ETN News

ETN News Your trusted source for reliable news across the Eastern Province and island-wide. Stay informed with timely updates and exclusive stories that matter.

Eravur Urban Council முன்னெடுக்கப்படும் தெருவிளக்கு திருத்தத்தினை முன்னிட்டு புன்னைக்குடா வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்ப...
15/07/2025

Eravur Urban Council முன்னெடுக்கப்படும் தெருவிளக்கு திருத்தத்தினை முன்னிட்டு புன்னைக்குடா வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர் மணிக்கூட்டு சந்திக்கு அருகாமையில் தற்போது வேலை இடம்பெற்று கொண்டிருக்கிறது .

பதிவு நேரம்.
7-25 pm

அமானா வங்கியின் ATM, CDM இயந்திரங்கள் அமைக்க பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.றஸ்மி கோரிக்கை. ஏறாவூர்ப்பற்று ஐயங்கேணி, மீ...
15/07/2025

அமானா வங்கியின் ATM, CDM இயந்திரங்கள் அமைக்க பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.றஸ்மி கோரிக்கை.

ஏறாவூர்ப்பற்று ஐயங்கேணி, மீராகேணி, மிச்நகர் ஆகிய வட்டாரங்களிலுள்ள மக்களின் வங்கித்தேவையினை நிறைவேற்ற ஏறாவூர் பற்றில் ATM, CDM பணமீளப்பெறல், பணவைப்பு ஆகிய இயந்திரங்களை பொருத்துதல் சம்பந்தமாக ஏறாவூர் அமானா வங்கியின் முகாமையாளர் முஹம்மது அலி அவர்களுடன் கலந்துரையாடி அதற்கான கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.

இதன் போது, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் கீழுள்ள ஐயங்கேணி, மிச்நகர், மீராகேணி பகுதிகளிலுள்ள மக்கள் பொதுவாக வங்கிச்சேவையினைப் பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக,ஏறாவூர் நகர்ப்பகுதியிலுள்ள எந்தவொரு வங்கியினது சேவையைப்பெறுவதாக இருந்தாலும் 500 ரூபாவுக்கு குறையாத தொகையினை முச்சக்கர வண்டிக்கு செலவழித்து வந்தே பெற்றுக்கொள்ள வேண்டியதாக எமது பிரதேச மக்களின் நிலையுள்ளது என்பதைச்சுட்டிக்காட்டியதோடு, இந்நிலையைக் கருத்திற்கொண்டு ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தை மையப்படுத்தி தங்களது வங்கியினது ATM, CDM பணமீளப்பெறல், பணவைப்பு ஆகிய இரண்டு இயந்திரங்களையும் பொருத்தித்தருமாறு வேண்டிக்கொண்டதோடு, மேலும் பொருத்தமான இடத்தினை அடையாளப்படுத்தி பெற்றுத்தருவதற்கு என்னால் முடியுமான பங்களிப்புகளை வழங்கத்தயாராகவுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.றஸ்மி தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள  பள்ளிவாசலுக்கு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி  அமைச்சர்  முனீர் முலப்பர் நேற்று (14...
15/07/2025

மஹர சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் நேற்று (14) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தப் பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது. மஹர சிறைச்சாலையைச் சுற்றி வசிக்கும் முஸ்லிம் சமூகத்தின் மத நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்ட இந்தப் பள்ளிவாசல், பாதுகாப்பு காரணங்களுக்காக 2019 முதல் மூடப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் சுமார் 300 முஸ்லிம் குடும்பங்களுக்கு தமது மதஅனுஸ்டானங்களை மேற்கொள்ள அருகாமையில் வேறு பள்ளிவால் இல்லாத நிலையில் சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசலில் தங்கள் மத நடவடிக்கைகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கிராம மக்களுடன் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து பிரதி அமைச்சர் கலந்துரையாடல் நடத்தினார்.

கடந்த அரசாங்கங்களுக்கும் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதற்கான தேவையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் வலியுறுத்திய கிராம மக்கள், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாட பிரதி அமைச்சர் மேற்கொண்ட இந்த முயற்சியை பாராட்டினர்.

சிறைச்சாலைக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முஸ்லிம் சமூகத்தினர் இந்தப் பள்ளிவாசலுக்குள் தங்கள் மத அனுஸ்டானங்களை மேற்கொள்ள வாய்ப்பு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி பிரச்சினையைத் தீர்க்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரகீத் மதுரங்க, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் குழு இந்த கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்டனர்.

ගරු ජාතික ඒකාබද්ධතා නියෝජ්‍ය අමාත්‍ය මුනීර් මුලෆ්ෆර් මහතා මහර බන්ධනාගාරය පරිශ්‍රය තුළ පිහිටා ඇති මුස්ලිම් පල්ලිය නිරීක්ෂණය චාරිකාවක් සඳහා අද (14) දින එක්විය.

වසර සියයකට වඩා අතීතයේ සිට පැවත එන මෙම පල්ලිය ඉස්ලාම් ආගම අදහන බන්ධනාගාර නිලධාරීන්ගේ ආගමික කටයුතු සඳහා ඉදිකර තිබුණි. මහර බන්ධනාගාර අවට ජිවත්වන මුස්ලිම් ප්‍රජාවගේද ඇදහීම සඳහා භාවිතා කර තිබූ මෙම ඉස්ලාම් ආගමික දේවස්ථානය ආරක්ෂක හේතූන් මත 2019 වසරේ සිට වසා දමා ඇත.

මෙම ප්‍රදේශයේ අවට ජීවත්වන ඉස්ලාම් ආගම අදහන මුස්ලිම් පවුල් 300ක් පමණ තම ආගම ඇදහීම සිදුකිරීමට සමීප පල්ලියක් නොමැති බව පවසමින් නිරතුරුව මෙම බන්ධනාගාර භූමිය තුල පිහිටා තිබූ පල්ලිය තුල තම ආගමික කටයුතු සිදු කිරීමට අවශ්‍ය කටයුතු සලසා දෙන මෙන් ඉල්ලීම් කරමින් සිටින බැවින් ගරු නියෝජ්‍ය අමාත්‍යතුමා, බන්ධනාගාර නිලධාරීන් සහ ගම්වාසීන් සම්බන්ධ කර ගනිම්න් මෙම ගැටළුව විසදා ගැනීමට ගත හැකි ක්‍රියා මාර්ග පිළිබඳව සාකච්ඡාවක නිරත විය.

පසුගිය කාලසීමාව තුල පැවති රජයන් වෙතින් මෙම ඉල්ලීම සිදුකල නමුත් ඒ සඳහා අවශ්‍ය පියවර කිසිවක් නොගත් බව අවධාරණය කල ගම්වාසීන් සඳහන්කලේ අදාල පාර්ශවයන් සමඟ සාකච්ඡා කිරීමට නියෝජ්‍ය අමාත්‍යවරයා විසින් ගන්නා ලද මෙම උත්සහය ප්‍රසංශනීය බවයි.

මෙහිදී නියෝජ්‍ය අමාත්‍යවරයා සඳහන් කලේ බන්ධනාගාරය තුල සහ අවට පවතින ආරක්ෂාවට තර්ජනයක් නොවන ආකාරයෙන් පල්ලිය තුල තම ආගම ඇදහීම සඳහා මුස්ලිම් ජනතාව වෙත අවස්ථාව සලසා දීමට අවශ්‍ය ක්‍රියාමාර්ග ගැනීම සම්බන්ධයෙන් අදාල බලධාරීන් සමග සාකච්ඡා කර ගැටළුව නිරාකරණය කිරීම සඳහා කඩිනම් පියවර ගන්නා බවයි.

මෙම අවස්ථාවට ගම්පහ දිස්ත්‍රික් පාර්ලිමේන්තු මන්ත්‍රී ප්‍රගීත් මදුරංග මහතා, බන්ධනාගාර නිලධාරීන් සහ අවට ගම්වාසීන් පිරිසක් එක්විය.

மஹியங்கனை கால்வாயினுள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.2 பேர் பலி.
15/07/2025

மஹியங்கனை கால்வாயினுள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.
2 பேர் பலி.

12/07/2025

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.

#செய்தியாளர்
உமர் அறபாத் .

இன்று இடம்பெற்ற மாகாண ரீதியிலான   #எல்லே சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாண சாம்பியனாாக  ஏறாவூர் Ahamed Fareed SC விளையாட...
12/07/2025

இன்று இடம்பெற்ற மாகாண ரீதியிலான #எல்லே சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாண சாம்பியனாாக ஏறாவூர் Ahamed Fareed SC விளையாட்டு கழகம் வெற்றி பெற்றுள்ளது.

இன்று 48வது தேசிய விளையாட்டு விழாவின் குழுநிலை போட்டிகளில் ஒன்றான மாகாண எல்லே போட்டியானது அம்பாறையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதுத்துவப்படுத்தி களம் இறங்கிய ஏறாவூர் அஹமட் பரீட் அணியினர் இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூடி 2025 ஆண்டுக்கான கிழக்கு மாகாண எல்லே சம்பியனாக தெரிவாகியுள்ளனர்..

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் கௌரவ தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்கள் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் ப...
11/07/2025

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் கௌரவ தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்கள் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கந்தசாமி பிரபு அவர்களை அழைத்துச் சென்று நடவடிக்கை.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலை மேம்பாட்டு விடயங்களில் தன்னால் இயலுமான பணிகளை என்றும் செய்து வரும் ஒருவராக கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் அவர்கள்

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அண்மைக்காலமாக நோயாளர்களுக்கான மாதாந்த கிளினிக் தினங்களில் செய்யப்பட்ட மாற்றம் , அதிக நோயாளிகள் வருகை தரும் நிலையில் அதற்கான வசதிகள் சீர் செய்யப்படாமை , புதிதாக அமையப்பெற்று திறக்கப்பட்ட கட்டட தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவை தவிர ஏனைய பிரிவுகள் இயக்கமின்றி உள்ளதால் மேம்பாட்டு விடயத்தில் பின் தங்கிய நிலை என்பன குறித்து கௌரவ நகர சபை உறுப்பினர் அஸ்மி அவர்களால் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து இவ்விடயத்தினை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

கடந்த சனிக்கிழமை தவிசாளரின் அழைப்பை ஏற்று கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்விற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களிடம் வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பாக எடுத்துரைத்ததோடு, வைத்தியசாலைக்கு நேரில் சென்று பதில் வைத்திய அதிகாரி, ஏனைய உத்தியோகத்தர்களிடம் இவ்விடயம் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கந்தசாமி பிரபு அவர்கள் அவ்விடத்தில் இருந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்துமாறு பணிப்புரை விடுத்தார்.

அத்தோடு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்டுள்ள சத்திரசிகிச்சை தொகுதியினையும் பார்வையிட்டதோடு, குறைபாடுகள் குறித்து உடனடி கவனம் செலுத்துமாறும் , இந்த கட்டடத்தின் முழு தொகுதிகளையும் அதற்கான வளங்களை பெற்று இயங்கச் செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் , இதன் மூலமே வைத்திய நிபுணர்கள் உட்பட தேவையான ஆளணியினரையும் பெறுவதன் ஊடாக மக்களுக்கு உச்ச பயனை அளிக்கும் வகையிலான முன்னெடுப்புகளை துரிதமாக மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது

10/07/2025

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் விஷேட செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

#செய்தியாளர்
உமர் அறபாத் .

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஸர்ரப் நியமிக்கப்பட்டுள்ளா...
10/07/2025

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஸர்ரப் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றஊப் ஹக்கீம் அவர்களினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையினால் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கோரி அமைதிப்பேரணி.எஸ்.எம்.எம்.முர்ஷித்.கல்குடா முஸ்லிம்களி...
10/07/2025

கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையினால் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கோரி அமைதிப்பேரணி.

எஸ்.எம்.எம்.முர்ஷித்.

கல்குடா முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையை வெளிக்கொணருமுகமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கல்குடாக்கிளையில் ஏற்பாட்டில் எதிர்வரும் 11.07.2025ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத்தொழுகையின் இடம்பெறும் அமைதிப்பேரணியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையினால் விடுக்கப்பட்டுள்ள அமைதிப்பேரணி அழைப்பில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25.51 வீதமாக வசிக்கின்ற முஸ்லிம் சமூகம் மாவட்டத்தின் 2,633 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் வெறும் 20 சதுர கிலோ மீட்டரான 1 % சத வீதத்திற்குள் சுருக்கப்பட்டு பெரும் அநீதிக்குள்ளாக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வருகிறோம்.

இதற்கு நீதியைப்பெறும் பொருட்டு கடந்த காலத்தில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு சிபாரிசுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றை அமுல்படுத்துவதில் தொடர்ந்தும் பல்வேறு நேரடி மற்றும் மறைமுக தடைகள் இருந்து வருகின்றன.

எமது காணி மற்றும் எல்லைப் பிரச்சினைக்கான நியாயமான தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியமான அரசியல் சூழலொன்று நாட்டில் நிலவுவதாக பல்வேறு தரப்பினரும் கருதுவதால் எமது பிரச்சினையினை சமூக மயப்படுத்தி மாவட்ட மற்றும் மத்திய அரச நிருவாத்திற்கு தெரியப்படுத்தி அழுத்தம் கொடுக்கும் நோக்கில் எமது பிரதேசம் தழுவிய பாரிய அமைதிப்பேரணியொன்றினை எதிர்வரும் 11.07.2025ம் திகதி வெள்ளிக்கிழமை ஜூம்ஆ த்தொழுகை நிறைவடைந்தவுடன் நடாத்துவதற்கு 08.07.2025 ஆம் திகதி கல்குடா ஜம்இய்யதுல் உலமாவின் ஒருங்கிணைப்பில் பிரதேசத்தின் பிரதான ஜூம்ஆ பள்ளிவாயலின் தர்ம கர்த்தாக்கள், கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைகளின் கௌரவ உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வர்த்தக சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எனவே, மேற்படி அமைதிப்பேரணியினை எமது சமூகத்தின் நன்மையினைக் கருத்திற்கொண்டும் இன நல்லுறவை அடிப்படையாக வைத்தும் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வினயமாக வேண்டிக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வையற்றோருக்கான அரிய சாதனத்தைக் கண்டுபிடித்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் அன்சக் அஹமட் .(SMM.முர்சித்)பார்வையற்றோர்...
10/07/2025

பார்வையற்றோருக்கான அரிய சாதனத்தைக் கண்டுபிடித்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் அன்சக் அஹமட் .

(SMM.முர்சித்)

பார்வையற்றோர் சுமார் 1/2 மீற்றர் தூரத்திலுள்ள பாதிப்பு தரும் ஒலி எழுப்புவதனூடாக பொருளைக் கண்டறியக்கூடிய Smart Blind Stick என்ற அரிய சாதனமொன்றை ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தரம் 9E இல் கல்வி பயிலும் மாணவன் நபவி அன்சக் அஹமட் கண்டுபிடித்துள்ளார்.

இவர் ஓட்டமாவடி-01 ஐச்சேர்ந்த எம்.ஐ.நபவி மற்றும் மீராவோடை அமீர் அலி வித்தியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.பர்சானா தம்பதிகளின் புதல்வராவார்.

காரைதீவு தவிசாளரை சந்தித்த மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் - பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த சபை !மாளிகைக்காடு செய்த...
10/07/2025

காரைதீவு தவிசாளரை சந்தித்த மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் - பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த சபை !

மாளிகைக்காடு செய்தியாளர்

மாளிகைக்காடு பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய மாளிகைக்காடு மக்களின் சார்பில் மாளிகைக்காடு தலைமை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களுக்கும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று காரைதீவு பிரதேச சபையில் இடம்பெற்றது.

மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் செயலாளர் நூருல் ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. பௌசர் தலைமையில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனை சந்தித்த மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் மாளிகைக்காடு மையவாடி புனரமைப்பு, மின்விளக்கு பொருத்துதல் மற்றும் திருத்துதல், திண்மக்கழிவு முகாமைத்துவம், சமூக நல்லிணக்கம் தொடர்பில் கலந்துரையாடினர். இதன்போது காரைதீவு பிரதேச சபை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பில் காரைதீவு பிரதேச சபை உபதவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் உதவித்தலைவரும், முன்னாள் உப தவிசாளருமான ஏ.எம். ஜாஹீர், பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம்.ரணீஸ், மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஆலோசகர் எம்.ஐ. இஸ்திகார், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ், முன்னாள் உப தலைவர் யூ.எல். செய்னுலாப்தீன், நம்பிக்கையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when ETN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share