New Lanka

New Lanka New Lanka is are sri lankan Based Registered Online Media News Company The Official New Lanka Media page
(240)

🛑நலன்புரி_நன்மைகள்_ கிடைக்காமையின் காரணத்தை கண்டறியலாம்.!🛑நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெறுவதற்கு விண்ணப்பித்து ...
18/09/2025

🛑நலன்புரி_நன்மைகள்_ கிடைக்காமையின் காரணத்தை கண்டறியலாம்.!

🛑நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெறுவதற்கு விண்ணப்பித்து இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்காத குடும்பங்கள்
http://iwms.wbb.gov.lk/household/search
என்ற இணைப்பிற்கு சென்று தங்களது தே.அ.அட்டை இலக்கம் அல்லது நலன்புரி நன்மைகள் சபையால் வழங்கப்பட்ட QR இலக்கம் ( குடும்ப அலகு இலக்கம்) குறிப்பிட்டு search என்பதை click செய்து

👉நீங்கள் தெரிவுசெய்யப்படாமைக்கான காரணம்
👉உங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை
👉நீங்கள் செய்த முறைப்பாட்டின் நிலை என்பவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை புதிய யுகத்துக்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூத...
18/09/2025

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை புதிய யுகத்துக்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

கடவத்தை-மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது இலங்கைக்கான சீன தூதுவர் மேலும் கூறுகையில்,

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நான்காம் கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டத்துக்கு அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பல்வேறு காரணிகளால் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த திட்டம் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் இலங்கை புதிய யுகத்துக்குள் பிரவேசித்துள்ளது.

கடவத்தை –மீரிகம நெடுஞ்சாலை திட்டத்தை மீள ஆரம்பித்துள்ளமை திருப்புமுனையாக அமையும்.இந்த திட்டம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தும்.

இத்திட்டம் இலங்கையின் உட்கட்டமைப்புக்கு வலுவானதாக அமையும். அத்துடன் தேசிய ரீதியான சவால்களையும் வெற்றிக்கொள்ளும்.

இலங்கையுடன் அர்ப்பணிப்புடனும், தொடர் ஒத்துழைப்புடனும் பணியாற்ற தயாராகவுள்ளோம் என்றும் இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக  போக்குவரத்து அமைச்சர் பிமல...
18/09/2025

இலங்கை போக்குவரத்து சபைக்கு பெண் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை போக்குவரத்து சபையின் 25 டிப்போக்களை நவீனமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக 750 புதிய சாரதிகளையும், நடத்துநர்களையும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபை மீண்டும் கட்டமைக்கப்பட்டு இலாபகரமான நிறுவனமாக மாற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லஞ்சம் ஊழலைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரின் உடலில் கமரா📸அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்கு...
13/09/2025

லஞ்சம் ஊழலைத் தடுக்க போக்குவரத்து பொலிசாரின் உடலில் கமரா📸

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாடு முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடலில் அணியக்கூடியெ கெமராக்கள் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்க, அதிகாரிகளின் பொறுப்பை உறுதி செய்வதையும், ஊழலைத் தடுப்பதற்கும், வெளிப்படையாக தங்கள் கடமைகளைச் செய்வதற்கான வாய்ப்பை பொலிஸாருக்கு வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சாரதிகள் தங்கள் தவறுகளை மறைக்க அதிகாரிகள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் மற்றும் அதிகாரிகள் செய்யக்கூடிய தவறுகள் அனைத்தும் இந்த கெமராகக்ளில் பதிவு செய்யப்படும் என்றும், அனைவரின் பொறுப்புணர்வையும் உறுதி செய்யும் என்றும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற வடிவிலான முருங்கைக்காய் ஒன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது.மூதூர் சிறாஜியா நகர் பகு...
13/09/2025

முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற வடிவிலான முருங்கைக்காய் ஒன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது.

மூதூர் சிறாஜியா நகர் பகுதியிலுள்ள வீட்டிலே இந்த முருங்கைக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

முருங்கை அறுவடையில் பாம்மைப் போன்றதான விசித்திரமான ராட்சத முருங்கைக்காய் ஒன்று காய்த்து அறுவடை செய்யப்பட்டுள்ளது.

முருங்கைக் காயானது சுமார் ஆறு அடி நீளமுடையதாகக் காணப்படுகின்றது என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பாம்மைப் போன்ற வடிவில் 6 அடி நீளத்தில் அறுவடை செய்யப்பட்ட முருங்கைக்காயை அந்தப் பகுதியிலுள்ள பார்வையிட்டு வருகின்றனர்.

நாட்டில் அடுத்த 36 மணி நேரத்தில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள...
12/09/2025

நாட்டில் அடுத்த 36 மணி நேரத்தில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

2026 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 7ம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றில் சமர்ப்பித்து உ...
12/09/2025

2026 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை நவம்பர் 7ம் திகதி நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றுவார்.

பொருளாதாரம் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம்🏆🥇
12/09/2025

பொருளாதாரம் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம்🏆🥇

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தொடர்பான மனுவை விசாரிக்க நீதிம்ன்றம் அனுமதி அளித்துள்ளது.நாமலின் ...
11/09/2025

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தொடர்பான மனுவை விசாரிக்க நீதிம்ன்றம் அனுமதி அளித்துள்ளது.

நாமலின் திருமண கொண்டாட்டங்களுக்காக இலங்கை மின்சார சபையிடமிருந்து (CEB) 2 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மின்சாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் இன்று அனுமதியளித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

உண்மைகளை மதிப்பாய்வு செய்த பிறகு, அரசியலமைப்பின் பிரிவு 12(1) இன் கீழ் மனுவைத் தொடர நீதிமன்றம் அனுமதி அளித்து, குறித்த விசாரணையை அடுத்த வருடம் மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.கொழும்பு செட்டியார் தெரு...
11/09/2025

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 3 இலட்சம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 2 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

📌உலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்📸உலகின் மிகப்பெரிய விலங்கான...
11/09/2025

📌உலகின் மிகப்பெரிய விலங்கு.. 100 ஆண்டில் 3வது முறையாக காட்சி.. டக்கென கிளிக்கிய போட்டோகிராபர்📸

உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத் திமிங்கிலத்தினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் கடந்த 2022ஆம் ஆண்டு புகைப்படம் எடுத்துள்ளார். கடந்த 100 ஆண்டுகளில் நீலத் திமிங்கலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும். திமிங்கலங்கள் நீரில் வாழும் பாலூட்டி இனைத்தை சேர்ந்தவை. இதில் மொத்தம் 75 வகை உண்டு. அதில் நீலத் திமிங்கலம் தான் உலகின் மிகப்பெரிய விலங்காகும். சற்றேறக்குறைய 100 அடி நீளமும் 150 டன் எடை உள்ளதாகவும் வளரக்கூடியவை இந்த நீலத் திமிங்கிலங்கள். ஆழ் கடலில் மட்டுமே வாழும் நீலத் திமிங்கலங்களை பார்ப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. மிக அரிதாகவே அவை மனிதர்களின் கண்களில் தென்படுகின்றன.

தற்போது ஆஸ்திரேலியாவின் சிட்னி சேர்ந்த புகைப்படக் கலைஞர் சீன் என்பவர் மிக நீளமான நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்து சாதித்திருக்கிறார். சிட்னி கடற்பகுதிகளில் கடந்த நூறாண்டுகளில் நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுப்பது இது 3வது முறையாகும்.

'எனக்கு வாத்தைகளே வரவில்லை. அதிக சந்தோஷத்தின் காரணமாக ஒரே நேரத்தில் எனக்கு எல்லாமே மங்கலாக தெரிகிறது. மரோப்ரா கடலில் நான் வழக்கம் போல் கேமராவுடன் வானில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. எனக்கு முன்னால் ஒரு பெரிய ராட்சச நீலத் திமிங்கிலம் கடலில் போவதை பார்த்தேன். அது ஒரு 30.5 மீட்டர் நீளமிருக்கும் இருக்கும். அதுனுடைய நாக்கு ஒரு யானையின் அளவில் இருக்கும். இதயம் ஒரு கார் சைஸ்க்கு இருக்கும்', என சீன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டு, தான் எடுத்த நீலத் திமிங்கிலத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சீன் புகைப்படம் எடுத்துள்ள அந்த திமிங்கிலம் சுமார் 100 டன் வரை எடை கொண்டதாக இருக்கும் என ஆஸ்திரேலியாவின் தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் சிட்னி கடற்பகுதியில் இப்படி ஒரு ராட்சச நீலத் திமிங்கிலத்தை புகைப்படம் எடுத்தது இது 3வது முறை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இத்தனை அரிதான விலங்கை புகைப்படம் எடுத்துள்ள சீனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். காணக்கிடைக்காத ஒரு அரிய காட்சியை தங்களுக்கு காட்டியதற்காக சீனுக்கு அவர்கள் நன்றி கூறியுள்ளனர். முதலில் பார்ப்பதற்கு சாதாரணமாக இந்தப் புகைப்படம் தோன்றினாலும், சீன் விவரித்துள்ளதைப் பார்க்கையில் அது எத்தனை பெரிய திமிங்கலமாக இருந்திருக்கும் என நினைக்கும் போதே மலைப்பாக இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இன்றைய தினம் வெளியேறவுள்ளார்...
11/09/2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இன்றைய தினம் வெளியேறவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் தவிர்ந்த ஏனைய சலுகைகளை நீக்கும் சட்டமூலம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரினால் சான்றுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த, நீண்ட காலமாக குடியிருந்து வந்த விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேறவுள்ளார்.

அதனையடுத்து சிறிது காலம் வரை அவர் கொழும்பை விட்டும் வெளியில் வசிக்கும் விருப்பத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் அவர் தங்குவதற்கான சாத்தியங்களே பெருமளவில் காணப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when New Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Lanka:

Share