Uduppiddy News

Uduppiddy News எமது ஊரின் செய்திகளும், ஊரவர்களுக்கு பயன்படும் செய்திகளும் இங்கே....

21/09/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாலய மாணவி புலமைப் பரிசிலில் சித்தியாழ்தினக்குரல்-
21/09/2025

உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாலய மாணவி புலமைப் பரிசிலில் சித்தி

யாழ்தினக்குரல்-

அரச நிறுவனங்களுக்கு ஒன்லைனில் பணம் செலுத்தலாம்
21/09/2025

அரச நிறுவனங்களுக்கு ஒன்லைனில் பணம் செலுத்தலாம்

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் திறன் வகுப்பறைமாலைமுரசு 20.09.2025
21/09/2025

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் திறன் வகுப்பறை

மாலைமுரசு 20.09.2025

குப்பைத் தொட்டிக்கும் மரக்கூண்டுக்கும் வித்தியாசம் தெரியாத பைத்தியங்கள் நடுவில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...இட...
20/09/2025

குப்பைத் தொட்டிக்கும் மரக்கூண்டுக்கும் வித்தியாசம் தெரியாத பைத்தியங்கள் நடுவில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...

இடம் : செல்வச்சந்நிதி கோவில்

பாலா உதயன்

குப்பிழான் ஐ. சண்முகன் நினைவாக அவரின் துணைவியார் புனிதவதியின் நிதி அனுசரணையுடன் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆரம்பப்பிரிவு...
20/09/2025

குப்பிழான் ஐ. சண்முகன் நினைவாக அவரின் துணைவியார் புனிதவதியின் நிதி அனுசரணையுடன் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவிகளுக்கான திறன்வகுப்பறை திறப்பு விழா

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்காக புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறை திறப்பு விழா 19.09.2025 வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது.

ஈழத்தமிழ் இலக்கிய உலகின் காத்திரமான எழுத்தாளரான குப்பிழான் ஐ. சண்முகன் (ஐயாத்துரை சண்முகலிங்கம்) அவர்களின் ஞாபகார்த்தமாக அவரின் துணைவியார் புனிதவதி சண்முகலிங்கம் அவர்களின் நிதியனுசரணையில் இந்த வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த திறன் வகுப்பறையையும் கல்வெட்டினையும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரான செல்வி. இராஜ்யலட்சுமி சுப்பிரமணிய குருக்கள் அவர்களும் புனிதவதி சண்முகலிங்கம் அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.

முன்னதாக பாடசாலையின் நுழைவாயிலில் இருந்து விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டு திறன்வகுப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதனை தொடர்ந்து ராஜேந்திரசிங்கம் மண்டபத்தில் நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகின.

பிரதம விருந்தினர் உரையினை செல்வி. இராஜ்யலட்சுமி சுப்பிரமணிய குருக்கள் அவர்களும், அனுசரணையாளர் உரையினை திருமதி கமலவதனா தேவராஜா அவர்களும், கொடையாளர் உரையினை திருமதி புனிதவதி சண்முகலிங்கம் அவர்களும், சிறப்புரையினை ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களும் நிகழ்த்தினர்.

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆசிரியர் சண்முகநாதன் அவர்கள் நிகழ்வினை திறம்பட தொகுத்து வழங்கி இருந்தார். இறுதியாக ஆரம்பப் பிரிவு மாணவிகளின் மயில் நடனம் இடம்பெற்றதை தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வியியலாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

புனிதவதி சண்முகலிங்கன் அவர்களின் 50 இலட்சம் ரூபாய் நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்ட திறன்வகுப்பறை கட்டிட நிர்மாணப் பணிகளின் ஒவ்வொரு கட்டத்திலும் தகுந்த ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்கி புனிதவதி அவர்களின் நீண்டகால ஆசிரியத் தோழமையான கமலவதனா தேவராஜா அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய காலத்தில் நவீன தொழிநுட்பத்துடன் இணைந்த வகையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு திறன் வகுப்பறை இன்றியமையாததாகும்.

வல்லிபுர ஆழ்வாருக்கு வரும் ஞாயிறன்று கொடியேற்றம்மகோற்சவ விபரங்கள்...
19/09/2025

வல்லிபுர ஆழ்வாருக்கு வரும் ஞாயிறன்று கொடியேற்றம்

மகோற்சவ விபரங்கள்...

யாழ்ப்பாணத்தில் அதிக விபத்துகள் மோட்டார் சைக்கிள்களாலேயே  நிகழ்ந்துள்ளன. அதிக விபத்துகள் Yamaha FZ ரக மோட்டார் சைக்கிள்க...
19/09/2025

யாழ்ப்பாணத்தில் அதிக விபத்துகள் மோட்டார் சைக்கிள்களாலேயே நிகழ்ந்துள்ளன. அதிக விபத்துகள் Yamaha FZ ரக மோட்டார் சைக்கிள்களை வேகமாக செலுத்தியதனாலேயே ஏற்பட்டுள்ளன. மேலும் கிளை வீதிகளில் இருந்து பிரதான வீதிக்கும், பிரதான வீதியில் இருந்து கிளை வீதிக்கும் திருப்பும் போதே அதிக விபத்துகள் நேர்ந்துள்ளன.
- யாழ் மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்

யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை - நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்Link - https...
18/09/2025

யாழ். பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை - நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

Link - https://www.uduppiddynews.com/2025/09/blog-post.html

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவிற்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை (18) நல்லூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் தவிசாளர் ப. மயூரனால் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தவிசாளர் சபையில் தெரிவிக்கையில்,

போலிகள் மலிந்துவிட்ட இன்றைய தேசத்தில் போலியின்றி வாழ்ந்து தேசப்பற்றோடும் மக்கள் மனித நேயத்தோடும் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் அவர் ஆற்றிய மகத்தான தன்னலமற்று பணியாற்றியவர்.

அவரது அறிவியல், பண்பியல், வாழ்வியல் என்பன இந்த மண்ணின் ஒரு வரலாற்று அடையாளம்.

அவ்வாறானவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்பதனை எமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதும் இப்படியானவர்களை எமது இளைய தலைமுறையினர் தங்களது வாழ்வியலுக்கான வழிகாட்டியாக பின்பற்றவேண்டும் என்பதன் அடிப்படையில் நல்லூர் பிரதேச சபை இந்த உயரிய பணியினை மேற்கொள்கிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த காரணத்தினால் யாழ். பல்கலைக்கழக சூழலில் அவருடைய சிலையினை நிறுவுவதற்கான இடத்தினை ஒதுக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒரு பொருத்தமான இடத்தினை தெரிவு செய்யவேண்டும்.

--------------------------------------------------------------------------

யார் இந்த பேராசிரியர் துரைராஜா?

மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர்!

சர்வதேச புகழ்பெற்ற 'துரை விதி' யின் சொந்தக்காரர்!

ஆம்! அவர்தான் பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா.
பேராசிரியர் துரைராஜா.

1934 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ஆம் திகதி வேலுப்பிள்ளை அழகையாவுக்கும், செல்லமாவுக்கும் மகனாக யாழ்ப்பாணத்தின் மூளை என்றழைக்கபடும் வடமராட்சி பிரதேசத்தில் உடுப்பிட்டியில் அவதரித்தார்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும், பின் தனது உயர்கல்வியை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும் பயின்றிருந்தார்.

பேராசிரியர் அவர்கள் உயர்தரத்தில் கணித பிரிவில் முதல் மாணவனாக 1953 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். அன்றைய காலகட்டத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தில் குடிசார் பொறியற் கற்கைநெறியை 1957 ஆம் ஆண்டு நிறைவு செய்து விஞ்ஞானப்பட்டம் பெற்றார். அதன் பின்னர் மேற்படி பல்கலைக்கழகத்திலேயே 1958 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை குடிசார் பொறியியல் விரிவுரையாளராக கடமையாற்றினார்.

பின்னர் 4 மாதங்கள் பொதுச்சேவை திணக்களத்தின் இளம் உதவி பொறியலாளராக பணிபுரிந்தார். தொடர்ந்து ‘கேம்ப்ரிச்’ பல்கலைக்கழகத்துக்கு புலமைபரிசிலில் சென்ற பேராசிரியர் Kenneth H. Roscoe அவர்களின் கீழ் ஆராய்ச்சி மாணவனாக அக்டோபர் 1958 இலிருந்து 1961 டிசம்பர் வரை மணல்துறை சார்ந்த ஆராய்ச்சிகளுக்காக பணியாற்றியிருந்தார்.

இவ் ஆராய்ச்சிகளின் பயனாக ‘துரை விதி’ எனும் மணல்துறை சார்ந்த விதியொன்றை நிறுவினார். இன்றும் குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் Cam- clay locus ஆனது துரை விதியிலிருந்தே பெறப்படுகின்றது.

இறுதியாக 1962ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது P.H.D பட்டத்தை நிறைவு செய்திருந்தார்.

பின் சிறிது காலம் பிரித்தானிய கம்பெனியான ‘Terreasearch’ என்ற நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பி இலங்கை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். அதன் பின் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் 1971 ஆம் ஆண்டு பேராசிரியராக இணைந்து கொண்டார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்துகொள்ள முன்னர் ‘வாட்டர்லூ’ பல்கலைக்கழகத்தின் வருகைதரும் விரிவுரையாளரகாவும் இருந்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீடத்தின் பீடாதிபதியாகவும் மே 1975 தொடக்கம் செப்டெம்பர் 1977 வரையும், பெப்ரவரி 1982 தொடக்கம் பெப்ரவரி 1985 வரையான இருவேறுபட்ட காலங்களில் பணியாற்றியுள்ளார்.

மேலும் பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைகழகத்தின் வருகை தரு விரிவுரையாளராகவும் அக்டோபர் 1977 முதல் டிசம்பர் 1978 வரை பணியாற்றியுள்ளார். அதன் பின் இலங்கை திறந்த பல்கலைக்கழக பொறியியற்பீடத்தின் பீடாதிபதியாக ஏப்ரல் 1987 முதல் ஆகஸ்ட் 1988 வரை பணியாற்றினார்.

அதன் பின் 1988 செப்டெம்பர் மாதம் போர்ச்சூழல் காரணமாக எவரும் வரத்தயங்கிய தருணம் துணிச்சலுடன் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, ‘பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு’ யாழ் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கபடும் என்ற கொடுத்திருந்த வாக்குறுதியுடன் பதவியேற்றுக்கொண்டார்.

ஆனாலும் பேராசிரியரின் கனவு 36 வருடங்களின் பின்பே மாசி மாதம் கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீட அங்குரார்ப்பண நிகழ்வுடன் பூர்த்தியாகியுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலம் தனது வதிவிடமான வடமராட்சியின் வதிரி பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வல்லை வெளியினூடாக போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலங்களில் 30 ற்கும் மேற்பட்ட கிலோமீட்டர்கள் தூரத்தை மிதி வண்டியினூடே பயணித்திருந்தார் .

சிறந்த ஒழுக்க சீலராகவும், பழகுவதற்கு இனிமையானவரான பேராசிரியர் எளிமையான வாழ்க்கை வாழ்ந்திருந்தார். மேலும் பேராசிரியர் துரைராஜாவின் மாணவன் என்றால் அதற்கு ஒரு தனிமதிப்பு இன்றும் உள்ளது. தமிழர்கள் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காக பேரளவு உதவிகளை இக்கட்டான காலகட்டத்தில் செய்ததால்தான் பேராசிரியர் இன்று மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

90களில் யாழ்ப்பாணம் பொருளாதார சிக்கலில் தவித்திருந்த பொழுது, எல்லாத்தரத்திலான எல்லா வகையிலான கல்வியாளர்களையும் தொழில் நுட்பவியலாளர்களையும் தொழிலாளர்களையும் நிர்வாகிகளையும் சிவில் சமூகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்திக்கான எதிர்கால திட்டமிடலை மேற்கொண்டிருந்தார்.

தமிழர் நல்ல கல்வியைப் பெறவேண்டும் என்பதற்காக பல்கலைக்கழக கல்வி முறையில் தொழிலாளர் கல்வி வெளியார் கற்கைபோன்றவற்றை அறிமுகப்படுத்தி யாழ்ப்பாண சமூகத்தை பல்கலைக் கழகம் வரைகொண்டு வந்தவர். வடக்குக் கிழக்கு தமிழர்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகளாக இருப்பதால் விவசாய பீடத்தை கிளிநொச்சியில் நிறுவினார்.

பேராசிரியர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்,. இலங்கை சிவில் பொறியிலாளர்கள் அமைப்பு, தேசிய விஞ்ஞான அக்கடமி என்பவற்றின் தலைவராகவும் இருந்து அளப்பெரும் சேவைகள் ஆற்றியுள்ளார்.

1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற அனர்த்தங்களில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி முற்றிலுமாக சிதைவடைந்திருந்தபோது, வெளிநாடுகள் சென்று கல்லூரியின் நிலையினை எடுத்துரைத்து அங்குள்ள பழைய மாணவர்களை ஒன்று திரட்டி நிதி சேகரித்து இன்றைய உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி நிமிர்ந்து நிற்பதற்கு பேராசிரியரே துணை புரிந்தார். இன்றும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியின் நூலகம் அமைந்த கட்டிடதொகுதி பேராசிரியரின் பெயராலேயே பேராசிரியர் துரைராஜா கட்டிடதொகுதி என்றே அழைக்கபடுகிறது.

பேராசிரியர் மணவாழ்க்கையில் ராஜேஸ்வரியை கரம்பிடித்து இல்வாழ்க்கையின் பேறாக தம்பதியினருக்கு 3 மகள்களும் 2 மகனும் உள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியரினால் நிர்மாணிக்கப்பட்டது. மகாவலி ஆற்றில் ஒரேயொரு தூணை மட்டும் நிறுவி இப்பாலம் கட்டப்பட்டது. ‘துரைராசா பாலம்’ என அழைக்கப்பட வேண்டிய அந்தப் பாலம் இன்று ‘அக்பர் பாலம்’ என்றே அழைக்கப்படுகிறது. தமிழர்களாகிய எங்கள் பலருக்கே இந்த விடயம் தெரியாது.

நாங்களாவது அந்தப் பாலத்தின் பெயரை ‘துரைராசா பாலம்’ என அழைப்பதன் மூலம் பேராசிரியரின் திறமைகளை மறைக்காமல் நினைவு கூறப்பட வேண்டியவரை நினைவு கூர்ந்து உண்மைகளை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவோம்.

தமிழரின் போராட்டத்துக்காக அளப்பரிய சேவைகள் செய்த மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் நோயின் கொடிய பிடியில் சிக்கி 1994ம் ஆண்டு ஆனிமாதம் 11ம் திகதி இறைவனடி சேர்ந்தார். இவர் நினைவாக “பேராசிரியர் துரைராஜா கிண்ணம்” போட்டி வருடா வருடம் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வருகிறது.

அத்துடன் யாழ்.பல்கலைக்கழகத்தில் வருடாந்த பொது பட்டமளிப்பு விழாவில் சகல துறைகளிலும் சாதித்த அதிசிறந்த மாணவர்களுக்கு பேராசிரியர் துரைராஜாவின் பெயரில் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

கலைகள் மட்டுமல்ல எம்மண்ணின் அறிஞர்களின் பெருமைகளும் மறைக்கப்படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும். இவர்களின் பெருமைகளை தலைமுறைகள் தாண்டி நிலைக்கச்செய்ய வேண்டியது எங்கள் ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும்.

#அழகையா #துரைராசா

ஊடகங்கள் பத்திரிகைகளில் பணியாற்றும் பொழுது அவர்களின் திறமை காரணமாக புகழ் காரணமாக  அந்த  ஊடகத்தின் பெயரினாலோ பத்திரிகையின...
18/09/2025

ஊடகங்கள் பத்திரிகைகளில் பணியாற்றும் பொழுது அவர்களின் திறமை காரணமாக புகழ் காரணமாக அந்த ஊடகத்தின் பெயரினாலோ பத்திரிகையின் பெயரினாலோ அடை மொழி வைத்து அவர்களது பெயர்களை சொல்லுவது வழக்கம்

அந்த காலத்தில் தமிழில் வந்த முதல் பத்திரிகையான உதயதாரகைக்கும் சகோதர பத்திரிகையான morning star க்கும் பத்திரிகையாளராக இருந்த

யாழ் வடமராட்சி உடுப்பிட்டி இமையாணன் பகுதியை சேர்ந்த முத்து என்பவரை அவரது பத்திரிகையாளர் திறமைக்காக morning star முத்து என்று அன்புடன் அழைத்தனராம்

இன்னும் சொல்ல போனால் தமிழ் பகுதியில் தோன்றிய முதல் பத்திரிகையாளர்கள் வரிசையில் இவரை சொல்லலாம்

புகைப்படம் - MORNING STAR முத்து

18/09/2025

வடபகுதி கடல்வளம் தொடர்பிலான மக்கள் சார்ந்த மூலோபாயத் திட்டம் உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டும்

Address

Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uduppiddy News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uduppiddy News:

Share