Yarl Thinakkural

Yarl Thinakkural தமிழ் பேசும் மக்களின் குரல்

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக...
01/04/2026

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலினால் கப்பலின் ஒரு பக்கத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதிலிருந்த ஊழியர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கப்பலிலிருந்து கடலில் எண்ணெய் கசிவு ஏற்படுவது போன்ற பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இதற்கு ஒரு நாளைக்கு முன்னர் துபாய் கடற்பரப்பிற்கு அருகில் இருந்த மற்றுமொரு பெரிய எண்ணெய் கப்பல் மீது ஈரானின் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அதன் மூலம் ஏற்பட்ட தீ பின்னர் அணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

த.வெ.க. பொதுக்கூட்டத்தில் வீசப்பட்ட மதுபான போத்தல்!தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் வ...
01/04/2026

த.வெ.க. பொதுக்கூட்டத்தில் வீசப்பட்ட மதுபான போத்தல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி முதல் முறையாக களமிறங்கியுள்ளது. 234 தொகுதிகளிலும் த.வெ.க. கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இந்தத் தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதேபோல் த.வெ.க. சார்பில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களின் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து த.வெ.க. சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனா அயனாவரம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தி வாக்கு சேகரித்தார்.

பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருக்கும் போது, அருகில் இருந்த தங்கும் விடுதியில் இருந்து மதுபான போத்தல் ஒன்று கூட்டத்திற்கு நடுவே வீசப்பட்டது. இதனால் பெண் ஒருவருக்கு காயமடைந்தது. காயமுற்ற பெண் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனிடையே மதுபான போத்தல் வீசப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி தங்கும் விடுதியில் இருந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அயவனாவரத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பில் மதுபோதையில் இருந்த இருவர் சண்டையிட்டு கொண்டனர். அப்போது அவர்களுக்குள் மாறி மாறி மதுபான போத்தல்களை வீசிகொண்ட போது தவறுதலாக பொதுக்கூட்டத்தில் மதுபான போத்தல் விழுந்தது.

இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளது.

பொதுக்கூட்டத்தில் மதுபான போத்தல் வீசப்பட்ட சம்பவம் குறித்து பேட்டியளித்த ஆதவ் அர்ஜூனா, "முதலில் நான் வைத்தியசாலைக்கு விரைகிறேன், அங்கு சென்று என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்." என்றார்.

இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த கிளிநொச்சி மாணவன்!கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மாணவன் தெய்வேந்திரம் ...
01/04/2026

இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த கிளிநொச்சி மாணவன்!

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மாணவன் தெய்வேந்திரம் திருக்குமரன் இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் முக்கிய அறிவிப்பு!எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்...
01/04/2026

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் முக்கிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகளை ஒதுக்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

நேற்று (31) வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2026ஆம் ஆண்டுக்கான பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டதாகவும், அதற்கமைய மாணவர்கள் அந்தந்த திகதிகளுக்கு ஏற்ப தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு காரணங்களினால் பரீட்சை காலப்பகுதிகள் மாற்றமடைந்ததால் கடந்த காலங்களில் மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், அதன் காரணமாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகளை நடத்த எதிர்பார்ப்பதாகவும் இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறவுள்ளதுடன், தற்போது முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று (01) முதல் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இங்கு மேலும் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் மூன்றாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதியும் மற்றும் சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 08 ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளன.

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!
31/03/2026

அனைத்து வாகனங்களுக்கும் நாளை எரிபொருள்!

நாளை புதன்கிழமை அதாவது ஏப்ரல் 01 ஆம் திகதி ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு இலக்கங்களையும் கொண்

இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது – அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!
31/03/2026

இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது – அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!

ஈரானிலிருந்து மருத்துவ உதவிகள் பெற இந்தியா வரவிருந்த விமானத்தை வான்வழித் தாக்குதல் மூலம் அம�

யாழில் இன்று அடுத்தடுத்து – இரண்டு சடலங்கள் மீட்பு!
31/03/2026

யாழில் இன்று அடுத்தடுத்து – இரண்டு சடலங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில், �

கைகள் இன்றி வில்வித்தையில் சாதித்த – முதல் வீராங்கனை!
31/03/2026

கைகள் இன்றி வில்வித்தையில் சாதித்த – முதல் வீராங்கனை!

இந்திய விளையாட்டுத் துறையில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 19 வயது இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி, உலக �

டுபாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட – மசகு எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
31/03/2026

டுபாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட – மசகு எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!

டுபாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மசகு எண்ணெய் கப்பல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நட�

ஈரானின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கு மீது – அமெரிக்கா தாக்குதல்!
31/03/2026

ஈரானின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கு மீது – அமெரிக்கா தாக்குதல்!

ஈரானின் மிகப் பெரிய இராணுவ ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1,000 கிலோ எடையுள்ள பங்கர் - பஸ்டர் குண்டு�

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை : சட்டத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்!
31/03/2026

பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை : சட்டத்திற்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல்!

உயிரைப் பறிக்கும் வகையிலான கொடூரமான தாக்குதல்களை நடத்தும் பாலஸ்தீனர்களுக்கு இராணுவ நீதிமன்�

‘கார்க் தீவை’ கைப்பற்றுவேன் : அமெரிக்காவால் அது முடியும்!
31/03/2026

‘கார்க் தீவை’ கைப்பற்றுவேன் : அமெரிக்காவால் அது முடியும்!

-டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை- -3500 அமெரிக்க படையினர் மத்திய கிழக்கில் குவிப்பு--ஈரான் எண்ணெயை எட�

Address

No. 267 Navalar Road
Jaffna
40000

Alerts

Be the first to know and let us send you an email when Yarl Thinakkural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share