Yarl Naatham

Yarl Naatham அனுபவம் மிக்க ஊடகவியலயாளர்களால் நிர்வகிக்கப்படும் செய்தி இணையத்தளம்.

யாழ்நாதம் - அனுபவம் வாய்ந்த ஊடகவியலயாளர்களால் நிர்வகிக்கப்படும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் செய்தி இணையத்தளம்.

  🥲யாழ்ப்பாணம்  #குருநகர் பகுதியில் இருந்து பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்ற ரோலர் படகு கடலில் மூழ்கி ப...
06/03/2026

🥲

யாழ்ப்பாணம் #குருநகர் பகுதியில் இருந்து பாலைதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்குச் சென்ற ரோலர் படகு கடலில் மூழ்கி பலர் காணாமல் போய் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

🥲 🥲

இவர்கள் தென்னிலங்கையில் இருந்து வந்தவர்கள் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படகோட்டியின் ச*டலம் உட்பட இருவரின் சட*லங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும், காணாமல் போனவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அங்கிருந்து கிடைக்கும் தகலவல்கள் தெரிவிக்கின்றன.



🏏 தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும்  -20 உலகக்கிண்ண  #அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 254 ஓட்டங்களை இலக்காக நிர...
05/03/2026

🏏 தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் -20 உலகக்கிண்ண #அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 254 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.



🥸 மத்திய கிழக்குக்காக “உருகும்” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 🥸
05/03/2026

🥸 மத்திய கிழக்குக்காக “உருகும்” முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 🥸



🛑    #இலங்கையின் பாணந்துறை அருகே மற்றொரு  #ஈரானியக் கப்பல் தஞ்சம் கோரியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.அந்தக் கப்பல...
05/03/2026

🛑

#இலங்கையின் பாணந்துறை அருகே மற்றொரு #ஈரானியக் கப்பல் தஞ்சம் கோரியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்தக் கப்பலில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்கான கோரிக்கை தூதரகம் ஊடாக விடுக்கப்பட்டுள்ளது என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கோரிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இன்னமும் பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.



🔴UPDATE 🔴IRAN VESSEL 🔴GALE148 பேர்களை காணவில்லை! #அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின்  #தாக்குதலுக்கு இலக்கான  #ஈரானிய போர்க்கப...
04/03/2026

🔴UPDATE 🔴IRAN VESSEL 🔴GALE
148 பேர்களை காணவில்லை!

#அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் #தாக்குதலுக்கு இலக்கான #ஈரானிய போர்க்கப்பல் #இலங்கையின் தென்பகுதியில் கரையொதுங்கிய நிலையில் #இலங்கை கடற்படையால் அதிலிருந்த சிலர் மீட்கப்பட்டுள்ளனர்.

🔴அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதல் காரணமாக மேற்படி #ஈரானிய போர்க்கப்பலில் இருந்த சுமார் 180 பேர்களில் 148 பேர்களை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

🔴இவற்றில் காயங்களுடன் சுமார் 32 பேர் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர்.

🔴ஈரானிய கப்பல் மூழ்கி கொண்டிருக்கும் நிலையில் ஏனையோரையும் மீட்கும் பணிகளில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை ஈடுபட்டு வருகின்றனர்.

NOTE:
சுமார் 180 மாலுமிகளுடன் இது கடந்த மாதம் இந்தியாவில் நடந்த MILAN-2026 மற்றும் International Fleet Review-இல் பங்கேற்ற பிறகு
இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  📣முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.உயிர்த்த...
25/02/2026

📣

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



🥸 தளம்பும் தங்கத்தின் விலை*****⚡ சர்வதேச சந்தையில் விலை சரிந்ததை அடுத்து, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபா...
13/02/2026

🥸 தளம்பும் தங்கத்தின் விலை
*****

⚡ சர்வதேச சந்தையில் விலை சரிந்ததை அடுத்து, இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 5 ஆயிரம் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அண்மைய நாள்களில் தங்கத்தின் விலை அதிகரிப்பதும், குறைவதுமாக ஒரு தளம்பல் நிலையில் காணப்படுகின்றது.

👉 இன்று கொழும்பில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.



👉 மீண்டும் கம்பி எண்ணும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ******அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் வழக்குத் தொட...
13/02/2026

👉 மீண்டும் கம்பி எண்ணும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

******
அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ள ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 5 சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📣 இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களை எதிர்வரும் 20ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் சதோர நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ⚡



கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியில் இன்று காலை நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பாழடைந்த வீடொன்றில் எ...
29/09/2025

கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியில் இன்று காலை நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பாழடைந்த வீடொன்றில் எறிகணை ஒன்றிலிருந்து வெடிமருந்தைப் பிரித்தெடுக்க முயன்றபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கொழும்பு, புறக்கோட்டையில் தனது வாகனத்தைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்திவைத்ததுடன், பொலிஸாருக்கு இடையூறு விளைவிக...
29/09/2025

கொழும்பு, புறக்கோட்டையில் தனது வாகனத்தைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்திவைத்ததுடன், பொலிஸாருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.



25/09/2025

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இன்று (25.09.2025) நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது இரு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.

05/09/2025

எல்ல, வெல்லவாய வீதியில் நேற்று (04) இரவு நடந்த பஸ் விபத்தில் 15 பேர் உயிரி*ழந்துள்ளனர். தங்காலை நகர சபை ஊழியர்கள் பயணித்த பஸ்ஸே விபத்தில் சிக்கியது.

பஸ்ஸில் பயணித்த 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சுற்றுலா சென்ற பஸ்ஸே விபத்தில் சிக்கியுள்ளது.

வீதி வளைவில் எதிரே வந்த ஜீப் ரக வாகனத்தில் மோதிய பஸ், கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பாதுகாப்பு வேலியை உடைத்து சுமார் 300 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 15 பேர் உயிரி*ழந்துள்ளனர். உயிரி*ழந்தவர்களில் தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே.ரூபசேன, நகர சபை ஊழியர்கள் 12 பேர், இரு குழந்தைகள், சாரதி உள்ளடங்குகின்றனர்.

எதிரே பயணித்த ஜீப் ரக வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“பஸ் வளைவில் திரும்பியபோது பிரேக் பிடிக்கவில்லை என்று சாரதி கூறினார். நடத்துநரும் ஏனையோரும் சிரித்தபடி அவர் பொய் சொல்கிறார்கள் என்றனர். அடுத்த வளைவில் திரும்பும்போது சாரதி நான் பொய் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொல்கின்றேன் என்றார்.

அவர் பஸ்ஸை நிறுத்த முயன்றபோதுபோதுதான் எனக்கு உண்மையில் ஏதோ பிரச்சினை இருப்பது தெரிந்ததுத. நான் இன்ஜின் மேல் இருந்தேன். நான் அப்போதே எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். எனக்கு நினைவு வந்தபோது உயிருடன் இருக்கின்றேன்.”

எல்லே பஸ் விபத்தில் சிக்கிக் காயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு கூறியவை இவை.



Address

Jaffna Town
40000

Telephone

+94789894878

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yarl Naatham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yarl Naatham:

Share