Ceylon Times Network

Ceylon Times Network உலகம் சொல்லும் செய்திகள் உடனுக்குடன்...
(2)

மக்களின் அவல நிலைக்கும் காரணமான ராஜபக்ஷேக்கள் இன்று புனிதர்கள் வேடம் போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள் – மக்களே இனி ...
24/08/2026

மக்களின் அவல நிலைக்கும் காரணமான ராஜபக்ஷேக்கள் இன்று புனிதர்கள் வேடம் போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள் – மக்களே இனி ஒருபோதும் ஏமாற வேண்டாம்

கடந்த காலத்தில் நாட்டின் அதிகாரத்தில் இருந்துகொண்டு வளங்களைச் சூறையாடி, பொருளாதார வீழ்ச்சிக்கும் மக்களின் அவல நிலைக்கும் காரணமானவர்கள், இன்று புனிதர்களைப் போல வேடமிட்டு மக்களை மீண்டும் ஏமாற்ற முற்படுவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,”2029 ஆம் ஆண்டு ஜனாதிபதியாவதாகக் கூறிக்கொண்டு, நாமல் ராஜபக்ஷ இன்று கிராமம் கிராமமாகவும், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் மற்றும் குளங்கள் தோறும் சென்று புதிய பாணியிலான அரசியல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். தொட்டிகளிலும், மரக்கிளைகளிலும் ஏறி நின்று கதைக்கும் நிலைக்கு இன்றைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த காலத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) பல மணி நேரம் விசாரிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில், ‘எனக்கு எதுவுமே தெரியாது, அந்த வீடுகள் எனக்குச் சொந்தமானவை அல்ல’ என ஊடகங்களுக்கு முன்னால் அவர் கூறி வருகிறார்.

ராஜபக்ஷ குடும்பத்தினரின் இந்த ‘நாங்கள் திருடர்கள் இல்லை’ என்ற நாடகம் நாட்டிற்குப் புதிதல்ல. மல்வானை பகுதியில் பஷில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்பட்ட பிரமாண்ட மாளிகை விசாரணையின் போது ‘எனக்குச் சொந்தமானதல்ல’ எனக் கூறப்பட்டது.

அதேபோன்றுதான் கதிர்காமத்தில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீடும் உரிமை கோரப்படாமல் கைவிடப்பட்டது. உரிமையாளர் இல்லாத சொத்துக்கள் என்று கூறி தப்பிப்பதே அவர்களின் வழக்கம். இறுதியில் அந்த மாளிகைகளைத் தங்களுக்கான விடுதியாகத் தருமாறு பல்கலைக்கழக மாணவர்கள் போராடும் நிலைமை ஏற்பட்டது.

திருடன் ஒருபோதும் தான் திருடன் என்று ஒப்புக்கொள்ளப் போவதில்லை. நாட்டின் பொருளாதாரக் கொலைகாரர்கள் வேறு யாருமில்லை, ராஜபக்ஷ குடும்பம்தான் என்று அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்க, இன்று நாமல் ராஜபக்ஷ ஊழலற்ற புனிதர் போல வேடமிட்டு மன்னிப்புத் தேட முற்படுகிறார்.

நீங்கள் செய்த பாவங்களுக்குக் கோவில் கோவிலாக, தேவாலயம் தேவாலயமாக, பள்ளிவாசல்கள் அல்லது விகாரைகளுக்கு சென்றாலும் நிச்சயமாக மன்னிப்பு கிடைக்கப்போவதில்லை.

நாட்டின் வரலாற்று ரீதியான பொருளாதார வீழ்ச்சி, விவசாயிகளையும் உழைக்கும் மக்களையும் வீதியில் இறக்கிய அநீதி, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகள் ஆகிய பாவங்களுக்கான தண்டனையை எந்த வழிபாட்டுத் தலத்திற்குச் சென்றாலும் கழுவிவிட முடியாது.

கடந்த காலத்தில் நாட்டின் வளங்களைச் சூறையாடி, மக்களை நடுத்தெருவில் விட்ட அதே கும்பல், இன்று புதிய வடிவத்தில் வந்து உங்களை ஏமாற்றப் பார்க்கிறது. நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணமான இந்த அரசியல் சக்திகளை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு, இனி ஒருபோதும் ஏமாறாமல் அவர்களை முற்றாக நிராகரிக்க வேண்டும்” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

பல்பொருள் அங்காடிக்கு ரூ 2 இலட்சம் அபராதம்இலங்கை தரச்சான்றிதழ் (SLS) இல்லாத மின்சார வயர் சுருளை விற்பனைக்காக காட்சிப்படு...
24/08/2026

பல்பொருள் அங்காடிக்கு ரூ 2 இலட்சம் அபராதம்

இலங்கை தரச்சான்றிதழ் (SLS) இல்லாத மின்சார வயர் சுருளை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த அனுராதபுர நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் அனுராதபுரம் 11ஆம் வீதியில் அமைந்துள்ள குறித்த வர்த்தக நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்சார வயர் சுருள் போன்ற மின் சாதனங்களுக்கு உரிய தரநிலைகளைப் பின்பற்றுவது நுகர்வோர் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும்.

தரமற்ற மின் சாதனங்களைப் பயன்படுத்துவது மின்சாரம் தாக்குதல், மின் கசிவு மற்றும் தீ விபத்துக்கள் போன்ற ஆபத்துக்களை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

எனவே, பல்பொருள் அங்காடி அல்லது பிற கடைகளில் மின்சார வயர் வாங்கும்போது, உரிய SLS தரச்சின்னம் மற்றும் ஏனைய குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைப் பரிசீலித்து பொருட்களை வாங்குமாறு நுகர்வோர் அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

மேலும், இவ்வாறான சட்டமீறல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பான தகவல்கள் இருப்பின், 1977 என்ற நுகர்வோர் அழைப்பு இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது

கால்வாயில் விழுந்த குழந்தை உயிரிழப்புஅநுராதபுரம் கல்னேவ பகுதியில் கால்வாயில் விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தையொன்று பரித...
24/08/2026

கால்வாயில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

அநுராதபுரம் கல்னேவ பகுதியில் கால்வாயில் விழுந்து இரண்டு வயது ஆண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.

கல்னேவ பொலிஸ் பிரிவின் கலேவெல வீதியில் உள்ள கால்வாயில் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் கல்னேவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கல்னேவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு வயது குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.

நேற்று பிற்பகலில், வீட்டில் இருந்த குழந்தையை காணவில்லை என அக்குழந்தையின் தந்தை அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, கலேவெல வீதி, கலேவெல பொலிஸ் பிரிவில், அப்பகுதி மக்களும் கலேவெல பொலிஸாரும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது குழந்தையின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கால்வாயின் பாலத்தில் குழந்தை சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதுடன் கல்னேவ வைத்தியசாலைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் அக்குழந்தை உயிரிழந்துள்மை தெரியவந்துள்ளது.

குழந்தையின் சடலம் கல்னேவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பதுளை வைத்தியரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம்!சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்த...
24/08/2026

பதுளை வைத்தியரின் மரணம் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம்!

சடலமாக மீட்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

காணாமல் போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்னவின் சடலம் பொலிஸாரால் இன்று (24) முற்பகல் மீட்கப்பட்டது.

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டைக்கு அருகிலுள்ள அடர்ந்த புதர் பகுதியில் வைத்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியரான பிரபாத் அநுராத தயாரத்ன நேற்று (23) முற்பகலில் இருந்து காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன் பலனாக, வைத்தியரின் கார் பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து நேற்றிரவு (23) கண்டெடுக்கப்பட்டது.

இதற்கமைய, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்தனர்.

இதன்போது, காணாமல் போன வைத்தியரின் சடலம் அப்பகுதியிலுள்ள அடர்ந்த புதருக்குள் சுமார் 800 மீற்றர் உட்புறமாக அமைந்திருந்த பாறையொன்றின் மீது கிடந்த நிலையில் இன்று (24) காலை கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்து 3 வகையான மருந்துகளையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

இதற்கமைய, அந்த மாத்திரைகளை உட்கொண்டு வைத்தியர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளமையும் பொலிஸாரால் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு எதிராக போராட்டம்: பதவி விலகுமாறு வலியுறுத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்  தலைவரை உடனடி...
24/08/2026

சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு எதிராக போராட்டம்: பதவி விலகுமாறு வலியுறுத்து

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரை உடனடியாகப் பதவி விலகுமாறு வலியுறுத்தி, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த குழுவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பிலுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமையகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், சட்டத்தரணிகள் சங்கத் தலைவரின் உடனடி ராஜினாமாவை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி இருந்தன

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக கடும் விமர்சனங்களையும் முன்வைத்தனர். எதிரணியின் தேவைக்கேற்பவே அவர் செயல்படுகின்றார் எனவும் வலியுறுத்தினர்.

யாழில் மனிதம் வாழ்கிறது என்பதற்கு சான்று!பஸ்ஸில் தவறவிட்ட 10 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைப்பு!போற்...
24/08/2026

யாழில் மனிதம் வாழ்கிறது என்பதற்கு சான்று!

பஸ்ஸில் தவறவிட்ட 10 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைப்பு!

போற்றப்பட வேண்டிய சாரதி! நடத்துநர்!

இ.போ.ச. பஸ்ஸில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும் , உரியவரிடமே அந்த நகையை ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை செல்லும் 767 வழித்தட ( 4241 இலக்க) இ.போ.ச பஸ்ஸின் மதிய சேவையின்போது பயணித்த பெண் வட்டுக்கோட்டையில் மரணச் சடங்கொன்றுக்குச் சென்றுவிட்டு, இன்னொரு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற பின்னரே அவரது கழுத்தில் இருந்த இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலி இல்லாததை உணர்ந்தார். அதன்பின்னர் அவர் வழிநெடுகிலும் சென்று பார்த்தபோதும் சங்கிலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ’இனிச் சங்கிலி கிடைக்காது’என்ற கவலையோடு , மீண்டும் வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்தித்துறை நோக்கிச் செல்ல அதே அதே பஸ்ஸில் ஏறியுள்ளார்.

அப்போது அவர் தனது தங்கச்சங்கிலி காணாமல் போன விடயத்தை பஸ்ஸின் நடத்துநருக்கும், சாரதிக்கும் தெரியப்படுத்தியபோது அவர்கள் ‘நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில் அந்தச் சங்கிலி இருந்தது. அதைக் கண்டெடுத்து பத்திரமா வைத்திருக்கிறோம்’என்று கூறி அதனை ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் பருத்தித்துறை டிப்போவுக்குச் சென்ற பின்னர் பஸ்ஸை சுத்தம் செய்தபோது, அந்தச் சங்கிலியின் ‘எஸ்’வடிவிலான இணைப்புப் பகுதியையும் கண்டெடுத்து அதனையும் உரிய பெண்ணிடம் சேர்ப்பித்துள்ளனர். இவ்வாறு தாம் கண்டெடுத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான நகையினைக் கண்டெடுத்து உரியவர்களிடம் சேர்ப்பித்த பருத்தித்துறை டிப்போவைச் சேர்ந்த சாரதியான மனோகரன் சயந்தன், நடந்துநரான இராசநாயகம் பிறின்சிராஜா ஆகியோரின் நேர்மைப்பண்பை பஸ்ஸில் இருந்தவர்களும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

Sornalingam Varnan

24/08/2026

😂😂தூங்கும் போது எதுக்கு மேக்கப்..
அந்த புள்ளட நிலைமை தான் பரிதாபம் 😂😂

வவுனியா பொலிசாரால் நால்வர் கைது!வவுனியாவில் வீடொன்றிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண் நகைகளை திருடிய ...
24/08/2026

வவுனியா பொலிசாரால் நால்வர் கைது!

வவுனியாவில் வீடொன்றிற்குள் நுழைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த 16.750 பவுண் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு பேரை கைது செய்துள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் இன்று (24.08) தெரிவித்தனர்.

கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்து சிலர் வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 16.750 பவுண் தங்க நகைகளை திருடியிருந்தனர்.

இது தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட14 பவுண் நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், திருடப்பட்ட வீட்டிற்கு அருகில் வசிப்பர் என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் திருடிய ஒரு பகுதி நகைகளை யாழில் அமைந்துள்ள வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்துள்ளார். மேலும் ஒரு தொகுதி நகைகள் வவுனியா கடை வீதியில் அமைந்துள்ள பிரபல அடகு நிலையத்தில் அடைவு வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நகைகளின் பெறுமதி 57 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் என பொலிசார் தெரிவித்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ் கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஆர்.எம்.யே.எஸ். ரத்னமலலா அவர்களின் வழிகாட்டலில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்கவின் தலைமையில் சாஜன்களான சந்தன, உடுவெல்ல, கான்ஸ்ரபிள்களான உபாலி, கீதன், சம்பத் ஆகிய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

🛑மயக்க மருந்து மருத்துவருக்கு நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் பொலிஸார்.!காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போத...
24/08/2026

🛑மயக்க மருந்து மருத்துவருக்கு நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் பொலிஸார்.!

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பிரபாத் அனுராதா, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

49 வயதான இந்த மருத்துவரின் உடல், மஹியங்கனை, மாப்பாக்கடவெவ பகுதியில் உள்ள ஒரு புதர் நிலத்தில் பாறை மேல் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் காணாமல் போயிருந்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, காணாமல் போன வைத்தியரைத் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுத்திருந்தனர், இதன் போதே இவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் மூன்று வகையான மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து மஹியங்கனை போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

24/08/2026

✍️ கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணனக்கு நலன் வேண்டி துஆ...

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் மீண்டும் பணிக்கு திரும்பியதையடுத்து, அவரது நலன் மற்றும் பணிச் சிறப்புக்காக துஆ பிரார்த்தனை நிகழ்வு இன்று(24) வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் கணக்காளர் எம்.ஆர். நாஷீமுல் ஹக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வைத்தியசாலை வளாகத்திலுள்அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலின் பிரதான கதீப் மௌலவி அஷ்-ஷேக் அமானுல்லாஹ் முகம்மது அர்ஹம் (அஜ்வாத்) துஆ பிரார்த்தனையை நடத்தினார்.

இந்நிகழ்வில் வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு, பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணனின் நலன், ஆரோக்கியம் மற்றும் எதிர்கால பணிகளின் வெற்றிக்காக இறைவனைப் பிரார்த்தித்தனர்.

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Times Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylon Times Network:

Shortcuts

Share