03/11/2025
✍️கல்முனை அல் - பஹ்றியா மகா
வித்தியாலயத்தில் MOHIDEEN
MEMORIAL SMART HALL திறப்பு
கல்முனை அல் - பஹ்றியா மகா வித்தியாலத்தின் மாணவர்களின் எதிர்கால நவீன கல்வித்திட்டத்தின் நலன் கருதி கல்முனையின் பிரபல வர்த்தகரான மர்ஹும் எம்.பி. முஹைடீன் நினைவாக அவரின் புதல்வர் பிரபல வர்த்தகரும் சமூக சேவையாளருமான பி.எம்.நளீம் முஹைடீனின் நிதியுதவியில் M.P.MOHIDEEN MEMORIAL SMART HALL நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் எம்.எஸ்.பைசால் தலைமையில் கடந்த 31ஆம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் பிரபல வர்த்தகர் நளீம் முஹைடீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபர் எம்.அப்துல் ஸலாம், விஷேட அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர்களான இ,றினோஸ் ஹஜ்மின், யூ.எல்.ஹிதாயா, எம்.எப்.நஸ்மியா புஹாரி, ஏ.ஆர்.எம்.முஸாஜித், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலய அதிபர் எம்.ஐ,எம்.இல்யாஸ் மற்றும் றியாலுல் ஜன்னா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அஸ்த்தர் உட்பட பாடசாலையின் பழைய மாணவர் சங்கச் செயலாளர் யூ.எல்.எம். ஹாஜா மற்றும் உறுப்பினர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும், பிரதம அதிதியின் சகோதரர்கள் உட்பட பாடசாலையின் ஆசிரிய ஆசிரியர்கள், மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் சார்பாகவும் பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பழைய மாணவர்கள் சார்பாகவும் பிரதம அதிதி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு சின்னங்களும் வாழ்த்து மடல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது