செய்தி

செய்தி Seithi.lk - Reporting Latest News from Sri Lanka to the World in Tamil. The official Tamil page of செய்தி. https://www.seithi.lk

Get to know the latest happenings in tinsel town right here!

நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி இருக்கிறா...
21/09/2025

நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்.

திமுக மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி தொடர்ந்து ஸ்டாலின் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருவதும், அதற்கு திமுகவினர் பதில் கொடுப்பதுமாக அரசியல் வட்டாரமே விஜய்யால் தொடர்ந்து பரபரப்பில் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று நடந்த இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் பார்த்திபன் பேசும்போது விஜய் பற்றி மறைமுகமாக பேசினார்.

"விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஜெயம் உங்கள் கையில் தான் இருக்கு" என பார்த்திபன் கூற, அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் விஜய் கட்சி பெயரை கத்தி அரங்கத்தை அதிர வைத்தனர்.

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 'பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் ...
21/09/2025

பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் 'பொது போக்குவரத்து அனுமதியை பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (20) அம்பாறையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அனுமதிப்பத்திரத்திற்கான திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதன்படி, பொது போக்குவரத்து சாரதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதிப்பத்திரத்தைப் பெற வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில், இப்போது சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சில பேருந்துகள் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட போதே சீட் பெல்ட்கள் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் பேருந்துகளை அலங்கரிக்க முடியும் என்றால் ஏன் சீட் பெல்டை பொருத்த முடியாது?

இப்போது சில சாரதிகள் என்னையும் பொலிஸாரையும் ஏமாற்ற தங்கள் பிள்ளைகளது பாடசாலை பைகளின் பெல்ட்களை அணிந்து வருகின்றனர். அவ்வாறானவர்களிடம் 50 பயணிகளை ஒப்படைப்பது பொருத்தமானதல்ல. எனவே நாம் ஒரு முடிவை எடுத்துள்ளோம். பொதுப் போக்குவரத்தில் ஒவ்வொரு சாரதியும் பொதுப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தைப் பெறுவது கட்டாயமாகும்.

நாங்கள் இதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம், டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அவர்கள் நிச்சயமாக அந்த அனுமதிப் பத்திரத்தை பெறவேண்டும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை
21/09/2025

கண்டி மற்றும் நுவரெலியா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை ப....

Address

Colombo
00500

Alerts

Be the first to know and let us send you an email when செய்தி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to செய்தி:

Share