Tamil News First

Tamil News First உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள்

🚨 வாகன இலக்கத்கடுகள் அச்சிடும் பணிகள் நீண்ட காலத்துக்கு பின்னர் ஆரம்பம்.கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தற்காலிகமாக நிறுத்தப...
08/06/2026

🚨 வாகன இலக்கத்கடுகள் அச்சிடும் பணிகள் நீண்ட காலத்துக்கு பின்னர் ஆரம்பம்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன தலைமையில் இன்று (08) உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

வேரஹரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் பரிசோதனை மற்றும் பயிற்சி மைய வளாகத்தில் இந்த அச்சிடும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 22 வருடங்களாக வாகன இலக்கத் தகடுகளை அச்சிட்டு வந்த தனியார் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ ஒப்பந்தக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான முறையான டெண்டர் நடைமுறைகளைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்த்தல் அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டது.

அதன்படி, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சவுத் ஏசியன் டெக்னாலஜி’ நிறுவனமும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் இணைந்து தற்போது இந்த அச்சிடும் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளன.

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் , கார், வான் மற்றும் பேருந்துகள் உட்பட அனைத்து வகையான வாகனப் பிரிவுகளுக்கும் நிறுத்தப்பட்டிருந்த இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் இன்று முதல் முழுவீச்சில் நடைபெறவுள்ளன.

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நிலவிய இழுபறியால் சுமார் 4,00,000 வாகனங்களுக்கான இலக்கத் தகடுகள் தேங்கிக்கிடக்கின்றன.

புதிய ஒப்பந்தத்தின்படி, அச்சிடும் இயந்திரங்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிக்கப்பட்டு, இந்த நிலுவைகள் அனைத்தும் விரைவாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் பதிவான நிலநடுக்கத்தின் தாக்கத்தை காட்டும் காட்சிகள்
08/06/2026

பிலிப்பைன்ஸில் பதிவான நிலநடுக்கத்தின் தாக்கத்தை காட்டும் காட்சிகள்

08/06/2026

🔴EARTHQUAKE 👉PHILIPPINE
பிலிப்பைன்ஸில் 7.8 பாரிய நிலநடுக்கம்!

சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

🚨ஹொரணை பகுதியில் உள்ள மக்கள் வங்கியில் இருந்து ரூ. 35 மில்லியன் ( 3.5 கோடி ரூபா) திருடப்பட்ட சம்பவம் வங்கியின் உதவி முகா...
08/06/2026

🚨ஹொரணை பகுதியில் உள்ள மக்கள் வங்கியில் இருந்து ரூ. 35 மில்லியன் ( 3.5 கோடி ரூபா) திருடப்பட்ட சம்பவம் வங்கியின் உதவி முகாமையாளரே திட்டமிட்டு கொள்ளயடித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், வங்கியின் உதவி முகாமையாளர் பல்வேறு பெண்களிடமிருந்து கந்துவட்டி அடிப்படையில் பெற்ற பணத்திற்கான வட்டியைச் செலுத்துவதற்காக, வங்கியை மோசடி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் பெற்ற பணத்தை, இரத்தினக்கல் தொழில் போன்ற பல்வேறு வணிகங்களுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த அரச வங்கியின் ஏ.டி.எம் இயந்திரங்களில் பணத்தை வைப்புச் செய்யும் பணியை இவரே மேற்கொண்டு வந்துள்ளார்.

வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் குறைவான பணத்தையே அவர் ஏ.டி.எம் இயந்திரங்களில் வைப்புச் செய்துவிட்டு, மீதிப் பணத்தை நீண்ட காலமாகத் தம்வசம் இரகசியமாக வைத்திருந்துள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

வங்கியில் நீண்ட காலமாக நேரடி நிதி கணக்காய்வு எதுவும் நடத்தப்படாத காரணத்தினாலேயே, இந்த மோசடி வெளியில் தெரியாமல் இருந்துள்ளது.

இதேவேளை சம்பந்தப்பட்ட உதவி மேலாளர் பல்வேறு நபர்களுக்கு வட்டிக்குப் பணம் கடன் கொடுத்திருப்பதும், தனக்கு நெருங்கிய மொடல்கள் பெண்கள் நைட் கிளப் போன்றவற்கு சென்று அங்கு பல இளம் பெண்களுக்காகப் பெருமளவு பணத்தைச் செலவழித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உதவி முகாமையாளர், பாதுகாப்பு உத்தியோகத்தரை இணைத்துக்கொண்டு மிகவும் திட்டமிட்ட முறையில் ஜோடித்த ஒரு போலியான குற்றச்சாட்டாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

இந்த விசாரணைகள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் டி.டபிள்யூ.சி.தர்மரத்னவின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஓமந்தையில் கொடூரம்!! ஆலயக் கதவை உடைத்து பூசை செய்ய முற்பட்ட குழுவொன்றை  தட்டிக் கேட்ட குடும்பப் பெண் படுகாயம்!மகன்குத்தி...
07/06/2026

ஓமந்தையில் கொடூரம்!! ஆலயக் கதவை உடைத்து பூசை செய்ய முற்பட்ட குழுவொன்றை தட்டிக் கேட்ட குடும்பப் பெண் படுகாயம்!
மகன்குத்தி கொலை!

வவுனியா ஓமந்தையில் கொடூரம்: ஆலயத்தில் வலுக்கட்டாயமாக பூசை செய்ய முயன்றதை தட்டிக்கேட்ட தாய் மீது தாக்குதல்; மகனை கத்தியால் குத்திக்கொலை!

வவுனியா ஓமந்தை நாவற்குளத்தில் கோயில் பூசை தொடர்பான சம்பவத்தில் 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சேதுபதி நிரோஜன் என்பவர் பலியாகியுள்ளதுடன், அவருடைய தாய் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது.

குறித்த சட்டவிரோதமான செயலை அந்த இடத்திலிருந்த கொலையுண்டவரின் தாய் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அக்குழுவினர் தாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக மகன் அவர்களிடம் கேட்கச் சென்றுள்ளார். இதன் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் அக்குழுவினர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஓமந்தைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளையும், ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஓமந்தைப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சிறுமி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்.. கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு.!!பாறுக் ஷிஹான்வீ...
06/06/2026

சிறுமி கடத்தப்பட்டு துஸ்பிரயோகம்.. கல்முனை வர்த்தக நிலைய பணியாளருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் விதிப்பு.!!

பாறுக் ஷிஹான்

வீட்டில் இருந்த சிறுமி விலாசம் கேட்டு அழைக்கப்பட்டு வாய் பொத்திய நிலையில் வேன் ஒன்றில் கடத்தி சென்று துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் கைதான கல்முனை வர்த்தக நிலைய பணியாளரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (03) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் மறுநாள் வியாழக்கிழமை (04) முறைப்பாடும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பினரால் வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ. ஆதம்பாவா மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததுடன் வெள்ளிக்கிழமை (05) அன்று குறித்த வழக்கானது மன்றில் விசாரணைக்கு கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை சந்தேக நபரான இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது

கல்முனை மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட 16 வயது மதிக்கத்தக்க சிறுமி(பாடசாலையை விட்டு இடைவிலகியவர்) தனது தாயுடன் ஆடை கொள்வனவிற்காக சென்றுள்ளார்.

இவ்வாறு ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞனுக்கும் அங்கு சென்ற சிறுமிக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டு தொலைபேசி இலக்கம் பரிமாறப்பட்டுள்ளது.அதன் பின்னர் இருவரும் 2 மாதங்களாக சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATAPPS ) தொடர்பில் இருந்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தான் குறித்த இளைஞன் கடந்த புதன்கிழமை(03) இரவு 11.30 மணியளவில் வாடகைக்கு பெறப்பட்ட வேன் ஒன்றுடன் தான் பணியாற்றிய ஆடை விற்பனை நிலையத்தில் பணியாற்றும் மற்றுமொரு 56 வயது மதிக்கத்தக்க நபரையும் வேனின் சாரதியாக அழைத்துக் கொண்டு சிறுமி தங்கி இருக்கின்ற வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு தொலைபேசி ஊடாக அழைத்த அவ்விளைஞன் முகவரி ஒன்றினை காட்டுமாறு கூறியுள்ளார்.அப்போது வீட்டில் இருந்து வீதிக்கு வந்த சிறுமியை சந்தேக நபரான இளைஞன் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் வாயை பொத்தி வேனில் கடத்தி சென்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள மத்திய முகாம் பிரதேசத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அழைத்து செல்லப்பட்ட குறித்த சிறுமி பாழடைந்த வர்த்தக் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலில் சந்தேக நபரான இளைஞன் சிறுமியை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

அதன் பின்னர் மற்றுமொரு சந்தேக நபரான 56 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் சிறுமியை துஸ்பிரயோகம் செய்து பின்னர் இரு சந்தேக நபர்களும் மாறி மாறி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அக்கரைப்பற்று பகுதிக்கு அச்சிறுமியை இறுதியாக அழைத்துச் சென்று விட்டுச் சென்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பின்னர் சிறுமி அப்பகுதியால் வருகை தந்த பேரூந்தின் உதவியுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனக்கு நடந்த விடயங்களை உரிய பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தினை பெற்ற பொலிஸார் உடனடியாக செயற்பட்டு சந்தேக நபரான 25 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்ததுடன் தலைமறைவாகியுள்ள மற்றைய சந்தேக நபரான 2 பிள்ளைகளின் தந்தையான 56 வயது மதிக்கததக்க சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி கல்முனையில் உள்ள வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சிறுமியை கடத்தி செல்ல உதவிய வேன் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுமியின் தாய் மனஅழுத்தம் காரணமாக வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.சிறுமியின் தந்தை மத்திய கிழக்கு நாடு ஒன்றில் தொழில் புரிந்து வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

06/06/2026

யாழ். புத்தூர் பகுதியில் கோர விபத்து - 21 வயது இளைஞன் பலி: 2 பேர் கவலைக்கிடம்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிந்துள்ளார்.

மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் திடீரென குறுக்கே சென்ற முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மூவரில் ஒருவர் நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.

டிப்பர் முச்சக்கர வண்டியின் மீது ஏறியதில் அதில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் கால் நசுங்கி படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அவர்களில் 21 வயதுடைய புத்துரைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான விசாரனைகளை அச்சுவேலி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

🚨 ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மாம்பழம்சங்கானை சிலம்புப் புளியடி ஞானவைரவர் ஆலயத்தில் பூஜைக்க...
04/06/2026

🚨 ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மாம்பழம்

சங்கானை சிலம்புப் புளியடி ஞானவைரவர் ஆலயத்தில் பூஜைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

மேற்படி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் 7 ஆம் திருவிழாவான மாம்பழத்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதன்போது மாம்பழத் திருவிழாவில் சிலம்பனின் கையிலிருந்து எடுக்கப்பட்ட மாம்பழம் ஏலத்தில் விடப்பட்டது.

பக்தர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு ஏலம் கேட்ட நிலையில் இறுதியாக ஒரு இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆலயத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழமொன்று 40,000 ரூபாவிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

🚨நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன...
04/06/2026

🚨நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், கலபொட தோட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று (04) காலை வேளையிலேயே இந்தத் துயரமான விபத்து நேர்ந்துள்ளது. இவ்விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவனும், பெண்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதிக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🚨ஹொரண, படகொட, முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமட...
03/06/2026

🚨ஹொரண, படகொட, முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 51 பேர் மீட்கப்பட்டுள்ளனர்: பொலிஸ்

Address

Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when Tamil News First posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tamil News First:

Share