ETN News

ETN News Your trusted source for reliable news across the Eastern Province and island-wide. Stay informed with timely updates and exclusive stories that matter.

மட்டக்களப்பு மாவட்டம் விசேட விவசாய குழு கூட்டம்!!மட்டக்களப்பு மாவட்ட விசேட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங...
11/06/2026

மட்டக்களப்பு மாவட்டம் விசேட விவசாய குழு கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்ட விசேட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.சிவநேசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது.

இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை இனங்கண்டு உரிய விவசாயிகளுக்கான நஸ்டஈடுகளை வழங்கப்பட்டமையில் எற்பட்ட தாமதங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், விவசாய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு வங்கிகளினால் மேற்கொள்ளப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள் தொடர்பாகவும் காப்புறுதி கிடைக்காமை, மண் அகழ்வு, வயல்களில் வெள்ளத்தினால் குவிந்த மணலை அகற்றுவது தொடர்பாகவும், விவசாய வீதி அபிவிருத்தி போன்ற மேலும் பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய நீர்ப்பாசன செயற்திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கால்வாய்களை மீள்கட்டுமானம் செய்தல், அழிவடைந்த தென்னை பயிர்ச் செய்கையாளர்களுக்காக நஸ்ட ஈடுவழங்குதல், உரத்திற்கான கொடுப்பனவை வழங்குதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் பல தீர்க்கமான முடிவுகள் இதன் போது எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் தொடர்பாகவும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், விவசாய அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜெகன்நாத், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், துறைசார் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.

மட்/மம/மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் 63ஆவது ஆண்டு விழா .மட்/மம/மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் 63ஆவது ஆண்டு நி...
09/06/2026

மட்/மம/மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் 63ஆவது ஆண்டு விழா .

மட்/மம/மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் 63ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலை, கலாச்சார மற்றும் கௌரவிப்பு நிகழ்வு கடந்த (06) ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் வி.டி. ஜனூன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ். நழீம் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண கிராமிய வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜே.எம். அல் அமீன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ. சாஹித், பாடசாலையின் முன்னாள் அதிபர்களான எம்.எப்.எம். அலியார், எச்.எம்.எம். பாரிஸ், தாஹா குஸைன் மற்றும் அதிபர்களான ஏ.எல்.எம். நௌபி, எஸ்.எல்.டி. அஜ்மல்கான், சட்டத்தரணி எம்.எம். றவூப், ஏறாவூர் போக்குவரத்து சாலை முகாமையாளர் எம். சைனி, பொலன்னறுவை மாவட்ட அமானா வங்கி முகாமையாளர் ஆர். ஜிப்ரி, ஏறாவூர் நகரசபை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம். சகிக்கா பர்வின், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எப். பாதுஷா உள்ளிட்ட பலர் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் பாடசாலையின் உப அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், மாணவத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இவ்விழாவின் போது மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி மற்றும் பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றிருந்ததுடன் தேசியம்,மாகாணம், மாவட்ட மட்டங்களில் சாதனை படைத்த மாணவச் செல்வங்களுக்கு பதக்கங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

மேலும் இப்பாடசாலையில் கல்வி கற்று உயரிய நிலைகளை அடைந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் விழாவில் கலந்துகொண்ட அதிதிகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

63ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாமிலும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று உதிரம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

05/06/2026

மட்டு.செங்கலடி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கறுத்தபாலம் அருகில் நேரக்குடா பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் இன்னலை அனுபவித்து வருகின்றனர் .

சிறிய வகை குருவி கூட்டங்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் வேளான்மைகளை நாசம் செய்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குருவி கூட்டங்களை விரட்டுவதற்கு பெரும் தொகையான பணமும் ஒவ்வொரு நாளும் செலவிடப்படுவதுடன் குருவிகளின் அட்டகாசம் இப்பிரதேச விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

#செய்தியாளர்
உமர் அறபாத்
ஏறாவூர் .

வீதியை விட்டு விலகி பஸ் விபத்து; மூவர் காயம்காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து ப...
04/06/2026

வீதியை விட்டு விலகி பஸ் விபத்து; மூவர் காயம்

காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி இன்று (04) காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் போக்குவரத்து பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து ஏற்படும் போது பஸ்ஸில் சுமார் 20 பயணிகள் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

📌காத்தான்குடிக் கடற்கரையைச் சுத்தம் செய்யும் நிகழ்வு.🔴 குப்பைகளை இடுபவர்களுக்கு எதிராக இன்றிலிருந்து சட்ட நடவடிக்கை.(ஏ.ர...
01/06/2026

📌காத்தான்குடிக் கடற்கரையைச் சுத்தம் செய்யும் நிகழ்வு.

🔴 குப்பைகளை இடுபவர்களுக்கு
எதிராக இன்றிலிருந்து சட்ட நடவடிக்கை.

(ஏ.ரி.எம்.றியாஸ்)

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற "சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடற்கரையைச் சுத்தம் செய்யும் நிகழ்வு(CBG)"
இன்று(01)காலை காத்தான்குடி நகர சபையின் கௌரவ நகர முதல்வர் அல்ஹாஜ் SHM.அஸ்பர் JPதலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி றினோசா முப்லிஹ்,காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர் மௌலவி அஜ்வத்(பலாஹி)JP மற்றும் நகர சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செயலாளர் தனது உரையில்
வாரம் இரண்டு தடவை கடற்கரையை துப்புரவு செய்கின்ற நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், கடற்கரைச் சூழலை தூய்மையாக வைத்திருப்பது அனைவரது கடமையாகும் எனவும் குறிப்பிட்டார்.

நகர முதல்வர் தனது உரையில்
"கடற்கரைச் சூழலைப் பாதுகாக்குமாறும், வீசப்படுகின்ற கழிவுகள் குறிப்பாக பிளாஸ்டிக்,இறப்பர் மற்றும் பொலித்தீன் போன்ற பொருட்கள் கடலிலே கலந்து கடல் வாழ் உயிரினங்கள் அதை உட்கொள்வதன் மூலம் இறப்பதாகவும் , அவ்வாறு உட்கொள்ளப்பட்ட மீன்களை நாங்கள் உண்ணுகின்ற போது புற்றுநோய் போன்ற பாரிய நோய்கள் ஏற்படுவதாகவும், கழிவுகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாததன் காரணமாக ஓசோன் படலத்தில் துளைகள் விழுவதும் ,அடிக்கடி காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதற்கும் காரணமாக இவைகள் அமைவதாகவும் குறிப்பிட்டார்."

அத்துடன் "இன்று முதல் காத்தான்குடி கடற்கரையில் குப்பைகளை இடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை" மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வீணான சிரமங்களில் இருந்து தவிர்ந்து
எமது கடற்கரைச் சூழலை நாம் பாதுகாப்பதுடன், எதிர்கால சந்ததியினருக்கும் உரிய முறையில் கையளிப்போம்.

புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா(எம்.ஐ.அப்துல் நஸாா்)புதிய காத...
01/06/2026

புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

(எம்.ஐ.அப்துல் நஸாா்)

புதிய காத்தான்குடி கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் ஞாயிற்றுக்கிழமை (31) காலை 07.00 மணியளவில் பக்திப்பூர்வமாக இடம்பெற்றது.

மேற்படி பள்ளிவாயலின் நம்பிக்கையாளா் சபை சபை தலைவர் ஏ.பீ.எம்.றஜாயி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இணைந்து நாட்டி வைத்தனர்.

காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிா் அரபுக் கல்லூரியின் தலைவா் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) அவா்களினால் சிறப்பரை நிகழ்த்தப்பட்டது.

அதனையடுத்து காத்தான்குடி நகர சபையின் தவிசாளா் எஸ்.எச்.எம்.அஸ்பா் அவா்களின் உரை இடம்பெற்றது.

இதன்போது பள்ளிவாயலினை நிர்மாணித்து கொடுக்கும் பெஷன் ஹவுஸ் மர்ஹும் எஸ்.எச்.எம்.நஜீம் அவர்களின் குடும்பத்தினர் சார்பில் முதல் கட்ட கொடுப்பனவு ஒப்பந்தகாரரிடம் கையளிக்கப்பட்டது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹாரூன் (றஷாதி), செயலாளா் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஜவாஹிர் (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவா் எம்.சீ.எம்.ஏ.சத்தாா், செயலாளா் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் ஹாபிழ் (ஜமாலி), பள்ளிவாயலின் முன்னாள் நம்பிக்கையாளா் சபை தலைவா் எம்.எல்.ஆதம்பாவா உட்பட அழைப்பு அதிதிகள், உலமாக்கள், மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் தற்போதைய மற்றும் முன்னாள் நம்பிக்கையாளா் சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மர்ஹும் எஸ்.எச்.எம்.நஜீம் அவர்களின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய கட்டடப் பணிகள் இறைவனின் அருளால் சிறந்த முறையில் நிறைவடையவும், இப்பிரதேச மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிவர்த்தி செய்யும் ஒரு முக்கிய மையமாக இது திகழவும் காத்தான்குடி ஜாமிஉல் ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலின் ஆயுட்கால பேஷ் இமாம் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ஜெயினுதீன் (மதனி) அவா்களினால் விசேட துஆப் பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிகள் அனைத்தும் பள்ளிவாயலின் செயலாளரும் காத்தான்குடி நகர சபையின் அன்வர் வட்டாரத்திற்கான உறுப்பினருமான எம்.எச்.எம்.ரிஸ்வி அவர்களால் நெறிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

பத்து வயது தங்கையை, பதினைந்து வயது சகோதரன் கழுத்து நெரித்து  கொலை!கைத்தொலைபேசியினால்  வந்த வினை!! ஏறாவூர் -05 யில் சம்பவ...
31/05/2026

பத்து வயது தங்கையை, பதினைந்து வயது சகோதரன் கழுத்து நெரித்து கொலை!

கைத்தொலைபேசியினால் வந்த வினை!! ஏறாவூர் -05 யில் சம்பவம்.

( MSM. நஸீர் - ISD, ஏறாவூர்)

நாட்டில்
ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலையிலிருந்தும் ,யாழ்ப்பாணத்திலிருந்தும் முறையே 1990, 2000ம ஆண்டுகளில் இரு வெவ்வேறு குடும்பங்கள் படகு மூலம் இந்தியா தமிழ்நாட்டுக்கு சென்று கண்ணியாகுமரி ,பெருமாள்நகர அகதிமுகாமில் தங்கியிருந்த வேளை இவ்விரு குடும்பங்களிலிருந்தும் திருகோணமலை மாப்பிள்ளையும், யாழ்ப்பாண பெண்ணுமாக திருமணம் செய்து ஒரு ஆண் மகனையும், ஒரு பெண் மகளையும் பெற்றெடுத்திருக்கின்றனர்.
1990 யில் இந்தியாவுக்கு அகதியாக வரும்போது திருகோணமலையை சேர்ந்த சகோதரருக்கு 07 வயது. யாழ்ப்பாண பெண் 2000 ஆண்டு இந்தியா வரும்போது 11 வயதாகவும் இருந்திருக்கிறது.

சுமார் 35 வருடமாக அகதி முகாமிலேயே காலத்தை கடத்திய இவர்களுக்கு குடியுரிமை கிடைக்காததால், சொந்த நாட்டுக்கு செல்வோம் என முடிவெடுத்து, எங்கு போகலாம் என்று யோசிக்கும்போது, குறித்த முகாமிலிருந்த மட்டக்களப்பு சகோதர் ஒருவரின் ஆலோசனைப்படி ,07 -02-2026 அன்று தாய்நாட்டுக்கு வந்து செங்கலடியில் ஒருமாதமளவில் தெரிந்தவரின் வீட்டில் தங்கியிருந்த வேளை இரு பிள்ளைகளையும் செங்கலடி மத்திய கல்லூரியில் சேர்த்திருக்கின்றனர்.

அதன் பின்னர் ஏறாவூர், ஐந்தாம் குறிச்சி வெற்றிவேல் வீதியில் வீடொன்றை கொள்வனவு செய்து நான்குபேரும் 05-04-2026 தொடக்கம் அங்கேயே தங்கியிருந்துள்ளனர்,

குழந்தைகளின் தந்தைக்கு STUDIO வேலை தெரிந்திருந்ததால் அதன் முயற்சியில் அவர் ஈடுபட, குழந்தைகளின் தாய், அவரது அம்மாவுக்கு சுகமில்லையென அறிந்து 19-05-2026 அன்று இந்தியா சென்றிருக்கிறார்.

தற்போது வீட்டில் தந்தையும் இரு பிள்ளைகளுமே இருந்துள்ளனர்.

28-05-2026 அன்று வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு 15 வயது மகனை தனியார் வகுப்புக்கு அனுப்பி வைத்துவிட்டு , மகளை அழைத்துக்கொண்டு பிறந்தநாள் நிகழ்வொன்றின் படப்பிடிப்புக்காக தந்தை சென்றிருக்கிறார்.

மகன் பாடமுடிந்து வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்த தந்தை, தன்னுடன் அழைத்துச்சென்ற மகளை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து, "இருவருமாக வீட்டில் கவனமாக இருந்துகொள்ளுங்கள் ,பகல் சாப்பாடு சமைத்து வைத்திருக்கிறேன், உரிய நேரத்திற்கு சாப்பிடுங்கள் ,நான் வேலைக்கு சென்று வருகிறேன் , சிலவேளை அம்மா இந்தியாவிருந்து Call எடுத்தால் பேசுங்கள் எனக்கூறி அவரது கைத்தொலைபேசியையும் பிள்ளைகளிடத்தில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.

வேலைக்கு சென்றிருந்த தந்தை பிற்பகல் 01.30 மணியளவில் Call எடுத்தபோது , பேசிய பிள்ளைகள் பிற்பகல் 03.15 மணியளவில் Call எடுத்த போது எவருமே பேசவில்லையென்ற கவலையுடன் வேலைமுடிந்து பிற்பகல் 04.30 மணிக்கு வீடுவந்தபோது, தனது மகள் குளியலறையில் நீர்நிறைந்த பிளாஸ்டிக் வாளியினுல் தலை அமிழ்ந்த நிலையில் உணர்வற்றுக்கிடப்பதை கண்டதும் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது "மகள் மரணமடைந்திருப்பதை " வைத்தியர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
தங்கையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, அண்ணனும் கூடவே சென்றுமிருக்கிறார்.

உடனடியாக ஏறாவூர் பொலிசாரின் வேண்டுகோளின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற. மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர், சம்பவ இடம்பெற்ற இடத்திலுள்ள ஆதாரங்களை பார்வையிட்டு பின்னர் வைத்தியசாலை சென்று சிறுமியின் பிரேதத்தை பார்வையிட்ட போது , சிறுமியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக கண்டறிந்து, மேற்கொண்டு விசாரணைகளை தொடர, கௌரவ நீதிபதிக்கு விடயத்தை தெரியப்படுத்துமாறு பொலிசாரை பணித்தார்.

விடயமறிந்து 29-05-2026 நாடு திரும்பிய சிறுமியின் தாய், மாலை 06.45 க்கு வீடு வந்தபோது, " குழந்தையின் மரணத்தில் மகனில்தான் சந்தேகமிருப்பதாக விசாரணையாளர் தெரிவித்திருப்பதால், தயவுசெய்து நீயாவது மகனை தனியாக வைத்து கேள் " என்று கணவர் சொன்னதும், திடுக்கிடும் உண்மை வெளியானது.

கைத்தொலைபேசியை தன்னிடம் தருமாறு தங்கையுடன் சண்டைபோட்ட எனக்கு, தங்கை கையில் அடித்ததால், கோபமடைந்த நான் பதிலுக்கு நானும் அடித்து ,கீழே தள்ளி கைகளால் கழுத்துத்தை நெரித்து பிடித்தபோது மயக்கமாகிவிட்டார். அதன் பின்னர் பயம் காரணமாக நானே தங்கையை தூக்கிக்கொண்டு குளியலறையில் பிளாஸ்டிக் வாளிக்குள் தண்ணீரை நிரப்பி, அதனுல் சோப் ஒன்றையும் போட்டு தங்கையை நீரில் அமிழ்ந்தவாறு வைத்துவிட்டு, பாடத்துக்கு செல்வதுபோல் சென்றுவிட்டேன் ...என்ற அதிர்ச்சி தகவலை சொன்னதும் ஏறாவூர் பொலிசாருக்கு பெற்றோர் விடயத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணைகளை பொலிசார் தொடங்கினர்.

கௌரவ பதில் நீதிபதியின் கட்டளைக்கமைவாக சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று நடைபெற்ற போது (30/05) ," கைகளால் கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட மரணமே " என கண்டறியப்பட்டு , சிறுமியில் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவன் , "சிறுவர் நன்னடத்தை பிரிவில்" ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

கைத்தொலைபேசிக்காக. முரண்டு பிடிக்கும் நமது குழந்தைகள் விடயத்திலும் கவனமாகயிருப்போம்.

26/05/2026

இஸ்திஃபார், துஆப் பற்றிய பயான்
அறபா மைதானத்திலிருந்து

26/05/2026

இஸ்திஃபார், திக்ர்
அறபா மைதானத்திலிருந்து

Address

Ladies School Road
Eravur
30300

Alerts

Be the first to know and let us send you an email when ETN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share