Marainathi Jaffna Diocese

Marainathi Jaffna Diocese This is an official Page run by the diocesan commission for social communication - Jaffna Diocese
(1)

15/06/2026

⛪️ யாழ். சுண்டுக்குளி திருமுழுக்கு யோவான் ஆலய கொடியேற்ற திருப்பலி ⛪️
🔴🔴 நேரலை 🔴🔴

15/06/2026

சுண்டுக்குளி திருமுழுக்கு யோவான் ஆலய கொடியேற்றம்

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்...
14/06/2026

மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 38வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு ஆனி மாதம் 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

கரித்தாஸ் எகெட் நிறுவன பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிறுவன இயக்குநர் அருட்தந்தை அன்ரனி ஜெயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஆலயத்திலுள்ள அருட்தந்தையின் கல்லறையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டு அகவணக்கமும் நினைவுரைகளும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் பல்சமய தலைவர்கள், ஒன்றிய அங்கத்தவர்கள், அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களென பலரும் கலந்து அருட்தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர்.
1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவராக செயற்பட்டுவந்த அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்கள் பலத்த சவால்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தளராது பணியாற்றி கைதுகள் செய்யப்பட்ட அப்பாவிகளுக்காக தனது உயிரையும் துச்சமென மதித்து இராணுவ முகாம்களுக்குச் சென்று அவர்களின் விடுதலைக்காக பரிந்து பேசியவர்.

அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்கள் 1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி தனது பங்குப்பணிமனையில் இருந்தவேளை இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு, ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்டத்தின...
14/06/2026

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு, ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

யாழ். மறைக்கோட்டத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நற்கருணை பவனி சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் ஆரம்பமாகி யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயம், குருநகர் புனித யாகப்பர் ஆலயம் ஊடாக யாழ். புனித மரியன்னை பேராலயத்தை சென்றடைந்தது.

இப்பேரணி சென்ற ஆலயங்களில் சிறப்பு நற்கருணை வழிபாடுகள் இடம்பெற்றதுடன் யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களால் நற்கருணை ஆசீரும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்கள், மறைக்கோட்ட இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

புதிதாக அமைக்கப்பட்டுவந்த கிளிநொச்சி  பங்கின் 155ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழா ஆனி மாதம் 06ஆம் திகதி சனிக்...
14/06/2026

புதிதாக அமைக்கப்பட்டுவந்த கிளிநொச்சி பங்கின் 155ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழா ஆனி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புனிதரின் திருவிழாவிற்கான ஆயத்த நாளின் முதல் நாள் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

1975ஆம் ஆண்டு அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை எட்மண்ட் மைக்கல் அவர்களால் கொட்டில் ஆலயமாக அமைக்கப்பட்ட இவ்வாலயம் 1986ஆம் ஆண்டு அருட்தந்தை பயஸ் அவர்களின் பணிக்காலத்தில் அறுகோண வடிவில் கட்டப்பட்டது.

தொடர்ந்து 1996ஆம் ஆண்டு விமானத்தாக்குதலால் சேதமடைந்த இவ்வாலயம் 2000ஆம் ஆண்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை தேவசகாயம் அவர்களின் பணிக்காலத்தில் நீள்சதுர வடிவில் மீண்டும் அமைக்கப்பட்டது.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தின் பின் மக்கள் மீள்குடியேறிய நிலையில் 2010ஆம் ஆண்டு அருட்தந்தை ஜேசுதாஸ் அவர்களின் பணிக்காலத்தில் தற்போதைய புதிய எண்கோணவடிவ ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்கள் பணிக்காலத்தில் கட்டுமானப்பணிகள் தொடரப்பட்டு அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் பணிக்காலத்தில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து இவ்வாலயம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாலய கட்டுமானப்பணிகளுக்கான நிதியுதவியை பங்குமக்கள், அயற்பங்கு மக்கள் மற்றும் இந்துசமய மக்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துகளுக்கு ...
14/06/2026

தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்பாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் காணொளி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வறிக்கையில், தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தனது வாழ்வியல் அனுபவங்களின் அடிப்படையில் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அருட்தந்தை மார்க்கஸ், அந்தக் கருத்துக்களை மன்னார் மாவட்ட மக்கள் மதிப்புடனும் பொறுப்புணர்வுடனும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொழும்பு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஜூட் கிரிசாந்த வெளியிட்ட எதிர்ப்புக் கருத்துக்கள் மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பான தீவிரமான கேள்விகளை எழுப்புவதாகவும், அவை கத்தோலிக்க சமூகத்தினரிடையிலும் இலங்கை மக்களிடையிலும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த பல தசாப்தங்களாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல்வேறு உண்மைகள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் குரலை ஒடுக்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் தாம் உறுதியாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள அருட்தந்தை மார்க்கஸ் அவர்கள், மன்னார் மாவட்ட மக்களும் கத்தோலிக்க சமூகத்தினரும் தொடர்ந்தும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ{டன் ஒன்றுபட்டு நிற்பதுடன் அவர் முன்வைத்துள்ள கருத்துகளுக்கு தங்களது ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

1986ஆம் ஆண்டு ஆனி மாதம் 10ஆம் திகதி மண்டைதீவு கடற்பரப்பில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட குருநகர் பிரதேசத்த...
14/06/2026

1986ஆம் ஆண்டு ஆனி மாதம் 10ஆம் திகதி மண்டைதீவு கடற்பரப்பில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட குருநகர் பிரதேசத்தை சேர்ந்த 31 மீனவர்களின் 40ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு ஆனி மாதம் 10ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நினைவுத் திருப்பலியும் தொடர்ந்து நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் இறந்தவர்களின் உறவினர்கள், பங்குமக்களென பலரும் கலந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆன...
14/06/2026

கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் மற்றும் சிலாவத்தை பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி முல்லைச் சந்தி, முல்லைத்தீவு புனித குழந்தை இயேசு ஆலயம், சிலாவத்தை புனித அந்தோனியார் ஆலயம், சிலாவத்தை சந்தி என்பவற்றின் ஊடாக சிலாவத்தை புனித அன்னம்மாள் ஆலயத்தை சென்றடைந்தது.

இப்பேரணி தரித்த இடங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றதுடன் வழிபாடுகளை தர்மபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட், முல்லைத்தீவு றோ.க வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையர்கள் விஜேந்திரன், விமல் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், முல்லைத்தீவு மறைக்கோட்ட இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழாவை முன்னிட்டு உரும்பிராய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் ...
14/06/2026

கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழாவை முன்னிட்டு உரும்பிராய் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி யூலனூர் ஹென்றியரசர் ஆலயத்தில் அரம்பமாகி புன்னாலைக்கட்டுவன் பலாலி வீதியூடாக உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை ஆசீர்வாதம் மற்றும் திருப்பலியுடன் நிறைவடைந்தது.

திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இப்பவனியில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் எழுவைதீவு பங்கில் பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலியுடன் அரம்பமாகி புனித செபமாலை அன்னை ஆலயம், புனித பற்றிமா திருச்சொருபம் என்பவற்றினூடாக புனித தோமையார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.

இவ்வழிபாடுகளை அருட்தந்தையர்கள் நிலான் யூலியஸ், செபஜீவன், சசி ஆகியோர் நெறிப்படுத்தினர்.

இப்பவனியில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழா நற்கருணை பவனி ஆனி 07ஆம் திகதி கடந்த ஞாயி...
14/06/2026

நெடுந்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்த பெருவிழா நற்கருணை பவனி ஆனி 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பவனி புனித யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித அந்தோனியார் ஆலயத்தை சென்றடைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டுடன் நிறைவடைந்தது.

அத்துடன் நெடுந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் அன்றைய தினம் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை கமல்ராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 13 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

Address

MARAINATHI Catholic Media Centre
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Marainathi Jaffna Diocese posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Marainathi Jaffna Diocese:

Share