VAIBZ NEWS தமிழ்

VAIBZ NEWS தமிழ் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VAIBZ NEWS தமிழ், Media/News Company, Colombo.

Vaibz News , Vaibz TV , Vaibz Cinema , Vaibz Sports , Political News , Entertainment , Sports News , Latest News , Updated News , World News , Breaking News , Srilanka Tamil News ,

கோவாவில் கமல்ஹாசன்,குஷ்பூ ,சுஹாசினியின் சமீபத்திய clicks 📸
22/11/2025

கோவாவில் கமல்ஹாசன்,குஷ்பூ ,சுஹாசினியின் சமீபத்திய clicks 📸

இலங்கை T20 கிரிக்கெட் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் அறிமுகம் .!இன்றைய தினம் பாகிஸ்தான் அணிக்கெதிரான T20 போட்டியில் இலங...
22/11/2025

இலங்கை T20 கிரிக்கெட் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் அறிமுகம் .!

இன்றைய தினம் பாகிஸ்தான் அணிக்கெதிரான T20 போட்டியில் இலங்கையின் 11 வீரர்களில் வியாஸ்காந்த் பெயரும் இடம்பெற்றது மிகவும் மகிழ்வான தருணம் 🤩

நீண்ட நாட்களின் பின்னர் இலங்கை அணியில் தமிழ் பேசும் வீரர் ஒருவர், தேசிய அணியில் இனைத்துக்கொள்ளப்பட்டமை சிறப்பான ஒரு நிகழ்வாக அமைந்தது.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விஜயகாந்த் வியாஸ்காந் சாதிக்க வைப்ஸ் நியூஸ் இன் வாழ்த்துக்கள்.

𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡
🛑 Join with us on WhatsAppaChannel!👉

https://whatsapp.com/channel/0029Va873bE42DcgCavGuw0p

"அமரன்" IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு !  |   |   |   |   |   |
22/11/2025

"அமரன்" IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு !

| | |
| | |

ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து: 57 பேர் படுகாயம்!செக் குடியரசின் பிளென் நகரில் இரு ரயில்களும் நேருக்குநேர் மோதியதில்...
22/11/2025

ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து: 57 பேர் படுகாயம்!

செக் குடியரசின் பிளென் நகரில் இரு ரயில்களும் நேருக்குநேர் மோதியதில் 57 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு குழுவினர் விபத்துக்குள்ளான ரயில் பெட்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த விபத்து காரணமாக செஸ்கே புடெஜோவிஸ்- பிளென் ஆகிய நகரங்களுக்கு இடையே பல மணி நேரம் ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.

கடுகன்னாவ மண்சரிவு - ஒருவர் உயிரிழப்பு - நான்கு பேர் காயம்..!கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இ...
22/11/2025

கடுகன்னாவ மண்சரிவு - ஒருவர் உயிரிழப்பு - நான்கு பேர் காயம்..!

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று (22) முற்பகல் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவு காரணமாக, உணவகம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில், அந்த உணவகத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சில நபர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை மீட்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

எமது செய்தியாளர் தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் கனேதென்ன பிரதேசத்தில் கண்டி-கொழும்பு பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள உணவகத்தின் மீதே ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக, பிரதான வீதியின் வாகனப் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி. .!அதிரடி சதமடித்து வெற்றியை எளிதாக்கிய ட்ர...
22/11/2025

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி. .!

அதிரடி சதமடித்து வெற்றியை எளிதாக்கிய ட்ராவிஸ் ஹெட் 69 பந்துகளில் சதத்தை எட்டினார்.

| | |

டி20 உலகக் கோப்பை 2026 🚨இந்தியா vs பாகிஸ்தான் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும்.
21/11/2025

டி20 உலகக் கோப்பை 2026 🚨

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும்.

Aqua Planet Sri Lanka சர்வதேசக் கண்காட்சி ..!மீனவ சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை ...
21/11/2025

Aqua Planet Sri Lanka சர்வதேசக் கண்காட்சி ..!

மீனவ சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும்.

மீன்பிடித் துறையின் அபிவிருத்திக்காக முதன்முறையாக நீலப் பொருளாதாரம் (Blue Economy) தொடர்பான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

நீருயிர்கள், நீர்த் தாவரங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட கடலுணவு உற்பத்தித் துறையில் புத்தாக்கங்களை சர்வதேச மீன் சந்தையை இலக்காகக் கொண்டு நாம் மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

"நீர்வளத்தால் செழிப்பான எதிர்காலம்" எனும் தலைப்பில் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "அக்குவா பிளானட் ஸ்ரீ லங்கா – 2025" கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் சார்ந்த உற்பத்திகள், நவீன தொழில்நுட்ப உபகரணங்கள், நீரியல் தாவரங்கள், அலங்கார மீன் வகைகள் உட்பட மீன்பிடித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நடைபெறும் அக்குவா பிளானட் 2025 சர்வதேசக் கண்காட்சி இன்று, நவம்பர் 21 முதல் 23ஆம் திகதி வரை தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெறவுள்ளது.

ஆரம்ப விழாவை முன்னிட்டு, மீனவ சமூகத்திற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருக்கும் ஓய்வூதிய உரிமைப் பத்திரங்கள் பிரதமரின் தலைமையில் வழங்கப்பட்டது. அக்குவா பிளானட் 2025ஐ அடையாளப்படுத்தும் வகையில் முதலாம் நாள் தபால் உறை, ஞாபகார்த்த முத்திரை ஆகியனவும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை சுவீகரித்தார் மெக்சிக்கோ அழகி பற்றிமா பொஷ்!இந்த வருடத்திற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிக்கோ ...
21/11/2025

மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை சுவீகரித்தார் மெக்சிக்கோ அழகி பற்றிமா பொஷ்!

இந்த வருடத்திற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பாத்திமா பொஷ் தெரிவு செய்யப்பட்டார்.

‘மிஸ் யுனிவர்ஸ்’ என்பது சர்வதேச நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ளும் வருடாந்த போட்டியாகும். இந்தாண்டுக்கான போட்டி, தாய்லாந்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் 100 இற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.

போட்டியின் இறுதி சுற்றில், மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த பாத்திமா பொஷ் வெற்றி பெற்று, 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார்.

வெற்றி பெற்ற பாத்திமாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

2ஆவது இடம் : தாய்லாந்து
3ஆவது இடம்: வெனிசுலா
4ஆவது இடம்: பிலிப்பைன்ஸ்
5ஆவது இடம்: கோட் டி’ஐவொயர்
இந்த போட்டியில், இந்திய அழகி மணிகா விஸ்வகர்மா நீச்சலுடை சுற்றுக்குப் பிறகு, டாப் 12 இடங்களுக்குள் நுழையாமல் வெளியேறினார். இறுதி சுற்றுகளுக்கு தேர்வான டாப் 12 போட்டியாளர்களில் மெக்சிகோ, தாய்லாந்து உட்பட பல நாடுகள் இடம்பெற்றன.

இந்தியாவின் சாய்னா நேவால் இந்த போட்டிக்கான நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஷெஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பேர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் முதலில்...
21/11/2025

ஆஷெஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பேர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய முதல் நாள் ஆட்டத்தின் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, மிட்சேல் ஸ்டார்க்கின் அபாரமான பந்து வீச்சில் திணறியது. மிச்சேல் ஸ்டார்க் 58 ஒட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 🤩

இந்திய துணை ஜனாதிபதிக்கும் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பு!இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை   இ.தொ.கா ...
21/11/2025

இந்திய துணை ஜனாதிபதிக்கும் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் புதுடில்லியில் உள்ள துணை ஜனாதிபதி மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதர நெருக்கடியின் போது இந்தியா இலங்கைக்கு முழு ஆதரவு வழங்கியதை செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when VAIBZ NEWS தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to VAIBZ NEWS தமிழ்:

Share

GOWRI BRUNTHAN

Media Personality

Dip-in-Journalism (SRM University )

Former Presenter/ Producer (Sooriyan FM)

Former Shakthi TV News Reader