Aydan Sahl

Aydan Sahl You can see all the world news and comedy photos.
அனைத்து உலகத் தகவல்கள் மற்றும் காமடி போட்டோக்களை பார்க்க முடியும்

20/01/2026


M.kokulsn
ஆசிரியர் #இடமாற்றங்களின்போது நீங்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய சட்டவிதிகள்!

ஆசிரியர் இடமாற்றத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து சுற்றுநிருபம் 13/59 மற்றும் தேசிய இடமாற்றக் கொள்கை (2007/20) கூறும் முக்கிய தகவல்கள்

❓ கேள்வி 1: இடமாற்றம் பெற்ற ஒரு ஆசிரியர் உரிய நாளில் புதிய பாடசாலையில் கடமையை ஏற்கத் தவறினால் என்ன நடக்கும்?
✅ பதில்: இடமாற்றக் கட்டளை கிடைத்ததும், உரிய திகதியில் அல்லது அதற்கு அடுத்த நாளில் முன்னனுமதி அல்லது விடுமுறை அனுமதி இன்றி கடமையை ஏற்கத் தவறினால், அவர் தாமாகவே பதவியை விட்டு விலகியவராக (Vacation of Post) கருதப்படுவார். அத்துடன் அவரது இடமாற்ற உத்தரவும் ரத்து செய்யப்பட்டதாகவே கருதப்படும்.

❓ கேள்வி 2: ஒரு ஆசிரியர் உரிய நாளில் கடமையைப் பொறுப்பேற்க முடியாவிட்டால் அதிபர் என்ன செய்ய வேண்டும்?
✅ பதில்: குறித்த ஆசிரியர் உரிய நாளில் சமூகமளிக்காதது மற்றும் அதற்கான விடுமுறை அனுமதி பெறாதது குறித்து 24 மணிநேரத்திற்குள் வலயக் கல்வி அலுவலகத்திற்கு அதிபர் அறிவிக்க வேண்டும். இதன் பிரதி ஒன்று அலுவலக நிர்வாகக் கிளைக்கும் அனுப்பப்பட வேண்டும்.

❓ கேள்வி 3: இடமாற்றம் பெற்ற ஆசிரியரின் பெயர் விபரங்கள் சம்பப் பட்டியலில் (Salary Sheet) தொடரலாமா?
✅ பதில்: இடமாற்றம் ரத்து செய்யப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல் வராதவரை, அந்த ஆசிரியரின் பெயரை சம்பப் பட்டியலில் அனுமதிக்கக் கூடாது. இதனை மீறி ஏதேனும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டால், அந்தத் தொகை அதிபரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும்.

❓ கேள்வி 4: இடமாற்றத்திற்கு எதிராக மேன்முறையீடு (Appeal) செய்திருந்தால் பழைய பாடசாலையிலேயே தொடர முடியுமா?
✅ பதில்: ஆம். இடமாற்றத்திற்கு எதிராக மேன்முறையீட்டுச் சபையில் முறையிட்டிருந்தால், அதற்கான தீர்ப்பு கிடைக்கும் வரை தற்போது பணியாற்றும் பாடசாலையிலேயே சேவையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

❓ கேள்வி 5: மேன்முறையீட்டுச் சபையின் முடிவு எவ்வளவு காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும்?
✅ பதில்: மேன்முறையீட்டுச் சபையானது இடமாற்றம் பெற்ற திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் தனது இறுதி முடிவை ஆசிரியருக்கு வழங்க வேண்டும்.

03/01/2026

முதலாவது அமைக்கப்பட்ட தேசிய கல்வியற் கல்லூரி?
*மகாவலி தேசிய கல்வியற் கல்லூரி

23/12/2025
19/12/2025
12/12/2025

சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது!
12/12/2025

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது!

தனது ஓய்வுதியம் வழங்க மறுக்கப்பட்ட காரணத்தால்வலயக் கல்வி அலுவலகம் முன்னால் , சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்க...
10/12/2025

தனது ஓய்வுதியம் வழங்க மறுக்கப்பட்ட காரணத்தால்
வலயக் கல்வி அலுவலகம் முன்னால் , சாகும் வரை உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார் முன்னால் அதிபர் அவ்வாபு சேர்.

10/12/2025

பாடசாலைகளை மூன்றாந்தவணைக்காக திறத்தல் தொடர்பான தீர்மானங்கள் வெளியீடு
--------------------------------------------------------------------------------------------------------------------
• நாட்டில் உள்ள 10,076 பாடசாலைகளில் 9,929 பாடசாலைகள் 16.12.2025 அன்று திறக்கப்படும் அதற்கமைய, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய, மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளை எதிர்வரும் 16 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
• பேரிடர் சூழ்நிலையை எதிர்கொண்ட 147 பாடசாலைகள் தற்போது திறக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அதற்கமைய ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 6 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டள்ளது.
• டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பமாகும் அனைத்துப் பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்சாரா ஊழியர்கள் டிசம்பர் 15ஆம் திகதி சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும்
• அனர்த்த நிலைமையை எதிர்கொண்ட பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் சீருடை தொடர்பில் நெகிழ்வுத்தன்மை பின்பற்றப்படும்
• , 2025ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலத்தின் இரண்டாம் கட்டம் 2025.12.16ஆம் திகதி முதல் 2025.12.22ஆம் திகதி வரை, கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பிறகு மீண்டும்
2025.12.29ஆம் திகதி முதல் 2025.12.31ஆம் திகதி வரை,
முஸ்லிம் பாடசாலைகள் 2026.01.02ஆம் திகதி வரை நடைபெறும்
• 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி ஐந்தாம் (5) ஆம் திகதி தொடங்கும்
• , திட்டமிட்டபடி பெப்ரவரியில் சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் என்றும் கூறப்பட்டது.

09/12/2025

வெள்ளத்தில் தொலைந்த உங்கள் காணி ஆவணங்கள் (உறுதி, அளிப்பு பத்திரம்) கவலை வேண்டாம்!

மீளப் பெறுவது எப்படி? (சட்டரீதியான முழு வழிகாட்டி...!

பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்காக இந்தத் தகவலை SHARE செய்யுங்கள்! ஒரு நொடியில் உதவி செய்யுங்கள்!

இழந்தது காணி ஆவணம் அல்ல; எதிர்காலத்தின் நம்பிக்கை!
அன்பானவர்களே...! வீடு, வாசல், உடமைகளை வெள்ளம் சூறையாடியதோடு, உங்களின் எதிர்காலத்தை உறுதி செய்யும் காணி உறுதி, வரைபடம் (Plan) போன்ற விலைமதிப்பற்ற ஆவணங்களையும் அது எடுத்துச் சென்றுவிட்டது. இது வெறும் காகிதங்கள் அல்ல; தலைமுறை தலைமுறையாக நீங்கள் காத்து வந்த உரிமைகள்!

ஆனால், நம்பிக்கை இழக்க வேண்டாம்! நம் நாட்டின் சட்டம் அதற்கு ஒரு தீர்வைக் கொடுத்துள்ளது! உங்கள் ஆவணங்களைச் சட்டப்படி மீளப் பெற முடியும்!

✅ உடனடியாக நீங்கள் எடுக்க வேண்டிய 3 அதிமுக்கிய படிகள்! (சட்டப் பாதுகாப்புக்காக)

1. பொலிஸ் அறிக்கை (The First Step): உங்கள் ஆவணங்கள் தொலைந்து விட்டதாக அல்லது பழுதடைந்து விட்டதாக உங்கள் பிரதேச பொலிஸ் நிலையத்தில் (Police Station) உடனடியாக ஒரு முறைப்பாட்டைப் பதிவு செய்யுங்கள். அவர்கள் தரும் பொலிஸ் அறிக்கை (Police Complaint Copy) தான், ஆவணங்களைப் பெறுவதற்கான பிரதான ஆவணமாகும்!

2. கிராம சேவையாளர் அறிக்கை: உங்கள் பிரதேச கிராம சேவையாளர் (GS) ஊடாக, வெள்ள அனர்த்தத்தினால் நீங்கள் பாதிக்கப்பட்டவர் என்பதற்கான உத்தியோகபூர்வ பாதிப்பு அறிக்கையைப் (Damage Assessment Report) பெற்றுக்கொள்ளுங்கள். இது உங்களின் கோரிக்கையை உறுதிப்படுத்த உதவும்.

3. சத்தியக் கடதாசி (Affidavit): வெள்ளத்தில் ஆவணங்கள் தொலைந்ததை உறுதி செய்து, ஒரு சத்தியக் கடதாசியைத் (சட்ட ஆவணம்) தயாரித்து, சமாதான நீதிவான் அல்லது சத்தியப் பிரமாண ஆணையாளர் மூலம் அத்தாட்சிப்படுத்துங்கள். (இது சில பதிவகங்களில் அவசியம்!)

காணி உறுதியை (Deed) மீளப் பெறுதல்: சட்டரீதியான விளக்கம்
பெரும்பாலானோர் இழந்தது காணி உறுதியைத்தான். இதை மீளப் பெறுவது மிக இலகு!

1. பதிவாளர் நாயகம் திணைக்களம் (Registrar General’s Department)

#சட்ட ஏற்பாடு: காணிப் பதிவு கட்டளைச் சட்டத்தின் (Land Registration Ordinance) இன் பிரிவுகளின் கீழ் இந்தச் சட்டப் பிரிவின்படி, ஒரு காணி உறுதியின் இரண்டாம் பிரதி (Duplicate) நீங்கள் பதிவு செய்த காணிப் பதிவகத்தில் (Land Registry) கட்டாயம் இருக்கும்.

#விண்ணப்பிப்பது எப்படி?
1. உங்கள் காணி அமைந்துள்ள மாவட்டத்தின் காணிப் பதிவகத்திற்கு (Land Registry) அல்லது பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்திற்குச் செல்லுங்கள்.

2. நீங்கள் உங்கள் அடையாள அட்டைப் பிரதி ஆகியவற்றை இணைத்து, 'சான்றுப்படுத்தப்பட்ட உறுதிப் பிரதியை (Certified Copy of the Deed) வழங்குவதற்கான' விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யுங்கள்.

3. சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்துங்கள்.

#முக்கியம்: அவர்கள் உங்களுக்கு வழங்கும் 'சான்றுப்படுத்தப்பட்ட உறுதிப் பிரதி (Certified Copy)' ஆனது, சட்டரீதியாக மூல உறுதியைப் போலவே முழுச் செல்லுபடியாகும் (Legally Valid)! பயப்படத் தேவையில்லை!

வரைபடம் (Plan) மற்றும் ஏனைய ஆவணங்களைப் பெறுதல்
காணி உறுதிக்கு அடுத்தபடியாக, அதன் எல்லைகளைக் காட்டும் வரைபடம் மிக முக்கியம்!

#நிலஅளவையாளர் நாயகம் திணைக்களம் (Surveyor General's Department)

சட்ட ஏற்பாடு: நிலஅளவைச் சட்டங்கள் (Survey Acts) மற்றும் திணைக்கள நடைமுறைகள்.

விண்ணப்பிப்பது எப்படி?

1. உங்கள் மாவட்டத்தின் அளவையாளர் திணைக்கள அலுவலகத்திற்கு (Survey Department) செல்லுங்கள்.

2. உங்களிடம் உள்ள காணி உறுதியின் இலக்கம் (Deed Number), வரைபட இலக்கம் (Plan Number - தெரிந்தால்) மற்றும் காணியின் அமைவிட விபரங்களை வழங்குங்கள்.

3. திணைக்களம் உங்கள் வரைபடத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியை (Certified Copy of the Plan) வழங்கியதும், அதுவே மூலப்பிரதியைப் போலச் செல்லுபடியாகும்.

#அரசாங்கத்தின் விசேட சலுகை அறிவிப்புகளுக்காக காத்திருங்கள்!
பெரும் அனர்த்தங்களின் போது, அரசு சிலவேளைகளில் காணி ஆவணங்களை மீளப் பெறுவதற்கு:
#கட்டணங்களை இரத்துச் செய்தல்.

#பிரதேச செயலகங்களில் விசேட நடமாடும் சேவை அல்லது முகாம்களை அமைத்தல்.

#விரைவான சேவைகளை வழங்குதல்.

உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள்!
வெள்ளத்தில் நீங்கள் இழந்த மிக முக்கியமான ஆவணம் எது?

அவற்றை மீளப் பெற நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

எந்த அதிகாரி உங்களுக்கு உதவியாக இருந்தார்?

உங்கள் கருத்து ஒருவருக்கு நம்பிக்கை கொடுக்கும்! அனைவரும் ஒன்றிணைந்து இந்த நெரு
க்கடியை வெல்வோம்!

#வெள்ளசேதம் #காணிஉறுதி #சட்டஉதவி #மீள்எழுச்சி

👍 Like (உங்களுக்கு உதவி தேவை என்றால்) | SHARE SHARE SHARE (அனைவருக்கும் சென்றடைய) | Comment (உங்கள் அனுபவத்தைப் பகிருங்கள்)

நான் சட்டத்தரணி
குமாரசிங்கம் கம்ஷன்

09/12/2025

சவூதி அரேபியாவில் சூறாவளி புயல்!

இன்றிரவு, #மதீனாவின் #யான்பு பகுதியில் வீசிய கடுமையான #சூறாவளி புயல் மற்றும் #கனமழை #வெள்ளம் காரணமாக ஏராளமான #கார்கள், #வாகனங்கள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

ரெஸ்க்யூ டீம்ஸ் (மீட்பு பணியாளர்கள்) களமிறக்கப்பட்டுள்ளனர்.

#நப்த் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

#ஜித்தா வரை இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

09.12.2025

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when Aydan Sahl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share