Unique Fact News

Unique Fact News life is very short

சிங்கம் படத்துல சூர்யா தப்பு செஞ்சவன வெளிநாட்டுக்கு போய் தூக்கிட்டு வந்து சம்பவம் செய்ற மாதிரி நம்ம நாட்டுல அனுர அமைதியா...
14/10/2025

சிங்கம் படத்துல சூர்யா தப்பு செஞ்சவன வெளிநாட்டுக்கு போய் தூக்கிட்டு வந்து சம்பவம் செய்ற மாதிரி

நம்ம நாட்டுல அனுர அமைதியா இருத்துட்டு ரியலா அதே மாதிரி சம்பவம் செஞ்சிட்டு இரிக்காரு

AKD👑

03/10/2025

இலங்கையின் சட்டவிரோத முதலீட்டு திட்டங்களின் உண்மை முகம்

மாதந்தோறும் அதிக இலாபம் தரும் புரட்சிகரமான வேளாண்மை அல்லது சுற்றுலா திட்டம்” என்று விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா?

உங்கள் வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்வதற்கு முன், ஒரு நிமிடம் இதை வாசித்து விட்டு முடிவெடுங்கள். இந்த தகவல் உங்களைப் பெரும் நஷ்டத்திலிருந்து காப்பாற்றக்கூடும்.

நம்ப முடியாத வாக்குறுதிகள்

இலங்கையில் ஆண்டுக்கு 24% முதல் 420% வரை “நிலையான இலாபம்” தருவதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன. அழகான விளம்பரங்கள், அலங்கரிக்கப்பட்ட அலுவலகங்கள், செயற்கையாகக் காட்டப்படும் திட்டங்கள் என நம்பிக்கை தரும் முறையில் இந்த நிறுவனங்கள் செயற்படுகின்றன.

ஆனால் உண்மை என்ன? இவை அனைத்தும் சட்டவிரோதம். பலதும் ‘பொன்சி’ (Ponzi) எனப்படும் மோசடித் திட்டங்கள். புதிய முதலீட்டாளர்கள் சேர்வது நிற்கும் போது, இந்த நிறுவனங்கள் காணாமல் போய் விடும்.

பொதுமக்களிடம் இருந்து நிதி பெறும் சட்டரீதியான வழிமுறைகள் என்ன?

வங்கிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வைப்புகளை (Deposits) பெறும் நிதி நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியில் (CBSL) பதிவு செய்ய வேண்டும்.

பங்குகள், யூனிட் டிரஸ்ட், பொதுமக்கள் முதலீடுகள் போன்றவற்றைப் பெற பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) இல் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த சட்டவிரோத திட்டங்கள் எதுவும் CBSL அல்லது SEC இல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அல்ல.

மத்திய வங்கி இதுபற்றி தொடர்ச்சியாக பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் இன்னும் பலர் இந்த ஏமாற்றுகளுக்கு இரையாகிறார்கள்.

நம்ப முடியாத அளவுக்கு அதிக இலாபம் வழங்க வாக்குறுதி தருதல், உரிய அரச அமைப்புகளில் பதிவு செய்யப்படாத நிறுவனமாக இருத்தல் ஆகியவை மோசடி திட்டங்களின் நேரடி அடையாளங்களாகும்.

சட்டம் என்ன சொல்கிறது?

கம்பெனிகள் சட்டம் எண் மற்றும் பங்குச் சந்தை ஆணையச் சட்டம் படி:

தனியார் நிறுவனங்கள் (Private Limited) பொதுமக்களிடமிருந்து முதலீட்டை பெறுவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

பொது நிறுவனங்கள் (Public Limited Company – PLC) அல்லது பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களே (Public Listed Company) பொதுமக்கள் முதலீட்டை பெறலாம். அதற்கும் கடுமையான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் காணப்படுகின்றன.

இவை மீறப்படும் போது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். உதாரணமாக:
10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
குறைந்தபட்சம் ரூ. 1 கோடி அபராதம்

தனியார் நிறுவனத்தை மூடிவிடும் உத்தரவு

மேலும் தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றவியல் வழக்கு (மோசடி)

மோசடியை எவ்வாறு அடையாளம் காண்பது?

வங்கிக் கடன் ஆண்டு வட்டி விகிதத்தை (12–15%) விட அதிகமான 24%–420% வருமானம் தருவதாக வாக்குறுதி அளித்தல்

உடனே முதலீடு செய்ய அழுத்தம் கொடுத்தல்

CBSL அல்லது SEC இல் பதிவு செய்யப்படாத தனியார் நிறுவனமாக இருப்பது

நிறுவனத்தின் பெயரில் அல்லாமல் தனிப்பட்ட நபர்களின் பெயரில் விளம்பரங்கள் வெளியிடுதல்

 சிறிய சோதனை: அவர்கள் 12–15% ஆண்டு வட்டியில் வங்கியில் கடன் எடுக்கலாம். ஆனால் ஏன் ஆண்டுக்கு 420% வரை செலுத்தி எங்களிடம் பணம் பெறுகிறார்கள்? இதுவே மோசடியை வெளிச்சம் போடக் கூடிய எளிய முறை .

மோசடிகாரர்கள் பயன்படுத்தும் உத்திகள்

சிலர் உண்மையான திட்டத்தில் ஈடுபடுவது போல் காட்டுவார்கள். நம்ப வைப்பதற்காக சிறிய அளவில் விவசாய செய்கைகளையும் மேற்கொள்வார்கள்.

நிலத்தின் உறுதிப் பத்திரம் (DEED) தரப்படும்

எழுத்துமூல ஒப்பந்தம் தரப்படும்

ஆனால் உங்கள் முதலீட்டை காப்பாற்ற இது எதுவும் உதவாது.

விளைவுகள்

இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படமாட்டார்கள். நிறுவனம் காணாமல் போகும் போது, நீங்கள் முழுவதையும் இழக்க நேரிடும்.

பாதுகாப்பான முதலீட்டை எவ்வாறு உறுதி செய்வது?

முதலீடு செய்வதற்கு முன் CBSL அல்லது SEC இல் உரிமம் பெற்ற நிறுவனமா என்று பார்த்து உறுதி செய்யவும்.

சந்தேகமான திட்டம் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

உடனே புகார் செய்யவும்:

CBSL – நிதி புலனாய்வு பிரிவு (FIU)

பங்குச் சந்தை ஆணையம் (SEC)

நிறுவன பதிவகம் (ROC)

அருகிலுள்ள பொலிஸ் நிலையம்

இது அப்பாவி மக்களை மோசடிக்கு இரையாவதைத் தவிர்க்க உதவும்.

இறுதியாக

பொன்சி திட்டம் என்பது தொடர்ச்சியாக புதிய முதலீட்டாளர்கள் வரும் வரை மட்டுமே நிலைத்து நிற்கும் சங்கிலி. புதிய முதலீடுகள் நிற்கும் போது முழுவதும் சிதறி விழும்; கடைசியாக சேர்ந்தவர்கள் அனைத்தையும் இழக்க நேரிடும்

01/10/2025

நேற்றையதினம் சங்குப்பிட்டி விபத்தில் நான் சந்தித்த சிந்திக்கப்பட வேண்டியவர்கள்

1. ராங் உயரமான மோட்டார் சைக்கிள் ராங்கில் ஆறு வயது பிள்ளையை ஏற்றி நால்வராக பைக் ஓடியவர்கள்.

2. அந்த சிறு பிள்ளைக்கு கெல்மட்டை அணிவிக்காமல் பயணித்தவர்கள். குழந்தையின் சிறு கெல்மட் நால்வர் பயணித்தமையால் பின்னிருந்த ஒருவர் போட்டிருந்தார் ஆபத்தை சிந்திக்காமல் பொலிசார் பிடித்தாலும் என சிந்தித்த அந்த மனம்.

3. எதிரே வந்த நான் இவர்கள் விழுந்திருந்தமையை கண்டு குழந்தையை தூக்கி தலையில் இருந்து வந்த இரத்தத்தை பொத்திய படி தூக்கி வைத்து வந்த வாகனங்களை பிள்ளையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கேட்ட போது யாரும் வரவில்லை. டிப்பர் சாரதிகள் கார் ஆட்டோ மோட்டார் சைக்கிள் அனைத்தும் நிறுத்தி விட்டு சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.

அண்ணே யாரும் வாங்கோ பிள்ளையை முதலில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவம் உங்கட வாகனத்தில் ஏற்றாவிட்டாலும் பறவாயில்லை எனது மோட்டார் சைக்கிளை எடுங்கள் என்று கேட்க ஒரு டிப்பர் சாரதி கூறிய பதில் காதில் இப்பவும் கேட்கிறது நான் டிப்பரில் வந்தனான் என்றார். ஏன் அண்ணா டிப்பரை யாரும் பொக்கற்றில் வைத்து களவா எடுக்க போகிறார்கள் ??

4. ஒருவர் சொன்னார் இதால ஏதும் பிரச்சினை வரும் என்றார் ஒரு குழந்தையின் உயிரை விட என்ன பிரச்சினையை சந்திக்க போகிறீர்கள்? பிள்ளை என்னுடைய கையில் உள்ளது வாற பிரச்சினைக்கு நான் பொறுப்பெடுக்கிறேன் என்று கூறியும் வரவில்லை.

5. இறுதியில் இவ்வளவு கெஞ்சிய வாதிட்டு நேரம் கடந்த பின்னர் இறுதியாக அவ்விடத்தில் வந்த ஒரு இளைஞன் எனது மோட்டார் சைக்கிளை ஸ்ராட் பண்ணிய வேளை

6. செய்வதறியாது குழந்தையை கையில் வைத்திருந்த எனக்கு சத்தியமூர்த்தி டாக்டர் வாகனத்தால் இறங்கி வருவதை கண்டு இறைவனை கண்ட மனநிலையுடன் இந்தாங்கோ டாக்டர் என கொடுத்தேன். கார் டிக்கியில் வைத்து அவரும் முதலுதவி கொடுத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்.

எனினும் தலை பிடரி குருதியோட்டம் அவ்விடத்தில் யாரும் உடனடியாக பிள்ளையை வைத்தியசாலை கொண்டு செல்ல வராமையால் நேரம் கடந்தமையால் என்னவோ வைத்தியசாலை சிகிச்சை பலனளிக்கவில்லை.

7. பிணந்திண்ணி கழுகுகள் கூட சிறு குழந்தை உயிருக்கு போராடினால் இரக்கம் கொள்ளும் என எண்ணுகிறேன். ஆனால் நேற்றயதினம் அதைவிடவும் சுயநலமானவர்களை கண்டேன்.

இந்திய சினிமா பட காட்சிகளில் தான் விபத்தில் யாரையும் காப்பாற்றினால் பிரச்சினை என காட்டுவதுண்டு அவற்றை பார்த்து விட்டு மனதில் பதிய வைத்துள்ளனர் போலும் யாரும் உயிருக்கு போராடினால் தொட்டால் பிரச்சினை வந்துவிடும் என்று.

ஒரு விபத்திலோ அல்லது வேறு சந்தர்ப்பங்களிலோ ஒரு உயிரை காப்பாற்றினால் எந்த விதமான சட்டநடவடிக்கைகளும் காப்பாற்றியவருக்கு எதிராக வராது என்பதை புரிந்து கொள்ளுங்கள். துரதிஸ்ட வசமாக காப்பாற்றி கொண்டு செல்லும் போது உயிரிழந்தால் கூட அதனை விசாரணையின் போது விபரிக்க முடியும். ஆனால் ஒருவர் உயிருக்கு போராடும் போது இதனால் எமக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடுமோ என்று எண்ணாதீர்கள். இதே மன நிலை அனைவரிடமும் வளருமாகவிருந்தால் நாளை நமக்கு ஒரு விபத்து என்றால் கூட யாரும் தூக்கி வைத்தியசாலை கொண்டு செல்லாமல் சுற்றி நின்று போட்டோ வீடியோ எடுப்பார்கள் என்பதை உணருங்கள்.


Nishanthan

29/09/2025

கொழும்பு கோட்டை பகுதியில் வாகன போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த
பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, குற்றவியல் அழுத்தம் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது - பொலிஸ்

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நடிகர் விஜய் தலைமையிலான  தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டத...
28/09/2025

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 37 பேர் உழிரிழந்துள்ளனர்.*
*50இற்கு மேற்பட்டோர் கயமடைந்துள்ளனர்.*

*குறித்த துயரச்சம்பவம் தொடர்பில் இந்திய ஜனாதிபதி, தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் கவலை வெளியிட்டு வருகின்றனர்.*

*அனர்த்தத்தின் பின் விமானநிலையம்* *புறப்பட்டுச்சென்ற*
*'த வெ க' தலைவர் விஜயிடம் பத்திரிகையாளர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பியபோதும் அவர் பதில் ஏதும் வழங்காது சென்றுள்ளார்.*

சாவகச்சேரி விபத்து - யார்மீது பிழை..?பேஸ்புக்கில் நடக்கும் விவாதங்களைப் பார்த்தால், ஒரே ஒரு விஷயம் நன்கு புரிகிறது. இலங்...
26/09/2025

சாவகச்சேரி விபத்து - யார்மீது பிழை..?

பேஸ்புக்கில் நடக்கும் விவாதங்களைப் பார்த்தால், ஒரே ஒரு விஷயம் நன்கு புரிகிறது. இலங்கையில் இப்போதைக்கு விபத்துக்கள் குறைய வாய்ப்பேயில்லை. அந்தளவுக்கு இருக்கிறது ஒவ்வொருவரும் சொல்லும் காரணமும் விளக்கமும்.

முதலில் இந்த ஆண் - பெண் விடயத்தை தூக்கி குப்பையில் போடுங்கள். “விபத்து ஏன் நடந்தது?” என்று ஆராயும்போது, அவர் ஆண், இவர் பெண் என்பதெல்லாம் விவாதப் பொருளே அல்ல.

“விபத்தில் சிக்கிய இரண்டு நபர்கள்” என்று மட்டும் பாருங்கள்.

முதலாவது, அடிப்படைத் தவறு எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால் - இலங்கையில் நாம் போகும்போது “இடது” பக்கத்தாலும், வரும்போது “வலது” பக்கத்தாலும் வரவேண்டும். இதுதான் போக்குவரத்து விதிகளில் ஆகவும் அடிப்படையானது. பாலர் பாடம்..!

ஆனால் இங்கே மோதுண்ட இருவரும் நடுவில் இருக்கும் வெள்ளைக்கோட்டில் மோதியிருக்கிறார்கள். வீதியின் இன்னொரு பக்கம் சும்மா கேப்பார் மேய்ப்பார் இல்லாமல் இருக்கிறது. எனவே இந்த வீதியின் பாதி அளவு சும்மா free ஆக இருக்கும்போது, வெள்ளைக்கோட்டில் வந்து மோதியிருக்கிறார்கள்.

ரிப்பருக்கு எதிர்த்திசையில் வந்த மோட்டார்சைக்கிள் சாரதிக்கு ( உயிரிழந்தவர் ) “இடது பக்கத்தால்தான் போகவேண்டும்” என்கிற விடயம் தெரியவே தெரியாது என்பது அப்படியே விளங்குகிறது. அவர் வெள்ளைக் கோட்டில் வந்ததுக்கு ஒரு காரணமும் சொல்லவே முடியாது. அதை எந்தவகையிலும் நியாயப்படுத்தவே முடியாது. அது 100% தவறு இல்லை. 1000% தவறு.

அடுத்தது அந்த ஸ்கூட்டி.

ஏற்கனவே மின்னல் வேகத்தில் போய்க்கொண்டு இருக்கும் ரிப்பரை முந்தவேண்டுமாக ( Over Take ) “அதைவிட வேகமாகச் சென்றுதான் முந்தவேண்டும்” என்கிற அடிப்படை அறிவு, அந்த ஸ்கூட்டியின் சாரதிக்கு இருந்தது போலத் தெரியவில்லை. இந்த ரிப்பரை முந்தவேண்டும் என்கிற முடிவை அவர் எடுக்க முன்பு, வீதியின் வலதுபக்கத்தை நன்கு அவதானித்திருக்க வேண்டும்.

அந்தப் பக்கம் free ஆக இருக்கா? ஏதேனும் ஆபத்துக்கள், தடைகள் இருக்கா? என்பதை நன்கு ஆராய்ந்துவிட்டே ரிப்பரை முந்தியிருக்க வேண்டும். எதிர் திசையில் மோட்டார் சைக்கிள் வந்திருக்கவிட்டாலும் கூட, இவர் ரிப்பரை முந்த முற்பட்ட விதம் மிகவும் ஆபத்தானது. ரிப்பர் பின்பக்கத்தால் வந்து மோதியிருக்க 75% வாய்ப்பு இருக்கிறது.

இதில் ஆகவும் கொடுமை என்னவென்றால், விபத்துக்கான ஆபத்து கிட்ட நெருங்கிவிட்ட பிறகும், சிவப்பு மோட்டார் சைக்கிள் சாரதி மேலும் தனது மோட்டார் சைக்கிளை வலதுபக்கமாகவே திருப்புகிறார். அதனால் தான் ரிப்பரில் மோதுண்டார்.

“இடது பக்கம்” என்கிற சொல், அவரது அகராதியிலேயே இல்லைப் போல இருக்கிறது.

மறக்ககூடாத ஒரே ஒரு விடயம் - ஏதோ ஒரு அவரசத்துக்காக வீதியின் மத்திய பகுதிக்குப் போகிறீர்கள். அதாவது வெள்ளைக் கோட்டுக்கு அருகில் போகிறீர்கள். அதற்காக அங்கேயே பாயைப் போட்டு படுக்கக்கூடாது. உடனேயே உங்கள் position க்கு வந்துவிடவேண்டும்.

அதற்கு முதல் வீதியில் எமக்கான position எது என்று தெரிந்திருக்க வேண்டும்.

ஆகவே போகும்போது இடதுபக்கத்தால் போங்கள். நடுவில் இருக்கும் வெள்ளைக்கோட்டில் உங்களுக்கு எந்த business உம் இல்லை.

*⭕INDIA**🇮🇳 இந்திய தமிழ்* *சினிமாவின் பிரபல* *நகைச்சுவை நடிகர்**ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால்  சென்னையில்  இன்று  காலமானா...
18/09/2025

*⭕INDIA*

*🇮🇳 இந்திய தமிழ்* *சினிமாவின் பிரபல* *நகைச்சுவை நடிகர்*
*ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.*

வடமாகாணத்தில் கடவுச் சீட்டு (Passport )வழங்கும் பிராந்திய அலுவலகங்கள் :யாழ்ப்பாணத்தில் - யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் ...
16/09/2025

வடமாகாணத்தில் கடவுச் சீட்டு (Passport )வழங்கும் பிராந்திய அலுவலகங்கள் :
யாழ்ப்பாணத்தில் - யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும்
வவுனியாவில்- வவுனியா மன்னார் வீதியில் சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்னாலும் அமைந்துள்ளது.

#சேவைகள்
* கடவுச்சீட்டு விநியோகித்தல் (ஒருநாள் சேவை, சாதாரண சேவை )

* கடவுச்சீட்டுக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளல்.

* 2018 இன் பின்னர் 15 வயதிற்கு மேற்பட்டோரால் வெளிநாட்டு தூதரகங்கள் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டுக்கான விரலடையாளத்தை பதிவு செய்தல். (Finger Print)

#நடைமுறைகள்

* காலை 7.00 மணி தொடக்கம் நண்பகல் 2.00 வரை ஒருநாள் மற்றும் சாதாரண சேவைக்கான விண்ணப்பங்களைக் ஏற்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

* எந்தவிதமான முற்பதிவுகளும் தேவையில்லை.

#தேவையான_ஆவணங்கள்
1) பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவம்

2) பிறப்பு அத்தாட்சி பத்திரம் ( அசல்-Original ) தெளிவானதாக இருத்தல் வேண்டும்.

3) புகைப்படம் (Online Photo )- (பாஸ்போட் அலுவலகத்திற்கு உள்ளே போக முதலே அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரூடியோவில் புகைப்படம் எடுக்கலாம்)

4) தேசிய அடையாள அட்டையும் அதன் பிரதியும் ( தங்கள் தற்போதய தோற்றத்துடன் அடையாள அட்டையிலுள்ள புகைப்படம் ஒத்துப்போகவில்லை என்றால் அடையாள அட்டையை புதுப்பித்து கொண்டு செல்லுங்கள் )

5) ஏற்கனவே கடவுச்சீட்டு இருந்தால் அதனையும் அதன் பிரதியையும் கொண்டு செல்லுங்கள்.

6) திருமணமான பெண்கள் கணவனின் பெயரில் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள விரும்பின் திருமண சான்றிதழை (Original) கொண்டு செல்லுங்கள்.

7) சான்றிதழ்களின் ஆங்கில மொழி பெயர்ப்புத் தேவையில்லை.

8. பதினைந்து வயதுக்கு உட்பட்ட பிள்ளையின் கடவுச்சீட்டு புதுப்பிப்பதாயின் தாய், தந்தை இருவரும் கட்டாயம் நேரில் செல்ல வேண்டும். தாய் தந்தை இருவரினதும் சம்மத கடிதம் (concern letter) மற்றும் தேசிய அடையாள அட்டை பிரதி இணைக்கப்பட வேண்டும்.

#குறிப்பு :
பெற்றோரில் ஒருவர் வெளிநாட்டில் இருந்தால் வெளிநாட்டு தூதரகத்தில் சம்மதம் தெரிவித்து கடிதம் மற்றும் சான்றுப்படுத்திய கடவுச்சீட்டு பிரதியினையும் பெற்று அதனை இணைக்க வேண்டும் ( No Objection Letter)

பெற்றோரில் ஒருவர் மரணமடைந்து இருந்தால் மரண சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும்.

பெற்றோர் விவாகரத்து பெற்றிருந்தால் நீதிமன்ற கட்டளை அவசியமானது . பிள்ளையின் கட்டுக்காவல் பராமரிப்பு எந்த பெற்றோரிடம் உள்ளதோ அவரே பிள்ளையின் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

9 ) கடவுச்சீட்டு தொலைந்திருந்தால் பொலிஸ் முறைப்பாட்டு்பிரதி அவசியமானது.

#கட்டணங்கள்
ஒருநாள் சேவை -20,000.00
சாதாரண சேவை- 10,000.00

திருத்தங்கள் - 1200.00

தொலைந்த கடவுச்சீட்டு எனின் தண்டப்பண விபரம்:
வழங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு உட்பட்டது -20,000.00
வழங்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேற்பட்டது-15,000.00

#விண்ணப்ப படிவங்கள் பெற்றுக்கொள்ள :

http://www.immigration.gov.lk/pages_e.php?id=24

இன்றைய சந்திரகிரகணம்
07/09/2025

இன்றைய சந்திரகிரகணம்

யாழ்.புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் முற்பகல் 6 மணி த...
03/09/2025

யாழ்.புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் முற்பகல் 6 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணிவரை பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பதோடு ஏனைய பாரவூர்திகள் முற்பகல் 7 மணி தொடக்கம் முற்பகல் 9 மணிவரையும் பிற்பகல் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரையும் குறித்த வீதியூடாக பயணிப்பதற்கு தடை விதித்து பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்பள்ளி சிறார்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்கு செல்லும் நேரங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் மேற்கூறித்த விடயங்கள் நல்லூர் பிரதேச சபையின் தீர்மானங்கள் ஆக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.

இது தொடர்பான அறிவித்தல் பலகைகள் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுமுள்ளன. எனவே வாகனச் சாரதிகள் குறித்த விதிமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

ப.மயூரன்
தவிசாளர்,
நல்லூர் பிரதேச சபை

தமிழ் நிர்வாக ஆட்சி மொழி மாகாணத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுத்து முதலாவதாக எழுதி “பொதுமக்களின் நிதியில் நிர்மாணிக...
01/09/2025

தமிழ் நிர்வாக ஆட்சி மொழி மாகாணத்தில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுத்து முதலாவதாக எழுதி “பொதுமக்களின் நிதியில் நிர்மாணிக்கப்பட்டது” என்னும் வசனம் அதிலும் ஜனாதிபதி பெயர் கூட இல்லை போன்ற விடயம் எல்லாம் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவை.

இன்று ஜனாதிபதி திரு.அனுராவால் யாழில் திறந்து வைக்கப்பட்ட குடிவரவு திணைக்கள அலுவல திறப்பு அடிக்கல்

20/08/2025

🔥 தபால் ஊழியர்கள் finger print-க்கு விருப்பம் இல்லை.

போலீசார் Body கேமராவுக்கு விருப்பம் இல்லை.

ரெயில் ஓட்டுநர்கள் GPS பயன்படுத்த விருப்பம் இல்லை.

பஸ் ஓட்டுநர்கள் சட்டம் நடைமுறைக்கு வருவது விரும்பவில்லை.

அரச ஊழியர்கள் டிஜிட்டல் ஆக விரும்பவில்லை.

Freelancing செய்பவர்கள் வரி கட்ட விரும்புவதில்லை.

Uber, PickMe ஓட்டுநர்கள் card payments எடுக்க விரும்பவில்லை.

Business செய்பவர்கள் cash business மட்டும் தான் செய்கிறார்கள், டிஜிட்டல் ஆக விரும்பவில்லை (வரியை தவிர்க்க).

கூட்டுத்தாபனம் , அதிகார சபைகளில் உள்ளவர்கள் OT குறைப்பதை விரும்பவில்லை.

இது எல்லாம் இருக்க , இலங்கையில் இருக்கும் அனைவரும் நேரத்திற்கு வேலை செய்ய விருபுவதில்லை 😂

ஆனா இந்த அனைவருக்கும் இந்த நாடு super ஆக வளரணும் என்பதுதான் ஆசை. 😂

-சிங்கள மொழி பதிவு ஒன்றில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பதிவு-

Address

Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Unique Fact News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique Fact News:

Share