Ceylon Times Network

Ceylon Times Network உலகம் சொல்லும் செய்திகள் உடனுக்குடன்...
(1)

சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் மகேந்திரகுமாருக்கு கௌரவம் நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை 2015 ஓயெல் பௌண்டஷன் அமைப்பினர்...
30/06/2025

சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் மகேந்திரகுமாருக்கு கௌரவம்

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை 2015 ஓயெல் பௌண்டஷன் அமைப்பினர் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் அவர்களை இன்று நேரில் சென்று பாராட்டி கௌரவித்தனர்.

சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்று சிறந்த கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக இன, மத, பேதம் கடந்து ஒரு வருடம் பூர்த்தி செய்து தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கின்றார். இவரை கௌரவிக்கும் முகமாக பல வருடங்களாக சிறப்பாக இயங்கி வரும் எங்களின் 2015 ஓயெல் பௌண்டஷன் அமைப்பினால் கௌரவித்தோம் என அந்த அமைப்பின் ஸ்தாபத் தலைவரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான அமீர் அப்னான் தெரிவித்தார்.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் சம்மாந்துறை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் அவர்களின் கடந்தகால கல்வி நிர்வாக செயற்பாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் மாணவர்களின் எதிர்கால கல்வி,விளையாட்டு மற்றும் ஏனைய செயற்திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

டைட்டன்ஸ் சீசன் – 6 கிரிக்கெட் வெற்றிக்கிண்ணம் - 2025 :  வெற்றிக்கிண்ணம் டைட்டன்ஸ் அணியிடம்!நூருல் ஹுதா உமர்அம்பாறை மாவட...
29/06/2025

டைட்டன்ஸ் சீசன் – 6 கிரிக்கெட் வெற்றிக்கிண்ணம் - 2025 : வெற்றிக்கிண்ணம் டைட்டன்ஸ் அணியிடம்!

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்திலுள்ள 32 முன்னணி அணிகள் கலந்து கொண்ட டைட்டன்ஸ் சீசன் – 6 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி 29.06.2025 அன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு சம்மாந்துறை டைட்டன்ஸ் அணி மற்றும் அக்கரைப்பற்று டீன்ஸ் ஸ்டார் அணிகள் மோதிக் கொண்டனர், இப்போட்டியில் சம்மாந்துறை டைட்டன்ஸ் அணி விறுவிறுப்பான போராட்டத்தில் வெற்றி பெற்று, வெற்றி கிண்ணத்தையும் பணப்பரிசையும் கைப்பற்றியது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்கள் கலந்து கொண்டு, வெற்றி கிண்ணத்தையும் பணப் பரிசுகளையும் வழங்கி கெளரவித்தார். அத்தோடு, Turney Biscuits Company இன் அம்பாறை மாவட்ட விநியோகிஸ்தர் எல்.எம் அஸ்லம் விசேட அதிதியாக கலந்து கொண்டார்.

விளையாட்டையும், ஒற்றுமையையும் முன்னிறுத்தி போதையில்லா சமூகம் உருவாகும் இத்தகைய நிகழ்வுகள் தொடரட்டும்.

வரலாற்றில் முஸ்லிம் மக்கள் மன்னிக்கவே முடியாத முனாஃபிக்குகளே மக்கள் காங்கிரஸின் தாஹீர், மாஹீர், காதர் ஆகியோர் : நாவிதன்வ...
26/06/2025

வரலாற்றில் முஸ்லிம் மக்கள் மன்னிக்கவே முடியாத முனாஃபிக்குகளே மக்கள் காங்கிரஸின் தாஹீர், மாஹீர், காதர் ஆகியோர் : நாவிதன்வெளி முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தது மரமும், மயிலும். - அபூபக்கர் நளீர் காட்டம்

நூருல் ஹுதா உமர்

நாவிதன்வெளி பிரதேச சபை ஆட்சியமைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.பி. நவாஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நவாஸும் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீறி முனாபிக் தனமாக நடந்து கொண்டார்கள். மட்டுமின்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்களான எம்.ஏ.தாஹீர் எம்.பி, உயர்பீட உறுப்பினர் எம்.ஐ.எம்.மாஹீர், மாவட்டத் தலைவர் காதர் ஆகியோரும் நாவிதன்வெளிக்கு முஸ்லிம் ஒருவர் உப தவிசாளராக வருவதை தடுத்து இப்பிரதேச முஸ்லிங்களுக்கு அநியாயம் செய்து முனாபிக்குகளாக நடந்து கொண்டார்கள் என நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.நளீர் தெரிவித்தார்.

இன்று அவரது அலுவலகத்தில் வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சகிதம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், அண்மையில் நடைபெற்ற நாவிதன்வெளி பிரதேச சபைத் தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து எனது தலைமையிலான சுயேட்சைக் குழு கால்பந்து சின்னத்தில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனமுமாக மொத்தமாக நான்கு பிரதேச சபை உறுப்பினர்கள் முஸ்லிம்கள் சார்பில் தெரிவாகியிருந்தனர்.

கடந்த முறை ஏ.கே.சமட் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை பெற்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவு வழங்கி பிரதேச சபையின் உப தவிசாளர் பதவியைப் பெற்று முஸ்லிம் மக்களுக்கு பல சேவைகளை செய்தார். உப தவிசாளராகவும் சிறிது காலம் பதில் தவிசாளராகவும் பதவி வகித்து நாவிதன்வெளி பிரதேசத்தில் வாழும் சுமார் 35 விதமான முஸ்லிம் மக்களைக் கௌரவப்படுத்தினார்.

சிற்றூர்களுக்காக பெரிய ஊர்களை காவு கொடுக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. தாகீர் தெரிவித்து எங்களின் ஊருக்கு அநியாயம் செய்துள்ளார். இது வரலாற்று துரோகமாகும். இந்த துரோகத்தை வரலாற்றில் எப்போதும் மன்னிக்க முடியாது. எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் சிற்றூர்கள் எல்லாம் இவர்கள் ஓரங்கட்டி தகுந்த பாடம் கற்பிக்க முன்வர வேண்டும்

தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களை மட்டும் இணைத்து நாவிதன்வெளி பிரதேச சபையின் ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள ஒரு முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இனவாத சிந்தனைக்கு அமைவாக தவிசாளரும், உப தவிசாளரும் தமிழர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் முஸ்லிம் சமூகத்தில் இருந்து ஒருவர் உப தவிசாளராக தெரிவு செய்யப்படுவதை தடுக்கும் ஈனச் செயலுக்கு ஆதரவு வழங்கி முஸ்லிம் மக்களுக்கு வரலாற்றுத் துரோகத்தை இழைத்த குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் இருவருக்கும் இவர்களின் கட்சிகளுக்கும் அதன் தலைமைகளுக்கும் இன்னும் இதனுடன் தொடர்புடைய முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இந்த இஸ்லாமிய சமூகம் எக்காலத்திலும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பு வழங்கக் கூடாது

தமிழ் சமூகத்தைச் சார்ந்த முன்னாள் தவிசாளரும் தற்போதைய பிரதேச சபை உறுப்பினருமான கௌரவ அ. ஆனந்தன் தலைமையிலான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோர் இணைந்து நாவிதன்வெளி பிரதேசத்தில் காலாகாலமாக ஒற்றுமையுடன் செயல்படும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவுகள் கசப்புணர்வுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நன்நோக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை உப தவிசாளராக தெரிவு செய்ய வேண்டும் என்ற நோக்கோடு மிகவும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவால் வெற்றியீட்டிய என்னை உப தவிசாளர் பதவிக்கு பிரேரித்தார்கள். இத்தெரிவுக்காக நடாத்தப்பட்ட வாக்களிப்பில் போது சபையில் இருந்த நான்கு முஸ்லிம் பிரதேச சபை உறுப்பினர்களும் தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவருடன் இணைந்து எனக்கு வாக்களித்திருப்பார்களேயானால் இன்று முஸ்லிம் சமூகம் உப தவிசாளரை பெற்றிருக்கும் ஆனால்மரம், மயில் கட்சிகளைச் சேர்ந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களும் மாற்று சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு தங்களுடைய வாக்குகளை வழங்கியதன் காரணமாக இன்று எமது சமூகம் உப தவிசாளர் பதவியை இழந்திருக்கின்றது. இது முஸ்லிம் சமூகத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் இழைக்கப்பட்ட மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம்.

வழமையாகவே தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாவிதன்வெளி பிரதேச சபையில், தவிசாளராக ஒரு தமிழ் சமூகத்தவரும் உப தவிசாளராக ஓர் முஸ்லிமும் வருவது வழமை. ஆனால் இம்முறை அந்த வழமை முஸ்லிம் கயவர்களால் அப்பட்டமாக ஒழிக்கப்பட்டுள்ளது.

நாவிதன்வெளி முஸ்லிம் மக்கள் எமது உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற்றுக் தருவார்கள் என்று யாரை இவ்வளவு காலமும் நம்பி வாக்களித்தார்களோ அதற்குப் பிரதிபலனாக ஓட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கே இந்த முஸ்லிம் தலைவர்கள் துரோகம் இழைத்துள்ளனர். எமது நாவிதன்வெளி முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அதி உச்ச அதிகாரம் இந்த உப தவிசாளர் பதவி அதுவும் இந்த முஸ்லிம் தலைவர்களால் திட்டமிட்ட முறையில் இழக்கச்செய்யப்பட்டுள்ளது. தனது சமூகத்தின் நியாயமான உரிமையை இன்னொரு சமூகத்திற்கு தாரை வார்த்த இவர்களை நாம் எப்படி நம்புவது.

நாவிதன்வெளி முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பறித்து. அவர்களின் நம்பிக்கையைச் சிதைத்த இந்தத் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தங்களின் சுயநல அரசியல் இலாபங்களுக்காகச் செயற்படும் இந்தத் தலைவர்களையும் குறித்த பிரதேச சபை உறுப்பினர்களையும் மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் எதிர்காலத்தில் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றார். இந்த ஊடக சந்திப்பில் நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஏ.கே. சமட் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில்:கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதல், பரஸ்பர பதிலடி நடவடி...
23/06/2025

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில்:

கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்தின் மீதான தாக்குதல், பரஸ்பர பதிலடி நடவடிக்கையின் கட்டமைப்பிற்குள் வரும் ஒரு பதிலடியாகும், மேலும் இது சர்வதேச சட்டம் மற்றும் சட்டபூர்வமான பாதுகாப்பு உரிமையுடன் ஒத்துப்போகிறது. எங்கள் ஆயுதப்படைகள் ஏவுகணை நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன, இது பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளங்களில் ஒன்றான அமெரிக்க அல் உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்தது.

இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை, ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலில் அமெரிக்கா பயன்படுத்திய குண்டுகளின் எண்ணிக்கைக்கு சமம்.

தாக்கப்பட்ட இராணுவ இலக்கு கத்தார் மாநிலத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகர்ப்புற மையங்களிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ளது.

இந்த நடவடிக்கை சகோதரத்துவ கத்தார் மக்களுக்கு அல்லது கத்தார் அரசின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் அல்லது ஆபத்தையும் ஏற்படுத்தவில்லை.

கத்தார் அரசுடன் நம்மை இணைக்கும் சகோதரத்துவ மற்றும் வரலாற்று உறவுகளை நாங்கள் வலியுறுத்துகிறோம், மேலும் இந்த பதில் இந்த உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை மற்றும் குறைமதிப்பிற்கு உட்படுத்தாது. மாறாக, இது இறையாண்மை மற்றும் தேசிய கண்ணியத்தை சட்டப்பூர்வமாகப் பாதுகாப்பதற்கான கட்டமைப்பிற்குள் வருகிறது.

வட கொரியா அறிக்கைஅமெரிக்க தள தாக்குதல்களை நாங்கள்  ஆதரிக்கிறோம்...மற்றும் "ஈரானுக்கு எதிரான அமெரிக்க தாக்குதல் ஆபத்தானது...
23/06/2025

வட கொரியா அறிக்கை

அமெரிக்க தள தாக்குதல்களை நாங்கள் ஆதரிக்கிறோம்...

மற்றும்

"ஈரானுக்கு எதிரான அமெரிக்க தாக்குதல் ஆபத்தானது மற்றும் ஈரானின் இறையாண்மையை மீறுவதாகும்."

கத்தாரில் உள்ள அல்-உதெய்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஈரானின் பழிவாங்கும் தாக்குதலை கத்தாரின் வெளியுறவு அமைச...
23/06/2025

கத்தாரில் உள்ள அல்-உதெய்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஈரானின் பழிவாங்கும் தாக்குதலை கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் டாக்டர் மஜீத் பின் முகமது அல்-அன்சாரி கண்டித்து, "சர்வதேச சட்டத்தின்படி நேரடியாக பதிலளிக்கும் உரிமை கத்தாருக்கு உள்ளது" என்று கூறினார்.

🇮🇷⚔️🇺🇸 | கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரானின் தாக்குதலை பல அரபு நாடுகள் கண்டிக்கின்றன:🇪🇬 எகிப்து: இறையாண்மையை ம...
23/06/2025

🇮🇷⚔️🇺🇸 | கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரானின் தாக்குதலை பல அரபு நாடுகள் கண்டிக்கின்றன:
🇪🇬 எகிப்து: இறையாண்மையை மீறுதல்
🇸🇦 சவுதி: நியாயப்படுத்த முடியாதது
🇯🇴 ஜோர்டான்: ஆக்கிரமிப்பு
🇧🇭 பஹ்ரைன்: கத்தாரை ஆதரிக்கிறது
🇴🇲 ஓமன்: இஸ்ரேலை குற்றம் சாட்டுகிறது
🇵🇸 PA: கடுமையான கண்டனம்

23/06/2025

பிராந்திய தீவிரம் குறித்த அச்சத்தை காரணம் காட்டி, கத்தாரில் இருந்து சல்வா எல்லை வழியாக சவுதி அரேபியாவிற்குள் குறிப்பிட்ட பொதுமக்கள் நடமாட்டம்

🚨🇺🇸🇶🇦🇮🇷🇵🇸 பிரேக்கிங்: கத்தாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானப்படை தளத்தின் மீது ஈரானின் தாக்குதலை பாலஸ்தீன ஜனாதிபதி ம...
23/06/2025

🚨🇺🇸🇶🇦🇮🇷🇵🇸 பிரேக்கிங்: கத்தாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானப்படை தளத்தின் மீது ஈரானின் தாக்குதலை பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கண்டனம் தெரிவித்தார்

கத்தாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் தளத்தின் மீது ஈரானின் தாக்குதலை சவுதி அரேபியா கடுமையாக கண்டிக்கிறது, தாக்குதலுக்கு ப...
23/06/2025

கத்தாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் தளத்தின் மீது ஈரானின் தாக்குதலை சவுதி அரேபியா கடுமையாக கண்டிக்கிறது, தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் கத்தாரின் உரிமைக்கு முழு ஆதரவையும் தெரிவிக்கிறது சவூதி அரேபியா

சவுதி அரேபியாஈரானிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு கத்தாரை ஆதரிக்க எங்கள் முழு பலத்தையும் பயன்படுத்துகிறோம்.இஸ்ரேல் பாலஸ்தீனம்...
23/06/2025

சவுதி அரேபியா

ஈரானிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு கத்தாரை ஆதரிக்க எங்கள் முழு பலத்தையும் பயன்படுத்துகிறோம்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் மற்றும் ஈரானை தாக்கியபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

இஸ்ரேல் பாலஸ்தீனம், லெபனான், சிரியாவைத் தாக்கியபோது நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?

நாட்டில் அமைதி திரும்பியுள்ளது, வான்பரப்பு முற்றிலும் பாதுகாப்பானதாக மாறியுள்ளது என கத்தார் அறிவிப்பு
23/06/2025

நாட்டில் அமைதி திரும்பியுள்ளது, வான்பரப்பு முற்றிலும் பாதுகாப்பானதாக மாறியுள்ளது என கத்தார் அறிவிப்பு

Address

Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Ceylon Times Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ceylon Times Network:

Share