27/04/2026
கடற்கொள்ளையர் என நினைத்து இலங்கையைச் சேர்ந்தவரை, செருதூர் மீனவர்கள் சிறை பிடித்து நாகப்பட்டினம் கொண்டு வந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரிலிருந்து பாலமுருகனுக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த
25ம் தேதி மதியம் 12 மணிக்கு செருதூரில் இருந்து செருதூரை சேர்ந்த சக்திமயில் (40), அபிமன் (30),பாலசுப்பிரமணியன் (30), பழனிச்சாமி (29), கன்னியாகுமரி உவரி பகுதியை சேர்ந்த அபி (28) ஆகிய ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 26 ம் தேதி இரவு 11 மணியளவில் ஆற்காட்டுத்துறைக்கு தென் கிழக்கே 9 நாட்டிகல் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ஒரு ஸ்பீடு பைபர் படகில் வந்த 3 நபர்கள் செருதூர் மீனவர்கள் கடலில் விரித்திருந்த மீன்பிடி வலையை அறுக்க முற்பட்டனர். இதில் இருதரப்பினர் இடையே நடந்த தாக்குதலில் 2 நபர்கள் அவர்கள் வந்த ஸ்பீடு பைபர் படகில் தப்பிச் சென்றனர். மற்றொருவரை செருதூர் மீனவர்கள் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர இலங்கை காங்கேசன்துறை வழலையைச் சேர்ந்த அயந்தன் (27) என்பது தெரியவந்தது. மேலும் அவர்
தமிழ் மொழியில் பேசியதால் அயந்தனை செருதூர் மீனவர்கள்
காலை 8 மணிக்கு செருதூர் மீன்பிடி இறங்குதளத்திற்கு கொண்டு வந்தனர். கடலில் மீனவர்கள் தாக்கியதில் அயந்தன்
வலது கண் புருவம், இடது பக்க தலை ஆகிய இடங்களில் ரத்தக் காயமும், நெற்றியில் வீக்கமும் ஏற்பட்டதால் சிகிக்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழையூர் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.