக்கம் நல்லதல்ல.
தீவிர வலதுசாரிகள் மீண்டும் வெளிப்படையாக எழுச்சி பெற்று வரும் நிலையில், குறிப்பாக இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக, இனவெறி பிடித்தவர்களால் ஊடகங்கள் எவ்வளவு விரைவாக ஆயுதம் ஏந்த முடியும் என்பதை நன்கு அறிந்திருக்கும் நிலையில், சர்வதேச அளவில் கண்டனம் செய்யப்பட்ட இனப்படுகொலை அரசுக்கு பத்திரிகையாளர்களையும் இனவெறி குழுக்களின் முக்கிய உறுப்பினர்களையும் அனுப்புவது எப்படி ஒரு பொறுப்பான செயலாகும்?
குறிப்பாக சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு புதிய வகை அரசியலை உறுதியளித்துள்ள நிலையில், பத்திரிகையாளர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து உருவாக்கக்கூடிய சாத்தியமான சியோனிச மற்றும் இஸ்லாமிய வெறுப்பு உள்ளடக்கத்தை NPP அரசாங்கம் எவ்வாறு நிர்வகிக்கும்?
நாங்கள் இதற்கு முன்பு பல முறை இந்தப் பாதையில் பயணித்திருக்கிறோம்இ மேலும் இது நம் நாட்டின் ஏனைய தேசிய இனங்களுக்கு ஒருபோதும் நல்ல முடிவு கிடையாது.
தர்கா டவுன், திகன. மினுவாங்கொட ஆகிய இடங்களில் நடந்த முஸ்லிம் எதிர்ப்பு கலவரங்களும், முஸ்லிம் கடைகள் எரிக்கப்பட்டு சூறையாடப்பட்ட சம்பவங்களும்இ அவர்களின் நினைவை உலுக்க வேண்டும்.
பலஸ்தீன மக்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பதில் NPP அரசாங்கத்தால் இன்னும் ஒரு உறுதியான பொது நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை.
அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் அரசின் தொடர்ச்சியான இனப்படுகொலையை நேரடியாகக் கண்டிக்க முடியவில்லை .
அவ்வாறான நிலையில் குறைந்தபட்சம் நமது நாட்டின் அமைதியைப் பேணுவதற்கும் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒரு உறுதியான நடவடிக்கையாக. பிரதான நீரோட்டத்திலும் சமூக ஊடகங்களிலும் விரைவில் பூசப்படவுள்ள இஸ்ரேல் ஆதரவு பிரச்சாரத்தைக் கண்காணிப்பதில் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க முடியுமா?
நிச்சயமாக முடியாது
தேசிய மக்கள் சக்தி அராசங்கத்தின் இவ்வாறான முஸ்லிம் விரோத செயற்பாடுகள் எதுவும் அதன் அறிவுகெட்ட அடிமை முஸ்லிம்களின் புத்தியில் உறைப்பதில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் புத்தியை மாலிமாவ முன்பாக அடகு வைத்த பின்னர்தான் அதன் ஆதரவாளர்களாக மாறி தற்போது தங்கள் சகோதர முஸ்லிம் சமூகத்தையும் மறந்து மாலிமாவ தான் தங்கள் மார்க்கம் என்ற அளவில் வெறிபிடித்த அடிமைகளாக மாறிப் போயுள்ளனர்.