11/06/2026
மத்திய மாகாணத்தில் உள்ள 14 பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள்
மத்திய மாகாணத்தில் உள்ள 08 கல்வி வலயங்களிலுள்ள 14 பாணசாலைகளுக்கு புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் அவர்களின் தலைமையில், கண்டி ஆளுநர் அலுவலக அரங்கில் நேற்று (10) நடைபெற்றது.
மத்திய மாகாண அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், கண்டி, தெனுவர, தெல்தெனியா, கட்டுகஸ்தோட்டா, வத்தேகம, கொத்தமலை, ஹட்டன் மற்றும் நுவரெலியா ஆகிய கல்வி வலயங்களில் உள்ள 1C, 2 மற்றும் 3 ஆம் வகுப்புப் பாடசாலைகளுக்கு புதிய அதிபர்கள் நியமிக்கப்பட்டனர்.
மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் மஞ்சுள மதஹபோல, கல்வி அமைச்சகத்தின் செயலாளர் மதுபானி பியசேன, சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரபாத் மத்துமாராச்சி, மாகாண கல்வி இயக்குனர் நவோமி ஹெட்டியாராச்சி, மேலதிக மாகாண இயக்குனர் (நிர்வாகம்) மங்கலிக திசநாயக்க, கல்வி அமைச்சகத்தின் பிரதி இயக்குனர் கே.டி.எம்.ஏ.கே. அலிகேவெல, மாண்புமிகு ஆளுநரின் ஒருங்கிணைப்பு செயலாளர்கள், கல்வி அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் நியமிக்கப்பட்ட அதிபர்கள் குழுவினர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.