Anosh

Anosh google

10/05/2025
10/05/2025

*"ஆதித்திருச்சபையின் அழகான வரலாறு..."*

*"அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்."* (அப் 2:42)

ஆதித்திருச்சபையின் வரலாறு இந்த வசனத்தில் ஆரம்பமாகிறது. இது திருச்சபையின் குழந்தைப்பருவத்தைப்போல இருக்கிறது. சிறு குழந்தை கள்ளம் கபடமில்லாமல் இருக்கும். அதுபோலவே, இந்த *ஆதித்திருச்சபையானது கள்ளம் கபடமில்லாமல் கர்த்தரையே பூரணமாகச் சார்ந்திருக்கிறது.* விசுவாசிகளின் இருதயம் கபடமில்லாதிருக்கிறது.

ஆதித்திருச்சபையின் விசுவாசிகள், கர்த்தர் நியமித்த பரிசுத்த நியமங்களை மனப்பூர்வமாகக் கடைபிடித்து வருகிறார்கள். இவர்களுடைய ஆத்துமாக்கள் தேவனோடு ஐக்கியமாக இருக்கிறது. *கர்த்தருடைய வார்த்தையின் பிரகாரமாக ஆதித்திருச்சபையின் விசுவாசிகள் ஜீவிக்கிறார்கள்.* அவர்களுக்கு அப்போஸ்தலருடைய உபதேசம் கொடுக்கப்படுகிறது. *தேவவசனத்தை அவர்கள் அதிகமாய் பிரசங்கம்பண்ணுகிறார்கள்*. அப்போஸ்தலருடைய உபதேசத்தில் தரித்திருக்கிறார்கள். யாரெல்லாம் இயேசுகிறிஸ்துவைத் தங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களெல்லோரும் தேவனுடைய வசனத்தைக் கருத்தாய் கேட்கவேண்டும். வசனத்தைப் பயபக்தியாய் தியானிக்கவேண்டும்.

சீஷர்கள் ஒவ்வொருவரும் அந்நியோன்னியத்தில் தரித்திருக்கிறார்கள். *அவர்கள் பரிசுத்தவான்களுடைய ஐக்கியத்தைக் காத்துக்கொள்கிறார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அனுதினமும் தரித்திருக்கிறார்கள்*. (அப் 2:46). அவர்கள் எங்கு சென்றாலும் ஐக்கியமாக இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர் யாராவது ஒருவர் ஓரிடத்திலிருந்தால், மற்ற சீஷர்களும் அங்கு இருப்பார்கள். *ஒரு பறவையின் இறகுகள் அதன் சிறகில் சேர்ந்திருப்பதுபோல, சீஷர்கள் ஐக்கியமாகயிருக்கிறார்கள்.*

சீஷர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். ஒருவர்மீது ஒருவர் அன்புகூருகிறார்கள். ஆவிக்குரிய ஆராதனையில் அவர்கள் ஐக்கியமாக இருக்கிறார்கள். தேவாலயத்தில் விசுவாசிகள் கூடிவருகிறார்கள். விசுவாசிகள் எல்லோருமாகச் சேர்ந்து தேவனை ஆராதிக்கிறார்கள். அவர்கள் அனுதினமும் தேவாலயத்திற்கு வருகிறார்கள். நாமும் கர்த்தரை அனுதினமும் ஆராதிக்கவேண்டும். விசுவாசிகளெல்லோரும் ஒருமனப்பட்டவர்களாக இருக்கிறார்கள். *அவர்களுக்குள் பிரிவினையோ, கருத்து வேறுபாடோ எதுவுமில்லை. விசுவாசிகளெல்லோரும் பரிசுத்த அன்பினால் கட்டப்பட்டிருக்கிறார்கள்.*

கர்த்தர் தம்முடைய சபைக்கு, திருவிருந்தை ஒரு பரிசுத்த நியமமாக நியமித்திருக்கிறார். அப்பம் பிட்குதலில் விசுவாசிகள் தரித்திருக்கிறார்கள். அவர்கள் வீடுகள்தோறும் அப்பம் பிட்கிறார்கள். விசுவாசிகள் தேவனுடைய பரிசுத்த நியமத்தை தனிநபர்களுடைய வீடுகளிலும் ஆசரிக்கிறார்கள்.

ஆதித்திருச்சபையின் விசுவாசிகள் எருசலேமைவிட்டு ஒவ்வொரு ஊருக்கும் சென்று அங்கு கர்த்தருடைய சுவிசேஷச் செய்தியைப் பிரசங்கம்பண்ணுகிறார்கள். அந்தந்த ஊர்களிலுள்ள ஜெபாலயங்களிலும், ஜெபாலயங்கள் இல்லாத ஊர்களில், விசுவாசிகளுடைய வீடுகளிலும் அப்பம் பிட்டு ஜெபம்பண்ணுகிறார்கள். *ஆதித்திருச்சபையில் விசுவாசிகள் கர்த்தரை ஆராதிப்பதற்காக எங்கெல்லாம் கூடுகிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் அப்பம் பிட்கிறார்கள்.*

ஆதித்திருச்சபையின் விசுவாசிகள் ஜெபம்பண்ணுதலில் உறுதியாய் தரித்திருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் சீஷர்களை நிரப்பிய பின்பும், நிரப்புவதற்கு முன்பும், *சீஷர்கள் ஜெபத்தில் ஒருமனப்பட்டுத் தரித்திருக்கிறார்கள்*. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டதினால் சீஷர்கள் ஜெபம்பண்ணுவதை நிறுத்திவிடல்லை. *அவர்கள் தொடர்ந்து ஜெபம்பண்ணுகிறார்கள். ஜெபத்தில் கர்த்தரைத் துதிக்கிறார்கள். அவர்கள் தேவனைத் துதித்து ஜனங்களெல்லோரிடத்திலும் தயவு பெற்றிருக்கிறார்கள்.* (அப் 2:47).

சீஷர்கள் நான்கு காரியங்களில் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அவை:

1. அப்போஸ்தலருடைய உபதேசம் (மத் 28:20)

2. அந்நியோந்நியம் (1யோவான் 1:1 #7)

3. அப்பம் பிட்குதல் (அப் 2:42,46)

4. ஜெபம் பண்ணுதல் (மத் 7:7 #11) (தொடரும்!)
_______________________
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________________________

📖 *சத்தியவசனம்**மே 09 2025 வெள்ளிக்கிழமை*🌷 *இன்றைய வாக்கு**நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக...
09/05/2025

📖 *சத்தியவசனம்*

*மே 09 2025 வெள்ளிக்கிழமை*

🌷 *இன்றைய வாக்கு*

*நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது (யோவான் 6:63).*

✝️ *இன்றைய வேதவாசிப்பு*

*காலை:* 2சாமுவேல் 16,17
*மாலை:* லூக்கா 24:36-53

📔 *அனுதினமும் கிறிஸ்துவுடன்*

*நல்வாழ்வை இழத்தல்!*

*மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான் (யாத். 2:15).*

_இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 51:1-12_

திருமணம் முடித்து 3 பிள்ளைகளின் தகப்பனான ராஜா தனியார் வங்கி ஒன்றில் நல்ல பதவியில் உண்மையோடு வேலை செய்து வந்தான். அவனது நேர்மையையும் திறமை யையும் கண்ட மேலதிகாரி அவனுக்கு பதவி உயர்வு கொடுத்து, வெளிநாட்டில் உள்ள கிளைக்கு அவனைப் பொறுப்பாக நியமித்தார். தொழிலுக்காக குடும்பத்தை விட்டுப்பிரிந்து வெளிநாடு சென்றவன் அங்கு சீக்கிரத்தில் பலவித பாவ பழக்க வழக்கங்களுக்கு அடிமையானான். இறுதியில் தான் உழைத்த பணத்தையும், நல்ல வேலையையும், தன் நற்பெயரையும் இழந்து போனான். அவன் தன் பாவத்தால் இழந்தது வெறும் பணமோ வேலையோ மட்டுமல்ல, தனது நல்வாழ்வையே இழந்துபோனான்.

பார்வோனின் மகளால் நதியிலிருந்து காப்பாற்றப்பட்டு சகலவித வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றவனாய் வளர்க்கப்பட்ட மோசே 40 வருடங்களாக அரசவாழ்வை அனுபவித்தான். ஆனால், ஆத்திரத்தினால் ஒரு மனிதனைக் கொன்றதின் நிமித்தம் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் இழந்தான். நீதியின் தண்டனைக்குத்தப்ப மீதியான் தேசத்துக்கு ஓடிப்போனான். அவன் தன் அரமனை வாழ்வை இழந்தது மட்டுமன்றி, தனது எபிரெய சகோதரர்களுக்கு 40 வருடங்களாக உதவி செய்யமுடியாத நிலையை அடைந்தான்.

பாவத்தில் விழுந்த தாவீது இழந்து போனவைகளோ அநேகம். தனக்குள் இருந்த சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் இழந்தான். இருதய சுத்தத்தை இழந்தான். அவனது ஆவியோ உறுதியை இழந்தது. தாவீது தேவ சமுகத்தைவிட்டுப் பிரிக்கப் பட்டான். தனக்குள் இருந்த பரிசுத்த ஆவியையும் இழந்துவிடுகின்ற உணர்வில் தவித்தான். மொத்தத்தில் தனக்குள் இருந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்துவிட்டான் தாவீது. அவன் செய்த பாவம் அவனை எல்லாவற்றையும் விட்டுப் பிரித்துப்போட்டது. பாவத்தினால் சோதிக்கப் படும்போது, அந்தப் பாவத்தின் விளைவாக நாம் இழக்கவிருக்கும் நல்ல வாழ்வைக் குறித்து சிந்திக்க வேண்டும். *குடும்பம், ஊழியம், உறவுகள், நற்பெயர்* என்று பல காரியங்களை நாம் இழக்க நேரிடலாம். *எல்லாவற்றுக்கும் மேலாக, பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது.*

பிரியமானவர்களே, தேவபிரசன்னத்திற்கு விலகி வாழும் எந்த வாழ்வும் நல் வாழ்வு அல்ல. நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் பிதாவாகிய தேவனுடன் கொண்ட உறவானது, நல்வாழ்வு வாழ்வதற்குத் தேவையான சமாதானம், பாதுகாப்பு, சந்தோஷம் ஆகியவற்றை நமக்குத் தருகிறது. சொற்பநேர பாவ இன்பமோ மேலான சிலாக்கியத்தையே சிதைத்துப் போட்டு விடும்.

*தேவன் தந்த நல்ல வாழ்வை இழப்பது பாவத்துக்காகச் செலுத்தப்படும் மாபெரும் கிரயமாயிருக்கும்!*

👏 *ஜெபம்:* நல்ல ஆண்டவரே, தேவ பிரசன்னத்திலிருந்து எங்களைப் பிரித்து போடும் பாவத்திற்கு விலகி பரிசுத்தமும் தேவபக்தியும் நிறைந்த வாழ்வை நாங்கள் வாழும்படி எங்களுக்கு நீர் உதவிசெய்யும். *ஆமென்.*

*Click on youTube link*
https://youtu.be/MqcUW_0O8Sg

🧎 *இன்றைய விண்ணப்பம்*

*1.* .பாகிஸ்தானில் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை தணியவும் எல்லையை ஒட்டிய அனைத்துஇடங்களில் உள்ள மக்களின் பாது காப்பிற்காகவும் இராணுவ வீரர்களுக்காகவும் சமாதான பேச்சு வார்த்தை இரண்டு நாடுகளிலும் நடத்தப்பட்டு போர்அபாயம் நீங்க பாரத்தோடு ஜெபிப்போம்.

*2.* சகலஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்பட வேண்டும் (மாற்கு 13:10) வடக்கு ஏமனில் 2,94,000 அரேபியர்கள் வாழ்கின்றனர். இஸ்லாம் மதத்தைத் தழுவிவரும் இந்த மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப் படுவதற்கான திறந்த வாசல் உண்டாகவும், ஒன்றான மெய்த் தேவனை அறிந்து கொள்ளும் பாக்கியத்தை இவர்கள் பெற்றுக் கொள்வதற்கும் ஜெபிப்போம்.

📺 *சத்தியவசனம் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்*

🔅 *ஞாயிற்றுகிழமை* : நண்பகல் 12.30 மணிக்கு நம்பிக்கை டிவியில்_
🔅 *திங்கட்கிழமை* : _காலை 7.00 மணிக்கு தமிழன் டிவியில்_
🔅 *வெள்ளிக்கிழமை* : காலை 5.30 மணிக்கு சத்தியம் டிவியில்_

Our Address: Sathiyavasanam, 21 Venkatraman Street, Chinnachokkikulam, Madurai -625002
Tel.No.: 0452-2532316,
Mobile No.: 9442532316,
Whatsapp: 6380692034
Email: [email protected]; [email protected] website: www.sathiyavasanam.in

About Sathiyavasanam MinistrySathiyavasanam Tamil Ministry is a unit of The Good News Broadcasting Society, Secunderabad which represents the world wide mini...

09/05/2025

*"விலகி ஓடுங்கள்!"*

*"இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்."* (அப் 2:40)

பேதுரு ஜனங்களுக்கு மனந்திரும்புவதைப்பற்றியும், ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதைப்பற்றியும் கூறிய பின்பு, இன்னும் அநேக வார்த்தைகளையும் அவர்களுக்கு எச்சரிப்பாக கூறுகிறார். மனந்திரும்புவது, ஞானஸ்நானம் பெறுவது ஆகியவை ஆவிக்குரிய ஜீவியத்தில் ஆரம்ப நிலைகள் மாத்திரமேயாகும். இதற்கு பின்னும் அவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ச்சி பெறவேண்டும். அவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்திற்குத் தேவையான ஆரம்ப சத்தியத்தை மாத்திரமே இதுவரையிலும் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் அதிகமான உபதேசம் தேவைப்படுகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாம் பல உபதேசங்களைக் கேட்கிறோம். அவைகள் நம்முடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்கிறது. இதில் நாம் திருப்தியடைந்து, இன்னும் அதிகமான உபதேசங்களைக் கேட்கக்கூடாதவாறு நம்முடைய செவிகளை அடைத்துக்கொள்ளக்கூடாது. இன்னும் அதிகமான உபதேசங்களைக் கேட்பதற்கு நாம் எப்போதுமே ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று உபதேசம்பண்ணிய பின்பு, பேதுரு அவர்களிடம் "மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள்" என்று புத்தி சொல்லுகிறான். *இரட்சிக்கப்பட்டவர்கள் அந்த பேரழிவிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றால் மாத்திரம் போதாது. இந்த உலகத்தின் பாவமான பழக்க வழக்கங்களுக்கு, அவர்கள் தங்களை விலக்கிக் காத்துக்கொள்ளவேண்டும்.*

கர்த்தருடைய பிள்ளைகள் இந்தப் பிரபஞ்சத்தின் பாவகிரியைகளுக்கு பங்காளிகளாகயிருக்கக்கூடாது. *மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பழைய பாவங்களில் தொடர்ந்து ஜீவித்துக்கொண்டிருக்கக்கூடாது.* இரட்சிக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களை விட்டு விலகிவரவேண்டும். அத்துடன், மாறுபாடுள்ள இந்தச் சந்ததியைவிட்டும் விலகி வரவேண்டும். அவர்களுடைய பாவகிரியைகளில் விசுவாசிகள் பங்குபெறக்கூடாது. அவர்கள் கொள்ளைநோயைப்போல இருக்கிறார்கள். அவர்களுடைய பாவம் தொற்றுநோயைப்போன்றது. அவர்களோடு நாம் ஐக்கியம் வைத்திருப்போமென்றால், தொற்றுநோய் பரவுவதுபோல, அவர்களுடைய பாவபழக்கவழக்கங்கள் நமக்கும் வருவதற்கு வாய்ப்புள்ளது. ஆகையினால், மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டுவிலகி நாம் நம்மை இரட்சித்துக்கொள்ளவேண்டும்.

துன்மார்க்கரிடமிருந்து நம்மை இரட்சித்துக்கொள்வதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமே உள்ளது. *துன்மார்க்க ஜனங்களைவிட்டு நாம் விலகியிருப்பது மாத்திரமே அந்த ஒரே வழியாகும்.* ஒருவன் பிரவாகித்து ஓடும் காட்டாற்றில் குதிக்கும்போது, அந்த ஆற்றில் அவனுக்கு அடித்துச் செல்லப்படும் ஆபத்துள்ளது. தனக்கு நீச்சல் தெரியுமென்றும், எதிர்நீச்சல் செய்வதற்கு தன்னிடத்தில் பெலனுள்ளது என்றும் அவன்தன் சுயபலத்தை நம்பக்கூடாது. காட்டாற்றில் விழுந்துவிட்ட பின்பு, நம்மால் எதிர்நீச்சல் போடமுடியவில்லையென்றால், நாம் காட்டாற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்படுவது நிச்சயம். அதுபோலவே, துன்மார்க்கரும் காட்டாற்றைப்போல இருக்கிறார்கள். அவர்களோடு நாம் தொடர்பு வைத்துக்கொள்ளும்போது, அவர்களுடைய பழக்கவழக்கங்கள் நம்மை ஆளுகை செய்துவிடும் பேராபத்து உள்ளது. ஆகையினால், மாறுபாடான இப்பிரபஞ்சத்தின் சந்ததியைவிட்டு விலகி நாம் நம்மை இரட்சித்துக்கொள்ளவேண்டும்.

*தங்களுடைய பாவங்களுக்காக மெய்யாகவே மனந்திரும்புகிறவர்கள், தங்களை இயேசுகிறிஸ்துவிடம் பூரணமாக ஒப்புக்கொடுத்துவிடவேண்டும்.* நாம் இயேசுகிறிஸ்துவில் மெய்யாகவே விசுவாசம் வைத்திருக்கிறோம் என்பதையும், அவரையே ஆராதிக்கிறோம் என்பதையும், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்கிறோம் என்பதையும், "நாம் இந்த மாறுபாடுள்ள சந்ததியைவிட்டு விலகுவதன் மூலமாக நிரூபிக்கவேண்டும்". *பாவிகளோடு நமக்குள்ள எல்லா ஐக்கியத்தையும் அகற்றிவிட்டு, இயேசுகிறிஸ்துவோடும் அவருடைய பரிசுத்தவான்களோடும் முழுமையாக ஐக்கியமாயிருக்கவேண்டும். ஆமென்!*
_______________________
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________________________

📖 *சத்தியவசனம்**மே 08 2025 வியாழக்கிழமை*🌳 *இன்றைய வாக்கு**தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக...
08/05/2025

📖 *சத்தியவசனம்*

*மே 08 2025 வியாழக்கிழமை*

🌳 *இன்றைய வாக்கு*

*தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் (லூக். 12:31).*

🗓️ *இன்றைய வேதவாசிப்பு*

*காலை:* 2சாமுவேல் 14,15
*மாலை:* லூக்கா 24:13-35

🔰 *அனுதினமும் கிறிஸ்துவுடன்*

*பாவம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்!*

*நீ எகிப்தியனைக் கொன்று போட்டதுபோல, என்னையும் கொன்று போட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான் (யாத். 2:14).*

_இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: சங்கீதம் 51:10-19_

குளிர்பிரதேசத்தில் ஓநாய்களைப் பிடிப்பதற்கு, கூரிய ஈட்டியில் இறைச்சித் துண்டுகளைக் குத்தி வைப்பார்களாம். அதை உண்ண வரும் ஓநாய்கள் ஈட்டியில் குத்தப் பட்டுள்ள இறைச்சியை சுவைத்துச் சாப்பிட ஆரம்பிக்கும். இறுதியில் குளிரில் மரத்துப் போன தன் நாவு குத்தப் படுவதைக்கூட அறியாமல் தன்னுடைய இரத்தத்தைத் தானே குடித்து பரிதாபமாய் இறந்து போகுமாம். தன் பாவத்தை அறியாமல் அல்லது பாவத்தை மறைத்து வாழ முற்படுவதும் இது போன்றதுதான். பாவம் உடனடியாகவோ, படிப்படியாகவோ நிச்சயம் நம்மை அழிவுக்கு நேரே இட்டுச்செல்லக் கூடியது.

அன்று மோசேயும் தனது பாவத்தை மறைக்க முயன்றான். எபிரெயன் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு அந்த எகிப்தியனைக் கொன்று போட்டான் மோசே. பின்னர் அவனது உடலை மணலில் புதைத்து விட்டான். மறுநாளில் எபிரெய மனுஷர் இருவர் சண்டை பண்ணுவதைக் கண்டு, அநியாயம் செய்கிறவனைப் பார்த்து, உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கூறி சமாதானம் பண்ணப் பார்த்தான். அப்போது மோசே செய்த பாவம் வெடித்தது, 'நீ எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ' என்றான் அவன். 24 மணி நேரத்துக்குள்ளாக காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று மோசே பயந்தான். நாம் பாவத்தை எவ்வளவு ஜாக்கிரதையாக மறைக்க முயன்றாலும் அதை ஒருபோதும் முற்றிலும் மறைத்துவைக்க முடியாது. அது ஒருநாள் வெளிப்பட்டே தீரும். *பாவத்தை மறைத்து, நமக்குநாமே தீங்கு வரவழைக்காமல், அதை அறிக்கையிட்டு விட்டு விடுவோமானால் அது நிச்சயம் விடுதலையைத் தரும், அதையே தேவனும் எதிர்பார்க்கிறார்.* வேதாகமத்திலே சிலரது பாவங்கள் வெளியரங்கமாக்கப்பட்டு கடவுளுடைய நியாயத்தீர்ப்பு அங்கு உடனடியாக வெளிப்பட்டதைக் காணலாம். ஆனால், வேறு சில சந்தர்ப்பங்களில் சிலரது பாவங்கள் மறைக்கப் பட்டு, கடவுளின் நியாயத்தீர்ப்பு உடனடியாக வெளிப்படாத சம்பவங்களும் உண்டு. ஆனால், எது எப்படியாயினும் பாவத்துக்கான கடவுளுடைய நியாயத்தீர்ப்பு வெளிப்படாமல் போகாது.

தேவபிள்ளையே, *உன் பாவத்துக்கான நியாயத்தீர்ப்பு இன்னமும் வெளிப்படாததால் தொடர்ந்து பாவம் செய்யத் துணிகரம் கொண்டுள்ளாயா?* சாக்குப் போக்குகள் கூறி உன்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறாயா? உனது இதயத்தை வருத்தும் மறைவான பாவங்கள் எவை? இன்றே அதை தேவனிடம் அறிக்கையிடு. அவரது மன்னிப்புக்காகக் கெஞ்சு. பாவத்திலிருந்து விடுதலையடைய உனக்கு உதவிசெய்யக் கூடிய நல்ல நண்பர்களிடமோ அல்லது உன் சபைப் போதகரிடமோ அதைக்கூறி ஆலோசனை கேட்பதும் உனக்கு நன்மை பயக்கும்.

*நாம் ஒத்துக்கொள்ள மறுக்கும் பாவத்தைத்தவிர வேறு எந்தப் பாவத்தையும் தேவனால் மன்னிக்க முடியும்!*

🙇 *ஜெபம்:* நீதியின் தேவனே, உம் பார்வைக்கு மறைவானது எதுவுமில்லை.என் இதயத்தில் காணப்படும் துணிகரங்கள், அக்கிரமசிந்தை யாவற்றையும் எனக்கு மன்னியும். *ஆமென்.*

*Click on youTube link*
https://youtu.be/_W7ik2Dxqfg

☦️ *இன்றைய விண்ணப்பம்*

*1.* இந்தநாளில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் நமக்குச் செய்ய வல்லவராகிய தேவன் அனைத்து பிள்ளைகளும் மகிழ்ச்சியோடு தேர்வுமுடிவுகளைப் பெற்றுக்கொள்ள உதவி செய்ய வேண்டுமென்று அவர்களுக்காக ஜெபிப்போம்.

*2.* வேதாகமத்தை மொழி பெயர்க்கும் ஊழியப்பணிகளுக் காகவும், ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம். இதுவரை வெளியிடப் பட்ட புதிய மொழிகளின் மொழி பெயர்ப்பிற்காகவும், அந்த மொழிகளில் சுவிசேஷ பிரதிகள் மற்றும் புதிய ஏற்பாடுகள் அச்சிடப் படுவதற்கு உள்ள தேவைகள் சந்திக்கப் படவும், புதியவிசுவாசிகள் கர்த்தருக்குள் நிலைத்திருப்பதற்கும் அவர்கள் சபைஐக்கியங்களில் இணைந்து கிறிஸ்துவுக்குள் வளர ஜெபிப்போம்.

✍️ *சத்தியவசனம் சஞ்சிகை*

```கர்த்தரால் வல்லமையாய் பயன்படுத்தப்படும் வேதபோதனையாளர்கள் எழுதிய ஆவிக்குரிய சத்தியங்களும் கட்டுரைகளும் அடங்கிய சத்தியவசன சஞ்சிகை இருமாதங்களுக்கொரு முறை வெளியிடுகிறோம்.```

_சஞ்சிகையின் வருடசந்தா ரூ.150/- மட்டுமே._

```விசுவாசப்பங்காளர்களாக இணைந்து இவ்வூழியத்தைத் தாங்குபவர்கள் இந்தப் புத்தகத்திற்கென சந்தா செலுத்தத் தேவையில்லை.```

Our Bank Account: Sathiyavasanam | A/C No:001802000001151 | IOB - Chokkikulam, Madurai – 2 | IFS Code: IOBA0000018 | Current Deposit

```(இலங்கையில் உள்ள Whatsapp வாசகர்கள் சத்தியவசன சஞ்சிகையை பெற விரும்பினால் கீழ்க்காணும் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்:
Sathiyavasanam, 120A - Dharmapala Mawatha,
Colombo 7, Srilanka;
Ph: (94) 11-4691 500;Email: [email protected]).```

Our Address: Sathiyavasanam, 21 Venkatraman Street, Chinnachokkikulam, Madurai -625002
Tel.No.: 0452-2532316,
Mobile No.: 9442532316,
Whatsapp: 6380692034
Email: [email protected]; [email protected] website: www.sathiyavasanam.in

About Sathiyavasanam MinistrySathiyavasanam Tamil Ministry is a unit of The Good News Broadcasting Society, Secunderabad which represents the world wide mini...

08/05/2025

*"தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனை!"*

*"அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்..."* (அப் 2:23)

இயேசுகிறிஸ்து செய்த எல்லா அற்புதங்களிலும், அவர் சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்ததும், மூன்றாம் நாளில் உயிரோடு எழும்பியதும் மிகவும் முக்கியமான அற்புதமாகும். *தேவன் இயேசுகிறிஸ்துவை தம்முடைய குமாரனாக வெளிப்படுத்தியிருக்கிறார். அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை அங்கீகரித்திருக்கிறார்.* ஆனால் இயேசுகிறிஸ்துவோ, கல்வாரி சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்து மரித்துப்போனதினால், *தேவன் இயேசுவை அங்கீகரியாமல் கைவிட்டுவிட்டாரோ என்னும் சந்தேகம்* சிலருக்கு உண்டாயிற்று. ஆனால் பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசுகிறிஸ்துவை ஒருபோதும் அங்கீகரியாமல் கைவிட்டுவிடவில்லை.

தேவன், இயேசுகிறிஸ்துவை மனுஷர் மத்தியிலே, தேவனுடைய குமாரனாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஜனங்களோ இயேசுகிறிஸ்துவை தேவகுமாரனாக அங்கீகரிக்கவில்லை. *தேவன் அங்கீகரித்திருப்பவரை மனுஷர் அங்கீகரியாமல் புறக்கணித்துவிடுவது ஒரு ரகசியமாகயிருக்கிறது. பேதுரு பரிசுத்த ஆவியானவரின் ஞானத்தினால் இந்த ரகசியத்தைத் தெளிவுபடுத்துகிறார்.*

இயேசுகிறிஸ்து இந்தப் பூமிக்கு வந்து மனுஷனாக அவதரித்தது, தேவனுடைய தெய்வீக ஆலோசனையாகும். இயேசுகிறிஸ்துவில் தேவனுடைய கிருபையம், அவருடைய அற்புதமான ஞானமும் வெளிப்படுகிறது. தேவனோ இயேசுகிறிஸ்துவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். பிதாவானவர் தம்முடைய குமாரனை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தாலும், அவர் இயேசுவை அங்கீகரியாமல் கைவிட்டுவிடவில்லை. இயேசுகிறிஸ்துவின் "நிர்ணயித்திருந்த மரணம்" தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியே நடைபெற்றிருக்கிறது.

இயேசுகிறிஸ்து, தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படி தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கிறார். ஆனால் ஜனங்களோ இயேசுகிறிஸ்துவின் மரணத்தை உலகப்பிரகாரமாக வியாக்கியானம்பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து தம்முடைய பாவத்தினிமித்தமாகவும், மீறுதலினிமித்தமாகவும், கல்வாரி சிலுவையில் மரித்தாரென்று "தவறாக" வியாக்கியானம்பண்ணுகிறார்கள்.

*"கவனியுங்கள்:"* பேதுரு எழுந்துநின்று பிரசங்கம்பண்ணும்போது, அங்கே ஏராளமான யூதர்கள் நின்றுகொண்டு அவருடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைப் பிலாத்து விசாரித்தபோது *"இயேசுவைச் சிலுவையில் அறையும்"* என்று கூக்குரலிட்ட யூதர்களில் பலர், ஒருவேளை பேதுருவின் பிரசங்கத்தை இப்போது கேட்டுக்கொண்டு இருந்தார்கள். *இயேசுவைச் சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்த அவர்களுடைய இருதயத்தில் படும்படியாக பேதுரு சத்தியத்தை உணர்த்திப் பேசுகிறார்*. தாங்கள் *செய்த பாவத்திற்கு அவர்கள் மனந்திரும்பவேண்டுமென்றும், இயேசுகிறிஸ்துவை உலக இரட்சகராக அவர்கள் விசுவாசிக்கவேண்டுமென்றும், பேதுரு ஆவியில் நிறைந்து* பேசுகிறார்.

*"சிலுவை மரண நிகழ்வின்போதே, அந்த கள்வனை இரட்சித்த இயேசு, உயிர்த்தெழுந்த பின்பு, தம்மை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்த யூதர்களை, அந்த நிகழ்காலத்திலேயே (பேதுருவின் பிரசங்கத்தின் மூலமாக) இரட்சித்தார்! இதுதான் தேவன் கிறிஸ்துவில் வெளிப்படுத்திய மாபெரும் அன்பு!"* ஆமென்!
_______________________
*Youtube:* MARAIPORUL
*WhatsApp Channel*:
https://whatsapp.com/channel/0029Va60ouR6BIEnDXABk53p
*WhatsApp:* +919843724467
________________________

02/05/2025

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anosh:

Share

Category