27/04/2026
அதிக விலைக்கு அரிசி விற்ற கடைகள் முற்றுகை!
பெருந்தொகை பணம் அபராதம்
அரசின் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி மற்றும் குடிநீர் போத்தல்கள் விற்ற பல வர்த்தக நிலையங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் அதிரடியாக சுற்றிவளைத்தனர். பல இடங்களில் வர்த்தகர்களுக்கு ரூ.1 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய சோதனைகள் தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.