Dharussafa NEWS

Dharussafa NEWS Dharussafa Organization

✍️வெற்றிடமாகியுள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பொத்துவில்லைச் சேர்ந்த அப்துல் வாசித்தை...
26/06/2025

✍️வெற்றிடமாகியுள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பொத்துவில்லைச் சேர்ந்த அப்துல் வாசித்தை நியமிக்க கட்சி தீர்மானம்..

✍️சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியை தெரிவு செய்வதற்கான கூட்டம், கிழக்கு மாகாண உள்ளூரா...
26/06/2025

✍️சம்மாந்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவியை தெரிவு செய்வதற்கான கூட்டம், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில், இன்று வியாழக்கிழமை (26), சம்மாந்துறை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

பகிரங்க வாக்கெடுப்பு மூலம் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 9 உறுப்பினர்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 5 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 2 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 2 உறுப்பினர்களும், சுயேட்சை குழுவின் சார்பில் 03 உறுப்பினர்களும் மொத்தமாக 23 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்திற்கு சமூகமளித்திருந்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், 7 மேலதிக வாக்கு வித்தியாசத்தில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், உப தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வி.வினோகாந், தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் உறுப்பினர் ஏ.சதானந்தன், சுயேட்சை குழு உறுப்பினர் எஸ்.எல்.ஏ. நசார் உள்ளிட்ட மூவர் போட்டியிட்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வி.வினோகாந் 12 வாக்குகளைப் பெற்று சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளராக தெரி செய்யப்பட்டார்.

✍️பெரசிட்டமோல் உள்ளிட்ட 14 வகை மருந்துகளுக்கு இந்தியாவில் தடைபெரசிட்டமோல் 650 வகை உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு கர்நாடகா சு...
26/06/2025

✍️பெரசிட்டமோல் உள்ளிட்ட 14 வகை மருந்துகளுக்கு இந்தியாவில் தடை

பெரசிட்டமோல் 650 வகை உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு கர்நாடகா சுகாதாரத் துறை தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று கடந்த மே மாதத்தில் தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகளில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பெரசிட்டமோல் 650வகை உள்ளிட்ட 14 வகை மருந்துகள் தரம் குறைவாக தயாரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனையடுத்து 14 நிறுவனங்கள் தயாரிக்கும் 14 வெவ்வேறு வகையான மருந்துகளுக்கு கர்நாடக சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.

✍️சந்தையில் உப்பின் விலையை குறைத்து, அதிகபட்ச சில்லறை விலையில் உப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை உப்பு உற்பத...
26/06/2025

✍️சந்தையில் உப்பின் விலையை குறைத்து, அதிகபட்ச சில்லறை விலையில் உப்பை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கல் உப்பு 1 கிலோ ரூ.180
தூள் உப்புகிலோ ரூ. 240
தூள் உப்பு 400கிராம் ரூ. 120

மேற்படி விலையில் பொதி செய்யப்பட்ட உப்பை நாடு முழுவதும் விநியோகிக்க பல நாட்கள் ஆகலாம் என்றும், அதன் பிறகு நுகர்வோர் நாடு முழுவதும் மேற்படி விலையில் பொதி செய்யப்பட்ட உப்பை வாங்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

✍️அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முலாமிடப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான வழக்கில் கைதான ...
26/06/2025

✍️அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க முலாமிடப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பான வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவிற்கு ஜூலை 07ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கல்கிஸ்ஸை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

✍️முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள...
26/06/2025

✍️முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (26) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

✍️ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பிரித்தானியப் பயணம் தொடர்பில் CID விசேட விசாரணை: அரச நிதி முறைகேடு குறித்த சந்தேகம்ம...
25/06/2025

✍️ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பிரித்தானியப் பயணம் தொடர்பில் CID விசேட விசாரணை: அரச நிதி முறைகேடு குறித்த சந்தேகம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம் ஒன்றுக்கு அரசாங்க நிதி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணையின் விபரங்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் B-அறிக்கை மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் கலாநிதிப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணித்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாகவும், அதில் முன்னாள் ஜனாதிபதி கலந்துகொண்டதாகவும் காவல்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த பயணம் செப்டம்பர் 22 மற்றும் 23, 2023 ஆகிய திகதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த விஜயத்திற்காக சுமார் 16.9 மில்லியன் ரூபா அரசாங்க நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதியுடன் பத்து பேர் கொண்ட குழுவொன்று சென்றுள்ளதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த நேரத்தில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தில் இருந்ததாகவும், இந்த தனிப்பட்ட விஜயத்தை மேற்கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணித்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வெளிநாட்டுப் பயணம் தொடர்பான தற்போதைய விசாரணைகள் குறித்து, விக்கிரமசிங்கவின் ஊழியர்களில் உள்ள ஒரு சிரேஷ்ட அதிகாரி உட்பட இருவரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த அதிகாரிகள் தற்போது வெளிநாடுகளில் இருப்பதாகவும், அவர்களை விசாரணைக்காக இலங்கைக்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வெளிவிவகார அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

✍️சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதிப் பாலத்தை நவீன பாலமாக மீள அமைக்க நடவடிக்கை!!!சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியில்...
25/06/2025

✍️சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதிப் பாலத்தை நவீன பாலமாக மீள அமைக்க நடவடிக்கை!!!

சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள பாலத்தை நவீன மயப்படுத்தப்பட்ட பாலமாக அமைப்பதற்காக அதன் மதிப்பீட்டு அறிக்கையினை பெறுவதற்கான வேலைத்திட்டம் இன்று (25) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா எம்.பி.யின் வேண்டுகோளுக்கிணங்க, நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் உத்தரவுக்கமைய , வீதி அபிவிருத்தி அதிகார சபையினால், கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எம்.வீ. அலியாரின் மேற்பார்வையில், கல்முனை நிறைவேற்றுப் பொறியியலாளர் இஸட். ஏ. எம் அஸ்மிரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பொறியியலாளர் ஏ.எல். அப்துல் ஹக்கீம், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.வீ. முஹம்மது ஹாரித் மற்றும் ஏ.சீ.முஹம்மது நிசார் ஆகியோர் இன்று கள விஜயத்தினை மேற்கொண்டு, அதற்கான மதீப்பீடு செய்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் பிரத்தியேக செயலாளர் எஸ். இம்தியாஸ் மற்றும் இணைப்புச் செயலாளர் எஸ்.எம்.ஆரிப் மற்றும் எம்.ஐ. நஜீம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இப்பாலமானது 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- ஊடக பிரிவு -

✍️அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள...
25/06/2025

✍️அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

✍️காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெரிவு ! நூருல் ஹுதா உமர் அம்பாறை...
25/06/2025

✍️காரைதீவு பிரதேச சபை தவிசாளராக எஸ். பாஸ்கரனும், உப தவிசாளராக எம்.எச்.எம். இஸ்மாயிலும் தெரிவு !

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யும் கூட்டம் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் காரைதீவு பிரதேச சபை சபா மண்டபத்தில் இன்று (25) மாலை நடைபெற்றது.

திறந்த முறையில் நடைபெற்ற தவிசாளர் வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட சுப்பிரமணியம் பாஸ்கரனும், தேசிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட கிருஸ்ணபிள்ளை செல்வராணியும் போட்டியிட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட சுப்பிரமணியம் பாஸ்கரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் உப தவிசாளர் ஏ.எம். ஜாஹீர் ஆகியோர் சார்பாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தி சார்பில் முன்மொழியப்பட்ட கிருஸ்ணபிள்ளை செல்வராணிக்கு அதே கட்சியை சேர்ந்த எஸ். சுலட்சனா வாக்களித்தார். தேசிய மக்கள் சக்தி சார்பில் ஒருவர் முன்மொழியப்பட்டிருந்தும் கூட அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஏ. பர்ஹாம் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

உப தவிசாளராக காரைதீவு பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் மாளிகைக்காட்டை சேர்ந்த எம்.எச்.எம். இஸ்மாயிலை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரேரித்தனர். போட்டிக்கு யாரும் முன்வராதமையால் சபையில் ஏகமனதாக எம்.எச்.எம். இஸ்மாயிலை உப தவிசாளராக அறிவிக்கப்பட்டர். இந்த அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. தாஹீர், எம்.எஸ். உதுமா லெப்பை, கே.கோடிஸ்வரன் உட்பட பிரமுகர்கள் உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

✍️எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணம் 2.5 வீதத்தால் குறைப்பு - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு
25/06/2025

✍️எதிர்வரும் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணம் 2.5 வீதத்தால் குறைப்பு - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

✍️2025 உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 - டிசம்பர் 05 வரை இடம்பெறும். நாளை (26) முதல் ஜூலை 21 வரை Online ஊடாக விண்ணப்பிக்கலாம...
25/06/2025

✍️2025 உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 - டிசம்பர் 05 வரை இடம்பெறும். நாளை (26) முதல் ஜூலை 21 வரை Online ஊடாக விண்ணப்பிக்கலாம்

- பரீட்சைகள் திணைக்களம்

Address

Kalmunai

Telephone

+94779977474

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharussafa NEWS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share