16/10/2025
☀உலக உணவு தினம்"
உணவு ஒரு அடிப்படை மனித உரிமையாகும். . 1945 ஆம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபை உணவை ஒரு சலுகையாக அல்ல, மாறாக ஒரு உரிமையாக அங்கீகரித்தது, அதனால்
தான் 1979 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் உலக உணவு தினத்தை உருவாக்கினர்.
☀2025 ஆம் ஆண்டுக்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் யாதெனில் "சிறந்த உணவு மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக கைகோர்த்து" (Hand - in -hand for better foods and a better future ) என்பதாகும். இந்தக் கருப்பொருளின் நோக்கம் அனைவரும் ஆரோக்கியமான உணவை பெறுவதை உறுதி செய்யும் வகையிலும்,விவசாய உணவு முறைகளை பின்பற்றுவதிலும், ஆரோக்கியமான உணவு கிடைப்பது உறுதி செய்வதற்காக உலகளாவிய ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது.
☀உலகளவிய ரீதியில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 820 மில்லியனை தாண்டியுள்ளதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
☀உலக சனத்தொகையில் ஒன்பது பேரில் ஒருவர் பசியால் வாடுவதாக கூறப்படுகின்றது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கைக்கமைய, உலகில் 02 பில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்றி வாழ்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
☀உலகளாவிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதைத் தடுக்க நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது
☀15 வயதுக்குட்பட்ட சிறார்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உலகில் 5 வயதுக்குட்பட்ட 149 மில்லியன் சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
☀இலங்கையில் பெருந்தோட்ட மற்றும் நகர்ப்புற சமூகங்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் போஷாக்கு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மோனிக்கா விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
☀இதேவேளை, இலங்கையின் மரக்கறிகளில் 20 முதல் 30 வீதம் வரையிலும் பழங்களில் 20 வீதம் வரையிலும் வீணாவதாக விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது