IMC tamil

IMC tamil Nila tv

📢 பொன்னான வாய்ப்பு! 50% விசேட கழிவு! 🎓நிர்வாகத்துறையில் உங்கள் பயணத்தை ஆரம்பிக்க இதுவே சரியான நேரம்! International Merit...
17/03/2026

📢 பொன்னான வாய்ப்பு! 50% விசேட கழிவு! 🎓
நிர்வாகத்துறையில் உங்கள் பயணத்தை ஆரம்பிக்க இதுவே சரியான நேரம்! International Merit Campus வழங்கும் HRM மற்றும் மேலாண்மைப் படிப்புகளில் இணைந்து, முதல் 20 நபர்களுக்கான 50% கட்டணக் கழிவைப் பெற்றிடுங்கள். 🎁
நீங்கள்
க.பொ.த சாதாரண தரம் / உயர்தரத்தை பூர்த்தி செய்தவர்களா ?
அரச/ தனியார் துறையில் பணியாற்றுபவரா?
உங்கள் தகுதியை அதிகரித்து கொள்ள, சர்வதேச அங்கிகாரம் கொண்ட Diploma in HRM
இன்றே விண்ணப்பியுங்கள்!
தமிழ்மொழி மூலமான கையேடுகள்.
✅ ISO தரச்சான்றிதழ்
✅ இலவச கற்றல் சாதனங்கள்
✅ வெளிநாட்டிலிருந்தும் கற்கும் வசதி
இப்போதே உங்கள் இருக்கையை முன்பதிவு செய்யுங்கள்!
📞 076 024 0071
💬 WhatsApp: 077 440 0071

📢 பொன்னான வாய்ப்பு! 50% விசேட கழிவு! 🎓

நிர்வாகத்துறையில் உங்கள் பயணத்தை ஆரம்பிக்க இதுவே சரியான நேரம்! International Merit Campus வழங்கும் HRM மற்றும் மேலாண்மைப் படிப்புகளில் இணைந்து, முதல் 20 நபர்களுக்கான 50% கட்டணக் கழிவைப் பெற்றிடுங்கள். 🎁

நீங்கள்
க.பொ.த சாதாரண தரம் / உயர்தரத்தை பூர்த்தி செய்தவர்களா ?
அரச/ தனியார் துறையில் பணியாற்றுபவரா?
உங்கள் தகுதியை அதிகரித்து கொள்ள, சர்வதேச அங்கிகாரம் கொண்ட Diploma in HRM
இன்றே விண்ணப்பியுங்கள்!

தமிழ்மொழி மூலமான கையேடுகள்.

✅ ISO தரச்சான்றிதழ்
✅ இலவச கற்றல் சாதனங்கள்
✅ வெளிநாட்டிலிருந்தும் கற்கும் வசதி

இப்போதே உங்கள் இருக்கையை முன்பதிவு செய்யுங்கள்!
📞 076 024 0071
💬 WhatsApp: 077 440 0071

nternational Merit Campusஎங்களுடன் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுடைய திறன்களையும் திறமைகளையும் வெளி உலகிற்கு வெளிப்படுத்...
13/03/2026

nternational Merit Campus
எங்களுடன் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுடைய திறன்களையும் திறமைகளையும் வெளி உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்கில் பல்வேறு இடங்களில் நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். கலை, நடனம் மற்றும் கலாச்சாரத்தின் மூலம் தங்களது ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்திய அந்த இனிய தருணங்களின் சில புகைப்படத் தொகுப்புகள் இவை.
📸 மாணவர்களின் திறமைகளை பிரதிபலிக்கும் நிகழ்வுகளின் சில தருணங்கள்…

13/03/2026

🎉 11.03.2026 – பிறந்தநாள் வாழ்த்து செய்தி🎂
எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வலுவான தூணாக விளங்கும், எமது நிறுவனத்தின் மதிப்பிற்குரிய தலைவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🌸
உங்கள் சிறந்த தலைமைத்துவம், அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல் காரணமாக இன்று எங்கள் நிறுவனம் பல மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் உயர்ந்த கல்வி மையமாக திகழ்கிறது. 📚✨
சமூகநலச் சேவைகள், பொதுநல முயற்சிகள் மற்றும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் எங்களுக்கு பெருமையையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன.
உங்கள் அனுபவமும் பார்வையும் எங்கள் நிறுவன வளர்ச்சிக்கு முக்கியமான சக்தியாக இருந்து, எங்களை மேலும் உயர்ந்த இலக்குகளுக்குக் கொண்டு செல்கிறது. 🚀
இந்த இனிய நாளில், உங்கள் வாழ்க்கை ஆரோக்கியம், வளம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ந்த வெற்றிகளால் நிரம்பி இருக்க இறைவனை வேண்டுகிறோம். 🙏
👉 International Merit Campus (IMC) சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றியும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும்! 🎉
நிறுவனர் வாழ்த்துச் செய்தி:
“உங்களின் அர்ப்பணிப்பும் உறுதியும் எங்கள் நிறுவன வளர்ச்சியின் முக்கிய சக்தியாக உள்ளது. உங்கள் வழிகாட்டுதலுடன் International Merit Campus மேலும் உயரங்களை அடையும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!”
— நிறுவனர்
International Merit Campus

03/03/2026

🎉 22.02.2026 – பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி 🎂
எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தூண்களாக விளங்கும், எமது நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஆலோசகர்களாகப் பணியாற்றும் இரு மதிப்பிற்குரியவர்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🌸
உங்கள் தலைமைத்துவம், அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல் காரணமாக இன்று எங்கள் நிறுவனம் பல மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் உயர்ந்த கல்வி மையமாக திகழ்கிறது. 📚✨
சமூகநலச் சேவைகள், பொதுநல முயற்சிகள் மற்றும் இளைஞர்களுக்கான பல முன்னேற்ற திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது எங்களுக்கு பெருமையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.
உங்கள் அனுபவமும் ஆலோசனைகளும் எங்கள் வளர்ச்சிக்கான முக்கிய சக்தியாக இருந்து வருகின்றன. உங்கள் பார்வையும் உழைப்பும் எங்களை மேலும் உயர்ந்த இலக்குகளுக்குக் கொண்டு செல்கிறது. 🚀
இந்த இனிய நாளில், உங்கள் வாழ்க்கை ஆரோக்கியம், வளம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ந்த வெற்றிகளால் நிரம்பி இருக்க இறைவனை வேண்டுகிறோம். 🙏
👉 IMC சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றியும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும்!
நிறுவனர் வாழ்த்துச் செய்தி:
“உங்களின் அர்ப்பணிப்பும் உறுதியும் எங்கள் நிறுவன வளர்ச்சியின் முதன்மை சக்தியாக உள்ளது. உங்கள் வழிகாட்டுதலுடன் International Merit Campus மேலும் உயரங்களை அடையும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!”
— நிறுவனர்
International Merit Campus

🎉 22.02.2026 – பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி 🎂எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தூண்களாக விளங்கும், ...
03/03/2026

🎉 22.02.2026 – பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி 🎂
எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தூண்களாக விளங்கும், எமது நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஆலோசகர்களாகப் பணியாற்றும் இரு மதிப்பிற்குரியவர்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! 🌸
உங்கள் தலைமைத்துவம், அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான வழிகாட்டுதல் காரணமாக இன்று எங்கள் நிறுவனம் பல மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் உயர்ந்த கல்வி மையமாக திகழ்கிறது. 📚✨
சமூகநலச் சேவைகள், பொதுநல முயற்சிகள் மற்றும் இளைஞர்களுக்கான பல முன்னேற்ற திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது எங்களுக்கு பெருமையையும் உற்சாகத்தையும் அளிக்கிறது.
உங்கள் அனுபவமும் ஆலோசனைகளும் எங்கள் வளர்ச்சிக்கான முக்கிய சக்தியாக இருந்து வருகின்றன. உங்கள் பார்வையும் உழைப்பும் எங்களை மேலும் உயர்ந்த இலக்குகளுக்குக் கொண்டு செல்கிறது. 🚀
இந்த இனிய நாளில், உங்கள் வாழ்க்கை ஆரோக்கியம், வளம், மகிழ்ச்சி மற்றும் தொடர்ந்த வெற்றிகளால் நிரம்பி இருக்க இறைவனை வேண்டுகிறோம். 🙏
👉 IMC சார்பாக எங்களின் மனமார்ந்த நன்றியும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும்!
நிறுவனர் வாழ்த்துச் செய்தி:
“உங்களின் அர்ப்பணிப்பும் உறுதியும் எங்கள் நிறுவன வளர்ச்சியின் முதன்மை சக்தியாக உள்ளது. உங்கள் வழிகாட்டுதலுடன் International Merit Campus மேலும் உயரங்களை அடையும் என்ற முழு நம்பிக்கை உள்ளது. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!”
— நிறுவனர்
International Merit Campus

27/11/2025

அனர்த்த நிலைமைகளின் போது யாழ் மாவட்ட செயலகத்தில் 24 மணி நேர தொலைபேசி 0212117117

25/11/2025

25.11.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி

++++++. அனர்த்த அவசர முன்னெச்சரிக்கையின் இற்றைப்படுத்தல் ++++++

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் இன்று இரவு ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெறும்.

இது நாளைய தினம்(26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும்.

இந்த தாழமுக்கம் எதிர்வரும் 27.11.2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று அன்றைய தினம் அல்லது 28.11.2025 அன்று புயலாக மாற்றம் பெறும்.

இலங்கையின் காலநிலை வரலாற்றில் இரண்டு காற்றுச் சுழற்சிகள் ஒன்றாகி தென் பகுதியூடாக ஊடறுத்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தை நோக்கி வருவது இதுவே முதல் முறையாகும்.

வங்காள விரிகுடாவின் வரலாற்றிலும் மேற்கு நோக்கி நகர்ந்த காற்றுச் சுழற்சி மீண்டும் கிழக்கு நோக்கி நகர்ந்து இன்னுமொரு காற்றுச் சுழற்சியுடன் இணைந்து பலமடைவதும் இதுவே முதல் முறை.

இதனால் நாடு முழுவதும் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. இந்தக் காற்றுச் சுழற்சியின் செல்வாக்கினுள் இலங்கை முழுவதும் உள்ளடங்கியுள்ளது.

ஒரு தாழ்வுநிலை/தாழமுக்கம்/ காற்றழுத்த தாழ்வு நிலை/ தாழ்வு மண்டலம்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்/ புயல்/ சூறாவளி/ சூப்பர் சூறாவளி எந்த திசை நோக்கி நகர்கின்றதோ அந்த பகுதியே அதன் காற்றுக் குவிப்பு மையமும் மழை வலயமும் ஆகும்.

அந்த வகையில் இந்த தாழமுக்கம் நகரும் போது இந்த காற்றுக் குவிப்பு மற்றும் மழை வலயத்தினுள் தென் மாகாணம், ஊவா மாகாணம்,

மிக முக்கியமாக கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் அடங்குகின்றன.

எனவே நாளை முதல் (26.11.2025)கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கு கனமழை கிடைக்கத் தொடங்கும்.

எதிர்வரும் 27.11.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிகக் கனமழையும், வேகமான காற்று வீசுகையும் நிகழும்.

இந்த நிலைமை எதிர்வரும் 29.11.2025 வரை தொடரும்.

இந்த நாட்களில் அதாவது எதிர்வரும் 28.11.2025 முதல் 29.11.2025 வரை பல பகுதிகளில் திரட்டிய மழைவீழ்ச்சியாக 350 மி.மீ. க்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இன்று கிடைத்துக் கொண்டிருக்கும் மழையினால் கிழக்கு மாகாணத்தின் கணிசமான பகுதிகள் வெள்ள பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

எனவே எதிர்வரும் நாட்களில் கிடைக்கும் கன மழையும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் தீவிரமான வெள்ள நிகழ்வுகளை ஏற்படுத்தும்.

எதிர்வரும் நாட்கள் வானிலை ரீதியாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மிக நெருக்கடியான நாட்களாகும்.

ஆகவே பொதுமக்கள் இந்த எச்சரிக்கையை புறந்தள்ளாமல், போதுமான தயார்ப்படுத்தல் மற்றும் முன்னேற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கணிசமான அளவு தவிர்க்கலாம்.

புயல்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காற்று வீசும்போது...

1. சகல இலத்திரனியல் பொருட்களினதும் மின் இணைப்பைத் துண்டித்து தகவல்களை அறிய தொலைபேசியை மட்டும் பயன்படுத்தி தகவல்களை அறிய வேண்டும்.

2. பாதுகாப்பான உறைவிடத்தின் உள்ளே இருக்கவும்.

3. பாதுகாப்பான இடம் தூரத்தில் உள்ளதாயின் முன்னரே சென்று போக்குவரத்து நெரிசல், வெள்ள அனர்த்தம், காற்றுப் பாதிப்பு என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவும்.

4. வீடு அல்லது குடிசை உடைய அல்லது சரிய ஆரம்பித்தால் மெத்தைகள் மற்றும் போர்வைகளுடன் உறுதியான கட்டில் அல்லது மேசைக்கு கீழே சென்று உங்களைப் பாதுகாக்கவும்.

5. புயலின் அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் கண்பகுதி தொடர்பாக அவதானத்துடன் இருத்தல் வேண்டும். காற்று வீழ்ச்சியடைந்ததும் சூறாவளி முடிவடைந்தது என முடிவெடுக்க வேண்டாம். வலிமையான தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய காற்று வேறு திசையில் இருந்து வீசலாம். உத்தியோக பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கவும்.

6. வாகனம் செலுத்திக் கொண்டிருந்தால் வாகனத்தை நிறுத்தும்போது கடலுக்கு தூரமாகவும் மரங்கள், மின்கம்பங்கள், மின் கம்பிகள் இல்லாத இடத்தில் நிறுத்தவும் வாகனத்துள்ளே இருக்கலாம்.

புயல்/ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல காற்று வீசிய பின்...

1. பாதுகாப்பானது என அறிவிக்கும் வரை வெளியே செல்ல வேண்டாம்.

2. சமையல் வாயு வெளியேற்றத்தினைச் சரிபார்க்கவும். ஈரமாக இருப்பின் மின்சார சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.

3. ஆலோசனைக்காகவும், எச்சரிக்கைக்காகவும் புதிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

4. சேதமடைந்த மின்சார இணைப்புக்கள், பாலங்கள், கட்டிடங்கள், மரங்கள், தொடர்பாக அவதானத்துடன் இருங்கள். வெள்ளநீர்ப்பகுதிக்குள் செல்ல வேண்டாம்.

5. தேவையற்ற தொலைபேசி அழைப்புக்களைத் தவிருங்கள்.

வெள்ளப்பெருக்கு நிகழ்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய தயார்ப்படுத்தல் முறைகள்.

1. வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய இடங்களை அறிந்து வைத்திருத்தல்.

2. வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலப்பகுதிகளில் பாதுகாப்பாக தங்குவதற்குரிய இடங்களை அறிந்து வைத்திருத்தல்.

3. முடிந்தால் உங்கள் பிரதேசங்களில் நாளை மாலைக்குள் இயற்கையான மற்றும் செயற்கையான வடிகால்களைத் துப்புரவாக்குதல்.

4. வெள்ளப்பாதிப்பின் அபாய அறிவிப்புக்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளல்.

5. வெள்ளப்பாதிப்புக் காலங்களில் பாதுகாப்பாக தங்கலாம் என்று அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு வெள்ளம் குறைவாக இருக்கும் போது சென்றடைதல் வேண்டும்.

6. அவசரகால பொதியை எடுப்பதுடன் மிக முக்கியமான ஆவணங்களை வெள்ளத்தினின்றும் பாதுகாத்தல்.

7. வெள்ள அமைத்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள் சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை மிக விரைவாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லல்.

8. மின்சார, தெலைத் தொடர்பு இணைப்புக்களை துண்டித்தல்.

9. இடம்பெயர்ந்தோர் முறையான அறிவிப்பு வரும் வரை வீடுகளுக்கு திரும்பாமை.

10.தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதனால் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடித்தல்.

3. வெள்ள நீர்ப்பகுதிகளுக்கு செல்லாது இருத்தல்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, வரவிருக்கும் அனர்த்தத்தினால் எமக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்ப்போம்.

குறிப்பு: மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முன்னறிவிப்பு வழங்கப்படுகின்றது. தீவிர வானிலை தொடர்பான இந்த முன்னறிவிப்புக்களில் சில மாற்றங்கள் நிகழலாம் என்பதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்

Address

Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when IMC tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category