Local News

Local News உடன் செய்திகள்

06/12/2025

இலங்கையில் #நிலைகொண்டுள்ள #ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) #நிபுணர்கள் அடங்கிய #மீட்பு குழுவானது கடந்த 24 மணிநேரத்தில் 8 பேர்களின் #சடலங்களை மீட்டெடுத்துள்ளது!

#ஆழமான மண்ணுக்குள் #புதையுண்டு மீட்க முடியாத #கைவிடப்பட்ட பகுதிளில் இந்த மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது!

இதேவேலை இலங்கையின் நிவாரண மற்றும் மீட்பு பணிகளுக்கு போட்டி போட்டுக்கொண்டு சுமார் 70 #நாடுகள் உதவி வருகின்றன.

அவற்றில் UAE #அதிகமான உதவிகளை வழங்கி வருகின்றது!

கட்டார், இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சுவிசர்லாந்து, பங்களாதேஸ், சீனா, அமெரிக்கா, மாலைதீவு உள்ளிட்ட நாடுகளும் ஏகப்பட்ட உதவிகளை தொடராக வழங்கி வருகின்றன.

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான ஒருங்கிணைந்த உதவி மற்றும் மீட்புப் பணிகள்எம்....
06/12/2025

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான ஒருங்கிணைந்த உதவி மற்றும் மீட்புப் பணிகள்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)-ஓட்டமாவடி.

அண்மையில் இலங்கையைத் தாக்கிய டிட்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் வெள்ளம்,மிக மோசமான நிலச்சரிவுகள் ஆகியவை நாட்டின் பல பகுதிகளில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த இயற்கை பேரழிவின் தாக்கத்தைக் குறைக்கவும், மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கவும், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உடனடியாக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்கத் தொடங்கியுள்ளது.

களத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேடல் மற்றும் மீட்புக் குழு:

ஐக்கிய அரபு அமீரகத்தின் அவசர நடவடிக்கையின் முக்கிய பகுதியாக, அபுதாபி குடிமைத் தற்காப்புப் பிரிவைச் சேர்ந்த நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் (USAR) குழுக்கள் அடங்கிய குழு, மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

*நிபுணத்துவம்: இந்தக் குழு அதிநவீன உபகரணங்கள், நீர் மீட்பில் நிபுணத்துவம் பெற்ற பிரிவுகள், மீட்புப் படகுகள், பயிற்சி பெற்ற K9 பிரிவுகள் (நாய்கள்) மற்றும் சவாலான சூழல்களுக்கு ஏற்ற நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தக் குழுவின் திறன்கள், மிகக் கடினமான பகுதிகளில் விரைவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுகின்றன.

* ஆரம்ப நடவடிக்கைகள்: வந்தவுடன், குழுவினர் உடனடியாக கள நடவடிக்கைகளைத் தொடங்கி, நில அளவை செய்தல், சேதத்தை மதிப்பிடுதல், காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு அவசர ஆதரவை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொண்டனர்.

கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேச செயலகப் பகுதியில் உள்ள ரம்புக்-எல/விலனாகம என்ற பிரதேசத்திற்கு இந்தக் குழு சென்றடைந்தது. இது கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தில், மலை உச்சியில் அமைந்திருந்த வீடுகள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு, 16-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து பள்ளத்தாக்குக்குள் அடித்துச் செல்லப்பட்டன.

* மீட்பு நடவடிக்கை: நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரம்புக்-எல/விலனாகம போன்ற பகுதிகளில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம், இந்தக் குழு இடிபாடுகளுக்கு அடியிலிருந்தும் பள்ளத்தாக்கிலிருந்தும் 10 உடல்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது. இந்த முயற்சிகள், இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விமானப் போக்குவரத்து மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்:

இந்த அவசர உதவி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதாபிமான நிவாரணக் குழுவால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

* அவசர விநியோகம்: ஐக்கிய அரபு அமீரக விமானப்படையின் உலகிலேயே மிகப்பெரிய இராணுவ சரக்கு விமானம் C-17A விமானங்கள் மூலமாக இதுவரை நான்கு தடவைகள் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மொத்தமாக 20 டன்களுக்கும் அதிகமான அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

* முக்கிய நிவாரணப் பொருட்கள்: நிவாரணப் பொருட்களில் பின்வருவன அடங்கும்:

* தங்குமிடங்கள்: 48 தற்காலிக வீடுகள் மற்றும் கூடாரங்கள்.
* உணவுப் பாதுகாப்பு: ஒரு குடும்பத்திற்கு 14 நாட்களுக்குப் போதுமான 2592 உணவுப் பொதிகள்.

* உபகரணங்கள்: மீட்புக் குழுவினருக்கான வாகனங்கள், மீட்புப் படகுகள் மற்றும் சவாலான நிலப்பரப்பில் பயணிக்க மோட்டார் சைக்கிள்கள் (motorbikes) போன்ற பயன்பாட்டு வாகனங்கள்.

* பிற பொருட்கள்: மருந்துப் பொருட்கள், உடைகள், போர்வைகள் மற்றும் பாய்கள் (mattresses) உள்ளிட்ட அத்தியாவசிய மனிதாபிமானப் பொருட்கள்.

இந்தச் சூழ்நிலைக்கு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் வழங்கிய விரைவான மற்றும் அதிகளவிலான உதவிகளுக்காக பொதுமக்கள் சார்பில் ஆழமான பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சமூகத்தினரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய ஒன்றிணைந்துள்ளனர்.

நெருக்கடிகளின்போது நட்பு நாடுகளுக்கு ஆதரவளிப்பதில் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ள உறுதியான மற்றும் நீடித்த அர்ப்பணிப்பை இந்தத் தலையீடு மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.இந்த உதவிகள் பாதிக்கப்பட்டவர்களின் துயரத்தைக் குறைக்கவும், மீட்பு மற்றும் ஸ்திரப்படுத்துதல் முயற்சிகளை விரைவுபடுத்தவும் உதவுகின்றன.

இலங்கை சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்பட்டபோதும் ஐக்கிய அரபு அமீரகம் ஓடோடிவந்து உதவியது போன்று இம்முறையும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. இலங்கை மக்களாக ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்களுக்கும்,குடி மக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளும்,பிரார்த்தனைகளும்.

06/12/2025
*01- உலர் உணவுப் பொருட்கள் (Dry Ration) பகிர்வோர் கவனத்திற்கு,*பல தரப்பினரும் உலர் உணவுப் பொருட்களை சேகரித்து விநியோகம் ...
05/12/2025

*01- உலர் உணவுப் பொருட்கள் (Dry Ration) பகிர்வோர் கவனத்திற்கு,*

பல தரப்பினரும் உலர் உணவுப் பொருட்களை சேகரித்து விநியோகம் செய்து வருகின்றனர்.

உங்கள் சேவையைப் பாராட்டுகிறோம்! உங்கள் கரங்கள் இன்னும் பலப்படட்டும்! உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை!

ஆனால், உலர் உணவு விநியோகம் செய்யும் ஒரு சிலர், ஒரு சில தரப்பினர் நடந்து கொள்ளும் விதம் கவலையளிக்கிறது. எனவே, கொஞ்சம் இந்த விடயங்களை கவனத்தில் எடுக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்!

01. உங்கள் செலவில் வழங்குவதாக இருக்கலாம் அல்லது நீங்கள் சேகரித்து விநியோகிப்பதாக இருக்காலாம் உங்கள் பொதியில் உள்ளவை உண்மையில் தேவையானவை தானா என்பதைப் பாருங்கள்!

02. காலாவதியான, தரமற்ற மற்றும் ஆரோக்கியமற்ற பொருட்கள் உங்கள் பொதியில் வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!

03. யார் உண்மையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தேடி ஆராய்ந்து அவர்களுக்கு வழங்குங்கள்! (பாதிக்கப்படாத இடத்தில் இருப்பவர்கள், பாதிக்கப்பட்ட இடங்களை சொல்லியும், பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தும் பாதிக்கப்படாதவர்கள் பொய் கூறி விநியோகிக்கின்றவற்றைப் பெறுகிறார்கள். இது விடயத்தில் கவனம் தேவை)

04. எந்த பிரதேசத்துக்குத் தேவை, எவ்வளவு தேவை, குறித்த பிரதேசத்துக்கு ஏற்கனவே யாரும் வழங்கியுள்ளார்களா, இல்லையா என்பதை நன்கு ஆராய்ந்து விநியோகம் செய்யுங்கள்!

05. உங்கள் ஆவண மற்றும் அறிக்கையிடல் தேவைகளுக்கு நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் தேவைப்படின் உங்கள் அவசியத்தை சொல்லி அனுமதி பெறுங்கள்!

06. விநியோகிக்கின்ற போது உங்கள் தேவைக்காக பாதிக்கப்பட்டவர்களின் நிழற்படங்களை, காணொளிகளை எடுத்தாலும் பொதுவெளியில் பகிர்வதை தவிர்ந்து கொள்ளுங்கள்!

07. அனைவரையும் ஓரிடத்துக்கு வரவழைத்து, வரிசையாக வர வைத்து வழங்காதீர்கள்! யாருக்கும் தெரியாமல் காலடிக்கு கொண்டு சென்று வழங்க முயற்சி எடுங்கள்!

08. உங்கள் வார்த்தைகளில் மரியாதையும் கண்ணியமும் இருக்கட்டும். உங்கள் செயலில் பணிவு இருக்கட்டும். உங்கள் நடத்தையில் இங்கிதம் இருக்கட்டும்!

09. யார் நீங்கள் என்பதை வெளிப்படுத்த விரும்பின் புரிதலுக்காக சொல்லுங்கள். விளம்பரப்படுத்தாதீர்கள்! உங்களைக் காணும் போதெல்லாம் சங்கடப்படும் வகையில் நடந்து விடாதீர்கள்!

10. நீங்கள் யார் யாருக்கு கொடுத்தீர்கள் என்ற விவரங்களை பலருக்கு மத்தியில் கதைப்பதை, பொதுவெளியில் பதிவிடுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்!

பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் சுயமரியாதை உண்டு. கௌரவமாக, சந்தோஷமாக, பிறருக்கு உதவி செய்து கொண்டு, சொந்தக் காலில் நின்று, தலைநிமிர்ந்து வாழ்ந்த பலரும் உங்கள் உலர் உணவுப் பொதியைப் பெறலாம். அப்படியான பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பலவீனப்படுத்தாதீர்கள்! இன்னும் நோகடிக்காதீர்கள்!

வழங்குகின்ற நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த உயரத்தில் இருப்பவராகவும் இருக்கலாம் *உங்கள் கையும் பெறுபவர் கையும், உள்ளமும் சம உயரத்தில் இருக்கட்டும்!*

*இஸ்பஹான் சாப்தீன்*
+94715539430
தயாரிப்பாளர்,
முஸ்லிம் சேவை,
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.
04 12 2025

🔸வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் காத்தான்குடியில் விசேட கூட்டம்..!அண...
05/12/2025

🔸வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் காத்தான்குடியில் விசேட கூட்டம்..!

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தத்தினால், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள், மீனவர்கள் மற்றும் அன்றாட தொழில் செய்வோர் எதிர்நோக்கிய சேதங்கள் தொடர்பாகவும், அவற்றுக்கான அரசாங்க நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாகவும், இன்று (5) காத்தான்குடி பிரதேச செயலகத்தில் விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் அவர்களின் பங்கேற்புடனும் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதங்கள், அரச அதிகாரிகளின் ஆரம்ப மதிப்பீடுகள், மேலும் நிவாரண உதவிகள் வழங்குதல் தொடர்பான விடயங்கள் விரிவாக பரிசீலிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு கொடுப்பனவுகள் வழங்குதல், சேதமடைந்த வீடுகள், கால்நடைகள், மீனவர்களின் வாழ்வாதாரம், மற்றும் மற்ற சிறு தொழிலாளர்களின் சேத விபரங்களை முழுமையாகப் பதிவு செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருடன் நேரடியாக தொடர்பு கொண்டது விடயங்களை தெளிவுபடுத்தியதுடன், இதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர் தேவையான விசேட ஒழுங்குகளை பிரதேச செயலகத்துக்கு செய்து கொடுப்பதாகவும், நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, முழுமையான சேத அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் வட்டார மக்களின் சேத நிலைமைகள் மற்றும் தேவைகளை, பாராளுமன்ற உறுப்பினரின் ஊடாக பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

பிரதேச செயலாளர், இந்த விடயங்களை மீண்டும் ஒருமுறை ஆராய்ந்து, முழுமையான சேத விவரங்களை சரிபார்த்து, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அறிக்கை அனுப்புவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில், காத்தான்குடி நகர சபை தவிசாளர், நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் மற்றும் அனர்த்தத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

-- ஊடகப்பிரிவு

மன்னம்பிட்டி ரயில்பாதையின் இன்றைய நிலைமை (30.11.2025)மறு அறிவித்தல் வரை அணைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
30/11/2025

மன்னம்பிட்டி ரயில்பாதையின் இன்றைய நிலைமை (30.11.2025)
மறு அறிவித்தல் வரை அணைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இன்றைய தினம் ஜும்மாத் தொழுகையை நடாத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும...
28/11/2025

மோசமான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இன்றைய தினம் ஜும்மாத் தொழுகையை நடாத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அனைவரும் தத்தமது வீடுகளில் ழுஹர் தொழுகையினை நிறைவேற்றிக்கொள்ளுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கல் திணைக்களம் பள்ளிவாசல் நிர்வாகங்களிடம் கேட்டுக் கொள்கின்றது.

*கண்டி-மஹியங்கனை வீதியை முடிந்தவரை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை !*பாறை மற்றும் மண் சரிவுகள் காரணமாக கண்டி-மஹி...
26/11/2025

*கண்டி-மஹியங்கனை வீதியை முடிந்தவரை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கோரிக்கை !*

பாறை மற்றும் மண் சரிவுகள் காரணமாக கண்டி-மஹியங்கனை சாலையை முடிந்தவரை பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு புதன்கிழமை (26) அன்று கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர்,

இந்த நாட்களில் கண்டி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான சாலைகளில் போக்குவரத்து ஆபத்தானதாக மாறியுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கண்டி-மஹியங்கனை சாலையில் பல சிறிய பாறை மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன. எனவே, கண்டி-மஹியங்கனை சாலையில் பயணிக்கும் சாரதிகள் இந்த சூழ்நிலையில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த சாலை அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். பொழுதுபோக்கு பயணங்களுக்காக மீமுரே பகுதிக்கு பயணிப்பதைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

கண்டி மாவட்டத்தில் ஏதேனும் பேரிடர் நிலைமை ஏற்பட்டால், காவல்துறை, இராணுவம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் பேரிடர் மேலாண்மை பிரிவுடன் ஒருங்கிணைந்து நிலைமையை நிர்வகிக்கும் என்று மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
https://chat.whatsapp.com/EvD0qvC4pW3EHbVFhVb2wb

வவுனியா ஹொரவபொத்தான வீதியிலுள்ள Singer காட்சியறை முற்றுமுழுதாக தீயில் எரிந்து நாசம்.!
25/11/2025

வவுனியா ஹொரவபொத்தான வீதியிலுள்ள Singer காட்சியறை முற்றுமுழுதாக தீயில் எரிந்து நாசம்.!

25/11/2025

*டிசம்பர் 12 பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சுகயீன விடுமுறை*..!

https://chat.whatsapp.com/EvD0qvC4pW3EHbVFhVb2wb

பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காணக் கோரி, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி சுகயீன விடுமுறை எடுத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு முதல் பள்ளி நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பதை உடனடியாக நிறுத்துதல்,

ஆசிரியர்-அதிபர் சம்பள முரண்பாட்டில் மீதமுள்ள 2/3 பங்கைப் பெறுதல்,

அதிபர் சேவையின் சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் ஆசிரியர்-அதிபர்களின் தொழில்முறை பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்தல்,

ஆகிய கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் கூட்டணி தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் நடைபெறவிருந்த பள்ளி இறுதிப் பரீட்சைகளை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்குமாறு அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி மேலும் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை புறக்கணித்து, பருவத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டால்,

தேர்வுகள் தொடர்பாக எழும் எந்தவொரு பிரச்சினைகளுக்கும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள் என்றும் கூட்டணி கூறுகிறது.

இதற்கிடையில், ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி, கல்விச் செயலாளர் நாலக கலுவேவாவுக்கு கடிதம் அனுப்பி, 12 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்க கூட்டணி, கல்விச் செயலாளர் நாலக கலுவேவாவுக்கு கடிதம் அனுப்பி, 12 ஆம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளது.

அதேபோல், இலங்கை கல்விச் சங்கக் கூட்டமைப்பு, மலையக ஆசிரியர் முன்னணி, ஆசிரியர் விடுதலை முன்னணி மற்றும் தோட்ட ஆசிரியர் சங்கம் ஆகியவை இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன.

கிழக்கு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவன் மஸூத் விபத்தில் மரணம். இன்று (24/11/2025)  மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில்...
24/11/2025

கிழக்கு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவன் மஸூத் விபத்தில் மரணம்.

இன்று (24/11/2025) மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் முஹம்மத் மஸூத் காலமானார்.

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று வாழைச்சேனை நோக்கி வரும் வழியிலேயே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார்.

23 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், மீராவோடையை பிறப்பிடமாகவும் வாழைச்சேனை ஹைராத் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"சட்டம் ஒரு இருட்டறை"..!! நாமலின் சட்டப் படிப்பு சிரிப்பாய் சிரிக்கிறது :சட்டக் கல்லூரியில் நாமலின் சேர்க்கை நுழைவு விதி...
19/11/2025

"சட்டம் ஒரு இருட்டறை"..!!

நாமலின் சட்டப் படிப்பு சிரிப்பாய் சிரிக்கிறது :

சட்டக் கல்லூரியில் நாமலின் சேர்க்கை நுழைவு விதிகளை மீறியதாக அறிக்கை கூறுகிறது.

SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 2009 ஆம் ஆண்டு இலங்கை சட்டக் கல்லூரியில் சேர்க்கை பெற்றது குறித்து தி எக்ஸாமினரின் புதிய விசாரணை புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது, இது அவரது கல்வித் தகுதிகளை அங்கீகரிப்பதிலும் முழுமைப்படுத்துவதிலும் முறைகேடுகள் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

அறிக்கையின்படி, ராஜபக்ச தனது LLB முடித்ததாகக் கூறும் லண்டன் நகர பல்கலைக்கழகம் - அந்த நேரத்தில் சட்டக் கல்லூரியால் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், அவர் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த அதே நாளில் சட்டக் கல்லூரி ராஜபக்சவை அனுமதித்தது.

செய்தியில் மேற்கோள் காட்டப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அவர் சேர்ந்த கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, பல்கலைக்கழகம் அக்டோபர் 15, 2009 அன்று அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

ராஜபக்சேவின் மாணவர் கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை, ஒரு டிரான்ஸ்கிரிப்ட் மற்றும் சிட்டி யுனிவர்சிட்டியின் "மூன்றாம் வகுப்பு பட்டம்" என்பதை உறுதிப்படுத்தும் கடிதம் மட்டுமே இருப்பதாக தி எக்ஸாமினர் மேலும் தெரிவிக்கிறது.

சட்டக் கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட்ட டிரான்ஸ்கிரிப்ட்டுக்கும், ஏற்கனவே பதவியில் இருந்து விலகிய துணைவேந்தரின் கையொப்பம் கொண்ட முதுகலை திட்டத்திற்காக பல ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட தனி பட்டப்படிப்பு சான்றிதழுக்கும் இடையிலான முரண்பாடுகளையும் இந்த வெளியீடு குறிப்பிட்டுள்ளது.

ராஜபக்சே குற்றச்சாட்டுகளை முற்றிலும் தவறானது என்று நிராகரித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது பட்டப்படிப்பை விசாரிக்கக் கோரி அரசாங்கம் பதவியேற்ற உடனேயே ஒரு பி அறிக்கையைத் தொடங்கியது, ஆனால் பல மாத விசாரணைகள் நீதிமன்றத்தில் எந்த முடிவுகளையும் அளிக்கவில்லை என்று கூறினார்.

"இந்த அரசாங்கம், பதவியேற்ற சில வாரங்களுக்குப் பிறகு, எனது பட்டப்படிப்பை விசாரிக்க ஒரு பி அறிக்கையை சமர்ப்பித்தது. பல மாதங்கள் கடந்துவிட்டன, ஆனால் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இப்போது அவர்கள் நுகேகோடா பேரணி மற்றும் பொய்யான பிரச்சாரத்தால் பயந்து போயுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் 21 ஆம் தேதி பதிலளிப்போம்," என்று அவர் நவம்பர் 21 வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட எதிர்க்கட்சி பேரணியைப் பற்றிக் குறிப்பிட்டு கூறினார்.

ராஜபக்ஷவும் லண்டன் பல்கலைக்கழகம் தனது 100 குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம்பெறும் பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும் கூறுகிறார்.

Source : NWN

தமிழில் : ANM Fawmy ( Journalist )

Address

Kayar Road
Eravur

Telephone

+94775162245

Website

https://chat.whatsapp.com/LAlff9GHiYs8JHKOnLpsZ1

Alerts

Be the first to know and let us send you an email when Local News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share