Uduppiddy News

Uduppiddy News எமது ஊரின் செய்திகளும், ஊரவர்களுக்கு பயன்படும் செய்திகளும் இங்கே....

05/07/2025

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழை ஏன் சொன்னார்கள் தெரியுமா?

உலகின் மிகவும் மூத்த மொழி தமிழ் தான்...

#தமிழ்

உடுப்பிட்டி - புறாப்பொறுக்கியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான கனரக வாகனம் https://www.uduppiddynews.com/2025/07/video.ht...
05/07/2025

உடுப்பிட்டி - புறாப்பொறுக்கியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான கனரக வாகனம்

https://www.uduppiddynews.com/2025/07/video.html

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று(5) காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்‌ அறிய வருவதாவது,

பருத்தித்துறை - கற்கோவளம் பகுதியிலிருந்து வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்ட ரோலர் வாகனத்தைத் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனமே புறாப்பொறுக்கி பகுதியில் தடம்புரண்டுள்ளது.

முன்னால் துவிச்சக்கர வண்டியொன்றில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து குறித்த கனரக வாகனத்துடன் விபத்து ஏற்படவிருந்த நிலையில் அதனை தடுக்க முற்பட்ட வேளையே குறித்த வாகனம் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

05/07/2025

நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில், அந்தக் கட்டடச் சிதைவுகள் இப்போதில்லை?

யாராலும் தொடப்படாமல் - ஆச்சர்ய தியாகத்தின் சின்னமாக குவிந்து கிடந்த கொங்கிரீட் துகள்களுக்குள் "தற்கொடை" தார்ப்பரியத்தின் பிரசவமும், உலகே வியந்த வீரமுமாக நிமிர்ந்து கிடந்தவன், துன்னாலையின் வல்லிபுரம் வசந்தன்.

- சத்தமிட்டு அழக்கூட முடியாமல், சுவரோடு விம்மிவெடித்த தாய்,
- வேலிப் பொட்டுகளுக்குள்ளால், இழவு விசாரிக்க வந்து பயந்து திரும்பும் சொந்தங்கள்,
- அவனை தெரியும் என்று தோளுயர்த்த கூட முடிந்திராத நண்பர்கள்,
யாவரும் யாவையும்-

அந்த உடலாயுதனின் அங்கீகாரத்துக்காக நீண்ட கடுமிரவுகள் காத்திருக்கவே நேர்ந்தது!!
"........சிறு வயதிலேயே நல்லா வாகனம் ஓடுவார்- அப்பாவார் காரை விட்டிட்டு வெளீல போயிட்டால் அப்பிடியே எடுத்திட்டு யாழ்ப்பாணம் போய், அப்பிடி போய்- இப்பிடி போய் சுத்தியடிச்சிட்டு வருவார்"
வசந்தன்,

ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவன்.
குடும்பத்தின் இரண்டாவது ஆண்மகன்.
அப்பா வல்லிபுரம் இலங்கை வங்கியின் ஊழியர்.
பிற்காலத்தில் மகிழுந்து என்று திருத்தப்பட்ட "கார்", வீட்டில் இருந்த காரணத்தால் சிறுவயதிலேயே வாகனமோட்டக் கற்றுக்கொண்டவன்.

அப்பாவுக்கு தெரியாமல் விடுமுறை தினங்களில் நண்பர்களோடு காரில் சுற்றித் திரிந்தவன்- பின்னாட்களில் வீட்டுக்கு வராமலே இருந்தான்.
"காணவில்லை" என்று தேடும் தேவையும் கவலையும் இல்லாமல் வல்லிபுரம் குடும்பம் ஏதோ நம்பிக்கையை பற்றிக் காத்திருந்தனர்.

வசந்தன் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்துக்கு சென்றிருந்த அன்றைய நாளின் இரவு ஏழு மணியின் பேரோசையை அவனது தாயும் குடும்பத்தினரும் கேட்டார்கள்.

வசந்தனின் இன்னொரு பெயரை, வரலாறு ஆசையோடு கேட்டு எழுதி வாங்கிக் கொண்டது.

பாடசாலையில் வசந்தனின் உடல்வெடிப்பித்த கற்சிதிலங்கள் எவையும் இன்றில்லை??
ஆனாலும்,
"வல்லிபுரத்தின் பிள்ளை, ஒரு இனத்தின் எல்லை" ஆகிய கதை எங்கள் எல்லோரிடமும் பத்திரமாக தரப்பட்டது.

1970களிலேயே சொந்த வாகனம் வைத்திருக்கும், பொருளாதார வேருள்ள குடும்பத்தின் செல்லப்பையனை, உலகின் முதலாவது தற்கொடையாளனாக வார்ப்பித்த, "தாகம்" மட்டும் தூங்குவதறியாது! ♥️💛

Athavan ngana

போதுமான தகவல்களை வழங்காது தான் தோன்றித்தனமாக விசாரணைக்கு வாருங்கள் என பொலிசார் அழைத்தால் அது தொடர்பில் தனக்கு தகவல் வழங்...
05/07/2025

போதுமான தகவல்களை வழங்காது தான் தோன்றித்தனமாக விசாரணைக்கு வாருங்கள் என பொலிசார் அழைத்தால் அது தொடர்பில் தனக்கு தகவல் வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை

சந்தேக நபர்களை அல்லது சாட்சிகளை விசாரணைக்கு அழைக்கின்ற போது, பொலிஸ் போதுமான (adequate) தகவல்களை வழங்க வேண்டும் என்பதனை குற்றவியல் நடபடிக்கோவையினை மேற்கோள் காட்டி, சுற்றுநிருபம் ஒன்றினை பதில் பொலிஸ்மா அதிபர் வெளியிட்டிள்ளார்.

பொலிஸ் தான்தோன்றித்தனமாக, எவ்வித விபரங்களையும் வெளியிடாமல், "விசாரணைக்கு வாருங்கள்" என அறிவிப்பது அன்றாடம் நடைபெற்று வருகின்றது. அறிவித்தலில் விசாரணை குறித்து போதுமான விபரங்கள் வழங்கப்படாதவிடத்து, அது தொடர்பில் அறிவியுங்கள்.

பல சந்தர்ப்பங்களில், தொல்பேசியினூடாக இவ்வாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது. அழைக்கின்ற பொலிஸ் அதிகாரி தன்னுடைய பெயரையோ, விசாரணை தொடர்பான விபரங்களையோ வழங்காது, குறித்த திகதியில், குறித்த நேரத்திற்கு, குறித்த பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவிப்பதனை நடைமுறையாகப் பின்பற்றிவருகின்றனர்.

பொலிஸ் அதிகாரியின் பெயர், அவரது தொடரிலக்கம், விசாரணை குறித்த விடயங்கள் ஆகியவற்றை வழங்காதவிடத்து அத்தகைய அழைப்புகளை உதாசீனம் செய்யுங்கள். இவ்வாறான அழைப்புகள் அதிகாரத் துஷ்பிரயோகத்தின் காரணமாகவும், மற்றத் தரப்பினருடான பொலிஸினுடைய 'உறவின்' காரணமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

புதிய வழிகாட்டுதல்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றன:

1. சந்தேக நபர்களுக்கு அழைக்கப்படும்போது குறிப்பிட்ட குற்றங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.

2. சாட்சிகளுக்கு அவர்களின் வாக்குமூலத்தின் நோக்கம் மற்றும் வாக்குமூலத்திற்கும், முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விசாரணைக்குமான பொருத்தப்பாடு (relevance) குறித்து தெரிவிக்கப்பட வேண்டும்.

3. சந்தேக நபர்கள் அல்லது சாட்சிகள் அல்லாத காரணங்களுக்காக அழைக்கப்பட்ட நபர்களுக்கு கோரிக்கைக்கான போதுமான காரணம்/பின்னணி வழங்கப்பட வேண்டும்.

4. தொலைபேசி மூலம் அழைப்பணை (summons) அனுப்பப்பட்டால், பொறுப்பதிகாரி மேற்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

5. விசாரணை தொடர்பான தகவல்களை முறைப்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் அல்லாத பிற தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளும்போது, ​​குறிப்பாக அவைவாறு தகவல்களைப் பகிர்தல் வழக்கினைப் பாதிக்கக்கூடும் என்றால், அதிகாரிகள் இரகசியத்தன்மையைப் பேண வேண்டும்.

(Via Aingkaran Kugathasan)

Consequent to Supreme Court Fundamental Rights application 266/2023 where Vidura Ralapanwe challenged the CID summoning him for a facebook post which he wrote on the Ceylon Electricity Board, the acting IGP has issued a circular directing that when police notice suspects or witnesses to come to the police they must give adequate information to them. The IGP has drawn the attention of the police to the relevant provisions of the criminal procedure code where the police can act only where an offence has been revealed.

05/07/2025

உடுப்பிட்டி தெற்கு வீரபத்திரர் ஆலய திருமஞ்சக் காட்சிகள்...

ஒருமுறை ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த போது ஒருவரிடம் பேச்சுக்கொடுக்க நேரிட்டது — நேரிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏ...
05/07/2025

ஒருமுறை ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த போது ஒருவரிடம் பேச்சுக்கொடுக்க நேரிட்டது — நேரிட்டது என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் நான் வலிந்து அவரிடம் பேச்சுக் கொடுக்கவில்லை. நான் ரயிலில் எவரும் என்னிடம் பேசுவதை நீண்ட நேரம் அனுமதிப்பதும் இல்லை . ஏனென்றால் பெரும்பாலானவர்கள் மிக மிக வழக்கமான பேச்சுக்களைத்தான் பேசுவார்கள். ‘இப்பல்லாம் எந்தப்புள்ளைதான் சார் சொன்ன பேச்சுக் கேக்குது’ என்ற பாணியில். அவர்கள் இயல்பாக வெளிப்பட வேண்டும். ஆகவே கவனித்துக் கொண்டிருப்பேன்.

என் முன் அமர்ந்த அவர் பேசவிரும்பினார் தன்னைச்சுற்றி இருந்த ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு வார்த்தை கேட்டார் என்னிடமும் கேட்டார். பிறகு நான் எழுதிக் கொண்டிருப்பதென்ன என்று விசாரித்தார். என் எழுதும்விசை பொதுவாக பிறரைக் கவர்கிறது. பொதுவாக நான் சொன்ன பதில்களை மீண்டும் மீண்டும் தூண்டி நான் பாபநாசம் படத்திற்கு எழுதியவன் என்பதைக்கண்டுகொண்டார். பாபநாசம் படத்திலிருந்துந்து தொடங்கினார்.

அவரும் சுயம்புலிங்கம் போலவே அடிமட்டத்திலிருந்து வாழ்க்கையை தொடங்கியவர். அவருடைய அப்பா பூனை தன் குட்டிகளை கொண்டு போடுவது போல தன்னுடைய குழந்தைகளை ஒவ்வொரு ஊராக கொண்டு போட்டுவிட்டு போனார். அவரை ஒரு சிற்றூரில் ஒரு மளிகைக்கடையில் விட்டார். “பேசிகிட்டே பொட்டலம் கட்டுவங்க .ஏன்னா நம்ம கை எழுதப்படிக்க கத்துக்கிட்டதுக்கு முன்னால பொட்டலம் மடிக்க கத்துகிட்டதாக்கும்” என்றார். மளிகைக் கடையின் அனைத்து சூட்சுமங்களையும் கற்றுக்கொண்டார். வழக்கம் போல ஒரு கட்டத்தில் ஒரு மளிகைக்கடையின் முழுப்பொறுப்பையும் தாங்குபவரானார்

மளிகை கடை உரிமையாளருக்கு அந்த மளிகைகடையின் எதிர்காலத்தை முன்னெடுத்து செல்பவனாகவும், மிகச் சுளுவில் கிடைத்த ஒரு மாப்பிளையாகவும் அவர் தோன்றியதில் ஆச்சரியமில்லை. அவருடைய ஒரே பெண்ணுக்கு கணவனானார். “அதற்கு பிறகு வாழ்க்கை என்பது ஒரு நாடகம் மாறி ஆயிப்போச்சு சார்”

“என்னென்னு சொல்றது நான் அந்த கடையிலயும் வீட்லயும் சாணி அள்ளிப்போட்டு பொட்டலம் மடிச்சு ராத்திரி கடையை கூட்டி பெருக்கி அந்த மளிகைக்கடை குப்பைக்குள்ளேயே படுத்து தூங்கி எந்திரிச்சவன். அவ சின்ன நாள்லயே கார்ல பள்ளிக்கூடத்துக்கு போனவ. முந்நூறு பவுன் நகைய போட்டு எனக்கு கெட்டிக் குடுத்தார் அவங்கப்பா .வீடு இருந்திச்சு. வாடகைக்கு பத்து வீடு விட்டிருந்தார். தோப்பு உண்டு. அவளுக்க கூடப்படிச்ச பொண்ணுகள்லாம் கோட்டு சூட்டு போட்டுகிட்டு அமெரிக்க ஆப்பிரிக்கான்னு போனாளுக. அப்படி இவ போயிடக்கூடாதுங்கறதுக்காகதான் அவங்கப்பா எனக்கு கட்டி வெச்சாரு. அந்த மளிகைக் கடையில அந்த ஊர்ல அவளக் கட்டிப் போடக்கூடியது அவங்கப்பால்ல நானாக்கும்னு நெனச்சிகிட்டா. அங்க தொடங்கினது எல்லாம். என் வாழ்க்கைய அழிச்சவன் நீ அதுதான் மொத ராத்திரில எங்கிட்ட சொன்னது. கடைசி வரைக்கும் அதேபேச்சுதான்”

இரண்டு குழந்தைகள் மாமனார் இறந்துவிட்டார். திடீரென்று ஒரு நாள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்றுவிட்டாள் கூடவே மாமியாரும். தேடிச்சென்றால் தெரிகிறது அவள் பெயரில் உள்ள சொத்துகளில் பெரும்பாலானவற்றை ஏற்கனவே விற்று விட்டிருந்தாள். சென்னையில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கியிருந்தாள். பலமுறை கெஞ்சி கூத்தாடியும் இங்கே வரவில்லை ஆகவே இங்கே இவர் மளிகைக்கடையை பார்த்துக்கொண்டு இங்கு இருந்தார். அந்தம்மாள் சென்னையில் வேறொரு வாழ்க்கையை தொடங்கினார். மிக விரைவிலேயே விவாகரத்துக்கான நோட்டீஸ் வந்தது. அவளுக்கு இன்னொரு காதல் தொடர்பும் இருப்பது உறுதியாயிற்று .வழக்கு சென்னையில் நடக்கிற்து அதற்காக சென்று கொண்டிருக்கிறார். மளிகைக்கடையும் உடனடியாக காலி செய்யவேண்டும் என்று நோட்டீஸ் வந்திருக்கிறது.

இதை ஏன் சொல்லுகிறார் என்று திகைப்பு ஏற்பட்டது .ஆனால் ஒவ்வொரு முறையும் மிக அந்தரங்கமான வாழ்க்கைக் கதையை ஏதோ ஒருவர் சொல்லாமல் இருப்பதில்லை. மிக அந்தரங்கமான ஒன்றை எடுத்து வெளியே வைப்பதற்கு எல்லாரும் விரும்புகிறார்கள். முற்றிலும் தெரியாதவர்களிடம் எடுத்து வைக்கும்போதுதான் சொன்ன நிறைவு ஏற்படுகிற்து போலும்.

அவர் சொன்னார். ”இன்னும் எத்தன நாள்னு தெரியாது. நானும் சரக்கு ஒவ்வொண்ணா கொறச்சுட்டு வாறன் .கடையை கொடுத்துர வேண்டியதுதான். இருபத்தெட்டு வருசமா நான் நின்ன கடை. ஆனா தொழில் இருக்கு நம்ம கையில. ஒத்த பைசா இல்லாம வேறெங்க போனாலும் இன்னொரு தொழில உருவாக்கிக்குவேன். ஒரு கடை வெச்சு சம்பாரிக்கறது ஒரு காரியமில்ல. ஆனால் பிள்ளகள நெனச்சாதான்…” என்று சொல்லி வரும்போது இடை வெளிவிட்டு அழுகையை அடக்கி கைகளை கட்டி ஒருகணம் உறைந்து உடல் தசைகளை எல்லாம் இறூக்கி அமர்ந்திருந்தார் உடனே நிமிர்ந்து சிரித்து வேடிக்கையாக சொன்னார். ”அந்த சொப்ப்னம் கலஞ்சதுக்கு பிறகு ஒருமாதிரி நல்லாத்தான் இருக்கு” என்றார்

நான் அந்த சிரிப்பு என்ன என்று தான் யோசித்தேன். மிக அந்தரங்கமான ஆழமான ஒன்றை சொல்லும்போது அதை ஏன் சிரிப்பில் கொண்டு முடிக்க வேண்டியிருக்கிறது? அந்த சிரிப்பு எதை நிகர் செய்கிறது?

யோசித்து பார்த்தால் அது இந்த காலகட்டத்தின் ஒரு பிரச்னை .நூறண்டுகளுக்குமுன் அவர் அதை ஒரு சாவடியில் அமர்ந்து சொல்லியிருந்தால் பெரியவர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லியிருப்பார்கள். வழக்கமான வரிகளாகத்தான் இருக்கும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். நாம் செய்ததன் பலனை அறுவடை செய்கிறோம். அவர்கள் செய்ததன் பலனை அவர்கள் அறுவடை செய்வார்கள். எது வந்தாலும் கடவுளை பிடித்துக்கொள். எதுவுமே நிலையானதல்ல. இன்றைக்கு பெரிதாக தெரிவது நாளைக்கு சிறிதாகிவிடும் .மனித வாழ்க்கையில் எப்போதுமே மீட்சிக்கும் ஆறுதலுக்கும் இடமிருக்கிறது …..நானே அத்தனை ஆறுதல் மொழிகளை பலமுறை கேட்டவன்தான்

ஆனால் அந்த ரயில் பெட்டியிலிருந்து அப்படி ஒரு வார்த்தை கூட எழவில்லை. துணுக்குற்றவர்கள் போல அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இருவர் வயதானவர்கள். அவர்களுக்கும் ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ஒருவேளை தங்கள் வாழ்க்கையை எண்ணிக் கொண்டார்களோ என்னவோ .நானும் எதையும் சொல்லவில்லை. அத்தனை அந்தரங்கமான நெகிழ்ச்சியான கொந்தளிப்பு ஒன்று சொல்லப்பட்டதும் உருவானது ஒரு ஒவ்வாமையும் பதற்றமும்தான். சீக்கிரம் அவர் சொல்லி முடித்து விடவேண்டும் என்றும் சீக்கிரம் அதிலிருந்து வெளியே வந்து விடவேண்டும் என்பதும் தான்

இது எப்படி நிகழ்கிறது? இன்னொருவருடைய துயரம் ஏன் அந்த விலக்கத்தை உருவாக்குகிறது? நாம் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாகிவிட்டோம் .நமக்கு நம்முடைய பிரச்னைகள், நம்மைச் சார்ந்தவர்களுடைய பிரச்னைகள் மட்டுமே மொத்தமாக தெரிகின்றன. அதற்கப்பால் ஒரு பிரச்னை நமக்குத் தெரிய வேண்டுமென்றால் அது நம்மையும் நேரடியாகப் பாதிக்கக்கூடிய பிரச்னையாக இருக்க வேண்டும். பிறன் துயரம் பிறன் துயரமேதான். நம் துயரம் அல்ல அது. மானுடர்கள் ஒற்றைத் திரளாக வாழ்ந்த அந்த காலத்தில் பிறன்துயரம் நம் துயரமாக இயல்பாகவே மாறியது .அனைத்து மானுட துயரங்களோடும் நம்மால் இணைய முடிந்தது.

- ஜெயமோகன்

04/07/2025

உட்கார்ந்து கொண்டு கற்பிக்கும் ஆசிரியர் எழுந்து நிற்கும் சமூகத்தை உருவாக்கவே மாட்டார்.!!!
shriff-

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் நடைபெற்ற உணவுத் திருவிழா
03/07/2025

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் நடைபெற்ற உணவுத் திருவிழா

புதைக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பிலும் கொல்லப்பட்ட அப்பாவிகள் தொடர்பிலும் தமிழ் பேசும் மக்கள் பலராலும் விரும்பப்பட்டு, வாக...
02/07/2025

புதைக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பிலும் கொல்லப்பட்ட அப்பாவிகள் தொடர்பிலும் தமிழ் பேசும் மக்கள் பலராலும் விரும்பப்பட்டு, வாக்களிக்கப்பட்ட ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன?

நேர்மையானவர், நியாயமானவராக இருக்கும் ஜனாதிபதி தன் உத்தரவின் கீழ் இன்னும் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட ஆவன செய்வாரா?

முப்படைகளின் தலைவர் என்ற வகையில் முன்பு நடந்த இந்த இனப்படுகொலைகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு கேட்பாரா? ( அவுஸ்திரேலியாவில் பூர்வீக குடிமக்களிடம் தற்போதைய ஐரோப்பிய வம்சாவளி அரசியல்வாதிகள் பல தடவைகள் இனப்படுகொலைகளுக்கு மன்னிப்பு கேட்டிருக்கின்றார்கள்)

நாடளாவிய NPP உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன?
தமிழ் பேசும் NPP உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன? அப்படி ஒரு நிலைப்பாடு இருந்தால் அது அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடா? அல்லது கட்சியின் நிலைப்பாடா?

இலங்கையில் அதிவேக இணைய இணைப்பான ஸ்டார்லிங் இயங்கத் தொடங்கியுள்ளதாக ருவிட்டர் X முதலாளி எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.     ...
02/07/2025

இலங்கையில் அதிவேக இணைய இணைப்பான ஸ்டார்லிங் இயங்கத் தொடங்கியுள்ளதாக ருவிட்டர் X முதலாளி எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இன்றைய கார்ட்டூன் - கொன்று புதைத்த செம்மணி குழந்தையின் சோகம்!- நாமல் அமரசிங்கேவின் கார்ட்டூன்
02/07/2025

இன்றைய கார்ட்டூன் - கொன்று புதைத்த செம்மணி குழந்தையின் சோகம்!
- நாமல் அமரசிங்கேவின் கார்ட்டூன்

02/07/2025

Address

Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uduppiddy News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uduppiddy News:

Share