Anosh

Anosh google

10/11/2025
10/11/2025

அரசர் அலெக்சாண்டரும் இயேசுக்கிறிஸ்துவும் (சுமார்) முப்பத்து மூன்று வயதில் இறந்தனர்.
ஒருவர் பாபிலோனிலும் ஒருவர் கல்வாரியிலும்!.
ஒருவர் தனக்காக அனைத்தையும் சேர்த்தார், ஒருவர் தன்னைத்தானே கொடுத்தார்.
ஒருவர் ஒவ்வொரு சிம்மாசனத்தையும் வென்றார், மற்றவர் ஒவ்வொரு கல்லறையையும் வென்றார்.!
அலெக்ஸாண்டர் இறந்தபோது, ​​அவருடைய அரியணை வீழ்ந்தது.
ஆனால் இயேசு இறந்தபோது அவருடைய இராஜ்ஜியம் வாழ்ந்தது!

இயேசுவும் அலெக்சாண்டரும் முப்பத்து மூன்று வயதில் இறந்தனர்.
கிரேக்கர் அடிமைகளாக்கச் சென்றார், யூதர் எல்லாரையும் விடுதலையாக்க வந்தார்.
ஒருவர் இரத்தத்தில் சிம்மாசனம் கட்டினார், மற்றவர் சிம்மாசனமோ அன்பினால் கட்டப்பட்டது.
ஒன்று பூமியிலிருந்து பிறந்தது, ஆனால், மற்றொன்று மேலிருந்து!.
பெற்ற அனைத்தையும் இழக்க ஒருவர் இந்த பூமியை வென்றார்.
மற்றவர் தன்னை இழந்தும் அகிலத்தையும் பெற்றார்!
கிரேக்கர் என்றென்றும் இறந்தார், யூதரோ என்றென்றும் வாழ்கிறார்.

பெறுபவர் அனைத்தையும் இழக்கிறார், கொடுப்பவர் அனைத்தையும் வெல்கிறார்!

- சார்லஸ் ராஸ் வீட் (தமிழுக்காகச் சற்றே மாற்றி)
(Bro. அலெக்சாண்டர்)

10/11/2025

*"நான் இந்த பூமியில் பிறந்தது எதற்காக? என்னைக் குறித்த கடவுளின் திட்டம் என்ன? எப்படி அதனை தெரிந்துகொள்வது? பதில் தேவை!"*

பரிசுத்த வேதாகமம் உங்கள் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை அளிக்கிறது. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!

*நீங்கள் ஏன் பிறந்தீர்கள்?*

*1. தேவனுடைய மகிமைக்காக*
"நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன்". (ஏசாயா 43:7)
- உங்கள் வாழ்க்கையின் முதன்மை நோக்கம் - தேவனை மகிமைப்படுத்துவது!

*2. கர்த்தராகிய இயேசுவை அறிந்துகொள்ள*
"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்" (யோவான் 17:3)
- தேவனுடனான தனிப்பட்ட உறவே உண்மையான வாழ்க்கை!

*3. மற்றவர்களை நேசிக்க மற்றும் உதவி செய்ய!*
"இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; & இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே." (மத்தேயு 22:37,39)
- "ஒருவருக்கொருவர் உதவி செய்யுங்கள்"

*உங்களைக் குறித்த கடவுளின் திட்டம் என்ன?*

*1. உங்களை அவர் முன்பே திட்டமிட்டார்*
"நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்". (எரேமியா 1:5)

*2. நீங்கள், நற்கிரியைகளைச் செய்யும்படி உண்டாக்கப்பட்டவர்கள்*
"ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்." (எபேசியர் 2:10)

*3. தேவனுடைய குமாரனின் சாயலாக மாற*
"தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்;" (ரோமர் 8:29)

அடுத்து,
*உங்களைப்பற்றிய தேவனுடைய திட்டத்தை எப்படி தெரிந்துகொள்வது?*

*1. அவருடைய வார்த்தையை படியுங்கள்*
"உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது." (சங்கீதம் 119:105)

*2. ஜெபத்தில் கேளுங்கள்*
"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்" (மத்தேயு 7:7)

*3. பரிசுத்த ஆவியானவர் வழிகாட்டுவார்*
"சத்திய ஆவியானவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" (யோவான் 16:13)

*4. விசுவாசிகளின் ஆலோசனை*
"ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்." (நீதிமொழிகள் 15:22)

*5. உங்கள் தாலந்துக்களை கவனியுங்கள்*
தேவன் உங்களுக்கு கொடுத்த வரங்களும் வாய்ப்புகளும் அவரது நடத்துதலின் அறிகுறிகள்!

*எப்போதும் நினைவில் வையுங்கள்:* "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்." (சங்கீதம் 37:5) ஆமென்!

📖 *சத்தியவசனம்**நவம்பர் 08 2025 சனிக்கிழமை*💥 *இன்றைய வாக்கு**ஆராய்ந்துமுடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்...
08/11/2025

📖 *சத்தியவசனம்*

*நவம்பர் 08 2025 சனிக்கிழமை*

💥 *இன்றைய வாக்கு*

*ஆராய்ந்துமுடியாத பெரிய காரியங்களையும் எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார் (யோபு 9:10).*

🌨️ *இன்றைய வேதவாசிப்பு*

*காலை:* எசேக்கியேல் 11,12
*மாலை:* எபிரெயர் 5

📒 *அனுதினமும் கிறிஸ்துவுடன்*

*யூதாவின் ராஜா ஆகாஸ்*

*யூதாவின் ராஜா ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார் (2நாளாகமம் 28:19).*

_இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 28:1-5_

அந்நாட்களில், ராஜா எவ்வழி நடக்கிறானோ அதையே மக்களும் பின்பற்ற வேண்டும். எதிர்க்கிறவர்கள் வாழ்வுக்கு ஆபத்து நேரிடும். அந்தப்படியே ஆகாஸ் எவ்வழி சென்றானோ, யூதா மக்களும் அவ்வழி சென்றார்கள். இதனால் மக்கள் பலவிதங் களிலும் தாக்கப்பட்டார்கள். ஆக, தலைமைத்துவம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.

பதினாறு வருடங்களாக எருசலேமில் ஆட்சிசெய்த ஆகாஸ் தனது தகப்பனாகிய யோதாமின் வாழ்வை மறந்துவிட்டான். *யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான் (2நாளா. 27:6)* என்று வாசிக்கிறோம். ஆனால் ஆகாஸ், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையாய் நடவாமல், பாகால்களுக்கு விக்கிரகங்களைச் செய்து, புறவினத்தாரின் அருவருப்புகளின்படியெல்லாம் நடந்தான். கர்த்தர் பலரை எழுப்பி தண்டித்தார். ஒரே நாளில் இலட்சத்திருபதினாயிரம் மக்கள் சீரியரினால் செத்தார்கள், சிறைப்பிடிக்கப்பட்டார்கள். இஸ்ரவேலர் இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களையும் பிள்ளைகளையும் சிறைப் படுத்தினார்கள். ஏதோமியரும் பெலிஸ்தரும்கூட துன்புறுத்தினார்கள். அசீரியனும் நெருக்கினான். ஆனால், 'தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம் பண்ணிக்கொண்டே இருந்தான்.' ஆகாஸ் கர்த்தருக்கு விரோதமாக நடந்ததால், மக்களும் கர்த்தரின் சமுகத்தில் தாழ்த்தப்பட்டுப்போனார்கள்.

இன்று நமது நாட்டில், ராஜ ஆட்சி இல்லைளூ ஜனநாயகம் இருக்கிறது. என்றாலும் ஒரு குடும்பத் தலைவனாக, ஒரு ஸ்தாபனத்தின் தலைவனாக நாம் ராஜ ஆட்சி நடத்துகிறோமா என்பதே கேள்வி. நமது தெரிவுகள், விருப்பங்களுக்கு மிகுந்த இடமுண்டு என்பதால் மனம்போனபடி நாம் நடக்க சோதிக்கப்படுகிறோம். நமது சுயதெரிவுகள் நம்மை மட்டுமல்ல, சுற்றியிருக்கிறவர்களையும் தேவனைவிட்டு விலக்கிவிடும் ஆபத்தும் உண்டு. தேவனுக்குப் பிரியம் எது, சித்தம் எது, சுயதெரிவுகளின் விளைவுகள் என்ன, எல்லாமே நமக்குத் தெளிவாகத் தெரியும். அன்று தலைவனின் பாவத்தால் மக்களும் தண்டிக்கப்பட்டார்கள். இன்று நமது சுயதெரிவுகள் நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களையும்கூட பாதிக்கத்தான் செய்கின்றன. கர்த்தரே சில சோதனைகள் தண்டனைகளை அனுமதிப்பது நம்மை வெறுப்பதால் அல்ல, நம்மைச் சீர்படுத்தவே! அதையும் நாம் உணராதிருக்கிறோம்! இன்று நான் தேவசித்தத்தில் நிற்கிறேனா? இன்று நம்மைக் குறித்து தேவன் எழுதுவாரென்றால் என்ன எழுதுவார்? என் நிமித்தம் வேறு யார் யார் பாதிக்கப்படுகின்றார்கள்?

☦️ *ஜெபம்:* அன்பின்; கர்த்தாவே, எங்களது சுயதெரிவு களினாலே மற்றவர்களும் பாதிக்கப்படாதபடி, தேவனாகிய கர்த்தருக்குமுன்பாக எங்கள் வழிகளை நேராக்கிட எங்களுக்கு உதவும். *ஆமென்.*

*Click on youTube link*
https://youtu.be/Ij6mKIJ0WT4

🧎‍♂️ *இன்றைய விண்ணப்பம்*

*1.* ஜெர்மனி நாட்டில் மேற்படிப்புக்காக, வேலையினிமித்தம் பல்வேறு நாடுகளிலிருந்து படித்துக்கொண்டும் வேலைசெய்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு குடும்பங்களின் பாது காப்புக் காகவும், சுவிசேஷபணிகள் தடையின்றி நடை பெறுவதற்கும் நற்செய்தி ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த ஜெபிப்போம்.

*2.* நமது தேசத்தில் வங்கிதேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு, மத்திய மாநில அரசுபணிகளுக்கான தேர்வு எழுதி வேலைக்காக காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நியாயமான வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற வேண்டுதல் செய்வோம்.

About Sathiyavasanam MinistrySathiyavasanam Tamil Ministry is a unit of The Good News Broadcasting Society, Secunderabad which represents the world wide mini...

08/11/2025

*"குற்றமனசாட்சி என்பது என்ன? அதிலிருந்து எப்படி மீள்வது? ஆலோசனை தேவை!"*

பதில்: *"குற்றமனசாட்சி என்பது, நாம் செய்த தவறு அல்லது பாவம் காரணமாக நம் மனம் வருந்துவதையும், குற்ற உணர்வை அனுபவிப்பதையும் குறிக்கிறது. நாம் தேவனுக்கும், மற்றவர்களுக்கும் விரோதமாக செயல்படும்போது, நம் மனசாட்சி நம்மை குற்றப்படுத்துகிறது."*

*சரி, குற்றமனசாட்சியிலிருந்து மீள்வது எப்படி?*

*1.பாவத்தை அறிக்கை செய்தல்!* (Confession):
தேவனிடம் உங்கள் பாவத்தை முழு மனதுடன் அறிக்கை செய்யுங்கள். 1 யோவான் 1:9-இல், "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." என்று கூறப்பட்டுள்ளது.

*2.மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுதல்!* (Accept Forgiveness):
தேவன் உங்கள் பாவத்தை மன்னித்திருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள். அவருடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ரோமர் 8:1-இல், "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை." என்று கூறப்பட்டுள்ளது.

*3.பாவத்தை விட்டுவிடுதல்!* (Repentance):
உங்கள் பாவத்தை விட்டுவிட தீர்மானித்து, தேவனுடைய வழியில் நடக்க முயற்சி செய்யுங்கள்.
அப்போஸ்தலர் 3:20-இல், "உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்." என்று பேதுரு கூறுகிறார்.

*4.நஷ்டத்தை ஈடுசெய்தல்!* (Restitution):
உங்களுடைய பாவத்தினால் யாருக்காவது நஷ்டம் ஏற்பட்டிருந்தால், அதை ஈடுசெய்ய முயற்சி செய்யுங்கள்.
லூக்கா 19:8-இல், சகேயு இயேசுவை சந்தித்த பிறகு, "...கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன்" என்றான்.

*5.உங்களை மன்னியுங்கள்!* (Forgive Yourself):
தேவன் உங்களை மன்னித்தது போல, நீங்களும் உங்களை மன்னியுங்கள். எப்போதும் கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படாமல், எதிர்காலத்தை நோக்கி முன்னேறுங்கள்.
பிலிப்பியர் 3:13-14-இல், "சகோதரரே, நான் அதைப்பிடித்துக்கொண்டேனென்று எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்." என்று பவுல் கூறுகிறார்.

*6.மற்றவர்களுக்கு உதவுங்கள்!* (Help Others):
உங்களுடைய அனுபவத்திலிருந்து மற்றவர்களுக்கு உதவுங்கள். மற்றவர்களை ஊக்குவிப்பதன் மூலம், உங்களுடைய குற்றமனசாட்சியை குறைக்க / அமைதிப்படுத்த முடியும்.

தாவீது ராஜா, பத்சேபாளுடன் விபச்சாரம் செய்து, உரியாவைக் கொலை செய்த பிறகு, அவருடைய மனசாட்சி அவரை வாட்டியது. சங்கீதம் 51-இல், தாவீது தன்னுடைய பாவத்தை அறிக்கை செய்து, தேவனிடம் மன்னிப்பு கேட்கிறார். தேவன் தாவீதை மன்னித்தாலும், அவருடைய பாவத்தின் விளைவுகளை அவர் அனுபவித்தார். தாவீது மனந்திரும்பி, தேவனுடைய வழியில் நடக்க தீர்மானித்தார்.

"பேதுரு மனம் வருந்தினார். இயேசுவிடம் திரும்பினார்.
யூதாஸ் மனம் வருந்தினாலும், இயேசுவிடம் வராமல் சாவைத் தேடிப் போய்விட்டார். பேதுரு குற்றமனசாட்சியில் சிக்காமல் தப்பித்தவர். யூதாஸ் சிக்கி சீரழிந்தவர்!"

உண்மையில்,
*"குற்றமனசாட்சி என்பது ஒரு நல்ல விஷயம். அது நம்மை பாவம் செய்யாதபடி எச்சரிக்கிறது. ஆனால், குற்றமனசாட்சியிலேயே மூழ்கிவிடாமல், தேவனுடைய மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, புதிய வாழ்க்கை வாழ வேண்டும்."*

*"நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக.

📖 *சத்தியவசனம்**நவம்பர் 07 2025 வெள்ளிக்கிழமை*🗓️ *இன்றைய வாக்கு**உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிட...
07/11/2025

📖 *சத்தியவசனம்*

*நவம்பர் 07 2025 வெள்ளிக்கிழமை*

🗓️ *இன்றைய வாக்கு*

*உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக (ரூத் 2:12).*

🔰 *இன்றைய வேதவாசிப்பு*

*காலை:* எசேக்கியேல் 8-10
*மாலை:* எபிரெயர் 4

📕 *அனுதினமும் கிறிஸ்துவுடன்*

*முப்பத்தாறாம் வருஷம்*

*இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர் (2நாளாகமம் 16:9).*

_இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 16:1-13_

'இந்த விஷயத்தில்' என்னும்போது, மற்ற விஷயங்களில் மதியுடன் நடந்திருக்கலாம் என்று நாம் அர்த்தம்கொள்ளலாம்! ஆம், நாமும் இப்படித் தான்; எல்லா விஷயங்களையும் பார்த்துப் பார்த்துச் செய்துவிட்டு, முக்கிய விஷயத்தில் யாவையும் தொலைத்து விட்டிருப்போம். அந்த ஒன்றினால், அத்தனை காலங்களும் நாம் கட்டிக்காத்துக்கொண்ட நற்பெயரும், நல்ல விஷயங்களும் கேள்விக்குறியாகி விடுகிறது.

ஆசா யூதாவை 41 ஆண்டுகள் ராஜ்யபாரம் பண்ணின ஒருவன். இவனது ஆட்சியில்முதல் 10ஆண்டுகள் அமைதியாக இருந்தது. கர்த்தரின் பார்வைக்குச் செம்மையான யாவற்றையும் செய்தான். பிரச்சனைகள் நெருக்கங்கள் வந்த போது கர்த்தரையே தேடினான். தேவனையே தேடும்படி தனது ராஜ்யத்தின் மக்களையும் தீர்க்கமாக வழிநடத்திய ஒருவன்தான் இந்த ஆசா. எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம் பேருடனும் முந்நூறு இரதங்களோடும் யூதாவுக்கு எதிராகவந்தபோதுகூட ஆசா கர்த்தரையே நாடினான். கர்த்தர் எத்தியோப்பியரை முறியடித்தார். இப்படியே 35 ஆண்டுகள் நன்றாகவே ஓடியது. முப்பத்தாறாம் வருஷத்தில் இவனுக்கு என்னவாயிற்று? இப்போது இஸ்ரவேலின் ராஜா பாஷா யூதாவுக்கு எதிராக வந்து தடைகளை கட்டினான். இதுவரை கர்த்தரையே நாடிய ஆசா, இப்போது கர்த்தரை நாட மறந்தது என்ன? இவன் இப்போ, சீரியா நாட்டுராஜாவின் உதவியை நாடுகிறான். அவனும் உதவி செய்கிறான். கர்த்தரோ, அனானி என்பவனை எழுப்பி, இத்தனை வருடங்களாக உம்மை நடத்திய தேவனை நீர் மறந்ததென்ன என்று கேட்கிறார். *'தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது'* இதை நீர் மறந்ததென்ன என்று கண்டிக்கிறார். ஆசாவோ இதைக் கேட்டு மனந்திரும்பாமல், அனானியை சிறையில் அடைக்கிறான். அவன் கால்களில் வியாதி கண்டது, அப்போதும் அவன் கர்த்தரைத் தேடவில்லை. பின்னர் அவன் மரித்துப்போனான்; மனந்திரும்பியதாக எழுதப்படவில்லை.

35ஆண்டுகள் கர்த்தரையே தேடினவன், இறுதிக் காலத்தில் *கர்த்தரை விட்டு விட்டது நமக்குச் சிறந்த எச்சரிக்கையாயிருக்கிறது. நாம் கர்த்தரோடிருந்தால், நம்மோடு அவர் இருப்பார். நாம் அவரைத் தேடினால் அவர் நம்மோடு இருப்பதை அவர் வெளிப்படுத்துவார்.* நமது பாரங்களை அவர் சுமப்பார். நமது போராட்டங்களில் அவர் ஜெயம் தருவார். நாம் அவரை விட்டுவிட்டால்? *'முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் '(மத்.24:13).* நாம் தடுமாற வேண்டிய அவசியமில்லை. முடிவுபரியந்தம் நம்மை நிலைநிறுத்துகிற ஆண்டவர் இயேசு இன்று நம்முடன் இருக்கிறார். நாம் அவருடன் நிற்கிறோமா? அவரோடு நடக்கிறோமா?

🙇‍♀️ *ஜெபம்:* கர்த்தாவே நான் விழுந்துபோகக்கூடிய சந்தர்ப்பங்கள் நேரிட்டாலும் மீண்டு எழுந்து. மனந்திரும்பி முன்நோக்கிச்செல்ல உமது கிருபையைத் தாரும். *ஆமென்.*

*Click on youTube link*
https://youtu.be/WCKvTYsk2ww

🤲 *இன்றைய விண்ணப்பம்*

*1.* பங்காளர் குடும்பங்களில் உள்ள வாலிப பிள்ளைகள் உலக மாயையிலிருந்து விடுவிக்கப்பட்டு கர்த்தருக்குப் பிரியமாய் வாழவும், அவர்களது குடும்ப சூழ்நிலைகள் அவர்களது ஆவிக்குரிய வாழ்வின் வளர்ச்சிக்கு ஏதுவாய் இருப்பதற்கும் வேண்டுதல்செய்வோம்.

*2.* பிரான்ஸ் நாட்டின் ஆளுமைப் பொறுப்பில் உள்ள தலைவர்களுக்காகவும், சுவிசேஷ ஊழியங்களும் சபை ஊழியங்களும் வல்லமையோடே செய்யப்படுவதற்கும், சமூக ஒற்றுமை வளர்ந்திட, மக்களின் கருத்துகளை மதிக்கும் நிர்வாகம் சீரமைக்கப்பட ஜெபிப்போம்.

Our Address: Sathiyavasanam, 21 Venkatraman Street, Chinnachokkikulam, Madurai -625002
Tel.No.: 0452-2532316,
Mobile No.: 9442532316,
Whatsapp: 6380692034
Email: [email protected]; [email protected] website: www.sathiyavasanam.in

About Sathiyavasanam MinistrySathiyavasanam Tamil Ministry is a unit of The Good News Broadcasting Society, Secunderabad which represents the world wide mini...

07/11/2025

*"ஒரு இரகசிய பாவத்தை மேற்கொள்ள முடியவில்லை. என்ன செய்வது? ஆலோசனை கூறுங்கள்..."*

ஒரு இரகசிய பாவத்தை மட்டுமல்ல, *எந்த பாவத்தையும், நம்மால் மேற்கொள்ள முடியும்.* பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் சில ஆலோசனைகள்:

*1.தேவனிடம் அறிக்கை செய்யுங்கள்* (Confess to God):
உங்கள் பாவத்தை தேவனிடம் மறைக்காமல், முழு மனதுடன் அறிக்கை செய்யுங்கள். 1 யோவான் 1:9-இல், "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." என்று கூறப்பட்டுள்ளது.
சங்கீதம் 32:5-இல், "நான் என் பாவத்தை உமக்கு அறிவித்தேன், என் அக்கிரமத்தை மறைக்கவில்லை; என் மீறுதல்களை கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; நீ என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்." என்று தாவீது கூறுகிறார்.

*2.ஜெபம் செய்யுங்கள்* (Pray):
தேவனிடம் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். பாவத்தை மேற்கொள்ளவும், பரிசுத்தமாக வாழவும் உதவி கேளுங்கள்.
மத்தேயு 26:41-இல், "சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது." என்று இயேசு கூறினார்.

*3.வேதாகமத்தை வாசியுங்கள்* (Read the Bible):
வேதாகமத்தை தினமும் படியுங்கள். தேவனுடைய வார்த்தை உங்கள் மனதை புதிதாக்கி, பாவத்தை மேற்கொள்ள உதவும். சங்கீதம் 119:11-இல், "நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்." என்று கூறப்பட்டுள்ளது.

*4.பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுங்கள்* (Seek the Help of the Holy Spirit):
பரிசுத்த ஆவியானவர் பாவத்தை மேற்கொள்ளவும், தேவனுடைய வழியில் நடக்கவும் உங்களுக்கு பலம் கொடுப்பார். கலாத்தியர் 5:16-இல், "நான் சொல்லுகிறதாவது: ஆவியின்படி நடவுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்." என்று கூறப்பட்டுள்ளது.

*5.உங்களை சோதிக்கும் சூழ்நிலைகளை தவிருங்கள்!* (Avoid Tempting Situations):
உங்களை பாவம் செய்யத் தூண்டும் சூழ்நிலைகள், இடங்கள், நபர்கள் ஆகியவற்றை தவிருங்கள். 1 கொரிந்தியர் 15:33-இல், "மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்." என்று கூறப்பட்டுள்ளது.

*6.விசுவாசமுள்ள நண்பர்களிடம் உதவி கேளுங்கள்* (Seek Accountability):
உங்களை நேசிக்கும், விசுவாசமுள்ள நண்பர்களிடம் உங்கள் பாவத்தை அறிக்கை செய்யுங்கள். அவர்கள் உங்களுக்கு ஜெபம் செய்து, பாவத்தை மேற்கொள்ள உதவி செய்வார்கள்.
யாக்கோபு 5:16-இல், "நீங்கள் குணமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்." என்று கூறப்பட்டுள்ளது.

*7.சபையின் உதவியை நாடுங்கள்* (Seek Church Support):
சபையில் உள்ள போதகர்கள், மூப்பர்கள் மற்றும் விசுவாசமுள்ளவர்களிடம் உதவி கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகள் கூறி, ஜெபம் செய்து, பாவத்தை மேற்கொள்ள உதவி செய்வார்கள்.

*8.உங்களுடைய எண்ணங்களை கட்டுப்படுத்துங்கள்* (Control Your Thoughts):
உங்களுடைய எண்ணங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். பாவமான எண்ணங்கள் வரும்போது, தேவனுடைய வார்த்தையை தியானியுங்கள். பிலிப்பியர் 4:8-இல், "கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்." என்று கூறப்பட்டுள்ளது.

*9.உங்களுடைய நேரத்தை பயனுள்ள காரியங்களில் செலவிடுங்கள்* (Spend Time in Godly Activities):
உங்களுடைய நேரத்தை ஜெபம், வேதாகமத்தை தியானித்தல், சபை கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், மற்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற பயனுள்ள காரியங்களில் செலவிடுங்கள்.

*10.தேவனுடைய கிருபையை நம்புங்கள்* (Trust in God's Grace):
தேவனுடைய கிருபை உங்களை பாவத்திலிருந்து விடுவிக்கும் என்று நம்புங்கள். அவருடைய கிருபை உங்களை பலப்படுத்தும், பரிசுத்தமாக வாழ உதவி செய்யும்.

*இந்த ஆவிக்குரிய ஆலோசனைகளை சரிவர பின்பற்றுவதன் மூலம், நீங்கள் இரகசிய பாவங்களை / இதர பாவங்களை மேற்கொண்டு, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ முடியும். வாழ்த்துக்கள்! God bless you!*

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anosh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anosh:

Share

Category