27/09/2025
2017 October , இலங்கை மின்சார சபைக்கும்(CEB), ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் (ADB) இடையே மேற்கொள்ளப்படட ஒப்பந்தத்தின் அடிப்படையில் , இலங்கை மின்சார சபையால் $256.7 மில்லியன் பெறுமதியுடைய 3.45 MW திறனுள்ள 30 காற்றாலைகளை அமைப்பதன் மூலம் 100 MW (103.5 MW) காற்றாலை பண்ணை அமைக்க யோசனை முன்மொழியப்பட்டு அதில் அண்ணளவாக 78% அதாவது $200 மில்லியன் கடனடிப்படையில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் மிகுதி $56.7 மில்லியன் இலங்கை மின்சார சபையும் பங்காளிப்பதாக முடிவாகின்றது.
இதனடிப்படையில் இலங்கை மின்சாரசபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 2020 - 2021 காலப்பகுதியில் மன்னார்த்தீவு இதற்காக தெரிவுசெய்யப்படுகின்றது.
ஆனால் இந்த திட்டம் தொடங்கப்படாமலேயே , கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் எந்த வித திறந்த விலைமனுக்கோரல்களும் இல்லாமல்
நேரடியாக அதானி குழுமத்திற்கு, மன்னார் தீவில் 250MW திறனுள்ள காற்றாலை பண்ணையும், பூநகரியில் 234MW திறனுள்ள காற்றாலை பண்ணையும் $442 மில்லியன் முதலீட்டின் மூலம் அமைப்பதற்குமான அனுமதி வழங்கப்பட்டு 2022 March இல் இலங்கை மின்சார சபைக்கும் அதானி குழுமத்திற்கும் இடியில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகின்றது. இது 2021 இல் கெளதம் அதானிக்கும் கோத்தபாய ராஜபக்ச விற்கும் இடையி நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பின் மூலம் சாத்தியமானதாக சொல்லப்பட்டது.
எனினும் 20 வருடங்களுக்கு அதானி குழுமத்திடமிருந்து இலங்கை மின்சார சபை, மின் அலகுகளை வாங்குவதற்கான உத்தியோக பூர்வ ஒப்பந்தம் 2023 February இல் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது 8.26US¢/kWh (அண்ணளவாக ~27.5 LKR/unit) என்ற அடிப்படையில் கைச்சாத்திடப்படுகின்றது. எனினும் இது முன்னைய ஒப்பந்தத்தின் தொடர்சியாகும்.
மின் அலகின் அதி உச்ச விலை மற்றும் திறந்த விலை மனுக்கோரல் மூலம் அதானி குழுமம் தேர்வு செய்யப்படாமை அத்தோடு சூழலியல் காரணங்கள் கருத்தில் கொள்ளப்படாமை என்பவற்றை காரணங்காட்டி அதானி குழுமம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தடைசெய்யக்கோரி மன்னார் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் ஐந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
புதிதாக பதவிக்கு வந்த NPP அரசாங்கத்தின் மின் அலகுக்கான விலைகுறைப்பு நெருக்குதல் கோரிக்கை மற்றும் உயர் நீதி மன்ற வழக்குகளால் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் காரணமாக 2025 February இல் அதானி குழுமம் மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தது.
எனினும், 2030 இற்குள் 70% ஆன மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து பெறுவதற்கான இலக்கை அறிவித்திருந்த புதிய அரசாங்கம், மன்னார் காற்றாலை திட்டத்தைப் பகுதியளவில் தொடர முடிவு செய்து, திறந்த விலைமனுக்கோரல் மூலமாக இலங்கை மின்சார சபைக்கும் HayWind (the wind energy arm of Hayleys Fentons, a Sri Lankan company) என்கின்ற இலங்கைக் கம்பெனிக்கும் இடையில் 5 MW திறனுள்ள 10 காற்றாலைகளை அமைப்பதன் மூலம் 50MW காற்றாலை பண்ணை அமைக்க 2025 May இல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 18 மாதங்களில் இதை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருக்கின்றது.
HayWind , 4.65US¢/kWh என்ற அடிப்படையில் விலை நிர்ணயம் செய்துள்ளது. அதானி குழுமத்தின் விலையோடு ஒப்பிடும் போது இது மிக மிக குறைவாகும்.
சூழலியல் காரணங்களுக்கு அப்பால் 100 kWh மின் அலகிற்கு அதானி குழுமம் $8.26 ஆக விலை நிர்ணயம் செய்திருந்த நிலையில் HayWind அதற்க்கு $4.65 ஆக விலை நிர்ணயம் செய்திருக்கின்றது. இதன் மூலம் புதிய இலங்கை அரசாங்கம் 44% இனை சேமித்திருக்கின்றது.