IMC tamil

IMC tamil Nila tv

12/10/2025
யா / பொன்பரமானந்தர் மகா வித்தியாலயம் பாடசாலையில் இன்று சிறுவர் தினத்தை முன்னிட்டு, பலாலி போலீஸ் மற்றும் IMC நிறுவனம் இணை...
26/09/2025

யா / பொன்பரமானந்தர் மகா வித்தியாலயம் பாடசாலையில் இன்று சிறுவர் தினத்தை முன்னிட்டு, பலாலி போலீஸ் மற்றும் IMC நிறுவனம் இணைந்து சிறுவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சி மூலம்:

சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி, சிந்தனை, கனவுகள் மற்றும் சமூக பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெற்றோர் மற்றும் சமூக உறுப்பினர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் எவ்வாறு பங்கு பெற வேண்டும் என்பதற்கான கருத்தரங்குகள் நடைபெற்றன.

IMC மற்றும் பலாலி போலீஸ் இணைந்து, பள்ளிகள் மற்றும் சமூகங்களில் தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் உதவி திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுமென உறுதி தெரிவித்தனர்.

💡 சிறுவர்களின் சிரிப்பு மலர, சமூகத்தின் செழிப்பு வளரும் 💐

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 'ரோபோ தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க போட்டி' தொடரில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா...
26/09/2025

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 'ரோபோ தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க போட்டி' தொடரில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி செல்வி. மேகவர்சனா சுபாஸ்கரன் சுகாதாரமும் மருத்துவமும் புத்தாக்கம் எனும் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றார்

குரும்பசிட்டி IMC மாணவர்களுக்கு கல்வி உதவி: திரு. சுப்பிரமணியம் சுதாகரனுக்கு நன்றிகுரும்பசிட்டி, செப்டம்பர் 21 –குரும்பச...
21/09/2025

குரும்பசிட்டி IMC மாணவர்களுக்கு கல்வி உதவி: திரு. சுப்பிரமணியம் சுதாகரனுக்கு நன்றி

குரும்பசிட்டி, செப்டம்பர் 21 –
குரும்பசிட்டி IMC மாணவர்களின் கல்விக்காக தன்னலமின்றி பங்களித்த திரு. சுப்பிரமணியம் சுதாகரனுக்கு எமது நிறுவனத்தின் மனமார்ந்த நன்றிகள்.

தற்போது லண்டனில் வசித்து வருகிற இவர், எமது மாணவர்களுக்கு கல்வி பொருட்களை வழங்கி, தூரத்திலிருந்தும் மாணவர்களின் வளர்ச்சிக்கான அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் மாணவர்கள் உற்சாகத்துடன் கல்வியில் முன்னேறுவதற்கும் பெற்றோர்கள் பெருமை கொள்ளுவதற்கும் வழிவகுக்கிறது.

IMC நிர்வாகம் சார்பில், திரு. சுப்பிரமணியம் சுதாகரனின் தன்னலமற்ற பங்களிப்பை சிறப்பாகக் கவனித்து, எமது கல்விச் செயல்பாடுகளில் அவர் காட்டிய அரிய அக்கறைக்கு நன்றியுடன் போற்றுகிறோம்.

IMC நிர்வாகம்

சாதனைப் படைத்த மாணவன்!பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சைக்கீ தோற்றி மாணவன் ...
13/09/2025

சாதனைப் படைத்த மாணவன்!

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் கல்வி கற்று புலமைப் பரிசில் பரீட்சைக்கீ தோற்றி மாணவன் ஒருவர் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலை சமூகத்துக்கும், பெற்றோருக்கும், தனது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அரங்கநாதன் தத்வார்த்தன் என்ற மாணவனே இவ்வாறு 141 புள்ளிகளை பெற்றுள்ளார்.

குறித்த கிராமமானது பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களை கொண்ட கிராமமாக காணப்படுகிறது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் சிறந்த பெறுபேற்றை அந்த கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலயத்தில் 5 வருடங்களின் பின்னர் குறித்த மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியி...
13/09/2025

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.01.01 வியாழக்கிழமை முதல் 2026.02.13 வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதலாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை 2026.02.14 முதல் 2026.03.02 வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.03.03 செவ்வாய்க் கிழமை முதல் 2026.04.10 வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

இதனையடுத்து முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை 2026.04.11 முதல் 2026.04.19 வரை வழங்கப்படவுள்ளது.

பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையானது 2026.04.20 முதல் 2026.07.24 வரை நடைபெறும்.

அதேநேரம் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் 2026.07.27 திங்கட் கிழமை முதல் 2026.08.07 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை 2026.08.08 திங்கட் கிழமை முதல் 2026.09.06 வெள்ளிக்கிழமை வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2026.09.07 முதல் 2026.12.04 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

🩸ரத்தம் கொடுங்கள் – உயிர் காப்போம்!"🩸🙏 அன்பான அழைப்பு 🙏தேதி: 07.09.2025 (ஞாயிற்றுக்கிழமை)நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்...
01/09/2025

🩸ரத்தம் கொடுங்கள் – உயிர் காப்போம்!"🩸

🙏 அன்பான அழைப்பு 🙏
தேதி: 07.09.2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
இடம்: குரும்பசிட்டி பொதுநோக்கு மண்டபம்

💉 உங்கள் ஒரு பங்கு ரத்தம் – ஒருவரின் உயிர் வாழ்வு!
💖 "நாம் கொடுப்போம்… மனிதாபிமானம் வளர்ப்போம்"

👉 வாருங்கள்!
👉 கலந்து கொள்ளுங்கள்!
👉 உயிர்களை காப்போம்!
---
✨ "நீங்கள் கொடுக்கும் ஒரு புனிதத் துளி – ஒருவரின் வாழ்வைத் தொடரச் செய்யும்!"
✨ "உங்கள் ரத்தம்… அவர்களின் உயிரின் காரணம்!"
✨ "ஒரு உயிருக்கு நீங்கள் நம்பிக்கையாகுங்கள்!"
✨ "இன்று நீங்கள் கொடுக்கும் ரத்தம் – நாளை ஒருவரின் புன்னகை!"
✨ "நாம் ஒன்றாக சேர்ந்து உயிர்களை காப்போம்!"

#ரத்ததானம் #உயிர்காப்போம்

🩸ரத்தம் கொடுங்கள் – உயிர் காப்போம்!"🩸🙏 அன்பான அழைப்பு 🙏தேதி: 07.09.2025 (ஞாயிற்றுக்கிழமை)நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்...
01/09/2025

🩸ரத்தம் கொடுங்கள் – உயிர் காப்போம்!"🩸

🙏 அன்பான அழைப்பு 🙏
தேதி: 07.09.2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
இடம்: குரும்பசிட்டி பொதுநோக்கு மண்டபம்

💉 உங்கள் ஒரு பங்கு ரத்தம் – ஒருவரின் உயிர் வாழ்வு!
💖 "நாம் கொடுப்போம்… மனிதாபிமானம் வளர்ப்போம்"

👉 வாருங்கள்!
👉 கலந்து கொள்ளுங்கள்!
👉 உயிர்களை காப்போம்!

---

✨ "நீங்கள் கொடுக்கும் ஒரு புனிதத் துளி – ஒருவரின் வாழ்வைத் தொடரச் செய்யும்!"
✨ "உங்கள் ரத்தம்… அவர்களின் உயிரின் காரணம்!"
✨ "ஒரு உயிருக்கு நீங்கள் நம்பிக்கையாகுங்கள்!"
✨ "இன்று நீங்கள் கொடுக்கும் ரத்தம் – நாளை ஒருவரின் புன்னகை!"
✨ "நாம் ஒன்றாக சேர்ந்து உயிர்களை காப்போம்!"

#ரத்ததானம் #உயிர்காப்போம்

IMC  கலந்துரையாடல் – மனிதநேயம் மிளிர்ந்த சிறப்பு விருந்துயாழ்ப்பாணம், ஆகஸ்ட் 17:ஐப்பசி மாத சிறுவர் தினத்தையொட்டி, 2025.0...
20/08/2025

IMC கலந்துரையாடல் – மனிதநேயம் மிளிர்ந்த சிறப்பு விருந்து

யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 17:
ஐப்பசி மாத சிறுவர் தினத்தையொட்டி, 2025.08.17 அன்று மாலை, ஐஎம்.சி ஆலோசகர் (போதகர்) அவர்களின் தலைமையில் சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் பல்வேறு சமூக, கல்வி, பண்பாட்டு தொடர்பான விடயங்கள் முன்வைக்கப்பட்டன. உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து, சிறுவர் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் குறித்த பல முக்கியமான அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

கலந்துரையாடல்கள் நிறைவடைந்த பின், ஆலோசகர் (குரு) அவர்களால் சிறப்பு இரவு உணவு வழங்கப்பட்டது. அங்கு கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மையானோர் சைவ மதத்தவர்களாக இருந்தமையால், மேலும் நல்லூர் கந்தனுடைய திருவிழாக்காலத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுவதை கருத்தில் கொண்டு, அசைவ உணவு பாத்திரங்களைத் தவிர்த்து புதிய பாத்திரங்கள் வாங்கப்பட்டன.

அம்மாச்சி உணவகத்திலிருந்து மூன்று வகையான சைவ உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டு, பாரம்பரியமான வாழை இலைகளில் பரிமாறப்பட்டன. இதில், குருவின் துணைவியாரும் மகனும் மிகுந்த பணிவுடனும் அன்புடனும் அனைவருக்கும் உணவை வழங்கியமை, கலந்து கொண்டவர்களின் மனங்களில் ஆழ்ந்த வரவேற்பை பெற்றது.

“நாங்கள் எந்த மதத்தவர், எந்த இனத்தவர் என்பதல்ல முக்கியம்; மனிதநேயம் மற்றும் அன்புடன் வாழ்வதே உயர்ந்த பண்பு” என ஆலோசகர் வலியுறுத்தினார். விரதம் கடைப்பிடிக்காதவர்கள் இருந்த போதிலும், அனைவரும் ஒருமித்த மனப்பான்மையுடன் இவ்விழாவில் இணைந்து உணவுண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் மூலம், மத – இன வேறுபாடுகளை தாண்டிய மனிதநேயமும் ஒற்றுமையும் மிளிர்ந்தது. நிகழ்வு ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற செய்தியை மீண்டும் வலியுறுத்தியதாக அமைந்தது.

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(20) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது
20/08/2025

தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று(20)
மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

நாளை யாழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை‼️வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை ந...
20/08/2025

நாளை யாழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை‼️
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை வியாழக்கிழமை (21) வழங்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இன்று புதன்கிழமை (20) மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்பிரகாரம், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமர் பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 #யாழ்  #மருத்துவ சங்க ஏற்பாட்டில் வீதி  #விபத்து விழிப்புணர்வு.!யாழில் வீதி விபத்து விழிப்புணர்வு கருத்தரங்குயாழ், ஆக்....
20/08/2025

#யாழ் #மருத்துவ சங்க ஏற்பாட்டில் வீதி #விபத்து விழிப்புணர்வு.!

யாழில் வீதி விபத்து விழிப்புணர்வு கருத்தரங்கு

யாழ், ஆக்.20 – யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் கோப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (20) வீதி விபத்து விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.

நாட்டில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், போக்குவரத்து ஆணையாளர், சட்ட வைத்திய நிபுணர் க. மயூரன், சிறுவர் சத்திர சிகிச்சை நிபுணர் ப. சஜந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Address

Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when IMC tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category