Ceylon Times Network

Ceylon Times Network உலகம் சொல்லும் செய்திகள் உடனுக்குடன்...
(2)

கல்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க காரணம் சுமந்திரனின் அழுத்தமா? கல்முனை பிரத...
17/09/2025

கல்முனை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க காரணம் சுமந்திரனின் அழுத்தமா?

கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தினை நாளை 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறுதி தருவாயில் இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நிந்தவூரில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஸ்ரப் நிவைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து கல்முனை சிவில் அமைப்புக்கள் இலங்கை தமிழரசு கட்சி பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை சந்தித்து முறையற்றவகையில் கூட்டப்பட உள்ள இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நிறுத்த வேண்டும். அல்லாது போனால் பலத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று வலியுறுத்தியிருந்ததாகவும் இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பிரதமர், அமைச்சர்களை தொடர்புகொண்டு குறித்த விடயம் தொடர்பில் கண்டனங்களை தெரிவித்து களநிலவரத்தை விளக்கி இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை உடனே நிறுத்த கோரியிருந்தாகவும் அறிய முடிகிறது.

மேலும், இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நிறுத்தாமல் நடத்தினால் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தையும், அதனூடாக வரும் இழப்புக்களையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் அரச உயர்மட்டங்களுக்கு வழங்கிய அழுத்தம் காரணமாக கொழும்பிலிருந்து வந்த உத்தரவை அடுத்தே இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்ட அழைப்பு வந்த நாளிலிருந்து இந்த விடயமாக இலங்கை தமிழசு கட்சி பிரமுகர்கள் பலரும் தனது அதிருப்தியை தொடர்ந்தும் பதிவு செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெகோ சமன், தெம்பிலி லஹிரு ஆகியோர் டிசம்பர் 02 வரை மேலதிக விசாரணைக்காக தடுப்பு காவலில்!‘கஜ்ஜா’ எனப்படும் அனுர விதானகமகே க...
17/09/2025

பெகோ சமன், தெம்பிலி லஹிரு ஆகியோர் டிசம்பர் 02 வரை மேலதிக விசாரணைக்காக தடுப்பு காவலில்!

‘கஜ்ஜா’ எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக ‘பெகோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’ ஆகியோரை டிசம்பர் 02 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (17) பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.

பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் என கூறப்படும் “பெகோ சமன்” மற்றும் “தெம்பிலி லஹிரு” ஆகியோர் சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலக்கெடுவிற்கு முன்னதாகவே திறனை இரட்டிப்பாக்கும் அதானி தலைமையிலான இலங்கை கொள்கலன் முனையம்!அமெரிக்க நிதியில் $553 மில்லி...
17/09/2025

காலக்கெடுவிற்கு முன்னதாகவே திறனை இரட்டிப்பாக்கும் அதானி தலைமையிலான இலங்கை கொள்கலன் முனையம்!

அமெரிக்க நிதியில் $553 மில்லியன் கைவிட்ட போதிலும், இந்தியாவின் அதானி குழுமமும் அதன் பங்காளிகளும் கொழும்பில் உள்ள $840 மில்லியன் கொள்கலன் முனையத்தின் திறனை திட்டமிட்ட மாதங்களுக்கு முன்பே இரட்டிப்பாக்க உள்ளனர்.

பங்காளி நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் நிர்வாகி ஒருவர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் ஆழமான மேற்கு சர்வதேச முனையம், புது டெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான இந்தியப் பெருங்கடல் செல்வாக்கிற்கான இழுபறிப் போரில் இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

முழு தானியங்கி முனையத்தின் முதல் கட்டத்தை அதானி நிறுவனம் ஏப்ரல் மாதம் திறந்து வைத்து, அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தது.

முனையத்தின் இரண்டாவது மற்றும் இறுதி கட்டம் நடந்து வருகிறது.

முனையத்தின் இரண்டாவது கட்டம் 2027 பெப்ரவரி காலக்கெடுவிற்கு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்னதாக அதாவது 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நிறைவடையும் என்று ஜான் கீல்ஸின் போக்குவரத்துத் தலைவர் ஜாஃபிர் ஹாஷிம் கூறினார்.

இலங்கையின் ஆழமான நிதி நெருக்கடியின் விளைவாக, நாட்டில் வெளிநாட்டு முதலீடு கிட்டத்தட்ட ஸ்தம்பிதமடைந்ததை அடுத்து, முன்னர் அறிவிக்கப்படாத துரிதப்படுத்தப்பட்ட காலக்கெடு எதிர்பாராதது.

இறுதி கட்டம் முடிந்ததும், முனையம் ஆண்டுதோறும் 3.2 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும் என்று ஹாஷிம் கூறினார்.

இது கொழும்பு துறைமுகத்தின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கும்.

இந்த முனையம் வழியாகப் பாயும் வணிகத்தின் மிகப்பெரிய பகுதி இந்தியாவில் இருந்து தொடங்குகிறது.

கடந்த டிசம்பரில், அதானி நிறுவனம் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனத்திடமிருந்து தனது நிதி கோரிக்கையை மீளப் பெற்றது, உள் திரட்டல்கள் மற்றும் மூலதன மேலாண்மைத் திட்டத்தின் மூலம் திட்டத்திற்கு நிதியளிக்கத் தேர்வுசெய்தது.

அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மற்றும் பிறர் இலஞ்சத் திட்டத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது – குற்றச்சாட்டுகளை குழு ஆதாரமற்றது என்று நிராகரித்துள்ளது.

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், முனையத்தில் 51 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது, ஜோன் கீல்ஸ் 34 சதவீதத்தை சொந்தமாகக் கொண்டுள்ளது, மீதமுள்ள பங்குகளை இலங்கை துறைமுக ஆணையம் வைத்திருக்கிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அதானியிடமிருந்து மேலும் முதலீடுகளை இலங்கை ஆராய்ந்து வருவதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கம், கடந்த பெப்ரவரியில் மின் கொள்முதல் விகிதத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதை அடுத்து, அதானி $1 பில்லியன் மதிப்புள்ள இரண்டு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகியமையும் குறிப்பிடத்தக்கது.

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 97 ஆவது இடம்!Jeyaram Anojan by Jeyaram Anojan  2025/09/17 in இலங்கை, பிரதான செய்திகள...
17/09/2025

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டு 97 ஆவது இடம்!
Jeyaram Anojan by Jeyaram Anojan 2025/09/17 in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
30
SHARES
999
VIEWS
Share on Facebook
Share on Twitter
2025 செப்டம்பர் 11 அன்று வெளியிடப்பட்ட 2025 உலகளாவிய ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டு தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 97 ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை கடவுச்சீட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியது.

அதன்படி, 96 ஆவது இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி 91 ஆவது இடத்திற்கு சென்றது.

2024 ஆம் ஆண்டு 96 ஆவது இடத்தில் இருந்தது.

எனினும், அண்மைய புதுப்பிப்பில் இலங்கையின் கடவுச்சீட்டு தரவரிசையில் 97 ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது.

விசா இல்லாத நாடுகளுக்கான அணுகல் 41 ஆகும்.

இது முன்பு 42 நாடுகளாக இருந்தது.

இலங்கை தற்போது தரவரசை குறியீட்டில் ஈரானுடன் 97 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு உலகளவில் பாஸ்போர்ட்களை அவற்றின் வைத்திருப்பவர்கள் முன் விசா இல்லாமல் நுழையக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பிடுகிறது.

உலகளாவிய சூழலில் அமெரிக்க கடவுச்சீட்டு 2025 ஜூலை தரவரிசையில் இருந்து இரண்டு இடங்கள் குறைந்து 12 ஆவது இடத்திற்குச் சரிந்துள்ளது.

இது தரவரிசையின் 20 ஆண்டுகால வரலாற்றில் அதன் மிகக் குறைந்த இடத்தைக் குறிக்கிறது.

உலகின் மிகவும் பலம்வாய்ந்த கடவுச்சீட்டாக சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளன.

மறுமுனையில் ஆப்கானிஸ்தான் இறுதி இடத்தில் உள்ளது.

17/09/2025

பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுக்கான நினைவுரை நிகழ்த்தினார் காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில்

2022-2023 பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்படாது- ஜனாதிபதி உறுதி!2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட ...
17/09/2025

2022-2023 பொருளாதார நெருக்கடி போன்று மீண்டும் ஏற்படாது- ஜனாதிபதி உறுதி!

2022-2023 பொருளாதார நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட சமூக துயரமும் தற்செயலானவை அல்ல என்றும், அவற்றிற்கு பல முக்கிய காரணிகள் இருந்தன என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக வீதி வேலைத்திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் கட்டுமானப் பணிகளை மீளத்தொடங்குவதற்கான ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் இதுபோன்ற பொருளாதார நெருக்கடி மீண்டும் ஒருபோதும் ஏற்படாத வகையில் நாடு கட்டமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது மக்களுக்கு உறுதியளித்தார்.

ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை கட்டுமானப் பணிகள் மூலம் மட்டும் உருவாக்கப்படுவதில்லை, மாறாக பல்வேறு வழிகளில் உறுதிப்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

முழு பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் பெரும் சரிவைச் சந்தித்துள்ள இத்தருணத்தில், 2026ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் சீன அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கைக்கான சீன தூதுவர் சீ ஜீஸென்ஹொங் வும் இணைந்துகொண்டதுடன் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட சீனா விரும்புவதாகவும் கருத்து தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உறுப்பினர்கள் மீதான தடையை நீக்க UNP முடிவு!முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில...
17/09/2025

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உறுப்பினர்கள் மீதான தடையை நீக்க UNP முடிவு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்குழு, ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்த உறுப்பினர்கள் மீது முன்னர் விதிக்கப்பட்ட அனைத்து தடைகள், ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் நீக்க முடிவு செய்துள்ளது.

சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (16) மாலை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கூட்டத்தின் போது, ​​இந்த நடவடிக்கையால் ஏற்படக்கூடிய சாத்தியமான சட்ட தாக்கங்களை ஆய்வு செய்ய முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த உறுப்பினர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கும் ஒன்றாகச் செயல்படுவதற்கும் தடையாக இருந்த தடைகளை இந்த நடவடிக்கை மூலம் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதிலிருந்து கூட்டு அரசியல் முயற்சிகளை ஆதரித்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தையும் செயற்குழு ஒருமனதாக நிறைவேற்றியது.

77 குளங்களை புனரமைக்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடுமட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரான நீர்ப்பாசன மு...
17/09/2025

77 குளங்களை புனரமைக்க ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரான நீர்ப்பாசன முகாமைத்துவத்துக்கு தடையாக இருந்து வரும் 77 குளங்களைப் புனரமைப்பு செய்வற்கு, சுமார் 110 கோடி ரூபாய் விவசாய, நீர்ப்பாசன, கால்நடை அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென மட்டக்களப்பு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ.இசட் இப்ராஹிம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திகுழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில், பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாய, நீர்ப்பாசன கால்நடை அபிவிருத்தி அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.

இப்ராஹிம் மேலும் தெரிவிக்கையில், “இந்த நிதியில், இம்மாவட்டத்தின் பிரதான நீர்பாசன பிரிவுகளான உறுகாமம், நவகிரி நீர்ப்பாசன பிரிவுகளில் கடந்த காலங்களில் வெள்ளத்தால் சேதமாக்கப்பட்ட அணைக்கட்டுகளை மேம்படுத்துதல், நீர்ப்பாசன மண் அலைகளை பலப்படுத்துதல், நீர்ப்பாசன கட்டுமானங்களை நிர்வகித்தல், புதிய நீர்ப்பாசனத்துக்குத் தேவையான புதிய கட்டுமானங்களை நிர்மாணித்தல் உட்பட பல்வேறு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்கள் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன” என்றும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்சினி ஸ்ரீ காந்த், நவரூவ ரஞ்சனி முகுந்தன், விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் முகமது சனீர், கமநல சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர் கே.ஜெகன்நாத் மற்றும் விவசாயத்துறை சார்ந்த உள்ளூர் திணைக்கள அதிகாரிகளும், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

சித்தாலேப நிறுவனத்தின் 90 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசு வழங்கி வைக்கும் நிகழ்வுநிப்ராஸ் லத்திப் கல்முனை கல்வி வலய கல...
17/09/2025

சித்தாலேப நிறுவனத்தின் 90 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசு வழங்கி வைக்கும் நிகழ்வு

நிப்ராஸ் லத்திப்

கல்முனை கல்வி வலய கல்முனை அல்-அஷ்ஹர் வித்தியாலய மாணவர்களுக்கு சித்தாலேப நிறுவனத்தின் 90 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பரிசு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (17) பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சித்தாலேப நிறுவன அம்பாரை மாவட்ட பிரதி முகாமையாளர் ஏ.எல்.காதர் கலந்து கொண்டார். மற்றும் சித்தாலேப நிறுவன முகாமையாளர், உத்தியோகத்தர்கள், பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்

நிந்தவூரில் இடம்பெற்ற எம்.எச்.எம். அஷ்ரபின் 25ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு - சுமந்திரன், அதாவுல்லாஹ் உள்ளிட்டோர் பங்கேற...
17/09/2025

நிந்தவூரில் இடம்பெற்ற எம்.எச்.எம். அஷ்ரபின் 25ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு - சுமந்திரன், அதாவுல்லாஹ் உள்ளிட்டோர் பங்கேற்பு

எம்.எச்.எம்.அஷ்ரபின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு “தோப்பாகிய தனிமரம்” எனும் தொனிப்பொருளில் நிந்தவூர் கமு/அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் காஸிமி கேட்போர் கூடத்தில் நேற்று (16) இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் வரவேற்புரை நிகழ்த்தியதோடு, முஸ்லிம் முழக்கம் மர்ஹும் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் “ஓயாத புயலும் சாயாத மரமும்” எனும் நூலும் வெளியீட்டு வைக்கப்பட்டது. இந்நூலினை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நூலாய்வு செய்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நிகழ்வில் நினைவுப் பேருரை நிகழ்த்தியதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நிகழ்வுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் நூல் வெளியீடு, விவரணப்படம், நினைவேந்தல் பாடல், துஆப்பிரார்த்தனை உட்பட மேலும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளர் சட்டத்தரணி நிஷாம் காரியப்பர், எம்.எஸ் அப்துல் வாசித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் தௌபீக், கட்சியின் பொருளாளர் ரஹ்மத் மன்சூர் என பலர் கலந்து கொண்டனர்.

17/09/2025

பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுக்கான நினைவுரை நிகழ்த்தினார் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்

17/09/2025

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Times Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylon Times Network:

Share