Unique Fact News

Unique Fact News life is very short

02/03/2026

அவசியமற்ற வகையில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாக்கும் நோக்கில் அதிக அளவில் தங்க வைத்து, அதை வியாபாரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், மீண்டும் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என Ceylon Petroleum Corporation (சிபெட்கோ) அறிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் Mayura Neththikumara இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
எரிபொருள் விநியோகம் தற்போது வழமையான முறையில் நடைபெற்று வருவதாகவும், தேவைக்கு அதிகமாக எரிபொருளை சேமித்து சந்தையில் செயற்கை பற்றாக்குறை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு QR குறியீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும் எனவும் தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லை என்றும், மக்கள் தேவைக்கேற்ப மட்டுமே எரிபொருள் பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். #

காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியத்திலிருந்து இன்று எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படும் என யாழ் மாவ...
01/03/2026

காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியத்திலிருந்து இன்று எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படும் என யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் நிலையிலும் இன்றைய தினம் (01) விசேடமாக களஞ்சியத்தினைத் திறந்து எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகத்தினை மேற்கொள்ளுமாறு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரும், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி. ஜே. ஏ. எஸ். டி. எஸ். ராஜகருணாவிடம் நேற்று இரவு கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

அதற்கமைவாக, பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரின் அறிவுறுத்தலுக்கமைவாக - இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகிக்க வட பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது என யாழ் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் முதல் இடத்தில் BOCஇலங்கையின் வங்கிக்கட்டமைப்பு கடந்த வருடத்தில் உழைத்த வரிக்கு பின்னரான இலாபம் தற்போது வெளியி...
28/02/2026

இலங்கையில் முதல் இடத்தில் BOC

இலங்கையின் வங்கிக்கட்டமைப்பு கடந்த வருடத்தில் உழைத்த வரிக்கு பின்னரான இலாபம் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதன் படி இலங்கை வங்கி இம்முறையும் 76 பில்லியன் வரிக்கு பின்னரான இலாபத்தை பெற்று முதல் இடத்தில் உள்ளது.

19/01/2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த தென்னிலங்கை மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது.

அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர்.

அதன் போதே , 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில் , 203 மாணவர்கள் காணப்பட்டமையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து , அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டமை தெரிய வந்துள்ளது.

இது தொடர்பில் மருத்துவபீடத்தினர் தெரிவிக்கையில், மாணவிகள் மத்தியில் உயிரியல் பாடத்தில் 3 சாதாரண (S) சித்திகளை பெற்ற கண்டியை சேர்ந்த யுவதியும் மருத்துவ பீட மாணவர் விடுதியில் தங்கியிருந்து , விரிவுரைகளுக்கு வந்து சென்றுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமையவே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

22/12/2025

யாழ்ப்பாண இளைஞர்கள்...

யாழ்ப்பாணத்துக்கான கடும் எச்சரிக்கை!

வரும் காலங்களில் வடக்கு மாகாணம் முழுவதும்
ஒவ்வொரு தொழில் துறையிலும் முதலாளிகளாக சிங்கள இளைஞர்கள் இருப்பார்கள்.

அதே நேரம் —
👉 “வேலை இல்லை” என்று அழும் ஊர்களிலேயே
👉 வேலைக்கு ஆட்கள் இல்லாமல் நிறுவனங்கள் மூடிக்கொண்டு இருக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் ஒரு சுற்று போய்ப் பாருங்கள்.
ஹோட்டல்கள், பேக்கரிகள், பலசரக்கு கடைகள், சூப்பர் மார்க்கெட்கள்—
👉 வெளிமாவட்ட இளைஞர்கள்,
👉 மலையக யுவதிகள்,
👉 பகுதி நேரம் செய்யும் சிங்கள மாணவர்கள் தான் அதிகம்.

அப்படியென்றால் யாழ்ப்பாண இளைஞர்கள்?
வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
ஆனால் பயம் இல்லை.
ஏன்?
👉 வெளிநாட்டு காசு எங்கோ இருந்து வருகிறது.
👉 தம்பி, அண்ணா, மாமா, மச்சான்… ஏதோ ஒரு வழி.

ரிக்ரொக்கில்
che, uzuru, enaku soru song, akkachchi mass, cute
என்று தலையாட்டி நடக்கிறவன் “பிரபலம்”.
வேலை? மதிப்பு? ஒழுக்கம்?
— அதெல்லாம் second priority.

பல தொழிலிடங்கள் சொல்லும் உண்மை இதுதான்:

“யாழ்ப்பாண இளைஞர்களை வைத்து வேலை நடத்த முடியல.”

👉 வேலைக்கு வருவான்
👉 உடுப்பு கலையாமல் நிற்கணும்
👉 சம்பளம் அதிகம் வேணும்
👉 வேலை சொல்லினா — நாளையே காணாமல் போய்விடுவான்

RR பிரியாணிக்கு முன் பிரபலமான ஒரு கடை
👉 இன்று பூட்டு.
👉 காரணம்: வேலைக்கு ஆட்கள் இல்லை.

இது தனிப்பட்ட சம்பவம் இல்லை.
👉 பல நிறுவனங்கள்
👉 இதே காரணத்தால்
👉 அமைதியாக மூடப்பட்டுவிட்டன.

வெளிநாட்டு தொடர்புகள்
அடுத்த தலைமுறையோடு முடிவடையும்.
அப்போது?

👉 வேலைவாய்ப்பு
👉 தொழில்
👉 பொருளாதாரம்

யாரிடம் போகும்?
— இப்போது உழைக்கும் அவர்களிடமே.

சேர்ட் கசங்காமல்
வியர்வை வராமல்
“பந்தாவா இருந்து கைநிறைய காசு”
என்ற mindset-ல்
ஒரு ஆபத்தான இளம் சமூகம் உருவாகுகிறது.

❗ இது தனி மனித பிரச்சனை இல்லை.
❗ இது சமூகப் பேராபத்து.
❗ இப்போ திருந்தவில்லை என்றால்,
நாளை வாய்ப்பே இருக்காது.

✊ உழைப்பு = இழிவு அல்ல.
✊ வேலை = அடிமைத்தனம் அல்ல.
✊ மாற்றம் இப்போதே தேவை.

— யாழ்ப்பாணத்துக்கான கடும் எச்சரிக்கை.

©® யாழ்ப்பாணம்

கிராமசேவகர்களில் சம்பள பணத்தில் இருந்து மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்யவில்லை.  ஒழுங்காக பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் பதி...
11/12/2025

கிராமசேவகர்களில் சம்பள பணத்தில் இருந்து மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்யவில்லை. ஒழுங்காக பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் பதிவுவை செய்யுங்கள். மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் உங்களுக்கு யாரும் உதவ முடியாமல் வீட்டிற்கு செல்ல நேரிடும் 😡😡😡

அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளைக் கொண்ட  ‘Rebuilding Sri Lanka’  நிதியத்தின் முகாமைத்துவக் குழு நியமனம்இலங்கையின் ...
04/12/2025

அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளைக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தின் முகாமைத்துவக் குழு நியமனம்

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இந்த நிதியம் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ நிதியமாக நிறுவப்பட உள்ளதுடன், அதன் முகாமைத்துவக் குழுவில் அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குவர்.

தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அதன் தலைவராக செயற்படுவதோடு, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு குழுவின் அழைப்பாளராக செயற்படுவார்.

ஏனைய உறுப்பினர்களாக,

 வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி, மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப்,
 நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும,
 ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ,
 வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுகீஸ்வர குணவர்தன,
 ஹேலிஸ் குழுமத்தின் தலைவர் மொஹான் பண்டிதகே,
 ஜோன் கீல்ஸ் தலைவர் கிரிஷான் பாலேந்திரன்,
 எட்கன் ஸ்பென்ஸ் உப தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க,
 பிரண்டெக்ஸ் குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி அஷ்ரஃப் ஒமர்,
 LOLC நிறைவேற்றுத் தலைவர் இஷார நாணயக்கார ஆகியோர் செயல்படுவார்கள்.

நிதியத்தை செயற்திறனாக நிர்வகிக்கும் அதிகாரம், முகாமைத்துவக் குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பொறுப்புகளில் தேவைகளை மதிப்பிடுதல், முன்னுரிமைகளை நிறுவுதல், நிதியை ஒதுக்குதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு நிதியை விடுவித்தல் ஆகியவை அடங்கும்.

நிதியம் தொடர்பான அனைத்து நிதி நிர்வாகம், கணக்காய்வு மற்றும் அனைத்து நிதி நடவடிக்கைகளிலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை இந்தக் குழு உறுதி செய்யும்.

அதன்படி, நன்கொடையாளர்கள் தமது நிதி உதவிகளை உள்நாட்டு அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த எந்தவொரு நபருக்கும், இலங்கை ரூபாவிலோ அல்லது வேறு எந்த நாணய அலகிலோ பின்வரும் இலங்கை வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்ய முடியும்.

01. Account Name: Deputy Secretary to the Treasury
Account Number: 2026450
Bank: Bank of Ceylon
Taprobane branch
Swift code : BCEYLKLX

மேலும், இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் நேரடியாக நிதியை வைப்புச் செய்யும் நன்கொடையாளர்கள், பின்வரும் கணக்குகள் மூலம் நிதியை வைப்புச் செய்ய முடியும்.

வெளிநாட்டு நாணய அலகுகளுக்கான கணக்கு விபரங்கள்:

1. US Dollar (USD)
Bank: Deutsche Bank Trust Company Americas, New York, USA
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 04015541
Routing Number: 021001033
SWIFT: BKTRUS33###

2. Euro (EUR)
Bank: ODDO BHF Bank, Frankfurt am Main, Germany
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 0000739854
IBAN: DE39500202000000739854
SWIFT: BHFBDEFF500

3. Pound Sterling (GBP) – Account 1
Bank: HSBC Bank Plc, London, UK
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 39600144
Sort Code: 40-05-15
IBAN: GB48MIDL40051539600144
SWIFT: MIDLGB22###

4. Pound Sterling (GBP) – Account 2
Bank: Bank of Ceylon (UK) Ltd, London, UK
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 88001249
Sort Code: 40-50-56
IBAN: GB89BCEY40505688001249
SWIFT: BCEYGB2L###

5. Japanese Yen (JPY)
Bank: MUFG Bank, Tokyo, Japan
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 653-0407895
SWIFT: BOTKJPJT###

6. Australian Dollar (AUD)
Bank: Reserve Bank of Australia
Recipient Account Name: Central Bank of Sri Lanka
Account Number: 81736-4
BSB: 092002
SWIFT: RSBKAU2S###

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-12-01

29/11/2025

யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியானது!

(29.11.2025 பி.ப 4.00 மணிவரையான தரவுகளின் அடிப்படையில்)

நிலவுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6288 குடும்பங்களை சேர்ந்த 19 ஆயிரத்து 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பாதிப்புகள் குறிப்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 432 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு வீடுகள் பகுதிகளில் சேதமடைந்துள்ளன. நான்கு பாதுகாப்பான இடங்களில் 60 குடும்பங்களை சேர்ந்த 186பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 1664 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 521 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 27 குடும்பங்களை சேர்ந்த 92 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஊர்க்காவல்துறை பிரதேச செயலர் பிரிவில் 229 குடும்பங்களைச் சேர்ந்த 760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் 47 குடும்பங்களை சேர்ந்த 166 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வேலணைப் பிரதேச செயலர் பிரிவில் 328 குடும்பங்களை சேர்ந்த 1035 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 12 வீடுகளும் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. மூன்று பாதுகாப்பு மையங்களில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 420 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 335 குடும்பங்களை சேர்ந்த 1085 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 வீடுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. ஆறு பாதுகாப்பு மையங்களில் 66 குடும்பங்களை சேர்ந்த 393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு வீடுகள் முழுமையாகவும் 14 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 180 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகர் பிரதேச செயலப்பிரிவில் அறுபது குடும்பங்களை சேர்ந்த 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. பாதுகாப்பு மையம் ஒன்றில் ஆறு குடும்பங்களை சேர்ந்த 18 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 508 குடும்பங்களைச் சேர்ந்த 1621 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 57 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 57 குடும்பங்களை சேர்ந்த 185 பேர் பாதிக்கப்பட்ட உள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றும் அடிப்படைக் கட்டமைப்பு ஒன்றும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

தெல்லிப்பழைப் பிரதேச செயலர் பிரிவில் 601 குடும்பங்களை சேர்ந்த 2042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் 1183 குடும்பங்களை சேர்ந்த 3526 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒரு வீடு முழுமையாகவும் ஒன்பது வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளன. ஐந்து அடிப்படைக் கட்டமைப்புகள் முழுமையாகவும் இரண்டு அடிக்கடி கட்டமைப்புகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 58 குடும்பங்களை சேர்ந்த 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒன்பது வீடுகள் பகுதி அளவில் சேதம் அடைந்துள்ளதுடன் ஒரு அடிப்படைக் கட்டமைப்பும் சேதமடைந்துள்ளது. ஒரு பாதுகாப்பு மையத்தில் எட்டு குடும்பங்களை சேர்ந்த 29 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 353 குடும்பங்களை சேர்ந்த 1104 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரண்டு பாதுகாப்பு மையங்களில் 95 குடும்பங்களை சேர்ந்த 255 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

28/11/2025

யாழ்ப்பாணத்தில் டயலொக், ஏர்டெல் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. MOBITEL மற்றும் HUTCH தொலைத்தொடர்புகள் பாவனையில் இருக்கின்றன. அனர்த்ப்பகுதிகளில் பாதிப்புக்குள்ளானவர்கள் குறித்த தொலைதொடர்பு எண்களின் மூலமாக தொடர்பு கொள்ள முயற்சியுங்கள்.

28/11/2025

இரணைமடுக்குளத்தின் நீரேந்து பிரதேசங்களிலிருந்து நீர்வரத்து அதிகரிக்கும் அபாயம்.
மேலதிக நீரை வெளியேற்ற குளத்தின் வால்கட்டுப்பகுதியினை வெட்டிவிட வேண்டிய நிலமை தோற்றம் பெறலாம்
மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை.

36 அடி நீர்கொள்ளளவுடைய இரணைமடுக்குளமானது தற்போது 36 அடி நீர் கொள்ளளவை எட்டியுள்ளது.

இன்று காலை முதல் முழுமையான அளவு அனைத்துவான் கதவுகளும் திறந்துவிட்டிருந்த நிலமையிலும் குளத்தின் கொள்ளளவினை தாண்டி நீரேந்து பிரதேசங்களிலிருந்து நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.

இந் நிலமையினை கருத்தில் கொண்டு குளத்தின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அதன் வால்கட்டுப்பகுதியினை வெட்டி மேலதிக நீரினை விரைவாக வெளியேற்ற வேண்டிய சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.

எனவே குளத்தின் கீழ் பகுதிகளில் வாழும் மக்கள் குறிப்பாக இராமநாதபுரம், வட்டக்கச்சி ,மாயவனூர் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படும் அபாய பிரதேசங்களில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்கள் உடனுக்குடன் அறிவிக்கப்படும்

மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்டச்செயலகம்
கிளிநொச்சி

28/11/2025

யாழ்ப்பாணத்தில் Dialog , Airtel Coverage இல்லை ... Mobital only working

📢 தனியார் நிறுவன மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கவனத்திற்கு நாம் எல்லாரும் மனிதர்கள்.உங்கள் நிறுவனத்தை  கொண்டு செல்வது...
28/11/2025

📢 தனியார் நிறுவன மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் கவனத்திற்கு

நாம் எல்லாரும் மனிதர்கள்.
உங்கள் நிறுவனத்தை கொண்டு செல்வது — உங்கள் ஊழியர்களால்தான்.

இந்த மிக மோசமான காலநிலையில —
🌧️ கனமழையில் நனைந்து
💨 பலத்த காற்றை எதிர்த்து
🌊 வெள்ளத்தைக் கடந்து
வேலையிற்கு வருவது அவர்களுக்கு மிகப் பெரிய சிரமம்.

இத்தனை துன்பங்களுக்குள்ளும் சிலர் வேலைக்கு வர முயற்சிக்கிறார்கள்.

🙏 இயன்ற அளவில், இந்த மோசமான வானிலை சமநிலை ஆகும் வரை
உங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குங்கள்.
அவர்கள் பாதுகாப்பே முதன்மை. ❤️

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Unique Fact News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique Fact News:

Share