ETN News

ETN News Your trusted source for reliable news across the Eastern Province and island-wide. Stay informed with timely updates and exclusive stories that matter.

ஜனாஸா அறிவித்தல்.ஏறாவூர் தைக்கா வீதியில் வசித்து வந்த கோழிக்கடை ஹனிபா ஹாஜியார் அவர்கள் காலமானார் .(இன்னாலில்லாஹி வ இன்னா...
03/11/2025

ஜனாஸா அறிவித்தல்.

ஏறாவூர் தைக்கா வீதியில் வசித்து வந்த கோழிக்கடை ஹனிபா ஹாஜியார் அவர்கள் காலமானார் .

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று திங்கள்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து வாளிப்பா ஜும்மா பள்ளிவாயல் மைய்யவாடியில் நடைபெறும்.

வறிய மாணவர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு.(எம்.பஹத் ஜுனைட்)காத்தான்குடி இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபி...
02/11/2025

வறிய மாணவர்களுக்கான இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு.

(எம்.பஹத் ஜுனைட்)

காத்தான்குடி இளைஞர் வலுவூட்டலுக்கும் சமூக அபிருத்திக்குமான அமைப்பின் (YESDO) ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்காக இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (02) காத்தான்குடி அல்-மனார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் எம்.ரீ.எம். இர்பான் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், மொரட்டுவை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி. என்.எம்.எம். நிஹாஜ், மற்றும் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டாக்டர் எம்.இஸெட்.ஏ. ஸக்கி ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அப்துல் கபூர் மதனி, இலங்கை முஸ்லிம் மீடியா போரம் தலைவர் எம்.பி.எம். பைரூஸ், காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் நித்யா , ஊர் பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள், சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள், YESDO அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

காத்தான்குடி மற்றும் அண்மித்த பிரதேசங்களிலுள்ள பல பாடசாலைகளில் இருந்து பார்வை இடர்பாடுடைய 200ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கண் பரிசோதிக்கப்பட்டு, அவர்களில் மூக்குக்கண்ணாடி தேவையுள்ள 80 வறிய மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பதவி உயர்வு பெற்றார் SNM.சுஹைல்.விடிவெள்ளி பத்திரிகையின் செய்தி ஆசிரியராக எஸ்.என்.எம். சுஹைல் நியமனம்.விடிவெள்ளி பத்திரி...
02/11/2025

பதவி உயர்வு பெற்றார் SNM.சுஹைல்.

விடிவெள்ளி பத்திரிகையின் செய்தி ஆசிரியராக எஸ்.என்.எம். சுஹைல் நியமனம்.

விடிவெள்ளி பத்திரிகையின் செய்தி ஆசிரியராக எஸ்.என்.எம். சுஹைல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தை விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் வழங்கி வைத்துள்ளார்.

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு விஜயம்.  பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்க...
02/11/2025

பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு விஜயம்.

பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய கல்விச்சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வுக்காக நேற்று (2025.11.01) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

புதிய கல்விச்சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் விஜயம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் நடமாடும் சேவையிலும் பங்கேற்றார்.

இந்நடமாடும் சேவையின் போது, கல்வி நிர்வாக அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றைத்தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.

வலயக்கல்விப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.ஜவாத் நளீமி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ்.நழீம் ,
உதவி, பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், நகரசபை உறுப்பினர்கள் ,ஆசிரிய ஆலோசகர், வலய பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஏறாவூரில் தொடராக இளம் வயது மரணங்கள்.ஏறாவூர் மீராகேணியை முகவரியாக கொண்ட  27 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான முஹாஜில் (தேன்...
01/11/2025

ஏறாவூரில் தொடராக இளம் வயது மரணங்கள்.

ஏறாவூர் மீராகேணியை முகவரியாக கொண்ட 27 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான முஹாஜில் (தேன்குழல் வியாபாரி)என்பவர் திடீர் உடல்நலக் குறைவினால் காலமானார் .

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

தற்போது ஜனாஸா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஜனாஷா நல்லடக்கம் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் செய்தி அறிக்கையிடல்’ தொடர்பில் இடம்பெற்ற ஊடக  செயலமர்வு..(எம்.பஹத் ஜுனைட்)ஊடக சட்ட மன்றம்(Me...
01/11/2025

டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் செய்தி அறிக்கையிடல்’ தொடர்பில் இடம்பெற்ற ஊடக செயலமர்வு..

(எம்.பஹத் ஜுனைட்)

ஊடக சட்ட மன்றம்(Medial Law Forum )ஏற்பாடு செய்த டிஜிடல் யுகத்தில் தேர்தல் செய்தி அறிக்கையிடல்’ எனும் தலைப்பிலான ஊடக பயிற்சிப்பட்டறை சனிக்கிழமை(01) மட்டக்களப்பு கல்லடி கிரீன் கார்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.

தேர்தல் காலங்களில் செய்தி அறிக்கையிடல்,போலி தகவல்களை இனங்காணல்,நிகழ்நிலைக்காப்புச் சட்டம்,ஊடக சட்டம், ஊடக பயன்பாட்டில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொடர்பில் விரிவுரைகள் இடம்பெற்றது.

இச் செயலமர்வில் சட்டத்தரணி கலாநிதி விரஞ்சன ஹேரத், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் பீ.எம்.பைறூஸ், வீரேகேசரி பிரதி ஆசிரியர் ரொபர்ட் அண்டனி உள்ளிட்டோர் வளவாளர்களாக கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“ஜனனி” வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதலாவது செயலமர்வானது, 31.10.2025 ஆம் திகதியான இன்று புத்தளம் மாவட்டத்தில்...
31/10/2025

“ஜனனி” வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதலாவது செயலமர்வானது, 31.10.2025 ஆம் திகதியான இன்று புத்தளம் மாவட்டத்தில் மதுரன்குலிய இசுரு ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது. இச் செயலமர்வில், பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவபப்டுத்திய பெண் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதில், சிறப்பு விருந்தினராக தேர்தல் ஆணையாளர் நாயகம் திரு. சமன் ஸ்ரீ ரத்னாயக்க அவர்களும், புத்தளம் மாவட்டத்தின் துணை தேர்தல் ஆணையாளர் திரு. லக்ஷித ஜயனத் அவர்களும் கலந்துகொண்டனர். மேலும் இச்செயலமர்வில் கஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. மனாஸ் மக்கின் அவர்களும், வடமேற்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் திரு எம். சந்திரசிறி தரங்க அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

゚ #ᴡᴏᴍᴇɴᴇᴍᴘᴏᴡᴇʀᴍᴇɴᴛ

ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா ஏறாவூர் கிளை பிர...
29/10/2025

ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா ஏறாவூர் கிளை பிரதிநிதிகளுக்கும் இடையிலான விஷேட சந்திப்பு ஒன்று இன்று புதன்கிழமை ஜமிய்யா அலுவலகத்தில் இடம்பெற்றது .

இதன்போது ஊரின் முக்கியமான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்  கிழ...
29/10/2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சபையின் ரூபாய் இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள ஏறாவூர் மீராகேணி வாராந்த சந்தை அபிவிருத்தித் திட்டத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது .

உமர் அறபாத்
ஏறாவூர் .

போலிச் செய்தி குறித்த விளக்கம்..!!​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்...
27/10/2025

போலிச் செய்தி குறித்த விளக்கம்..!!

​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது.

அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.

​உண்மையில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததை அறிந்து உடனடியாக, இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஏமாற்ற முனைந்த 11 பேரையும் பொலிசார் கைது செய்தார்கள்.

​இதனைத்தவிர, கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மீண்டும் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்.

​அரசியல் நோக்கங்களுக்காகச் சில தகவல்கள் தவறாகவும், பிழையாகவும் பரப்பப்படுவதையிட்டு நாம் மிகுந்த வருத்தம் அடைகிறோம்.

​-- ஊடகப்பிரிவு

சவால்கள் நிறைந்த பூர்வீக கிராமம் - காத்தான்குடி மீடியா போரம் கள விஜயம்.(எம்.பஹத் ஜுனைட்)மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செய...
27/10/2025

சவால்கள் நிறைந்த பூர்வீக கிராமம் - காத்தான்குடி மீடியா போரம் கள விஜயம்.

(எம்.பஹத் ஜுனைட்)

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராம மக்கள் எதிர்நோக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் ஞாயிற்றுக் கிழமை (26) கள விஜயம் மேற்கொண்டனர்.

போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் விஜயம் மேற்கொண்ட ஊடகவியலாளர்கள் அக்கிராம மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிரச்சினைகள் தொடர்பில் அக்கிராம மக்கள் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் தகவல்களை பெற்றுக்கொண்டனர்.

அக்கிராமமானது முஸ்லிம் மக்களின் பூர்வீக கிராமமாகும் வயல் நிலங்கள் நிறைந்த இயற்கையான அழகான கிராமம் 1985 காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்டிருந்த உள்நாட்டு யுத்தத்தின் போது தங்களது இருப்பிடங்கள், பள்ளிவாயல்கள், பாடசாலை, வாழ்வதாரம் அனைத்தையும் விட்டி பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் 2009 இல் மீள் குடியேறிய இக்கிரம மக்கள் தற்போது தங்களது காணிகள் இருந்து இக்கிராமத்தில் வாழ முடியாத சூழ்நிலைகள் காரணமாக மீண்டும் குடிபெயர்ந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இக் கிராமத்தில் சுத்தமான குடிநீர், நேர்த்தியான போக்குவரத்து வீதிகள்,பாடசாலை, வைத்தியசாலை, வாழ்வதாரம் போன்றவை இல்லாமையினாலும் யானை, குரங்கு போன்றவற்றின் அட்டகாசம் காரணமாக மக்கள் உயிர்வாழ்வதற்க்கு அச்சுருத்தலாக காணப்படுவதுடன் வேளாண்மை, பயிர்ச்செய்கை போன்றவை நாசமாகி வருகிறது. இது தொடர்பில் அம் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

தங்களது ஊடங்கள் ஊடாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள்,திணைக்களங்களுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதாக அவ் ஊடக குழுவினர் தெரிவித்தனர்.

இவ் விஜயத்தில் போரத்தின் ஆயுட்கால தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.முஸ்தபா (பலாஹி) உள்ளிட்ட அரச ,தனியார் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு  டில்வின் விஜயம் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் தோழர் டி...
26/10/2025

ஏறாவூர் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு டில்வின் விஜயம்

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வா நேற்று (25.10.2025) ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு (ESSCA) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

புற்றுநோயாளர்களுக்கு மிகவும் முக்கியமான வைத்தியசாலையாக சேவைகளை வழங்கி வரும் குறித்த நிலையத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், எதிர்கால சமூக நலத்திட்டங்கள் குறித்து பயனுள்ள கலந்துரையாடலிலும் டில்வின் சில்வா ஈடுடட்டார்.

இவ்விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்க அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுதலைவருமான கந்தசாமி பிரபு மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஏறாவூர் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் கல்குடா நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr முரளீஸ்வரன்., தொழிலதிபர் அமீர், வைத்திய நிபுணர்கள், நிலையத்தின் செயற்பாட்டுக்குழுவினர் எனப்பலரும் உடன் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
தேசிய மக்கள் சக்தி.

Address

Ladies School Road
Eravur
30300

Alerts

Be the first to know and let us send you an email when ETN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share