Mathura Mathu

Mathura Mathu News Reader

16/06/2025

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் சண்டை நடக்கும்போது எரிபொருள் தட்டுப்பாடு முதலில் எங்கே ஏற்படும்?

நம்வர்கள் ஊர்ல. .....

புங்குடுதீவு  கண்ணகைபுரம்             கண்ணகை அம்மன் என வழங்கும்   ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தில்            ...
16/06/2025

புங்குடுதீவு கண்ணகைபுரம்
கண்ணகை அம்மன் என வழங்கும்
ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தில்
இடம் பெறுகின்ற தவறுகளுக்கு எதிரான
மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!!!!!!

காலம்: 21- 06- 2025

நேரம்: காலை 10 மணி முதல்

இடம்: ஆலய முன்றலில்

எமது அன்புக்குரிய தீவுப்பகுதி மக்களே!
சமூகத்தில் பெருமதிப்புக்குரிய ஆன்றோர்களும், சான்றோர்களும் அங்கம் வகித்த ஆலய நிர்வாக சபையானது தற்போதைய காலகட்டங்களில் பொறுப்பற்ற நபர்களால் நிர்வகிக்கப்பட்டு் எமது ஆலயத்தினதும் , எமது புங்குடுதீவு மக்களினதும் கீர்த்திக்கும் , புகழுக்கும் பங்கம் விளைவிக்கப்படுகிறது.

மேற்படி நிர்வாக சபை தலைமையின் தவறான செயல்களான: -

● ஆலய புனித தன்மையை பேணாமல் நடத்தல்.

● ஆலய பக்தர்களை சமமாக மதிக்காமல் நடத்தல்.

● ஆலய அயலில் வசிக்கும் மக்களுக்கு அன்னதான உணவை கொடுக்க மறுத்தல்.

● ஆன்மா லயப்படும்( அமைதி ) ஆலயத்தை வியாபார நிலையமாக மாற்றியமை.

● மாதாந்தம் அளவுக்கு அதிகமாக வீண் செலவுகளை செய்தல்.

● ஆலய திருட்டு் சம்பவங்களை மூடி மறைத்தல் மற்றும் உடந்தையாக இருத்தல்.

● தங்களுக்கு சார்பாக முக்கியமான இடங்களில் கண் காணிப்பு கேமராக்களை பொருத்தாமல் தவிர்த்தல்.

● பிரதான திருவிழாக்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு கோராமல் திருட்டு சம்பவங்களுக்கு இடமளித்தல்.

● ஆலய திருவிழாக்களுக்கு அதிகமாக ,முறைகேடாக பணம் வசூலித்தல்.

● மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் தவிர்த்தல்.

● பொறுப்பு வாய்ந்த அரசாங்க அதிகாரிகளின் அழைப்புக்களை உதாசீனம் செய்தல்.

● பொதுமக்களின் பணத்தை பெற்று பல வருடங்களாக கணக்கு காட்டாமல் தவிர்த்தல்.

● ஆலய யாப்பை மீறி ஒரு குடும்பத்தில் இருவர் பதவி வகித்தல். புங்குடுதீவில் நடாத்தவேண்டிய கூட்டங்களை ஆலய யாப்பினை மீறி தமக்கு சாதகமாக கொழும்பில் நடாத்துதல்.

● பொதுக் கூட்டத்தை நடாத்தாமல் தவிர்த்தல்.

●தவறுகளை சுட்டிக்காட்டி நீதி கோரிய ஏனைய அங்கத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பிரசித்தி பெற்ற எமது ஆலயத்திற்கு அவதூறு ஏற்படுத்தியமை.

ஆகிய மேற்படி தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக தீவுப்பகுதி மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றாக அணிதிரண்டு எமது எதிர்ப்பை தெரிவிப்போம்.

அன்னை கண்ணகியின் ஆலயத்தில் ஒன்று கூடுவதால் நாம் அனைவரும் எமது தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து அமைதியாக போராடுவோம்.

இவ்வண்ணம்
- கண்ணகை அம்மன் அடியார்கள்

🚨முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான எண்ணக்கருசார் வடிவமைப்பு - Proposed by P.Rajkumar, JaffnaProposed conceptual Desig...
14/06/2025

🚨முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான எண்ணக்கருசார் வடிவமைப்பு - Proposed by P.Rajkumar, Jaffna
Proposed conceptual Design for Vadduvakal Bridge in Mullaitivu

சூழலுக்கு இயைவான சூழல்சார் சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையிலும் முல்லைத்தீவின் மரபை பறைசாற்றும் வகையிலும் முன்மொழியப்படும் வட்டுவாகல் பாலத்திற்கான எண்ணக்கருசார் வடிவமைப்பு

பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் முல்லைத்தீவு நகரப் பகுதியையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் பிரதான பாலமாக விளங்கும் வட்டுவாகல் பாலம் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்டு பல்வேறு தடவைகள் இதனை புணரமைப்புச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் 2020 ஆம் ஆண்டு அப்போதய கௌரவ ஆளுநர் திருமதி சாள்ஸ் அம்மையார் இணைத்தலைமையில் அரசாங்க அதிபர் திரு க.விமலநாதன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் திரு க. கனகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வட இலங்கை ஈரநில பாதுகாப்புக் கழகத்தின் (Wetland conservation society, Jaffna) நிறுவுனர் சூழலியல் மற்றும் பறவை ஆய்வாளர் திரு பா. ராஜ்குமார் அவர்களால் 5 வருடங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பறவை மற்றும் சூழல்சார் சுற்றுலா வாய்ப்புக்கள் தொடர்பான ஆய்வினடிப்படையில் தன்னார்வ நோக்கில் அரசாங்க அதிபருக்கு இச் செயற்திட்ட முன்மொழிவு ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்பின்னர் இலங்கை கோவிட் - 19 நோய்த்தொற்று மற்றும் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடி காரணமாக இதற்கான நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டபொழுதிலும் பொதுமக்கள் உள்ளிட்ட இப் பாலத்தைப் பயன்படுத்தும் பல்வேறு தரப்பினர்களது தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக தற்போதய அரசாங்க அதிபர் உயர்திரு அ.உமாமகேஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் ஆகியோரினது முயற்சியினாலும் முல்லைத்தீவு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்கள் முயற்சியினாலும் குறிப்பாக பாராளமன்ற உறுப்பினர் கௌரவ துரைராசா ரவிகரனது முயற்சியினாலும் கௌரவ ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வன்னி மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கௌரவ ம. ஜெகதீஸ்வரன் ஆகியோரது முயற்றியினாலும் கௌரவ ஆளுநர் ந.வேதநாயகன் அவர்களது முயற்சியினாலும் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களின் முயற்சியினாலும் வட்டுவாகல் பாலக் கட்டுமாணத்திற்கான நிதி இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உண்மையில் வட்டுவாகல் பாலம் நந்திக்கடல் கடனீரேரியும் முல்லைத்தீவுக் கடலும் சங்கமிக்கும் இயற்கை எழில்மிகு பகுதியில் அமைவுபெற்றுள்ளது.

கடனீரேரியும் அதனுடன் இணைந்த கண்டல்த் தாவரங்களும் குடிபெயர் மற்றும் உள்ளூர் வதிவிடப் பறவைகளின் பிரதான வாழ்விடமாக அமைகின்றது. காலணித்துவ ஆட்சியில் குறிப்பாக பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே இப் பகுதியில் பறவைபார்த்தல்(Bird watching) முக்கியத்துவம் பெற்றிருந்தது அது மட்டுமன்றி இப் பகுதி பாரமரியமாக சூல் லாம்பு மற்றும் கரப்பு போன்ற பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பின்பற்றி மீன்கள் பிடிக்கப்படும் இடமாகவும் சப்தகன்னியர் வழிபாட்டு மரபை தொடர்ந்து நிலைநாட்டும் பகுதியாகவும் விளங்குகின்றது. எனவே சூழலியரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இப் பகுதியில் 100 வருட ஆயள்கொணடதாக கட்டப்படும் பாலங்கள் உண்மையில் உலகளாவியரீதியில் சுற்றுலா மையங்களாக கொள்ளப்படுகின்றன.இவ் வகையில் பறவைபார்த்தல், இயற்கையை ரசித்தல்,புகைபபடமெடுத்தல், இயற்கை நடை என பல்வேறு இயற்கை சூழல்சார் சுற்றுலாச் செயற்பாடுகளை மேன்மைப்படுத்தவும் கரைத்துறைப்பற்று பிரதேச சபையினுடாக பாலத்தின் இரு பகுதிகளையும் மையப்படுத்தி சுற்றுலாச் செயற்பாடுகளை மேன்மைப்படுத்தி சிறு வியாபார முயற்சியாண்மையையும் விருத்தி செய்யக்கூடிய வகையில் யுத்தத்தினல் கடின வலிகளைச் சுமந்த முல்லை தேச மக்களுக்கு ஆத்மார்த்த ரீதியில் வலி நிவாரணியாக இயற்கையுடன் இணைந்த பௌதீக கட்டுமாணம் என்ற வகையில் அசைவு (Mobility) சூழல்சார் சுற்றுலா(Ecotourism) வாழ்வாதார அபிவிருத்தி (Livelihood development )சுகாதாரம் (Health) மற்றும் கலாசார அடையாளம் (Cultural Identity ) ஆகிய அணைத்து விடயங்களையும் உள்ளடக்கி (Inclusive approach) )இப் பாலத்திற்கான முப்பரிமாண மாதிரி வடிவமைப்பு (Three D Model) மற்றும் இது தொடர்பிலான வீடியோ என்பன என்னால் வடிவமைக்கப்பட்டு தொழிநுட்ப உத்திதியோகத்தர் திரு ரோசிதன் அவர்களின் தொழிநுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்டு எல்லோருடைய பார்வைக்காகவும் வெளியிடப்படுகின்றன.

இலங்கை வரலாற்றில் சூழலியல் மற்றும் சுற்றுலா நோக்கில் கலையுணர்;வுடன் வடிவமைக்கப்பட்ட முதலாவது பாலமாக அமையவேண்டும் என எதிர்பார்பார்ப்பதுடன் நான்கு வருடமாக ஆத்மமார்த்தரீதியாக இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். எனவே மதிப்புக்குரிய அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட கௌரவ பாராளமன்ற உறுப்பினர்கள், கௌரவ ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க் மற்றும் வன்னி மாவட்ட பாராளமன்ற உறுப்பினாகள்;; மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து கௌரவ அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமைப்பீடம், எல்லாவற்றிற்கும் மேலாக அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் நிதிக்கிடைப்பனவை மட்டும் வைத்து இச் செயற்திட்டத்தை வரையறுக்காமல்; முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்காக சூழல்சார் சுற்றுலாவை மேம்படுத்துமுகமாக இம் முன்மொழிவை நடைமுறைப்படுத்த அனைவரது ஒத்துழைப்பையும் எதிபார்க்கின்றேன்.
நன்றி

பா.ராஜ்குமார்
நிறுவுனர்
பறவையியல் மற்றும் சூழலியல் ஆய்வாளர்
வட இலங்கை ஈரநில பாதுகாப்புக் கழகம்
யாழ்ப்பாணம்

(தகவல் - jaffna wetland conservation society)

10/06/2025
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக.....🫰❤️❤️
28/05/2025

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக.....🫰
❤️❤️

Learning to love myself unconditionally. ❤️
24/04/2025

Learning to love myself unconditionally.
❤️

12/03/2025

🤟😊🤟

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே…❤️
18/02/2025

ஒரே ஒரு பார்வை தந்தால் என்ன தேனே…❤️

.    ❤️    @
06/01/2025

. ❤️ @

Rishakuty
02/01/2025

Rishakuty

Address

Punkuduthivu
Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathura Mathu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share