Uduppiddy News

Uduppiddy News எமது ஊரின் செய்திகளும், ஊரவர்களுக்கு பயன்படும் செய்திகளும் இங்கே....

தாதிமார் வேலை வாய்ப்புக்கு பயிற்சி (வட புலத்தில் அதிக விண்ணப்பதாரிகளை இணைத்து தமிழ் பேசும் தாதியர்களை உருவாக்கவும்)2020,...
30/07/2025

தாதிமார் வேலை வாய்ப்புக்கு பயிற்சி (வட புலத்தில் அதிக விண்ணப்பதாரிகளை இணைத்து தமிழ் பேசும் தாதியர்களை உருவாக்கவும்)

2020, 2021 மற்றும் 2022 க.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் மற்றும் விவசாய பிரிவில் தோற்றியோர் விண்ணப்பிக்க முடியும்.

கல்வித் தகைமை: க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஆங்கிலத்தில் திறமைச் சித்தியுடன் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் க.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் அல்லது விவசாய பிரிவில் ஒரே தடவையில் 3 பாடங்களும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

18 வயதிற்கு குறையாமலும் 28 வயதிற்கு கூடாமலும் இருப்பதுடன் திருமணம் ஆகாதவராக இருக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் சுகாதார அமைச்சின் இணையத்தளமான “www. health.gov.lk” எனும் இணையவழியூடாக 12.08.2025 இற்கு முன்னர் விண்ணப்பிக்கவும்.

மேலதிக தகவல்களுக்கு 17.07.2025 வர்த்தமானி பத்திரிகை மற்றும் 0713526234 இற்கு தொடர்பு கொள்ளலாம்.

தயவு செய்து இச்செய்தியை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து வட புலத்தில் அதிக விண்ணப்பதாரிகளை இணைத்து தமிழ் பேசும் தாதியர்களை உருவாக்க உதவும்.

-sivatharsan

Secure .gov websites use HTTPS A lock ( ) or https:// means you’ve safely connected to the .gov website. Share sensitive information only on official, secure websites.

✅புலம்பெயர் தேசங்களில் இருந்து தாயகத்திற்கு விடுமுறையில் வருபவர்களுக்கான அவசிய பதிவு ✅✅"செய்ய வேண்டியதும் செய்யக் கூடாதத...
30/07/2025

✅புலம்பெயர் தேசங்களில் இருந்து தாயகத்திற்கு விடுமுறையில் வருபவர்களுக்கான அவசிய பதிவு

✅✅"செய்ய வேண்டியதும்
செய்யக் கூடாததும் பட்டியல்"
(Dos and Don'ts list)✅✅

✅வட- கோடைக்காலம் வருகின்றது, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா வாழ் புலம்பெயர் தமிழர் பலர் தாயகம் விஜயம் செய்யும் நேரம். உங்கள் உறவுகளின் மோசமான கல்வி நிலைக்கு நீங்கள் காரணம் ஆகாதீர்கள். நீங்கள் செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. தயவுசெய்து கவனமெடுங்கள்.

இன்றைய மோசமான கல்வி நிலைக்கு நீங்களும் முக்கிய ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு வலுப்பெற்று வருவதை அவதானியுங்கள்.

✅செய்ய வேண்டியவை (Do's)

1. உங்கள் நாடுகளில் சாதாரணமாக உள்ள கஷ்டங்களை அவர்களுக்கு புரியும் மாதிரி சொல்லுங்கள்.

2.இரண்டு ஷிப்ட் வேலை, மூன்று ஷிப்ட் வேலை செய்வோரின் அவலங்களை விளக்கிச் சொல்லுங்கள்.

3.கடும்பனியில் வேலைக்கு போகும் கஷ்டத்தை, நடைபாதையில் ஸ்னோ வளிக்கும் கஷ்டத்தை புரியவையுங்கள்.

4. Refugee claim அடிக்கமுடியாத உண்மை நிலையை விளங்கப்படுத்துங்கள்.

5. students Visa என்றால் படிப்பதற்கு 3-5 மடங்கு tuition fee கட்டவேண்டும் என்பதை விளங்கப்படுத்துங்கள். இதனால் அவர்களின் உறவினர்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை புரியவையுங்கள்.

6. முடியுமானால் Kindle reader வாங்கி கொடுங்கள். வாசிப்பதற்கு e-book தரவிறக்கி கொடுக்க மறக்காதீர்கள்.

7. முடியுமானால் கணினி, அத்துடன் படிப்பதற்கு தேவையான offline e-lessons தரவிறக்கி கொடுங்கள்.

Web Address :
a. நூலகம் : https://noolaham.school/

b. e-books: http://www.e-thaksalawa.moe.gov.lk/web/ta/

c. https://tamilkalvi.online

d. https://aki.coach/

e. http://www.edudept.np.gov.lk/eLessonPortel/index.html

f. http://www.stemkalvi.org/books/

8. முக்கியமாக பெற்றோருக்கு தொலைபேசி, கணினி சம்பந்தமான தொழில்நுட்பத்தில் பயிற்சி கொடுங்கள். எப்படி சிறுவர்களை கண்காணிப்பது என்று உங்களுக்கு தெரிந்ததை சொல்லி கொடுங்கள்.

9. வளர்ந்த பிள்ளைகள் பகுதி நேர வேலை செய்ய வேண்டிய அவசியத்தை புரிய வையுங்கள். வெளிநாடுகளில் உங்கள் பிள்ளைகள் 15 வயதிலேயே கடும் குளிரிலும், வெயிலிலும் எப்படி பகுதி நேர வேலை செய்ய ஆரம்பிக்கின்றனர் என்று ஆதாரங்களுடனுன், உதாரணங்களுடனும் கூறுங்கள்.

❌செய்யக்கூடாதவை (Don'ts)

1. புலம் பெயர் நாடுகளில் பாலாறு தேனாறு ஓடுகின்றது என்று புளுகாதீர்கள்.

2. மாணவர்களுக்கு smartphone வாங்கி கொடுக்க வேண்டாம்.

3. மாணவர்களுக்கு Motorbike வாங்கிக் கொடுக்க வேண்டாம்.

4. பகட்டாக உடுத்தவோ, ஆடம்பரமாக நடக்கவோ வேண்டாம்.

5.உங்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு Game consoles கொண்டு போகாதீர்கள்.

6. Duty free liquor வாங்கிப் போகாதீர்கள். (edited)

குமாரவேலு கணேசன்-

#தாயகம் #புலம்

நூலக நிறுவனம்​ இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகள...

29/07/2025

சகோதரத்துவம் என்பது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு சொத்துகள் நாசமாக்கப்பட்டு உள் நாட்டிலே பலர் அகதியாக்கப்பட்ட நாள் ஒன்றில் பைலா பாடல்களைப் போட்டு ஆடிக்கொண்டு வருவதல்ல.

உன் சகோதரனிடம் உளமாற மன்னிப்பு கேட்டு

அரசியல் கைதியாக இருக்கும் பத்துப் பேரையும் அழைத்துக் கொண்டு ஒரு ரயில் பயணம் செய்து

சகோதரனின் காணிகளை அவனிடமே கொடுத்து

காணமலாக்கப்பட்ட சகோதரனுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்து

நீண்ட காலமாய் போராடும் சகோதரனுக்கு அதிகாரப் பகிர்வைக் கொடுத்து

சகோதரனின் மொழி உரிமையைப் பாதுகாத்து

ஆம் இது கறுப்பு ஜூலை தான் வரலாற்றுத் தவறு தான் என ஒத்துக்கொண்டு

நீங்கள் ஒரு பயணம் வர வேண்டும் அந்த நாள் உண்மையான சகோதரனாய் உங்களை அணைக்க பலர் காத்துக்கொண்டிருப்பார்கள்.

Brotherhood is not just about dancing to songs in the aftermath of thousands being killed, properties being destroyed, and many being displaced within the country on a single day.

It is about seeking forgiveness from your brother,

Taking a train journey with ten political prisoners,

Handing over your brother’s lands back to him,

Bringing justice to the brother who has been marginalized,

Giving power-sharing to the brother who has been fighting for a long time,

Protecting the language rights of your brother.

Yes, this is the Black July, and acknowledging it as a historical injustice,

You must embark on a journey; on that day, many will be waiting to embrace you as a true brother.

Rajivkanth -

ஒரு மனிதன் மரணமடைந்து விடுகின்றார் நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்களால் அந்த உடல் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகி...
29/07/2025

ஒரு மனிதன் மரணமடைந்து விடுகின்றார் நல்லடக்கம் செய்வதற்கு உறவினர்களால் அந்த உடல் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வரப்படுகின்றது.

அந்த நேரம் திடீரென்று மழை பெய்யத் தொடங்குகிறது அந்த உடலை ஒரு பிளாஸ்டிக்கால் மூடி விட்டு மழையில் நனையாமல் இருக்க எல்லோரும் விரைவாக ஒரு வராண்டாவிற்குள் சென்று நின்று விடுகின்றனர்.

புரிந்து கொள்ளுங்கள்...

நீங்கள் மரணமடைந்த பிறகு உங்கள் மீதான உண்மையான மதிப்பை அறிந்து கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் இறந்தால் உங்களை விட்டும் மக்கள் விரைவாக நகர்வார்கள். உங்கள் உடல் மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வரப்படாது, உங்களுக்காக யாரும் மழையில் நனைய மாட்டார்கள்.

உங்களுக்கா கொஞ்சம் கண்ணீர் சிந்தலாம்.

ஆனால் யாராவது ஒரு நகையையோ அல்லது தொலைபேசியையோ தொலைத்து விட்டால், அது உங்கள் மரணத்தை விட அவர்களுக்கு அதிகமான வேதனையாக இருக்கும்.

இப்போது சொல்லுங்கள்.

உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள்.

இது உங்கள் வாழ்க்கை இறைவனைத் தவிர யாரையும் நீங்கள் திருப்திப்படுத்த தேவையில்லை யாரும் உங்களை திருப்திப்படுத்த போவதும் இல்லை.

எனவே நீங்கள் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்காக வாழுங்கள்.

நல்லூர் முருகன் மகோற்சவ காலத்தில் வெளிவீதி பஜனைக்கு மாணவர்களை அழைக்கும் சிவகுரு ஆதீனம்
29/07/2025

நல்லூர் முருகன் மகோற்சவ காலத்தில் வெளிவீதி பஜனைக்கு மாணவர்களை அழைக்கும் சிவகுரு ஆதீனம்

ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய மகோற்சவம் 2025 – அட்டவணை வெளியீடுதிருவிழா அட்டவணை:🔸 கொடியேற்றம் – 23.08.2025 (சனி) நண்பக...
28/07/2025

ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய மகோற்சவம் 2025 – அட்டவணை வெளியீடு

திருவிழா அட்டவணை:

🔸 கொடியேற்றம் – 23.08.2025 (சனி) நண்பகல் 12.00 மணி
🔸 காலைத்திருவிழா ஆரம்பம் – 27.08.2025 (புதன்) காலை 7.00 மணி
🔸பூங்கவானம் காலை 9.00 - 01.09.2025
🔸 கைலாய வாகன உற்சவம் – 02.09.2025 (செவ்வாய்) காலை 8.00 மணி
🔸 சப்பறத் திருவிழா – 05.09.2025 (வெள்ளி) மாலை 6.00 மணி
🔸 தேர்த் திருவிழா – 06.09.2025 (சனி) காலை 7.00 மணி
🔸 தீர்த்தத் திருவிழா – 07.09.2025 (ஞாயிறு) காலை 8.00 மணி
🔸 மௌனத் திருவிழா – 07.09.2025 (ஞாயிறு) மாலை 6.00 மணி

முருகப்பெருமானின் திருவடி வழிபடத் திரளும் பக்தர்கள் அனைவரும்,
பெருமளவில் கலந்து கொண்டு திருவிழாக்களை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வேல் முருகன் திருவடி சாரணம்.

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய அறங்காவலர்கள்.

28/07/2025

பொதுமக்களால் தரம் பிரிக்கப்பட்டு வைக்கப்படாத திண்மக் கழிவுகள் 01.08.2025 முதல் அகற்றப்பட மாட்டாது - பருத்தித்துறை நகரசபை அதிரடி

809 பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளில் மாத்திரமே தேசிய பாடசாலை என குறிப்பிடப்பட்டுள்ளது - உண்மையில் அவை தேசிய பாடசாலைகளாக தரம...
28/07/2025

809 பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளில் மாத்திரமே தேசிய பாடசாலை என குறிப்பிடப்பட்டுள்ளது - உண்மையில் அவை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவில்லை

பெயர்ப்பலகைகளுக்கு மாத்திரம் 24 இலட்சம் ரூபாய் செலவு - கோபா குழு அறிக்கையில் சுட்டிக்காட்டு

#தேசியபாடசலை

28/07/2025

இலங்கைத் தமிழனென்று சொல்லடா தலை குனிந்து நில்லடா.

வரலாறு திரும்பத் திரும்ப நிகழ்கிறது.

உண்மைகள் உறங்காது..!

பயங்கரவாத தடைச்சட்டத்தை தயாரித்தவர் (வரைந்தவர்) தந்தை செல்வாவின் மருமகன் அ.வில்சன்.

அல்பிரட் வில்சன் 1928 ஆம் ஆண்டில் கே. ஆர். வில்சன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்..இளங்கலைப் பட்டத்தை (இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை இலண்டன் பொருளியல் பள்ளியிலும்பெற்றார்.

வில்சன் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகள் சுசிலி என்பவரைத் திருமணம் புரிந்தார்.

1978 முதல் 1983 வரை இலங்கை சனாதிபதி, ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் ஆலோசகராக இருந்தார்.

இவர்தான் 1979, யூண்,19, ல் நாடாளுமன்றில் நீதி அமைச்சர் கே டவிலியூ தேவநாயகத்தால் சமர்பிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை வரைந்தார் என கூறப்படுகிறது.

இது உண்மையானால் ..

சட்டத்தை தயாரித்தவரும் தமிழரே, (தந்தை செல்வாவின் மருமகன் அல்பிரட் வில்சன்). சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்தவரும் தமிழரே,(கே.டவிலியூ. தேவநாயகம்). அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்து எதிர்த்து வாக்களிக்காமல் நழுவிச்சென்றதும் தமிழரே, (அ.அமிர்தலிங்கம் தமிழர் விடுதலை கூட்டணி). அந்த சட்டத்தால் கூடுதலாக பாதிக்கப்பட்டவர்களும் தமிழரே என்ற வரலாறு இந்த பயங்கரவாத கொடியச்சட்டத்திற்கு உண்டு.

ஏன் எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பது இப்போது புரிகிறது.?
இந்த சட்டத்தை தயாரித்த தந்தை செல்வாவின் மருமகன் அல்பிரட் வில்சன் சிலவேளை அ.அமிர்தலிங்கத்திடம் எதிர்த்து வாக்களிக்க வேண்டாம். அது தற்காலிக சட்டம் என கூறியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது..!

1979, யூண்,19, ல் நாடாளுமன்றில் சமர்பித்த இந்த கொடிய சட்டம் 2025, யூண்,19, நேற்றுடன் 46, ஆண்டுகள் பூர்த்தி..

வரலாறுகளைத் தமிழ் மக்களும் தமிழ் இளைஞர்களும் அறியவேண்டும் என்பதற்காகவே எனது இந்த பதிவும்…

-பா.அரியநேத்திரன்-
20/07/2025.

26/07/2025

பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ் எந்த காலத்திற்கும் செல்லுபடியாகும் - புதிதாக எடுக்க வேண்டிய அவசியமில்லை

பதிவாளர் நாயகத் திணைக்களத்தால் உங்களுக்கு வழங்கப்படும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ் 06 மாத காலத்திற்குப் பிறகு செல்லுபடியாகாது என்பது தவறானது என்பதுடன் எந்த காலத்திற்கும் அது செல்லுபடியாகும்.

(ஆறு மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் எனும் நடைமுறை இரண்டு வருடத்திற்கு முன்பே இருந்தது தற்போது இல்லை)

கல்வி அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை மற்றும் ஆட்பதிவுத்திணைக்களம் என்பவற்றிற்கு இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பதிவாளர் நாயகத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட தெளிவான சான்றளிக்கப்பட்ட நகல் உங்களிடம் இருந்தால், புதிய நகலைப் பெற வேண்டிய அவசியமில்லை என்பதை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எப்படியிருந்தாலும், பிறப்பு, திருமணம் அல்லது இறப்புச் சான்றிதழில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, புதிய திருத்தப்பட்ட நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால் தொடர்ந்தும் பாடசாலை நடவடிக்கைகள், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், வெளிநாட்டு முகவர் சேவைகள் போன்ற பல தேவைக்களுக்காக ஆறு மாதத்திற்கு உட்பட்ட சான்றிதழை தருமாறு உரிய அதிகாரிகள் கோருவதாக பொதுமக்கள் அண்மையில் எடுத்த சான்றிதழ்களை வைத்துக் கொண்டும் ஆறு மாதத்திற்கு உட்பட்ட புதிய சான்றிதழ்களை பெற வருகிறார்கள்.

இது நடைமுறை விளக்கம் இல்லாத உத்தியோகத்தர்களின் நிலைப்பாடாகும். எனவே யாரும் உத்தியோகத்தர்கள் அவ்வாறு கேட்டால் பொதுமக்கள் இப்போது அவ்வாறு தேவையில்லை என உறுதியாக எடுத்துக் கூறவும்.
🙏 : Kobi Nishan

புதிய சான்றிதழ் கேட்கப்படும் சில சந்தர்ப்பங்கள்
1. சான்றிதழ் தெளிவற்று காணப்படுதல்
2. சான்றிதழில் பொறிக்கப்பட்டிருக்கும் முத்திரைகள் (Rubber Stamps) தெளிவற்றிருத்தல்
3. சான்றிதழில் ஏதாவது மாற்றங்கள் செய்து இருப்பதாக சந்தேகம் எழும் போது
உ+ம் : எழுத்துக்கள் சுரண்டப்பட்டிருத்தல்
4. உரிய அதிகாரிகளின் கையொப்பங்கள் சான்றிதழில் இல்லாமை
5. கையொப்பம் இட்ட அதிகாரியின் பெயர், பதவி என்பவற்றுடன் கூடிய முத்திரை பொறிக்கப்படாமை
6. சான்றிதழில் வழங்கப்பட்டதாக அச்சிடப்பட்டிருக்கும் தினத்திற்கும் வழங்கப்பட்ட தினமாக கையால் எழுதப்பட்டிருக்கும் தினத்திற்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுதல்.
🙏Jeyanthan-

காத்தோட்டிக் காய் (காத்தோட்டியம் காய்).இன்று ஆடி அமாவாசை. காத்தோட்டிக்காயை உணவில் சேர்க்கவேண்டும் என்கிறார்கள். காரணம் த...
24/07/2025

காத்தோட்டிக் காய் (காத்தோட்டியம் காய்).
இன்று ஆடி அமாவாசை. காத்தோட்டிக்காயை உணவில் சேர்க்கவேண்டும் என்கிறார்கள். காரணம் தெரியாது.

எழுத்தாளர் தபேந்திரனின் தகவலின்படி ஆடி அமாவாசை காலத்தில் இது கிலோ பத்தாயிரம் ரூபாவுக்கு யாழ்ப்பாணத்தில் விற்கப்படுகிறதாம் (ஒரு காய் கிட்டத் தட்ட 500 ரூபா). இது காட்டில் வளரும் தாவரம் என்றாலும் நீங்கள் வீட்டிலும் வளர்த்துப் பயன் பெறலாம். இதை யாரும் முயற்சிப்பதில்லை. முயன்று பாருங்களேன். Good luck. தொடர்ந்து வாசியுங்கள். நான் இங்கு தருவது பொதுவான propagation methods.

இதன் அறிவியல் பெயர் Capparis Zeylanica. இது ஒரு உலர்வலயத் தாவரம். வறட்சி தாங்கக்கூடியது. வளர, குறைந்த அளவு நீர் போதுமானது. இப்போது (புரட்டாதி) விதைகள் பெறலாம் என நினைக்கிறேன். நன்கு முற்றிய காய்களிலிருந்து விதைகளைப் பெறவும். இது முக்கியம். விதைகள் எங்கு பெறலாம் எனக் கேட்காமல் நீங்களே விதைகளைப் பிரித் தெடுங்கள். மிளகாய் விதைகளைப்போலவே இதையும் விதைத்து வளர்க்கவும். மணல் சேர்ந்ந்த மண் நல்லது. ஆரம்பத்தில் ஓரளவு தண்ணீர் வேண்டும். வளர்ந்தவுடன் பராமரித்தால் போதுமானது.

தண்டின் வெட்டுத் துண்டங்கள் மூலமும் முயற்சிக்கலாம்.

5 கணுக்கள் உள்ள வெட்டுத்துண்டத்தின் கீழ்ப்பகுதியை (மண்ணுக்குள் போகும் பகுதியை) கணுவின் கீழே, வெட்டி, முடிந்தால் Rooting hormone - auxin அல்லது தேன் தடவவும். பின்னர் 2 கணுக்கள் மண்ணுள் புதையும்படி ஊன்றவும். வேர்வைக்க, மண்ணின் வெப்பம் அதிகமாக இருக்க இருக்கவேண்டும். அதற்கு நிலத்தை வைக்கோலால் மூடி விடலாம் (mulching). தண்டின் மேலேயுள்ள வெட்டுமுகம் காயாது மாட்டுச் சாணகம் பூசிவிடவும். வேர்வரும்வரை ஓரளவு ஈரலிப்புத் தேவை. பதிவைத்து 3 கிழமைக்குள் குருத்து வந்தால் அவற்றை அகற்றி விடவும். முதலில் வேர் வைக்கவேண்டும். பின்னரே குருத்து வளரவேண்டும். இல்லையேல் தண்டிலுள்ள சத்தை குருத்து உறிஞ்சிவிட வெட்டுத்துண்டு காய்ந்துவிடும்.

வெட்டுத்துண்டங்களின் மூலம் வளர்த்தால் ஓரிரு வருடங்களுள் பூத்துக்காய்க்கும்.

குறிப்பு: விதைகள் மூலம் வளர்ப்பதே இலகுவானது. பூத்துக்காயக்க 4 வருடங்கள் வரை எடுக்கலாம்.

AS Kantharajah

24/07/2025

திருநெல்வேலி சந்தையில் காத்தோட்டிக்காய் கிலோ 7000-8000 ரூபா. ஒரு காய் 400-500 ரூபா. நிறைய சனங்கள் ஒரு காத்தோட்டிக்காய் வாங்க அந்தரிக்கிறார்கள்.

அதிலே ஒரு யாவாரி மற்ற யாவாரிக்கு காயை வெட்டி பாதியாய் வில் என்று அறிவுறுத்திக்கொட்டிருந்தார்.

உண்மையிலே காத்தோட்டிக்காய் வீடுக்களில் வளர்ப்பதில்லை. எங்காவது பற்றைகள் ஆட்களில்லா வளவுகளில் கொல்லைகளில் வளரும். கிராமங்களில் யாரும் காசு கொடுத்து வாங்குவதில்லை.

ஒரு காலத்தில் இலவசமாக கிடைத்த சந்தைகளில் அஞ்சு பத்து ரூபாக்கு விற்ற காத்தோட்டிக்காய் பெரும்பாலான மரக்கறிகளின் ஒரு கிலோ விலையை விட ஒரு காயின் விலை கூடவாக இருப்பது ஆச்சரியம் தான். இந்த காயை மரத்தில் பிடுங்கி சந்தை யாவாரிகளிடம் கொடுக்கும் தொழிலாளிக்கு யாவாரிகள் எவ்வளவு பணம் கொடுத்து வாங்குகிறார்கள்.

இந்த காய்களில் ஒரு கிலோவுக்கு எத்தனை மடங்கு லாபத்துக்கு விற்கிறார்கள். இது தவிச்ச முயல் அடிக்கிர வேலையா இல்லையா? ஆடி அமாவாசைக்கு ஒரே ஒரு நாள் மட்டும் பொரிச்சு சாப்பிடுற காத்தோட்டிக்காயை நடுத்தர சனங்கள் வாங்கேலாத விலைக்கு விக்கிற சந்தை யாவாரிட மண்டைக்குள்ள காசு மாத்திரம் தான் தெரியும்.

-copy

(ஆடி அமாவாசை விரத்துக்கு பொரியலுக்கு பயன்படும் கைச்சல் மிகுந்த காயே காத்தோட்டிக்காய்)

Address

Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uduppiddy News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uduppiddy News:

Share