Tamiltubelk

Tamiltubelk News Videos at its best...
වීඩියෝ ප්‍රවෘත්ති සඳහා එකම විසඳුම...
வீடியோ செய்திகளின் உங்களுக்கான தளம்...

🔥 வரலாறு படைத்த தமிழ் மகள்!🎉  இலங்கையின் வான்வழி பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய அத்தியாயம்! 🇱🇰✈️இலங்கை சிவில் விமானச்சே...
11/08/2026

🔥 வரலாறு படைத்த தமிழ் மகள்!

🎉 இலங்கையின் வான்வழி பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய அத்தியாயம்! 🇱🇰✈️

இலங்கை சிவில் விமானச்சேவை பாதுகாப்புத் துறையில் (AASL) முதல் பெண் 'செக்யூரிட்டி மார்ஷல்' (Security Marshal) ஆகப் பொறுப்பேற்று, புதியதொரு சகாப்தத்தைத் தொடங்கியுள்ளார் திருமதி. வசந்தி முருகேசு அவர்கள்! 👑💥

💪 வானமே எல்லை என்பதை உடைத்தெறிந்து, ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு சவாலான துறையில் கம்பீரமாகத் தடம்பதித்து சாதனை படைத்துள்ளார் நமது தமிழ்ப்பெண்! 👑🔥

🛑 "பெண்களால் முடியாதது எதுவுமில்லை!"

🛑 "தமிழினத்தின் பெருமையை உயர்த்திய மற்றொரு சாதனைப் பெண்மணி!"

அனைத்துப் பெண்களுக்கும், எதிர்காலத் தலைமுறைக்கும் மிகப்பெரிய உந்துசக்தியாகத் திகழும் திருமதி. வசந்தி முருகேசு அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள்! 💐👏

இவரது இந்தச் சாதனைப் பயணம் மேலும் பல உயரங்களைத் தொடட்டும்! 🚀✨

உங்கள் வாழ்த்துகளை கமெண்ட்டில் பகிர்ந்து சாதனைப் பெண்ணை வாழ்த்துங்கள்! 👇

கொழும்பு  2 கொம்பெனித் தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் வருடாந்த சப்பரத்திருவிழா மற்றும் தங்க தேர் தி...
09/08/2026

கொழும்பு 2 கொம்பெனித் தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் வருடாந்த சப்பரத்திருவிழா மற்றும் தங்க தேர் திருவிழா 2026... படங்கள்...
📷

கனடா தமிழாழி தொலைக்காட்சி உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற இலங்கை கலைஞர்களுக்கு கௌரவம்...கனடா தமிழாழி பேரவை மற்றும் கனடா தமி...
09/08/2026

கனடா தமிழாழி தொலைக்காட்சி உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற இலங்கை கலைஞர்களுக்கு கௌரவம்...

கனடா தமிழாழி பேரவை மற்றும் கனடா தமிழாழி தொலைக்காட்சி இணைந்து நடத்திய தந்தையர் தின உலக சாதனை நிகழ்வில் பங்குபற்றி சாதனை படைத்த இலங்கை கலைஞர்களைக் கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் உன்னத விழா, இன்று (09-08-2026) கொழும்பு புறக்கோட்டை ஐந்து லாம்புச் சந்தியில் உள்ள பழைய நகரசபை மண்டபத்தில் இலங்கை தமிழ் கலைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான கே.டி. குருசாமி மற்றும் பழ. புஷ்பநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் சிறப்பு அதிதிகளாக கொழும்பு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி கிறிஸ்டி ரோஸ் மற்றும் பிரபல திரைப்பட இயக்குனர் தினேஷ் கனகராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இவ்விழா குறித்து கனடா தமிழாழி பேரவை மற்றும் தொலைக்காட்சியின் கொழும்பு மண்டலச் செயலாளரும், இலங்கை தமிழ் கலைஞர் சங்கத்தின் தலைவருமான பொன். பத்மநாதன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 27 நாடுகளைச் சேர்ந்த 1,048 கலைஞர்கள் பங்குபற்ற Zoom இணையவளி நேரலையாகத் தொடர்ந்து 1,000 மணித்தியாலங்கள் நடைபெற்ற தந்தையர் தின உலக சாதனை நிகழ்வில், இலங்கையிலிருந்து மொத்தம் 36 கலைஞர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்ததாகக் குறிப்பிட்டார்.

அதில் தலைவர் பொன். பத்மநாதன் தலைமையில் 20 கலைஞர்களும், மட்டக்களப்பைச் சேர்ந்த மதிபாலசிங்கம் தலைமையில் 10 கலைஞர்களும், கொழும்பைச் சேர்ந்த தாட்சாயினி அம்மையார் தலைமையில் 6 கலைஞர்களும் இலங்கையின் சார்பில் பங்கேற்று உலக சாதனை அங்கீகாரத்தைப் பெற்றனர்.

இன்றைய உன்னத நிகழ்வில், தலைவர் பொன். பத்மநாதன் அவர்களின் தலைமையில் மற்றும் வருகை தந்த அதிதிகளின் முன்னிலையில், உலக சாதனை படைத்த இலங்கை கலைஞர்கள் அனைவருக்கும் உத்தியோகபூர்வ உலக சாதனை சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், இவ்விழாவினை இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமான பிரபல கலைஞர் ஈஸ்வர பிரசாத் அவர்கள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

09/08/2026

🚨🏍️ “நான் நிப்பாட்ட மாட்டேன்!” — பொலிஸாருக்கே தண்ணி காட்டிய இளைஞன்! 😂🔥

“இது எனக்கு அப்பா வாங்கித் தந்த மோட்டார் சைக்கிள்… என்னைப் பிடிக்காதீங்க! அப்பாவைப் பிடிங்க!” 🤣🏍️💨

ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை பொலிஸார் நிறுத்த முயன்ற நிலையில், நிப்பாட்டாமல் தொடர்ந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. 🚨🏍️💨

பொலிஸாரை முந்திக்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற இளைஞரை இறுதியில் மடக்கிப் பிடித்த பொலிஸார், பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 👮‍♂️🚔

😂 அதற்குள் இளைஞனின் பதில் வேற லெவல்:

> 🏍️ “என்னைப் பிடிக்காதீங்க… வாங்கித் தந்த அப்பாவைப் பிடிங்க!” 🤣
🤦‍♂️ “அப்பதான் எங்க வீட்டாருக்கு அறிவு வரும்!” 😂🔥

🛑 ஹெல்மட் இல்லாமல் பயணம் செய்வது மட்டுமல்ல… பொலிஸாரைத் தவிர்க்க முயற்சிப்பதும் ஆபத்தானதும் சட்ட சிக்கலை ஏற்படுத்தக்கூடியதுமாகும்.

🚨 இறுதியில்… “நான் நிப்பாட்ட மாட்டேன்!” என்றவர், பொலிஸ் நிலையத்தில்தான் நிப்பாட்டப்பட்டார்! 😂🏍️🚔

05/08/2026

🚨 இரத்மலானையில் வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்: அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயமில்லை!

கொழும்பு இரத்மலானை, ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடு ஒன்றை இலக்காகக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்களால் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வீட்டை நோக்கி இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வீட்டின் முற்றத்தில் விழுந்து வெடித்துள்ள நிலையில், மற்றைய கைக்குண்டு வெடிக்காத நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய விவரங்கள்:

💥 சேத விபரங்கள்:
இத்தாக்குதலின் போது வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இருப்பினும், குண்டு வெடித்ததில் வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

💣 விசேட நடவடிக்கை:
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் (STF), வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டை பாதுகாப்பாக மீட்டு செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

🔍 தீவிர விசாரணை:
தனிப்பட்ட பகையா அல்லது பாதாள உலகக் குழுக்களின் அச்சுறுத்தலா என்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

🎥 சம்பவ இடத்தில் உள்ள CCTV காணொளிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

🇱🇰 தென்னாசியக் காற்பந்து அரங்கில் இலங்கைக்கு மேலும் ஒரு வரலாற்றுச் சாதனை! ⚽🔥இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர்...
03/08/2026

🇱🇰 தென்னாசியக் காற்பந்து அரங்கில் இலங்கைக்கு மேலும் ஒரு வரலாற்றுச் சாதனை! ⚽🔥

இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமர், பூட்டானில் நடைபெற்ற தென்னாசியக் காற்பந்து சம்மேளனத்தின் (SAFF) செயற்குழுவுக் கூட்டத்தில் தென்னாசியக் காற்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகளவில் இலங்கையின் பெருமையை மீண்டும் உயர்த்தியுள்ளார்! 🏆👏

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலைத்தீவு, பங்களாதேஷ் மற்றும் இலங்கை என 7 தென்னாசிய உறுப்பு நாடுகளின் முழுமையான ஆதரவையும் பெற்று அவர் இப்பதவிக்குத் தேர்வாகியுள்ளது, அவரது திறமைக்கும் ஆளுமைக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்! ❤️

✨ இரண்டே ஆண்டுகளில் மாபெரும் மறுமலர்ச்சி:

📈 FIFA உலகத் தரவரிசையில் அபார வளர்ச்சி:

207-வது இடத்தில் இருந்த இலங்கை காற்பந்து அணியை, குறுகிய காலத்தில் 20 இடங்களுக்கும் மேல் உயர்த்தப்பட்டு 187-வது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். (இது கடந்த 15 ஆண்டுகளில் இலங்கை பெற்ற மிகச்சிறந்த இடமாகும்!)

🏛️ நல்நிர்வாகம் & உள்நாட்டுப் போட்டிகள்:

காற்பந்து சம்மேளனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவந்து, உள்நாட்டுப் போட்டிகளைப் பலப்படுத்தியுள்ளார்.

⚽ எதிர்காலக் கட்டுமானம்:

இளையோர் மேம்பாடு மற்றும் அடித்தளக் காற்பந்து (Grassroots) பயிற்சிகளுக்கு முன்னுரிமை அளித்து புதிய சகாப்தத்தைப் படைத்து வருகிறார்.

🌟 சர்வதேச அரங்கில் இலங்கையின் ஆதிக்கம்:

ஏற்கனவே ‘பிஃபா’ (FIFA) அடித்தளக் காற்பந்து குழுவின் உறுப்பினராகவும், ஆசியக் காற்பந்து சம்மேளனத்தின் (AFC) மேம்பாட்டுக் குழு உறுப்பினராகவும் பயணிக்கும் இவர், தற்போது SAFF துணைத் தலைவராகவும் பொறுப்பேற்று சர்வதேச விளையாட்டு நிர்வாகத்தில் இலங்கையின் செல்வாக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார்! 🇱🇰🤝

வரவிருக்கும் நவம்பர் மாத SAFF சாம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி வரலாற்றுச் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், நாட்டிற்குப் பெருமை சேர்த்த ஜஸ்வர் உமர் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்! 🏆🎉

02/08/2026

காவிரி வெறும் ஆறல்ல... அது எங்கள் உயிர்! எங்கள் தெய்வம்! 🌾🙏

வறண்டு கிடந்த நிலத்தைப் பார்த்து ஏங்கிய விவசாயியின் கண்ணீரைத் துடைக்க, தாய் போல ஓடி வருகிறாள் காவிரித் தாய்!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட செய்தி, வெறும் செய்தி அல்ல... அது லட்சக்கணக்கான டெல்டா குடும்பங்களின் நம்பிக்கையின் வெளிச்சம்!

✅ "தாகம் தீர்க்கும் குடிநீர்...
✅ தானியம் விளைய வைக்கும் அமுதம்...
✅எங்கள் தலைமுறையைக் காக்கும் தெய்வம்!"

காவிரியின் ஒவ்வொரு துளி நீரிலும் ஓடுவது வெறும் தண்ணீரல்ல; தமிழகத்தின் உழைப்பும், விவசாயிகளின் வியர்வையும் தான்!

இந்த முறை காவிரித் தாயின் வருகை, ஒவ்வொரு விவசாயியின் இல்லத்திலும் வளத்தையும், முகத்தில் மகிழ்ச்சியையும் கொண்டு சேர்க்கட்டும்.

காவிரித் தாயே வருக... எங்கள் நிலங்களைச் செழிக்க வைக்க வருக! 🌊✨

உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்:

👇 காவிரி நீரின் வருகை உங்கள் பகுதியில் எத்தகைய மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது?

#காவிரித்தாய் #காவிரி #விவசாயம் #நம்உயிர்

01/08/2026

🚨 உதவி தேவை: பிரிந்த பெற்றோரைக் கண்டுபிடிக்க ஊடகங்களும் உறவுகளும் உதவவும்! 🚨

​1983-இல் பிறந்த திருமதி. மகாலட்சுமி (வயது 43) அவர்கள், சிறு வயதிலேயே பிரிய நேரிட்ட தனது பெற்றோரைக் கண்டுபிடித்துத் தருமாறு தமிழ்நாடு வாழ் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு சங்கத்தின் மையத்தை அணுகி உதவி கோரியுள்ளார்.

​📌 முக்கியத் தகவல்கள்:

​தேடும் நபர்: மகாலட்சுமி (பிறந்த ஆண்டு: 1983 | வயது: 43)

🛑 தேடப்படுபவர்கள்:

​தாயாரின் பெயர்: சாவித்திரி

​தந்தையாரின் பெயர்: நேரு

​பின்னணி: 1989-ஆம் ஆண்டு தெருவில் தனியாகக் காணப்பட்ட மகாலட்சுமி அவர்களை, பொதுமக்கள் மீட்டு புரசைவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

​தற்போதைய நிலை: இவருடைய தாயாரும் தந்தையாரும் இலங்கையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

​🙏 வேண்டுகோள்:

​37 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த பாசப் போராட்டத்திற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்க வேண்டும். இலங்கையில் உள்ள ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஈழத் தமிழ் உறவுகள் அனைவரும் இந்தச் செய்தியைப் பரப்பி, பெற்றோரைக் கண்டறிய உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

​"இன்றே செய், நன்றே செய்!"

இந்தப் பதிவை அதிகளவில் பகிர்ந்து (Share) ஒரு குடும்பம் மீண்டும் இணைய உதவுங்கள்!

​ #தமிழ்டியூப்

கொழும்பு கடற்பரப்பில் அனர்த்த எச்சரிக்கை! மீனவ சமூகத்திற்கு அவசர அறிவித்தல்! ⚠️🌊கொழும்பு துறைமுகத்திலிருந்து மேற்கே சுமா...
01/08/2026

கொழும்பு கடற்பரப்பில் அனர்த்த எச்சரிக்கை! மீனவ சமூகத்திற்கு அவசர அறிவித்தல்! ⚠️🌊

கொழும்பு துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் பயணித்த வணிகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 வெறுமையான கொள்கலன்கள் (Containers) கடலில் விழுந்து மிதந்து கொண்டிருப்பதாக மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் எச்சரித்துள்ளது! 📦🚨

📍 விபத்து நடந்த இடம் & மிதக்கும் பகுதிகள்:

✅ அமைவிடம்:
வட அட்சரேகை 06° 54' மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 079° 32'

✅ பாதிக்கப்படக்கூடிய பகுதிகள்:
தற்போதைய கடல் நீரோட்டத்தின் படி, இந்த வெறுமையான கொள்கலன்கள் பேருவளையிலிருந்து நீர்கொழும்பு வழியாக புத்தளம் வரையிலான கடற்பரப்பை நோக்கி மிதந்து வர அதிக வாய்ப்புள்ளது.

🎣 மீனவர்கள் கவனத்திற்கு!

மேற்குறிப்பிட்ட கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் மற்றும் பயணிக்கும் அனைத்து அன்றாட (பஹுதின) (Multi-day) மற்றும் சிறிய படகு மீனவர்கள் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். ⚓🚢

📞 உடனடி நடவடிக்கை:

ஒருவேளை இந்த மிதக்கும் கொள்கலன்களை நீங்கள் கண்டால், உடனடியாக:
1. மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்தின் ரேடியோ செய்தி மையத்திற்கு (Radio Message Center) தெரிவிக்கவும்.

2. அல்லது அருகிலுள்ள மீன்பிடி துறைமுக அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரியப்படுத்தவும்.

📢 கடலுக்குச் செல்லும் உங்கள் நண்பர்கள் மற்றும் மீனவ உறவுகளின் பாதுகாப்பிற்காக இந்தப் பதிவை உடனடியாக ஷேர் செய்யுங்கள்! 🙏💙

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Tamiltubelk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share