01/09/2026
நெடுந்தீவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கலப்பு மின்உற்பத்தி நிலையத்தில் இருந்தே சமீப காலமாக நெடுந்தீவுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மின் வடத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கினை தொடர்ந்து அந் நிலையத்தின் தன்னியக்க மின்பிறப்பாக்கிகள் தமது மின் உற்பத்தியை நிறுத்திக் கொண்டன. இதன் காரணமாக நேற்று இரவு முதல் மீண்டும் முன்னர் பயன்பாட்டில் இருந்த மின் உற்பத்தி நிலையத்தில் இருந்தே மின் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.