ETN News

ETN News Your trusted source for reliable news across the Eastern Province and island-wide. Stay informed with timely updates and exclusive stories that matter.

ஏறாவூர் மண்ணில், *மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்* 🗓️திகதி:15 & 16 ஆகஸ்ட் 2026(சனி & ஞாயிறு)⏰ நேரம்:காலை 10....
11/08/2026

ஏறாவூர் மண்ணில்,

*மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்*

🗓️திகதி:
15 & 16 ஆகஸ்ட் 2026
(சனி & ஞாயிறு)

⏰ நேரம்:
காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

📍 இடம்:
அல் அஸ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலை, ஏறாவூர்

📚 பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள்
🧒 சிறுவர் மற்றும் இளையோர் நூல்கள்
📘 கல்வி, அறிவியல் மற்றும் பொது அறிவு வெளியீடுகள்
📖 இஸ்லாமிய நூல்கள்
✨ மேலும் பல தரமான நூல்கள் ஒரே கூரையின் கீழ்!

🎁 மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், வாசிப்பு ஆர்வலர்கள் மற்றும் வாசிப்பை நேசிக்கும் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை கூடியது.போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து சப...
11/08/2026

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை கூடியது.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து சபையின் கவனம்

போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அத்துடன் நின்றுவிடாமல் அந்த நிலைமை அதிகரித்து வருகின்றமை குறித்து கவனம் செலுத்தி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபையில் கவனம் செலுத்தப்பட்டது.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்படும் எல்லையற்ற செல்வத்துடன் தொடர்புடைய குற்றவியல் சூழலானது தற்போது பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத்துறைக்கும், சமூக ஒழுக்க நெறிக் கட்டமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றங்கள் தொடர்பில் அஞ்சும் சமூகத்தை உருவாக்குவதற்காக, கடுமையான விதிகளைச் செயற்படுத்த வேண்டிய அவசியமும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையில் கலந்துரையாடப்பட்டது.

முழு சமூக கட்டமைப்பையும் வீழ்ச்சியடையச் செய்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரைப் பலிகொண்டிருக்கும் போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிப்பதற்காக நாட்டில் நடைமுறைச் செயற்பாடும், வேகமான கருத்தியல் மாற்றமும் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தீவிர பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்த தேசியப் பேரழிவின் ஆழத்தை உணர்ந்து, நிறுவன கட்டமைப்பினுள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றம் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்கும் முறைமை தொடர்பான சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே வரைவின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், அது விரைவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் வழக்குகள் தாமதமாவதற்குக் காரணமான அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கும் செயற்பாடுகளை குறிப்பிடத்தக்க அளவில் விரைவுபடுத்தி உள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமானதன் காரணமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்குரிய சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகளுக்கேற்ப (5 கிராமுக்குக் குறைவு, 10 கிராமுக்குக் குறைவு போன்றவாறு) குறிப்பிட்ட தரவு வகைப்படுத்தலைச் சமர்ப்பிக்குமாறும், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை ஆகியவற்றுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முறையான செயற்பாடு ஒன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவதற்கும் அதன் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்ததுடன், ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கடற்படையின் உதவி பெறப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டது. பாதுகாப்புக் கேமரா தொகுதியைப் பொருத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

சிறைச்சாலைகளில் தற்பொழுது உள்ள நிலைமை குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை, குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதம் 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

சிறைக்கைதிகள் வன்முறையாக நடந்து கொள்வதைக் குறைப்பதற்காக, அதிகளவில் மனநல மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வுச் சட்டத்தின் திருத்த வரைபை விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், சட்டவரைவுத் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் இணைத்து செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

பாடசாலைக் கட்டமைப்பில் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக, கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளால் கூட்டாகச் செயல்படுத்தப்படும் 'மிதுரு பாடசாலை' வேலைத்திட்டத்தின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன். மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தும் பிள்ளைகளைக் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டுவதில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆலோசகர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

அதிக போதைப்பொருள் அபாயம் மற்றும் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், சர்வதேசப் பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என்பதும் இங்கு தெரியவந்ததுடன், தேசிய செயற்பாடு சபை இது குறித்து விசேட கவனம் செலுத்தியது.

பிள்ளை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துக் கொள்ளும் வகையில் போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளை மருந்தகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது என்றும், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து கவனத்துடன் இருப்பதன் முக்கியத்துவமும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப்பொருட்களை ஊக்குவிக்கும் குழுக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், போதைப்பொருளுக்கு எதிரான கருத்துக்களைச் சமூகமயமாக்குவதற்குச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை, புனர்வாழ்வுப் பணியகம், இலங்கை பொலிஸ், முப்படையினர், சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் “சமூக சக்தி” வேலைத்திட்டம் ஆகியவை இணைந்து போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், ஆரம்ப கட்டத்திலேயே இனங்காணுதல், புனர்வாழ்வளித்தல், சட்டத் திருத்தம் மற்றும் நிறுவன மாற்றங்களை மேற்கொள்ளுதல், மீண்டும் தைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுத்தல், தொடர் கண்காணிப்பு, திட்டமிடல் ஒழுங்குபடுத்தல், மீளாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடல் ஆகிய திருத்தப்பட்ட 06 வழிமுறைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பல்தரப்பு தேசிய மூலோபாயத் திட்டத்தின்படி, நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்  அமைச்சு தொடர்பான 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜ...
07/08/2026

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு தொடர்பான 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்.........

கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்கள PSDG வேலைத் திட்டத்தின் கீழ்  நிதி உதவி இன்று வழங்கி வைக்கப்பட்டது. இதற்கமைய காத்தான்க...
06/08/2026

கிழக்கு மாகாண சமூகசேவைத் திணைக்கள PSDG வேலைத் திட்டத்தின் கீழ் நிதி உதவி இன்று வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கமைய காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(06) வியாழக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

காத்தான்குடி பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் SAC.நஜிமுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.

நீர் இணைப்பு, மின்சாரம், வீடு திருத்தம், மலசலகூட அமைப்பு போன்றவைகளுக்கு
ரூபாய் 100,000.00 ஒதுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட நிதியாக தலா ஐம்பது ஆயிரம் பதினொரு நபர்களுக்கு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது பிரதி திட்டமிடல் திருமதி ஹன்சுல் சிஹானா, அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர், பயனாளிகள் என பலரும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலைப் பருவத்தின் முதலாம் கட்டம் நிறைவடைதல் மற்றும் இரண்டாம் கட்டம் ஆரம்பமாதல்.2026-ஆம் ஆண்டிற்...
06/08/2026

பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலைப் பருவத்தின் முதலாம் கட்டம் நிறைவடைதல் மற்றும் இரண்டாம் கட்டம் ஆரம்பமாதல்.

2026-ஆம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் பாடசாலைப் பருவத்தின் முதலாம் கட்டம் நிறைவடைதல் மற்றும் இரண்டாம் கட்டம் ஆரம்பமாதல்.

2026 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம். சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு 2026.08.07 வெள்ளிக்கிழமை அன்றும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2026.09.02 புதன்கிழமை அன்றும் முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிக்கை வௌியிட்டுள்ளது.

அத்துடன், அனைத்துப் பாடசாலைகளுக்குமான மூன்றாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.09.07 திங்கட்கிழமை ஆரம்பமாகி 2026.12.04 வெள்ளிக்கிழமை முடிவடையும்.

இதேவேளை, 2026 க.பொ.த. (உயர்தர) பரீட்சை ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று எச்சரிக்கைவானிலை ஆய்வுத் துறையின் இயற்கை அனர்த்த முன் எச்சரிக்கை நிலையத்தால் வெளியிடப்பட்டது06 ஆகஸ்ட் 2026 ...
06/08/2026

பலத்த காற்று எச்சரிக்கை
வானிலை ஆய்வுத் துறையின் இயற்கை அனர்த்த முன் எச்சரிக்கை நிலையத்தால் வெளியிடப்பட்டது
06 ஆகஸ்ட் 2026 அன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்டு, 07 ஆகஸ்ட் 2026 அன்று காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

கிழக்கு ஊடகவியலாளர்கள் இனம், மதம் கடந்து சகோதர வாஞ்சையோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: சிலோன் மீடியா போரத்தின் தலைவர் ற...
03/08/2026

கிழக்கு ஊடகவியலாளர்கள் இனம், மதம் கடந்து சகோதர வாஞ்சையோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் வலியுறுத்து!

(பாறுக் ஷிஹான்)

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் இன நல்லிணக்கத்தோடும் நன்னெறி பண்புகளுடனும், சமூக வாஞ்சையுடனும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் வலியுறுத்தினார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும், அரச சார்பற்ற நிறுவனங்களையும், ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதற்காக அரசாங்கம் கொண்டுவர இருக்கின்ற சட்ட வரைவு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்களிக்கும் செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (02.08.2026) விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வடிவேல் சக்திவேல் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியர் விடுதியில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் கலந்து கொண்டு
உரையாற்றும்போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

"ஊடகத்துறை என்பது வெறும் செய்தி சேகரிப்பதோடு நின்றுவிடுவதில்லை. அது சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஒரு உன்னதமான பணியாகும். எனவே, கிழக்கு ஊடகவியலாளர்கள் தங்களுக்குள் இருக்கும் இன, மத பேதங்களை மறந்து, சமூகப் பொறுப்புணர்வோடும் நட்புறவோடும் சகோதரத்துவ வாஞ்சையோடும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்."

எதிர்கால ஊடகத்துறையின் வளர்ச்சி மற்றும் தரம் குறித்துப் பேசிய கலாநிதி றியாத் ஏ. மஜீத், உயர்கல்வித் துறையில் ஊடகவியல் சார்ந்த மாற்றங்கள் நிகழ வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் ஊடகத்துறை சம்பந்தமான முறையான பட்டப்படிப்புகள் பல கல்லூரிகளில் ஆரம்பிக்கப்பட்டு, அவை பல்கலைக்கழகங்கள் ஊடாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் இதன் போது முன்வைத்தார்.

இவ்விடயம் குறித்து சசல ஊடக அமைப்புக்களும் ஒருமித்த கருத்தில் நாட்டின் கல்வி உயர்கல்வி அமைச்சருக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, சிலோன் மீடியா போரத்தின் ஏழாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும் மயோன் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் 40 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு மயோன் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்தின் அனுசரணையில், கொழும்பு சென்று வருவதற்கான ஒரு வழிப் பாதைக்கான 50% தள்ளுபடி கிப்ட் வவுச்சர்கள் (Gift Vouchers) இங்கு வழங்கி வைக்கப்பட்டன.

இதில் சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கொழும்பு – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டதுபாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக, கடுகண்ணாவை மற்றும் கணேத்தென்ன...
03/08/2026

கொழும்பு – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

பாறைகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக, கடுகண்ணாவை மற்றும் கணேத்தென்ன பகுதிகளுக்கு இடையிலான கொழும்பு – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மறு அறிவிப்பு வெளியாகும் வரை, அந்த வழித்தடத்தை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஷுஹதாக்களின் தியாகம் முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும் கண்ணியத்தையும் பாதுகாத்தது; முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாப்பையு...
03/08/2026

ஷுஹதாக்களின் தியாகம் முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும் கண்ணியத்தையும் பாதுகாத்தது; முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வுக்கே ஆதரவு..!

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தல்.
-----------------------------------------

காத்தான்குடி ஹுசைனியா ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று (03) நடைபெற்ற 36வது தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத, மனிதாபிமானப் பேரவலமாகும் எனத் தெரிவித்தார்.

வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட அந்தக் கொடூரமான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் ஷஹீத்களாகியதோடு, பலர் உடல் உறுப்புகளை இழந்து வாழ்நாள் முழுவதும் அதன் வலியோடு வாழ்ந்து வருகின்றனர் எனக் குறிப்பிட்ட அவர், எந்தவித குற்றமும் செய்யாத நிலையில் முஸ்லிம்கள் என்பதற்காக மட்டுமே அவர்கள் இலக்காகக் கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

"அந்த ஷுஹதாக்கள் சிந்திய இரத்தம்தான் இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் தமது பூர்வீக மண்ணில் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது. அவர்களின் தியாகத்தை என்றும் நன்றியுடனும் மரியாதையுடனும் நினைவுகூர வேண்டும், அவர்களது குடும்பங்களுக்காக தொடர்ந்தும் பிரார்த்திக்க வேண்டும்.

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் பாரிய இழப்புகளும் மன்னிக்கப்பட்டாலும் மறக்கப்படக்கூடாது என்றும், அவற்றை எதிர்கால தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடமாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு சமூகத்தின் தியாக வரலாறு முழுமையாகத் தெரியாத நிலை காணப்படுகிறது. பல ஆயிரம் உயிர்களையும் எண்ணிலடங்கா சொத்துக்களையும் இழந்த முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றை நினைவூட்டும் தேசிய நினைவு நாளாக காத்தான்குடி ஷுஹதாக்கள் ஞாபகார்த்த தினம் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார்.

மேலும், இந்த நினைவேந்தல் நிகழ்வை பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் காத்தான்குடி தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தினருக்கு அவர் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

நாட்டில் அனைத்து சமூகங்களுடனும் நல்லிணக்கத்துடனும் அமைதியுடனும் வாழ்வதற்கே முஸ்லிம் சமூகம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்த அவர், இனி ஒருபோதும் இத்தகைய மனிதாபிமானப் பேரழிவுகள் மீண்டும் நிகழாத வகையில் நீதி, பாதுகாப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை நிலைநாட்டப்பட வேண்டும் என்றார்.

அதேவேளை, நாட்டில் முன்வைக்கப்படும் எந்தவொரு அரசியல் தீர்வாக இருந்தாலும் அது முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு, இருப்பு, நில உரிமைகள் மற்றும் பாரம்பரிய வாழ்விடங்களை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைய வேண்டும் என வலியுறுத்திய அவர், அவ்வாறான தீர்வுகளுக்கே முஸ்லிம் சமூகம் தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களின் உரிமைகளை எவருக்கும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தியதோடு, எந்த அரசியல் தீர்வும் நிலையானதாகவும் நீதியுடனும் அனைத்து மக்களுக்கும் சமமான பாதுகாப்பை வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

அரச நிர்வாகங்களின் சில நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் கவலை வெளியிட்டார். பல நூற்றாண்டு வரலாற்றுச் சான்றுகளைக் கொண்ட ஹுசைனியா பள்ளிவாசல் உள்ளிட்ட மத மற்றும் பாரம்பரிய சொத்துக்கள் தொடர்பிலும், மஞ்சந்தொடுவாய் போன்ற பகுதிகளில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் காணிகள் தொடர்பிலும் உரிய வரலாற்று மற்றும் சட்ட ஆவணங்கள் மதிக்கப்பட வேண்டிய அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சமூக நீதியை உறுதிப்படுத்தும் வகையிலான அதிகாரப் பகிர்வும் சட்டப் பாதுகாப்பும் ஏற்படுத்தப்படும்போதுதான் நிலையான அமைதியும் நிம்மதியும் நாட்டில் உருவாகும் எனக் குறிப்பிட்ட அவர், ஷுஹதாக்களின் தியாகம் எதிர்கால சந்ததியினரின் பாதுகாப்பான வாழ்விற்கான பொறுப்புணர்வை மீண்டும் நினைவூட்டுகின்றது என்றும் தெரிவித்தார்.

உரையின் நிறைவில், ஷுஹதாக்களின் உயரிய தியாகத்தை நினைவுகூர்ந்து அவர்களுக்காக விசேட பிரார்த்தனைகளை மேற்கொண்டதுடன், இந்த நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குபடுத்திய காத்தான்குடி ஷுஹதாக்கள் நிறுவனம் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வு பெற்றவர்கள்  குடும்பத்தினருடன் இணையும் நிகழ்வு.மட்டக்களப்பு மாவட...
03/08/2026

மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வு பெற்றவர்கள் குடும்பத்தினருடன் இணையும் நிகழ்வு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மூன்றாவது கட்ட குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்கள் குடும்பங்களுடன் இணையும் நிகழ்வு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள குறுகியகால புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெற்றது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி ப.தினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் "முழு நாடுமே ஒன்றாக – தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு செயற்றிட்டம்" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புனர்வாழ்வு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குறுகியகால சிகிச்சை உளவியல் ஆலோசனைகள் நடத்தை மாற்றப் பயிற்சி தொழில்திறன் மேம்பாடு மற்றும் சமூகத்தில் மீள இணைவதற்கான புனர்வாழ்வு சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
"நீங்கள் தனியாக இல்லை – நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் இங்கே மாற்றம் உருவாகிறது" என்ற தொனிப்பொருளின் கீழ் இயங்கிவரும் இவ் நிலையம் இலங்கையில் தமிழ் மொழி மூலமாக முழுமையான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் முதல் மத்திய நிலையமாகத் திகழ்கிறது.

இதன் போது மூன்றாவது கட்ட பயிற்சியை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடனும் தன்னம்பிக்கையுடனும் மீண்டும் இணைவதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அதிகாரிகள் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீண்டவர்களை சமூகத்தில் புறக்கணிக்காமல் அவர்களுக்கு புதிய வாழ்க்கையை உருவாக்குவதற்கான ஆதரவை குடும்பத்தினரும் சமூகமும் வழங்க வேண்டியதன் அவசியம் என இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இதன் போது புனர்வாழ்வு என்பது சிகிச்சையுடன் முடிவடையும் செயல்முறை அல்ல சமூகத்தில் நிலையான வாழ்க்கையை உருவாக்கும் தொடர்ச்சியான பயணமாகும் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தற்போதைய அரசாங்கமானது போதைப்பொருள் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதனால் கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக சுமார் 2,90,000 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி. எம். ரசாட், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜரூள், காத்தான்குடி, ஆயித்தியமலை, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்றவர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், கலைப்பணிகள் மற்றும் தொழிற்பயிற்சி ஆக்கங்கள் கண்காட்சிக்காக காட்சிப்படுத்தப்பட்டன.

இப்பயிற்சிகள் மூலம் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்து சுயதொழில் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான திறன்களும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் அல்லது முறைப்பாடுகளை பொதுமக்கள் 1927 என்ற உதவி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என்பதும் இந்நிகழ்வில் நினைவூட்டப்பட்டது.

Address

Ladies School Road
Eravur
30300

Alerts

Be the first to know and let us send you an email when ETN News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share