Thavatheesan Amirthalingam

Thavatheesan Amirthalingam வாழு வாழ விடு அவ்ளோ தான் தத்துவம்

05/09/2025

🛑 Breaking News : சற்றுமுன் மற்றும் ஓர் பயங்கர துப்பாக்கிச் சூடுபஞ்சிகாவத்தையில் சம்பவம்

ரணில் விக்கிரமசிங்க பிணையில் விடுதலை.ரணில் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறும் அதே வேளை சட்டத்தை பாதுகாக்கும் அரண்கள...
26/08/2025

ரணில் விக்கிரமசிங்க பிணையில் விடுதலை.

ரணில் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக கூறும் அதே வேளை சட்டத்தை பாதுகாக்கும் அரண்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்காக ஒன்று கூடியதை படத்தில் காணலாம்.

ரணில் விக்கிரமசிங்கவை அரசாங்கம் வேண்டும் என்றே பழி வாங்கியதா?

🚨 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, லண்டன் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டமளிப்பு விழாவிற்கான அழைப்பி...
24/08/2025

🚨 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, லண்டன் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டமளிப்பு விழாவிற்கான அழைப்பிதழைப் பெற்றதாகக் கூறி, வழங்கிய பட்டமளிப்பு விழாவிற்கான அழைப்புக் கடிதம் தொடர்பாக விசாரணைகள் CID யினரால் தொடங்கப்பட்டுள்ளது.

பட்டமளிப்பு விழாவிற்கான அழைப்பிதழைப் பெற்றதாகக் கூறி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதம் பிற்காலத்தில் ஜோடிக்கப்பட்டதா என்பதை வெளிப்படுத்த கோட்டை நீதவானின் உத்தரவின் பேரில், இந்தக் கடிதத்தை விசாரிக்க சிஐடி இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.✌️

🚨ரணிலின் உடல்நிலை குறித்து  வைத்தியர்  ருக்ஷான் பெல்லன  ஊடக சந்திப்பில் கூறியதுமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போ...
24/08/2025

🚨ரணிலின் உடல்நிலை குறித்து வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஊடக சந்திப்பில் கூறியது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது தேசிய மருத்துவமனையில் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி இயக்குநர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு இருப்பதாகவும், அவரது உடலில் இரத்தத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற அறிகுறிகள் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

நீதிமன்ற அறையில் பல மணி நேரம் காத்திருந்தபோது மின்சாரம் தடைபட்டதாலும், தண்ணீர் குடிக்காததாலும் ஏற்பட்ட சிக்கல்களால் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதாக மருத்துவர் கூறினார்.

இதன் காரணமாக, அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதன்படி, முன்னாள் ஜனாதிபதி கடுமையான மருத்துவ மேற்பார்வையின் கீழ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

எனவே அவரை மூன்று நாட்கள் கடுமையான ஓய்வில் வைத்து, நீர்ச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சையளிக்க வேண்டும். அது செய்யப்படாவிட்டால், இதயப் பிரச்சினைகள், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் பிற சிக்கல்கள் ஏற்படக்கூடும். அதனால்தான் அவர் தற்போது பல சிறப்பு மருத்துவர்கள் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் குணமடைவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் அந்த சிக்கல்கள் உருவாகக்கூடும் என தெரிவித்துள்ளார்.

உலகில் நன்கு அறியப்பட்ட உயர்ந்த படித்த அரச தலைவர் ஒருவர் அரசியல் பழிவாங்கல் மூலம் கைது..அவர் ஓரு royalist, கண்டி சிங்கள ...
24/08/2025

உலகில் நன்கு அறியப்பட்ட உயர்ந்த படித்த அரச தலைவர் ஒருவர் அரசியல் பழிவாங்கல் மூலம் கைது..அவர் ஓரு royalist, கண்டி சிங்கள உயர் வம்சம் வழியில் வந்த ஓரு Demo.அரசியல் வாதி..மொத்த சிங்கள மக்களுக்கும் மகா நாயக்கர் களுக்கும் இது ஓரு கௌரவ பிரச்சினை.. மோசமான அரசியல் பழி வாங்கல் இது தொடரும்.. நாட்டை மீட்கவே ஆணை வழங்கிய மக்களே கவலையடைந்து உள்ளார்கள்.. ரணில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி, மற்றும் பிரதமர். 2020 களில் விழுந்த நாடு. படு குழியில் இருந்த நாட்டை மீண்டெழும் நாட்டை இலங்கை மக்கள் விரும்பும் ஓரு உன்னத தலைவரை கைது செய்து மீண்டும்.படுகுழிக்குள் தள்ளி விட்டார்கள் இந்த JVP அரசு..IMF மூலம் பேசி நாட்டை நம்பிக்கை ஊட்டி மீட்டவர் ரணில். இனி IMF கூட இலங்கையக்கு உதவி செய்ய யோசிப்பார்கள்.. இவங்கள திருத்த முடியாது என்று..JVP நாட்டை அரகல மூலம் பின்னணி வகுத்து கைப்பற்றிய போது.. பலர் கூறியது,அரசியல் பழிவாங்கல் கள் இலங்கைக்கு புதிதல்ல..போலி இடது சாரிகள் சாயம் வெளுக்கும் என்று.. இன்று அதுவும் ஓரு Utuber சொல்லி ஓரு முன்னாள் ஜனாதிபதி கைது செய்ய படும் கேவலம் இலங்கை அரசியல் தான், நீதி துறை க்கே சவால்?..
குப்பை அரசியல் வாதிகளால் உலகில் மீண்டு வரும் நாடு நற்பெயரை இழக்க போகிறது......
ஓரு சாதாரண அழைப்பிதழ் உள்ள வெளிநாடு பயண விடயத்தில் இலங்கை யின் ஆக சிறந்த ஜனாதிபதி ஒருவர் கைது செயாபட்டுள்ளமை இலங்கைக்கு நல்லதல்ல.. அதுவும் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் வரலாற்றில் முதல் தடவை CID போன்ற ஓரு சாதாரண அதிகாரிகள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார்.. நாளை ஏதோ ஓரு காரணத்துக்காகக் அனுரவும் கைது செய்ய படுவார்.. இது மோசமான முன் உதாரணம்.. படுகொலை, அல்லது தேசவிரோதம், ஊழல் போன்ற குற்ற சாட்டுக்கள் இருந்தாலும் பரவாயில்லை.. ஓரு வெளிநாட்டு பயணம் தொடர்பில்.. கைது.. 🤔
ரணில் ஓரு சதி செய்து அரசியல் மூலம் ஜனாதிபதி ஆகியவர் இல்லை.. தனது 500 கோடி பெறுமதி யான வீட்டையே அரசுக்கு எழுதி கொடுத்த ஓரு mr. கிளீன் இலங்கையை மூன்று முக்கியமான சந்தர்ப்பங்களில் நிலைப்படுத்தி மீண்டும் உயிர்ப்பிப்பதில் ரணில் விக்கிரமசிங்கே ஒரு தீர்க்கமான பங்கை வகித்துள்ளார்.
• 1993 ஆம் ஆண்டு, ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் படுகொலைக்குப் பிறகு, அவர் ஆட்சியின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நாடு அராஜகத்திற்குள் செல்வதைத் தடுத்தார்.
• 2000 ஆம் ஆண்டு, நாடு அதன் முதல் மந்தநிலையை எதிர்கொண்டபோது, ​​அவர் வளர்ச்சியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுத்தார்.
• 2022 ஆம் ஆண்டு, நமது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில், அவர் தலைமை தாங்கி இலங்கையை வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்தார்.
அரச நிதியை பயன்படுத்தி தனிப்பட்ட பயணமாக லண்டனுக்கு சென்றமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது இது சிலமணி நேரத்திற்கு ஊடகங்களுக்கு அவ்வளவு தான்.
அரசியல் அமைப்பின் 35 ஆவது சரத்தின் படி முன்னாள் ஜனாதிபதி ஒருவர் தனது ஆட்சிக்காலத்தில் செய்த எந்த ஒரு செயலுக்காகவும் அவரை நீதிமன்றில் நிறுத்த முடியாது. 19 ஆம் திருத்த சட்டத்தின் மூலம் மனித உரிமைகள் சார்ந்த விடயத்தில் மட்டும் முன்னாள் ஜனாதிபதியை நீதிமன்றில் நிறுத்த முடியும்.

சரி இப்போ எந்த சட்ட ஏற்பாட்டின் படி ரணில் விக்கிரமசிங்கவை சிறையில் அடைக்க போகின்றீரகள் ???? சந்தர்ப்பம் இல்லை. ஆக மொத்தம் ரணில் விக்கிரமசிங்க இன்றும் சில மணி நேரத்தில் பிணையில் வீடு செல்வார்.

இந்தப் பின்னணியில், ஒரு யூடியூபர் கணித்தபடி அவர் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் நமது நாட்டின் நிறுவனங்களையும் நமது எதிர்காலத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பழிவாங்கும் மற்றும் அழிவுகரமான அரசியலின் தொந்தரவான போக்கை பிரதிபலிக்கின்றன.
மீண்டும் ஓரு ஆட்சி மாற்றம் நிகழ அரசே வழி வகுக்கிறது என்பதும் கவலையே..

Happy Birthday My Amma I miss you a lot I’m suffering without you, on your birthday bless me me to save my self and my f...
08/08/2025

Happy Birthday My Amma I miss you a lot I’m suffering without you, on your birthday bless me me to save my self and my family all negative people must leave us

We wishing him Happy Birthday Anna also we pray god to make your more achievement I this year
27/07/2025

We wishing him Happy Birthday Anna also we pray god to make your more achievement I this year

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம்  2025எதிர்வரும் 29.07.2025  செவ்வாய் கிழமை காலை 10 ம...
22/07/2025

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவம் 2025

எதிர்வரும் 29.07.2025 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நான் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.....

#

யாழ் இராசவின் தோட்டம்  முளவை சந்தியில் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை கண்டுபிடிக்கபட்டுள்ளது. பொலிஸார் விசாரனையை ஆரம்பித்த...
09/07/2025

யாழ் இராசவின் தோட்டம் முளவை சந்தியில் சடலம் ஒன்று இன்று புதன்கிழமை கண்டுபிடிக்கபட்டுள்ளது. பொலிஸார் விசாரனையை ஆரம்பித்துள்ளனர்.

மஹாராஜவின் FOX Resort அரண்மனையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ,இலங்கை தமிழ் அரசுக்கட்சி சந்திப்பு.
30/05/2025

மஹாராஜவின் FOX Resort அரண்மனையில்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ,இலங்கை தமிழ் அரசுக்கட்சி சந்திப்பு.

🚨விளையாட்டு உபகரண இறக்குமதி மோசடி மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட  சிறை. நலின் பெர்னாண்டோவிற்கு 25 வருட  சிறை.   முன...
29/05/2025

🚨விளையாட்டு உபகரண இறக்குமதி மோசடி மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட சிறை. நலின் பெர்னாண்டோவிற்கு 25 வருட சிறை.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோவிற்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக கெரம்போர்ட் கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு இன்று(29) அறிவிக்கப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான அதன் தலைவர் பிரதீப் ஹெட்டியாரச்சி, பிரதீப் அபேரத்ன உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

பிரதிவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் முன்னாள் வர்த்தக அமைச்சர் நலின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக 2014 செப்டம்பர் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 14,000 கெரம்போர்ட்டுகள் உள்ளிட்ட விளையாட்டு உபகரண இறக்குமதியின் போது 53.1 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 06 குற்றப்பத்திரிகைகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்ப்பட்டது.

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 70ஆம் சரத்தின் கீழ் பிரதிவாதிகள் இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
------------------------

🚨கொழும்பு வெள்ளவத்தை ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை ஜூன் 5 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(29) கல்கிசை நீதவான் நீதிமன்றம் உத்தரவு.

23/05/2025

முன்னால் அமைச்சர் துமிந்த திசாநாயக கைது

Address

Jaffna

Telephone

+94774737737

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thavatheesan Amirthalingam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share