குளோபல் தமிழா

குளோபல் தமிழா Daily Tamil News Updates & Entertainment Videos 24/7 News Update From SriLanka.

ஒரு சீரியல் நடிகையோட ஆபாச படம் வந்துருக்குனு சோசியல் மீடியால குதூகலத்தோட கொண்டாடி தீக்குறானுக...புள்ளி வைக்குறதுல சில பொ...
25/03/2025

ஒரு சீரியல் நடிகையோட ஆபாச படம் வந்துருக்குனு சோசியல் மீடியால குதூகலத்தோட கொண்டாடி தீக்குறானுக...
புள்ளி வைக்குறதுல சில பொண்ணுங்க கூட பாரபட்சம் பாக்குறதில்ல...அந்த மாதிரி பதிவுகள் ல்ல சிரிச்சு வச்சு நாங்களும் சோசலிசம் ன்னு காட்டிக்க அவ்ளோ தன்முனைப்பு எல்லாருக்கும்...
அவதான தப்பு பண்ணா, நாங்களா அப்யூஸ் பண்ணோம்? வீடியோ வந்தா ரிலீஸ் தான் பண்ணுவோம்னு ஒரு குரூப்பு வேற குறுக்க மறுக்க ஓடுது...
அவ வீடியோ எடுத்து உனக்கா அனுப்புனா? அவள அசிங்க படுத்த
ஒருத்தன் அத வெளியிட்ருக்கான்...அத அசிங்கம் ன்னு நினைச்சு கூட பாக்காம ஓராயிரம் பேர் ஷேர் பண்றான்...
புள்ளி வீடியோவ ஷேர் பண்றதால ஃபாலோயர்ஸ் ஏறும்னு நினைச்சு, புள்ளி வைங்க வீடியோ அனுப்புறேனு சொல்றதும் ஒருவகை ஆன்லைன் விபச்சாரம் தானே...
ஒன்னு புரியவே இல்ல...ஒரு வீடியோ பாத்துதான் மூட் வரணும்னா லட்சோப லட்சம் வீடியோஸ் கொட்டி கிடக்குதே ‌.... அத பாத்தும் காமம் தணியலையா??செலிபிரட்டியோ, இல்ல சோசியல் மீடியால தெரிஞ்ச பொண்ணோட வீடியோவோ எவனோ ஒரு கேவலங்கெட்ட ஜென்மத்தால வெளியிடப்பட்டா அத்தனை காமக்கொடூரனுக்கும் திருவிழா எஃபெக்ட் வந்துருது...
பறக்க விடுறானுக...புள்ளி வை ன்றானுக... ஸ்டோரி போடுறானுக...வயசு வித்யாசம் இல்லாம அவன் பிள்ளை வயசு உள்ள பொண்ணோட வீடியோவையும் யாராவது அனுப்புங்களேன்னு பதிவே போடுறானுக...
12 வயசு பெண்குழந்தைய பாலியல் வன்கொடுமை பண்ணி வீடியோ எடுத்த குற்றவாளி கைது ன்னு சொன்னா அவன தூக்குல போடுங்கனு பதிவு செய்யுற அதே ஆள்தான், அந்த வீடியோ லிங்க் சுத்துதுன்னா அப்படி என்னதான் இருக்குனு பாக்க ஓடுறான்...
இவனுகளுக்கு பாரபட்சம் லாம் இல்ல...‌ மூடாகணும்னு முடிவு பண்ணிட்டா மூளை சாணியா போயிருது இவனுகளுக்கு...
ஒரு செலிப்ரட்டியோட அந்தரங்கத்தை பாத்துட்டா அதிகபட்சமா என்னடா பண்ணிட முடியும்??
ரெண்டு டைம் சுய இன்பம் அடைவிங்களா?? அடுத்ததா என்ன பண்ணுவிங்க??
அத பாத்து உனக்கு தெரிஞ்ச இன்னும் பத்து பேர் சுயஇன்பம் அடையணும்னு அவனுகளுக்கு அனுப்புவிங்க...
50 ரூபாய் வாங்கிட்டு வாய் போடுற பஸ் ஸ்டாண்ட் பாலியல் தொழில் பண்றதுங்களுக்கும், ஃபாலோயர் அதிகமாகும்னு புள்ளி வச்சா வீடியோ வரும், நீங்க சுய இன்பம் அடையலாம்னு மத்தவன் பாலுறுப்பை தூண்டி ஆர்கஸம் அடையுறவனுக்கும் என்ன பெரிய வித்யாசம்???
அவ பாலியல் தொழில் பண்றவளா கூட இருக்கட்டும்டா...அவள அசிங்க படுத்த வீடியோ விட்டவன விட அத எந்த குற்ற உணர்வும் இல்லாம பதிவு போட்டு ஷேர் பண்றவன் கேடு கெட்டவன்...
மொபைல் ங்குற அதிநவீன அரக்கன் நீ பேசுற அத்தனையும் ஒட்டு கேட்டுட்டு தான் இருக்கு...
உனக்கான அந்தரங்கங்களும் கேமரா ஆன் பண்ணாமலே கூட ரெக்கார்ட் ஆகிட்டுதான் இருக்கும்...உன் வீட்ல உள்ளவங்களையும் நினைச்சு பாரு.‌‌..
ஒழுக்கத்தின் உச்சகட்டத்தில் உள்ள யோக்கியன் லாம் அந்த பொண்ணு தப்பானவதானன்னு சர்டிபிகேட் கொடுக்க வர்றானுக...பிட்டு படம் பாத்து கையடிக்குற நா ய் க்கு பேச்ச பாத்தியான்னு கேக்க தோணுது...ஆனா நாகரீகமா இருக்காது ‌..‌..
காலம் ஒருநாள் உங்களையும் கன்டென்ட் ஆக்கும்...
கர்மா is பூமராங்

2 தாலி.. 2 கணவர்கள் ஒரே வீட்டில்.. ஒன்னா சாப்பிடுவாங்களாம், ஒன்னா தூங்குவாங்களாம்.. பூரிக்கும் மனைவி  பொதுவாக, ஒரு கணவரு...
20/03/2025

2 தாலி.. 2 கணவர்கள் ஒரே வீட்டில்.. ஒன்னா சாப்பிடுவாங்களாம், ஒன்னா தூங்குவாங்களாம்.. பூரிக்கும் மனைவி


பொதுவாக, ஒரு கணவருக்கு 2 மனைவிகள் இருப்பார்கள்.. ஒரு கணவருக்கு 2 பெண்களும் அடித்து கொள்வார்கள்.. அல்லது 2 மனைவிகளுமே ஒருவருக்கொருவர் சமரசம் செய்து கொண்டு, ஒரே வீட்டில் அனுசரித்து வாழ்வார்கள்.

அதேபோல, கணவருடன் வாழும் பெண், கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரிட்டால், முதல் கணவரை உதறித்தள்ளிவிட்டு 2வது திருமணம் செய்வார்கள். அல்லது கணவனுடன் வாழ்ந்துகொண்டே கள்ளக்காதலில் ஈடுபட்டு விடுவார்கள்.

ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.. இங்குள்ள தியோரியா என்ற பகுதியில் வசித்து வருகிறார் அந்த இளம்பெண்.. இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது..

வீடியோவில் அவர் அலங்காரம் செய்து மணப்பெண் போல காட்சியளிக்கிறார். இந்த பெண் தன்னுடைய கழுத்தில் இரு தாலிகள் அணிந்துள்ளார். இரு ஆண்கள் தோள் மீது கை போட்டு போஸ் கொடுத்திருக்கிறார்..

அந்த இரண்டு ஆண்களும், பெண்ணின் கணவர்கள் ஆவர்.. அதுமட்டுமல்ல, அவர்கள் 2 பேருமே சகோதரர்கள் என்கிறார்கள். 2 கணவன்களுடன் என, மொத்தம் இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார்களாம்.

இது பற்றி அந்தப்பெண் சொல்லும்போது, இது என்னுடைய 2 தாலிகள்.. என்னுடைய 2 கணவர்களுக்காகவும் இந்த தாலிகளை அணிந்துள்ளேன்.

நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். நாங்கள் எங்கே சென்றாலும் மூன்று பேருமே ஒன்றாகத்தான் செல்வோம். ஒன்றாக தான் சாப்பிடுவோம். 3 பேருமே ஒன்றாக சேர்ந்துதான் தூங்குவோம்.

என்னுடைய 2 கணவர்களுடனும் நேரத்தை திறம்பட நிர்வகிக்கிறேன்.. எங்களுக்குள் அன்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறோம் என்று பூரித்து சொல்லி உள்ளார..

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 1.7 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது... அத்துடன், சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகி பேசும் பொருளாகவும் உருவெடுத்துள்ளது.

எனினும், ஒருசிலர் இந்த வீடியோவை பார்த்து, உண்மையிலேயே ஒரு பெண் 2 கணவன்களுடன் ஒரே வீட்டில் வாழ முடியாது.. இந்த பெண் தான் பிரபலமடைய வேண்டும் என்பதற்காகவே, இப்படி 2 ஆண்களுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதனால் பெண்ணின் கூற்றுகளில் உண்மைத்தன்மை இருப்பாக தெரியவில்லை என்றும் சந்தேகம் கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு பூமியில் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்இந்திய-அமெரிக்க...
19/03/2025

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு பூமியில் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்

இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 2024 ஜூன் 5 முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 286 நாட்களுக்கு மேல் தங்கியுள்ளார். மொத்தம் 600 நாட்களுக்கு மேல் விண்வெளியில் செலவிட்டு, பெண் விண்வெளி வீரர்களில் சாதனை படைத்தவர். 2025 மார்ச் 26 அன்று ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-9 விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார். ஆனால், விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கிய பிறகு, பூமியில் அவரது அன்றாட வாழ்க்கையில் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

1. உடல் ரீதியான மாற்றங்கள்:
தசை மற்றும் எலும்பு பலவீனம்: புவியீர்ப்பு இல்லாத சூழலில், தசைகள் 20-30% பலவீனமாகி, எலும்பு அடர்த்தி 1-2% குறையும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும், முதல் சில வாரங்கள் நடப்பது, படிக்கட்டு ஏறுவது சிரமமாக இருக்கும். 2007 இல் திரும்பியபோது, "நடப்பது மறந்துவிட்டது போல உணர்ந்தேன்" என்று கூறினார்.

இருதயம்: இரத்தம் மேல்நோக்கி செல்வதால், இதயம் சிறிது சுருங்கி, தலைச்சுற்றல் ஏற்படலாம். திடீரென எழும்போது மயக்கம் வரலாம்.

பார்வை: கண்களுக்கு பின்னால் அழுத்தம் (SANS) ஏற்பட்டு, பார்வை மங்கலாகலாம்.

2. மன ரீதியான விளைவுகள்:
தனிமை: 9 மாதங்களுக்கு மேல் குடும்பத்தை பிரிந்து, சிறிய இடத்தில் வாழ்ந்தது மன அழுத்தத்தை தரலாம். 2012 இல், "என் நாயை மிஸ் செய்தேன்" என்று பகிர்ந்தார்.

புவியீர்ப்பு மனதுக்கு சோர்வை ஏற்படுத்தலாம். கூட்டமும் சத்தமும் முதலில் அந்நியமாக தோன்றலாம்.

3. அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்:
உணவு: விண்வெளியில் உலர்ந்த உணவுக்கு பிறகு, புதிய பழங்கள், பீட்சா சுவையாக இருக்கும். செரிமானத்தில் சிறு சிரமம் ஏற்படலாம்.

தூக்கம்: ஒரு நாளில் 16 முறை சூரிய உதயம் பார்த்த பிறகு, 24 மணிநேர சுழற்சிக்கு பழக, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் வரலாம்.

சமூகம்: பெரிய கூட்டத்தில் பழக சிறிது நேரம் தேவைப்படும்.

மீட்பு:
நாசாவின் மறுவாழ்வு திட்டத்தில், மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் உதவுவர். 1-3 வாரங்களில் நடப்பது சரியாகும், 3-6 மாதங்களில் முழு உடல் வலிமை திரும்பும். சுனிதாவின் மன உறுதியும், குடும்ப ஆதரவும் (கணவர் மைக்கேல், செல்ல நாய்கள்) அவரை விரைவாக மீட்க உதவும்.

பிரித் நூல் கோவில் நூலக மாறிய ரகசியம் ? #பைத்தியம்இரட்டை நிலை உளவாளி(Double Agent) என்பவர் ஒரு நாட்டின் உளவுத்துறை ஒற்றன...
15/02/2025

பிரித் நூல் கோவில் நூலக மாறிய ரகசியம் ? #பைத்தியம்

இரட்டை நிலை உளவாளி(Double Agent) என்பவர் ஒரு நாட்டின் உளவுத்துறை ஒற்றனாக இருந்து கொண்டே, அந்நாட்டின் மீது இன்னொரு நாட்டுக்காக வேவு பார்ப்பவர்.

அதாவது சாவச்சேரி மருத்துவமனை விவகாரத்தை காண்பித்து தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று சிங்களத்துக்கும் அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு வேலை செய்வது தான் #பைத்தியத்துக்கு கொடுக்கப்பட்ட உள் திட்டம்.

மேதகு, போராளிகள், மாவீரர்கள் மற்றும் ஊழல் என்று பேசி தமிழர்களின் நம்பிக்கையை பெறுவது அதேசமயம் JVP(NPP)யின் யாழ் பாராளுமன்ற அங்கத்தவரை கத்தரிதோட்ட வெருளிகள் என்று விமர்சித்து சிங்களத்துக்கு எதிரானவன் என்ற விம்பத்தை தமிழ் மக்களிடம் உருவாக்குவது. #பைத்தியம்

முதலாவது DCC கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் சபைக்கு வரும்பொழுது எழுத்து நின்று சலூட் அடிச்ச இதே பைத்தியம் சிறீதரன் சபையில் இருந்ததாகவும் விமர்சனம்
செய்தது . இப்பொழுது அதே #பைத்தியம் சந்திரசேகரை கப்பலில் வந்ததாக விமர்சனம் செய்து இரட்டை நிலை உளவாளியாக (Double Agent)ஆக வலம் வருகிறார்.

தையிட்டி விகாரை விடயத்தில் #பைத்தியமும் #ஆளுநர் JVP(NPP)யும்
ஒரே முடிவில் தான் உள்ளார்கள் . அதாவது விகாரையை இடிக்காமல் காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்குவது. இப்பொழுது விளங்குகிறதா யார் யாருக்கு வேலை செய்கிறார்கள் என்று? #பைத்தியம் அதாவது சிங்களத்தின் முகவர் / Double Agent!?

புரிந்தவன் பிஸ்தா ...எப்படி வசதி ?!

#பைத்தியத்தனம் #சாவகச்சேரி_புலனாய்வு #ஈழம்அரசியல் #வைத்தியர் #அரசியல்_பச்சோந்தி #சந்தர்ப்பவாதி

#தமிழ்_தேசியத்தை_ஆதரிப்போம்_போலிகளை_புறக்கணிப்போம்

11/02/2025

02/02/2025

பிணத்தை வைத்து அரசியல் செய்வதை பார்த்திருக்கின்றோம், ஆனால் இந்த கேடு கெட்டவன் பிணத்தை எரித்த சாம்பலிலேயே பிராடுத்தனம் பண்ணி தரங்கெட்ட அரசியல் செய்கின்றான்.

டேய் ரொம்ப குளிருது டா சொன்னத செய்டா...!? கொஞ்சம் இருங்கப்பா அதை தான் கூகுள்ல தேடிட்டு இருக்கேன்... என்ன கூகுள் லயா...!?...
26/01/2025

டேய் ரொம்ப குளிருது டா சொன்னத செய்டா...!?
கொஞ்சம் இருங்கப்பா அதை தான் கூகுள்ல தேடிட்டு இருக்கேன்...
என்ன கூகுள் லயா...!?
ஆமாப்பா... இதுவரைக்கும் நிலாவுக்கு அமெரிக்கா ரஷ்யா சீனா இந்தியா இந்த நாலு நாடுகள் ராக்கெட்ட அனுப்பி இருக்கு...
சரிடா...!
நிலாவுக்கு 12 பேர் போய் வந்திருக்காங்க அத்தனை பேரும் அமெரிக்க காரனுங்க...!
சரிடா அதுக்கு இப்ப என்ன...!?
அதான்பா... நிலாவுக்கு மொத்தமா 72 தடவ ராக்கெட்ங்க போயிருக்கு... ஏழு தடவை மனுஷனுக்கு போய் இறங்கி இருக்காங்க 21 தடவை ரோவர் மாதிரியான ஆராய்ச்சி வாகனம் நிலவில் இறங்கி ரவுண்ட்ஸ் போய் வந்து இருக்கு...
அட... இதை ஏன்டா இப்ப என்கிட்ட சொல்லிட்டு இருக்க...!?
இருப்பா.. நிலாவுல ஒரு பொருள கொண்டு போய் வைக்கணும்னா தோராயமா 500 கோடி ரூபாய் செலவாகுமாம்... உன்கிட்ட 500 கோடி இருக்காப்பா...!?
500 கோடியா எதுக்குடா...!?
நீ தானப்பா ரொம்ப குளிருது ஃபேனை 'மூன்'ல வைக்க சொன்னே...!
நாசமா போனவனே ஃபேன் ஸ்பீட குறைச்சி வைக்க சொன்னதுக்கா இத்தனை அக்கப்போரு...
#பகிர்வு

25/01/2025

இந்திய ஒன்றிய இராணுவத்தின் உண்மையான முகம் இதோ.
1987 களில் ஈழதேசத்தில் அந்த இந்திய அமைதிகாக்கும் படை(IPKF) என்ற பெயரை தாங்கி வந்த அந்த நாசகார படை ஈழத்திலும் பல ஆயிரம் கொலைகள, பாலியல் வண்கொடுமைகளை செய்திருந்தது.

கழுகு பார்வையில் மாட்டிக்கொண்டு  #மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த வானத்து தேவதை.. #அழகு என்ற ஒரே காரணத்துக்காக...
22/01/2025

கழுகு பார்வையில் மாட்டிக்கொண்டு
#மீடியாவில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த வானத்து தேவதை..

#அழகு என்ற ஒரே காரணத்துக்காக இத்தனை மீடியாக்கள்.....

ஊசி, பாசி, மணி, உத்ராட்சமாலை விற்கும் மோனிகாவையே சுற்றி வளைத்து மீடியாக்கள் வலம் வருகிறது.

வயித்து பொழப்புக்கு பாசி விக்கிற பொண்ணை ஏன்டா இந்த பாடு படுத்துறீங்க..?

அழகுன்றது ஒரு குறையா? இல்ல வறுமைங்கிறதே ஒரு குறையா..?அல்லது, பக்தி என்பதே குறையா..?

இந்தபெண் பத்து சாய்பல்லவி, அஞ்சு தீபிகா படுகோன், மூன்று அலியாபட்டை உள்வாங்கி இருப்பதாக ஜொல் விடுகிறார்கள் சண்டாளர்கள்.

இதற்கெல்லாம் காரணம்
இந்த பெண் அழகாக இருக்கிற என்ற காரணத்தால் இவரை சுற்றி 100 கேமராக்களும்..

ஆயிரக்கணக்கான ஆண்களின் கண்களில் பார்வைக்கு தென்படுகிறாள்...

இந்த ஊசி பாசிவிக்கும் பெண்மணியை..
இனிமேல் பாருங்கள் உனக்கு சினிமா வாய்ப்பு தருகிறேன் என்று ஒரு சில கூட்டங்கள் வரும்..,

இன்று நல்ல முறையாக மானத்துடன் ஊசி பாசி மணி வித்துக் கொண்டிருக்கும் இந்த பெண்மணி சினிமாவில் சேர்ந்து விட்டால் நிலை என்ன என்று உங்களுக்கே புரியும்....

இங்கே ஆபத்து எதில் இருக்கிறது கேட்டால்??? அழகில் மட்டும்தான் இருக்கிறது...

அது பெண்ணாக இருந்தால் சரி பொருளாக இருந்தாலும் சரி பறவைகளா இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் அழகு தான் அவர்களை ஆட்டிப் படைக்கிறது......

இலங்கையின் முக்கிய செய்திகள் | 15.01.2025 | Today Sri Lanka Tamil News |  https://yt.openinapp.co/bfisz குளோபல் தமிழா
15/01/2025

இலங்கையின் முக்கிய செய்திகள் | 15.01.2025 | Today Sri Lanka Tamil News |
https://yt.openinapp.co/bfisz

குளோபல் தமிழா

இலங்கையின் முக்கிய செய்திகள் | 14.01.2025 | Today Sri Lanka Tamil News |
14/01/2025

இலங்கையின் முக்கிய செய்திகள் | 14.01.2025 | Today Sri Lanka Tamil News |

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when குளோபல் தமிழா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share