Unique Fact News

Unique Fact News life is very short

நீதிக்காக காத்திருக்கும் கிருசாந்தியின் ஏக்கம் இன்னும் வாழ்கிறது.
25/06/2025

நீதிக்காக காத்திருக்கும் கிருசாந்தியின் ஏக்கம் இன்னும் வாழ்கிறது.

22/06/2025

யாழில் Zee tamil சரிகமப பிரபலங்களின் இசைநிகழ்ச்சி மினி சூறாவளி மழையால் நிறுத்தம் ‼️

பண்ணை கடற்கரையின் தோற்றம்பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்து கிடக்கும் பண்ணை கடற்கரை
14/05/2025

பண்ணை கடற்கரையின் தோற்றம்

பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்து கிடக்கும் பண்ணை கடற்கரை

நயினாதீவு  குறிகட்டுவானுக்குமிடையில் சேவையில் ஈடுபட்டு நீண்ட காலமாக சேவையில் ஈடுபட முடியாமல் கடுமையாக  பழுதடைந்து  நீண்ட...
13/05/2025

நயினாதீவு குறிகட்டுவானுக்குமிடையில் சேவையில் ஈடுபட்டு நீண்ட காலமாக சேவையில் ஈடுபட முடியாமல் கடுமையாக பழுதடைந்து நீண்ட நாட்களாக பாலத்தில் தரித்து நின்ற பாதைப் படகு காற்றின் வேகத்தில் இன்று கடலில் மூழ்கியது ….

நீண்டதூர பேருந்து பயணம், ஜன்னல் ஓர இருக்கை, குளிர்ந்த காற்று, பிடித்தவர்களுடனான இருக்கை, பிடித்த பாடல்  இப்படி அழகான  பய...
12/05/2025

நீண்டதூர பேருந்து பயணம், ஜன்னல் ஓர இருக்கை, குளிர்ந்த காற்று, பிடித்தவர்களுடனான இருக்கை, பிடித்த பாடல் இப்படி அழகான பயணம் நினைத்தும் பார்க்க முடியாத ஆபத்தில் முடிந்தால்?

தொடந்து வருகின்ற விடுமுறை நாட்களில் தன் குடும்பத்தை, குழந்தைகளை ஆசையோடு பார்க்க சென்றவர்கள், நண்பர்களை பார்க்க சென்றவர்கள், அவசர வேலையாக சென்றவர்கள், ஏதோ ஒரு கனவை சுமந்துக்கொண்டும், எதிர்ப்பார்புகளோடும் சென்றவர்கள்.

அனைத்தையும் மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது சற்றும் நினைத்திருக்க மாட்டார்கள் உயிர் இப்படியே போய்விடும் என்று,

பேருந்து சுழன்று பள்ளத்தில் விழுந்துக்கொண்டிருந்த அந்த நொடியில் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் எத்தனை எத்தனை தவிப்புகள் இருந்திருக்கும்.
எத்தனை அழு குரல் கடவுளை அழைத்திருக்கும்.

மரணம் ஒன்றும் அவ்வளவு தொலைவில் எல்லாம் இல்லை, நம் கூடவே நிழல் போல தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சரியான நேரம் வருகின்ற போது நம்மை வாரி அனைத்துக்கொள்ள காத்துக்கொண்டு இருக்கிறது.

காயமடைந்தவர்கள் அனைவரும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம்.

அனைவரது ஆத்மாவும் அமைதியாய் இளைப்பாரட்டும் 🙏🏽💔

ஆக்கம் :விஷோ

06/05/2025

வல்வெட்டித்துறை நகரசபைக்கான இறுதி முடிவுகளின்படி வட்டாரம் அடிப்படையாக
1.மயிலியதனை
2.சிவன்கோவில்
3.ஆதிகோவிலடி
4.ரேவடி
5.வல்வெட்டி வடக்கு
6.பொலிகண்டி
7.வல்வெட்டித்துறை(பசார்)
என்பன உட்பட்ட ஏழு வட்டாரம் M.K சிவாஜிலிங்கம் தலமை வேட்பாளராக போட்டியிட்ட தமிழ்த்தேசிய பேரவை வெற்றி பெற்றது
8.கொம்மந்தறை
9.தொண்டைமானாறு உட்பட்ட இரண்டு வட்டாரம்
தமிழரசுக்கட்சி வெற்றிபெற்றது

06/05/2025

*⭕உள்ளூராட்சிசபை தேர்தல் | LOCAL GOVERNMENT ELECTION 2025*
*______________________*
நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் மாவட்ட ரீதியில் பதிவான வாக்குவீதம்,*

Jaffna 56.6℅
Mullaitivu - 61.32%
Mannar - 70.15%
Vavuniya - 59.65%
Kilinochchi - 61%
Nuwara-Eliya - 60%
Batticaloa - 61%
Badulla - 60%
Anuradhapura - 60%
Polonnaruwa - 64%
Monaragala - 61%
Kegalle - 58%
Kalutara - 61%
Galle - 63%
Digamadulla - 63%
Trincomalee - 67%
Colombo - 52%
Matara - 58%
Matale - 62%
Rathnapura - 60%
Puttalam - 55%

சரித் (மிகா) 2025 ஏப்ரல் மாத இறுதியில், சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட தொழில்நுட்பப் பீடத்தில் கல்வி பயின்று வந...
01/05/2025

சரித் (மிகா)

2025 ஏப்ரல் மாத இறுதியில், சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட தொழில்நுட்பப் பீடத்தில் கல்வி பயின்று வந்த சரித் (மிகா) தற்கொலை…!

சரித் தனது விடுதியில் தங்கியிருந்த போது, சீனியர் மாணவர்களால் சித்திரவதை செய்யப்பட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

“நீ அழும் வரை அடிப்போம்”,

“rules மீறினாய்” என்ற பெயரில், உடலிலும் மனதிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
• கீற்றரை சூடாக்கி உடம்பில் வைத்தனர்
• கவட்டுக்குள் அடித்தனர்
• தூக்கி எறிந்தனர்
• “நீ அழும் வரை அடிப்போம்” என அடித்து அழ வைத்தனர்
• உடையை கழற்றச்செய்து, முட்டிக்காலில் நிற்க வைத்தனர்

முடிவில், தன் வாழ்க்கையை முடிக்க மட்டுமே ஒரு வழி இருக்கிறது என எண்ணிய அவர், தற்கொலை செய்தார்.

ஒரு தனிப்பட்ட மாணவரின் மரணம் அல்ல. இது நம் கல்வி நிறுவனங்களின், விடுதி மரபுகளின், மாணவர் ஒன்றியங்களின் செயற்பாட்டு தோல்வியைக் காட்டும் சமூகக் குற்றச்சாட்டாகும்.
• ஒரு கொடூரமான சித்திரவதைக் கலாச்சாரத்தின் பிண்ணனி
• பல்கலைக்கழகங்களில் ஒழுங்கற்ற சீனியர் கலாச்சாரம்
• சித்திரவதை ஒன்றை மரபாக ஏற்றுக் கொள்கிற விடுதி சூழல்
• மாணவர் ஒன்றியங்களின் இயலாமை
• பல்கலைக்கழக நிர்வாகத்தின் சாலமன் பொறுப்பு
• சமூகத்தின் மௌன அனுமதி

***

2025 ஏப்ரல் மாத இறுதியில், சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் சரித் (மிகா) தற்கொலை…!!

இரண்டாம் வருட தொழில்நுட்ப பீட மாணவரான இவர், கண்டி மாவட்டத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரதேசத்தில் இருந்து, கல்வி கனவுகளை சுமந்து பல்கலைக்கழகத்துக்குள் அடியெடுத்தார்.

விடுதியில் வழிகாட்டும் மாணவராக சிறப்பாக செயல்பட்டு வந்த சரித், யூனியர் மாணவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் தங்கியிருந்தார். ஆனால், “shorts அணிந்து வெளியே வந்தது” என்ற பரிதாபகரமான காரணத்தால், சீனியர்களால் விதிக்கப்பட்ட ‘சட்டவிரோத விதிகள்’ மீறப்பட்டதாக கூறி, அவர் மீது காட்டுமிராண்டித் தாக்குதல்கள் நிகழ்ந்தன.

அழிப்பிற்கு வழிவகுத்த சித்திரவதை அனைத்தும் அவரது யூனியர் மாணவர்களே பார்த்துள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியவராக இருந்த ஒருவரை அவமானகரமாக அந்நிலையில் காண நேரிட்டது. இதனால் ஏற்பட்ட மனவேதனை, அவமானம், மன அழுத்தம் — அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, சரித் தனது வாழ்நாளை முடிவுக்கு கொண்டு வரும்படி தூண்டியது.

அடுத்த நாள் வீட்டுக்குத் திரும்பிய சரித், தன்னை ஆழமாக நேசித்த தாய் மற்றும் தம்பியிடம் சில வார்த்தைகள் சொன்னார். பின்னர், அவரது தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ( 29.04.2025 ) காணப்பட்டார்.

“படிக்க அனுப்பினோம்… ஆனால்.. ?”

ஒரு பெற்றோர், ஒரு குடும்பம், ஒரு கிராமம் — தங்கள் இயலாமையையும் மீறி ஒரு பிள்ளையை உயர்த்த அனுப்பியதற்கான பதிலா இது?

சரித்தின் உயிரிழப்பு ஒருபோதும் இழந்துவிடக்கூடாதது. ஆனால் அவரது உயிர் நம் அனைவருக்குமான விழிப்பூட்டலாக மாற வேண்டும். இதுபோன்ற ஒரு உயிர் இழப்பு மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக, நியாயம் நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம்.

எனவே, நாங்கள் வலியுறுத்துகிறோம்:
1. சரித் சம்பவம் தொடர்பாக முழுமையான, சுயாதீன விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
2. சித்திரவதை செய்த மாணவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. அனைத்து பல்கலைக்கழக விடுதிகளிலும் பாதுகாப்பு, மனநல சிக்கல்களுக்கான ஆதரவு அமைப்புகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
4. மாணவர் ஒன்றியங்களின் கட்டுப்பாட்டை புனராய்வு செய்து, நேர்மையான சமூகப் பார்வையுடன் அவை செயல்படத் தீர்மானிக்க வேண்டும்.
5 பல்கலைக்கழகங்கள், மாணவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட வேண்டும்







01.05.2025
இலங்கையின் கல்வி அமைச்சின் ஊடக செய்தி :
சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணத்தைத் தொடர்பாக இதற்கான முழுமையான விசாரணைகள் முடிந்ததும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு உறுதியாக தெரிவித்துள்ளது.

நிம்மதியாய் கால் நீட்டி படுக்ககூட முடியாத, சுவர்களில் மண் உதிர்ந்து கொண்டிக்கொண்டிருக்கும் இரண்டு அறைகளை கொண்ட லயத்து வீ...
28/04/2025

நிம்மதியாய் கால் நீட்டி படுக்ககூட முடியாத, சுவர்களில் மண் உதிர்ந்து கொண்டிக்கொண்டிருக்கும்
இரண்டு அறைகளை கொண்ட
லயத்து வீடு அது!
அவனின் சவப்பெட்டியை கூட இலகுவாக அந்த வாசலில் கொண்டு செல்ல முடியாது!

அவனின் அம்மா இந்தமுறை
அவன் தங்கை பெற்ற மூன்று A சித்திகளை அவனிடம் சொல்லி "எப்படி இனி நம்பி உன் தங்கச்சிய கெம்பஸ் அனுப்புவேன் என்று கதறி துடித்துக்கொண்டு இருக்கின்றார்!

பாடசாலையிலும் சமூகத்திலும் மிக கட்டுக்கோப்பாக வளர்ந்த ஒருவன்!
எத்தனை கனவுகளோடு பெற்றோர்
அனுப்பியிருப்பார்கள் அவனை!

அவனின் ஒரு நேர பஸ் காசுக்காக தாய் இரண்டு நாட்கள் கொழுந்து கூடையை நிச்சயம் சுமந்திருப்பார்!
இனி எந்த வார்த்தை சொல்லி அந்த
தாயை நாங்கள் சாந்தப்படுத்த முடியும்?

கெம்பஸ் விடுமுறை நாட்களில் அவன் எங்களோடு வேலைக்கு வந்து சென்றது நினைவுக்கு வருகின்றது!

முதலாம் ஆண்டு ஹொஸ்ட்டல் வாழ்க்கை முடிந்தவுடன் வெளியே அறைகளுக்கு இவர்கள் சென்ற போது "ஏன்டா தனித்தனியா பிரிஞ்சி ரூம் எடுத்திங்க நம்ப ஏரியா பசங்க எல்லாம் சேர்ந்து இருந்திருக்கலாமே'
என்று சொல்லி கோபப்பட்டேன்!
பிரதேச வாதமில்லை அதன் அர்த்தம்
ஒன்றாய் இருக்கும் போது எங்கள் இயல்பு மாறாது,நாங்கள் யார் ஏன் இங்கு வந்தோம் என்ற உணர்வோடு ஓரளவேனும் இருப்போம் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதற்காக!

இவனோடு நான் தனிப்பட்ட முறையில் அதிகமாய் பழகியதில்லை ஆனால் என் பல்கலைக்கழக இறுதி நாளில் காணும் போது ஒரு உதாரணத்தை சொல்லி அவனுங்க மாதிரி ஆகிடாதிங்க தம்பி கவனமாக இருங்க ஒத்துமையா இருங்க!
யுனிக்கு Fun பன்ன கொஞ்ச பேர் வந்துருக்காங்க! அவங்களுக்கு கனடா யூரோப் விசா ரெடியா இருக்கு நமக்கு அப்புடி இல்லடா Bye என்று சொல்லிவிட்டு வந்தேன்.
மனம் இன்னும் ஏற்கவில்லை!

கட்டுப்பாடுகளற்ற சுதந்திரம் ஆபத்தானது என்பது உண்மை!
Copy post
News 📌👉காதலியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டில் படிக்கும் கொட்டகலையைச் சேர்ந்த 24 வயது மாணவன் கொக்குவிலில் உள்ள மாணவர் விடுதியில் இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறினார் - வத்திக்கான்
21/04/2025

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், தனது 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறினார் - வத்திக்கான்

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Unique Fact News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique Fact News:

Share