ETN News

ETN News Your trusted source for reliable news across the Eastern Province and island-wide. Stay informed with timely updates and exclusive stories that matter.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் விவசாயி மரணம் .சம்மாந்துறை பொலிஸார் விசாரணை ! (நூருல் ஹுதா உமர்)சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்க...
07/09/2025

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் விவசாயி மரணம் .
சம்மாந்துறை பொலிஸார் விசாரணை !

(நூருல் ஹுதா உமர்)

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சம்மந்துறை மல் ஆறாம் வீதியை சேர்ந்த அப்துல் மஜீத் (வயது 60) காலமானார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை - மல்வத்தை பகுதியில் அமைந்திருக்கும் புதுக்காடு என்று அழைக்கப்படும் காணிக்குள் இயற்கை உரம் இடுவதற்கு சென்ற போது நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக சம்மந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பான விசாரணையை சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹீர் முன்னெடுத்ததுடன் ஜனாஸாவை குடும்பத்தாரிடம் கையளித்தார். இது தொடர்பிலான மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

மட்டக்களப்பில்  #மதுபோதையில் ரயில் வருபோது  #தண்டவாளத்தில் தலையை வைத்து தூங்கியவரின் தலை  துண்டாக்கப்பட்ட நிலையில் உயிரி...
07/09/2025

மட்டக்களப்பில் #மதுபோதையில் ரயில் வருபோது #தண்டவாளத்தில் தலையை வைத்து தூங்கியவரின் தலை துண்டாக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற இரவு கடுகதி புகையிரதம் ஜீவபுரம் பகுதியில் நேற்று (6) இரவு புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

சந்திவெளி ஜீவநகர் பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மது போதையில் தண்டவாளத்தில் தலையினை வைத்து தூங்கியதினால் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்

சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில்
காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மு.கோகிலதாசன்.

ஜனாதிபதி தலைமையில் சியம்பலாண்டுவ “ரிவிதனவி” சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள்  ஆரம்பம்தேசிய கட்டமைப்பிற்கு ஆண்டுதோ...
06/09/2025

ஜனாதிபதி தலைமையில் சியம்பலாண்டுவ “ரிவிதனவி” சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்
தேசிய கட்டமைப்பிற்கு ஆண்டுதோறும் 219 ஜிகாவொட் மணிநேரப் பங்களிப்பு.

2030 ஆம் ஆண்டுக்குள் இந்நாட்டின் தேசிய மின்சாரத் தேவைகளில் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தியின் மூலம் பூர்த்தி செய்யும் இலக்கை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக,
இந்நாட்டில் நிர்மாணிக்கப்படும் மிகப் பாரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டமான சியம்பலாண்டுவ “ரிவிதனவி” சூரிய சக்தி பூங்காவின் நிர்மாணப் பணிகள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய மின் கட்டமைப்பில் 100 மெகாவொட் திறனை சேர்க்கும் இந்தப் பாரிய திட்டத்திற்கான முதலீடு 140 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவின் கொட்டியாகல கிராம அலுவலர் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படும் இந்தத் திட்டம், நிலைபெறுதகு வலு அதிகாரசபை ஊடாக திட்டத் தளம், பிரவேச வீதி மற்றும் குறித்த அனைத்து அனுமதிகளுடன் திட்ட முதலீட்டாளருக்கு வழங்கிய முதல் திட்டமாகும்.
இந்நாட்டின் வருடாந்த மின்சார நுகர்வு 15,000-16,000 ஜிகாவொட் மணிநேரங்களாக உள்ளதுடன், இந்தத் திட்டம் ஆண்டுதோறும் 219 ஜிகாவொட் மணிநேரங்களை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கும். இதன் மூலம் மின்சார உற்பத்திக்கான டீசல் இறக்குமதிக்காக ஆண்டுதோறும் 21 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை சேமிக்க முடியும். இதன்படி, ஒரு ஏக்கரில் இருந்து சுமார் 41 மில்லியன் ரூபா அந்நிய செலாவணி நாட்டுக்கு சேமிக்கப்படும்.

இந்நாட்டின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் நிலைபெறுதகு வலுசக்தித் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லாக இருக்கும் ரிவிதனவி திட்டம் காரணமாக, வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் கார்பனீரொக்சைட்டின் அளவு, ஆண்டுக்கு சுமார் 150,000 மெட்ரிக் டொன்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் 12 மெகாவொட் மணிநேர பேட்டரி சேமிப்பு வசதிகளையும் கொண்டிருப்பதால், தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதில் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த சூரிய சக்தி பூங்காவிற்கு மேலதிகமாக, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, உற்பத்தி கட்டமைப்புடன் இணைக்க 27 கிலோமீட்டர் நீளமுள்ள 132 kV புதிய மின் பரிமாற்ற கட்டமைப்பும் நிர்மாணிக்கப்படுவதோடு, முதலீட்டாளர் ஒருவர் பரிமாற்ற கட்டமைப்பை உருவாக்கும் இந்நாட்டின் முதல் வலுசக்தி திட்டமும் இதுவாகும். அதேபோன்று, மொனராகலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் புதிய 132 kv கிரிட் துணை மின் நிலையமும் இதில் அடங்கும்.

சர்வதேச தரத்திற்கு ஏற்ப நிர்மாணிக்கப்படும் இந்த திட்டம், லக்தனவி நிறுவனம் மற்றும் விண்ட்ஃபோர்ஸ் (WindForce PLC) நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான “ரிவிதனவி” தனியார் நிறுவனத்தால் செயல்படுத்தப்படுவதோடு, இந்நாட்டின் வலுசக்தி சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உருவாக்கும் வகையில் திட்டப் பணிகள் 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்துடன் இணைந்த வகையில், பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பல்வேறு சமூக நல நிகழ்ச்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

அவற்றில் உயர்தர மாணவர்களுக்கான "ரிவி நெண" புலமைப்பரிசில் திட்டம், கொடியாகல அக்கர சீய மற்றும் கம்மல்யாய நீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் நூற்று முப்பத்தைந்து வீடுகளை உள்ளடக்கிய வகையில் நீர் வசதிகளை வழங்கும் திட்டம், முத்தாவல குளத்தை (முத்தகண்டிய குளம்) புனர்நிர்மாணம் செய்தல், எத்திமலை இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையில் இயங்கும் தொழில்துறை மின் தொழில்நுட்ப வல்லுநர் பாடநெறியை NVQ Level 4 ஆக மேம்படுத்துவதற்கான வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சித் திட்டங்கள் இதில் அடங்கும்.

நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, இந்த திட்டம் இந்நாட்டின் வலுசக்தி துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாகும் என்றார். மேலும், இந்த திட்டம் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறையில் நிரூபித்த ஒரு சந்தர்ப்பமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டில் வலுசக்தி பாதுகாப்பு குறித்த அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, முதலீட்டாளர்களின் ஆதரவு மற்றும் அனுபவத்துடன் இந்த திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதே நோக்கம் என்று தெரிவித்த அமைச்சர் குமார ஜயகொடி, தற்போதைய அரசாங்கம், கூறியதை செயலில் காட்டும் அரசாங்கம் என்றும், இந்நாட்டின் வலுசக்தித் துறையின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் வலியுறுத்தினார்.

நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டாரவும் இதன்போது தனது கருத்துக்களைத் தெரிவித்ததுடன், நமது நாட்டில் வலுசக்தி சுதந்திரத்தை அடைய போதுமான வலுசக்தி மூலங்கள் உள்ளன என்றும், அந்த வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம், வலுசக்தி சுதந்திரத்தை அடைந்தால் வலுசக்தி பாதுகாப்புக் கொண்ட ஒரு நாடு உருவாக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய பொறிமுறையின்படி, இதுபோன்ற ஒரு திட்டத்திற்கான அனுமதிகளை சுமார் 12 நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும் என்றும், கடந்த 6-9 மாதங்களாக ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இந்தச் செயல்முறையை விரைவுபடுத்த பெரும் ஆதரவை வழங்கியுள்ளன என்றும் கூறிய அவர், முதலீட்டாளர்களுக்காக ஒரே கூரையின் கீழ் இந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான முறையான பொறிமுறைக்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவும், பரிந்துரைகளை வழங்கவும் தயாராக இருப்பதாக மேலும் தெரிவித்தார்.

ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட, உள்ளிட்ட பிரதேச அரசியல் பிரதிநிதிகள், மொனராகலை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், மின்சார சபை மற்றும் நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் அதிகாரிகள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழாதேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (05...
06/09/2025

ஜனாதிபதியின் தலைமையில் தேசிய மீலாதுன் நபி விழா

தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (05) பிற்பகல் அம்பலாந்தோட்டை, மெலே கொலனி கிராமத்தில், மஸ்ஜிதுல் அரூஸியா ஜும்ஆ பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்றது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இஸ்லாமிய மதத் தலைவர் முஹம்மது நபியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்த தேசிய விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பிரதேசத்தின் மகா சங்கத்தினர் உட்பட அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களின் ஆதரவும் பங்களிப்பும் இதற்கு கிடைத்திருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

2025 தேசிய மீலாதுன் நபி விழாவிற்காக வெளியிடப்பட்ட நினைவு முத்திரை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் கலாசார மற்றும் வரலாற்றுப் பெறுமதியை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்ட "ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் வரலாறு மற்றும் வளர்ச்சி" என்ற நூலும் வழங்கி வைக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி பயிலும் இன, மத பேதமின்றி அனைத்து மாணவர்களிடையே இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட சித்தரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பங்கேற்றார்.

2025 தேசிய மீலாதுன் நபி விழாவில் பங்கேற்றதற்காக ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம் மக்களும் முஸ்லிம் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாக சபையும் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசையும் வழங்கின.

இலங்கையின் ஹஜ் யாத்திரை ஒதுக்கீட்டை மேலும் அதிகரிப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக, இந்த விழாவில் உரையாற்றிய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார். அதன்படி, இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களின் ஹஜ் யாத்திரைக்காக செலவிட வேண்டிய தொகையைக் குறைக்கவும், யாத்ரீகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் இரங்கலையும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், அமைதி, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துதல் ஆகியவை நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல்கள் என்றும் குறிப்பிட்டார்.

அனைத்து மக்களிடையேயும் அமைதியும் நல்லிணக்கமும் நிலைநாட்டப்படும் ஒரு அழகான நாடு என்பதே தற்போதைய அரசாங்கத்தின் அபிலாஷை என்று சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், 2025 தேசிய மீலாதுன் நபி விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு அப்பகுதி மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கியதை நினைவு கூர்ந்ததுடன், இந்த ஒற்றுமை ஒரு அழகான நாட்டின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.

மகா சங்கத்தினர் மற்றும் மதத் தலைவர்கள், பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி,புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் நிஹால் கலபத்தி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி. சேனாதீர, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் ஆகியோருடன் அரச அதிகாரிகள், வெளிநாட்டு தூதுவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஏறாவூர் தாமரைக்கேணி உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர்களை ஒன்றினைத்து  வொலிபோல் போட்டி ஒன்று அமைப்பின் ச...
06/09/2025

ஏறாவூர் தாமரைக்கேணி உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர்களை ஒன்றினைத்து வொலிபோல் போட்டி ஒன்று அமைப்பின் செயலாளர் CM.றிபான் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது .

தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் மேற்படி நிகழ்வில் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

மிச்நகர் பிரதேசத்திற்கு விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்து தரும்படி கோரி மஹஜர் ஒன்றும் இதன்போது கையளிக்கப்பட்டது.

உமர் அறபாத்
ஏறாவூர் .

பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அஞ்சலிக்காக தங்காலை மாநகர சபையில் வைக்கப்பட்டுள்ளது.எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏ...
06/09/2025

பஸ் விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அஞ்சலிக்காக தங்காலை மாநகர சபையில் வைக்கப்பட்டுள்ளது.

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுவரை 10 பேரின் உடல்கள் நகர சபைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்காலை பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணமாக சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற பஸ், நேற்று முன்தினம் (04) எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் 24வது கிலோ மீற்றர் தூண் அருகே உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் தங்காலை நகர சபை செயலாளர் டி.டபிள்யூ. கே. ரூபசேன உட்பட நகர சபையின் 12 ஊழியர்கள், 2 குழந்தைகள் மற்றும் பஸ் சாரதி ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 18 பேர் பதுளை போதனா வைத்தியசாலை, பண்டாரவளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் அப்ரார் பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் கந்தூரி நிகழ்வு இன...
06/09/2025

மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் அப்ரார் பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் கந்தூரி நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது .

04/09/2025

மட்டு.வேப்பவட்டுவான் மெதடிஸ்த திருச்சபை தேவாலயத்தின் ஏற்பாட்டில் வீதிப்பவணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள்.

#செய்தியாளர்
உமர் அறபாத் .

04/09/2025

ஏறாவூர் கடற்றொழில் மீன் விற்பனையாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா.

#செய்தியாளர்
உமர் அறபாத் .

04/09/2025

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளையின் வழிகாட்டலில் ரபிஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு மஸ்ஜிதுல் பரகா ஜும்ஆ பள்ளிவாயல் 11 நாட்கள் தொடராக நடாத்தி வந்த பயான் நிகழ்வின் 12வது இறுதி நாள் நிகழ்வு தற்போது பள்ளிவாயலில் இடம்பெற்று கொண்டிருக்கிறது .

உரை நிகழ்த்துகின்றார்.
அஷ்ஷேய்க் அல்ஹாபிழ் மௌலவி எம்.சுக்ரி(நிழாமி)

இன்று வியாழக்கிழமைமிச்நகர்  மஸ்ஜிதுல் பரகா ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறும் பயான் நிகழ்வினை ETN News  ஊடாக இன்ஷா அல்லாஹ்  ந...
04/09/2025

இன்று வியாழக்கிழமை
மிச்நகர் மஸ்ஜிதுல் பரகா ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெறும் பயான் நிகழ்வினை ETN News ஊடாக இன்ஷா அல்லாஹ் நேரலை செய்யப்படும் .

04/09/2025

ஏறாவூர் கடற்றொழில் ,மீன் விற்பனையாளர்கள் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி விழா நிகழ்வு தற்போது ஏறாவூர் நூருஸ்ஸலாம் பள்ளிவாயலில் இடம்பெற்று கொண்டிருக்கிறது .

Address

Ladies School Road
Eravur
30300

Alerts

Be the first to know and let us send you an email when ETN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share