New Lanka

New Lanka New Lanka is are sri lankan Based Registered Online Media News Company The Official New Lanka Media page
(242)

இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங...
07/06/2026

இலங்கை பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் நாளை (08) முதல், பொதுமக்கள் தினமாக ஒதுக்கப்பட்டுள்ள திங்கட்கிழமைகளில் நடத்தப்படும் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களிலும் தங்களால் கலந்துகொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் தினமான திங்கட்கிழமைகளில் அமைச்சகங்கள் மற்றும் அரசியல் தலைமைகளால் நேரடி அல்லது இணைய வழிக் கூட்டங்கள் நடத்தப்படுவதால், தங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அரசு நிர்வாக சுற்றறிக்கை (இலக்கம் 27/2023) இன் படி, பொதுமக்கள் தினத்தில் அதிகாரிகள் தங்களது அலுவலகங்களில் தங்கியிருந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்நாளில் எந்தவொரு உத்தியோகபூர்வ கூட்டங்களையும் நடத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஆர். செந்தில் தெரிவித்துள்ளார்.

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் தொடர்ந்து ராசியை மாற்றுவது மட்டுமின்றி சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து சக்திவாய்ந...
07/06/2026

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் தொடர்ந்து ராசியை மாற்றுவது மட்டுமின்றி சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து சக்திவாய்ந்த ராஜயோகங்களை உருவாக்குகின்றன. ஒரே ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் போது அவை மங்களகரமான யோகங்களை உருவாக்குகின்றன. இத்தகைய கிரக இணைப்புகள் தொழில், நிதி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி உள்ளிட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணையும்போது 'திரிகிரக யோகம்' உருவாகிறது. ஜூன் 15 அன்று, சூரியன், புதன் மற்றும் சந்திரன் ஆகியவை மிதுன ராசியில் இணைந்து இந்த சக்திவாய்ந்த கிரக அமைப்பை உருவாக்குகின்றன. இந்த கிரக நிலை ஜூன் 17 அன்று காலை 8:13 மணி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த 'திரிகிரக யோகம்' தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யோகத்தால் அவர்கள் சிறப்பான நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் அவர்களின் புத்திசாலித்தனம் பல மடங்கு அதிகரிக்கும், இதனால் அவர்கள் பல்வேறு துறைகளில் வெற்றி பெறலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த கிரக சேர்க்கை அபரிமிதமான வளர்ச்சியைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடு அல்லது வாகனம் வாங்குவது தொடர்பான அவர்களின் நீண்டகால ஆசைகள் நிறைவேறக்கூடும். இந்த நேரத்தில் அவர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள், மேலும் இதனால் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். இந்த காலகட்டத்தில், அவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யலாம். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிக்கப்படலாம் மற்றும் அவர்கள் பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் அவர்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்கப்போகிறது. இந்த ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையப் போகிறது. அவர்கள் பல வழிகளிலிருந்து வருமானத்தை ஈட்ட முடியும், மேலும் அவர்களின் முதலீடுகள் எதிர்பாராத லாபத்தைக் கொடுக்கும். அவர்களின் கடன் பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.

களுத்துறை ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபா பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக க...
07/06/2026

களுத்துறை ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் (3.5 கோடி) ரூபா பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அந்த வங்கியின் உதவி மேலாளரை 6 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஹொரணை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் பாதுகாப்பு அதிகாரி வரும் ஜூன் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் பல ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பு செய்வதற்காக 3 கோடியே 50 இலட்சம் ரூபா பணத்தைக் கொண்டு சென்ற போது, கொள்ளையன் ஒருவன் அதனைப் பறித்துச் சென்றதாக கடந்த ஜூன் 3ஆம் திகதி ஹொரணை தலைமையகப் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

இந்தப் பணத்திற்குப் பொறுப்பாக இருந்த உதவி மேலாளரிடம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்திய போதிலும், எந்தவொரு முக்கிய தடயமும் கண்டறியப்படாததால், பொலிஸ் மா அதிபர் இந்த விசாரணையை பேலியகொட வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தார்.

அப்பிரிவு அதிகாரிகள் வங்கியின் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்த போது, சம்பவத்தன்று காலையில் வங்கியின் உதவி மேலாளர் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து பணத்தை எடுப்பது தெரியவந்துள்ளது.

வங்கிக்கு வெளியே செல்லும் பகுதியில் சிசிடிவி கெமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கவில்லை. எனினும், சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கெமராக்களைப் பரிசோதித்த விசாரணை அதிகாரிகளுக்கு, சந்தேகத்திற்கிடமான எவரும் பணப்பைகளை எடுத்துச் செல்வது போன்ற காட்சிகள் தென்படவில்லை.

அதேநேரம், வங்கி வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அங்குள்ள இரும்பு கழிவுகள் போடும் கொள்கலன் பெட்டி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,740,000 ரூபா பணத்தை விசாரணை அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், சந்தேகநபரான உதவி மேலாளர், வங்கியின் பாதுகாப்பு அதிகாரியையும் தன்வசப்படுத்திக் கொண்டு, மிகவும் திட்டமிட்ட வகையில் இப்பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

அதனடிப்படையில், உதவி மேலாளரும் பாதுகாப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களான உதவி மேலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரியின் தொலைபேசி விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும், அவர்களின் வீடுகளைப் பரிசோதிப்பதற்கான சோதனை ஆணையை பிறப்பிக்கவும் ஹொரணை பிரதான நீதவான் லக்மிணி விதானகமகே உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி மேலாளர் வாவல, கங்கொட பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும், மற்றைய சந்தேகநபரான பாதுகாப்பு அதிகாரி புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேல்மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயப் பெருவிழா நெருங்கும் வேளை நடந்த அற்புதம்!  வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூச...
06/06/2026

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயப் பெருவிழா நெருங்கும் வேளை நடந்த அற்புதம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய மஹோற்சவப் பெருவிழா இன்னும் சில நாட்களில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்தின் கர்ண பரம்பரைக் கதையுடன் தொடர்புபட்ட கருடன் கல்லில் இன்று (06.06.2026) வெள்ளைநிறக் கருடன் வந்தமர்ந்துள்ளது.

இந்த அரிய காட்சி பக்தர்கள் மனதில் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் லட்சணங்கள் குறித்துத் தான் ஊடகங்களுக்குச் சொல்வதை விட, ஊடகவியலாளர்கள் நேரடிய...
06/06/2026

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் லட்சணங்கள் குறித்துத் தான் ஊடகங்களுக்குச் சொல்வதை விட, ஊடகவியலாளர்கள் நேரடியாக வீதிக்குச் சென்று மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழுக் கூட்டம் நேற்று(05.06.2026) பத்தரமுல்ல - நெலும் மாவத்தையிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச ஆகியோர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தற்போதைய நாட்டின் நிலைமை குறித்து மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவுகின்றது என்பதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

கட்சியின் உள்ளக கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறதா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, கட்சியில் தற்போதைக்கு எந்தவித மாற்றங்களும் இல்லை. எனினும், கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிமுறைகள் குறித்தே இந்தச் செயற்குழு கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது" என அவர் தெளிவுபடுத்தினார்.

அரசியல் களத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தரப்பும், சஜித் பிரேமதாஸவின் தரப்பும் வெவ்வேறு உத்திகளுடனும், புதிய 'மூளைகளுடனும்' புதிய கூட்டணிகளை அமைப்பதற்குத் தயாராகி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

எந்தத் தரப்பு எந்த உத்தியைப் பயன்படுத்திப் புதிய கூட்டணிகளை அமைத்தாலும் அல்லது மாற்றங்களைச் செய்தாலும், அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை என்றார்.

இறுதியாக, தேர்தல் காலத்தில் மக்கள் வாக்களிக்கும் போது எவற்றைக் கருத்தில் கொள்வார்கள் என்பது குறித்துப் பேசிய மகிந்த ராஜபக்ச, மக்கள் எப்போதும் நாட்டின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்குவார்கள். அதேபோன்று, நாட்டின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதையும் சிந்திப்பார்கள்.

அத்துடன், தற்போதைய நிகழ்காலச் சூழலையும் மிகத் தெளிவாகக் கருத்தில் கொண்டே மக்கள் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள்.

எனவே, இந்த முக்கிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டே மக்கள் தேர்தல் காலத்தில் சரியான முடிவை எடுப்பார்கள் என்றார்.

போலி நில ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் போலி உத்தியோகப்பூர்வ முத்திரைகள் தயாரித்து பயன்படுத்தியதாகக் கூறப்படும்...
06/06/2026

போலி நில ஆவணங்கள், தேசிய அடையாள அட்டைகள் மற்றும் போலி உத்தியோகப்பூர்வ முத்திரைகள் தயாரித்து பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மூவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொரளை, திக்வெல்ல மற்றும் ஹொரணை பகுதிகளைச் சேர்ந்த 54, 55 மற்றும் 59 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொரளையிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், போலி ஆவணங்கள், நான்கு போலி தேசிய அடையாள அட்டைகள், சுமார் 600 போலி உத்தியோகப்பூர்வ முத்திரைகள், மின்னணு உபகரணங்கள் மற்றும் ரூ.15 இலட்சம் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 - மே மாதத்தில் 1.6 வீதமாக அதிகரித்து, 6.873 பில்லியன் அமெரிக்க டொ...
06/06/2026

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2026 - மே மாதத்தில் 1.6 வீதமாக அதிகரித்து, 6.873 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாத இறுதியில் 6.766 பில்லியன் அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டிருந்த கையிருப்பு, அந்த மாதத்தில் 107 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பைக் காட்டுகிறது.

அதேநேரம், சீன மக்கள் வங்கியுடனான மாற்று ஏற்பாட்டின் மூலம் கிடைத்த வருமானமும் குறித்த கையிருப்பு சொத்துக்களில் அடங்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு தீர்க்கதரிசனங்களுக்காக அறியப்படும் பாபா வாங்காவின் கணிப்புகள் ஆண்டுதோறும்  சமூக வலைதளங்களில் பேச...
06/06/2026

உலகம் முழுவதும் பல்வேறு தீர்க்கதரிசனங்களுக்காக அறியப்படும் பாபா வாங்காவின் கணிப்புகள் ஆண்டுதோறும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி வருகிறது. எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய நிகழ்வுகள் குறித்து அவர் கூறியதாக பரவி வரும் தகவல்கள் மக்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில், அவர் கணித்து சொன்ன பல விஷயங்கள் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் நடந்திருப்பதை நாம் பார்க்கலாம். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டில் கடைசியில் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மிகப்பெரிய அளவில் கோடீஸ்வர யோகத்தை பெறப் போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு தொழில் ரீதியாக ஒரு நிலையான தன்மையை பெறப்போகிறார்கள். நீண்ட நாட்கள் வாங்கிய கடன்களில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட பிரிவு சரியாக மாறக்கூடிய நிலை உருவாகும். சமுதாயத்தில் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவார்கள்.

கன்னி: திருமண வாழ்க்கை அமையப்போகிறது. அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயங்கள் எல்லாம் சரியாக அமையப் போகிறது. உடல் ரீதியாக மனரீதியாக சந்தித்து வந்த குழப்பங்களும் பிரச்சனைகளும் ஒரு முடிவை பெறப்போகிறது. குடும்பத்தினருடைய முழு ஆதரவையும் பெற்று முன்னேற்றம் அடைவீர்கள்.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு கடைசி பகுதியானது இவர்களுக்கு தொழில் ரீதியாக புதிய இடமாற்றத்தை கொடுக்கப் போகிறது. புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகப் போகிறது. அதுமட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் பூர்வீக சொத்துக்களை இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். கைகளுக்கு வரவேண்டிய சொத்துக்கள் கைகளுக்கு வந்து சேரும்.

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட...
06/06/2026

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF) பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தேடுதல் வேட்டையின் போதே போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் கிழக்கு பகுதியின் காட்டுப் பகுதிக்குள் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, நெல்லியடி விசேட அதிரடிப் படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து அந்தப் பகுதியை முற்றுகையிட்டுத் தீவிர தேடுதல் நடத்தினர்.

இதன்போது, அங்கு மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த, சர்வதேச சந்தையில் அதிக பணப் பெறுமதியைக் கொண்ட ‘குஷ்’ போதைப்பொருள் அடங்கிய பொதியை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் மொத்த நிறை மற்றும் அதன் துல்லியமான சந்தைப் பெறுமதி என்பவற்றை மதிப்பிடும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு - தொட்டலங்க பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் பெருந்தொகை சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு...
05/06/2026

கொழும்பு - தொட்டலங்க பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் பெருந்தொகை சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவினரால் இன்று (05) முடக்கப்பட்டுள்ளன.

இவர் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்றும், சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் இவையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 14-இல் வசிப்பவர் என்றும், போதைப்பொருள் கடத்தல் மூலம் வாங்கப்பட்ட பல சொத்துக்களே இவ்வாறு செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட, தொட்டலங்க பகுதியில் உள்ள சுமார் 30 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.30 பேர்ச் நிலம் மற்றும் 0.75 பேர்ச் நிலம், அத்துடன் மூன்று மாடி வீடும் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான முடக்குதல் உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (05) முதல் 7 நாட்களுக்கு பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when New Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Lanka:

Share