Yarl Naatham

Yarl Naatham அனுபவம் மிக்க ஊடகவியலயாளர்களால் நிர்வகிக்கப்படும் செய்தி இணையத்தளம்.

யாழ்நாதம் - அனுபவம் வாய்ந்த ஊடகவியலயாளர்களால் நிர்வகிக்கப்படும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் செய்தி இணையத்தளம்.

03/06/2025

மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர் - வவுனியால் கொடூரச் சம்பவம்
------------------



வவுனியாவில் ஒரு அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவரது தலையை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து எடுத்து வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆரம்பப் பிரிவு ஆசிரியையாகப் பணியாற்றிய ரஜூட் சுவர்ணலதா (வயது-32) ஆவார்.

இன்று (03.06) காலை, புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வந்த ஒருவர், தனது மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது தலையை எடுத்து வந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். கொலை செய்த பின்னர் மனைவியின் உடலை நயினாமடு பகுதியில் வீசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு நீண்ட காலமாக நிலவியதாகவும், இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி, கணவர் மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நயினாமடு காட்டுப் பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தலையைத் தனியாக வெட்டி, பிளாஸ்டிக் பையில் வைத்து, மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

கொலையாளியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பொலிஸார் நயினாமடு பகுதியில் தேடுதல் நடத்தி, ஆசிரியையின் சடலத்தைக் கண்டெடுத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

14/05/2025

*அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கக்கோரும் வழக்கை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு*



நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

09/05/2025

*உழவியத்திரத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம் - யாழ்ப்பாணத்தில் துயரம்*

யாழ்ப்பாணம், அராலியின் உழவு இயந்திரத்துக்குள் சிக்கி இளம் குடும்பத் தலைவர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.



இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு நடந்துள்ளது. அராலி மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 38 வயதான பத்மநாதன் தனீஸ்வரன் என்பவரே உயிரிழந்தவராவார்.

உழவு இயந்திரத்தில் இருந்து கீழே இறங்கி நின்று அவர் அதை இயக்கியுள்ளார். திடீரென உழவியந்திரம் நகரத் தொடங்கியபோது அவர் தடுமாறி உழவு இயந்திரத்தின் கீழ் வீழ்ந்துள்ளார். உழவியந்திரம் அவருக்கு மேல் ஏறியுள்ளது.

படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

இறப்பு விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

  : புதிய பாப்பரசராக அமெரிக்கக் கர்தினால் ரொபேர்ட் பிரீவோஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போப் லியோ XIV என்ற பெயரை ஏற்று...
08/05/2025

: புதிய பாப்பரசராக அமெரிக்கக் கர்தினால் ரொபேர்ட் பிரீவோஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் போப் லியோ XIV என்ற பெயரை ஏற்றுக்கொண்டுள்ளார்.

>> Robert Prevost, a cardinal from the United States, has been elected as the new head of the Roman Catholic Church.
>> More than 100 Roman Catholic cardinals meeting in a secret conclave elected the new pope.

08/05/2025

*யாழ்ப்பாணத்தில் யானை தாக்கி 4 வயதுச் சிறுமி உட்பட மூவர் காயம்*



யாழ்ப்பாணம், தாவடியில் யானை தாக்கியதில் 4 வயதுக் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (08.05) நடந்துள்ளது.

அந்தப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவுக்காகக் கொண்டுவரப்பட்ட யானையே திடீரென அங்கிருந்த பக்தர்களைத் தாக்கியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 4 வயதுக் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

08/05/2025

*யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு*



யாழ்ப்பாணம், ஏழாலையில் இன்று (08.05.2025) மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். 39 வயதான குணரட்ணம் குமரன் என்பவரே மின்னல் தாக்கி உயிரிழந்தவராவார்.

யாழ்ப்பாணத்தில் இன்று முற்பகல் முதல் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் மழை பெய்து வருகின்றது.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கங்கள் இருக்கும் என்று எச்சரித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், அது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

08/05/2025

*மர அரிவு இயந்திரத்திச் சிக்கியவர் உயிரிழப்பு - யாழ்ப்பாணத்தில் துயரம்*



மர அரிவு இயந்திரத்துக்குள் சிக்கி குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஏழாலையில் நேற்று இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.

42 வயதான பாலசிங்கம் ஜெகாஸ் என்பவரே உயிரிழந்தவராவார். வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இயந்திரத்துக்குள் நெஞ்சுப் பகுதி சிக்குண்டதால் இவர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சுன்னாகம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

08/05/2025

*யாழ்ப்பாணத்தில் மர்மக் காய்ச்சலால் 21 வயது இளைஞன் உயிரிழப்பு*



தொடர் காய்ச்சல் காரணமாக 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் நடந்துள்ளது.

புலோலி தெற்கைச் சேர்ந்த 21 வயதான பரந்தாமன் லக்சன் என்ற இளைஞரே காய்ச்சலால் உயிரிழந்தவராவார்.

கொழும்பில் தனியார்துறையில் மேற்படிப்பைத் தொடர்ந்து வந்த லக்சன் அண்மையில் தனது வீட்டுக்கு வந்திருந்தார்.

நான்கு நாள்கள் காய்ச்சல் நீடித்த நிலையில் அவரது உடல் மோசமாகியதை அடுத்து நேற்று மந்திகை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனை கொண்டு செல்ல முன்னரே லக்சன் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய, உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பகுப்பாய்வுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

07/05/2025



❝யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சியமைக்கும் உரிமை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே உண்டு. இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணம் மாநகர சபையில் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதால், மாநகர சபை மேயர் பதவி எமக்கே வழங்கப்பட வேண்டும். அதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.❞

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



07/05/2025

L̳o̳c̳a̳l̳ ̳G̳o̳v̳e̳r̳n̳m̳e̳n̳t̳ ̳E̳l̳e̳c̳t̳i̳o̳n̳ ̳|̳ ̳2̳0̳2̳5̳

🔴 யாழ்ப்பாணம் மாவட்டம்

◉ இலங்கைத் தமிழரசுக் கட்சி
★ வாக்குகள் - 88,443 ★ ஆசனங்கள் - 135

◉ தேசிய மக்கள் சக்தி
★ வாக்குகள் - 56,615 ★ ஆசனங்கள் - 81

◉ அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
★ வாக்குகள் - 51,046 ★ ஆசனங்கள் - 79

◉ ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி
★ வாக்குகள் - 35,647 ★ ஆசனங்கள் - 46



06/05/2025

🔴 Breaking: யாழ்ப்பாணம் மாநகர சபை இறுதி நிலவரம்
💥 தமிழரசுக்கு 13 ஆசனம், தேசிய மக்கள் சக்திக்கு 10 ஆசனம்.

L̳o̳c̳a̳l̳ ̳G̳o̳v̳e̳r̳n̳m̳e̳n̳t̳ ̳E̳l̳e̳c̳t̳i̳o̳n̳ ̳|̳ ̳2̳0̳2̳5̳

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 3 போனஸ் ஆசனங்களுடன் 13 ஆசனங்கள் கிடைத்துள்ளன. தமிழ்த் தேசியப் பேரவை (சைக்கிள்) ஒரு போனஸ் ஆசனத்துடன் 12 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

தேசிய மக்கள் சக்திக்கு 6 போனஸ் ஆசனங்களுடன் 10 ஆசனங்களும், ஈ.பி.டி.பி. கட்சிக்கு 4 போனஸ் ஆசனங்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு 2 போனஸ் ஆசனங்களுடன் 4 ஆசனங்களும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு போனஸ் ஆசனமும், ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒரு போனஸ் ஆசனமும் கிடைத்துள்ளன.



06/05/2025

L̳o̳c̳a̳l̳ ̳G̳o̳v̳e̳r̳n̳m̳e̳n̳t̳ ̳E̳l̳e̳c̳t̳i̳o̳n̳ ̳|̳ ̳2̳0̳2̳5̳

🔴 வேலணை பிரதேச சபை - 🏠 வீடு
🔴 ஊர்காவற்றுறை பிரதேச சபை - வீணை
🔴 துணுக்காய் பிரதேச சபை - 🏠 வீடு
🔴 வவுனியா நகர சபை - தேசிய மக்கள் சக்தி
🔴 வவுனியா வடக்கு பிரதேச சபை - 🏠 வீடு
🔴 வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை - தேசிய மக்கள் சக்தி

கிழக்கு மாகாணத்தின் சில முடிவுகள்

🔴 மட்டக்களப்பு நகர சபை - 🏠 வீடு
🔴 வவுணதீவு பிரதேச சபை - 🏠 வீடு
🔴 வாழைச்சேனை பிரதேச சபை - 🏠 வீடு
🔴 வாகரை பிரதேச சபை - 🏠 வீடு
🔴 மண்முனை மேற்கு பிரதேச சபை - 🏠 வீடு
🔴 மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபை - 🏠 வீடு
🔴 மூதூர் பிரதேச சபை - 🏠 வீடு
🔴 திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை - 🏠 வீடு



Address

Jaffna Town
40000

Alerts

Be the first to know and let us send you an email when Yarl Naatham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yarl Naatham:

Share