Sivapoomi News Paper

Sivapoomi News Paper சிவபூமியால் மாதாந்தம் வெளிவரும் சிவபூமி பத்திரிகையின் சில செய்திகளை முகநூல் ஊடாக பகிர்தல்

19/10/2025
நேற்றைய தினம் 2025-10-18, பொறளை மகசீன்  சிறைச்சாலை தமிழ் கைதிகளுக்கு  தீபாவளிக்கான பூஜை, மற்றய பொருட்களும் அகில இலங்கை இ...
19/10/2025

நேற்றைய தினம் 2025-10-18, பொறளை மகசீன் சிறைச்சாலை தமிழ் கைதிகளுக்கு தீபாவளிக்கான பூஜை, மற்றய பொருட்களும் அகில இலங்கை இந்து மாமன்ற சமூக நலன்சேவைக் குழுவினரால் கையளிக்கப்பட்டது.

திருச்செந்தூர் முருகன் கந்தசஷ்டித் திருவிழா அழைப்பிதழ் -2025
17/10/2025

திருச்செந்தூர் முருகன் கந்தசஷ்டித் திருவிழா அழைப்பிதழ் -2025

யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 வெள்ளி மாலை இடம்பெற்ற லிட்டியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷ...
11/10/2025

யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று 10.10.2025 வெள்ளி மாலை இடம்பெற்ற
லிட்டியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோர் தயாரித்த குறளிசைக் காவியம் ஒரு தொகுதியை வெளியீடு செய்து வாழ்த்துரை வழங்கிய செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள்.

பௌர்ணமி தினமான இன்று சிவபூமி அன்னபூரணி வயலில் விநாயகப் பெருமானுடைய வழிபாட்டுடன் நெல் விதைப்பு கலாநிதி ஆறு திருமுருகன் அவ...
06/10/2025

பௌர்ணமி தினமான இன்று சிவபூமி அன்னபூரணி வயலில் விநாயகப் பெருமானுடைய வழிபாட்டுடன் நெல் விதைப்பு கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிவபூமி தமிழ் ஆராய்ச்சி மையம் அடிக்கல் நாட்டு விழா விஜயதசமி நாளான இன்று இறைவன் திருவருளினால் கை கூடி கலாநிதி ஆறு திருமுர...
02/10/2025

சிவபூமி தமிழ் ஆராய்ச்சி மையம் அடிக்கல் நாட்டு விழா விஜயதசமி நாளான இன்று இறைவன் திருவருளினால் கை கூடி கலாநிதி ஆறு திருமுருகன் ஐயா அவர்களினால் கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு இனிதே ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.....இந்த நிகழ்வில் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் மற்றும் எந்திரி.ச.சந்தோஷ் , கவிஞர் சிவசிதம்பரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்..

02/10/2025

சிவபூமி தமிழ் ஆராய்ச்சி மையம் அடிக்கல் நாட்டு விழா விஜயதசமி நாளான இன்று இறைவன் திருவருளினால் கை கூடி கலாநிதி ஆறு திருமுருகன் ஐயா அவர்களினால் கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டு இனிதே ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.....

தென் மாகாணத்தில் சமூக  அறப்பணி செயற்பாடுகள் செய்து வரும் 'எஸ்கோ' நிறுவினத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மா...
28/09/2025

தென் மாகாணத்தில் சமூக அறப்பணி செயற்பாடுகள் செய்து வரும் 'எஸ்கோ' நிறுவினத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றிய மாணவர்களின் திறனை வெளிப்படுத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட சித்திர போட்டி மற்றும் குழு நடனத்தில் சிவபூமி பாடசாலை விசேட திறனுடைய மாணவர்களும் பங்கேற்று அதில் இரண்டு போட்டிகளிலும் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டனர் இந்த போட்டியில் இலங்கையில் முழுவதிலும் இருந்தது குழு நடனத்திற்காக 35க்கு மேற்பட்ட குழுக்களும் சித்திரப்போட்டியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பேராசியர்,பேராசிரியர் பதவி உயர்வுகளுக்குப் பேரவை அங்கீகாரம்!யாழ்ப்பாணப் பல்கலைக்கழ...
27/09/2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட பேராசியர்,
பேராசிரியர் பதவி உயர்வுகளுக்குப் பேரவை அங்கீகாரம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசியரகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆறு பேரைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த ரோசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சையியல் துறை மற்றும் உடற்கூற்றியல் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரையும், கலைப்பீடத்தின் புவியியல் துறை, இந்து கற்கைகள் பீடத்தின் சமஸ்கிருதத்துறை மற்றும் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையட்டு விஞ்ஞான அலகைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கே பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் செப்ரெம்பர் 27 ஆம் திகதி சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த ரோசிரியர் ஜி. திருக்குமரன், பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சத்திரசிகிச்சையியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி, சிரேஷ்ட விரிவுரையாளரும், சத்திர சிகிச்சை நிபுணருமான சுந்தரமூர்த்தி ஐயர் துரைசாமி சர்மா, உடற்கூற்றியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி துரைரட்ணம் செந்தூரன், புவியியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா, சமஸ்கிருதத்துறைத் தலைவரும்இ சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா மற்றும் விளையட்டு விஞ்ஞான அலகின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவநேசன் சபா ஆனந் ஆகியோரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், விவசாய பீடத்தைச் சேர்ந்த ரோசிரியர் ஜி. திருக்குமரன் விவசாய உயிரியலில் சிரேஷ்ட பேராசியரகவும், மருத்துவ பீடத்தைச் சேர்நத சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி சிறுநீரகவியலில் பேராசிரியராகவும், சத்திர சிகிச்சை நிபுணர் சுந்தரமூர்த்தி ஐயர் துரைசாமி சர்மா சத்திரசிகிச்சையியலில் பேராசிரியராகவும், உடற்கூற்றியல் துறைத் தலைவர் கலாநிதி துரைரட்ணம் செந்தூரன் உடற்கூற்றியலில் பேராசிரியராகவும்,

புவியியல் துறைத் தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா புவியியலில் பேராசிரியராகவும், சமஸ்கிருதத்துறைத் தலைவர் கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா சமஸ்கிருதத்தில் பேராசிரியராகவும், விளையட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலாநிதி சிவநேசன் சபா ஆனந் உடற்கல்வியியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இன்றுகொழும்பு  சிவபூமி நிலையத்தில் நடைபெற்ற புராணபடனப் பயிற்சி நெறியில் 23 பேர் பங்குபற்றினர் இப்பயிற்சி மூன்று மாதங்கள்...
27/09/2025

இன்றுகொழும்பு சிவபூமி நிலையத்தில் நடைபெற்ற புராணபடனப் பயிற்சி நெறியில் 23 பேர் பங்குபற்றினர் இப்பயிற்சி மூன்று மாதங்கள் நடைபெறும்

வடமராட்சி மேலைப் புலோலி திருநாவலூர் மண்ணில் நாவலர் பெருமான் திருவுருவச்சிலை வல்லிபுரம் வடிவேலு குடும்பத்தின் நிதி உதவியி...
27/09/2025

வடமராட்சி மேலைப் புலோலி திருநாவலூர் மண்ணில் நாவலர் பெருமான் திருவுருவச்சிலை வல்லிபுரம் வடிவேலு குடும்பத்தின் நிதி உதவியில் நாவலர் சனசமுக நிலையத்தினரின் வளிப்படுத்தலின் கீழ் இன்று (26.09.2025) கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களினால் திறந்துவைக்கப்பெற்றது.

Address

Kondavil
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Sivapoomi News Paper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sivapoomi News Paper:

Share

Category