18/10/2025
வானிலை முன்னறிவிப்பு தொடர்பான இற்றைப்படுத்தல்
18.10.2025 சனிக்கிழமை மதியம் 2.30 மணி
எதிர்வரும் 23.10.2025 அன்று உருவாகும் என கணிப்பிடப்பட்டிருந்த தாழமுக்கம் எதிர்வரும் 21.10.2025 அன்று மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது . இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டின் நெல்லூருக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தற்போதைய நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அல்லது வலுக்குறைந்த புயலாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உருவாகவுள்ள தாழமுக்கத்தினால் இலங்கையின் எந்த பகுதிக்கும் நேரடியான பாதிப்புக்கள் இல்லை. ஆனாலும் எதிர்வரும் 21.10.2025 முதல் 25.10.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்தோடு எதிர்வரும் 21.10.2025 முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
அதேவேளை தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வரும் மழை மாத இறுதிவரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாகமுத்து பிரதீபராஜா -