05/09/2025
எல்ல, வெல்லவாய வீதியில் நேற்று (04) இரவு நடந்த பஸ் விபத்தில் 15 பேர் உயிரி*ழந்துள்ளனர். தங்காலை நகர சபை ஊழியர்கள் பயணித்த பஸ்ஸே விபத்தில் சிக்கியது.
பஸ்ஸில் பயணித்த 18 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சுற்றுலா சென்ற பஸ்ஸே விபத்தில் சிக்கியுள்ளது.
வீதி வளைவில் எதிரே வந்த ஜீப் ரக வாகனத்தில் மோதிய பஸ், கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பாதுகாப்பு வேலியை உடைத்து சுமார் 300 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 15 பேர் உயிரி*ழந்துள்ளனர். உயிரி*ழந்தவர்களில் தங்காலை நகர சபையின் செயலாளர் டி.டபிள்யூ.கே.ரூபசேன, நகர சபை ஊழியர்கள் 12 பேர், இரு குழந்தைகள், சாரதி உள்ளடங்குகின்றனர்.
எதிரே பயணித்த ஜீப் ரக வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
“பஸ் வளைவில் திரும்பியபோது பிரேக் பிடிக்கவில்லை என்று சாரதி கூறினார். நடத்துநரும் ஏனையோரும் சிரித்தபடி அவர் பொய் சொல்கிறார்கள் என்றனர். அடுத்த வளைவில் திரும்பும்போது சாரதி நான் பொய் சொல்லவில்லை, உண்மையைத்தான் சொல்கின்றேன் என்றார்.
அவர் பஸ்ஸை நிறுத்த முயன்றபோதுபோதுதான் எனக்கு உண்மையில் ஏதோ பிரச்சினை இருப்பது தெரிந்ததுத. நான் இன்ஜின் மேல் இருந்தேன். நான் அப்போதே எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். எனக்கு நினைவு வந்தபோது உயிருடன் இருக்கின்றேன்.”
எல்லே பஸ் விபத்தில் சிக்கிக் காயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு கூறியவை இவை.