Puthiya Oli

Puthiya Oli Local News, World News, Viral Video, Sports News, Cinima News, Motivation and Extra Content. "Your Support Our Success"

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி========================================சகோதர...
28/05/2026

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
========================================

சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதித்து, முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளை உலக சமூகத்திற்கு சமூக நலனின் மதிப்பைக் கொண்டுவரும் நாளாக புனித ஈதுல்- அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளை முஸ்லிம் மக்கள் இன்று கொண்டாடுகின்றார்கள் என அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முஸ்லிம்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஹஜ்ஜும் ஒன்றாகும். அமைதி, சமாதானம், சுபீட்சம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதித்து, முஸ்லிம் மக்கள் ஹஜ் பெருநாளை உலக சமூகத்திற்கு சமூக நலனின் மதிப்பைக் கொண்டுவரும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

உலகெங்கிலும் உள்ள கோடிக் கணக்கான முஸ்லிம்களுக்கு மத்தியில், வல்ல அல்லாஹ்வின் முன் ஒரே நோக்கத்துடன் தங்களது பாவக்கறைகளை நீக்கிக் கொள்வதற்கு, இறுதிக் கடமையான ஹஜ் யாத்திரிகர்களால் மேற் கொள்ளப்படுகிறது. புனித ஹஜ் கடமையை நிறைவேற்றியவுடன் அன்று பிறந்த பாலகன் போல ஹஜ் யாத்திரிகர்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

இன்று புனித ஈதுல்- அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் உலகிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் எனது ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தி========...
28/05/2026

கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் விடுக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து செய்தி
=======================================

ஈதுல் அழ்ஹா” பெருநாளை முன்னிட்டு, உலக முஸ்லிம்கள் அனைவரும் தியாகத்தின் உயர்ந்த மகத்துவத்தையும், இறைநம்பிக்கையின் ஆழத்தையும் நினைவுகூரும் இந்த புனித நன்னாளில், மனிதகுலத்தின் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பிரார்த்திப்போம்.

இன்று பலஸ்தீனம், ஈரான், லெபனான் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் போர், அநீதி மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளால் துன்புறும் எம் சகோதர, சகோதரிகளின் வேதனைகள் எம் இதயங்களை கனக்கச் செய்கின்றன.

அவர்களின் துயரங்கள் நீங்கி, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த வாழ்வு அவர்களுக்கு விரைவில் கிட்டிட அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.

அதேபோல், எம் தாய்நாடு இலங்கையில் நிலையான சமாதானம், பொருளாதார வளம், இன நல்லிணக்கம் மற்றும் மனித நேயம் வேரூன்றி, அனைத்து மக்களும் அச்சமின்றி ஒற்றுமையுடனும் சகோதரத்துவ உணர்வுடனும் வாழும் சூழல் உருவாக அல்லாஹ் அருள் புரிவானாக.

இந்த ஈதுல் அழ்ஹா திருநாள், தியாகம், பகிர்வு, அன்பு மற்றும் மனிதாபிமானத்தின் அருமையை எம் உள்ளங்களில் மேலும் வலுப்படுத்தட்டும்.
அனைவருக்கும் இனிய “ஈதுல் அழ்ஹா” நல்வாழ்த்துக்கள்.

ஈத் முபாரக்!

ரஹ்மத் மன்சூர்
கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொருளாளர்
ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவர்

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி=================================தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்ச...
28/05/2026

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
=================================
தியாகம், சகோதரத்துவம், கருணை ஆகிய உயரிய குணாம்சங்களை முன்னிலைப்படுத்தி, உலகவாழ் இஸ்லாமிய மக்களால் மிகவும் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படும் ‘ஈதுல் அழ்ஹா’ எனும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் எனது அன்பார்ந்த, மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹஜ் பெருநாளானது, இப்றாஹீம் நபி அவர்கள் கொண்டிருந்த அளப்பரிய இறைபக்தியையும் உன்னத தியாகங்களையும் நினைவுகூரும் ஆழமான மத முக்கியத்துவம் மிக்கதொரு நாளாகும். தமக்குச் சொந்தமான மிகவும் முக்கியமானதும் பெறுமதியானதுமானவற்றைக் கூட, மனிதகுலத்தின் நன்மைக்காகவும் இறைவனின் விருப்பத்திற்காகவும் அர்ப்பணிக்கும் மனநிலையை இந்தத் திருநாள் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.

இத்தகைய ஹஜ் திருநாளில், நாம் அனைவரும் எமக்கிடையிலான வேற்றுமைகளைக் கடந்து, சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் கடைப்பிடித்து, ஒற்றுமையாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த வேண்டும்.

தியாகத்தையும் கருணையையும் மையமாகக் கொண்ட ஹஜ் பெருநாளின் செய்தியானது, பலமான, அமைதியான, அதேநேரத்தில் சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமைகின்றது.

எனவே, குறுகிய வேறுபாடுகளைத் தவிர்த்து, மற்றவர்கள் மீது கௌரவத்தையும் கருணையையும் வெளிப்படுத்தி, அமைதியும் சகவாழ்வும் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதிபூண வேண்டும்.

இந்த ஹஜ் பெருநாளானது உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், அமைதியும், சுபீட்சமும், ஆசீர்வாதமும் நிறைந்ததொரு நன்னாளாக அமைய வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி=====================================உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக...
28/05/2026

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
=====================================
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மிகுந்த பக்தியுடன் ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகிறார்கள்.

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுகின்றது.

நெருக்கடிக்கு மேல் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ள இவ்வுலகில், மனிதர்களுக்கிடையில் நிலவ வேண்டிய பிணைப்பின் மகத்துவத்தைப் பற்றிய பரந்ததொரு முன்மாதிரியை ஹஜ் பெருநாள் வழங்குகின்றது.

தனிப்பட்ட அந்தஸ்துகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் நாலாதிசைகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மத வழிபாடுகளை நிறைவேற்றும் இச்சந்தர்ப்பமானது, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் குறித்த சிறந்ததொரு முன்மாதிரியை உலகிற்கு எடுத்துச் சொல்கிறது என்று நான் நம்புகிறேன்.

மேலும், மத்திய கிழக்கின் யுத்த சூழ்நிலை காரணமாக முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள கடினமான சவால்களுக்கு மத்தியிலும், மக்கா நகருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் இப்ராஹீம் நபி அவர்கள் தனது வாழ்நாளில் செய்த எல்லையற்ற தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள்.

சுயநலத்திற்குப் பதிலாகப் பொதுநலம் மேலோங்கிய, அமைதியும் ஒற்றுமையும் நிறைந்த, ஒத்துணர்வுள்ள மனித சமூகத்தைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்தப் பயணத்தில், அமைதி, சகோதரத்துவம் மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் ஹஜ்ஜுப் பெருநாளின் வழிகாட்டல்களை எமது வாழ்க்கைக்கு மென்மேலும் நெருக்கமாக்கிக் கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஆன்மீக விழுமியங்களால் இலங்கைச் சமூகத்தை மேலும் போஷித்து, அனைவருக்கும் பயன் கிடைக்கக்கூடிய அபிவிருத்தியடைந்த நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்காகச் சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்லுமாறு சகலருக்கும் அழைப்பு விடுப்பதோடு, இந்நாட்டிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களுக்கு இனிய ஈதுல்-அழ்ஹா பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஈத் முபாரக் !

13/05/2026

⭕நாடாளுமன்றத்தில் தடுமாறிய முதலமைச்சர்....
========================
இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தான் தேர்தலில் வெற்றிபெற்றது தொடர்பாக உரையாற்றும்போது எண்ணிக்கையில் தடுமாறிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

⭕தமிழகத்தின் 18-வது முதல்வராக ச. ஜோசப்  விஜய் பதவியேற்றார்======================================"ச.ஜோசப் விஜய் எனும் நான...
10/05/2026

⭕தமிழகத்தின் 18-வது முதல்வராக ச. ஜோசப் விஜய் பதவியேற்றார்
======================================

"ச.ஜோசப் விஜய் எனும் நான்.."

- பதவியேற்பு விழாவில் ஒலித்த அந்த வார்த்தை: முதல்-அமைச்சரானார் ச. ஜோசப் விஜய்

✍️.திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

தமிழகத்தின் 18-வது முதல்வராக ச. ஜோசப் விஜய் பதவியேற்றார் அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக அமைச்சரவையில் 9 பேர் அமைச்சராக பதவி ஏற்றார்கள். விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவால் தவெகவின் பலம் 120 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க விஜய்க்கு ஆளுநர் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10. 17 மணிக்கு நடைபெற்ற விழாவில், தமிழகத்தின் 18-வது முதல்வராக ச. ஜோசப் விஜய் பதவியேற்றார் அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் 9 அமைச்சர்கள் பதவி ஏற்றார்கள். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை தாண்டி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை.

சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதால், 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவைப் பெறுவது அவசியமானது.

இதனால் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார்.
முதல்கட்டமாக 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி த.வெ.கவுக்கு ஆதரவு அளித்தது. பின்னர் பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு த.வெ.கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 2 கட்சிகளும் நேற்று முன்தினம் அறிவித்தன. இதன்மூலம் தவெகவின் பலம் 116 ஆக அதிகரித்தது.

ஆனால், த.வெ.கவுக்கு ஆதரவு குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் மற்றும் வி.சி.கவிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

வி.சி.க சனிக்கிழமை மாலை ஆதரவுக் கடிதத்தை வழங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், கடைசி நேரத்தில் த.வெ.கவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து கடிதம் வழங்கியது. அதன்படி, த.வெ.கவுக்கு பெரும்பான்மைக்கான 120 இடங்கள் கிடைத்தன.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு விஜய்க்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, விஜய் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஏற்கனவே அங்கு வந்து காத்திருந்த காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுடன் சென்று ஆளுநரை விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 1.45 மணி நேரம் நடந்தது.

120 எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை சனிக்கிழமை மாலை வழங்கினார். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வழங்கினார். ஆட்சி அமைக்கவும் விஜய்க்கு அழைப்பு விடுத்தார்.

அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. தமிழக வெற்றி கழக தலைவர் ச.ஜோசப் விஜய், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வெள்ளை சட்டை, கருப்பு கோட், கருப்பு பேன்ட் அணிந்தபடி வருகை தந்தார். அவருக்கு நுழைவு வாயில் தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வரவேற்றார்கள்.

நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்த ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை த.வெ.க தலைவர் விஜய் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. முதலில் ஆளுநரிம் விஜய் புதிதாக அமைச்சராக பதவி ஏற்கும் நபர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் முதல்வர் பதவி பிரமாணம் ஏற்கும் நடைமுறையை ஆரம்பித்தது. முதலில் வந்தே மாதரம் பாடல் மற்றும் தேதிய கீதம் பாடப்பட்டது.

தமிழகத்தின் 18-வது முதல்வராக ச. ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருக்கு
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். முதல்வராக சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக புஸ்ஸி என்.ஆனந்த்,
ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன்,
வெங்கடரமணன், நிர்மல்குமார்.
ராஜ்மோகன், டி.கே.பிரபு,
கீர்த்தனா ஆகியோர் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றார்கள் அவர்களுக்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணத்தை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
செய்து வைத்தார்.

இவ்விழாவில் முதல்வர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய்யின் நண்பர்கள், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி,
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன், தமிழசை சௌந்தராஜன்,இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மை துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவர் கே. நவாஸ் கனி எம். பி.சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. எம். ஷாஜஹான், எஸ். எஸ். பி. சையது பாரூக், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்னியரசு, மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், மற்றும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

⭕️234 தொகுதிகளில் 115 இடங்களில் தவெக முன்னிலை========================தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 115 தொகுதி...
04/05/2026

⭕️234 தொகுதிகளில் 115 இடங்களில் தவெக முன்னிலை
========================
தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 115 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருவதைத் தொடர்ந்து தமிழக வரலாற்றில் புதிய கட்சியொன்று முன்னிலை வகித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் பதிவாக வாக்குகளை எண்ணும் நடவடிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, திமுக கூட்டணி 56 இடங்களிலும் அதிமுக கூட்டணி 77 இடங்களிலும் தவெக 105 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றது. நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடத்தில்கூட முன்னிலை இல்லை.

இத் தேர்தலில் மொத்தம் 4.61 இலட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்தது.

⭕️தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026இதுவரை தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்தும் முன்னிலை======================================...
04/05/2026

⭕️தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - 2026
இதுவரை தமிழக வெற்றிக்கழகம் தொடர்ந்தும் முன்னிலை
==============================================

தமிழ்நாட்டில் 100ற்கு மேற்பட்ட தொகுதிகளில் தவெக கட்சி முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தபால் வாக்குகளின் அடிப்படையிலேயே தவெக பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து சென்னையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

காலை 8 மணி முதல் 11.40 மணி வரையில் உள்ள நிலவரப்படி, தவெக 108 , அதிமுக 64, திமுக 40 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.

⭕️9,800 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் - அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது==============================================...
28/04/2026

⭕️9,800 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் - அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
=============================================================

அரச நிறுவனங்களில் தற்காலிக, பதிலீடு, ஒப்பந்தம் அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் சுமார் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுவரை காலமும் தினக்கூலி அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றியவர்கள் இந்த புதிய நடைமுறையின் கீழ் நிரந்தர சேவையில் உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

28/04/2026

⭕️ஈரானின் முன்மொழிவு - நிராகரிக்கும் நிலையில் அமெரிக்கா -ட்ரம்ப் அதிருப்தி
=============================================================

உலகளாவிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை மீதான தனது முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் புதிய முன்மொழிவு ஒன்றை பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. இதற்குப் பதிலாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. எனினும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து இந்த முன்மொழிவில் எவ்வித உறுதிப்பாடும் வழங்கப்படவில்லை.

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதையே தனது முக்கிய இலக்காகக் கொண்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த யோசனையை ஏற்கும் வாய்ப்பு மிகக் குறைவு எனத் தெரிகிறது. "எந்த முன்னேற்றமும் இன்றிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை" எனக் குறிப்பிட்டு, பாகிஸ்தானுக்கான தனது தூதுவர்களின் பயணத்தையும் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Puthiya Oli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puthiya Oli:

Share