01/05/2025
சரித் (மிகா)
2025 ஏப்ரல் மாத இறுதியில், சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருட தொழில்நுட்பப் பீடத்தில் கல்வி பயின்று வந்த சரித் (மிகா) தற்கொலை…!
சரித் தனது விடுதியில் தங்கியிருந்த போது, சீனியர் மாணவர்களால் சித்திரவதை செய்யப்பட்டதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
“நீ அழும் வரை அடிப்போம்”,
“rules மீறினாய்” என்ற பெயரில், உடலிலும் மனதிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
• கீற்றரை சூடாக்கி உடம்பில் வைத்தனர்
• கவட்டுக்குள் அடித்தனர்
• தூக்கி எறிந்தனர்
• “நீ அழும் வரை அடிப்போம்” என அடித்து அழ வைத்தனர்
• உடையை கழற்றச்செய்து, முட்டிக்காலில் நிற்க வைத்தனர்
முடிவில், தன் வாழ்க்கையை முடிக்க மட்டுமே ஒரு வழி இருக்கிறது என எண்ணிய அவர், தற்கொலை செய்தார்.
ஒரு தனிப்பட்ட மாணவரின் மரணம் அல்ல. இது நம் கல்வி நிறுவனங்களின், விடுதி மரபுகளின், மாணவர் ஒன்றியங்களின் செயற்பாட்டு தோல்வியைக் காட்டும் சமூகக் குற்றச்சாட்டாகும்.
• ஒரு கொடூரமான சித்திரவதைக் கலாச்சாரத்தின் பிண்ணனி
• பல்கலைக்கழகங்களில் ஒழுங்கற்ற சீனியர் கலாச்சாரம்
• சித்திரவதை ஒன்றை மரபாக ஏற்றுக் கொள்கிற விடுதி சூழல்
• மாணவர் ஒன்றியங்களின் இயலாமை
• பல்கலைக்கழக நிர்வாகத்தின் சாலமன் பொறுப்பு
• சமூகத்தின் மௌன அனுமதி
***
2025 ஏப்ரல் மாத இறுதியில், சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் சரித் (மிகா) தற்கொலை…!!
இரண்டாம் வருட தொழில்நுட்ப பீட மாணவரான இவர், கண்டி மாவட்டத்தின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரதேசத்தில் இருந்து, கல்வி கனவுகளை சுமந்து பல்கலைக்கழகத்துக்குள் அடியெடுத்தார்.
விடுதியில் வழிகாட்டும் மாணவராக சிறப்பாக செயல்பட்டு வந்த சரித், யூனியர் மாணவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் தங்கியிருந்தார். ஆனால், “shorts அணிந்து வெளியே வந்தது” என்ற பரிதாபகரமான காரணத்தால், சீனியர்களால் விதிக்கப்பட்ட ‘சட்டவிரோத விதிகள்’ மீறப்பட்டதாக கூறி, அவர் மீது காட்டுமிராண்டித் தாக்குதல்கள் நிகழ்ந்தன.
அழிப்பிற்கு வழிவகுத்த சித்திரவதை அனைத்தும் அவரது யூனியர் மாணவர்களே பார்த்துள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியவராக இருந்த ஒருவரை அவமானகரமாக அந்நிலையில் காண நேரிட்டது. இதனால் ஏற்பட்ட மனவேதனை, அவமானம், மன அழுத்தம் — அனைத்தும் ஒன்றாக சேர்ந்து, சரித் தனது வாழ்நாளை முடிவுக்கு கொண்டு வரும்படி தூண்டியது.
அடுத்த நாள் வீட்டுக்குத் திரும்பிய சரித், தன்னை ஆழமாக நேசித்த தாய் மற்றும் தம்பியிடம் சில வார்த்தைகள் சொன்னார். பின்னர், அவரது தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ( 29.04.2025 ) காணப்பட்டார்.
“படிக்க அனுப்பினோம்… ஆனால்.. ?”
ஒரு பெற்றோர், ஒரு குடும்பம், ஒரு கிராமம் — தங்கள் இயலாமையையும் மீறி ஒரு பிள்ளையை உயர்த்த அனுப்பியதற்கான பதிலா இது?
சரித்தின் உயிரிழப்பு ஒருபோதும் இழந்துவிடக்கூடாதது. ஆனால் அவரது உயிர் நம் அனைவருக்குமான விழிப்பூட்டலாக மாற வேண்டும். இதுபோன்ற ஒரு உயிர் இழப்பு மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக, நியாயம் நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம்.
எனவே, நாங்கள் வலியுறுத்துகிறோம்:
1. சரித் சம்பவம் தொடர்பாக முழுமையான, சுயாதீன விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
2. சித்திரவதை செய்த மாணவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
3. அனைத்து பல்கலைக்கழக விடுதிகளிலும் பாதுகாப்பு, மனநல சிக்கல்களுக்கான ஆதரவு அமைப்புகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.
4. மாணவர் ஒன்றியங்களின் கட்டுப்பாட்டை புனராய்வு செய்து, நேர்மையான சமூகப் பார்வையுடன் அவை செயல்படத் தீர்மானிக்க வேண்டும்.
5 பல்கலைக்கழகங்கள், மாணவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட வேண்டும்
01.05.2025
இலங்கையின் கல்வி அமைச்சின் ஊடக செய்தி :
சபரகமுவ பல்கலைக்கழக மாணவர் மரணத்தைத் தொடர்பாக இதற்கான முழுமையான விசாரணைகள் முடிந்ததும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு உறுதியாக தெரிவித்துள்ளது.