Yarl Naatham

Yarl Naatham அனுபவம் மிக்க ஊடகவியலயாளர்களால் நிர்வகிக்கப்படும் செய்தி இணையத்தளம்.

யாழ்நாதம் - அனுபவம் வாய்ந்த ஊடகவியலயாளர்களால் நிர்வகிக்கப்படும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் செய்தி இணையத்தளம்.

கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியில் இன்று காலை நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பாழடைந்த வீடொன்றில் எ...
29/09/2025

கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியில் இன்று காலை நடந்த வெடிப்புச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பாழடைந்த வீடொன்றில் எறிகணை ஒன்றிலிருந்து வெடிமருந்தைப் பிரித்தெடுக்க முயன்றபோது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கொழும்பு, புறக்கோட்டையில் தனது வாகனத்தைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்திவைத்ததுடன், பொலிஸாருக்கு இடையூறு விளைவிக...
29/09/2025

கொழும்பு, புறக்கோட்டையில் தனது வாகனத்தைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி நிறுத்திவைத்ததுடன், பொலிஸாருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார்.



25/09/2025

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இன்று (25.09.2025) நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிப்பர் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முயன்றபோது இரு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடந்துள்ளது.

05/09/2025

எல்ல, வெல்லவாய வீதியில் நேற்று (04) இரவு நடந்த பஸ் விபத்தில் 15 பேர் உயிரி*ழந்துள்ளனர். தங்காலை நகர சபை ஊழியர்கள் பயணித்த பஸ்ஸே விபத்தில் சிக்கியது.

பஸ்ஸில் பயணித்த 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சுற்றுலா சென்ற பஸ்ஸே விபத்தில் சிக்கியுள்ளது.

வீதி வளைவில் எதிரே வந்த ஜீப் ரக வாகனத்தில் மோதிய பஸ், கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பாதுகாப்பு வேலியை உடைத்து சுமார் 300 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 15 பேர் உயிரி*ழந்துள்ளனர். உயிரி*ழந்தவர்களில் தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே.ரூபசேன, நகர சபை ஊழியர்கள் 12 பேர், இரு குழந்தைகள், சாரதி உள்ளடங்குகின்றனர்.

எதிரே பயணித்த ஜீப் ரக வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“பஸ் வளைவில் திரும்பியபோது பிரேக் பிடிக்கவில்லை என்று சாரதி கூறினார். நடத்துநரும் ஏனையோரும் சிரித்தபடி அவர் பொய் சொல்கிறார்கள் என்றனர். அடுத்த வளைவில் திரும்பும்போது சாரதி நான் பொய் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொல்கின்றேன் என்றார்.

அவர் பஸ்ஸை நிறுத்த முயன்றபோதுபோதுதான் எனக்கு உண்மையில் ஏதோ பிரச்சினை இருப்பது தெரிந்ததுத. நான் இன்ஜின் மேல் இருந்தேன். நான் அப்போதே எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். எனக்கு நினைவு வந்தபோது உயிருடன் இருக்கின்றேன்.”

எல்லே பஸ் விபத்தில் சிக்கிக் காயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு கூறியவை இவை.



29/08/2025

🔴 ராஜிதவுக்கு விளக்கமறியல்

நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று ஆஜரானநிலையில், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகள் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

🔴 நிமல் லன்சா கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரான நிமல் லன்சா 2006 ஆம் ஆண்டு நடந்த போராட்டம் ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்றுகூடினார் என்றும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இவர், கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் முற்படுத்துவற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



22/08/2025

: ரணிலுக்கு விளக்கமறியல்

22/08/2025

: குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.



⚡   : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது மேற்கொண்ட...
22/08/2025

⚡ : முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக இன்று நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



18/08/2025

வவுனியா, ஓமந்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு நடந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களும், காயமடைந்தவர்களும் முல்லைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவருகின்றது. கண்டியில் நடந்த மரணவீட்டுக்குச் சென்று திரும்பும்போதே விபத்து நடந்துள்ளது.

15 பேருக்கும் அதிகமானவர்களுடன் பயணித்த மகேந்திரா கப் ரக வாகனம், ஓமந்தை மாணிக்கர்வளவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, டிப்பர் ஒன்றுடன் மோதித் தடம்புரண்டது என்று கூறப்படுகின்றது.

விபத்தில் சிக்கியவர்கள் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்படும் காட்சி இணைக்கப்பட்டுள்ளது.



10/08/2025

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இன்று இரவு நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள், கூலர் வாகனம், டிப்பர் வாகனம், கார் என்பன விபத்தில் சிக்கியுள்ளன. மோட்டார் சைக்கிள் திடீரென நிறுத்தப்பட்டதை அடுத்து விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



03/06/2025

மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர் - வவுனியால் கொடூரச் சம்பவம்
------------------



வவுனியாவில் ஒரு அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, அவரது தலையை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து எடுத்து வந்து பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆரம்பப் பிரிவு ஆசிரியையாகப் பணியாற்றிய ரஜூட் சுவர்ணலதா (வயது-32) ஆவார்.

இன்று (03.06) காலை, புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு வந்த ஒருவர், தனது மனைவியைக் கொன்றுவிட்டு, அவரது தலையை எடுத்து வந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். கொலை செய்த பின்னர் மனைவியின் உடலை நயினாமடு பகுதியில் வீசியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு நீண்ட காலமாக நிலவியதாகவும், இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி, கணவர் மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் நயினாமடு காட்டுப் பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தலையைத் தனியாக வெட்டி, பிளாஸ்டிக் பையில் வைத்து, மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

கொலையாளியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பொலிஸார் நயினாமடு பகுதியில் தேடுதல் நடத்தி, ஆசிரியையின் சடலத்தைக் கண்டெடுத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

14/05/2025

*அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கக்கோரும் வழக்கை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு*



நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Address

Jaffna Town
40000

Alerts

Be the first to know and let us send you an email when Yarl Naatham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yarl Naatham:

Share